ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?

Go down

குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Empty குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?

Post by சிவா Fri Sep 24, 2010 10:27 am

நாட்டில் மோசமடைந்து வரும் இந்தியர் குண்டர் கும்பலின் நடவடிக்கைகளை ஒடுக்கக் காவல் துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ டி.முருகையா விடுத்திருந்த வேண்டுகோள், தேசியக் காவல் துறையின் புதிய தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமாரும், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ முகமது ஜமான் கானும் கருத்துரைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஒப்பனைக் கலை நிபுணர் டத்தோ சோசிலாவதியின் படுகொலையில் இந்தியர் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்துள்ள ஐயத்தின் பேரிலும் நடந்து வரும் புலனாய்வை ஒட்டியும் இந்தியர்களின் குண்டர்த்தனம் தொடர்பாக இப்போது அதிகம் பேசப்பட்டு வருவதை மேற்கண்ட மூவரின் கருத்துகளிலிருந்து உணர முடிகிறது.

இந்தியர் சம்பந்தப்பட்ட குண்டர் கும்பலின் செயல்பாடுகள் நாட்டிற்குப் பெரும் மிரட்டலாக விளங்கக்கூடும் என்பதால் அவற்றை ஒடுக்க அரச மலேசியக் காவல் துறை துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று டத்தோ ஜமான் கான் ஆலோசனை கூறியிருக்கிறார்.

அதேவேளையில், ஒட்டு மொத்தமாக இந்திய இனத்தவர் மட்டுமே குண்டர் கும்பல் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறுவது சரியல்ல என்று தேசியக் காவல் துறையின் புதிய தலைவர் டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமார் சொல்லி இருக்கிறார்.

தமது முன்னாள் அனுபவங்களைக் கொண்டு டத்தோ ஜமான் இப்படிச் சொல்கிறாரா, அல்லது பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டதனால் அன்றைய இந்தியர் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை சற்று மிகைப்படுத்தி மிரட்டலாக விளங்கக்கூடும் என்று சொல்கிறாரா? இதற்கு அவர்தான் பதில் கூற வேண்டும். அதுபோலவே, தலைமைப் பொறுப்பில் இருப்பதனால் தனிப்பட்ட ஓர் இனத்தில் மட்டுமே அதிகமான குண்டர் கும்பல் நடவடிக்கைகள் இருப்பதாகக் கூற முடியாது. எல்லா இனத்தவருள்ளும் அது உண்டு என்று டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமார் கூறியிருக்கிறாரா? அல்லது திட்டவட்டமான புள்ளி விவரத்துடன் ஆதாரப்படுத்தக்கூடிய வகையில் அவரது கருத்து உள்ளதா? இதற்கு அவரால்தான் பதில் சொல்ல முடியும்.

இதற்கிடையே, ஆண்டுக்கு 5,000 இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பல் குற்றத்திற்காக விசாரணையின்றி அவசரச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதாக எச்ஆர்பி அமைப்புக் குழுவின் தலைமைச் செயலாளர் பி.உதயகுமார், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

உதயகுமார் வெளியிட்டிருக்கும் செய்தி உண்மையாக இருந்தால் டத்தோ ஜமான் கான், டத்தோ முருகையா இருவரும் விடுத்திருக்கும் வேண்டுகோளில் "நெருப்பில்லாமல் புகையாது" என்னும் பொருள் அடங்கி இருப்பதாகவே கூறலாம்.

டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமாரைப் பொறுத்தவரைக்கும் குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் என்றில்லாமல் பொதுவாகவே நாட்டில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை ஒழிக்கும் வகையில் காவல் துறை திட்டங்களை வகுத்தும் செயல்படுத்தி வருவதாகக் கூறியிருப்பதில் இந்தியக் குண்டர் கும்பல் மட்டும் அல்ல, மற்ற இனத்தவர்களின் குண்டர் கும்பல்களும் உண்டு என்பது உறுதியாகிறது.

அப்படிப் பார்த்தால் நாட்டுக்கு மிரட்டலாக இருப்பவர்கள் எனக் கருதப்படும் குண்டர் கும்பல்களுள் இந்திய குண்டர் கும்பல் மட்டுமல்ல, மற்ற இனக் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் உண்டு என்றே கூறவும் கருதவும் வேண்டும்.

எனினும் மக்கள் தொகையின் விழுக்காட்டு அடிப்படையில் குண்டர் கும்பலில் ஈடுபடும் இந்தியர் எண்ணிக்கை பிற இனத்தவரின் குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் சிறிது அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. இந்த ஓர் உண்மைதான் ஒட்டு மொத்த இந்தியர்களையும் சுட்டெரித்துக் கொண்டு இருக்கிறது. இதனைக் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய இளைஞர்கள் ஆழமாகச் சிந்தித்துத் தங்கள் இனத்தவருக்குச் சேரும் களங்கத்தைப் போக்க வேண்டியது அவர்களுக்குரிய சமூகக் கடமையும் பொறுப்பு ஆகும் என்பதை நினைவுறுத்துகிறோம்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை (656)


என்பது வள்ளுவர் வாக்கு.

பத்து மாதம் சுமந்து பெற்ற தாயே பசித்திருந்தாலும், அவளது பசியைப் போக்குவதற்காக, சான்றோர் வெறுக்கும் பாவச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வள்ளுவர் தமது குறளில் அழுத்தம் திருத்தமாகக் கூறிச் சென்றுள்ளார். இந்தக் குறளின் கருத்தை குற்றச்செயல்களிலும் குண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும், ஈடுபடக் கருதுவோரும் மனத்தில் பதிய வைத்துக் கொண்டால் நிச்சயம் அவர்கள் தவறுகளைச் செய்யத் துணிய மாட்டார்கள்; தவறுகளைச் செய்யும்படி மற்றவர்கள் இடும் கட்டளைக்கும் பணிய மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல, இந்திய இளைஞர்கள் குற்றங்களைச் செய்வதற்கு அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளே காரணம் என்றும் கூற முடியாது. எடுத்துக் காட்டாக இதற்கு டத்தோ சோசிலாவதி கொலையைக் கூறலாம். அதில் சம்பந்தப்பட்டதான ஐயத்திற்கு உட்பட்டி ருப்பவர்களுக்குப் படிப்பில்லையா, சிந்திக்கும் திறனில்லையா, பண வசதி இல்லையா? இத்தனை இருந்தும் கூட சான்றோர் பழிக்கும் பாவச் செயல்களுள் ஒன்றான படுகொலை நடந்திருப்பதற்கு என்ன காரணம்? பசியா, பட்டினியா, வேலை வாய்ப்பு இன்மையா, சிலர் தவறாகக் கூறுவது போல் இனவாதமா? இவற்றுள் எதுவுமே இல்லை. எனினும், கொலை நடந்திருக்கிறது.

வறுமையிலும் செம்மையுடன் வாழ வேண்டும் என்பதுதான் ஆன்றோரும் சான்றோரும் வகுத்தளித்த வாழ்வியல் கொள்கை. ஆனால், செம்மையிலும் வறுமையான மனத்தோடு வாழ்வதை வழக்கமாகக் கொள்வது சிலரது கொள்கையாக இருந்து வருகிறது.

இந்தக் கொள்கையிலிருந்து விலகி வறுமையிலும் செம்மையுடன் வாழும் கொள்கையைக் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட இந்தியர்கள் இதைக் கடைப்பிடித்து இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பொதுவான களங்கத்தை நீக்க வேண்டும்.

மலேசிய நண்பன்


குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?
»  “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» மசாஜ் உங்களுக்கு மட்டும்தானா.....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum