ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு

2 posters

Go down

பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Empty பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு

Post by கார்த்திக் Fri Sep 10, 2010 7:21 pm

2010 காமன்வெல்த் போட்டிகள் 'தேசத்தின் பெருமை' அல்லவா! அதனால் தேசத்தின் பெருமையைக் 'கெடுக்கும்' பிச்சைக்காரர்கள் போட்டிகள் நடக்கும் இடத்தில் திரிந்து போட்டியைக் காண வருகை(!) தருவோர்களிடம் கையை ஏந்தினால் 'தேசத்தின் பெருமை' -க்கு இழுக்கு ஏற்படும் அல்லவா?

இதையெல்லாம் மனதில் கொண்டு டெல்லி மாநில அரசு 'தேசப்பெருமை'-யைக் கட்டிக்காக்க டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு 'அடைக்கலம்' கொடுக்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போது, தேன் ஆப்பிரிக்க மைதானங்களுக்கு அருகில் இருக்கும் குடிசைப் பகுதிகளை அகற்றி அங்கிருப்போரை கால்பந்து காண வரும் ஐரோப்பிய மற்றும் பிற அயல்நாட்டு மேட்டுக் குடிகளின் கண்ணிலிருந்து மறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின.

சுதந்திரத்திற்குப் பிறகு லஞ்சமும், ஊழலும் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை நீக்கமற நிறைந்து வழியும் நாடுகள் திடீரென தாங்கள் வளர்ச்சிப்பாதையில் செல்வதான மாயையைக் கட்டமைக்க இது போன்ற உத்திகளைக் கையாள்வது வழக்கமாகி வருகிறது.

ஆனால் தென் ஆப்பிரிக்காவின் உண்மையான நெருக்கடி வேறு, ஆனால் நம் நாட்டின் பெருமையைக் கெடுக்கும் நெருக்கடிகளில் ஏதோ பிச்சைக்காரர்கள்தாம் பிரதான பங்கு வகிப்பதாக நினைப்பது ஐரோப்பிய மைய, மேட்டுக்குடி பார்வையாகும்.

காமன்வெல்த் போட்டிகளின் போது ஒளிரும் தலைநகரில் பிச்சைக்காரர்களின் இருப்பு தர்மசங்கடத்தை விளைவிக்கும் என்று டெல்லி மாநில அரசு நினைப்பதினால், அவர்களுக்கு பூங்காக்கள், திறந்த வெளி அமைப்புகளில் டெண்ட் அடித்துக் கொடுத்து தங்கவைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மேலும் தங்க இடம் கொடுத்தால் போதாது என்று அவர்களுக்கு வேளாவேளைக்கு உணவு வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் அவர்கள் திறந்தவெளியில் காலைக் கடன்களை கழித்துவிடக்கூடாது என்பதற்காக மொபைல் டாய்லெட் வசதியும் செய்யப்படவுள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை இவர்கள் வெளியே திரிய அனுமதியில்லை. அப்படி என்றால் அது சிறைதானே! ஆனால் சிறையாயிருந்தாலும் பரவாயில்லை இந்த நாடு பிச்சைக்காரர்களுக்கு ஒரு 10 நாட்களுக்காவது சோறுபோட முடிவெடுத்திருப்பது நல்ல செய்திதான்.

சரி! ஏன் இந்த திடீர் மனிதாபிமானம்? பிச்சைக்காரர்கள் மீது திடீர் கரிசனம்? பின்னணியில் பார்த்தால் வேறு வழியில்லாமல் விளைந்த கரிசனமாகத்தான் இது தெரிகிறது.

பிச்சைக்காரர்களை டெல்லியை விட்டே துரத்தத்தான் முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்று ஒரு செய்தி கூறுகிறது. அதாவது இவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவிடவே டெல்லி மாநில அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால் அந்த முயற்சி ஏனோ கைகூடவில்லை.

இதனையடுத்து தற்போது இந்த 'பெருந்தன்மையான' முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம் என்ற ஒன்று 'அனைவரும் சமம்' என்ற முதுமொழியில்தான் தன் அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுவதுண்டு. ஆனால் சமூகத்தில் பிச்சைக்காரர்கள், ஏழைகள், அழுக்கானவர்கள், தொழுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் மனநோயாளிகள் என்று சமம் இல்லாதவர்களும் இருக்கின்றனரே!

எனவே அனைவரும் சமம் என்ற முதுமொழியைக் காப்பாற்ற சமமற்றவர்களை இந்த 'சம' மனிதர்களிடமிருந்து மறைப்பதுதான் அதிகாரத்தின் வேலை. சம மனிதர்களின் சமத்துவத்தைக் காக்க சமமற்றவர்களை சமூகத்தின் பார்வையிலிருந்து அகற்றும் வேலை ஏறத்தாழ பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகான காலங்களிலிருந்தே ஐரோப்பிய நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம்தான். Democracy is (only) equality among equals என்ற கேலிக்கூற்றும் அப்போதிருந்தே இருப்பதுதான்.

அதனால் பிச்சைக்காரர்களுக்கு சோறு கிடைக்கிறது என்ற நன்மை வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அதற்குப் பின்னணியில் அதிகார மேட்டுக் குடிகளின் நல்லெண்ணம் இருப்பதாக நாம் ஒரு போதும் ஏமாந்து விடக்கூடாது.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Empty Re: பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு

Post by இந்திரஜித்தன் Fri Sep 10, 2010 10:19 pm

ஏழைக்குடிசையில் வாழ்பவன் கூட விருந்தினர் வரும்போது வீட்டைத்தூய்மையாய் வைத்து உபசரிப்பது பண்பாடு தானே.
?

இதை எல்லாம் குறை சொன்னால் எப்படி?
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு
» டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழா - டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்
» தலைமைச்செயலாளர், டி.ஜி.பி.யை டெல்லி அனுப்ப மாட்டோம்- மம்தா அரசு முடிவு
» பாதுகாப்பு நோயாளிகளுக்கா? மருத்துவர்களுக்கா? டெல்லி அரசு மருத்துவமனையில் அடியாட்கள் நியமனம்!
» கதிர்வீச்சு அளைவைக் குறிப்பிட்டே இனி செல்போன் விற்க வேண்டும்! - டெல்லி அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum