Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகள் சண்டை போடணும்
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
குழந்தைகள் சண்டை போடணும்
First topic message reminder :
குழந்தைகள் சண்டை போடணும்
ஓயாமல் சண்டை போட்டுக்கொண்டு, உங்களைப் பஞ்சாயத்துக்குக் கூப்பிடும் குழந்தைகளைப் பார்த்துக் கோபம் வருகிறதா? அவர்களை ரெண்டு போடலாம் என்று கிளம்புகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். அவர்களை சண்டை போட்டுக்கொள்ள விடுங்கள்... அது நல்லதுதான். அப்போதுதான் ஆரோக்கியமான மனநிலை உருவாகும் என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி. இவம் பாரும்மா... என் ஹோம் வொர்க் நோட்டை கிழிச்சிட்டான், இவ என் பென்சிலை உடைச்சிட்டாம்மா... வீட்டுக்கு வீடு கேட்கும் குரல்கள்தான் இவை. அவர்களது சண்டையைத் தீர்த்துவைக்கும் வழக்கமான நாட்டாமை தீர்ப்பை மாற்றியாக வேண்டிய சீன் இது. அதற்கு என்ன அவசியம் என்பதையும் சொல்கிறார் ஜெயந்தினி.
இப்படி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கிற வீடுகளில் குழந்தைகள் தங்களுக்குள் கோபத்தை மட்டுமல்ல, அன்பையும் சேர்த்தே பகிர்ந்துகொள்கிறார்கள். வெளித்தோற்றத்துக்கு அவர்கள் அதிகப்படியாக சண்டையிடுவதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் அவர்களிடம் விட்டுக் கொடுத்தலும் பாசப் பிணைப்பும் இருக்கத்தான் செய்யும். தவறு செய்யும் குழந்தையை நாம் கண்டிக்கும்போது, ஏதோ செய்யக்கூடாத விஷயத்தைச் செய்துவிட்டு இவன் திட்டு வாங்குகிறான்; நாம் இதைச் செய்யக் கூடாது என இன்னொரு குழந்தை இதைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வளர்கிற குழந்தைகள், எந்தவிதத் தயக்கமும் பயமும் இல்லாமல் வெளியுலகையும் பிரச்னைகளையும் எதிர்கொள்வார்கள்.
ஆனால் இதுபோன்ற எந்தப் பகிர்வுகளும் இல்லாமல் தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் அதிக கவனமும் கவனிப்பும் தேவை. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதைப் புரிந்துகொள்ளாததுதான் பிரச்னை என்கிறார் ஜெயந்தினி.
அப்படியானால் சண்டை போட, போட்டி போட, பொம்மையைப் பிடுங்க, பென்சிலை உடைக்க இன்னொரு குழந்தை இல்லாத வீடுகளில் பெற்றோர் என்ன செய்வது? ஒற்றைக் குழந்தையைத் தனியாக வளர்க்கும் பெற்றோர் எப்படி நடந்துகொள்வது? டாக்டர் ஜெயந்தினி சொல்வதைக் கேளுங்கள்...
தனியாக வளரும் குழந்தைகள் வீட்டுக்குள் அமைதியாக வளையவந்தாலும், வெளியிடங்களில் தங்களது இன்னொரு முகத்தைக் காட்டுவார்கள். தேவையில்லாமல் மற்ற குழந்தைகளை அடிப்பது, கடிப்பது என்று கோபத்தை வெளிப்படுத்தலாம். இல்லையென்றால் யாருடனும் ஒட்டாமல் இயல்புக்கு மீறிய அமைதியுடன் இருப்பார்கள். குழந்தைகளின் இந்த இயல்பு மாற்றங்கள் அவர்களின் பெற்றோருக்கேகூட தெரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளின் இந்த இயல்பு மாற்றத்தைத்தான் சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
ஒரு குழந்தைதானே என்று சிலர் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பார்கள். தங்களுக்குக் கிடைக்காத அத்தனை வசதிகளும் தங்கள் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தை கேட்காததை எல்லாம் வாங்கி அதன் கையில் திணிப்பார்கள். எல்லா விஷயத்திலும் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். தங்கள் ஆசைகள் அனைத்தையும் அந்த ஒரு குழந்தை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பார்கள். ஏதாவது ஒரு சமயத்தில் குழந்தை தங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்றால் அந்த ஏமாற்றத்தையும் குழந்தை மீதே வெளிப்படுத்துவார்கள் என்று பெற்றோர்களின் தவறுகளை பட்டியலிடுகிறார் ஜெயந்தினி.
இதன் விளைவு என்னவாக இருக்கும்? இப்படி தொடர்ச்சியாக ஒரே சூழலில் வளர்வதால் அந்தக் குழந்தையின் இயல்பான குணங்கள் தொலைந்து போகின்றன. பெற்றோரின் பாசமும் அதீத கவனிப்புமே சுமையாகிவிடுகின்றன. கோபம், ஆத்திரம், மற்ற குழந்தைகளை டாமினேட் செய்வது, எதற்கெடுத்தாலும் கீழே விழுந்து புரண்டு அடம்பிடித்து அழுவது போன்ற குணங்கள் வளரும். எல்லாவற்றிலும் தானே முதலிடம் பெற வேண்டும், நினைத்தது அனைத்தும் அந்த நிமிஷமே கிடைக்க வேண்டும் என்ற குணத்துடனேயே அந்தக் குழந்தை வளரும். யாருடனும் எந்தவிதமான பகிர்ந்து கொள்ளுதலும் இல்லாமல் சுயநலத்துடன் வளரவும் வாய்ப்பு இருக்கிறது.
சிறு வயது முதலே வெளியுலகம் காண்பிக்கப்படாமல் வளர்க்கப்படுவதால் பள்ளியிலோ மற்ற இடங்களிலோ யாரிடம் எப்படிப் பேசுவது, பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் அந்தக் குழந்தை குழப்பமடையும். ஒன்று சண்டையிடும்; அல்லது இயல்புக்கு மீறிய அமைதியுடன் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் என்று ஜெயந்தினி சொல்வதைக் கேட்கும்போது பயம் ஏற்படுகிறது.
ஆனால் அதற்காக அனைவருமே இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை என புன்சிரிப்போடு கூறுகிறார் டாக்டர். வளர்க்கிற விதத்தில் வளர்த்தால் இது தீர்க்கக்கூடிய பிரச்னைதான். அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுப்பது, அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பது & இரண்டுமே கூடாது. வெற்றி, தோல்வி இரண்டையுமே சமமாக ஏற்றுக்கொள்ளப் பழக்க வேண்டும். குழந்தை தெருவில் விளையாடினால்கூட அதை கௌரவக் குறைவாக சிலர் நினைக்கிறார்கள்.
உறவுகளைப் பற்றியும், அக்கம் பக்கத்தினர் பற்றியும் சொல்வதுடன், மற்றவர்களுடன் பழகவும் பகிர்ந்துகொள்ளவும் கற்றுத்தர வேண்டும். அவர்கள் விரும்புவது எதுவும் கஷ்டப்படாமல் கிடைக்காது என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்! இப்படி வளர்க்கிற விதத்தில் வளர்த்தால் ஒற்றைக் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி நம் தோழி
குழந்தைகள் சண்டை போடணும்
ஓயாமல் சண்டை போட்டுக்கொண்டு, உங்களைப் பஞ்சாயத்துக்குக் கூப்பிடும் குழந்தைகளைப் பார்த்துக் கோபம் வருகிறதா? அவர்களை ரெண்டு போடலாம் என்று கிளம்புகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். அவர்களை சண்டை போட்டுக்கொள்ள விடுங்கள்... அது நல்லதுதான். அப்போதுதான் ஆரோக்கியமான மனநிலை உருவாகும் என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி. இவம் பாரும்மா... என் ஹோம் வொர்க் நோட்டை கிழிச்சிட்டான், இவ என் பென்சிலை உடைச்சிட்டாம்மா... வீட்டுக்கு வீடு கேட்கும் குரல்கள்தான் இவை. அவர்களது சண்டையைத் தீர்த்துவைக்கும் வழக்கமான நாட்டாமை தீர்ப்பை மாற்றியாக வேண்டிய சீன் இது. அதற்கு என்ன அவசியம் என்பதையும் சொல்கிறார் ஜெயந்தினி.
இப்படி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கிற வீடுகளில் குழந்தைகள் தங்களுக்குள் கோபத்தை மட்டுமல்ல, அன்பையும் சேர்த்தே பகிர்ந்துகொள்கிறார்கள். வெளித்தோற்றத்துக்கு அவர்கள் அதிகப்படியாக சண்டையிடுவதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் அவர்களிடம் விட்டுக் கொடுத்தலும் பாசப் பிணைப்பும் இருக்கத்தான் செய்யும். தவறு செய்யும் குழந்தையை நாம் கண்டிக்கும்போது, ஏதோ செய்யக்கூடாத விஷயத்தைச் செய்துவிட்டு இவன் திட்டு வாங்குகிறான்; நாம் இதைச் செய்யக் கூடாது என இன்னொரு குழந்தை இதைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வளர்கிற குழந்தைகள், எந்தவிதத் தயக்கமும் பயமும் இல்லாமல் வெளியுலகையும் பிரச்னைகளையும் எதிர்கொள்வார்கள்.
ஆனால் இதுபோன்ற எந்தப் பகிர்வுகளும் இல்லாமல் தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் அதிக கவனமும் கவனிப்பும் தேவை. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதைப் புரிந்துகொள்ளாததுதான் பிரச்னை என்கிறார் ஜெயந்தினி.
அப்படியானால் சண்டை போட, போட்டி போட, பொம்மையைப் பிடுங்க, பென்சிலை உடைக்க இன்னொரு குழந்தை இல்லாத வீடுகளில் பெற்றோர் என்ன செய்வது? ஒற்றைக் குழந்தையைத் தனியாக வளர்க்கும் பெற்றோர் எப்படி நடந்துகொள்வது? டாக்டர் ஜெயந்தினி சொல்வதைக் கேளுங்கள்...
தனியாக வளரும் குழந்தைகள் வீட்டுக்குள் அமைதியாக வளையவந்தாலும், வெளியிடங்களில் தங்களது இன்னொரு முகத்தைக் காட்டுவார்கள். தேவையில்லாமல் மற்ற குழந்தைகளை அடிப்பது, கடிப்பது என்று கோபத்தை வெளிப்படுத்தலாம். இல்லையென்றால் யாருடனும் ஒட்டாமல் இயல்புக்கு மீறிய அமைதியுடன் இருப்பார்கள். குழந்தைகளின் இந்த இயல்பு மாற்றங்கள் அவர்களின் பெற்றோருக்கேகூட தெரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளின் இந்த இயல்பு மாற்றத்தைத்தான் சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
ஒரு குழந்தைதானே என்று சிலர் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பார்கள். தங்களுக்குக் கிடைக்காத அத்தனை வசதிகளும் தங்கள் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தை கேட்காததை எல்லாம் வாங்கி அதன் கையில் திணிப்பார்கள். எல்லா விஷயத்திலும் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். தங்கள் ஆசைகள் அனைத்தையும் அந்த ஒரு குழந்தை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பார்கள். ஏதாவது ஒரு சமயத்தில் குழந்தை தங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்றால் அந்த ஏமாற்றத்தையும் குழந்தை மீதே வெளிப்படுத்துவார்கள் என்று பெற்றோர்களின் தவறுகளை பட்டியலிடுகிறார் ஜெயந்தினி.
இதன் விளைவு என்னவாக இருக்கும்? இப்படி தொடர்ச்சியாக ஒரே சூழலில் வளர்வதால் அந்தக் குழந்தையின் இயல்பான குணங்கள் தொலைந்து போகின்றன. பெற்றோரின் பாசமும் அதீத கவனிப்புமே சுமையாகிவிடுகின்றன. கோபம், ஆத்திரம், மற்ற குழந்தைகளை டாமினேட் செய்வது, எதற்கெடுத்தாலும் கீழே விழுந்து புரண்டு அடம்பிடித்து அழுவது போன்ற குணங்கள் வளரும். எல்லாவற்றிலும் தானே முதலிடம் பெற வேண்டும், நினைத்தது அனைத்தும் அந்த நிமிஷமே கிடைக்க வேண்டும் என்ற குணத்துடனேயே அந்தக் குழந்தை வளரும். யாருடனும் எந்தவிதமான பகிர்ந்து கொள்ளுதலும் இல்லாமல் சுயநலத்துடன் வளரவும் வாய்ப்பு இருக்கிறது.
சிறு வயது முதலே வெளியுலகம் காண்பிக்கப்படாமல் வளர்க்கப்படுவதால் பள்ளியிலோ மற்ற இடங்களிலோ யாரிடம் எப்படிப் பேசுவது, பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் அந்தக் குழந்தை குழப்பமடையும். ஒன்று சண்டையிடும்; அல்லது இயல்புக்கு மீறிய அமைதியுடன் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் என்று ஜெயந்தினி சொல்வதைக் கேட்கும்போது பயம் ஏற்படுகிறது.
ஆனால் அதற்காக அனைவருமே இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை என புன்சிரிப்போடு கூறுகிறார் டாக்டர். வளர்க்கிற விதத்தில் வளர்த்தால் இது தீர்க்கக்கூடிய பிரச்னைதான். அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுப்பது, அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பது & இரண்டுமே கூடாது. வெற்றி, தோல்வி இரண்டையுமே சமமாக ஏற்றுக்கொள்ளப் பழக்க வேண்டும். குழந்தை தெருவில் விளையாடினால்கூட அதை கௌரவக் குறைவாக சிலர் நினைக்கிறார்கள்.
உறவுகளைப் பற்றியும், அக்கம் பக்கத்தினர் பற்றியும் சொல்வதுடன், மற்றவர்களுடன் பழகவும் பகிர்ந்துகொள்ளவும் கற்றுத்தர வேண்டும். அவர்கள் விரும்புவது எதுவும் கஷ்டப்படாமல் கிடைக்காது என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்! இப்படி வளர்க்கிற விதத்தில் வளர்த்தால் ஒற்றைக் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி நம் தோழி
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: குழந்தைகள் சண்டை போடணும்
[quote="karthikharis"]
பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:
ஐயா இப்ப எங்க இறங்குனாலும் பிளானோட தான் இறங்குறது
பூட்டுன வீட்டுக்குள்ளைய ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: குழந்தைகள் சண்டை போடணும்
[quote="பிளேடு பக்கிரி"]
karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:
பூட்டுன வீட்டுக்குள்ளைய ?
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: குழந்தைகள் சண்டை போடணும்
///அப்படியானால் சண்டை போட, போட்டி போட, பொம்மையைப் பிடுங்க, பென்சிலை உடைக்க இன்னொரு குழந்தை இல்லாத வீடுகளில் பெற்றோர் என்ன செய்வது?///
அவங்க பென்சிலை வாங்கி நாம் உடைக்க வேண்டியதுதான்! நமக்காவது கொஞ்சம் அறிவு வளரும் இல்லையா?
அவங்க பென்சிலை வாங்கி நாம் உடைக்க வேண்டியதுதான்! நமக்காவது கொஞ்சம் அறிவு வளரும் இல்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குழந்தைகள் சண்டை போடணும்
சிவா wrote:///அப்படியானால் சண்டை போட, போட்டி போட, பொம்மையைப் பிடுங்க, பென்சிலை உடைக்க இன்னொரு குழந்தை இல்லாத வீடுகளில் பெற்றோர் என்ன செய்வது?///
அவங்க பென்சிலை வாங்கி நாம் உடைக்க வேண்டியதுதான்! நமக்காவது கொஞ்சம் அறிவு வளரும் இல்லையா?
எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்கையா...?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆமாம் போடணும்!
» எந்த ஊசி எப்ப போடணும்…!
» குழந்தைகள் கடத்தல்-மேலும் 4 பெண்கள் கைது-2 குழந்தைகள் மீட்பு
» அதிரசத்துக்கு எவ்வளவு புளி போடணும்...!!
» லிப்ஸ்டிக் எப்படி போடணும் தெரியுமா?
» எந்த ஊசி எப்ப போடணும்…!
» குழந்தைகள் கடத்தல்-மேலும் 4 பெண்கள் கைது-2 குழந்தைகள் மீட்பு
» அதிரசத்துக்கு எவ்வளவு புளி போடணும்...!!
» லிப்ஸ்டிக் எப்படி போடணும் தெரியுமா?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|