புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Poll_c10மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Poll_m10மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Poll_c10 
30 Posts - 88%
heezulia
மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Poll_c10மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Poll_m10மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Poll_c10மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Poll_m10மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 8:50 pm

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Rally2




பிற்பகல் மணி 2.42:
சோகோவிலிருந்து மெர்டேகா சதுக்கம் நோக்கி வரும் கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பாய்ச்சுகிறார்கள். பீரங்கி வாகனங்கள் நீரைப் பீய்ச்சி அடிக்கின்றன.

அதே நேரத்தில் பேங் ரக்யாட் அருகிலும் கூட்டத்தினரைக் கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகளைத் தொடர்ந்து வெடித்து வருகிறார்கள்.

2.41: சோகோ கூட்டம் மெர்டேகா சதுக்கத்தை நோக்கி நகர்கிறது. ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் சற்றுத் தள்ளி அவர்களின் வரவை எதிர்நோக்கி கூட்டரசு சேமப் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகள், நீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் ஆயத்தமாக நின்றுகொண்டிருக்கின்றனர்.

2.40: பேங்க் ரக்யாட் சுற்றுவட்டத்தில் திரண்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை விடாமல் வெடிக்கின்றனர்.

அக்கூட்டத்தினர், சோகா செல்வதை போலீசார் தடுத்ததால் அவர்கள் பாடாங் மெர்போக்கை நோக்கிச் செல்லத் தலைப்பட்டனர்.

2.39: சோகாவிற்கும் பெர்தாமா கொம்ப்ளெக்ஸுக்கும் இடையில் கூட்டத்தினர், குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜிஎம்ஐ தலைவர் அவர்களிடம் பேசினார். இசா சட்டம் அகற்றப்பட வேண்டும், அதன்கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

2.30: சோகாவுக்கு எதிரில் டாங் வாங்கி சந்திப்பில் 10,000 பேர் கூடியிருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.மேலும் பலர், போலீஸ் தடுப்பை மீறி அந்த இடம் நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

2.20:மஸ்ஜித் நெகாரா கூட்டமும் மெர்டேகா சதுக்கக் கூட்டமும் சோகோ நோக்கிச் செல்வதை ஜாலான் ராஜா/ஜாலான் துன் பேராக் சந்திப்பில் போலீஸ் தடுக்கிறது.

கூட்டம் ஜாலான் பார்லிமென் -டில் உள்ள பாடாங் மெர்போக் நோக்கிச் செல்ல முடிவு செய்கிறது.

பேங்க் நெகாரா அருகில் ஜாலான் கூச்சிங் மேம்பாலத்திலும் பெரும் கூட்டமொன்று திரண்டிருக்கிறது.

2.14: சில நூறு பேர் சோகோவிலிருந்து மெர்டேகா சதுக்கத்தை நோக்கி அணிவகுத்துச் செல்ல அவர்களை விரட்டிக் கொண்டு வருகிறது போலீஸ்.

இதனிடையே சுமார் 200 பேர், மஸ்ஜித் ஜமெக்கிலிருந்து ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் வழியாக சோகா நோக்கிப் புறப்படுகின்றனர்.

சுவர்போல் அணிவகுத்து நிற்கும் கலகத் தடுப்புப் போலீசார் அவர்கள் முன்னேறிச் செல்வதைத் தடுக்கிறார்கள். கூட்டத்தைக் கலைக்க பீரங்கி வாகனங்கள் நீரைப் பீய்ச்சி அடிக்கின்றன.

2.12: இஸ்தானா நெகாராவில் போலீஸ் கெடுபிடி மிகுதியாக உள்ளது. எவரும் இஸ்தானாவை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. இஸ்தானாவுக்குப் பின்புறம் ஒரு சாலையில் கூடிய சிறிய கூட்டத்தையும் அவர்கள் கலைத்தனர்.

2.10:இசா ஆதரவுத் தரப்புகள் இஸ்தானா நோக்கி அணிவகுத்துச் செல்லும் எண்ணத்தைக் கைவிடுவதாக மலாய் அரசுசாரா அமைப்புகளின் சட்ட ஆலோசகர் முகமட் கைருல் அஸாம் அப்துல் அசீஸ் கூறினார். அதற்குப் பதிலாக, மகஜர் வழங்க சிறு குழு ஒன்றை வாகனங்களில் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். .

2.01: மஸ்ஜிட் நெகாராவிலிருந்து வெளிப்பட்ட சுமார் 2,000 பேர், இஸ்தானா நெகாரா செல்லுமுன்னர் டாட்டாரான் மெர்டேகாவுக்கு அணிவகுத்துச் செல்ல முற்பட்டனர். அவர்களில் பலரைப் போலீசார் கைது செய்கிறார்கள்.

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Rally11

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 8:52 pm

2.55 பதவி இறக்கப்பட்ட பேராக் மந்திரி புசார் முகமட் நிஸார் ஜமாலுடின் மெர்டேக்கா சதுக்கம் வந்துள்ளார்.

பக்காத்தான் உயர்த் தலைவர்கள், இஸ்தானா நெகாரா நோக்கி அணிவகுத்துச் செல்லுமுன்னர் மஸ்ஜித் நெகாராவில் ஒன்றுகூடுவர் என்றவர் தெரிவித்தார்.

2.58: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலால் சோகோ கூட்டம் கலைந்தது.சிறு எண்ணிகையினர் மட்டும் கொலிசியம் சினிமா அருகில் மீண்டும் ஒன்று கூடுகின்றனர்.அவர்களை, நீரைப் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களும் கண்ணீர் புகையும் விரட்டி அடிக்கின்றன.

3.06 இஸ்தானா நெகாராவில் அமைதி நிலவுகிறது. போலீசாரும் ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Rally-21

.

3.07: அன்வார் இப்ராகிம் (பிகேஆர்) லிம் கிட் சியாங் (ஜசெக), அப்துல் ஹாடி அவாங் (பாஸ் ), சாலாஹுடின் ஆயுப் (பாஸ்), தியான் சுவா (பிகேஆர்) முதலிய பக்காத்தானின் உயர்த் தலைவர்கள் கண்ணீர் புகைக்கு அஞ்சி பெர்தாமா கொம்ப்ளெக்சில் புகுந்தனர்.

3.08: எங்கு கூட்டம் தென்பட்டாலும் அங்கெல்லாம் கலகத் தடுப்புப் போலீசார்,கண்ணீர் புகைக்குண்டுகளைப் பாய்ச்சுகின்றனர்.

“இசா ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம்”, என்று யாடி அலி, 45, ஏஎப்பி-யிடம் கூறினார். சோகோ கடைத்தொகுதிக்கு வெளியில் பெண்களும் குழந்தைகளுமாகக் கூடி நின்ற சுமார் 100 பேரில் அவரும் ஒருவர். “கைது செய்யப்படுவது பற்றி நாங்கள் கலங்கவில்லை. இசா, ஒரு கொடிய சட்டம், நாங்கள் நீதி கேட்டுப் போராடுகிறோம்”, என்றவர் சொன்னார்.

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Isar1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 8:52 pm

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Isar2
3.20: பிகேஆர் உதவித் தலைவர் ஆர்.சிவராசா கைது செய்யப்படுகிறார்.

இதனிடையே, பாசார் செனி, மஸ்ஜிட் நெகாரா, மஸ்ஜிட் ஜாமெய்க் சோகோ முதலிய இடங்களில் கலைந்த கூட்டம் மீண்டும் ஒன்றுசேரத் தொடங்குகிறது.

3.25:ஜாலான் ராஜா லாவுட்டிலிருந்து சோகோவை நோக்கிப் போலீசார், கண்ணீர் புகைக்குண்டுகளைத் தொடர்ந்து பாய்ச்சிக்கொண்டிருக்கிறார்கள்.

கூட்டத்தில் ஒரு பகுதியினர், ஜாலான் ராஜா லாவுட்டிலிருக்கும் பாஸ் தலைமையகம் நோக்கிச் செல்கிறார்கள்.

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Isar4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 8:53 pm

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Isar6

இஸ்தானா நெகாராவிலிருந்து ஒரு நீர்-பீரங்கி வாகனம்,பதற்றம் மிகுந்த ஒரு பகுதியை நோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது.

3.27:அன்வார் இப்ராகிம், லிம் கிட் சியாங், அப்துல் ஹாடி அவாங் ஆகியோரும் பாஸ் தலைமையகம் நோக்கிச் செல்கின்றனர்.

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Isar5

அந்தத் தலைமையகக் கட்டிடத்துக்குமுன் ஈராயிரத்துக்கு மேற்பட்டோர் கூடிநின்று கூட்டரசு சேமப்படையினர் அதனை நெருங்க விடாமல் தடுக்கின்றனர்.

3.29:கடுமையான போலீஸ் கட்டுக்காவலையும் மீறி, இஸ்தானா நெகாரா சென்றடையும் இசா-எதிர்ப்பாளர்கள் இருவர் போலீசால் கைது செய்யப்படுகின்றனர்.

3.20:சோகோவுக்கு அருகில் உள்ள பண்டார் ராயா எல்ஆர்டி நிலையம் மூடப்படுகிறது. மஸ்ஜிட் ஜமெக் நிலயமும் மூடப்பட்டுள்ளது.

3.30:பாஸ் தலைமையகத்தில் கூடியுள்ள கூட்டத்தில், அன்வார் இப்ராகிம் உரையாற்றுகின்றார்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 8:54 pm

சிவா இசா என்றால் என்ன? இதற்கு ஏன் இவ்வளவு கூட்டம்?



மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 8:55 pm

இசா ஆதரவு எதிர்ப்புப் பேரணிகள்: நகர மையத்தில் 20,000 பேர் கூடியுள்ளனர். போலீசார் தொடர்ந்து கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பிற்பகல் மணி 3.53 : பாஸ் தலைமையகத்திற்கு முன்பு கூடிய ஐயாயிரம் பேரைக் கலைப்பதற்கு போலீசார், கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்துள்ளனர், தண்ணீரையும் பாய்ச்சியுள்ளனர்.

மணி 3.45 : அமைதியாக கலைந்து செல்லுமாறு பக்காத்தான் தலைவர்கள் கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு முன்னர் பி கே ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், டி ஏ பி தலைவர் லிம் கிட் சியாங் , பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் உரையாற்றினர்.

பின்னர் அவர்கள் பாஸ் தலைமையகக் கட்டிடத்திற்குள் சென்றனர். அங்கு அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணி 3.38 : இசா சட்டத்தை வைத்துருக்குமாறு கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை அரண்மனையிடம் சமர்பிப்பதற்காக சென்று கொண்டிருந்த இசா ஆதரவு இயக்கத்தின் தலைவர் ரஹிமுடின் முகமட் ஹருண், ஜாலான் துன் சம்பந்தனில் பப்ளிக் பாங்க் கட்டிடத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டார்.

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Lim21-300x190



மணி 3.30 : அன்வார் இப்ராஹிம் பாஸ் தலைமையகத்தில் மக்களிடையே உரையாற்றினார்.

மணி 3.20 சோகோவை ஒட்டி அமைந்துள்ள பண்டார் ராயா எல் ஆர் டி நிலையம் மூடப்பட்டது. அதற்கு முன்னர் மஸ்ஜித் ஜமெய்க் நிலையம் மூடப்பட்டது.

மணி 3.29 : கடுமையான போலீஸ் காவலையும் மீறி இஸ்தானா நெகாராவை அடைய முயன்ற இரண்டு இசா எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மணி 3.27 : பி கே ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், டி ஏ பி தலைவர் லிம் கிட் சியாங் , பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் பாஸ் தலைமையகத்திற்கு செல்கின்றனர்.

பாஸ் தலைமையகத்தில் 2,000 க்கும் அதிகமான மக்கள் கூடியுள்ளனர். சாலைகளில் அவர்கள் தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதனால் கலகத் தடுப்புப் போலீசார் அருகில் செல்ல முடியவில்லை.

மணி 3.25 : போலீசார் இன்னும் ஜாலான் ராஜா லாவுட்டிலிருந்து சோகோவுக்கு அருகில் சௌக்கிட் பகுதியை நோக்கி கண்ணீர்புகைக் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள பாஸ் தலைமையகத்தை நோக்கி செல்கின்றனர்.

இதனிடையே தண்ணீரைப் பாய்ச்சும் வாகனம் ஒன்று இஸ்தானா நெகாராவிலிருந்து பதற்றமான பகுதிக்கு அனுப்பப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 8:56 pm

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Rally-top-lead1

3.35: பசார் செனியில், பாஸ் இளைஞர் செயலவை உறுப்பினர் முகம்ட் சானி அம்சான், போலீஸ் அடக்குமுறை கட்டவிழ்த்துவிட்டபோதிலும் ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கிறார்.

இஸ்தானா நெகாராவுக்கு அணிவகுத்துச் செல்ல முடியவில்லை என்றாலும் இன்று பின்னேரம் ஒரு பேராளர் குழு, மகஜரைக் கொண்டுசென்று மாமன்னரிடம் வழங்கும் என்றாரவர்.

“சுமார் 80,000 பேர் இசாவுக்கு எதிராக திரண்டு வந்து நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது நமக்கு ஒரு வெற்றிதான்”, என்றாரவர்.

போலீஸ் அதிகாரிகள் பலர், கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 8:56 pm

3.38: இசா சட்டம் தேவைதான் என்பதை வலியுறுத்தும் மகஜரை அரண்மனையில் வழங்குவதற்குச் சென்றுகொண்டிருக்கும் இசா-ஆதரவு தரப்பின் தலைவர் ரஹிமுடின் முகமட் ஹருன், ஜாலான் துன் சம்பந்தனில் பப்ளிக் பேங்க் அருகில் போலீசால் தடுத்து நிறுத்தப்படுகிறார்.

3.45: கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு பக்காத்தான் தலைவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்,

முன்னதாக, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் முதலியோர் கூட்டத்தினரைடையே சிறிது நேரம் பேசினார்கள்.

பாஸ் தலைமையகக் கட்டிடத்தில் உள்ள பக்காத்தான் தலைவர்கள் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3.58:பாஸ் தலைமையகத்துக்கு அருகில் கூடியிருப்போரைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பாய்ச்சுவதுடன் பீரங்கிகளிலிருந்து நீரையும் பீய்ச்சி அடிக்கின்றனர்.

4.00: புக்கிட் அமான் அருகில் 50-70 பேர் கைது செய்யப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். பாஸ் தலைமையகத்துக்குமுன் கூடியிருப்பவர்களையும் போலீஸ் கைது செய்கிறது. இதுவரை பத்துப் பேர் கைது செய்யப்பட்டிருக்கிறர்கள்.

4.10:பாஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜிஎம்ஐ தலைவர் சையட் இப்ராகிம், மாமன்னரிடம் மகஜர் வழங்க முடியவில்லை என்றாலும் பேரணி, ஒரு மகத்தான வெற்றிதான் என்றார்.

சுமார் 100,000 பேர் பேரணிக்குத் திரண்டு வந்ததாக அவர் சொன்னார்.ஆனால், 20,000 பேர் வந்திருக்கலாம் என்பது பார்வையாளர்களின் மதிப்பீடு.

அன்வார் இப்ராகிமும் செய்தியாளர்களிடம் பேசினர். மக்களின் விருப்பம் தெளிவாகத் தெரிகிறது-அவர்கள் இசாவை எதிர்க்கிறார்கள் என்றாரவர்.

4.30: மஸ்ஜிட் நெகாரா அருகில் சுமார் 100 பேர் காணப்படுகிறார்கள். சோகோ வட்டாரத்தில் இன்னும் சுமார் 10,000 பேர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.

அங்குள்ள கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்கின்றனர்.

பசார் செனி அருகில் அமைதி நிலவுகிறது.ஆனாலும், போலீசார் கண்காணிப்பு இன்னும் அங்கிருக்கிறது.


amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Aug 01, 2009 8:59 pm

அண்ணா போகிர போக்கைப் பார்த்தால் இனி இங்கு பாதுக்காப்பே இருக்காது...
பத்திரிகைகளைத் திறந்தாலே இந்த தகவல்கள் தான்..இந்த இலட்சனத்தில் isreal & palestian போரில் மூக்கை நுழைக்கின்றனர்!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2009 9:00 pm

போலிசார் மேற்கொண்ட சாலைத்தடுப்பு நடவடிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது!

மலேசியா:  மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன Protest2

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக