புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_m10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10 
70 Posts - 53%
heezulia
மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_m10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_m10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_m10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_m10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_m10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_m10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_m10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_m10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_m10மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 7:03 pm

மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ! Ananthavikadannews_26365298033


ஜெயலலிதா குழம்பிப் போயிருக்கிறாரா அல்லது குழப்புகிறாரா? இன்னமும் தெளிவான பதில் கிடைக்கவில்லை! எல்லோரையும் எப்போதும் முந்திக்கொண்டு அனைத்துத் தேர்தல்களிலும் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்துக்குப் போய், சூறாவளியைத் தன்னைச் சுற்றியே மையம் கொள்ளவைக்கும் ஜெயலலிதா இம்முறை அவுட். ஐந்து சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என அறிவித்துவிட்டார். ஜெயலலிதா இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று முதல்வர் கருணாநிதி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அடிபட்ட அம்மணி, அதிகமாகவே சீறுவார் என்றுதான் காத்திருந்தார் கருணாநிதி.

ஆனால், செயற்குழுவைக் கூட்டிய ஜெயலலிதா, அதிரடியாகத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணங்கள், அதிர்ச்சியைக் கிளப்பும் ரகம். ""தேர்தல் என்பதே ஒரு கேலிகூத்து எனும் அளவுக்கு தி.மு.க. தமிழ்நாட்டில் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டது. அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்துக்குப் புறம்பான அனைத்து விதமான தில்லுமுல்லுகளையும் அரங்கேற்றி தி.மு.க. தேர்தல் வெற்றியை குவிக்கிறது. பணபலத்தைப் பயன்படுத்திலும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் பொதுமக்களது பெயர்களை நீக்கியும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வாக்காளர்களை அச்சுறுத்தி, பெரும் எண்ணிக்கையில் கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெறுவதை வழக்கமாக வைத்து இருக்கிறது.'' என்று பாய்ந்தார்.

தி.மு.க. ஆட்சியை விமர்சித்து ஐந்து சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பேசுவதைவிட தேர்தலைப் புறக்கணிப்பது அதிகமான வலுவைக் கொண்டுவந்து அஸ்திரமாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை, தீவிரமான கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர, தேர்தல் அரசியலுக்குள் நுழைந்த எந்த கட்சியும் பயன்படுத்துவது இல்லை. தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று சில கிராமப்புற மக்கள் சொல்வார்கள். பெரிய அரசியல் கட்சிகள் சொல்வது இல்லை. எனவே, ஜெயலலிதாவின் அறிவிப்பு அதிர்ச்சியானதாகக் கருதப்பட்டது. "அது தி.மு.க. வெற்றிக்குத்தானே பயன்படும்' என்று சொன்னபோது, "நாம் தேர்தலில் நின்றாலும் அவர்கள்தானே ஜெயிக்கப்போகிறார்கள். என்னைப் பொறுத்தவரை எக்ஸ்போஸ் பண்றதுக்கு இதுதான் சரியான வழி' என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். அவருடைய இந்த யோசனை திடீரென்று முளைத்தது அல்ல.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் தன்னை வந்து சந்தித்த வைகோவிடம் இதைப் பேசி இருக்கிறார் ஜெயலலிதா. "கடந்த தேர்தலைவிட இம்முறை 51 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. இதில். அ.தி.மு.க. ஆதரவு வாக்காளர்கள்தான் அதிகம். மதியம் 2 மணிக்கு மேல் பல பூத்துகளில் தங்களுக்கு வேண்டிய வேட்பாளருக்கு தேர்தல் அலுவலர்கள் வாக்குகளைக் குத்தி உள்ளார்கள். விருதுநகர் தொகுதியில் வாக்களித்த சதவிகிதம் எண்ணும் போது கூடி இருக்கிறது. சிவகங்கையில் சரியாக எண்ணாமல் குளறுபடி செய்கிறார்கள். இப்படியே போனால், தேர்தலில் பங்கேற்பதில் அர்த்தமே இல்லை' என்று அப்போது ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். அதன் அடிப்படையில்தான் இந்த முடிவு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 7:03 pm

ஆனால், இதை வைகோ வரவேற்றது மாதிரி, கம்யூனிஸ்ட்டுகள் செய்யவில்லை. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரே மாதிரி முடிவெடுக்க வேண்டும் என்று சொன்ன தா.பாண்டியனும் வரதராஜனும் கூடிப்பேசி ஐந்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்கள். இவர்கள் விஜயகாந்த்துடன் கூட்டணி அமைக்கப்போவதாக வதந்தி கிளம்பி அடங்கியது. ஐந்துக்கும் தனது ஆட்களை கேப்டன் நிறுத்தி விட்டார். ஆனால், முதலில் தெளிவாக அறிவித்த ஜெயலலிதா குழம்பி வருவதாகக் கூறப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகளையே அவர்தான் நிறுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. அவரது இந்தக் குழப்பத்துக்குக் காரணம் விஜயகாந்த்.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு அணிகள் இருக்கும்போது ஒருவர் மாறி ஒருவர் வெற்றி பெற்று வந்தார்கள். ஆனால், சமீப கால வருகையான விஜயகாந்த் இவர்கள் இருவருக்குமான மாற்று சக்தியாக வளர ஆரம்பித்துள்ளார். அவரது வாக்கு சதவிகிதம் தேர்தலுக்குத் தேர்தல் எகிறி வருகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. தேர்தலில் நிற்காமல் போனால், அந்த வாக்குகள் அதாவது கருணாநிதிக்கு எதிராக வாக்குகள் விஜயகாந்தை நோக்கித்தான் போகும். அப்படிப்போனால் , கருணாநிதிக்கு மாற்று விஜயகாந்த் என்று நிரூபிக்கப்படுவது நல்லது அல்ல என்று நினைத்தே கம்யூனிஸ்ட்டுகளை ஜெயலலிதா களத்தில் நிறுத்தினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வெளிப்படையாகத் தனது ஆதரவை ஜெயலலிதா அறிவித்தால் மட்டும்தான் இரட்டை இலைக்கான வாக்குகள் அவர்களுக்குச் செல்லும். இல்லை என்றால், விஜயகாந்த்துக்கே போகும்.

கார்டன் வட்டாரத்தின் உள்விவகாரங்கள் தெரிந்தவர்கள், ஜெயலலிதா வேண்டுமென்றேதான் விஜயகாந்த்துக்கு ஆதரவான முடிவை சொல்கிறார்கள். ""தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை உடைக்காமல் அடுத்து தேர்தல்களில் ஜெயிப்பது முடியாத காரியம் என்று அம்மா நினைக்கிறார். இந்த தேர்தலில் விஜயகாந்த் அதிகமாக வாக்குகள் வாங்கினால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - விஜயகாந்த் கூட்டணி வர வாய்ப்பு ஏற்படும் என்று அவர் நினைக்கிறார். தேர்தல் புறக்கணிப்பின் பின்னணி இதுதான்'' என்று சொல்லி அடுத்த அதிர்ச்சியை கிளப்புகிறார்கள்.

எப்படி வைத்துக்கொண்டாலும் இது அரசியல்ரீதியாக ஜெயலலிதாவுக்குப் பின்னடைவாகத்தான் இருக்கும். கம்யூனிஸ்ட்டுகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று 40 ஆண்டுகளுக்கு முன்னால் பிரசாரம் கிளம்பியபோது அதுபற்றி விவாதிக்க மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூடியது. அப்போது ஜோதிபாசு ஒரு சில வார்த்தைகள்தான் பேசினார். ""யார் மீது கோபப்பட்டு தேர்தலைப் புறக்கணிக்கிறீர்களோ... அவர்கள் நிரந்தரமாக வெற்றி பெறுவதற்குத் தான் இந்த புறக்கணிப்புகள் பயன்படும்'' என்றார். ஆனால், ஜெயலலிதா ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்? அவருக்கு இப்போது ஜென்ம சனி நடக்கிறது. செப்டம்பர் 26 வரை இது போன்ற சில விஷப் பரீட்சைகளில் இறங்க வேண்டாம் என்று அறிவுரை. புறக்கணிப்புக்கான முக்கியப் பின்னணி இதுதான்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக