ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

3 posters

Go down

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Empty ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 23, 2010 7:56 pm

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகள் தொடங்கி அறுபது வரை திரை இசை மெல்லிசை வடிவத்தில் பல்வேறு உத்திகளைக் கையாள ஆரம்பித்தது. இந்த முயற்சியில் ஏராளமான கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள், வாத்திய இசைக் கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பிரபல நடிகர்கள், நடிகைகள், விமரிகர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ரசிகர்கள் தங்கள் திறமைகளையும் எதிர்பார்ப்புகளையும் அள்ளி வீசி மெல்லிசையை அனைவரும் அங்கீகரிக்கும் ஒரு தேர்ந்த இசை அமைப்பாக மாற்றினர்.

இந்தக் கால கட்டத்தில் தமிழ்த் திரை இசைக்கு ஒரு தனி முத்திரையைப் பதிக்க வந்தார் கவியரசர் கண்ணதாசன் (தோற்றம் 24-6-1927; மறைவு 17-10-1981). தன் சிறந்த சொல்லாட்சி, சொற்பிரயோகம், உவமை நயம், புதிய புதிய உத்திகள், சந்தங்கள், இலக்கிய நயம், பொருள் நயம், இசை நயம் ஆகியவற்றால் சுமார் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை அள்ளிக் கொட்டி 54 வயதிலேயே தன் பயணத்தை முடித்துக் கொண்டார் கவியரசர்.

சேரக் கூடாத இடத்தில் சேர்ந்து நல்ல அனுபவம் பெற்று சேர வேண்டிய இடத்தில் வந்து சேர்ந்து உலகத்திற்கு தன் அனுபவங்களையும் வாழ வேண்டிய நெறிகளையும் அவர் போதிக்க முற்பட்ட காலத்தில் காலன் சற்று அவசரப்பட்டு விட்டான். விளைவு தமிழுக்கு நஷ்டம்!

தன்னைப் பற்றி ரத்த திலகம் படத்தில் (1963ம் ஆண்டு சீனப் போருக்குப் பின்னர் தேசபக்தியை வலியுறுத்தி வெளிவந்த படம்) அவரே தோன்றிப் பாடும் பாடல் (இரண்டு நிமிடம் 39 விநாடிகள் நீடிக்கும் பாடல்) ஒன்று உண்டு:

"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர்த்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன் .. (நான் காவியத் தாயின்)
பாமர ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்

நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை"

உமர் கய்யாமின் மதுக் கோப்பை பாடல்களில் மனம் தோய்ந்த கண்ணதாசன் தன் நிலையையும் சற்று சிந்தித்து ஒப்பிட்டுப் பார்த்து தன்னைப் பற்றித் தானே விமரிசனம் செய்து கொண்டு தீர்க்க தரிசனத்துடன் "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்று முத்தாய்ப்பாகக் கூறினார். உண்மைதான். அவர் பாடல்களுக்கு அழிவில்லை; அவர் இயற்றிய பாடல்களில் அவர் வாழ்கிறார்.

பெண்மையின் சிறப்பையும் காதலின் நளினத்தையும் அவர் நூற்றுக் கணக்கான இடங்களில் திறம்படச் சுட்டிக் காட்டுகிறார்!

"காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால் போல் சிரிப்பதில் பிள்ளை அவள்
பனி போல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை"

பாவ மன்னிப்பு படத்தில் (1961ம் ஆண்டு வெளியான படம்) இடம் பெறும் பாடல் இது. பி.பி ஸ்ரீனிவாஸ் தன் தேனினும் இனிய மெல்லிய குரலால் மிருதுவாகப் பாடிய பாடல் இது. மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இசை அமைக்க தமிழகமெங்கும் பாடல் ஹிட் ஆகி அனைவரையும் ஆட்கொண்டது.

சிறுகூடல் பட்டியில் தோன்றி உயர்நிலைப் பள்ளியிலே தன் படிப்பை முடித்த முத்தையா கருவிலே திரு பெற்றுத் தமிழில் தேர்ந்து கவியரசர் கண்ணதாசனாக மாறி தமிழ் மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

5000 பாடல்களில் அவர் தந்த தமிழ் நயமும் இசை நயமும் திரை இசை வரலாற்றில் தருவது ஒரு தனி நயம்!

நன்றி: நிலாச்சாரல் கலைராஜன்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Empty Re: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

Post by gunashan Thu Sep 23, 2010 8:08 pm

எங்கள் கண்ணதாசன் அழியா பொக்கிஷம் அய்யா.
அவரது படைப்புகள் அத்தனையும் வைரமணி மாலை.....
உலகம் அழியும் வரை அவரது படைப்புக்கள் அழியாது என்பது உறுதி.....
பகிர்ந்ததற்கு வாழ்த்துகள்....... மகிழ்ச்சி நன்றி நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Empty Re: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

Post by கார்த்திக் Thu Sep 23, 2010 8:13 pm

அருமையான கவியாளன் .........
எல்லோர் மனதிலும் நிலத்து நிற்கும் ஒரு கவியரசு ....


பகிர்வுக்கு நன்றி ஐயா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Empty Re: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum