Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்தப் புற்றுநோய்க்கும் உண்டு தீர்வு!
+2
பிளேடு பக்கிரி
jeylakesengg
6 posters
Page 1 of 1
ரத்தப் புற்றுநோய்க்கும் உண்டு தீர்வு!
ரத்தப் புற்றுநோய்க்கும் உண்டு தீர்வு!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாக்களில் தவிர்க்கமுடியாத வில்லனாக இருந்தது ரத்தப் புற்றுநோய். எந்த கேரக்டரை சாகடிக்க வேண்டியிருந்தாலும், அவருக்கு ரத்தப் புற்றுநோய் என்று சொல்லிவிடுவார்கள். நிஜத்திலும் ஒரு காலத்தில் இது உயிர்க்கொல்லி நோய்தான்! �ரத்தப் புற்றுநோயா... பிழைக்க சான்ஸே இல்லை!� என்று டாக்டர்கள் கைவிரிப்பார்கள். இப்படி மக்களைக் கலங்கடித்த நோயே இன்று கலங்கிப்போயிருக்கிறது. ��ஒவ்வொரு நாளும் புதிது புதிகாகக் களமிறங்கும் டெக்னாலஜிதான் இதற்குக் காரணம். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகள் சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக இருக்கிறார்கள்�� என்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்த நோய் நிபுணர் டாக்டர் ரேவதி ராஜ். ரத்தப் புற்றுநோய் சிகிச்சையில் தற்போது வந்திருக்கும் வசதிகள் குறித்து சொல்கிறார் இவர்...
��செல்களுக்குள் ஏற்படும் திடீர் மாற்றங்களும், அபாயகரமான கதிர்வீச்சு தாக்குதல்களும்தான் ரத்தப் புற்றுநோய்க்குக் காரணம். இது பரம்பரை நோயோ, தொற்று நோயோ கிடையாது. ரத்தப் புற்றுநோய்க்கு வயது வித்தியாசம் இல்லை என்றாலும், சமீபகாலமாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பத்தில் ஆறு குழந்தைகள் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். மீதியுள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. காரணம், �புற்றுநோயை குணப்படுத்த முடியாது� என்கிற அவர்களது பெற்றோரின் அறியாமைதான். தற்போது ரத்தப் புற்றுநோய்க்கு உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுவதால், மற்ற நாடுகளில் உள்ள வசதிகளைப் பெறுவதுடன், அங்கிருக்கும் நிபுணர்களை உடனடியாக கருத்து கேட்டறியவும் முடியும்.
நோயைக் கண்டறியவும், அதன் தீவிரத்தை மிகத் துல்லியமாக ஆராயவும் நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வழக்கமான மைக்ராஸ்கோப்பில் வைத்து ரத்தத்தைப் பரிசோதிக்கும்போது 500 செல்களை மட்டும்தான் கணக்கிட முடியும். தற்போது �ஃப்ளோசைட்டோமெட்ரி� (திறீஷீஷ்நீஹ்tஷீனீமீtக்ஷீஹ்) மூலம் ஒன்று முதல் பத்து மில்லியன் செல்களை ஒரே நேரத்தில் அளவிட முடியும்.
அதேபோல குரோமோசோம் பரிசோதனை மேற்கொண்டு, பிரச்னையின் தீவிரத்தைக் கண்டறிய முன்பு அதிக நாட்களாகும். இப்போது முதல் நாளே பிரச்னைக்குரிய குரோமோசோமை எளிதில் அடையாளம் காணும் வாய்ப்பு இருக்கிறது. ரத்த வங்கிகள் மற்றும் ரத்த தானம் செய்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், தேவைப்பட்ட ரத்தம் உடனுக்குடன் கிடைத்துவிடுகிறது. தவிர, ரத்த அணுக்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, தேவையானதை மட்டுமே உடலினுள் செலுத்தும் வசதியும் வந்துவிட்டது.
சிகிச்சை ஆரம்பித்த நாளிலிருந்து முதல் பத்து மாதம் வரை தரப்படும் இண்டென்சிவ் சிகிச்சையின்போது மட்டும்தான் அடிக்கடி மருத்துவமனைக்கு வர வேண்டியிருக்கும். அதற்கு அடுத்து வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட குழந்தை, மற்ற குழந்தைகள்போல இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். பள்ளிக்குச் செல்லலாம். அதனால் ரத்தப் புற்றுநோய்க்கு பயப்படத் தேவையில்லை�� என்று நம்பிக்கை தருகிறார் டாக்டர் ரேவதி.
சிகிச்சைக்குப் பிறகு ரத்தப் புற்றுநோயின் பாதிப்பில் இருந்து மீண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் ஏழு வயது பல்வந்தை நம்மிடம் அறிமுகப்படுத்தினார். மெல்லப் புன்னகைத்துவிட்டு ரெகுலர் செக் அப்புக்கு பல்வந்த் செல்ல, அவனது அம்மா இந்து தேவ் பேசினார்:
��பீகார் பக்கத்துல இருக்கற சின்ன கிராமம்தான் எங்க சொந்த ஊர். என் கணவர் விவசாயி. நான் அங்கன்வாடியில வேலை செய்கிறேன். மூன்று பெண்களுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி இவன். இவனுக்கு அஞ்சு வயசாகும்போது விட்டு விட்டு ஜுரம் வந்தது. அதுக்காக ரத்தப் பரிசோதனை செய்தோம். அதுல ஏதோ மாற்றம் இருந்ததால எங்களை மும்பைக்கு அனுப்பினாங்க. அங்கேதான் இவனுக்கு ரத்தப் புற்றுநோய் இருக்கறது உறுதியாச்சு. அந்த செய்தியைக் கேட்டதுமே எங்க குடும்பமே துக்கத்துல மூழ்கிடுச்சு. பக்கத்துல இருந்தவங்க எல்லாரும் இதுக்கு சிகிச்சையே கிடையாதுனு சொல்லி எங்க கவலைய அதிகப்படுத்தினாங்க. அப்போ பேப்பர்ல வந்த விளம்பரத்தைப் பார்த்துட்டு, சென்னைக்கு வந்தோம். ரெண்டு வருஷ சிகிச்சைக்குப் பிறகு இப்போ என் பையன் இயல்பா இருக்கான். ஸ்கூலுக்கும் போக ஆரம்பிச்சிட்டான்�� என்று சொன்னவர், கண்களில் கலவரம் படிய தன் நான்கு வயது மகனுடன் சிகிச்சைக்காக காத்திருந்த இன்னொரு பெண்ணுக்கு, ��கவலைப்படாதீங்க, உங்க பையனும் சீக்கிரமே குணமாகிடுவான்�� என்று ஆறுதல் கூறினார்.
எல்லாம் மருத்துவத்தின் மகிமை.
நன்றி நம் தோழி
ஒரு காலத்தில் தமிழ் சினிமாக்களில் தவிர்க்கமுடியாத வில்லனாக இருந்தது ரத்தப் புற்றுநோய். எந்த கேரக்டரை சாகடிக்க வேண்டியிருந்தாலும், அவருக்கு ரத்தப் புற்றுநோய் என்று சொல்லிவிடுவார்கள். நிஜத்திலும் ஒரு காலத்தில் இது உயிர்க்கொல்லி நோய்தான்! �ரத்தப் புற்றுநோயா... பிழைக்க சான்ஸே இல்லை!� என்று டாக்டர்கள் கைவிரிப்பார்கள். இப்படி மக்களைக் கலங்கடித்த நோயே இன்று கலங்கிப்போயிருக்கிறது. ��ஒவ்வொரு நாளும் புதிது புதிகாகக் களமிறங்கும் டெக்னாலஜிதான் இதற்குக் காரணம். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகள் சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக இருக்கிறார்கள்�� என்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்த நோய் நிபுணர் டாக்டர் ரேவதி ராஜ். ரத்தப் புற்றுநோய் சிகிச்சையில் தற்போது வந்திருக்கும் வசதிகள் குறித்து சொல்கிறார் இவர்...
��செல்களுக்குள் ஏற்படும் திடீர் மாற்றங்களும், அபாயகரமான கதிர்வீச்சு தாக்குதல்களும்தான் ரத்தப் புற்றுநோய்க்குக் காரணம். இது பரம்பரை நோயோ, தொற்று நோயோ கிடையாது. ரத்தப் புற்றுநோய்க்கு வயது வித்தியாசம் இல்லை என்றாலும், சமீபகாலமாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பத்தில் ஆறு குழந்தைகள் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். மீதியுள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. காரணம், �புற்றுநோயை குணப்படுத்த முடியாது� என்கிற அவர்களது பெற்றோரின் அறியாமைதான். தற்போது ரத்தப் புற்றுநோய்க்கு உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுவதால், மற்ற நாடுகளில் உள்ள வசதிகளைப் பெறுவதுடன், அங்கிருக்கும் நிபுணர்களை உடனடியாக கருத்து கேட்டறியவும் முடியும்.
நோயைக் கண்டறியவும், அதன் தீவிரத்தை மிகத் துல்லியமாக ஆராயவும் நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வழக்கமான மைக்ராஸ்கோப்பில் வைத்து ரத்தத்தைப் பரிசோதிக்கும்போது 500 செல்களை மட்டும்தான் கணக்கிட முடியும். தற்போது �ஃப்ளோசைட்டோமெட்ரி� (திறீஷீஷ்நீஹ்tஷீனீமீtக்ஷீஹ்) மூலம் ஒன்று முதல் பத்து மில்லியன் செல்களை ஒரே நேரத்தில் அளவிட முடியும்.
அதேபோல குரோமோசோம் பரிசோதனை மேற்கொண்டு, பிரச்னையின் தீவிரத்தைக் கண்டறிய முன்பு அதிக நாட்களாகும். இப்போது முதல் நாளே பிரச்னைக்குரிய குரோமோசோமை எளிதில் அடையாளம் காணும் வாய்ப்பு இருக்கிறது. ரத்த வங்கிகள் மற்றும் ரத்த தானம் செய்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், தேவைப்பட்ட ரத்தம் உடனுக்குடன் கிடைத்துவிடுகிறது. தவிர, ரத்த அணுக்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, தேவையானதை மட்டுமே உடலினுள் செலுத்தும் வசதியும் வந்துவிட்டது.
சிகிச்சை ஆரம்பித்த நாளிலிருந்து முதல் பத்து மாதம் வரை தரப்படும் இண்டென்சிவ் சிகிச்சையின்போது மட்டும்தான் அடிக்கடி மருத்துவமனைக்கு வர வேண்டியிருக்கும். அதற்கு அடுத்து வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட குழந்தை, மற்ற குழந்தைகள்போல இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். பள்ளிக்குச் செல்லலாம். அதனால் ரத்தப் புற்றுநோய்க்கு பயப்படத் தேவையில்லை�� என்று நம்பிக்கை தருகிறார் டாக்டர் ரேவதி.
சிகிச்சைக்குப் பிறகு ரத்தப் புற்றுநோயின் பாதிப்பில் இருந்து மீண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் ஏழு வயது பல்வந்தை நம்மிடம் அறிமுகப்படுத்தினார். மெல்லப் புன்னகைத்துவிட்டு ரெகுலர் செக் அப்புக்கு பல்வந்த் செல்ல, அவனது அம்மா இந்து தேவ் பேசினார்:
��பீகார் பக்கத்துல இருக்கற சின்ன கிராமம்தான் எங்க சொந்த ஊர். என் கணவர் விவசாயி. நான் அங்கன்வாடியில வேலை செய்கிறேன். மூன்று பெண்களுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி இவன். இவனுக்கு அஞ்சு வயசாகும்போது விட்டு விட்டு ஜுரம் வந்தது. அதுக்காக ரத்தப் பரிசோதனை செய்தோம். அதுல ஏதோ மாற்றம் இருந்ததால எங்களை மும்பைக்கு அனுப்பினாங்க. அங்கேதான் இவனுக்கு ரத்தப் புற்றுநோய் இருக்கறது உறுதியாச்சு. அந்த செய்தியைக் கேட்டதுமே எங்க குடும்பமே துக்கத்துல மூழ்கிடுச்சு. பக்கத்துல இருந்தவங்க எல்லாரும் இதுக்கு சிகிச்சையே கிடையாதுனு சொல்லி எங்க கவலைய அதிகப்படுத்தினாங்க. அப்போ பேப்பர்ல வந்த விளம்பரத்தைப் பார்த்துட்டு, சென்னைக்கு வந்தோம். ரெண்டு வருஷ சிகிச்சைக்குப் பிறகு இப்போ என் பையன் இயல்பா இருக்கான். ஸ்கூலுக்கும் போக ஆரம்பிச்சிட்டான்�� என்று சொன்னவர், கண்களில் கலவரம் படிய தன் நான்கு வயது மகனுடன் சிகிச்சைக்காக காத்திருந்த இன்னொரு பெண்ணுக்கு, ��கவலைப்படாதீங்க, உங்க பையனும் சீக்கிரமே குணமாகிடுவான்�� என்று ஆறுதல் கூறினார்.
எல்லாம் மருத்துவத்தின் மகிமை.
நன்றி நம் தோழி
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ரத்தப் புற்றுநோய்க்கும் உண்டு தீர்வு!
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: ரத்தப் புற்றுநோய்க்கும் உண்டு தீர்வு!
ரத்தப் புற்று நோய்ய்கு தீர்வு உண்டுதான், ஆனால் சாமானியர்களுக்கு இந்தச் சிகிச்சை கிடைக்க வாய்ப்பே இல்லாத அளவிற்கு கட்டணங்கள் பல லட்சங்களைத் தாண்டுகிறதே!!! ஒருவேளை கலைஞர் காப்பீட்டுத் திட்டம் உதவினால் நல்லது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தீர்வு உண்டு!
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|