ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்

5 posters

Go down

சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Empty சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்

Post by jeylakesengg Wed Sep 15, 2010 12:38 pm

பலன் தரும் விரதங்கள்


சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்என்ன பலன்?

தெரிந்தோ, தெரியாமலோ நாம் எவ்வளவோ பாவங்கள் செய்திருக்கிறோம். அப்படிப்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்வதற்கும், இனிமேலும் தொடர்ந்து எந்தப் பாவத்தையும் செய்யாமல் இருக்கவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

என்ன கதை?

தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவ பெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவ பெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார். சிவ பெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது.

தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது, தங்களுக்கு ஒரு குழந்தையில்லை எனும் குறைதான். அகலிகையின் சாபத்தால் அவனுக்கு நேர்ந்த துயரம் அது. இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள்.

பத்தினி கொடுத்த சாபத்தை மாற்ற தன்னால் முடியாதே; இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவ பெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார். இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச் செய்த பெருமான், அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் ஏக்கத்தைத் தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் அவர் எடுத்துரைக்க, எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும் இந்திராணியும் சம்மதித்தனர்.

காமதேனுவுக்குக் குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர். பிறக்கும்போதே கையில் ஏடும், எழுத்தாணியும்! தன் கணக்குப்பிள்ளை பதவியை மறக்காத குழந்தையாகப் பிறந்தார். சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு சித்திரா புத்திரன் என பெயரிட்டார்கள் இந்திரனும், அவன் மனைவி இந்திராணியும்.

குழந்தையாக இருக்கும்போதே சித்திர புத்திரன் யாரைப் பார்த்தாலும், அவர்களின் பாவ, புண்ணிய கணக்கை அப்படியே துல்லியமாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். எல்லாருக்கும் ஆச்சர்யம். இந்திரனுக்கோ பெருமை தாங்கவில்லை. இவ்வளவு புத்திசாலியாகவும் தீர்க்கதரிசியாகவும் இருக்கும் தன் மகனை, தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எமனிடம் அனுப்பிவைக்க முடிவெடுத்தான். அதாவது, எல்லா மக்களுடைய வாழ்வின் முடிவிலும் பாவ, புண்ணியத்தை தீர்மானிக்கும் கணக்கைச் செய்ய!

பிறவிக்கடன் தீர்த்து எப்போது கயிலாயம் செல்வோம் எனக் காத்திருந்த சித்திர புத்திரன், இதைக் கேட்டுக் கலங்கினான். �என்னால் அங்கு போக முடியாது� என்று சொல்லி கயிலாயம் சென்றுவிட்டான். இதனால் இந்திரன் புத்திர சோகத்தில் ஆழ்ந்தான். மகனை மறக்கமுடியாமல் கயிலாயம் போய், சிவபெருமானிடம் முறையிட்டான். மகனை தனக்குத் திருப்பித் தருமாறு கேட்டான். பரமேஸ்வரனும் அவனது வேதனையை உணர்ந்து, �இனிமேல் சித்திர புத்திரன் உன்னுடனே, உன் தளபதி யமனின் உதவியாளனாக இருக்கட்டும்� என்று சொல்லி அனுப்பிவைத்தார். அதோடு மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி வைத்து, அவர்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் அல்லது தண்டனைகள் கொடுக்கலாம் என யமனுக்கு யோசனை சொல்லும் கௌரவத்தையும் கொடுத்தார்.

�இப்படிப்பட்ட அதிகாரம் கொண்ட சித்திர புத்திரனை யார் விரதமிருந்து வணங்கினாலும், அவர்களுக்கு பாவச்சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வார்� என்ற வரத்தையும் அவருக்கு வழங்கினார் சர்வேஸ்வரன். எனவே சித்ரா பவுர்ணமியில் சித்திரபுத்திரனை விரதமிருந்து வணங்கினால் பாவச்சுமை குறையும்; புண்ணிய பலம் கூடும்.

எப்படி இருப்பது?

இந்த விரதத்தை ஆண், பெண் எல்லோரும் மேற்கொள்ளலாம். சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூஜையறையை சுத்தமாக்கி, ஒரு மணையில் அழகாக ஒரு கோலம் போட்டுக் கொள்ள வேண்டும். இந்தக் கோலத்தையே சித்திர புத்திரனாக உருவகித்துக் கொள்ள வேண்டும்... கோலம் போன்ற சித்திரத்திலிருந்து வந்தவர்தானே சித்திர குப்தன்? அவர் பாவ, புண்ணியக் கணக்கை கணிக்கும் கணக்குப்பிள்ளை இல்லையா, அதனால் அந்தக் கோலத்தின் மேல் ஒரு நோட்டு புத்தகத்தையும் ஒரு பேனாவையும் வைத்துக் கொள்வோம். ஓவியத்திறமை உள்ளவர்கள் ஒரு ஆண் உருவத்தை வரைந்து ஒரு கையில் புத்தகமும் இன்னொரு கையில் எழுத்தாணியும் இருப்பது போல வரைந்துகொள்ளலாம்.

சித்திர குப்தருக்கு நைவேத்யமாக சமர்ப்பிக்கும் நிவேதனப் பொருட்களில் உப்பே இருக்கக்கூடாது என்பது சம்பிரதாயம். யாருக்கும் விருப்பு, வெறுப்பு காட்டாமல் நடுநிலையோடு பாவ, புண்ணியக் கணக்கை எழுதுபவர் அல்லவா அவர்? அதனால் இப்படி... உப்பில்லாத வெண்பொங்கல் தயிர்சாதம் அல்லது பாசிப்பருப்பு பாயசம். கூடவே கொழுக்கட்டை, இளநீர் என படைக்கலாம்.

இந்த நிவேதனப் பொருட்களை கோலத்தின் முன்னால் வைத்து, வணங்கலாம். அஷ்டோத்திரம் சொல்லலாம். விரும்பினால், அவரவர் குலவழக்கப்படி ஒரு கலசத்தில் தண்ணீர் நிரப்பி, அந்தக் கலசத்துக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைக் கொத்து வைத்து, அதை கோலத்துக்கு அருகே வைத்து, அதிலே சித்திர குப்தனை ஆவாகனம் செய்யலாம். நாம் செய்த பாவங்களை எல்லாம் பொறுத்துக்கொள்ளும்படி வேண்டிக் கொள்ளலாம்.

விரதம் மேற்கொள்ளும் தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, ஒரு பசுவுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அதற்கு வெல்லம் கலந்த பச்சரிசியை உணவாகக் கொடுத்து வழிபடுவதும் நல்லது. பசுவின் பின் பக்கம் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே பசுவின் பின் பக்கம் மஞ்சள், குங்குமம் வைத்து, வாலை ஒருமுறை தடவிக்கொடுத்து பிரதட்சினம் செய்ய வேண்டும். காமதேனு என்ற பசுவின் வயிற்றில் கருவாக இருந்தவர்தானே சித்திர குப்தர்? அதனால்தான் இந்த சம்பிரதாயம். அதோடு அந்தப் பசுவை மதிக்கும்விதமாக, சித்ரா பவுர்ணமி விரதத்தன்று பசும்பால், பசுநெய், பசுந்தயிர் இவைகளை உண்ணாமல் இருப்பது நல்லது. விரதத்தில் நிவேதனமாகப் படைக்கப்பட்ட உப்பில்லாத வெண் பொங்கல் அல்லது பாசிப்பருப்பு பாயசம் மட்டும்தான் சாப்பிட வேண்டும்.

அதோடு சித்திர குப்தன் கதையை நமக்குத் தெரிந்தவர்கள் எல்லாருக்கும் சொல்ல வேண்டும் ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை தானமாகக் கொடுப்பதும் விரதத்தின் ஒரு பகுதியே!

இந்த சித்திர புத்திரனுக்கு ஒரு கோயில் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருக்கும் இங்கு சித்ரா பவுர்ணமி தினத்தன்று சித்திர குப்தனுக்கு விசேஷ அபிஷேகம், பூஜை எல்லாம் நடக்கும்.

நன்றி நம் தோழி
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Empty Re: சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 1:59 pm

விரதம் பற்றியும் அது உண்டான புராணம் பற்றியும் கூறியது அருமை நன்றி நன்றி



சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Empty Re: சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்

Post by சிவா Wed Sep 15, 2010 3:12 pm

சித்திரத்தில் இருந்து உருவானதால் சித்ரகுப்தன்!


புதிய தகவலை அறியச் செய்து விட்டீர்கள்!

நன்றி!


சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Empty Re: சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்

Post by சபீர் Thu Sep 16, 2010 6:13 pm

சிவா wrote:சித்திரத்தில் இருந்து உருவானதால் சித்ரகுப்தன்!


புதிய தகவலை அறியச் செய்து விட்டீர்கள்!

நன்றி!
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் 359383 சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Empty Re: சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்

Post by மீனா Thu Sep 16, 2010 6:22 pm

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா நன்றி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Empty Re: சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum