Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு
+2
gunashan
கார்த்திக்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு
சென்னை, செப். 15: சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 180 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புதன்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:
பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்ற தலைவர்களின் பெயரில் வீதிகள்தோறும், கிராமங்கள்தோறும் வாசக சாலைகள் அமைத்து இயக்கத்தின் கருத்துக்களைப் பரப்பியவர்கள் நாங்கள். அந்த வழிமுறையில் அண்ணாவின் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, அதனை இன்று செயல்படுத்தியுள்ளோம்.
1940-களில் குண்டலகேசி என்ற தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு ஓரங்க நாடகம் ஒன்றை எழுதி திருச்சி வானொலி நிலையத்துக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அந்த நாடகம் வெளியிடப்படவும் இல்லை, திரும்பி வரவும் இல்லை. திரும்பி வந்திருந்தால் நிம்மதி அடைந்திருப்பேன். அதன்பிறகு பிரபல இயக்குநர் சேலம் டி.ஆர். சுந்தரம் முயற்சியில் அந்த நாடகம் மந்திரிகுமாரி என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. எம்.ஜி.ஆர். நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திருச்சி வானொலி நிலையத்தில் குப்பை கூடைக்கு அனுப்பப்பட்ட கதைதான் இப்படி வசூலை அள்ளித் தந்தது. நமது இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்களை அலட்சியப்படுத்தும் நிறுவனமாக வானொலி இருந்தது என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன்.
1948-ல் வீட்டுக்கு ஒரு புத்தகச் சாலை என்ற தலைப்பில் வானொலியில் அண்ணா பேசினார். உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்ததாக புத்தகச்சாலைக்கு இடம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் பேசினார். ஒவ்வொரு நகரத்திலும், மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகச் சாலை இருக்க வேண்டும் என்ற அவரது கொள்கையின் அடிப்படையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது அண்ணாவின் கனவு நிறைவேறிய காட்சி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அடையாறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சென்றபோதுகூட துழாவி, துழாவி தலையணைக்கு கீழேயிருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டுதான் சென்றார். அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னபோதும் அவர் புத்தகம் படித்துக் கொண்டுதான் இருந்தார். அந்த அளவுக்கு புத்தகத்திலேயே இறுதிநாள் வரை ஆழந்திருந்தார். அவர் படிக்காத நேரம் இல்லை. இரவு 12 மணிக்கு கூட அவரைப் பார்க்கச் சென்றால் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பார். அதனால்தான் இந்த நூலகத்தில் புத்தகமும் கையுமாக இருக்கும் அண்ணாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
சத்துணவில் 5 நாள்களுக்கு முட்டை: மாணவர்களுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 3-6-1989 முதல் 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டது. 2006-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 முதல் வாரம் இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. 15-7-2007 முதல் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்ணா நூற்றாண்டு விழா நினைவாக பள்ளிக் கூடம் நடைபெறும் 5 நாள்களிலும் இனி முட்டை வழங்கப்படும்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: அரசு அலுவலகங்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தினக்கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துப்பரவுத் தொழிலாளர்கள் இப்போது ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை ஊதியம் பெறுகின்றனர். அவர்களில் 3 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு இனி மாதம் ரூ. 1,300 - ரூ. 3,000 என்ற ஊதிய விகிதத்தில், அகவிலைப்படியுடன் சேர்த்து தொடக்க நிலையில் மாதம் ரூ. 2,320 கிடைக்கும் வகையில் ஊதியம் உயர்த்தப்படும். அவ்வப்போது வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வும், 3 சதவீத கூடுதல் ஊதியப்படியும் பெறும் தகுதியினையும் இவர்கள் பெறுவார்கள். இந்த அறிவிப்புகள் உடனடியாகச் செயல்படுத்தப்படும்.
இந்த நூலகத்தை நம்முடைய நூலகமாகக் கருதி தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும். இந்த நூலகத்துக்கு வருபவர்களுக்கு பஸ் கட்டணத்தை ஓரளவுக்குக் குறைக்கலாமா என்ற கருத்தும் அரசிடம் உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.
நிதி அமைச்சர் க. அன்பழகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் எஸ். மாலதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 180 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புதன்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:
பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்ற தலைவர்களின் பெயரில் வீதிகள்தோறும், கிராமங்கள்தோறும் வாசக சாலைகள் அமைத்து இயக்கத்தின் கருத்துக்களைப் பரப்பியவர்கள் நாங்கள். அந்த வழிமுறையில் அண்ணாவின் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, அதனை இன்று செயல்படுத்தியுள்ளோம்.
1940-களில் குண்டலகேசி என்ற தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு ஓரங்க நாடகம் ஒன்றை எழுதி திருச்சி வானொலி நிலையத்துக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அந்த நாடகம் வெளியிடப்படவும் இல்லை, திரும்பி வரவும் இல்லை. திரும்பி வந்திருந்தால் நிம்மதி அடைந்திருப்பேன். அதன்பிறகு பிரபல இயக்குநர் சேலம் டி.ஆர். சுந்தரம் முயற்சியில் அந்த நாடகம் மந்திரிகுமாரி என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. எம்.ஜி.ஆர். நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திருச்சி வானொலி நிலையத்தில் குப்பை கூடைக்கு அனுப்பப்பட்ட கதைதான் இப்படி வசூலை அள்ளித் தந்தது. நமது இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்களை அலட்சியப்படுத்தும் நிறுவனமாக வானொலி இருந்தது என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன்.
1948-ல் வீட்டுக்கு ஒரு புத்தகச் சாலை என்ற தலைப்பில் வானொலியில் அண்ணா பேசினார். உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்ததாக புத்தகச்சாலைக்கு இடம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் பேசினார். ஒவ்வொரு நகரத்திலும், மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகச் சாலை இருக்க வேண்டும் என்ற அவரது கொள்கையின் அடிப்படையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது அண்ணாவின் கனவு நிறைவேறிய காட்சி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அடையாறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சென்றபோதுகூட துழாவி, துழாவி தலையணைக்கு கீழேயிருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டுதான் சென்றார். அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னபோதும் அவர் புத்தகம் படித்துக் கொண்டுதான் இருந்தார். அந்த அளவுக்கு புத்தகத்திலேயே இறுதிநாள் வரை ஆழந்திருந்தார். அவர் படிக்காத நேரம் இல்லை. இரவு 12 மணிக்கு கூட அவரைப் பார்க்கச் சென்றால் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பார். அதனால்தான் இந்த நூலகத்தில் புத்தகமும் கையுமாக இருக்கும் அண்ணாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
சத்துணவில் 5 நாள்களுக்கு முட்டை: மாணவர்களுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 3-6-1989 முதல் 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டது. 2006-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 முதல் வாரம் இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. 15-7-2007 முதல் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்ணா நூற்றாண்டு விழா நினைவாக பள்ளிக் கூடம் நடைபெறும் 5 நாள்களிலும் இனி முட்டை வழங்கப்படும்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: அரசு அலுவலகங்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தினக்கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துப்பரவுத் தொழிலாளர்கள் இப்போது ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை ஊதியம் பெறுகின்றனர். அவர்களில் 3 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு இனி மாதம் ரூ. 1,300 - ரூ. 3,000 என்ற ஊதிய விகிதத்தில், அகவிலைப்படியுடன் சேர்த்து தொடக்க நிலையில் மாதம் ரூ. 2,320 கிடைக்கும் வகையில் ஊதியம் உயர்த்தப்படும். அவ்வப்போது வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வும், 3 சதவீத கூடுதல் ஊதியப்படியும் பெறும் தகுதியினையும் இவர்கள் பெறுவார்கள். இந்த அறிவிப்புகள் உடனடியாகச் செயல்படுத்தப்படும்.
இந்த நூலகத்தை நம்முடைய நூலகமாகக் கருதி தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும். இந்த நூலகத்துக்கு வருபவர்களுக்கு பஸ் கட்டணத்தை ஓரளவுக்குக் குறைக்கலாமா என்ற கருத்தும் அரசிடம் உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.
நிதி அமைச்சர் க. அன்பழகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் எஸ். மாலதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு
முட்டை கலைஞர் வாழ்க
சத்துணவு எம்.ஞ்.ஆர். வாழ்க.
நானும் வரட்டா...முட்ட வாங்க......
சத்துணவு எம்.ஞ்.ஆர். வாழ்க.
நானும் வரட்டா...முட்ட வாங்க......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு
gunashan wrote:முட்டை கலைஞர் வாழ்க
சத்துணவு எம்.ஞ்.ஆர். வாழ்க.
நானும் வரட்டா...முட்ட வாங்க......
என்ன மாதிரி குழந்தைக்கு மட்டும் தான் முட்டை தருவாங்க ..
உங்களுக்கு தர மாதங்களே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு
நான் கார்த்திக் போன்ற மாதிரி குழந்தைக்கு மட்டும் தான் முட்டை தருவாங்க...
உங்களுக்கு தர மாட்டங்களே... ..
உங்களுக்கு தர மாட்டங்களே... ..
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு
karthikharis wrote:gunashan wrote:முட்டை கலைஞர் வாழ்க
சத்துணவு எம்.ஞ்.ஆர். வாழ்க.
நானும் வரட்டா...முட்ட வாங்க......
என்ன மாதிரி குழந்தைக்கு மட்டும் தான் முட்டை தருவாங்க ..
உங்களுக்கு தர மாதங்களே
முட்டைக்கு இத அலை அலையுறாங்களே இரண்டுபேரும் ... ஐயோ பாவம்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு
சாந்தன் wrote:karthikharis wrote:gunashan wrote:முட்டை கலைஞர் வாழ்க
சத்துணவு எம்.ஞ்.ஆர். வாழ்க.
நானும் வரட்டா...முட்ட வாங்க......
என்ன மாதிரி குழந்தைக்கு மட்டும் தான் முட்டை தருவாங்க ..
உங்களுக்கு தர மாதங்களே
முட்டைக்கு இத அலை அலையுறாங்களே இரண்டுபேரும் ... ஐயோ பாவம்
உங்களுக்கு தருளின்னு பொறமை ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு
உங்களுக்கு தருளின்னு பொறமை ...
ஐயோ சிவ சிவா ... நான் சைவமாக்கும் ......
முட்டையா ???? உவ்வே உவ்வே ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு
சாந்தன் wrote:உங்களுக்கு தருளின்னு பொறமை ...
ஐயோ சிவ சிவா ... நான் சைவமாக்கும் ......
முட்டையா ???? உவ்வே உவ்வே ....
பாஸ் அது சைவ முட்டை ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு
bhuvi wrote:கார்த்திக் எப்போ சிவா ஆனாரு...
ஒருவேளை அவரும் சைவமா இருக்குமோ
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சத்துணவில் தக்காளி சாதம், பெப்பர் முட்டை தர திட்டம்: விரைவில் அறிவிப்பு
» ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு: ம.பி. முதல்வர் அதிரடி அறிவிப்பு
» தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை : முதல்வர் அறிவிப்பு
» தமிழகத்தில் புதிதாக 9 வட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
» ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு: ம.பி. முதல்வர் அதிரடி அறிவிப்பு
» தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை : முதல்வர் அறிவிப்பு
» தமிழகத்தில் புதிதாக 9 வட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|