புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
25 Posts - 50%
heezulia
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
7 Posts - 2%
prajai
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_m10நான் ஒரு குப்பைத் தொட்டி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஒரு குப்பைத் தொட்டி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 11:39 pm

ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள். நினைத்த இடத்தில் போடாமல் ஒவ்வொருவரும் குப்பைகளை முறையாக தொட்டியில் போடுகிறார்கள். ஒரு சிறு காகித துண்டாக இருந்தால் கூட அதை கடமை தவறாது கொண்டு சென்று அருகே உள்ள குப்பைத் தொட்டியில் தான் போடுகிறார்கள். குப்பையை தொட்டிகளில் போட்டால் மட்டும் போதாது ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள். நினைத்த இடத்தில் போடாமல் ஒவ்வொருவரும் குப்பைகளை முறையாக தொட்டியில் போடுகிறார்கள். ஒரு சிறு காகித துண்டாக இருந்தால் கூட அதை கடமை தவறாது கொண்டு சென்று அருகே உள்ள குப்பைத் தொட்டியில் தான் போடுகிறார்கள். குப்பையை தொட்டிகளில் போட்டால் மட்டும் போதாது என்று அதை அவ்வப்போது அப்புறப்படுத்தும் கார்பரேஷன் லாரிகள். பேருந்திலோ, வாகனங்களிலோ பயணம் செய்பவர்கள் எவரும் நினைத்த இடங்களில் எச்சில் உமிழ்வதில்லை. இங்கே சிறுநீர் கழிக்காதே என்று சுவற்றில் எழுதவில்லை@ ஆனாலும் அங்கே எவரும் சிறுநீறு கழிப்பதில்லை. சுத்தமும் சுகாதாரமும் ஒவ்வொருவர் இரத்தத்தோடு ஊரிப்போன விஷயமாக உள்ளது. அது மட்டுமா?? காசு போட பிச்சைக்காரனை தேடுகிறேன்... காணவில்லை. ஐந்து ரூபாயாக இருந்தால் கூட அதை உழைத்துப் பெற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு வேலை தேட சென்று விட்டார்களாம். என்ன ஒரு ஆச்சர்யம்... இப்படி என் நாட்டையும், என் நாட்டு மக்களையும் பார்த்து நான் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த போது யாரோ என் காதில் நாயணம் ஊதுவது போல் பெரும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். வெளியில் யாரோ காலிங் பெல் அடிக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். ஐயஹோ!! அத்தனையும் கனவா?? நம்பிக்கை வரவில்லை. ஒரு நப்பாசையில் வெளியில் எட்டிப் பார்த்தேன். கனவேதான்!! எதுவும் மாறவில்லை. எனக்குள் ஒரு பெரும் சோகம் என்னை மிகவும் வாட்டியது.

எங்கு பார்க்கினும் என்னைச் சுற்றி குப்பைகள். தொட்டிகள் இருந்தால் ஒன்று அது நிரம்பி வழியும.; அப்படியே தொட்டியில் இடம் இருந்தாலும் நான் அதை பொருட்படுத்தாமல் ஒரு நான்கு அடி தள்ளி நின்று என் கூடையை ஒரு வீசு வீசுவேன். பாதி குப்பை தொட்டியில் விழும் மீதி வெளியில் விழும். எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. சரளமாக நினைத்த இடத்திலெல்லாம் பேப்பரை கிழித்துப் போடுவேன், சிகரெட் துண்டுகளை போடுவென், கார் ஜன்னல் கதவுகளை திறந்து சற்றும் சிந்தனையில்லாமல் வாழைப்பழத் தோலை தூக்கி வெளியே எறிவேன். இப்படி பல விதத்திலும் என் சுற்றுப்புரத்தை நாசப்படுத்துவேன். பல குப்பைத் தொட்டிகளை கடந்து செல்லும் பொழுது வாரக்கணக்கில் குப்பைகள் அகற்றப்படாமல் அதிலிருந்து வரும் துர்நாற்றம் என் குடலை பிரட்டிக் கொண்டு வாந்தி வரும். அவையெல்லாம் என்னை சிறிதும் பாதிப்பதில்லை. ஐந்தறிவு ஜீவன்களுக்கு போட்டியாக நினைத்த இடத்திலெல்லாம் காலை விரித்து சிறுநீறு கழிப்பேன். இங்கே சிறுநீறு கழிக்காதே என்று சுவரில் எழுதியிருக்கும். அதன் மீதே சிறுநீறு கழிப்பதில் எனக்கு ஒரு அலாதி இன்பம். எல்லாவற்றிற்கும் மேலாக பேருந்தில் பயணம் செய்யும் பொழுது தூ... தூ... என்று வழி நெடுக எச்சில் துப்பிக் கொண்டே செல்வேன். எனக்கு பின்னால் அமர்ந்திருப்பவர்களின் மீது தெறிக்கும் என்பதை பற்றி எனக்கு சிறிதும் கவலை கிடையாது. அருகே பைக்குகளில் வருபவர்களைப் பற்றியோ, கார் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு பயணம் செய்பவர்களைப் பற்றியோ எனக்கு கவலை கிடையாது. ஏதேனும் வண்டிகள் வருகின்றனவா என்று திரும்பி பார்க்க கூட எனக்கு தோன்றுவதில்லை. பான் பராக்கையோ, புகையிலையையோ, வெற்றிலையையோ மென்று மென்று, மற்றும் இன்னும் பல காரணங்களுக்காக துப்புவதற்கு நான் அஞ்சுவதேயில்லை. படித்தவன் படிக்காதவன் என்கிற பாகுபாட்டிற்கு இதில் இடமே இல்லை. கோலி குண்டு விளையாடிய பருவத்திலும் நான் இவைகளை செய்தேன். கல்வி கற்ற காலத்திலும் நான் இவைகளை செய்தேன். இப்பொழுது படித்து பட்டம் வாங்கி வேலைக்கு செல்லும்போதும் நான் இவைகளை செய்கிறேன். தொடர்ந்து இவைகளை செய்வேன் என்று பட்சி ஜோசியம் கூறுகிறது. இதில் பாரட்ட பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நான் வாழும் இடத்தின் சுற்றுப்புரம் என்றோ வெளியிடம் என்றோ ஒரு பாகுபாடே எனக்கு கிடையாது. எங்கு வேண்டுமானலும் குப்பைகள் போடுவேன், சிறுநீறு கழிப்பேன், எச்சில் துப்புவேன். லட்சக் கணக்கில் நம் நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து போகும் பெருமை வாய்ந்த பல இடங்களைக் கூட நான் விட்டு வைப்பதில்லை. என் மூளையில் சுத்தத்தை அறியப்படுத்தும் நரம்பு இம்மி அளவு கூட வேலை செய்யவில்லை என்றே நினைக்கிறேன். சமயத்தில் சாக்கடைகளை சுத்தம் செய்யும் நானே, அதை எடுத்து அங்கேயே அப்படியே வெளியில் போட்டுவிட்டு செல்வேன். அந்த வழி நடந்து செல்வோர் அந்த துர்நாற்றத்தால் படும் அவஸ்தை என் கண்களுக்கு தெரிவதில்லை. அதனால் நோய் கிருமிகள் பரவுவது பற்றியும் எனக்கு கவலையில்லை. மேலை நாடுகளில் வீடுகளிலும், குடியிருப்பகளிலும் நீச்சம் குளம் இல்லாமல் இருக்காது. இங்கேயோ பலரும் தஞ்சம் புகுவது கூவத்தின் ஓரம் தான். இந்த கூவங்களில் பல, ஒரு காலத்தில் புனிதமான நதியாக இருந்தது என்பது வேறு விஷயம். குப்பை மேட்டை கோபுரமாக்கவும், கோபுரத்தை குப்பை மேட்டாக்கவும் திறம் படைத்த ஒரே ஜீவன், மனிதன் ஒருவன் தான். ஆஹா!! இவனுக்குள் எத்தனை விந்தைகள்... கூவங்களின் அடிவாரத்தில் என் குடிசைகள். சகிக்க முடியா நாற்றம்... இருப்பினும் அதிலேயே என் துணிகளை துவைப்பது, என் குழந்தைகள் விளையாடுவது, அங்கேயே உணவுப் பண்டங்களை கடைகள் போட்டு விற்பது, அங்கேயே சமைத்து உண்பது, இருக்கும் துர்நாற்றம் போதாதென்று என் குடிசையின் பின்னால் நானே மேலும் குப்பைகளை சேர்ப்பது, அங்கேயே இனப்பெருக்கம், இப்படி என் வாழ்க்கை அங்கே தொடங்கி அங்கேயே முடிகிறது.

மனிதனை காம உணர்ச்சியில் இழுக்கும் பல உடல் உறுப்புகளில் இறைவன் ஒரு வித குப்பைத் தொட்டியை பொறுத்தியுள்ளான். ஆஹா!! என்ன விந்தை. அவனுடைய படைப்பை எவரால் சித்தரிக்க முடியும்?? ஆனால், என் உடலே ஒருவித சாக்கடை... இதற்கென்னடா போஷாக்கு வேண்டிக்கிடக்கு என்கிற வேதாந்தமெல்லாம் முற்றும் துறந்த ஞானிகளுக்கு. என்னைப் போன்ற சராசரி மானிடர்களுக்கு உட்புற தூய்மை என்பது வெளிப்புறத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை.

கை கால்கள் நேராக இருந்தும் நான் ரோட்டில் பிச்சை எடுப்பதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். போதாக்குறைக்கு இடுப்பில் ஒரு குழந்தை. சில நேரங்களில் அந்த குழந்தையை வாடகைக்கு வாங்கி வந்து கூட நான் பிச்சை எடுப்பேன். ஒரு பாவமும் அறியா, மழலை கொஞ்சும் அந்த பிஞ்சு முகம் என்னைப் பார்த்து உன் இழிச்செயலுக்கு என்னை இறையாக்குகிறாயே... இது எந்த விதத்தில் ஞாயம் என்று கேட்பது என் காதில் விழுவதில்லை. ரோட்டில் போவோரைப் பார்த்து கையசைத்து, இந்த காட்டுமிராண்டியின் பிடியிலிருந்து யாரேனும் என்னை விடுவிக்க மாட்டீர்களா என கூக்குரலிடுவதும் என் காதில் விழுவதில்லை. அதன் கண்ணீர் பேசுகிறது - என்னை ஆசையோடு பார்ப்போரிடம் தவழ்ந்தோடிப் போய் தாவி அவர் மடியில் என்னால் ஏறிக் கொள்ள முடியவில்லை@ கள்ளமில்லா என் சிரிப்பில் பார்ப்போரையெல்லாம் என்னிடம் மயங்க வைக்க முடியவில்லை@ என் விரல் பிடித்து தத்தித் தத்தி நடை பழக எனக்கு சொல்லித்தருவோரில்லை@ நிலவைக் காட்டி எனக்கு சோறூட்டுவோரில்லை@ அன்போடு கட்டித்தழுவி என்னை முத்தமிடுவோரில்லை@ தோளிலும் மார்பிலும் ஆடிடும் அஞ்சுகமென என்னை போற்றுவோரில்லை@ சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே... தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே என பாட்டு பாடி என்னை தூங்க வைப்போரில்லை@ என்னை குளிப்பாட்டி, தலைசீவி, கண்ணுக்கு மையிட்டு, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டிட்டு, வண்ண ஆடை உடுத்தி, காலில் கொலுசு ப+ட்டி அழகு பார்ப்போரில்லை@ கருவில் எனைத் தாங்க வரம் கேட்போருண்டு, தான் தாயாவதற்கு தவம் செய்வோரும் உண்டு, மரணம்... அதைப் பார்த்து சேய் கண்டு, மண்ணில் இரண்டாம் முறை தாய் பிறப்பதுண்டு, உதிரம் நிறம் மாற்றி பாலாக்கி அவள் மார்பில் எனக்கு உயிரூட்டுவாள் என்று நான் கேட்டதுண்டு@ என்னை கொஞ்சி விளையாட பொம்மை வடிவில் அவள் மாறுவதும் உண்டு@ இமை மேலே இமையம் எனக்காக சுமப்பாள் என்று சொன்னோருண்டு@ தாயின் அன்பு பொய்யாகுமா, தாய்ப்பால் என்றும் விஷமாகுமா, என்று பாடிய கவிஞருண்டு. ஆனால் என் விஷயத்தில் தாயின் அன்பு பொய்த்து விட்டது. தாய்ப்பால் விஷமாகிவிட்டது. சுகமான உலகம் அந்த கருவரையைவிட்டு நான் வெளியில் வந்தவுடன் என் மழலைப் பருவத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி நான் ஏன் பிறந்தேன் என கேட்க வைத்து விட்டாளே... என்றெல்லாம் வெளியில் சொல்லத் தெரியாமல் பல சோகங்களை தாங்கிக் கொண்டு அந்த குழந்தை அழுது கதறுவதைப் பார்த்து என் இதயத்தில் இரத்தம் வடியவில்லை.

இப்படி ஒரு செயலைச் செய்யும் நான் ஒரு மனிதப் பிறவி என்று சொல்லிக் கொள்ள கூட எனக்கு நா கூசவில்லை. என்னை முழுமையாக படைத்திருக்கிறான் இறைவன். எனக்கு எந்த உடல் ஊனமும் இல்லை. உடல் ஊனமுற்றவர்கள் பலரும் கூட பலவித மாபெரும் சாதனைகளை படைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தும் நான் அதைப் பற்றி கண்டுகொள்வதில்லை. ஊனமே இல்லாமல் என்னால் எப்படி மற்றொருவரிடம் கையேந்தி நிற்க முடிகிறது? சிலர் என்னிடம் வேலை செய்து பிழை என்று கடிந்து கொள்வது கூட எனக்கு உறைப்பதில்லை. என் நாடி நரம்புகளில் ஒரு பனித்துளி அளவுக்கு கூட உணர்ச்சி இல்லாமல் போய்விட்டதா?? தொடர்ந்து இதை செய்ய நான் கூனிக் குறுக வில்லையே ஏன்?? போதாக்குறைக்கு பட்ட பகலில் குடித்து மகிழ்வேன். அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லை என்று தெரிந்திருந்தும் உழைக்க வேண்டிய நேரத்தில் பலரோடு சேர்ந்து சீட்டாட்டம் போடுவேன். இப்படி பொன்னான நேரத்தை நான் பலவிதத்திலும் வீணடிப்பேன். என்னைப் பொறுத்தவரை இவையெல்லாம் சுதந்திரம் என்கிற பெயரில் எனக்கு அளிக்கப்பட்ட உரிமைகள். என்னை கேட்பதற்கு எவரும் இல்லை என்கிற போக்கு எனக்கு. என் நாட்டின் மீது எனக்குள்ள அக்கரையை இவைகள் காட்டும். இந்த மண்ணின் மீது நான் வைத்திருக்கும் மரியாதையை காட்டும். என் நாட்டு பெருமைகளை சொல்லாமல் என் நாட்டு அவலங்களை மட்டும் படமெடுத்து காட்டுவதை பழக்கமாக வைத்திருக்கும் வெளிநாட்டவருக்கு நான் மேலும் தீனி போடுகிறேன் என்பது கூட எனக்கு தோன்றுவதில்லை.

ஒரு பக்கம் மனிதனின் எண்ணற்ற சாதனைகள். பூமியும் சலித்து, நிலவும் சலித்து இப்பொழுது மார்ஸை தேடிச் செல்கிறான். ஒருவரின் இதயத்தை வெளியே எடுத்து பழுது பார்த்து மீண்டும் உள்ளே பொருத்தி புத்துயிர் கொடுக்கிறான். கணிப்பொறியை வைத்துக்கொண்டு உலகின் ஒரு கோடியிலிருந்து கொண்டு மற்றொரு கோடியில் வியாபாரம் செய்கிறான். பூகம்பத்தை கூட தாங்கி நிற்கும் நூறு மாடி கட்டிடங்கள் கட்டுகிறான் அடுத்தடுத்து. எல்லாவற்றிற்கும் மேலாக, இக்காலத்தில் கனவில் மட்டுமே சாத்தியமான - இரண்டு கைகளையும் ஒரு உளியையும் மட்டுமே வைத்துக் கொண்டு, ஆயிரமாயிரம் கட்டிட, விஞ்ஞான மற்றும் சாஸ்த்திர நுணுக்கங்களோடு, அர்த்தங்களோடு, கலை வண்ணங்களோடு கட்டப்பட்ட எண்ணற்ற பிரம்மாண்டமான கோவில்கள். இப்படி எந்தத் துறையை எடுத்தாலும் நமக்கு, அதாவது இந்தியர்களுக்கு சளைத்தவர்களே கிடையாது. இருப்பினும் இன்னொரு பக்கம் என்னைச் சுற்றி எதுவுமே நடக்காதது போன்று சாக்கடையில் வாழும் புழுவோடு சேர்ந்து வாழ்வதற்கு கூட நான் தயங்குவதில்லை. அந்த சாதனை படைக்கும் மனிதர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?? இறைவன் மனித இனத்தில் பெரும்பாலனவர்களை உடலிலும் மூளையிலும் ஊனமில்லாமல்தான் படைத்திருக்கிறான். என்னையும் அப்படித்தான் படைத்திருக்கிறான். இருப்பினும் ஏன் எனக்கு என் வாழ்க்கையை அடிப்படையளவிளாவது சரி செய்து கொள்ள வேண்டும் என்று கூட தோன்றுவதில்லை??

எனக்கு கல்வி இல்லை, வசதியில்லை, அரசாங்கம் எனக்கு வேலை தரவில்லை, வீடு கட்டித் தரவில்லை என்று பல சாக்கு போக்குகள் நான் கூறுகிறேன். இருக்கிற ஜனத்தொகையில் அத்தனை பேருக்கும் வேலை கொடுக்க அரசாங்கத்தினால் முடியாத காரியம் என்று எனக்கு தெரியவில்லை. அத்தனை பேருக்கும் வீடு கட்டித் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமையல்ல என்பதை நான் உணரவில்லை. இவை அனைத்தையும் அரசாங்கமே செய்தால் பிறகு நான் எதற்காக பிறந்தேன் என்ற கேள்வியும் எனக்கு உதயமாகவில்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் அரசாங்கத்தை குறை கூறுவதையும், ஆட்சி செய்வோரை குறை கூறுவதையும் என்றைக்கு நான் நிறுத்தப் போகிறேன்?? உழைப்பின் பெருமையை விளக்க ஹிரோஷிமா நாகாசாக்கி குண்டு வெடிப்பு ஒரு எடுத்துக் காட்டு - தரைமட்டமாக்கப்பட்ட ஒரு நாடே உழைப்பின் வலிமையால் இன்று பல வகையில் தலை நிமிர்ந்து நிற்கிறது. அரசாங்கம் மட்டுமா உழைத்தது?? நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உழைத்தான். வீட்டில் விளக்கு கூட இல்லாமல் தெரு விளக்கில் படித்து முன்னுக்கு வந்த அறிஞர்கள் இல்லையா?? படிக்காத மேதைகள் பலரை நம் நாடு நமக்கு பெற்றுத் தரவில்லையா?? இப்படி ஆயிரம் ஆயிரம் உதாரணங்கள் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் இதில் ஒன்று கூட என்னை நல் முறையில் உசுப்பி விடாமல் நான் ஒரு ஜடப்பொருளாகி விட்டேனே... அடிப்படையாக எங்கேயோ என்னில் ஒரு தவறு இருக்கிறது என்று நினைக்கிறேன். கண்களை திறந்து பார்த்தால் என்னைச் சுற்றி ஆயிரம் ஆயிரம் தொழில் செய்யும் வாய்ப்புகள். படித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மிகக் குறைந்த முதலீடோ அல்லது முதலீடே இல்லாமல் கூட கடினமான உழைப்பு ஒன்றை மட்டுமே முதலீடாக வைத்து தொழில் தொடங்க எண்ணற்ற வாய்ப்புகள். இவையெல்லாம் வெகு குறைந்த காலத்தில் நல்ல வருவாயை பெற்றுத் தர வல்லமை படைத்த சுய தொழில்கள். எத்தனைப் பேர் இந்த தொழில்களை தொடங்கினாலும் அத்தனைப் பேருக்கும் வேலை வாய்ப்பு, குறையாத தேவை இப்படி பல சாதகமான விஷயங்கள். ஆனால் நான் என் கண்களை திறந்து பார்க்க மறுக்கிறேன்.

இன்று என்னிடம் மறைந்திருக்கும் பல பண்புகளும் என் முன்னோர்களிடம் நிறைந்து காணப்பட்டது. பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி மனிதனின் கடமைகள் என பல உள்ளதை அவர்கள் உணர்ந்திருந்த காலம் அது. அவர்கள் காட்டிய வாழ்க்கை பாதையில் ஒவ்வொரு சிறு சிறு செயல்களில் கூட என்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆழ்ந்த அர்த்தம் இருந்தது. வெள்ளைக்காரன் "டிவைட் அன்ட் ரூல்" என்கிற கொள்கையை விஷமாக நம்மிடையே பரப்பி நம்மிடம் இருந்த அத்தனை பொக்கிஷங்களையும் சுரண்டிச் சென்றது போக, மிஞ்சியதை நாமே நம்மிடமிருந்து சுரண்டி விட்டோம். எனக்குள் இருக்கும் ஆம்பளை என்னும் சிங்கம் விழித்திருப்பதின் அடையாளமாக என் நாட்டு ஜனத்தொகை நூற்றி எட்டு கோடிக்கும் மேல். ஆனால் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் உழைப்பு என்னும் சிங்கம் எப்பொழுது விழிக்கும்??

காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். அதில் நல்ல காலம் கெட்ட காலம் என்பது மாறி மாறி வந்துக் கொண்டே இருக்கும். இது வாழ்க்கையின் தத்துவம். இன்றைய நமது பாடத் திட்டங்களில் நற்பண்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதே நாளைய சமுதாயத்தை ஒளிமயமாக ஆக்க அஸ்திவாரமாக அமையும். எனக்குள் ஊரிக்கிடக்கும் அறியாமை என்னும் குப்பைகளை போக்கி இறைவன் எனக்கு நல்ல வழி காட்டும் காலம் நிச்சயம் வரும்!!


சரவணன் சுந்தரேசன்




நான் ஒரு குப்பைத் தொட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Tue Sep 21, 2010 7:31 am

ஆவேசமான, உணர்ச்சிவசமான கட்டுரை. படிக்கும் போதே மனம் பாரமாக இருக்கிறது. இவ்வளவு அவலங்களா? நினைக்கவே பகீரென்கிறது.

சினிமாக்களில் 'ப்ன்ச் டயலாக்' என்று சொல்வது பொல் இந்த வாக்கியங்கள் இந்த கட்டுரைக்கு - எனக்குள் இருக்கும் ஆம்பளை என்னும் சிங்கம் விழித்திருப்பதின் அடையாளமாக என் நாட்டு ஜனத்தொகை நூற்றி எட்டு கோடிக்கும் மேல். ஆனால் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் உழைப்பு என்னும் சிங்கம் எப்பொழுது விழிக்கும்?? - நெஞ்சை தொடும்படி சொல்லி இருக்கிறார்.

கட்டுரையை படிக்க சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக