Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா?
3 posters
Page 1 of 1
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா?
கடந்த 20 ஆண்டுகளில் மலேசியா குற்றச்செயல்களின் ‘சுவர்ணபூமியாக’ மாறி வருகிறது. கொத்துக் கொத்தாகக் கொலைகள், வழிப்பறிகள், கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள், போதைப் பொருள் விறபனை போன்றவை மொட்டைக் குடிசைகளிலிருந்து குபேர மாளிகைகள் வரை தங்கு தடையின்றித் தாராளமாக நடந்து வருகின்றன.
அப்படியெல்லாம் இல்லை என்று அரசு அளிக்கும் அலங்காரப் புள்ளிவிவரங்கள் அவ்வப்போது வந்துகொண்டிருந்தாலும் பொதுமக்கள் வாழ்க்கையில் குற்றச்செயல்கள் அன்றாடம் காணும் காட்சிகளாகிவிட்டன.
‘சீரியல்’ குடும்பப் பெண்களுக்குக் குற்றச்செயல்கள் பற்றிய செய்திகள் துணைப் பொழுது போக்காகப் பரிமாறப்படுகின்றன. அங்கே கொலை, இங்கே கொளை, குடும்பப் பெண்ணின் தாலிப்பறிப்பு என்பதெல்லாம் தினக்கதை களாகிவிட்டன.
காவல்துறை புள்ளிவிவரம் கவர்ச்சியாக இருந்தால் அதற்கும் காரணம் உணடு. கொள்ளை கொடுத்த பலர் காவல்துறையில் புகார் செய்வதை நிறுத்திவிட்டார்கள். செய்யப்பட்ட புகார்களுக்குப் பதில் இல்லை. கொள்ளை யடித்தவர்கள் சில நாட்களுக்குப் பிறகு அதே தெருவில் ‘ஜாலி’யாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இதைக் காணும் பொது மக்களுக்குக் காவல்துறையின் மீது இருந்த நம்பிக்கை முற்றாக அழிந்துவிட்டது.
பதிவு பெற்ற குற்றச் செயல்கள் மட்டும் நாளேடுகளில் வெளி வருகின்றன. அவற்றின் எண்ணிக்கையே குலை நடுங்க வைக்கிறது.
எடுத்துக்காட்டுக்குச் சில நாள் செய்திகள்:
மலேசிய நண்பன் 28.8.10
1. மயில்வாகனம், குணசீலன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி
2. டமான்சாரா கார் நிறுத்தும் இடத்தில் போதைப்பொருள் ஆசாமிகள் கைது
3. கத்திமுனையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடம் கொள்ளை
4. ஆடவரிடம் கொள்ளையிட்டதாக மூவர் மீது குற்றச்சாட்டு
5. கஞ்சா பறிமுதல்
மக்கள் ஓசை 29.8.10
1. மேய்ச்சலுக்குச் சென்ற 10 மாடுகளைக் கொன்று கூறு போட்ட கொடூரச் சம்பவம்
2. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்திய இளைஞர் கொடூரக் கொலை
3. மாணவியிடம் பாலுறவு வல்லுறவு
மக்கள் ஓசை 2.9.10
1. சிவகணேஸ் கொடூரக் கொலை கோத்தா திங்கியில் குண்டகளின் அராஜகம்
2. திருமணத்திற்குச் சென்று திரும்புகையில் சாலைச் சந்திப்பில் மூன்று இந்திய ஆடவர்களால் வழிப்பறிக்கொள்ளை. இப்படியே எல்லா நாட்களும் குற்றச்செயல் அறிவிப்புகளால் நாளேடுகள் நிறைந்து வழிகின்றன.
காதில் விழுந்த கொள்ளை
சுபாங் வட்டாரத்தில் இந்தியர் ஒருவர் நூறாயிரம் ரிங்கிட் கடன் வாங்கி ஆட்டுப்பண்ணை வைத்தார். குட்டிகளாக இருந்த ஆடுகள் வளர்ந்தன. ஒரு நாள் நள்ளிரவில் காவலுக்கு இருந்த இந்தோனேசியக் காவலரைக் கட்டிப் போட்டுவிட்டு எழுபது ஆடுகளை சரக்குந்தில் ஏற்றிக் கொண்டு போனார்கள் கொள்ளையர்கள். கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட காவலர் மிக அருகில் இருந்த காவல்துறைக்குத் தொலை பேசி, சரக்குந்து போன திசையையும் கொள்ளையர்கள் பற்றிய அடையாளத்தையும் கூறினாராம்.
மறுநாள் காலை 10 மணி வாக்கில் வந்த காவல் துறை அதிகாரிகள் ‘மரி கித்தா பேர்கி மீனும்’ என்று பண்ணைக்குச் சொந்தமான இந்தியரை உணவகத்திற்கு அழைத்துச் சென்று 400 ரிங்கிட்டுக்கு ‘மொய்’ வைத்துவிட்டுப் போனார்களாம்.
இந்தியர்கள் விஷயத்தில் காவல் துறையினர் எப்படி இயங்குகிறார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
இந்தியர்களில் கொலைகளும் குற்றச் செயல்களும் தொடர்ந்து வளர்வதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? செய்கிறவன் இந்தியன். சாகிறவனும் இந்தியன். விட்டுவிடு என்பது இவர்களின் கொள்கையாக இருக்குமோ என்ற ஐயம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.
வீச்சரிவாள் வீரர்கள் வேலையை எளிதாக முடிக்கக் கைத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு ‘தொழிலை’ நவீனப்படுத்தி விட்டார்கள்.
இந்தியர்கள் விஷயத்தில் காவல்துறை அலட்சியமாய் இருக்கிறது என்று குற்றம் சாட்ட முடியாது. கைது செய்யப்படுகிறவர்கள் காவல் நிலையத் தடுப்பறைகளிலேயே எல்லா வகை தண்டனைகளையும் அனுபவித்துவிடுகிறார்கள், மரண தண்டனை உட்பட! இந்த அளவுக்காவது காவல்துறை இந்தியர்கள் விஷயத்தில் ‘அக்கறை’ காட்டுவது அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது.
காவல் துறைக்கு என்ன வேலை?
குற்றச்செயல்கள் நடக்காமல் வருமுன் காப்பது காவல்துறையின் தலையாய பணி. நடந்த குற்றச் செயல்களுக்கான உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதி மன்றத்தில் நிறுத்துவது அடுத்த முக்கியமான பணி. (படம்: கையில் கிரீசோடு உள்துறை அமைச்சர்) நல்லவர்கள் நிம்மதியாக வாழ்வதையும் குற்றவாளிகள் துடைத்தொழிக்கப்படுவதையும் உறுதி செய்வது காவல்துறையின் ஒட்டுமொத்த பணி. இந்தப் பணிகள் சரியாக நடக்கவில்லை என்பதையே குற்றச் செயல்களின் உண்மையான புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
காவல் துறை இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?
பத்து ஆண்டுகளுக்கு முன் துணைப்பிரதமராக இருந்த டத்தோசிரீ அன்வார் இப்ராஹிமை அரசியலிலிருந்து அகற்ற வேண்டும் என்று அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் முடிவு செய்ததும் அந்த வேலையைச் செய்து முடிப்பதற்குக் காவல்துறை பிரதமரின் தனிப்படையாக மாறியது.
2008 பொதுத்தேர்தலுக்குப் பின் பாரிசானின் நாடாளுமன்ற வலிமை சரிவு கண்டதால் பழைய நிலையை மீண்டும் பெறுவதற்கு இடையூறாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை, அன்வார் இப்ராஹிம் உடபட தலையெடுக்காமல் தடுப்பதற்குக் காவல்துறை இப்போதைய பிரதமரின் தனிப்படையாகச் செயல்பட்டு வருகிறது.
இதைத் தவிர எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளும் கட்சித் தலைவர்கள் செய்த ஊழல்களையும் குற்றச்செயல்களையும் அம்பலப்படுத்தும்போது ஆளும் கட்சித் தலைவர்களைக் காப்பாற்ற வேண்டியதும் காவல் துறையின் கூடுதல் பணியாக ஆகிவிட்டது.
ஏழைகள் முதல் கோடீசுவரர்கள், அதிக பலம் மிக்க அரசியல்வாதிகள் வரை அவரவர் சக்திக்கேற்ற வகையில் பல வகையான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சிறியவர்கள் செய்யும் சிறிய குற்றச்செயல்கள் நீதிமன்றத்திற்குப் போகின்றன. பெரியவர்கள் செய்யும் பெரிய குற்றச்செயல்கள் மூடி மறைக்கப்படுகின்றன. இவர்களுக்கு ஆட்சி ஊடகங்கள் குடை பிடிக்கின்றன. அவ்வப்போது மாற்று ஊடகங்கள் போட்டு உடைக்கின்றன. இப்படிப்பட்ட ஊடகங்களுக்கும் பதிப்பு அனுமதிகள் மறுக்கப்படுகின்றன.
இந்தச் சூழ்நிலை உலக அரங்கில் மலேசியாவுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கொள்ளையடித்து வருகிறது.
வசதி உள்ள மலேசியர் வேறு நாடுகளுக்குக் குடி பெயர்கின்றனர். இல்லாதவர்கள் அச்சம் கப்பிய உள்ளத்தோடும் முகத்தோடும் வாழ்வதற்குப் போராடுகின்றனர்.
ஆறு. நாகப்பன்
http://freemalaysiatoday.com
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா?
" சிவா அண்ணா..நீங்க..சிங்கப்பூர்க்கு ஆபீஸ் மாத்தி வந்திடுங்க...".
Re: மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா?
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
" சிவா அண்ணா..நீங்க..சிங்கப்பூர்க்கு ஆபீஸ் மாத்தி வந்திடுங்க...".
நீங்கள் இருப்பது சிங்கையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா?
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" தற்போது தொழில்...சிங்கையில் அண்ணா.."
மிக அருகில்தான் உள்ளீர்களா! சரி சரி... தொலைபேசி எண் எனக்கு தனிமடல் மூல அனுப்புங்கள்! வேலை முடிந்ததும் அழைக்கிறேன்!
அல்லது மிஸ்டு கால் கொடுங்கள்!
60166755575
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா?
என்ன சிவா செய்யறது. தன்னை மெச்சிக்க வேண்டுமென்று..
நாட்டின் பணத்தையெல்லாம் தேவையில்லாத குப்பைக்கு கொட்டிவிட்டு, மக்களை சுரண்டினால் இந்த நிலைதான் ஏற்படும்.
மந்திரிகள் திருந்தும் வரை, இந்நிலை மாறாது சிவா.....
என்ன கொடுமை. எங்களுக்கே பயமாக இருக்கிறது.....
நாட்டின் பணத்தையெல்லாம் தேவையில்லாத குப்பைக்கு கொட்டிவிட்டு, மக்களை சுரண்டினால் இந்த நிலைதான் ஏற்படும்.
மந்திரிகள் திருந்தும் வரை, இந்நிலை மாறாது சிவா.....
என்ன கொடுமை. எங்களுக்கே பயமாக இருக்கிறது.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Similar topics
» Air Bridge in மலேசியா
» அதிசய சிறுவன்: மலேசியா...
» மலேசியா செல்கிறார் வைகோ!
» மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
» அதிசய சிறுவன்: மலேசியா
» அதிசய சிறுவன்: மலேசியா...
» மலேசியா செல்கிறார் வைகோ!
» மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
» அதிசய சிறுவன்: மலேசியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|