ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு

4 posters

Go down

செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு Empty செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு

Post by ரபீக் Thu Sep 23, 2010 4:27 pm

நாளை வழங்கப்படுவதாக இருந்த அயோத்தி தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட கருத்தை தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

அயோத்தி குறித்த 60 ஆண்டு கால வழக்கில் நாளை அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறவிருந்தது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் திரிபாதி.

நேற்று இந்த மனு கபீர், பாதக் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது இதை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறி விட்டனர். இதையடுத்து திரிபாதியின் மனு இன்று வேறு பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த இரு நீதிபதிகளும் ஆளுக்கு ஒரு கருத்தைத் தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் அயோத்தி தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்து பெஞ்ச் உத்தரவிட்டது.

முன்னதாக ஒரு நீதிபதி கூறுகையில், இந்த விவகாரத்தில் சமரசம் பேச வாய்ப்பு உள்ளது என்றால் அதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஒரு சதவீத வாய்ப்பு இருந்தால் கூட பரவாயில்லை, அதை அளிக்க வேண்டும். ஒரு தீர்ப்பால் பலரும் பாதிக்கப்படக் கூடும். எனவே பேச்சுவார்த்தைக்கு மதிப்பளித்து அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை.

இந்த தீர்ப்பால் பாதிப்பு ஏற்பட்டால் அது மக்களைத்தான் பாதிக்கும். மக்களை பாதித்தால் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டைத்தான் குறை கூறுவார்கள். எனவே இந்த தீர்ப்பை தள்ளி வைக்கலாம் என்று தெரிவித்தார் என்றார்.

ஆனால் இன்னொரு நீதிபதி, இந்த மனுவையே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்மானமாக தெரிவித்தார். இருப்பினும் முதல் நீதிபதியின் கருத்தை மதிப்பதாக தெரிவித்த அவர் தீர்ப்பை தள்ளி வைக்க சம்மதித்தார். இதையடுத்து செப்டம்பர் 28ம்தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதிகள், திரிபாதியின் மனு மீதான விசாரணையையும் அன்றைய தினத்திற்கே தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இதன் மூலம் பெரும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு நாளை வெளிவராது என்பது உறுதியாகி விட்டது. இருப்பினும் செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவிக்கப் போகும் உத்தரவைப் பொறுத்தே அயோத்தி தீர்ப்பின் எதிர்காலம் அமைந்துள்ளது.

அயோத்தியில் பலத்த பாதுகாப்பு :

முன்னதாக தீர்ப்பு வெளியாவதாக இருந்ததால், அயோத்தி முழுவதும்யுபலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. உ.பி. மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

அயோத்தி, பைசாபாத், லக்னோ உள்ளிட்ட 19 முக்கிய நகரங்களில் கிட்டத்தட்ட 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உ.பி. முழுவதும் அமைதிப் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தீர்ப்புக்குப் பிறகு அதை இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவதற்கும், எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பளிக்கப்படவுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வளாகத்திற்குள் நாளை யாரும் நுழையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வழக்குகள் உடைய வக்கீல்கள் மட்டுமே வர வேண்டும். வழக்குகள் எதுவும் இல்லாத வக்கீல்கள் வரக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.

தீர்ப்பை வாசிகக்ப் போகும் 3 நீதிபதிகளுக்கும் மிக பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தமிழ்நாட்டுக்கு வருவதாக இருந்தது. ஆனால் அயோத்தி தீர்ப்பு தொடர்பான பதட்டம் அதிகரித்திருப்பதால் அவர் தனது பயணத்தை ரத்து செய்து டெல்லியிலேயே தங்கியிருந்தார்.

பாஜக-ஆர்எஸ்எஸ்ஸை நம்ப முடியாது:
இதற்கிடையே, தீர்ப்புக்குப் பின்னர் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். போன்ற சங் பரிவார் அமைப்புகளும் வன்முறையில் ஈடுபடலாம். அவர்களை நம்ப முடியாது. இப்படித்தான் 1992ம் ஆண்டு அவர்கள் அளித்த வாக்குறுதியை நாடு நம்பியது. ஆனால் அப்போது நடந்த தவறுக்கு இன்று வரை நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. எனவே இவர்கள் விஷயத்தில் அரசு மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் எச்சரித்துள்ளார்.

அதேபோல கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் முழுவதும் 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மதுக் கடைகளை மூடவும், பள்ளி, கல்லூரிகளை மூடவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்திருந்தது

thatstamill


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு Empty Re: செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு

Post by kalaimoon70 Thu Sep 23, 2010 4:37 pm

இது எதிர்ப் பார்த்த ஒன்று தான்.
1852 லிருந்து இந்த பிரச்சனை தொடர்கதை .

இதற்க்கு இறைவன் தான் துணை .
நலம் பெற வேண்டுவோம்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு Empty Re: செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு

Post by கார்த்திக் Thu Sep 23, 2010 4:52 pm

உள்நாட்டு சதி ..........


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு Empty Re: செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு

Post by V.Annasamy Thu Sep 23, 2010 4:54 pm


இறைவன் தீர்ப்பு இன்னும் வரவில்லையோ !!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு Empty Re: செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum