புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10சைக்கிள் திரும்பட்டும்... Poll_m10சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10சைக்கிள் திரும்பட்டும்... Poll_m10சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10சைக்கிள் திரும்பட்டும்... Poll_m10சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10சைக்கிள் திரும்பட்டும்... Poll_m10சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10சைக்கிள் திரும்பட்டும்... Poll_m10சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10சைக்கிள் திரும்பட்டும்... Poll_m10சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10சைக்கிள் திரும்பட்டும்... Poll_m10சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10சைக்கிள் திரும்பட்டும்... Poll_m10சைக்கிள் திரும்பட்டும்... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைக்கிள் திரும்பட்டும்...


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Sep 14, 2010 10:58 am

இந்த ஆண்டின் தொடக்கம் முதலாகவே, கார், இரு சக்கர வாகனங்கள் விற்பனை சென்ற ஆண்டைக் காட்டிலும் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இப்போது ஆகஸ்ட் 2010-க்கான விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளார்கள். இதன்படி, 1,60,794 கார்கள், 9,57,304 இரு சக்கர வாகனங்கள், 52,030 வர்த்தக வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த விற்பனை 2009-ம் ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகம்.

இன்றியமையாப் பொருள்களின் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் வாகனக் கட்டணம் உயர்வதுதான். ஆனால், இந்தியாவில் சரக்கு வாகனங்களின் விற்பனை மிகக் குறைவாக இருக்கிறது. கார்கள், இரு சக்கர வாகனங்களின் விற்பனை மிக அதிகமாக இருக்கிறது. சரக்கு வாகனங்களால் செலவாகும் பெட்ரோலியப் பொருள்களைவிட, மிக அதிகமாக பெட்ரோல் டீசல் கார்களுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கும்தான் பெட்ரோலியப் பொருள்கள் செலவாகின்றன.

இந்தியாவில் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நகரச் சாலைகளின் 41 விழுக்காட்டை கார், பைக் நிறுத்துமிடம் ஆக்கிரமித்துக் கொள்கிறது எனத் தெரியவந்துள்ளது. நகரங்களில் பாதிக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்த வீட்டுக்குள் இடமில்லாததால் தெருவை ஆக்கிரமித்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. பெருநகரங்களில் வாகனங்கள் சிக்னலுக்காகக் காத்திருக்கும்போது வீணாகும் பெட்ரோல் அளவு, தில்லியில் மட்டும் ஆண்டுக்கு 30 லட்சம் லிட்டர் என்று மதிப்பிடப்படுகிறது. இதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஒருசேர இழப்புதான்.

சீனாவில், ஷாங்காய் நகரில் ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கார் உரிமம் (லைசென்ஸ் பிளேட்) ஏலம் விடப்படுகிறது. ஒரு கார் லைசென்ஸ்பெற குறைந்தது ரூ.2.75 லட்சம் ஆகிறது. அதாவது, ஒரு காரின் விலை! ஆகவே, கார்கள் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து, சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஷாங்காய் நகரில் சைக்கிள் ஓட்டுவோர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு அரசே சில நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் சைக்கிள்கள் நூற்றுக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்கான அடையாள அட்டையைக் கணினியில் தேய்த்துவிட்டு சைக்கிள்களை எடுத்துச்சென்று, தங்கள் பணிமுடிந்தவுடன், வேறு ரயில்நிலையமாக இருந்தாலும்கூட, அங்கே நிறுத்திவிட்டுச் சென்றுவிடலாம்.

இப்போது இந்தியாவில் புனே நகரம் (ஒரு காலத்தில் சைக்கிள் நகரம் என்ற பெயர் பெற்ற ஊர்) தற்போதைய வாகன நெரிசலைத் தாங்கமுடியாமல், மீண்டும் தனது பழம்பெருமையை நிலைநாட்டும் நடவடிக்கையாக, 20,000 சைக்கிள்களை சாலைகளில் இறக்கிவிட்டு, குறைந்த வாடகையில் மக்கள் பயன்படுத்தும்படி ஏற்பாடுகள் செய்து வருகிறது. சிங்கப்பூரிலும் சீனாவில் இருப்பது போல கார் உரிமம் பெறக் கட்டணம் உண்டு. அந்த நகரின் முக்கிய வீதிகளில் சொந்த வாகனங்களில் பயணம் செய்ய மிக அதிகமான சுங்கக் கட்டணம் வீதிக்கு வீதி வசூலிக்கப்படுகிறது. மிகக் குறைந்த பயணக் கட்டணத்தில் எல்லா வசதிகளுடனும் கூடிய பொதுப் போக்குவரத்து உலகின் பல நாடுகளிலும் இயக்கப்படுவது தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகத்தான்.

ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் கூட கோட்டும் சூட்டும் அணிந்து சைக்கிளில் பயணிப்பவர்கள் பலர். அதை ஒருவரும் கெüரவக் குறைவாகக் கருதுவதில்லை. அதற்குச் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையில் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்கிற பொறுப்பும்தான் காரணம்.

பல நாடுகள் பெட்ரோலிய சிக்கனத்தைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் மக்களின் மோட்டார் வாகன மோகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. அரசு சார்பில் போதுமான அளவு பொதுப் போக்குவரத்தை குறைந்த கட்டணத்தில் இயக்குகிறார்கள். நாமோ அதைப் பின்பற்றாமல் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் விசித்திரத்திலும் விசித்திரம்.

தரமான பேருந்துகள் கிடையாது. முறையாக எல்லா பகுதிகளையும் இணைக்கும் "மெட்ரோ' வசதி கிடையாது. அப்படியே இருந்தாலும் அதிகமான கட்டணம். சொகுசுப் பேருந்து, விரைவுப் பேருந்து என்று காரணம் கூறி கட்டணங்களை உயர்த்தி, போக்குவரத்துத் துறை மக்களின் கோபத்தையும் சாபத்தையும் வாங்கிக் கொள்கிறதே தவிர பொதுமக்களின் நலனுக்காக வாகனங்கள் இயக்கப்படுவதில்லை. தொலைதூரப் பயணத்துக்கான விரைவுப் பேருந்துகளும் தரமற்றவையாக இயக்கப்பட்டு மறைமுகமாக தனியார் "ஆம்னி' பஸ் உரிமையாளர்களுக்கு உதவி செய்வதில்தான் கருத்தாய் இருக்கின்றன.

முறையான பொதுப் போக்குவரத்து இல்லாமை ஒரு குறை என்றால், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறோம் என்ற பெயரில், வங்கிக் கடன்களை வாரி வழங்கி தனியார் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்குத் துணைபோவது அரசின் இன்னொரு மாபெரும் மோசடி. நடுத்தர வர்க்கத்தினரைக் கடன்காரர்களாக்கி நடுத்தெருவில் நிற்க வைத்திருப்பதுதான் மிச்சம். மோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகரித்திருப்பதால் யாருக்கு லாபம்? கடன் கொடுத்த தனியார் வங்கிகளுக்கும் வாகன உற்பத்தியாளர்களுக்கும் தானே தவிர, பெட்ரோலியப் பொருள்களுக்கு அந்நிய செலாவணியை விரயமாக்கும் அரசுக்கோ, வாங்கும் சம்பளத்தில் கணிசமான பகுதியை வட்டியாகவும் தவணையாகவும் பெட்ரோலுக்காகவும் செலவிடும் பொதுமக்களுக்கோ என்ன லாபம்?

இனியும்கூட, கார்கள், இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டை அரசு கட்டுப்படுத்த வேண்டாமா? கார்கள் வைத்திருக்க வேண்டுமானால், அவர்களுக்கு நிபந்தனைகளையும், அவர்களுக்கான பெட்ரோல் விலையையும் கூடுதலாக நிர்ணயிக்க வேண்டாமா? வரம்பில்லாமல் வாகனங்களுக்குக் கடன் வழங்குவது தடுக்கப்பட வேண்டாமா? எல்லாவற்றுக்கும் மேலாக, நஷ்டமானாலும் பரவாயில்லை என்று பொதுப் போக்குவரத்துத் துறையில் குறைந்த கட்டணத்தில் கூடுதல் வாகனங்கள் மக்களின் தேவைக்கு ஏற்ப இயக்கப்பட வேண்டாமா?

நன்றி : தினமணி



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 11:33 am

சைக்கிள் திரும்பட்டும்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Sep 14, 2010 12:26 pm

நான் மிதிவண்டியில் அலுவலகம சென்ற வருகிறேன் என்பதை அனைவருக்கும் பெருமையுடன் தெரியப்படுத்த விழைகிறேன்!!!!!
புன்னகைபுன்னகைபுன்னகை



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக