புதிய பதிவுகள்
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_m10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_m10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_m10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_m10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_m10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_m10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_m10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_m10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_m10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_m10ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 15 Sep 2010 - 3:59

பழம்பெருமையும் புகழும் வாய்ந்த நம் ஜோதிடக்கலையின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா? கவலைக்கிடம்தான். இதற்குக் காரணம் சில அரைகுறை ஜோதிடர்களின் அனுபவமில்லாத அணுகுமுறைதான். ஜோதிடக்கலையில் ஆழ்ந்த ஈடுபாடும் மிகுந்த நம்பிக்கையும் கொண்டவர்களை கவலைப்படச் செய்திருக்கிறது இந்தப் போக்கு. ஜோதிடக்கலையின் அருமை பெருமைகளை பலரும் சீரியஸாகவே எடுத்துக் கொள்வதில்லை.

ஜோதிடக்கலைக்குத் தற்போது இறங்குமுகமான காலம் என்று சொன்னால், அதற்குக் காரணமே சில ஜோதிடர்கள்தான் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால், நமது நாட்டில் குறிப்பாக & தென்னிந்தியாவின் சாலையோரங்களில் ’இங்கு ஜோதிடம் பார்க்கப்படும்’ என்று போர்டுகளை மாட்டிக்கொண்டு ஜோதிடம் பார்க்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக் கின்றனர்.

இவர்கள் உண்மையிலேயே ஜோதிடம் பார்த்தால், அது பாராட்டக்கூடிய விஷயமாகத் தான் இருக்கும். ஆனால், ஏதோ மெத்தப் படித்த பண்டிதர் மாதிரி பலரும்நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சமான உண்மை.

இத்தகைய ரோட்டோர ஜோதிடர்கள் பலருக்கும் ஜோதிடத்தின் அடிப்படை விஷயம்கூடத் தெரிவதில்லை. ஜோதிடத்தின்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மூலதன மாக வைத்து, குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கவே இந்த அரிய கலையை இவ்வகையினர் பயன்படுத்துகிறார்கள்.

அடுத்ததாக, இந்தத் துர்பாக்கிய நிலைமைக்குப் பொதுமக்களும் ஒரு காரணம்தான் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும். தன்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஜோதிடரிடம் செல்லும் சாமானிய மனிதர்கள் அந்த ஜோதிடர் எப்படிப்பட்டவர், இவர் இந்தக் கலையில் முழுத் தகுதியுடையவர்தானா என்பதை எந்தக் கட்டத்திலும் ஆராய்வ தில்லை. ஜோதிடரைப் பற்றிய விவரங்களை அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்து கொள்வதில் சாமான்ய மக்களுக்கு அக்கறையும் விருப்பமும் இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

‘இந்த ஆள் நன்றாகவே ஜோதிடம் பார்ப்பாராம்.. இவர் சொல்வதெல்லாம் அப்படியே பலிக்குமாம்!’ என்று ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையுடன்தான் அத்தகையோரை அணுகு கின்றனர். இதுமாதிரியான நிலைதான் ஜோதிடக் கலைக்குப் பெரும்அவ மானத்தை உண்டு பண்ணு கின்றது.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான அம்சத்தையும் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எனக்கு உண்டு. அதாவது, மீடியா எனப்படும் தகவல் தொடர்புச் சாதனங்களான பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஜோதிடம் எத்தகைய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதுதான் அது.

ஜோதிடம் குறித்த பலமான காரசாரமான விவாதங்கள், விமரிசனங்களை வெளியிடும் பிரபலமான பத்திரிகைகள்கூட, ஏதாவது ஒரு வகையில் ஜோதிடம் பற்றிய குறிப்புகளையும் தங்கள் இதழ்களில் வெளியிடத்தான் செய்கின்றன. அதாவது, ஒருபுறம் ஜோதிடக்கலைக்கே எதிர்மறை யான செய்திகளை & விமரிசனங்களை, பரபரப்புக்காகவும் விளம்பரத்துக்காகவும் வெளியிடுகின்றன. மறுபுறமோ ஜோதிடக்கலைக்கு ஆதரவான ஒருசில விஷயங்களை வெளியிட்டு தன்னை நல்ல மாதிரியாகவும் வாசகர்கள் மத்தியில் நிலைநிறுத்திக் கொள்கின்றன. சில பத்திரிகைகளின் இந்த இரட்டைவித நிலைப்பாடு ஜோதிடத்துக்குக் கேடு விளைவிக்கிறது.

அதுமட்டுமல்ல, அரைகுறை ஜோதிடர்களை பத்திரிகைகளின் இத்தகைய செயல்பாடுகள் ஊக்குவிக்கின்றன என்பதுதான் ஆபத்தான விஷயம்.

சமீபகாலமாகச் சில தொலைக்காட்சி சேனல்களில் வரும் ஜோதிட பலன் சொல்லும் நிகழ்ச்சிகளும், மற்ற விமரிசன நிகழ்ச்சிகளும் ரொம்பவே இம்சிக்கின்றன. இந்த அரைகுறை ஜோதிடர்களை ஆகாவென்றும் ஓகோவென்றும் புகழின் உச்சத்துக்கு உயர்த்துகின்றன சம்பந்தப்பட்ட சேனல்கள். இந்தப் போக்கு மாறவேண்டும்.

ஜோதிடம் என்பது பாங்க், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைப் போலவோ அல்லது கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் போன்றதோ அல்ல. இவையெல்லாம் நாம் கொடுப்பதை உள்வாங்கிக் கொண்டு, அவற்றை வேறுவிதமாக நமக்கே திருப்பிக் கொடுக்கின்றன. ஆனால், ஜோதிடம் அப்படி யல்ல. அதில் எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டவைதான்.

இன்றைய காலகட்டத் தில், ஒரு ஜோதிடரின் புலமையை நிர்ணயிப்பது விளம்பரம்தான் என்றாகிவிட்டது. ஜோதிடர் என்று சொல்லிக் கொள்ளும் நபர், விளம்பரங்களுக்காகச் செலவிடும் தொகையைப் பொறுத்துதான் அவரது நிபுணத்துவமும் பிரபலமும் வரையறுக்கப்படுகிறது. இதுவும் ஓர் ஆபத்தான போக்கு என்றுதான் சொல்லவேண்டும்.

பல பத்திரிகைகளும் டி.வி. சேனல்களும் ஜோதிடத்தை ஏதோ ஒரு சாதாரண விற்பனைப் பொருளாக்கி, அக்கலையின் தரத்தைத் தாழ்த்திவிட்டன. இதற்கு மீடியாக்களின் பரபரப்பான உத்திகள்தான் துணை போகின்றன என்பது தெளிவான, கண்கூடான விஷயம்.

இவை எல்லாவற்றையும் விட இன்னொரு விஷயம் என்னவெனில், வேறுசில கலைகளைச் செய்வோர் | குறிப்பாக மை போட்டுப் பார்ப்பது, மந்திரவாதம், எண்கணிதம், கைரேகை போன்றவற்றைத் தங்கள் தொழிலாக வைத்திருக்கும் பலர், தங்களது செயல்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரம் கிடைப்பதற்காக ஜோதிடக் கலையைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் இத்தகைய விஷயங்களுக்கும் நம் பாரத ஜோதிடக் கலைக்கும் துளிகூடச் சம்பந்தமே கிடையாது.

பண்டைக் காலத்தில், நம் பாரத நாட்டின் ஜோதிடக் கலைக்கு மிக உயரிய, மரியாதையான சூழ்நிலை இருந்து வந்திருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் நிலைமை அப்படியில்லை என்றுதான் சொல்லவேண்டும். முன்பிருந்த பழைய நிலையை நாம் மீண்டும் கொண்டுவருவது சற்றுச் சிரமமான விஷயம்தான்.

இன்று ஜோதிடக்கலைக்குள்ள அவல நிலைமையை மாற்றி, மீண்டும் அதற்கு ஒரு புதுப் பொலிவும் பழம்பெருமையும் நிலைக்கும் வகையில் சில நடவடிக்கைகளை நாம் எடுத்தே ஆகவேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நான் மேலே சொன்ன மைபோட்டு பார்த்தல், மந்திரவாதம், எண்கணிதம், கைரேகை போன்ற கலைகள் பற்றிய மறுசிந்தனை வேண்டும்.

ஜோதிடத்தை ஆராய முற்படும்போது கணிதம், இயற்பியல் போன்ற நவீன அறிவியலை ஏன் நாம் அளவு கோலாக்கிக் கொள்ளக்கூடாது? நவீன அறிவியலில் ஈடுபாடு உள்ளவர்கள் பலரும், ‘ஜோதிடக்கலையில் நம்மால் என்ன செய்ய முடியும்?’ என்று சிந்திக்க வேண்டும்.

ஜோதிடம் குறித்த நூல்களும் அதுதொடர்பான ஸ்லோகங்களும் வெறும் அறிக்கைகளாகவே (statement) இன்றளவும் உள்ளன. பண்டைய இந்தியாவில் இருந்த வேதம் முதலான மற்ற சாஸ்திரங் களைப் போல ஜோதிடம் குறித்த விரிவான ஆராய்ச்சிகள் எதுவும் இன்றளவும் மேற் கொள்ளப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் துவங்கப்படவில்லை என்பதுதான் வருந்தத்தக்க ஒன்று.

இங்குதான் விஷயமறிந்தவர்கள், விஞ்ஞானிகள், சாஸ்திர வல்லுநர்களின் பங்கு முக்கியமான ஒன்றாகிறது. ஜோதிடக்கலை குறித்து கண்ணை மூடிக்கொண்டு தவறான அபிப்பிராயம் கொள்வதை விடுத்து, அதன் நுணுக்கங்களை ஆழமாக ஆராய்ந்து, அதுவும் நவீன அறிவியலை அடிப் படையாக வைத்துக்கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக,

”ஸத்வித்யவ்தனதானதான்
பஹுகுண
ஸுக்ரேயனா யுக்தே ஹுரவ்”


என்று வராஹமிஹிரர் என்ற ஆச்சாரியார், தனது ஹோரை சாஸ்திரத்தில் குறிப்பிட்டிருக் கிறார்.

இதன் பொருள் , ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரனும் (வெள்ளி) குருவும் (வியாழன்) ஒரே ராசியில் இருந்தால், அந்த ராசிக்குரிய ஜாதகக்காரர் சிறந்த கல்விமானாகவும் செல்வந்தனாகவும் நல்ல பல பண்புகளை உடையவனாகவும் இருப்பான் என்பது.

இப்படி இருந்தால், ஏன் இப்படியெல்லாம் அமைகிறது என்ற கேள்விகளுக்கான விடை அந்த சாஸ்திரத்தில் இல்லை. ஒருவரது ஜாதகத்தில் உள்ள குருவோ, சுக்கிரனோ செல்வம், கல்வி மற்றும் குணநலன்களை எப்படி நிர்ணயிக்கிறது என்பதை வராஹமிஹிரர் ஆச்சாரியார் விரிவாக விளக்கவில்லை.

இப்படி விரிவான விளக்கங்கள் இல்லாததால்தான் நவீன அறிவியல் யுகத்தில் ஜோதிடத்தை ஒருவித சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்களோ என்னவோ! எனவே, இதுபற்றிய விரிவான, தீவிரமான ஆராய்ச்சி அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம்.

இதே பார்வையில்தான் கணித சாஸ்திரம் ஆராய்ச்சி செய்யப் பட்டிருக்கிறது. கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் எழுதிய 'எண் கணித அறிவியல்’ (Numerical Science) என்ற நூலில் அதுவரை வெளியில் அறிந்திரப்படாத பல சூத்திரங்கள், கணக்கீடுகள் ‘வெறும் அறிக்கை’ (statement) மாதிரியான நிலையில்தான் இருந்தது. அவற்றின் காரண காரியங்களை வெளிக்கொணர்ந்த பிறகு, கணித வல்லுநர்கள் அதை கவனமாக ஆராய்ந்து அவை சரியான கணக் கீடுதான் என்பதை ஊர்ஜிதப் படுத்தி (proof) உள்ளனர்.

நவீன அறிவியலுக்கும் ஜோதிடக்கலைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க, இதே ரீதியிலான கண்ணோட்டம் மிகவும் உபயோகமானதாக இருக்கும். பண்டைய காலத்தில் பிரபலமாக இருந்த அறிஞர்கள் பலரும் ஜோதிட சாஸ்திரத்தில் பெரும் நம்பிக்கை உடைவர் களாகவே இருந்திருக்கின்றனர்.

ஜோஹன்ஸ் கெப்ளர் (Johannes Kepler), டைகோபிரேக் (Tychobrache), ஐன்ஸ்டீன் (Einstein) ஆகிய அறிஞர்கள் ஜோதிடத்திலும் சாஸ்திரத்திலும் அதீத நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர்.

டைகோ பிரேக் என்ற அறிஞர் எழுதிய தனது நூலில், ஜோதிட சாஸ்திரத்தில் பல அபாயகரமான ரகசியங்கள்அடங்கியுள்ளன என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டுள் ளார். இந்த ரகசியங்கள் மன்னர்கள், பிரபுக்களின் கை களில் கிடைத்தால், அவர்கள் அவற்றை வெளியில் சொல்லாமல் மறைத்துவிடுவார்கள். அல்லது, அதைத் தவறான வழிகளில் பயன் படுத்திவிடுவார்கள் என்பதால் தானோ என்னவோ... பண்டைய வல்லுநர்கள் ஜோதிடக் கலையின் ஆழ்ந்த பல நுணுக்கங்களை பரம ரகசியமாக வைத்துவிட்டார் கள் என்றுகூடச் சொல்கிறார்கள்.

சக்திவிகடன் - 18-05-2004



ஜோதிடக் கலையும், இன்றைய நிலையும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக