Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?
Page 1 of 1
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?
நாட்டில் மோசமடைந்து வரும் இந்தியர் குண்டர் கும்பலின் நடவடிக்கைகளை ஒடுக்கக் காவல் துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ டி.முருகையா விடுத்திருந்த வேண்டுகோள், தேசியக் காவல் துறையின் புதிய தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமாரும், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ முகமது ஜமான் கானும் கருத்துரைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
ஒப்பனைக் கலை நிபுணர் டத்தோ சோசிலாவதியின் படுகொலையில் இந்தியர் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்துள்ள ஐயத்தின் பேரிலும் நடந்து வரும் புலனாய்வை ஒட்டியும் இந்தியர்களின் குண்டர்த்தனம் தொடர்பாக இப்போது அதிகம் பேசப்பட்டு வருவதை மேற்கண்ட மூவரின் கருத்துகளிலிருந்து உணர முடிகிறது.
இந்தியர் சம்பந்தப்பட்ட குண்டர் கும்பலின் செயல்பாடுகள் நாட்டிற்குப் பெரும் மிரட்டலாக விளங்கக்கூடும் என்பதால் அவற்றை ஒடுக்க அரச மலேசியக் காவல் துறை துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று டத்தோ ஜமான் கான் ஆலோசனை கூறியிருக்கிறார்.
அதேவேளையில், ஒட்டு மொத்தமாக இந்திய இனத்தவர் மட்டுமே குண்டர் கும்பல் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறுவது சரியல்ல என்று தேசியக் காவல் துறையின் புதிய தலைவர் டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமார் சொல்லி இருக்கிறார்.
தமது முன்னாள் அனுபவங்களைக் கொண்டு டத்தோ ஜமான் இப்படிச் சொல்கிறாரா, அல்லது பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டதனால் அன்றைய இந்தியர் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை சற்று மிகைப்படுத்தி மிரட்டலாக விளங்கக்கூடும் என்று சொல்கிறாரா? இதற்கு அவர்தான் பதில் கூற வேண்டும். அதுபோலவே, தலைமைப் பொறுப்பில் இருப்பதனால் தனிப்பட்ட ஓர் இனத்தில் மட்டுமே அதிகமான குண்டர் கும்பல் நடவடிக்கைகள் இருப்பதாகக் கூற முடியாது. எல்லா இனத்தவருள்ளும் அது உண்டு என்று டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமார் கூறியிருக்கிறாரா? அல்லது திட்டவட்டமான புள்ளி விவரத்துடன் ஆதாரப்படுத்தக்கூடிய வகையில் அவரது கருத்து உள்ளதா? இதற்கு அவரால்தான் பதில் சொல்ல முடியும்.
இதற்கிடையே, ஆண்டுக்கு 5,000 இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பல் குற்றத்திற்காக விசாரணையின்றி அவசரச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதாக எச்ஆர்பி அமைப்புக் குழுவின் தலைமைச் செயலாளர் பி.உதயகுமார், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
உதயகுமார் வெளியிட்டிருக்கும் செய்தி உண்மையாக இருந்தால் டத்தோ ஜமான் கான், டத்தோ முருகையா இருவரும் விடுத்திருக்கும் வேண்டுகோளில் "நெருப்பில்லாமல் புகையாது" என்னும் பொருள் அடங்கி இருப்பதாகவே கூறலாம்.
டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமாரைப் பொறுத்தவரைக்கும் குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் என்றில்லாமல் பொதுவாகவே நாட்டில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை ஒழிக்கும் வகையில் காவல் துறை திட்டங்களை வகுத்தும் செயல்படுத்தி வருவதாகக் கூறியிருப்பதில் இந்தியக் குண்டர் கும்பல் மட்டும் அல்ல, மற்ற இனத்தவர்களின் குண்டர் கும்பல்களும் உண்டு என்பது உறுதியாகிறது.
அப்படிப் பார்த்தால் நாட்டுக்கு மிரட்டலாக இருப்பவர்கள் எனக் கருதப்படும் குண்டர் கும்பல்களுள் இந்திய குண்டர் கும்பல் மட்டுமல்ல, மற்ற இனக் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் உண்டு என்றே கூறவும் கருதவும் வேண்டும்.
எனினும் மக்கள் தொகையின் விழுக்காட்டு அடிப்படையில் குண்டர் கும்பலில் ஈடுபடும் இந்தியர் எண்ணிக்கை பிற இனத்தவரின் குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் சிறிது அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. இந்த ஓர் உண்மைதான் ஒட்டு மொத்த இந்தியர்களையும் சுட்டெரித்துக் கொண்டு இருக்கிறது. இதனைக் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய இளைஞர்கள் ஆழமாகச் சிந்தித்துத் தங்கள் இனத்தவருக்குச் சேரும் களங்கத்தைப் போக்க வேண்டியது அவர்களுக்குரிய சமூகக் கடமையும் பொறுப்பு ஆகும் என்பதை நினைவுறுத்துகிறோம்.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை (656)
என்பது வள்ளுவர் வாக்கு.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயே பசித்திருந்தாலும், அவளது பசியைப் போக்குவதற்காக, சான்றோர் வெறுக்கும் பாவச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வள்ளுவர் தமது குறளில் அழுத்தம் திருத்தமாகக் கூறிச் சென்றுள்ளார். இந்தக் குறளின் கருத்தை குற்றச்செயல்களிலும் குண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும், ஈடுபடக் கருதுவோரும் மனத்தில் பதிய வைத்துக் கொண்டால் நிச்சயம் அவர்கள் தவறுகளைச் செய்யத் துணிய மாட்டார்கள்; தவறுகளைச் செய்யும்படி மற்றவர்கள் இடும் கட்டளைக்கும் பணிய மாட்டார்கள்.
அதுமட்டுமல்ல, இந்திய இளைஞர்கள் குற்றங்களைச் செய்வதற்கு அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளே காரணம் என்றும் கூற முடியாது. எடுத்துக் காட்டாக இதற்கு டத்தோ சோசிலாவதி கொலையைக் கூறலாம். அதில் சம்பந்தப்பட்டதான ஐயத்திற்கு உட்பட்டி ருப்பவர்களுக்குப் படிப்பில்லையா, சிந்திக்கும் திறனில்லையா, பண வசதி இல்லையா? இத்தனை இருந்தும் கூட சான்றோர் பழிக்கும் பாவச் செயல்களுள் ஒன்றான படுகொலை நடந்திருப்பதற்கு என்ன காரணம்? பசியா, பட்டினியா, வேலை வாய்ப்பு இன்மையா, சிலர் தவறாகக் கூறுவது போல் இனவாதமா? இவற்றுள் எதுவுமே இல்லை. எனினும், கொலை நடந்திருக்கிறது.
வறுமையிலும் செம்மையுடன் வாழ வேண்டும் என்பதுதான் ஆன்றோரும் சான்றோரும் வகுத்தளித்த வாழ்வியல் கொள்கை. ஆனால், செம்மையிலும் வறுமையான மனத்தோடு வாழ்வதை வழக்கமாகக் கொள்வது சிலரது கொள்கையாக இருந்து வருகிறது.
இந்தக் கொள்கையிலிருந்து விலகி வறுமையிலும் செம்மையுடன் வாழும் கொள்கையைக் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட இந்தியர்கள் இதைக் கடைப்பிடித்து இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பொதுவான களங்கத்தை நீக்க வேண்டும்.
மலேசிய நண்பன்
ஒப்பனைக் கலை நிபுணர் டத்தோ சோசிலாவதியின் படுகொலையில் இந்தியர் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்துள்ள ஐயத்தின் பேரிலும் நடந்து வரும் புலனாய்வை ஒட்டியும் இந்தியர்களின் குண்டர்த்தனம் தொடர்பாக இப்போது அதிகம் பேசப்பட்டு வருவதை மேற்கண்ட மூவரின் கருத்துகளிலிருந்து உணர முடிகிறது.
இந்தியர் சம்பந்தப்பட்ட குண்டர் கும்பலின் செயல்பாடுகள் நாட்டிற்குப் பெரும் மிரட்டலாக விளங்கக்கூடும் என்பதால் அவற்றை ஒடுக்க அரச மலேசியக் காவல் துறை துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று டத்தோ ஜமான் கான் ஆலோசனை கூறியிருக்கிறார்.
அதேவேளையில், ஒட்டு மொத்தமாக இந்திய இனத்தவர் மட்டுமே குண்டர் கும்பல் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறுவது சரியல்ல என்று தேசியக் காவல் துறையின் புதிய தலைவர் டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமார் சொல்லி இருக்கிறார்.
தமது முன்னாள் அனுபவங்களைக் கொண்டு டத்தோ ஜமான் இப்படிச் சொல்கிறாரா, அல்லது பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டதனால் அன்றைய இந்தியர் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை சற்று மிகைப்படுத்தி மிரட்டலாக விளங்கக்கூடும் என்று சொல்கிறாரா? இதற்கு அவர்தான் பதில் கூற வேண்டும். அதுபோலவே, தலைமைப் பொறுப்பில் இருப்பதனால் தனிப்பட்ட ஓர் இனத்தில் மட்டுமே அதிகமான குண்டர் கும்பல் நடவடிக்கைகள் இருப்பதாகக் கூற முடியாது. எல்லா இனத்தவருள்ளும் அது உண்டு என்று டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமார் கூறியிருக்கிறாரா? அல்லது திட்டவட்டமான புள்ளி விவரத்துடன் ஆதாரப்படுத்தக்கூடிய வகையில் அவரது கருத்து உள்ளதா? இதற்கு அவரால்தான் பதில் சொல்ல முடியும்.
இதற்கிடையே, ஆண்டுக்கு 5,000 இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பல் குற்றத்திற்காக விசாரணையின்றி அவசரச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதாக எச்ஆர்பி அமைப்புக் குழுவின் தலைமைச் செயலாளர் பி.உதயகுமார், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
உதயகுமார் வெளியிட்டிருக்கும் செய்தி உண்மையாக இருந்தால் டத்தோ ஜமான் கான், டத்தோ முருகையா இருவரும் விடுத்திருக்கும் வேண்டுகோளில் "நெருப்பில்லாமல் புகையாது" என்னும் பொருள் அடங்கி இருப்பதாகவே கூறலாம்.
டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமாரைப் பொறுத்தவரைக்கும் குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் என்றில்லாமல் பொதுவாகவே நாட்டில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை ஒழிக்கும் வகையில் காவல் துறை திட்டங்களை வகுத்தும் செயல்படுத்தி வருவதாகக் கூறியிருப்பதில் இந்தியக் குண்டர் கும்பல் மட்டும் அல்ல, மற்ற இனத்தவர்களின் குண்டர் கும்பல்களும் உண்டு என்பது உறுதியாகிறது.
அப்படிப் பார்த்தால் நாட்டுக்கு மிரட்டலாக இருப்பவர்கள் எனக் கருதப்படும் குண்டர் கும்பல்களுள் இந்திய குண்டர் கும்பல் மட்டுமல்ல, மற்ற இனக் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் உண்டு என்றே கூறவும் கருதவும் வேண்டும்.
எனினும் மக்கள் தொகையின் விழுக்காட்டு அடிப்படையில் குண்டர் கும்பலில் ஈடுபடும் இந்தியர் எண்ணிக்கை பிற இனத்தவரின் குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் சிறிது அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. இந்த ஓர் உண்மைதான் ஒட்டு மொத்த இந்தியர்களையும் சுட்டெரித்துக் கொண்டு இருக்கிறது. இதனைக் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய இளைஞர்கள் ஆழமாகச் சிந்தித்துத் தங்கள் இனத்தவருக்குச் சேரும் களங்கத்தைப் போக்க வேண்டியது அவர்களுக்குரிய சமூகக் கடமையும் பொறுப்பு ஆகும் என்பதை நினைவுறுத்துகிறோம்.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை (656)
என்பது வள்ளுவர் வாக்கு.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயே பசித்திருந்தாலும், அவளது பசியைப் போக்குவதற்காக, சான்றோர் வெறுக்கும் பாவச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வள்ளுவர் தமது குறளில் அழுத்தம் திருத்தமாகக் கூறிச் சென்றுள்ளார். இந்தக் குறளின் கருத்தை குற்றச்செயல்களிலும் குண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும், ஈடுபடக் கருதுவோரும் மனத்தில் பதிய வைத்துக் கொண்டால் நிச்சயம் அவர்கள் தவறுகளைச் செய்யத் துணிய மாட்டார்கள்; தவறுகளைச் செய்யும்படி மற்றவர்கள் இடும் கட்டளைக்கும் பணிய மாட்டார்கள்.
அதுமட்டுமல்ல, இந்திய இளைஞர்கள் குற்றங்களைச் செய்வதற்கு அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளே காரணம் என்றும் கூற முடியாது. எடுத்துக் காட்டாக இதற்கு டத்தோ சோசிலாவதி கொலையைக் கூறலாம். அதில் சம்பந்தப்பட்டதான ஐயத்திற்கு உட்பட்டி ருப்பவர்களுக்குப் படிப்பில்லையா, சிந்திக்கும் திறனில்லையா, பண வசதி இல்லையா? இத்தனை இருந்தும் கூட சான்றோர் பழிக்கும் பாவச் செயல்களுள் ஒன்றான படுகொலை நடந்திருப்பதற்கு என்ன காரணம்? பசியா, பட்டினியா, வேலை வாய்ப்பு இன்மையா, சிலர் தவறாகக் கூறுவது போல் இனவாதமா? இவற்றுள் எதுவுமே இல்லை. எனினும், கொலை நடந்திருக்கிறது.
வறுமையிலும் செம்மையுடன் வாழ வேண்டும் என்பதுதான் ஆன்றோரும் சான்றோரும் வகுத்தளித்த வாழ்வியல் கொள்கை. ஆனால், செம்மையிலும் வறுமையான மனத்தோடு வாழ்வதை வழக்கமாகக் கொள்வது சிலரது கொள்கையாக இருந்து வருகிறது.
இந்தக் கொள்கையிலிருந்து விலகி வறுமையிலும் செம்மையுடன் வாழும் கொள்கையைக் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட இந்தியர்கள் இதைக் கடைப்பிடித்து இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பொதுவான களங்கத்தை நீக்க வேண்டும்.
மலேசிய நண்பன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?
» “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» மசாஜ் உங்களுக்கு மட்டும்தானா.....
» “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» மசாஜ் உங்களுக்கு மட்டும்தானா.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|