ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!

+4
தேனி சூர்யாபாஸ்கரன்
அப்புகுட்டி
கலைவேந்தன்
kirikasan
8 posters

Go down

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Empty சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!

Post by kirikasan Fri Sep 10, 2010 12:42 am

இது நான் எழுதிய இரண்டாவது கவிதை. (நீண்ட நாட்களுக்கு முன்) பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

நெடுந்தூரம் நாம்நடந்து வந்தோம் வழியில்
படுந்துயரோ கொஞ்சமல்ல பட்டோம்
வரும்தடைகள் அத்தனையும் வென்றோம் - எந்தப்
பெரும்புயலும் கொண்டுஎதிர் நின்றோம்

கடும்வெயிலில் வெந்துஉடல் நொந்தோம்- காலடியில்
கற்களும்கூர் முட்கள்பல கண்டோம்
நெடும்வழியின் முடிவுவரும் போது - அதில்
நேருமுயர் வாழ்வையெண்ணி நின்றோம்

வானில்வரும் சூரியனின் ஒளியில் நல்ல
வழியறிந்து வீறுநடை கொண்டோம்
மானிடத்துக் கானஅறம் நீதி - வாழ்வுரிமை
தானெடுக்க ஆசைமனம் கொண்டோம்

சேருமிடம் வந்தடைய இன்னும்- ஒரு
தூரமில்லைஎன் றிருந்த போதே
நூறுஇடி மேல்விழுந்த தென்ன-உலகே
பாதைமாறி நீ சுழன்றதென்ன/

வன்னியை பண் டாரவன்யன் ஆண்டான் - ஒரு
வடக்கினிலே சங்கிலியன் ஆண்டான்
இன்றுமொரு மன்னன்மண்ணை ஆண்டான் - இதை
ஏன் அழித்து மீண்டும் பழி கொண்டாய்

வைத்த குறை வானசோற்றுக் குள்ளே முழு
மொத்த பெரும் பூசணியை வைத்து
ஒன்றுமில்லை .மந்ரம் மகாவம்சம் தமிழ்
ஈழமில்லை அத்தனை நம்சொந்தம்

என்றொருவன் ஏய்க்கக் கண்ணைமூடி- ஆம்
இருண்டுவிட்டதென்றுலகே நீயும்
தந்தனத்தோம் என்று அவன் பாட - அந்த
தாளத்துக்கு சுற்றியதேன் உலகே

சிங்கம்வாழும் காட்டின் குகைகுள்ளே நீ
சேர்ந்துவாழு என்றுகுட்டி ஆட்டை
கட்டிவைத்து, ஒற்றையாட்சி தர்மம் பேசி
கற்பனையை காணச்சொல்லும் உலகே

தடிகரத்தில் ஏன்எடுத்தாய் என்பாய் எங்கள்
தலையெடுக்க வந்தவனின் கையில்
குடியிருக்கும் கொடியவாளைக் கண்டு நாமும்
குனிந்திருத்தல் ஆகுமா நீசொல்லு

கொடியகரம் கொண்டகொலை வாளை- நாங்கள்
கூர்மழுங்க வைக்கஎதிர் நின்றோம்
அடிஎடுத்து தீயர்களை வென்றோம் - ஆனால்
அகிலமே நீ நீதியல்லோ கொன்றாய்

கடிக்கவந்த பாம்பை ஒருகம்பால் அடித்து
விரட்டுவது பாவமென கூறி உயிர்
குடிப்பவனின் பக்கத்திலே நின்று - எங்கள்
குலமறுத்த தேன்உலகே கூறு

இடியிடித்து மின்னல் புயலாக- வானில்
இயந்திரங்கள் கொண்டு வெடி போட்டு
தலையறுத்து சிங்கம் வெறிஆட -அவர்க்கு
பரிசளித்து தங்கம் அள்ளித் தந்தாய்

குஞ்சு,குமர் கூனியகிழம் எல்லாம் -வரும்
குருத்தொடிய வெட்டிஅடி சாய்த்து
செங்குருதி குளம்குளித்து ஆடும் -அவர்
சிங்களத்துக் கென்றுஒரு நீதி

வெஞ்சமருக் கென்றுபுவி செய்த ஒரு
விதிமுறைக்கு மீறிஒரு பாதம்
கொஞ்சமும்பிள றாமல்வழி சென்ற - நம்
செந்தமிழுக் கோர்விதி இதுசரியா?


நாடுஉனக் கில்லைஎனச் சொல்லி - ஒருவன்
நாற்திசையும் கேட்கமுர சொலித்தான்
கூடுவிட்டு உயிர்பிரித்து கொன்றான் - அவன்
கூறியதன் அர்த்தமென்ன கூறு

உடலெடுத்து தமிழ்நிலத்தில் வாழும் ஓர்
உரிமை நமக் கில்லையா நீசொல்லு
கடல்கருத்த வானில்வெறும் காற்றில் ஆவியென
கலந்து வாழும் உரிமையே என்றாச்சு

அறமெடுத்து போர்புரிந்து நாமும் - தனியே
அரசமைத்து வாழுகின்ற வேளை
கரமெடுத்து கைக்குலுக்கி வேண்டாம் - போரை
இனிநிறுத்து கொலைகள் பாவம் என்றாய்

படுபொய்யை பாலைஅருந் தென்று -'கள்'ளை
பாத்திரத்தி லிட்டெமக்கு தந்தாய்
பருகுதல்போல் தலைகுனிந்த போது நீ
பாவிஎதிரி கையில்வாளைத் தந்தாய்

கொடியஎமன் கூட்டம் எம்மைக்கொன்று -நம்
குலத்தவரைக் கழுத்தறுக்கும் போதும்
குழிபறித்து இனம்புதைக்கும் போதும் உலகே
படம்பிடித்து பார்த்தும்மௌன மானாய்

பெரியபாவம் என்னசெய்து வந்தோம் - எமது
பேரவல சாவை படம் செய்து
அரும்பெருங்கண் காட்சி செய்ய,ஐ.நா -சுவரில்
அழகுக்கென்று அடுக்கவாஉள் வைத்தாய்?

கைஎடுத்த வாளும்உடல் கவசம்- தானும்
கடலின்மீது வீசிஎறிந் தாச்சு நம்
மெய்யிலுயிர் காக்கஇந்த மண்ணில் -நமக்
கென்னவழி மேதினியே கூறு


Last edited by kirikasan on Fri Sep 10, 2010 3:13 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Empty Re: சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!

Post by கலைவேந்தன் Fri Sep 10, 2010 1:03 am

ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈழத்தின் கொடுமைகளை ஆவேசச்சொற்களால் தணல் மாலையொன்று கோர்த்து தரமுடன் வெளியிட்டு உள்ளீர்.
உம்மைப்பாராட்ட நாவிசைக்கவல்லேன். தமிழுக்கொரு தலையுயர்த்த கவிஞனொருவனாய் தலைநிமிர்ந்து நின்றீர்..!

பாராட்டுக்கள் கிரிகாசன்...!


Last edited by கலை on Fri Sep 10, 2010 1:06 am; edited 1 time in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Empty Re: சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!

Post by அப்புகுட்டி Fri Sep 10, 2010 1:05 am

வன்னியை பண் டாரவன்யன் ஆண்டான் - ஒரு
வடக்கினிலே சங்கிலியன் ஆண்டான்
இன்றுமொரு மன்னன்மண்ணை ஆண்டான் - இதை
ஏன் அழித்து மீண்டும் பழி கொண்டாய்

சிங்கம்வாழும் காட்டின் குகைகுள்ளே நீ
சேர்ந்துவாழு என்றுகுட்டி ஆட்டை
கட்டிவைத்து, ஒற்றையாட்சி தர்மம் பேசி
கற்பனையை காணச்சொல்லும் உலகே

குஞ்சு,குமர் கூனியகிழம் எல்லாம் -வரும்
குருத்தொடிய வெட்டிஅடி சாய்த்து
செங்குருதி குளம்குளித்து ஆடும் -அவர்
சிங்களத்துக் கென்றுஒரு நீதி

உள்ளம் குமுறும் வரிகள் அனைத்தும்
அனுபவித்து எழுதப்பட்ட வரிகள் உறவே
உங்கள் கவித்திறனுக்கு தலை வணங்குகிறேன்
வாழ்க வழமுடன்.
நன்றி நன்றி நன்றி


சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Empty Re: சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!

Post by kirikasan Fri Sep 10, 2010 12:10 pm

நன்றிகள் தங்கள் மனமுவந்த பாராட்டுகளுக்கு! என்றும் பாசமுடன்
கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Empty Re: சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 10, 2010 2:02 pm

கலை wrote:ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈழத்தின் கொடுமைகளை ஆவேசச்சொற்களால் தணல் மாலையொன்று கோர்த்து தரமுடன் வெளியிட்டு உள்ளீர்.
உம்மைப்பாராட்ட நாவிசைக்கவல்லேன். தமிழுக்கொரு தலையுயர்த்த கவிஞனொருவனாய் தலைநிமிர்ந்து நின்றீர்..!

வணங்குகிறேன்..கவிதாசன்..அவர்களே!..

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Friendshipcomment54சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Empty Re: சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!

Post by சிவா Fri Sep 10, 2010 2:16 pm

கலை wrote:ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈழத்தின் கொடுமைகளை ஆவேசச்சொற்களால் தணல் மாலையொன்று கோர்த்து தரமுடன் வெளியிட்டு உள்ளீர்.
உம்மைப்பாராட்ட நாவிசைக்கவல்லேன். தமிழுக்கொரு தலையுயர்த்த கவிஞனொருவனாய் தலைநிமிர்ந்து நின்றீர்..!

பாராட்டுக்கள் கிரிகாசன்...!

பாராட்டுக்கள் கிரிகாசன் அண்ணா! சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! 154550 சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! 154550 சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! 154550


சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Empty Re: சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!

Post by உமா Fri Sep 10, 2010 2:29 pm

ஒவ்வொரு வரியும் அருமை...
உங்கள் கவிதை வரிக்கு தலை வணங்குகிறேன்....
நன்றி நன்றி அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Empty Re: சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!

Post by ப்ரியா Wed Oct 06, 2010 8:26 pm

நண்பா ..
தமிழ் மன்னர்கள் ஆண்டதற்கான சான்றுகளை தற்போது அழித்து வருகின்றார்கள் ..இனி இதெல்லாம் ஏட்டுக் கல்வியாகத்தான் இருக்கப் போகின்றது ..

ஆசியாவின் கடல்கள் எல்லாம் ஆண்டவனும் தமிழன் இங்கு அகதியாகி உலகம் எங்கும் அலைபவனும் தமிழன் தான் ........... அழுகை அழுகை அழுகை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Empty Re: சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!

Post by அன்பு தளபதி Wed Oct 06, 2010 8:29 pm

சூப்பர் கிரி அண்ணா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Empty Re: சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum