ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனவரி 29 முத்துக்குமார் ஆவணப்படம்- பிய்தெறியப்பட்ட பூமாலை.

2 posters

Go down

ஜனவரி 29 முத்துக்குமார் ஆவணப்படம்- பிய்தெறியப்பட்ட பூமாலை. Empty ஜனவரி 29 முத்துக்குமார் ஆவணப்படம்- பிய்தெறியப்பட்ட பூமாலை.

Post by vishnupuramsaravanan Thu Sep 16, 2010 12:02 pm

ஜனவரி 29 முத்துக்குமார் ஆவணப்படம்- பிய்தெறியப்பட்ட பூமாலை.





ஈழம் பற்றியெரிந்துக்கொண்டிருந்த சூழலில் எதுகுரித்தும் அக்கரையற்ற வாழ்வில் உழன்ற தமிழக மக்காளை உசுப்பேத்தும் விதமாக தன்னை இந்த இனத்திற்காக கொடையாக கொடுத்த முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்றை "ஜனவரி 29 " எனும் தலைப்பாக கொண்டு பிரகதீச்வரன் ஆவணப்படம் எடுத்திருக்கிறார். ப்பலரும் முத்துக்குமாரை மறந்திருக்கும் இவ்வேளையில் பிரகதீச்வரனின் இம்முயற்சிக்கு

தொடக்கத்திலெயே பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வோம். அதே சமயத்தில் இப்படம் குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் வேண்டியிருக்கிறது.



பொதுவாக மாற்றுத்திரையில் ஈடுபடுவோரை இரண்டுவிதமாக பிரிக்கலாம் ஒன்று வெள்ளித்திரையில்கொண்டுச்செல்லமுடியாத விசயங்களை வாழ்வினை இதில் படைத்திடவேண்டும் பெரிய திரையில் செய்துக்கொள்ளவேண்டிய சமரசங்களை தவிர்த்து இதில் இயங்கலாம் என்பதாகவும் இரண்டாவது வகையினர் பெரியதிரைக்கு செல்லுவதற்கான நுழைவுச்சீட்டாக, போகும் இடங்களிலெல்லாம் இதனை விசிட்டிங் கார்டைபோல காட்டுவதற்காகமாற்றுத்திரை முயற்சியில் ஈடுபடுவர் இவ்விரண்டில் அடங்காமல் மூன்றாவதாகவும் பலர் இருக்கின்றனர் அது என்ன என்பதை இறுதியில் பார்ப்போம்



முத்துக்குமார் தன்னை மரித்துக்கொண்ட நாளில்தான் அவன் பிறக்கிறான் முத்துக்குமார் தன்னாக அறிமுகம் ஆகாமல் தன் அரசியலாக இங்கு அறிமுகமானவன் எனவே அவனின் அரசியல் முக்கியமானது அவன் இந்த உலகத்திற்கு சொல்லவிரும்பியதும் அதுவே ஆனால் முத்துக்குமார் பற்றி இந்தப்படம் எடுத்தவர்கள் முத்துக்குமார் பேசும் அரசியல் குறித்து ஒரு சதம் கூட அக்கரைக்கொண்டு கேமராவை தூக்கியதாக தெரியவில்லை. முத்துக்குமாரின் தற்கொடைக்கு கொடுக்கப்பட்ட மதிப்பாக ஈழவுணர்வாளர்கள் நினைப்பது புலிகள் இயக்கம் முத்துக்குமாரை "கரும்புலி என அறிவித் ததை அதிலும் ஈழப்போராட்டத்தில் களத்தில் நேரிடையாக நிற்காத ஒருவருக்கு கொடுக்கப்பட்டது என்பது முக்கியமானது இது பற்றி படத்தில் செய்தியே இல்லை. திருமாவளவன் பேசும்போது ஒரு இடத்தில் கரும்புலி குத்துக்குமார் என ஆரம்பிக்கின்றார். படக்குழுவினரின் அலட்சியமான போக்கு இதிலிருந்தே துவங்குகிறது



அடுத்து முத்துக்குமாரின் வாழ்க்கை நிகழ்வுகள் படத்தில் 35 நிமிடங்கள் ஓடுகின்றன. அவன் இயல்பு தமிழில் பேசியதும் பணி புரிந்த இடங்களில் அவனின் வாழ்முறையும் விரிவாக காட்டப்படுகின்றன. ஆனால் முத்துக்குமார் அரசியல் இயக்கங்கள் ஏதேனுமொன்றில் தன்னை இணைத்திருந்தானா.. அல்லது ஆதரவாளனாக இருந்தானா எனும் செய்திகளுக்குள்ளே கூட இவர்கள் செல்லவில்லை. முத்துக்குமார் இடதுசாரி புரட்சிகர அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் சில காலம் இருந்ததாக நண்பர்கள் சொல்கின்றனர். மேலும் தைத்திருநாளை நெருங்கிவந்த சூழலி ஈழம் அவலத்தின் கிடந்ததால் பொங்கல் விழாவை கொண்டாட மறுக்கச்சொல்லியும், ஈழப்போரை நிறுத்தச்சொல்லி மைய அரசை வலியுறுத்தி திருமாவளவன் மேற்கொண்டிருந்த உண்ணாநிலைப்போராட்ட நாட்களில் முத்துக்குமாரும் அங்கே கலந்துக்கொண்டான் எனும் செய்தி பல நண்பர்களால் திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. திருமாவளவனும் முத்துக்குமாரின் ஓராண்டு நினைவுக்கூட்டத்தில் [சென்னையில்] பேசும்போது கூறியிருக்கிறார். அதைப்பற்றி இப்படம் எடுத்தவர்கள் ஏதும் சொல்லாமல் விடப்பட்டிருக்கும் பின்னனி என்ன.. இந்த படமெடுத்ததில் பெருமளவு பங்குபெற்றவர்கள் நாம் தமிழர் இயக்கம் இல்ல.. இல்ல நாம் தமிழர் கட்சி சார்ந்தவர்கள் என்பதாலா.. அந்த செய்தியை சொன்னால் அது விடுதலை சிறுத்தைகளுக்கு ஆதரவாக போய்விடுமென நினைத்து விட்டுவிட்டார்களா.. இந்தப்பட இயக்குனர் நாளை சினிமா எடுக்கும்போது கதை தயார் செய்கையில் அவர் விருப்பம்போல சில விசயங்களை விடலாம். சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் அது அவரின் சொந்த கதை. ஆனால் முத்துக்குமாரின் வாழ்க்கையை பதிவு செய்கையில் பல இடங்களை மெளனமாக்க இவருக்கு எவ்வித உரிமையும் அல்ல.





அடுத்து.. முத்துக்குமாரின் தற்கொடையை தமிழக அரசு ஏதெனும் செய்து அதனை தனக்கெதிரான நிலைப்பாட்டிலிருந்து நழுவ வைக்கும் முயற்சிகளை செய்தது அதிலொன்று முத்துக்குமாரின் குடும்பத்திற்கு பணம் தருவது. அந்த பணத்தை முத்துக்குமாரின் பெற்றோர் துச்சமாக மதித்து அதை மறுத்ததை பதிவு செய்வதில் இவர்களுக்கு என்ன சிரமம் இருக்கு. படத்தின் முதல் அரைப்பகுதியில் முத்துக்குமாரின் தந்தைதான் பெரும்பகுதி பேசுகிறார்.இதை அவரே மறந்திருந்தாலும் இவர்கள் நினைவூட்டிருக்கவேண்டாமா.. வறிய சூழலிலிருந்தாலும் அந்த தொகையை மறுத்ததில் இருந்த கம்பீரத்தை ஏன் மறைக்கிறார்கள்.



முத்துக்குமார் மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது சாதியை கேட்கையில் தமிழ்சாதி என சொல்லியிருப்பது இப்பட பதிவில் இருக்கிறது. அதன்பிறகு "என் மரணத்தை தலைவர் பிரபாகரனிடமும் அண்ணன் திருமாவளனிடம் சொல்லிவிடுங்கள்" என்று முத்துக்குமார் மருத்துவரிடம் சொல்லியதாக இன்றும் விடுதலைசிறுத்தைகள் மேடைகளில் பேசிவருவதை கேட்க முடிகிறது. வி.சி தோழர்கள் இந்த செய்தி அடுத்தநாள் தினத்தந்தியில் முத்துக்குமாரை உடற்கூறாய்வு செய்த மருத்துவரே சொன்னதாகவும் சொல்கிறார்கள். இந்த செய்தி பரவலாக தெரியும். இந்த ஆவணப்படம் எடுத்தவர்கள் அந்த மருத்துவரை பேட்டி எடுத்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதான் இல்லை. வழக்கம்போல அந்த விஷயத்தை தொடவேயில்லை. இதை எப்படி சொன்னாலும் அது வி.சி சார்பான கருத்தாக போய்விடக்கூடும் என நாம் தமிழர் கட்சி சார்பான படக்குழுவினர் தவிர்த்துவிட்டார்கள் போலிருக்கு.




அடுத்து.. எனது உடலை துருப்புச்சீட்டாக பயன்படுத்துங்கள் என மரித்தவனின் உடல் ஊர்வலத்தில் நடந்தமுரண்களை பற்றியோ, அந்த உடல் முத்துக்குமாரின் சொந்த ஊருக்கு கொண்டுச்செல்லுவதற்கான இடர்பாடுகள் அரசு தரப்பிலிருந்து வந்ததையோ சொல்லமுயலவில்லை. அரசிற்கு எதிராக எதையும் சொல்லிவிடக்கூடாதென சுயகட்டுப்பாடு விதித்துக்கொண்டதன் மர்மம் விளங்கவில்லை. ஊர்வலத்தினை வழியை மாற்றியதையும், [தாந்தான் மாற்றியதாக சமீபத்தில் மேடையிலேயே திருமாவளவன் சொல்லியிருக்கிறார்] கல்லூரிகள் காலவரையன்றி மூடப்பட்டதும் மாணவர்களும், தோழர்களும் கல்லூரியை திறக்கும் உத்தரவு வரும் வரை உடலை கொண்டுச்செல்ல அனுமதிக்கமாட்டோம் என வீதியில் அமர்ந்து [முத்துக்குமாரின் உடலை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி] போராட்டம் செய்ததையும் அப்படி அமர்ந்தவர்களை பலர் "அன்பாக" அரவணைத்து கிளப்பியதையும் கூட பதிவு செய்யவில்லை. முத்துக்குமார் விரும்பியதுபோல அவனது உடல் துருப்புச்சீட்டாக மாறிய சூழலை அதற்கெதிரான நிலைக்கு மாற்றியதை மாற்றியவர்களை பற்றி ஆவணப்படத்தில் பதியவில்லை என்றால் ....




அடுத்து.. முத்துக்குமாரை போன்றொரு இளைஞரை படத்தில் நடிக்கவைத்திருக்கிறார்கள். அதுகுறித்து சொல்லவந்தால் முத்துக்குமாரை குறை சொல்லுவதாக சொல்லுவார்கள் அதை விட்டுவிடுவோம். ஈழப்போரின் அவலத்தை காணசகிக்காது காலை பெட்ரோல் வாங்க கேன் எடுத்துக்கொண்டு, அலுவகலம் போய் அறிக்கையை தட்டச்சி செய்துவிட்டு, சாஸ்திரி பவன் சென்று அறிக்கையை விசிறிவிட்டு, பெட்ரோல் ஊற்றி தன்னை மரித்துக்கொண்டதாக படமாக்கியிருக்கிறார்கள். என்ன அபத்தம். காலையில் உட்கார்ந்து ஒரிரு மணிநேரத்தில் எழுதக்கூடியதான அறிக்கையா அது . அந்த அறிக்கையின் வீரியத்தை இதைவிட எளிமைப்படுத்தி கொச்சைப்படுத்திவிடமுடியாது. தீயிட்டுக்கொள்ளுமுன் பேருந்துநிலையத்தில் நின்றவர்களிடம் அந்த அறிக்கையை முத்துக்குமார் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் ஒரு திரைப்பட கதைக்குழுவை போல ரூம் போட்டு யோசித்தன் விளைவு இப்படியான அரைவேக்காட்டு காட்சிகள்.



பொதுவான நண்பர்கள் சொல்லக்கூடும் ஏதோ எடுத்திருக்கிறார்கள் குறையே சொல்லிக்கொண்டிருக்ககூடாது எவ்விதமான பின்னரசியலை வைத்து இப்படி செய்திருக்கமாட்டார்கள் என்று. அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ளலாம். மனநிலை மருத்துவர் ருத்ரனின் பேட்டியும் வருகிறது. அந்நாளின் எம்மாதிரியான மனநிலையில் முத்துக்குமார் அந்த முடிவை எடுத்திருப்பான் என சொல்லவிட்டிருப்பார்கள் என நீங்கள் எதிர்ப்பார்த்தீர்கள் என்றால் நீங்கள் நல்ல மனநில மருத்துவரை பார்க்கச்செல்லுங்கள். இருக்கும் தலைவர்களை நம்பக்கூடாது. மக்களிடமிருந்து ஒரு தலைவர் வரவேண்டும் என ருத்ரன் சொன்னதும் அடுத்து யார் பேசுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும் என நான் தனியே சொல்லவேண்டுமா என்ன..







அடுத்து.. முத்துக்குமாருக்கு சிலை வைப்பதற்கான முயற்சிகளுக்கு இன்று வரை அரசு எத்தனை முட்டுக்கட்டையாக இருந்துவருவதை பற்றியும் வழக்கமான மெளனத்தால் கடந்துபோயிருக்கிறார்கள் படக்குழுவினர். அதுகுறித்து பேசினால் இளம்தமிழர் இயக்கம் பற்றி சொல்லவேண்டுமென்பதால் தவிர்த்திருக்கலாம் என நீங்கள் யூகிப்பதில் தப்பில்லை. மேலும் முத்துக்குமார் தற்கொடையை ஒட்டிய நாட்களில் செங்கல்பட்டில் மாணவர்கள் உண்ணாநிலைப்போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள் அவர்களையோ அல்லது அந்த ஊர்வலத்தில் துவக்கம் முதல் இறுதி வரை செயல்பட்ட மாணவர்களையோ இயக்குனர் சீண்டக்கூட இல்லை. முத்துக்குமார் நிகழ்விற்கு முன்னான சூழலை சொல்லுவதில் இருந்த தயக்கத்தால் நிகழ்விற்கு பின்னான அரசியலையும் இவர்களால் சொல்லமுடியவில்லை. அஸ்திவாரத்தில் கோட்டை விட்டால் வேறு என்னவாகும்?





அடுத்து.. அடுத்து என நிறைய இவர்களின் விடுபடலும் அலட்சியமும் கவனமின்மையும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஈழப்போராட்டத்தினை தமிழக மக்களிடையே வீரியமாக கொண்டுச்சென்றது பெ.திக விற்கு முக்கியபங்கிருக்கிறது. கொளத்தூர் மணியின் அரை நிமிட நேர்காணலை கூட காணோம். இத்தனைக்கும் இவர்களோடு நெருக்கமானவர்தானே மணி அண்ணன்.



இந்த ஆவணப்படத்தின் வடிவம் குறித்தும் அதன் போதாமை பற்றியும் மாற்றுத்திரையில் தொடர்ந்து இயங்கிவரும் நண்பர் சொன்னவற்றை இதில் நான் தவிர்த்திருக்கிறேன்.[ஒருவேளை அவர் எழுதக்கூடும்]


இப்போது தொடங்கிய இடத்திற்கு வருவோம். மாற்றுத்திரையை கையாளுபவர்களில் மூன்றாம் பிரிவினரின் நோக்கம் என்ன என்பதை இறுதியில் சொல்வதாக சொன்னது நினைவில் இருக்கும். சமூகத்தில் சட்டென்று திரும்பியும், திகைக்கவைக்குமான சம்பவங்களை தங்களது அதிரடி காரியங்களால் உள்ளே புகுந்து தனது பெயரையும் மறைமுகமாக பொருளீட்டிக்கக்கொள்ளும் விதமாக செயல்[!] படுபவர்களே இம்மூன்றாம் பிரிவினர். அதற்கு பலியானது சில அர்ப்பணிப்புமிக்க நண்பர்களின் உழைப்பும் முத்துக்குமாரின் ஈகையும். இப்படத்தினையும் அயல்நாடுகளுக்கு கணிசமான பொருளீட்டும் உத்திகளுடன் களமிறக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இவ்வாவணப்பட வெளியீட்டுவிழாவில் ஏதோ பிறந்தநாள், வெற்றிவிழா கொண்டாடத்தைப்போல பொன்னாடைகளும், ஷீல்டுகளும், பெருஞ்சிரிப்புகளும் அவையை நிறைத்திருந்தத்தை பார்க்கையில்[நீங்கள் பார்க்க.. இழவு வீடானாலும் ...... பழமொழி நினைவுக்கு வருவதை தவிர்க்கவே இயலவில்லை.

இந்த ஆவணப்டம் முத்துக்குமாரை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யும் விதத்தில் கூட இருக்கவில்லை. அவனது வாழ்க்கை வரலாற்றை பேசியளவு அவனது அரசியலை பேசாததால்[ பேசவேயில்லை என்பது வேறு விசயம்] இந்த படம் எவ்வித உணர்வு நிலையை தரமறுக்கிறது. முத்துக்குமார் 2009 ஜன 29 ல் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டான் .2010 ஜன 29 [படத்தில் பெயர்] ல் இவர்கள் முத்துக்குமார் மீது பெட்ரோலை ஊற்றி பற்றவைத்துவிட்டிருக்கிறான். இனி சமாதி கட்டப்பட்டு, கடவுளாக்கப்பட்டு, வழிபாடு சின்னமாகிப்போவான் போராளி முத்துக்குமார்.

vishnupuramsaravanan
vishnupuramsaravanan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

ஜனவரி 29 முத்துக்குமார் ஆவணப்படம்- பிய்தெறியப்பட்ட பூமாலை. Empty Re: ஜனவரி 29 முத்துக்குமார் ஆவணப்படம்- பிய்தெறியப்பட்ட பூமாலை.

Post by பிளேடு பக்கிரி Thu Sep 16, 2010 12:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி நண்பா நன்றி



ஜனவரி 29 முத்துக்குமார் ஆவணப்படம்- பிய்தெறியப்பட்ட பூமாலை. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum