புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உச்சினி மாகாளியம்மன் I_vote_lcapஉச்சினி மாகாளியம்மன் I_voting_barஉச்சினி மாகாளியம்மன் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
உச்சினி மாகாளியம்மன் I_vote_lcapஉச்சினி மாகாளியம்மன் I_voting_barஉச்சினி மாகாளியம்மன் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
உச்சினி மாகாளியம்மன் I_vote_lcapஉச்சினி மாகாளியம்மன் I_voting_barஉச்சினி மாகாளியம்மன் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உச்சினி மாகாளியம்மன் I_vote_lcapஉச்சினி மாகாளியம்மன் I_voting_barஉச்சினி மாகாளியம்மன் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உச்சினி மாகாளியம்மன் I_vote_lcapஉச்சினி மாகாளியம்மன் I_voting_barஉச்சினி மாகாளியம்மன் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
உச்சினி மாகாளியம்மன் I_vote_lcapஉச்சினி மாகாளியம்மன் I_voting_barஉச்சினி மாகாளியம்மன் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உச்சினி மாகாளியம்மன் I_vote_lcapஉச்சினி மாகாளியம்மன் I_voting_barஉச்சினி மாகாளியம்மன் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உச்சினி மாகாளியம்மன் I_vote_lcapஉச்சினி மாகாளியம்மன் I_voting_barஉச்சினி மாகாளியம்மன் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உச்சினி மாகாளியம்மன் I_vote_lcapஉச்சினி மாகாளியம்மன் I_voting_barஉச்சினி மாகாளியம்மன் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உச்சினி மாகாளியம்மன் I_vote_lcapஉச்சினி மாகாளியம்மன் I_voting_barஉச்சினி மாகாளியம்மன் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்சினி மாகாளியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 1:12 pm

இரண்யனுக்குத் தன்னைத் தவிர வேறு யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்ற எண்ணம் மேலோங்கியது. அது 'தானே கடவுள்' என்ற நிலை வரை சென்றது. அந்த மனப்பான்மைக்கு அவன் மகன் பிரகலாதன் எதிராக இருந்தான். இரண்யனின் அழிவு நெருங்கியதும் நரசிம்ம அவதாரமாக வடிவெடுத்து மகாவிஷ்ணு இரண்யனை அழித்தான். அவ்வாறு வதம் செய்யும் போது, நரசிம்மன் இரண்யனின் தலையில் ஓங்கி அடிக்க அங்கிருந்து ரத்தம் பீறிட்டு அடித்தது. அந்த ரத்த வெள்ளத்தில் தோன்றியவள் உச்சினி மாகாளி. உச்சினி மாகாளியை உத்தர மாகாளி, வடபத்திர காளி என்று பல பெயர்களைக் கொண்டு அழைப்பர்.

விக்கிரமாதித்தன் என்ற அரசன் இருபத்தியொரு வாயில்கள் கொண்ட கோயில் ஒன்றைக் கட்டி வைத்தான். அந்தக் கோயிலில் வீற்றிருந்து மக்களுக்கு அருள் புரிந்து வந்தாள் உச்சினி மாகாளி. உலக வாழ்க்கையில் வெறுப்புற்ற விக்கிரமாதித்தன் தன் அரச வாழ்க்கையைத் துறந்து எல்லாப் பொருள்களையும் கோயிலுள் வைத்து விட்டுத் துறவறம் சென்று விட்டான். மக்கள் தங்களுக்குத் தலைமையில்லாமல் தவித்தனர். அது முதற்கொண்டு பனிரெண்டு ஆண்டுகளுக்கு நாட்டில் மகா பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் ஒரு வேளை உணவுக்கும் சிரமப்பட்டு வேற்று நாட்டை நோக்கிக் குடிபெயர்ந்து போயினர். உச்சினி மாகாளியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனக்கு விளக்கேற்றிப் பூசை செய்யவும் ஆள் இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறதே என்று எண்ணினாள்.

சந்தன வாழ்நம்பி என்பவன் அப்போது உச்சினி மாகாளி அம்மன் கோயிலுக்கு விளக்கேற்றிப் பூசை செய்து வந்தான். அவனை விட்டால் ஆள் இல்லை என்று எண்ணிய உச்சினி மாகாளி அவன் தொழிலைத் தொடருமாறு சொல்லி, ஒரு வேளைக்கு ஒரு பொன் என்று தினமும் மூன்று பொன்களைக் கொடுத்து அவனைத் தக்க வைத்துக் கொண்டாள். அவனும் அதை ஏற்றுக் கொண்டு உச்சினி மாகாளிக்கு மூன்று வேளையும் தவறாமல் பூசை செய்து வந்தான்.

சந்தனவாழ் நம்பிக்கு ஏழு பெண்மக்கள் இருந்தனர். அவர்களுக்குத் திருமண வயது தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. அவர்களுக்கு மணம் முடிக்க வசதியற்று சந்தன வாழ் நம்பி மனம் வருந்தினான். தன் கஷ்டத்தை மாகாளியிடம் சொல்லி அதைத் தீர்த்து வைக்க மனமுருகி வேண்டினான். ஏழு பெண்மக்களும் திருமண பந்தமின்றித் தவிப்பதைக் கேள்வியுற்ற காளி, தன்னிடம் அரசன் வைத்துவிட்டுச் சென்ற பொருள்களுள் ஒரு பெட்டியை எடுத்து சந்தனவாழ் நம்பியிடம் கொடுத்தாள். அதைப் பெற்றுக் கொண்ட நம்பி மகிழ்ந்து மாகாளியைப் போற்றினான். பிறகு தன் மகள்களுக்கு மிகவும் சிறப்பாகத் திருமணத்தை நடத்தி முடித்தான்.

அந்தக் காலத்தில் அப் பகுதியை ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தனர். பஞ்சம் தலைவிரித்தாடுகின்ற இந்தக் காலத்தில் இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்யும் இவன் யார் என்று சந்தனவாழ் நம்பியைப் பிடித்தனர். " இவ்வளவு பொருள் உனக்கு ஏது? எங்கு கொள்ளையடித்தாய்? புதையல் ஏதாவது கிடைத்ததா?" என்று கேட்டு நம்பியைச் சித்திரவதை செய்தனர். அவன் அவர்களுக்கு எந்த விதமான பதிலையும் சொல்லவில்லை. ஆங்கிலேயர்களின் வதைகளைத் தாங்க முடியாத நம்பி கடைசியாக, "ஐயா, நான் கொள்ளையும் அடிக்கவில்லை, புதையலும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் அன்றாடம் பூஜித்து வரும் உச்சினிமாகாளி அம்மன்தான் கொடுத்தாள்" என்று சொன்னான். அவன் சொல்வதை நம்பவில்லை. மீண்டும் வதை செய்தனர். மீண்டும் மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தான். ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று எண்ணிய வெள்ளையர்கள் தங்களுக்குக் கீழ் இருக்கும் அப் பகுதி பாளையக்காரர்களை அழைத்துக் கொண்டு போய்க் காளியின் கோயிலை அடைந்தனர். கோயில் கதவு பூட்டியிருந்தது. அக் கதவை இடித்துத் தள்ளிக் கோயிலையும் இடித்துத் தள்ளி உள்ளே சென்றனர். அங்கு ஏராளமான பொருள்கள் இருந்தன. அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு கோயிலைத் தரைமட்டம் ஆக்கினார்கள்.

அதனால் கோபம் கொண்ட காளி, ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்த பாளையங்களை அழித்தாள். அப்போதும் அவளது கோபம் அடங்கவில்லை ஆங்கிலேயர் ஆளும் நாட்டையே அழித்தொழிக்க வேண்டும் என்று சிவனை நோக்கித் தவம் இருந்து வரம் பெற்றாள். அம்மை நோய், காலரா போன்ற கொள்ளை நோய்களை ஆங்கிலேயர் ஆளும் நாட்டின் மீது ஏவினாள். மக்கள் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுக் கூட்டம் கூட்டமாக இறந்து போயினர். இதற்கான காரணம் விளங்காமல் ஆங்கிலேயர் விழித்தனர். கோயிலை இடித்ததால் ஒருவாறாக அம்மன் கோபம்தான் என்று அறிந்து அம்மனுக்குக் கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர் மக்கள். அப்போது மனம் மகிழ்ந்த அம்மன் அவர்களது பூசைகளை ஏற்றுக் கொண்டு தென் பகுதியிலேயே தங்கி அம் மக்களுக்கு அருள் அளித்து வருகிறாள். இந்த அம்மனுக்குக் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக