புதிய பதிவுகள்
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சுப்பையா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட தமிழ் கவிதையுலகின் சூரியன் பாரதியின் பிறந்தநாள் டிசம்பர் பதினொன்று. இளம் வயதில் அம்மாவின் பாசம் என்னவென்று தெரியாமல் அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்த அவருக்கு அப்பொழுது கணக்கு என்றால் பிணக்கு. இது வெகு காலத்துக்கு கல்விமுறையின் மீது வெறுப்பாகவே மாறியது. ஒரு சிறுவன் இளமையில் கல் என்று ஓயாமல் மனனம் செய்து சொல்லிக்கொண்டு இருந்த பொழுது ‘முதுமையில் மண்’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் இவர்.
அற்புதமான கவிதையாற்றல் பாரதி எனும் கலைவாணியை குறிக்கும் பட்டத்தை தந்தது. பாரதி சின்னப்பயல் என்று கவிதை பாட சொல்ல பார் அதி சின்னப்பயல் என எள்ளல் குறையாமல் பாடியது பாரதி தான்
தமிழ் எழுத்துலகில் கார்ட்டூன் என்பதை அறிமுகப்படுத்தியது பாரதியாரே. அதை முழுதாக சித்திர பாரதி என்கிற நூலில் பார்க்கலாம். இளம் வயதில் பாரதிக்கு ஒரு காதல் இருந்தது. அந்த பெண்ணை சாகுந்தலை என்று அடையாளமிட்டு குறிக்கிறார். தன் மகளுக்கு அதே பெயரை வைத்தார் அவர்.
மதுரை தமிழ் சங்கம் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது அவரின் கவிதை. அந்தக்கவிதை தான் ,’செந்தமிழ் நாடெனும் போதினிலே’. பண்டிதர்கள் கடத்திக்கொண்டு போன பைந்தமிழ் குழந்தையை கண்டுபிடித்துக்கொடுத்த காவல் நிலையமான பாரதியின் எளிய நடை அக்காலத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதை பண்டிதர்கள் எதிர்த்தார்கள். பாரதி ,”கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது !” என்று மட்டும் சொன்னார்
எக்கச்சக்க வறுமையிலும் குருவிக்கு தானியங்களை கொடுத்துவிட்டு சிரித்த நேசிப்பாளன். வாட்டிய பசியிலும் ,”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !” என்று பாடிய பெருங்கவிஞன் அவன். எல்லா உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்று நம்பிய அவர் புதுச்சேரியில் புயலில் பறவைகள் இறந்த பொழுது கனிவோடு அவற்றை அடக்கம் செய்தார்.
நாட்டை தட்டி எழுப்ப கவிதை எழுதிய அந்த சிந்துக்கு தந்தை எப்பொழுதும் தாலாட்டு மட்டும் பாடியதே இல்லை. நாடு உறங்க இது தருணமன்று என்கிற எண்ணமே காரணம். பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு துன்புறுகிறார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. கழுதை குட்டியை தூக்கி போட்டுகொண்டு மனைவியோடு கம்பீரமாக நடந்த பாரதியை ,”பைத்தியங்கள் உலவப்போகின்றன !” என்று ஊரார் சொன்ன பொழுது எழுப்பியது தான் ‘நிமிர்ந்த நன்னடை’ பாடல்
. ‘என் மகள் காசிக்கு ஓடிப்போய் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் !” என்று கடிதம் எழுதவேண்டும். அதைக்கேட்டு நான் பூரிக்க வேண்டும் ‘ என்று பாரதி எழுதினார்.
‘கடமை அறியோம் தொழில் அறியோம் !” என்று பறவையின் மனப்பான்மையிலும்,’தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றும் பாரதியால் தான் பாட முடியும்
வறுமையில் வாடிப்போன அவர் “பராசக்தி! இந்த உலகின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?
கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லையே. குழந்தைக்கு ஜுரம் வந்தது… வைத்தியனுக்குக் கொடுக்கப் பணம் இல்லை. குழப்பம், குழப்பம்; தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?” என்று புலம்பினார்.
பாரதி காந்திக்கு கடிதம் வரைகிற பொழுது அவர் சென்னையில் ஆங்கிலத்தில் பேசியதை விடுத்து ஏதேனும் இந்திய மொழியில் பேசி இருக்கலாமே என்று கேட்ட பொழுது அவர் அவ்வாறே செய்கிறேன் என்றார். ஆனால்,கடிதத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்கள் என்று கேட்ட பொழுது ,’பிறரை புண்படுத்தும் பொழுது அன்னை மொழியை பயன்படுத்தி பழக்கமில்லை.’ என்று தெறித்து வந்தது பதில்.
சென்னை கிருஷ்ணாம்பேட்டையில் பாரதி உறங்கிக்கொண்டு இருக்கிறான். அவனின் கீதங்கள் அக்கினி குஞ்சுகளை ஈந்துக்கொண்டே இருக்கின்றன. வேடிக்கை மனிதரைப்போல வீழாத அந்த என்றும் இளைஞன் இறக்கிற பொழுதும் வெள்ளையனை தலை முடியில் கூட அண்ட விடமால் நல்லதொரு வீணையாக நாட்டை மீட்டி மறைந்தான். அவனின் இறுதி அஞ்சலிக்கு வந்தது இருபதுக்கும் குறைவானோர்.
பூ.கொ. சரவணன் @ விகடன்
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி, “சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்.
“நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் ” என தம் தாய்மொழியாம் தமிழின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். பன்மொழிப் புலமை பெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என கவிபுனைந்த கவிஞாயிறு.
சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர்.
பாட்டுக்கொரு புலவன் பாரதி. இவர் பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவர். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர்.
மகாகவி பாரதி தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…. என்று வறுமையான சூழ்நிலையிலும் கவிதை பாடியவர் மகாகவி பாரதியார். எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர் இந்த முண்டாசுக் கவிஞர். எட்டயபுரத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை நாட்டுமக்களிடையே எடுத்து சொல்லி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியவர் பாரதியார்.
‘பாட்டுக்கொரு புலவன்’ என்று கவிமணி போற்றிய பாரதி நாட்டுக்கொரு புலவனாக விளங்கியவன். உலகம் போற்றும் ஒப்பற்ற கவிஞரான பாரதியின் 131 வது பிறந்தநாள் 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் 11–12–13 நாளான இன்று கொண்டாடப்படுகிறது.
“நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் ” என தம் தாய்மொழியாம் தமிழின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். பன்மொழிப் புலமை பெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என கவிபுனைந்த கவிஞாயிறு.
சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர்.
பாட்டுக்கொரு புலவன் பாரதி. இவர் பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவர். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர்.
மகாகவி பாரதி தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…. என்று வறுமையான சூழ்நிலையிலும் கவிதை பாடியவர் மகாகவி பாரதியார். எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர் இந்த முண்டாசுக் கவிஞர். எட்டயபுரத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை நாட்டுமக்களிடையே எடுத்து சொல்லி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியவர் பாரதியார்.
‘பாட்டுக்கொரு புலவன்’ என்று கவிமணி போற்றிய பாரதி நாட்டுக்கொரு புலவனாக விளங்கியவன். உலகம் போற்றும் ஒப்பற்ற கவிஞரான பாரதியின் 131 வது பிறந்தநாள் 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் 11–12–13 நாளான இன்று கொண்டாடப்படுகிறது.
பாரதி: வெடித்து அணைந்த விண்மீன்
சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம். தனது குறுகிய வாழ்நாளுக்குள் எவ்வளவு செய்திருக்கிறார் பாரதி. கவிதைகள் மட்டும்தான் அவரது சாதனை என்று இன்றைய தலைமுறையினர் பலர் நினைக்கக்கூடும். கிட்டத்தட்ட, கவிதைகளுக்கு நிகரான சாதனையை பாரதி உரைநடையிலும் செய்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், அவருடைய இதழியல் பணி மகத்தான வீச்சுடையதாகவும் இருந்திருக்கிறது. சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா போன்றவை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பாரதி பணியாற்றியிருக்கிறார். வேறு சில பத்திரிகைகளில் பங்களிப்பும் செய்திருக்கிறார். தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘இந்தியா’ இதழில், தென்னிந்தியப் பத்திரிகைகளிலேயே முதன்முறையாகக் கருத்துச்சித்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிக்கு உண்டு. சமூகத்துடன் ஊடாடுவதற்கு இதழியலையும் பாரதி மிகவும் திறமையாகக் கையாண்டார். அரசாங்கத்தின் தடை, பொருளாதாரக் காரணங்கள் போன்றவற்றால் ஒவ்வொரு பத்திரிகையும் முடக்கப்பட்டாலும் உடனடியாக வேறொரு பத்திரிகையில் எப்படியும் கால்பதித்து விடுவார். அந்த அளவுக்கு அவரது இதழியல் தாகம் தணியாததாக இருந்திருக்கிறது. அதனால்தான், பத்திரிகை தொடங்குவது குறித்துத் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘சொத்தை விற்றேனும்’ பணம் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்.
கவிதைகள், உரைநடை, இதழியல் எழுத்துக்கள் என்று பாரதியை எழுத்து சார்ந்த மனிதராக மட்டுமே பார்த்துவிட முடியாது. தான் வாழ்ந்த காலத்தில் மகத்தான புரட்சியாளராக பாரதி இருந்திருக்கிறார். இந்து மதத்தில் ஈடுபாடுடையவராக இருந்தாலும், சாதிப் பிரிவினைகளையும் தீண்டாமைக் கொடுமையையும் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புணர்வைத் தனது வாழ்க்கை முறையிலும் செயல்படுத்திக் காட்டினார். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பாகுபாடு பார்க்காமல் பழகுதல், அவர்கள் வீட்டில் உணவருந்துதல் போன்ற பழக்கங்களைத் தான் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், பிறரையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். இந்தச் செய்கைகளெல்லாம் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதேபோல், மத வேற்றுமையும் பாராதவர் பாரதி. அவருக்கு இஸ்லாமிய, கிறித்தவ நண்பர்கள் உண்டு. 1920-ல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று பொட்டல் புதூரில் அங்குள்ள இஸ்லாமிய மக்களிடையே இஸ்லாம் மார்க்கத்தின் பெருமையைப் பற்றி பாரதி பேசியதோடல்லாமல், தான் எழுதிய ‘அல்லா… அல்லா… அல்லா!’ என்ற பாடலையும் பாடிக்காட்டியிருக்கிறார்.
எப்பாடுபட்டாவது இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்று தவிப்புடன் போராடியவர்களில் பாரதிக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. இந்தத் தவிப்பின் பிரதிபலிப்புதான் மிதவாதம், தீவிரப்போக்கு ஆகிய இரு வழிகளில் தீவிரப்போக்கை பாரதி தேர்ந்தெடுத்தது. விடுதலைபெற்ற இந்தியாவை, தீண்டாமை போன்ற பிரச்சினைகள் ஒழிந்த இந்தியாவை வாழ்த்திப் பாடும் முதல் பாடகனாக, தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய பெருங்கனவு. நாடு விடுதலை பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டாலும்கூட, ஏதோ ஒரு முன்னெச்சரிக்கை உணர்வால் மேற்குறிப்பிட்ட லட்சிய பாரதத்தை வரவேற்று முன்கூட்டியே பாடல்களைப் பாடிவிட்டுப் போயிருக்கிறார்.
பாரதியை நம் நாடு உரிய வகையில் கெளரவித்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் உண்மை. தேசப்பற்றையும் சுதேசி உணர்வையும் வடிவமைத்ததில் தேசத்தின் எந்தத் தலைவருக்கும் நிகராகப் பங்குவகித்த பாரதி, இறுதியில் தமிழகத்துக்கு மட்டுமே உரியவராகப் பார்க்கப்பட்டவரானார். தமிழகத்தால் மட்டுமே தற்போது கொண்டாடப்படுகிறார். தாகூரின் புகழை இந்திய அளவில் பரப்பவும் நிலைநாட்டவும் இந்திய அரசும் மேற்கு வங்க அரசும் எவ்வளவோ திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. இதற்கெல்லாம் தாகூர் தகுதி வாய்ந்தவர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், தாகூருக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய பாரதி போன்றவர்களும் கெளரவப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
சமீபத்தில் பாரதியின் படம் பொறித்த நாணயம் வெளியிடப்பட வேண்டும் என்று எழுந்த சிறிய கோரிக்கையை, ‘பொருத்தமான காலம் இதுவல்ல’ என்று கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஒரு நாணயத்துக்கே பாரதிக்கு இந்தப் பாடு! இந்தப் போக்கு இந்திய அரசுக்கு அழகல்ல. தேசத் தலைவர்கள், தேச உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமைகள் போன்றோர் விஷயங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து கவனம் கொடுக்கப்பட்டு மற்றவர்கள் நிராகரிக்கப்படுவது முறையல்ல.
‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்றார் பாரதி. அப்படி உயிர்த்துடிப்பு கொண்ட ஒரு சொல்லாகத் தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவர். அந்தச் சொல்லின் பெயர் ‘உத்வேகம்’, 100 ஆண்டுகள் கடந்தும் ஒளிவீசிக்கொண்டிருக்கும் உத்வேகம் அது.
சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம். தனது குறுகிய வாழ்நாளுக்குள் எவ்வளவு செய்திருக்கிறார் பாரதி. கவிதைகள் மட்டும்தான் அவரது சாதனை என்று இன்றைய தலைமுறையினர் பலர் நினைக்கக்கூடும். கிட்டத்தட்ட, கவிதைகளுக்கு நிகரான சாதனையை பாரதி உரைநடையிலும் செய்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், அவருடைய இதழியல் பணி மகத்தான வீச்சுடையதாகவும் இருந்திருக்கிறது. சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா போன்றவை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பாரதி பணியாற்றியிருக்கிறார். வேறு சில பத்திரிகைகளில் பங்களிப்பும் செய்திருக்கிறார். தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘இந்தியா’ இதழில், தென்னிந்தியப் பத்திரிகைகளிலேயே முதன்முறையாகக் கருத்துச்சித்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிக்கு உண்டு. சமூகத்துடன் ஊடாடுவதற்கு இதழியலையும் பாரதி மிகவும் திறமையாகக் கையாண்டார். அரசாங்கத்தின் தடை, பொருளாதாரக் காரணங்கள் போன்றவற்றால் ஒவ்வொரு பத்திரிகையும் முடக்கப்பட்டாலும் உடனடியாக வேறொரு பத்திரிகையில் எப்படியும் கால்பதித்து விடுவார். அந்த அளவுக்கு அவரது இதழியல் தாகம் தணியாததாக இருந்திருக்கிறது. அதனால்தான், பத்திரிகை தொடங்குவது குறித்துத் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘சொத்தை விற்றேனும்’ பணம் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்.
கவிதைகள், உரைநடை, இதழியல் எழுத்துக்கள் என்று பாரதியை எழுத்து சார்ந்த மனிதராக மட்டுமே பார்த்துவிட முடியாது. தான் வாழ்ந்த காலத்தில் மகத்தான புரட்சியாளராக பாரதி இருந்திருக்கிறார். இந்து மதத்தில் ஈடுபாடுடையவராக இருந்தாலும், சாதிப் பிரிவினைகளையும் தீண்டாமைக் கொடுமையையும் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புணர்வைத் தனது வாழ்க்கை முறையிலும் செயல்படுத்திக் காட்டினார். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பாகுபாடு பார்க்காமல் பழகுதல், அவர்கள் வீட்டில் உணவருந்துதல் போன்ற பழக்கங்களைத் தான் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், பிறரையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். இந்தச் செய்கைகளெல்லாம் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதேபோல், மத வேற்றுமையும் பாராதவர் பாரதி. அவருக்கு இஸ்லாமிய, கிறித்தவ நண்பர்கள் உண்டு. 1920-ல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று பொட்டல் புதூரில் அங்குள்ள இஸ்லாமிய மக்களிடையே இஸ்லாம் மார்க்கத்தின் பெருமையைப் பற்றி பாரதி பேசியதோடல்லாமல், தான் எழுதிய ‘அல்லா… அல்லா… அல்லா!’ என்ற பாடலையும் பாடிக்காட்டியிருக்கிறார்.
எப்பாடுபட்டாவது இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்று தவிப்புடன் போராடியவர்களில் பாரதிக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. இந்தத் தவிப்பின் பிரதிபலிப்புதான் மிதவாதம், தீவிரப்போக்கு ஆகிய இரு வழிகளில் தீவிரப்போக்கை பாரதி தேர்ந்தெடுத்தது. விடுதலைபெற்ற இந்தியாவை, தீண்டாமை போன்ற பிரச்சினைகள் ஒழிந்த இந்தியாவை வாழ்த்திப் பாடும் முதல் பாடகனாக, தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய பெருங்கனவு. நாடு விடுதலை பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டாலும்கூட, ஏதோ ஒரு முன்னெச்சரிக்கை உணர்வால் மேற்குறிப்பிட்ட லட்சிய பாரதத்தை வரவேற்று முன்கூட்டியே பாடல்களைப் பாடிவிட்டுப் போயிருக்கிறார்.
பாரதியை நம் நாடு உரிய வகையில் கெளரவித்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் உண்மை. தேசப்பற்றையும் சுதேசி உணர்வையும் வடிவமைத்ததில் தேசத்தின் எந்தத் தலைவருக்கும் நிகராகப் பங்குவகித்த பாரதி, இறுதியில் தமிழகத்துக்கு மட்டுமே உரியவராகப் பார்க்கப்பட்டவரானார். தமிழகத்தால் மட்டுமே தற்போது கொண்டாடப்படுகிறார். தாகூரின் புகழை இந்திய அளவில் பரப்பவும் நிலைநாட்டவும் இந்திய அரசும் மேற்கு வங்க அரசும் எவ்வளவோ திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. இதற்கெல்லாம் தாகூர் தகுதி வாய்ந்தவர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், தாகூருக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய பாரதி போன்றவர்களும் கெளரவப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
சமீபத்தில் பாரதியின் படம் பொறித்த நாணயம் வெளியிடப்பட வேண்டும் என்று எழுந்த சிறிய கோரிக்கையை, ‘பொருத்தமான காலம் இதுவல்ல’ என்று கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஒரு நாணயத்துக்கே பாரதிக்கு இந்தப் பாடு! இந்தப் போக்கு இந்திய அரசுக்கு அழகல்ல. தேசத் தலைவர்கள், தேச உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமைகள் போன்றோர் விஷயங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து கவனம் கொடுக்கப்பட்டு மற்றவர்கள் நிராகரிக்கப்படுவது முறையல்ல.
‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்றார் பாரதி. அப்படி உயிர்த்துடிப்பு கொண்ட ஒரு சொல்லாகத் தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவர். அந்தச் சொல்லின் பெயர் ‘உத்வேகம்’, 100 ஆண்டுகள் கடந்தும் ஒளிவீசிக்கொண்டிருக்கும் உத்வேகம் அது.
பாரதிக்குக் கிடைத்த சமகால அங்கீகாரங்கள்
பாரதியார் தாம் வாழ்ந்த காலத்தில் உரிய விதத்தில் அங்கீகரிக்கப் படவில்லை; போற்றப்படவில்லை என்னும் கருத்து பொதுவாகக் காணப்படுகிறது. இன்று கொண்டாடப்படும் அளவுக்கு அன்று பாரதி கொண்டாடப்படவில்லை என்பது உண்மைதான். ஆயினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு அவர் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.
அரசியல் எதிரி, கவிதையின் நண்பர்
தனது 22-ம் வயதில், 1904-ல் பாரதி இதழியல், அரசியல் வாழ்வைச் சென்னையில் தொடங்குகிறார். அரசியல் வாழ்வில் திலகரும் புதிய கட்சியும் பாரதியை ஆட்கொண்டனர். மிதவாதப் போக்கை, மிதவாத அணியினரை பாரதி கடுமையாகத் தாக்கி எழுதினார். குறிப்பாக, அவ்வணியின் முதன்மையான தலைவர் வி. கிருஷ்ணசாமி ஐயர், பாரதியின் கடுந்தாக்குதலுக்கு உள்ளானார். ஒருமுறை பாரதியின் பாடல்களைப் பாரதியே பாடி கிருஷ்ணசாமி ஐயர் கேட்க நேர்ந்தது. விளைவு, தன்னைத் தாக்கி எழுதியவர் என்பதையும் புறம்தள்ளி, பாரதியின் மூன்று பாடல்கள் முதன்முறையாக நூல்வடிவம் பெறப் பொருளுதவி செய்தார். பாரதியின் முதல் சிறுநூல் 1907-ல் இப்படித்தான் வெளிவந்தது. இந்த நூலை 15 ஆயிரம் பிரதிகள் அடித்துத் தமிழகத்திலுள்ள பள்ளிகளுக்கு இலவசமாக அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார்.
பாரதியார் தாம் வாழ்ந்த காலத்தில் உரிய விதத்தில் அங்கீகரிக்கப் படவில்லை; போற்றப்படவில்லை என்னும் கருத்து பொதுவாகக் காணப்படுகிறது. இன்று கொண்டாடப்படும் அளவுக்கு அன்று பாரதி கொண்டாடப்படவில்லை என்பது உண்மைதான். ஆயினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு அவர் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.
அரசியல் எதிரி, கவிதையின் நண்பர்
தனது 22-ம் வயதில், 1904-ல் பாரதி இதழியல், அரசியல் வாழ்வைச் சென்னையில் தொடங்குகிறார். அரசியல் வாழ்வில் திலகரும் புதிய கட்சியும் பாரதியை ஆட்கொண்டனர். மிதவாதப் போக்கை, மிதவாத அணியினரை பாரதி கடுமையாகத் தாக்கி எழுதினார். குறிப்பாக, அவ்வணியின் முதன்மையான தலைவர் வி. கிருஷ்ணசாமி ஐயர், பாரதியின் கடுந்தாக்குதலுக்கு உள்ளானார். ஒருமுறை பாரதியின் பாடல்களைப் பாரதியே பாடி கிருஷ்ணசாமி ஐயர் கேட்க நேர்ந்தது. விளைவு, தன்னைத் தாக்கி எழுதியவர் என்பதையும் புறம்தள்ளி, பாரதியின் மூன்று பாடல்கள் முதன்முறையாக நூல்வடிவம் பெறப் பொருளுதவி செய்தார். பாரதியின் முதல் சிறுநூல் 1907-ல் இப்படித்தான் வெளிவந்தது. இந்த நூலை 15 ஆயிரம் பிரதிகள் அடித்துத் தமிழகத்திலுள்ள பள்ளிகளுக்கு இலவசமாக அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார்.
சென்னையின் கவி
நெவின்சன் எனும் இங்கிலாந்து பத்திரிகையாளர் ஒருவர் 1908-ம் ஆண்டு எழுதிய ஆங்கில நூலில் (தி நியூ ஸ்பிரிட் இன் இண்டியா) பாரதி பற்றிப் பதிவுசெய்திருக்கிறார். அவர் தனது இந்தியப் பயணத்தின்போது, சென்னையில் பாரதி கவிதை பாடிய கூட்ட நிகழ்வைக் கண்டிருக்கிறார். அந்தக் காலத்தில் லாலா லஜபதிராய் விடுதலையான தினம் சென்னைக் கடற்கரையில் கொண்டாடப்பட்டது. பாரதியின் பெயரைச் சுட்டாமல் சென்னையின் தமிழ்க் கவிஞர், தாம் இயற்றிய பாடல்களை அந்தக் கூட்டத்தில் பாடியதையும் அந்தப் பாடல்களின் சிறப்பையும் நெவின்சன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அயல்நாட்டுப் பத்திரிகையாளரின் பார்வையில் தமிழகத்தின் (சென்னையின்) கவி என பாரதி சிறப்பாகச் சுட்டப்பட்டிருப்பது, அரசியல் வாழ்வின் தொடக்க நிலைகளி லேயே பாரதி பெற்றிருந்த இடத்தைத் தெளிவுபடுத்துகிறது.
நெவின்சன் எனும் இங்கிலாந்து பத்திரிகையாளர் ஒருவர் 1908-ம் ஆண்டு எழுதிய ஆங்கில நூலில் (தி நியூ ஸ்பிரிட் இன் இண்டியா) பாரதி பற்றிப் பதிவுசெய்திருக்கிறார். அவர் தனது இந்தியப் பயணத்தின்போது, சென்னையில் பாரதி கவிதை பாடிய கூட்ட நிகழ்வைக் கண்டிருக்கிறார். அந்தக் காலத்தில் லாலா லஜபதிராய் விடுதலையான தினம் சென்னைக் கடற்கரையில் கொண்டாடப்பட்டது. பாரதியின் பெயரைச் சுட்டாமல் சென்னையின் தமிழ்க் கவிஞர், தாம் இயற்றிய பாடல்களை அந்தக் கூட்டத்தில் பாடியதையும் அந்தப் பாடல்களின் சிறப்பையும் நெவின்சன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அயல்நாட்டுப் பத்திரிகையாளரின் பார்வையில் தமிழகத்தின் (சென்னையின்) கவி என பாரதி சிறப்பாகச் சுட்டப்பட்டிருப்பது, அரசியல் வாழ்வின் தொடக்க நிலைகளி லேயே பாரதி பெற்றிருந்த இடத்தைத் தெளிவுபடுத்துகிறது.
இராகவையங்காரின் பாராட்டு
1909-ம் ஆண்டு ஜென்மபூமி (ஸ்வதேச கீதங்கள் - இரண்டாம் பாகம்) நூல் வெளிவந்தது. அந்த நூலுக்குச் செந்தமிழ் இதழில் மதிப்புரை எழுதிய மு.இராகவையங்கார் ‘இவர் வாக்குத் தமிழ்நாட்டார் பலரும் பலமுறை அறிந்து சுவைத்ததேயாதலின், நாம் பலபடப் புனைதல் மிகையாம்’ எனவும், ‘இதன் சில பகுதிகளை, எம் நண்பர்கள் முன் படித்துவரும்போது, உள்ளபடியே அவை, உரோமஞ் சிலிர்க்க எம்மைப் பெரிதும் உருக்கிவிட்டன’எனவும் எழுதினார். இதை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரமாகவும் புலவர் உலகின் அங்கீகாரமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
1909-ம் ஆண்டு ஜென்மபூமி (ஸ்வதேச கீதங்கள் - இரண்டாம் பாகம்) நூல் வெளிவந்தது. அந்த நூலுக்குச் செந்தமிழ் இதழில் மதிப்புரை எழுதிய மு.இராகவையங்கார் ‘இவர் வாக்குத் தமிழ்நாட்டார் பலரும் பலமுறை அறிந்து சுவைத்ததேயாதலின், நாம் பலபடப் புனைதல் மிகையாம்’ எனவும், ‘இதன் சில பகுதிகளை, எம் நண்பர்கள் முன் படித்துவரும்போது, உள்ளபடியே அவை, உரோமஞ் சிலிர்க்க எம்மைப் பெரிதும் உருக்கிவிட்டன’எனவும் எழுதினார். இதை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரமாகவும் புலவர் உலகின் அங்கீகாரமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
தென்னாப்பிரிக்கப் பிரசுரம்
புதுவை வாழ்க்கையின்போது ஒருமுறை தென்னாப்பிரிக்காவிலிருந்து பாரதிக்கு 1,000 ரூபாய் கிடைத்த நிகழ்வையும் அந்தப் பணம் அவரிடம் ஒரு வாரம்கூடத் தங்கவில்லை என்பதையும் வ.ரா. எழுதியிருக்கிறார். 1914-ம் ஆண்டில் பாரதியாரின் கவிதைத் தொகுதியொன்று 'மாதா மணிவாசகம்' என்னும் தலைப்பில் தென்னாப்பிரிக்காவில் வெளியிடப்பட்டது. தென்னாப்பிரிக்காவிலிருந்து 1,000 ரூபாய் கிடைத்தது என வ.ரா. குறிப்பிடுவதோடு, இதை இணைத்துப் பார்க்கலாம். இந்த நூல் தென்னாப்பிரிக்கா டர்பன் சரசுவதி விலாச அச்சுக்கூடத்திலிருந்து பதிப்பித்து வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ்க் கவிஞனின் படைப்பு தமிழகத்துக்கு - இந்தியாவுக்கு - வெளியிலிருந்து பதிப்பித்து வெளியிடப்பட்ட மகத்தான வரலாற்று நிகழ்வு அது.
புதுவை வாழ்க்கையின்போது ஒருமுறை தென்னாப்பிரிக்காவிலிருந்து பாரதிக்கு 1,000 ரூபாய் கிடைத்த நிகழ்வையும் அந்தப் பணம் அவரிடம் ஒரு வாரம்கூடத் தங்கவில்லை என்பதையும் வ.ரா. எழுதியிருக்கிறார். 1914-ம் ஆண்டில் பாரதியாரின் கவிதைத் தொகுதியொன்று 'மாதா மணிவாசகம்' என்னும் தலைப்பில் தென்னாப்பிரிக்காவில் வெளியிடப்பட்டது. தென்னாப்பிரிக்காவிலிருந்து 1,000 ரூபாய் கிடைத்தது என வ.ரா. குறிப்பிடுவதோடு, இதை இணைத்துப் பார்க்கலாம். இந்த நூல் தென்னாப்பிரிக்கா டர்பன் சரசுவதி விலாச அச்சுக்கூடத்திலிருந்து பதிப்பித்து வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ்க் கவிஞனின் படைப்பு தமிழகத்துக்கு - இந்தியாவுக்கு - வெளியிலிருந்து பதிப்பித்து வெளியிடப்பட்ட மகத்தான வரலாற்று நிகழ்வு அது.
தமிழகத்தின் தாகூர்
1917-ம் ஆண்டு வெளிவந்த 'திராவிடன்' இதழில் பாரதியின் கண்ணன் பாட்டுக்கு நூல் மதிப்புரை வெளிவந்திருந்தது. இந்த இதழ் நீதிக்கட்சி சார்ந்த இதழாகும். இந்த இதழில் மகாகவி பாரதி தமிழகத்தின் தாகூர் எனப் போற்றப்பட்டிருக்கிறார். இந்திய அளவிலும் உலக அளவிலும் ஜெயதேவர், நியூமன் ஆகிய கவிஞர்களுக்கு ஈடாக பாரதி பாராட்டப்பட்டிருக்கிறார். இது பாரதிக்குக் கிடைத்த சமகால அங்கீகாரங்களுள் குறிப்பிடத் தக்கது.
மாதந்தோறும் 30 ரூபாய்
பாரதி புதுவையில் வசித்தபோது, குறிப்பிட்ட காலம் தொடங்கி, சுதேசமித்திரன் பத்திரிகைக்காக அவர் ஏதாவது எழுதி அனுப்பினாலும் சரி, எழுதாவிட்டாலும் சரி, மாதம் 30 ரூபாய் பாரதிக்கு அனுப்புவது என்று முடிவெடுத்து சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் அவருக்குப் பணம் அனுப்பிவைத்தார் என்பது தொடர்ச்சியாக பாரதியைச் சிலர் ஆதரித்துவந்த நிலையை உணர்த்துகிறது.
1917-ம் ஆண்டு வெளிவந்த 'திராவிடன்' இதழில் பாரதியின் கண்ணன் பாட்டுக்கு நூல் மதிப்புரை வெளிவந்திருந்தது. இந்த இதழ் நீதிக்கட்சி சார்ந்த இதழாகும். இந்த இதழில் மகாகவி பாரதி தமிழகத்தின் தாகூர் எனப் போற்றப்பட்டிருக்கிறார். இந்திய அளவிலும் உலக அளவிலும் ஜெயதேவர், நியூமன் ஆகிய கவிஞர்களுக்கு ஈடாக பாரதி பாராட்டப்பட்டிருக்கிறார். இது பாரதிக்குக் கிடைத்த சமகால அங்கீகாரங்களுள் குறிப்பிடத் தக்கது.
மாதந்தோறும் 30 ரூபாய்
பாரதி புதுவையில் வசித்தபோது, குறிப்பிட்ட காலம் தொடங்கி, சுதேசமித்திரன் பத்திரிகைக்காக அவர் ஏதாவது எழுதி அனுப்பினாலும் சரி, எழுதாவிட்டாலும் சரி, மாதம் 30 ரூபாய் பாரதிக்கு அனுப்புவது என்று முடிவெடுத்து சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் அவருக்குப் பணம் அனுப்பிவைத்தார் என்பது தொடர்ச்சியாக பாரதியைச் சிலர் ஆதரித்துவந்த நிலையை உணர்த்துகிறது.
அன்னிபெசண்டிலிருந்து ஹானிங்டன் வரை…
புதுவை வாசத்திலிருந்து விடுபடக் கருதிய பாரதி, புதுவையிலிருந்து வெளியேறிக் கடலூர் செல்லும் நிலையில், 1918 நவம்பர் 20 புதன்கிழமையன்று ஆங்கிலேய அரசால் கைதுசெய்யப்படுகிறார். செய்தியை அறிந்த சுதேசமித்திரன் ஆசிரியரும், அன்னிபெசண்டு அம்மையாரும், நீதிபதி மணி அய்யரும், சர். சி.பி. ராமசாமி அய்யரும் சென்னை அரசாங்கத்தை அணுகி பாரதியின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதன் பின் காவல் துறை டி.ஐ.ஜி. ஹானிங்டன் கடலூர் சிறையில் பாரதியைச் சந்தித்துப் பேசுகிறார். இதன் தொடர்ச்சியாக பாரதி விடுதலையாகிறார். இந்திய அளவிலும், சென்னை மாகாண அளவிலும் முக்கியமானவர்களெல்லாம் பாரதியின் விடுதலைக்காக உடனடியாகச் செயல்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. கூடவே, டி.ஐ.ஜி. ஒருவரே பாரதியைச் சிறையில் சந்தித்துப் பேசியது, அவரைக் கைதுசெய்த வெள்ளை அரசாங்கம்கூட அவரை எந்த நிலையில் மதித்தது என்பதை உணர்த்துகிறது.
புதுவை வாசத்திலிருந்து விடுபடக் கருதிய பாரதி, புதுவையிலிருந்து வெளியேறிக் கடலூர் செல்லும் நிலையில், 1918 நவம்பர் 20 புதன்கிழமையன்று ஆங்கிலேய அரசால் கைதுசெய்யப்படுகிறார். செய்தியை அறிந்த சுதேசமித்திரன் ஆசிரியரும், அன்னிபெசண்டு அம்மையாரும், நீதிபதி மணி அய்யரும், சர். சி.பி. ராமசாமி அய்யரும் சென்னை அரசாங்கத்தை அணுகி பாரதியின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதன் பின் காவல் துறை டி.ஐ.ஜி. ஹானிங்டன் கடலூர் சிறையில் பாரதியைச் சந்தித்துப் பேசுகிறார். இதன் தொடர்ச்சியாக பாரதி விடுதலையாகிறார். இந்திய அளவிலும், சென்னை மாகாண அளவிலும் முக்கியமானவர்களெல்லாம் பாரதியின் விடுதலைக்காக உடனடியாகச் செயல்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. கூடவே, டி.ஐ.ஜி. ஒருவரே பாரதியைச் சிறையில் சந்தித்துப் பேசியது, அவரைக் கைதுசெய்த வெள்ளை அரசாங்கம்கூட அவரை எந்த நிலையில் மதித்தது என்பதை உணர்த்துகிறது.
நுழைவுக் கட்டணம் ஒரு ரூபாய்
1919-ம் ஆண்டு சென்னையில் தொடர்ந்து பாரதி சில சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். இந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் அந்த நாளில் பாரதிக்கு இருந்த பெருமதிப்பை உணர்த்துகின்றன. திராவிட இயக்கம் பேரெழுச்சி கொண்டிருந்தபோது, நுழைவுக் கட்டணம் வசூலித்துச் சில சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன என்பது வரலாறு. அதற்கெல்லாம் முன்னதாகவே பாரதியின் சொற்பொழிவுக்கு அந்நாளிலேயே ஒரு ரூபாய் நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட்டுக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அந்தச் சொற்பொழிவுகள் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ‘நித்தியத்தின் வழிபாடு’(தி கல்ட் ஆஃப் தி எட்டெர்னல்) என்னும் தலைப்பில் 02.03.1919 அன்று பாரதி சொற்பொழிவாற்றியிருக்கிறார். இந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் நீதிபதி சர்.எஸ்.சுப்பிரமணிய அய்யர். ஒரு நீதிபதியின் தலைமையில் சென்னையின் புகழ் மிக்க விக்டோரியா அரங்கில் நுழைவுக் கட்டணம் வசூலித்து, பாரதியின் ஆங்கிலச் சொற்பொழிவு நிகழ்ந்தது என்பது சென்னையில் அந்த நாளில் பாரதி மதிக்கப்பட்ட இடத்தை உறுதிபடக் காட்டுகிறது.
1919-ம் ஆண்டு சென்னையில் தொடர்ந்து பாரதி சில சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். இந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் அந்த நாளில் பாரதிக்கு இருந்த பெருமதிப்பை உணர்த்துகின்றன. திராவிட இயக்கம் பேரெழுச்சி கொண்டிருந்தபோது, நுழைவுக் கட்டணம் வசூலித்துச் சில சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன என்பது வரலாறு. அதற்கெல்லாம் முன்னதாகவே பாரதியின் சொற்பொழிவுக்கு அந்நாளிலேயே ஒரு ரூபாய் நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட்டுக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அந்தச் சொற்பொழிவுகள் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ‘நித்தியத்தின் வழிபாடு’(தி கல்ட் ஆஃப் தி எட்டெர்னல்) என்னும் தலைப்பில் 02.03.1919 அன்று பாரதி சொற்பொழிவாற்றியிருக்கிறார். இந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் நீதிபதி சர்.எஸ்.சுப்பிரமணிய அய்யர். ஒரு நீதிபதியின் தலைமையில் சென்னையின் புகழ் மிக்க விக்டோரியா அரங்கில் நுழைவுக் கட்டணம் வசூலித்து, பாரதியின் ஆங்கிலச் சொற்பொழிவு நிகழ்ந்தது என்பது சென்னையில் அந்த நாளில் பாரதி மதிக்கப்பட்ட இடத்தை உறுதிபடக் காட்டுகிறது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|