புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எது நல்ல சாவு? Poll_c10எது நல்ல சாவு? Poll_m10எது நல்ல சாவு? Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
எது நல்ல சாவு? Poll_c10எது நல்ல சாவு? Poll_m10எது நல்ல சாவு? Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
எது நல்ல சாவு? Poll_c10எது நல்ல சாவு? Poll_m10எது நல்ல சாவு? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
எது நல்ல சாவு? Poll_c10எது நல்ல சாவு? Poll_m10எது நல்ல சாவு? Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
எது நல்ல சாவு? Poll_c10எது நல்ல சாவு? Poll_m10எது நல்ல சாவு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது நல்ல சாவு? Poll_c10எது நல்ல சாவு? Poll_m10எது நல்ல சாவு? Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
எது நல்ல சாவு? Poll_c10எது நல்ல சாவு? Poll_m10எது நல்ல சாவு? Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
எது நல்ல சாவு? Poll_c10எது நல்ல சாவு? Poll_m10எது நல்ல சாவு? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
எது நல்ல சாவு? Poll_c10எது நல்ல சாவு? Poll_m10எது நல்ல சாவு? Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
எது நல்ல சாவு? Poll_c10எது நல்ல சாவு? Poll_m10எது நல்ல சாவு? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நல்ல சாவு?


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 6:50 pm

எது நல்ல சாவு? Death


மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை மரணம் முடித்து வைக்கிறது. மரண நிகழ்வு ஞானத்தைப் போதிக்கும் வல்லமைக்கொண்டது. அரசனாக வாழ்ந்த சித்தார்த்தன் புத்தனாக மாற்றமடைய காரணம்… ’இந்த உலகில் யாரும்,எதுவும் நிலையல்ல’ என்கிற உண்மையை, சாலையில் எடுத்துச்செல்லப்பட்ட ஒரு சாதராண மரண உடல் தான், தொடங்கி வைத்தது. ஆழ்மனம் அழுத்தமாக உணர்ந்துவிட்ட அந்த உண்மைக்கு பின் அவரால் எதன் மீதும் பற்றுக்கொள்ள இயலவில்லை. பற்றுகளை துறப்பதே துன்பத்தில் இருந்து விடுதலை என உபதேசித்தார்.
.
ஒரு மனிதனின் மரணத்தைக் காணும் பிற மனிதர்கள் இவரைப் போல் நமது பயணமும், எந்த நொடியிலும் நின்றுபோகலாம் என்ற உள் உணர்வால் உந்தப்படுதல் இயற்கை. இவ்வுலகில் நிலையாமைதான் நிலையானது என்ற புரிதலை கற்பிக்கும் இடம் மரண நிகழ்ந்த வீடு. அந்தவீட்டிற்குச் சென்று இறந்துவிட்ட மனிதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்வோர் மனதினுள் உணர வேண்டியது ’உங்கள் பயணம் முடிந்ததுபோல…எனது பயணமும் முடியும் என்பதை உணருகிறேன்,’என்பதுதான். ஆனால் எதார்த்தத்தில் மரணவீட்டிற்கு வரும் பலர் மிக செயற்கையாக நடந்துகொள்வர். தனக்கும் மரணத்துக்கும் சம்பந்தம் இல்லாதவர் போல தைரியம் கொண்டிருப்பர். மரணம் தழுவாத மனிதன் இவ்வுலகில் இல்லை.இருக்கமுடியாது.
.
நம் சமுதாயத்தில் காலங்காலமாக பல வழக்குச்சொற்கள் உயிரோடு தொடருகின்றன.அவை மிக பொருள் பொதிந்தவை. அப்படி ஒரு சொல் நல்ல சாவு. ’அவருக்கு வந்தது நல்ல சாவு’ என்பர். மரணிப்பதில் நல்ல சாவு என்று ஒரு வகை இருக்கிறது என்றால் … அது மறைபொருளாக கூறவருவது என்ன? சமூகத்தில் கெட்ட சாவு என ஒன்று இருப்பதைத் தானே…
.
அதிகாரம், பொருளாதார ஆளுமை இப்படி எதுவும் இல்லாமல்… சமூகத்தில் நலிந்தநிலையில் வெறும் உயிர்வளர்க்க போராடி வாழும் மனிதனிடம் அதிகாரம், பொருளாதார ஆளுமைமிக்க ஒருவன் அநியாயமான வகையில் நலிந்த மனிதனை துன்புறுத்தும் போது…அவனை எவ்வகையிலும் எதிர்க்க இயலாத நிலையில்…பாதிக்கப்பட்ட மனவலியோடு மற்றவர் காதில் விழாவண்ணம் சொல்வான் ”அவனுக்கு நல்ல சாவு வராது. அடிப்பட்டுதான் சாவான். நெஞ்சு வெடிச்சி சாவான்.’’ இப்படிச் செத்தவர்களைப் பார்த்து சமூகம் காலங்காலமாக சொல்கிறது…”என்ன பாவம் செஞ்சாரோ…அவரு வூட்டுல கெட்ட சாவா விழுது’’ ஆக மரணம் நிகழும் விதம் அந்த மனிதன் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்யும் ஃபுரகிரஸ் ரிப்போர்ட் எனச் சுருக்கமாகச் சொல்லாம்.
.
நல்ல சாவு என்பது துன்பமில்லாத, தூக்கத்தில் நிகழும் மறைவுகளை முதல் நிலையாக மக்கள் புகழ்வர். தனது மறைவுக்கு முன்பாக அனிச்சைச்செயல் போல சில குடும்பக் கடமைகளுக்கு விழிகாட்டுதல்களை இறந்தவர் வழங்கியிருப்பதை எடுத்து கூறுவர். உடல் விகாரம் அடையவில்லை. தூங்குவது மாதிரியே இருந்தது என்பர்… காலங்காலமாக மக்களிடம் வழக்கில் இருக்கும் இத்தகைய நம்பிக்கைகளை உறுதிபடுத்தி சாதுகள் சிலர் என்னிடம் பகிர்ந்ததுண்டு.
.
மனிதனின் பிறப்பு என்பது இவ்வுலகில் முதல் நுழைவு. பூமியில் தனது முதல் சுவாசத்தை இழுத்ததும், அவனது முதல் செயல் அழுகைதான். அந்த அழுகை கேட்கும் வரை மருத்துவர், பதற்றத்தோடு இருப்பர். அழுததும் நிம்மதி கொள்வர். தாயும், உறவும் மகிழ்வர். மனிதனின் முதல் அழுகையில் மகிழ்வர், மற்றவர்.ஆனால் இவ்வுலகில் இறுதிமூச்சை விடுகிறபோது அவன் சிரிக்கிறவனாகவும், மற்றவர் அழுகிறவராகவும் அமைவதே பயணம் முழுமைப் பெற்றதற்கு அடையாளம்.
.
மரணம் நிகழ்கிற எல்லார் வீடுகளிலும் மற்றவர் அழத்தானே செய்கிறார்கள் எனத் தோன்றும். ஆனால் துக்கவிசாரணையில் தான் தெரியவரும் மறைந்தவர் மனக்குறையோடுதான் மறைந்தார் என்பது… பூர்த்தியாகாத பலபேராசைகளோடு, வாசலுக்கு எமன் வந்தபிறகும் போராடியதைச்சொல்வர்.பொறுமையிழந்த எமனோ கடைசியில் பிடிவாதமாக கைகால்களை கட்டிபோட்டு தூக்கிச்சென்ற கதையைச்சொல்வர். அதாவது பூமிக்கு வரும் போது அழுததைப்போலவே போகும் போதும் அழுதுகொண்டே சென்றிருப்பார்.
.
அரிதாய் சில வீடுகளில் தான் சொல்வர்… ”செத்தவருக்கு எந்த மனக்குறையும் இல்லை. ’எனக்கு எல்லாக் கடமைகளும் முடிஞ்சிடுச்சி. எமன் எப்ப வாராருன்னு காத்திகிட்டு இருக்கேன்..’ எனச்சொல்லியபடி இருப்பாரு. அதுமாதிரியே யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஓரே நிமிஷம்தான். களைப்பா இருக்கு தண்ணீ கொடுன்னாரு. தண்ணீ எடுத்துட்டு வந்துப்பார்த்தா தலைசாய்ஞ்சிடுச்சி என்பதாக விளக்குவர்.ஆக மரணம் நிகழ்வதில் மறைந்திருக்கிறது பல சூட்சமங்கள்.




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக