ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அன்பில் தர்மலிங்கம்'-பழைய நினைவுகளில் மூழ்கிய முதல்வர்

3 posters

Go down

'அன்பில் தர்மலிங்கம்'-பழைய நினைவுகளில் மூழ்கிய முதல்வர்  Empty 'அன்பில் தர்மலிங்கம்'-பழைய நினைவுகளில் மூழ்கிய முதல்வர்

Post by ரபீக் Tue Sep 07, 2010 12:35 pm

நட்புக்கு அடையாள சின்னமாக விளங்கிய அன்பில் தர்மலிங்கத்தின் சிலையை திறக்க நானே திருச்சி க்குச் செல்வேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திருச்சியில் வரும் 8ம் தேதி அன்பில் தர்மலிங்கத்தின் சிலை திறப்பு விழா நடக்கிறது. இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

8-9-2010 அன்று திருச்சியில் என் அன்பு நண்பர் அன்பில் தர்மலிங்கத்தின் சிலை திறப்பு விழா. அதுபற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். எத்தனையோ நினைவுகள் அடுக்கடுக்காக என் முன் எழுகின்றன. எனது 87 வயது வாழ்க்கையில் எனக்கு நெருங்கிய பத்து நண்பர்களைச் சொல் என்றால் அதற்குள் இடம் பெறும் பெயர்களில் ஒன்றுதான் அன்பில் தர்மலிங்கத்தின் பெயர்.

"அன்பில் அழைக்கிறார்'' என்று தலைப்பிட்டு 1956ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமு கழக மாநில மாநாட்டுக்கு அறிஞர் அண்ணா "திராவிட நாடு'' இதழில் அழைப்பு விடுத்தார். அதே திருச்சியில் மீண்டும் 1990ம் ஆண்டு பிப்ரவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் தி.மு. கழக மாநில மாநாடு நடைபெற்றது.
அந்த திருச்சியில்தான் இப்போது அன்பிலுக்கு சிலை திறப்பு விழா!. "அன்பில் அழைக்கிறார்'' என்ற தலைப்பில் அண்ணா அழைத்தபோது என்ன சொல்லி அழைத்தார் என்பதை நினைவூட்டவா?.

"முடியுமா? முடியும்! என்று எண்ணுவோரின் தொகையையும், வகையையும், அவர்தம் உறுதியையும், உற்சாகத்தையும், அவர்தம் உள்ளத்தில் பொங்கி, கண்வழி வழியும் பேரார்வத்தையும் காட்டுகிறேன் வாரீர், என்று அழைக்கிறார், அன்பில்!. லட்சக்கணக்கில் கூடப் போகிறார்கள்- லட்சிய முழக்கம் கேட்கப் போகிறது. சிங்களத் தீவிலிருந்தும், திருநெல்வேலிச் சீமையிலிருந்தும் சிங்காரச் சென்னையிலிருந்தும் பிற மாவட்டம் பலவற்றிலிருந்தும் அடலேறுகளும், அவர்கட்குக் காதல் தேனில் வீரத்தைக் குழைத்தளிக்கும் குமரிகளும், வீரரைப் பெற்றெடுத்த தாய்மார்களும், அவர்தம் இளமை வளத்தை எண்ணிக் களித்திடும் முதியோரும், வரலாறு அறிந்த மாணவர்களும், புதிய வரலாறு காணும் பாட்டாளித் தோழர்களும், அணி அணியாக வரப் போகிறார்கள்.

கடல் அலையை மிஞ்சிடும் களிப்பொலி எழுப்பியபடி, குடும்பம் குடும்பமாக வரப் போகிறார்கள்- குதூகலம் காணப் போகிறார்கள்.

குன்றெடுக்கும் நெடுந்தோளையும், குளிர்மதிப் பார்வையையும், இன்று கண்டோம் இனி வென்றோம், என்று எவரும் ஆர்வத்துடன் கூறிடத்தக்க வகையில் திரண்டு வருகிறார்கள் திரு இடத்தவர்கள்! காண வாரீர், கடமையை உணர வாரீர்! கருத்தளிக்கவும், காரியமாற்றவும், கலங்கா உள்ளம் படைத்தோரே! திரண்டு வாரீர்! தீரரும் வீரருமான திரு இடத்தினர் எத்துணை எழுச்சியுடன் அணி வகுத்து நிற்கின்றனர் என்பதை எவரும் அறியத்தக்க விதத்திலே வந்து சேருமின்!.

பெற்றேனே இந்த மக்களை, மாற்றான் எனை ஏச, கூசாது கேட்டுக் கிடந்தனரே குனிந்த தலையுடன்- என்னால் சீராட்டி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் என்று கூறிக் கொண்டிருந்த தாயகம்; இன்று ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியையும் வீரத்தையும் கண்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு "நான் பெற்ற செல்வங்களே! தீர்ந்ததே என் துக்கம்.

இனி என் தளை உடைபடும் என்ற நம்பிக்கை பிறந்ததடா'' என்று வாழ்த்தி வரவேற்கிறது! அன்னையின் பணிக்காக அருமந்த மக்காள், அனைவரும் வருக!! என்றெல்லாம் கூறி அழைக்கிறார் அன்பில்!'' என்று அண்ணா அன்று எழுதினார்.

நானும் அழைக்கிறேன்:

அந்த அன்பிலுக்கு சிலை திறக்கும் நிகழ்ச்சிக்கு உன்னை அழைக்க அண்ணாவும் இல்லை, அந்த அன்பிலும் இல்லை. நான்தான் இருக்கிறேன் உனை அழைக்க. என் வாயார, மனமார உன்னையெல்லாம் திருச்சிக்கு அழைக்கிறேன் இந்த மடலின் மூலமாக!.

அண்ணா மறைந்த பிறகு 1990ல் நடைபெற்ற மாநாட்டின் போது நம்மோடு இருந்த- அன்பிலின் மகன் சட்டமன்ற உறுப்பினராக, இளைஞர் அணியின் நிர்வாகியாக இருந்த தம்பி பொய்யாமொழியும் இப்போது இல்லை.

திருச்சியில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்ற வரிசையில் அன்பில் தர்மலிங்கத்தில் தொடங்கி, பொன்மலை பராங்குசம், து.ப.அழகமுத்து, திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன், குளித்தலை முத்துக்கிருஷ்ணன், எம்.எஸ்.மணி, மு.க.து. நடராசன், உப்பிலியாபுரம் அர.நடராசன், இளமுருகு பொற்செல்வி, திருச்சி பாலகிருஷ்ணன், கஸ்தூரிராஜ், நகரச் செயலாளராக இருந்த ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி, நாதன் கம்பெனி பாண்டுரங்கம், காமாட்சி. ராபி ஷரீப் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்!.

1955ம் ஆண்டுவாக்கில் திருச்சியில் கழகத் தோழர்களிடையே சற்று ஒற்றுமையின்மை ஏற்பட்டபோது, அண்ணா திருச்சிக்கே இனி நான் வர மாட்டேன் என்றொரு முடிவினையெடுத்தார். அன்பில் தர்மலிங்கம் தலைமையில் திருச்சி தோழர்கள் எல்லாம் என்னை அணுகியபோது முதலில் அண்ணா ஒப்புக் கொள்ளாமல், என்னை திருச்சிக்கு அனுப்பி முதலில் அங்கே கழகத்திற்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்யச் சொன்னார்.

அவ்வாறே நானும் திருச்சி சென்று அதற்கான செயல்களில் ஈடுபட்ட பின்னர் அண்ணா மகிழ்ந்து, கைத்தறித் துணிகளை விற்பதற்காக கழகம் முடிவெடுத்து திருச்சியில் யார் விற்பது என்ற கேள்வி எழுந்த போது, "திருச்சியில் நானே கைத்தறித் துணி விற்கப் போகிறேன்'' என்று அண்ணா அறிவித்தார்.

ஒரு முறை தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் காலையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு, அன்று மாலையில் அன்பில் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக ஒப்புக் கொண்டிருந்தேன். திருமணத்திற்காக நான், மாறன், அன்பில் தர்மலிங்கம், பராங்குசம், பண்ணை முத்து கிருஷ்ணன், குளித்தலை முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் காரில் போய்க் கொண்டிருந்தோம். அது ஒரு ஆற்றங்கரைப் பாதை.

நாங்கள் அதே கரையில் இரண்டொரு மைல் தூரம் சென்று அதற்குப் பிறகு ஒரு பாலத்தைக் கடந்து, அடுத்த கரையில் உள்ள திருமண வீட்டிற்கு வந்தாக வேண்டும். அந்தத் திருமண வீட்டிற்கு எனக்கு முன்பு சென்றாக வேண்டுமென்று விரும்பிய அந்தப் பகுதி மக்கள் ஆற்றிலே இறங்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

எங்கள் கார் பாலத்தைச் சுற்றிக் கொண்டு அடுத்த கரை வழியாக வந்த போது, ஆற்றின் கரையில் ஒரு கூட்டம் நின்றதைக் கண்டு, காரை நிறுத்தி விட்டு, அன்பில் தர்மலிங்கம் அங்கே சென்று என்னவென்று விசாரித்தார்.

ஆற்றில் இறங்கி வந்த இளைஞர் ஒருவன் நீரில் மூழ்கி அவனைத் தூக்கி வந்து போட்டிருந்தார்கள். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பிழைக்கவில்லை. அவனது உயிரற்ற உடலை அனுப்பிவிட்டு திருமண வீட்டிற்குச் சென்று மணவிழாவினை நடத்தி வைத்து விட்டு, கல்லணைக்குத் திரும்பினோம்.

மாலையில் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுத் திரும்பும்போது, இரட்டை மாட்டு வண்டியில் சென்றால் சுற்றிக் கொண்டு போக வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி எதிரே உள்ள கல்லணைக்குச் சென்று விடலாம் என்று அனைவரும் கூற நானும் தலையை அசைத்து விட்டேன். கொள்ளிடத்தின் குறுக்கே இறங்கி கொஞ்ச தூரம் சென்றிருப் போம்.

திடீரென ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. மாறனை அன்பில் தர்மலிங்கம் தன் தோளில் தூக்கிக் கொண்டார். ரத்தினம் என்ற ஒரு தோழர் என்னைத் தூக்கிக் கொண்டார். நேரமாக வெள்ளம் பெருகி, பிழைத்து கரையேறுவோமா என்பது சந்தேகத்திற்குரியதாகி, எப்படியோ நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரவு ஒரு மணி அளவில் கரையேறினோம். இதுவும் ஒரு மறக்க முடியாத சம்பவம் .

அன்பில் தர்மலிங்கம் தன் வாழ்நாளில் பல பதவிகளை வகித்தவர். ஊராட்சி மன்றத்தலைவராக, கூட்டுறவு சங்க இயக்குநராக, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக, சென்னை கூட்டுறவு வங்கி இயக்குனராக, திருச்சி மாவட்ட கழகத்தின் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். என்னுடைய அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக மட்டுமல்லாமல், உள்ளாட்சித் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளையும் அவர் பொறுப்பேற்று நடத்தினார்.

அண்ணாவின் அமைச்சரவையிலேயே இடம் பெற்றிருக்க வேண்டிய அன்பிலை; 1971ம் ஆண்டு நான் இரண்டாவது முறையாக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தபோது; 8-3-1972 அன்று எனது அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக ஆக்கினேன்.

1986ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்பில் தர்மலிங்கத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் "பெரியார் விருதினை'' என் கையினால் வழங்கி நானே பெருமைப்பட்டுக் கொண்டேன்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அன்பில் தர்மலிங்கம், உழைப்பால் உயர்ந்தவர். பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர், காயிதேமில்லத் போன்ற தலைவர்களின் அன்பைப் பெற்றார்.

அன்பிலும் நானும் நண்பர்களாக தொடங்கியது- அடுத்த தலைமுறையில் தம்பி மு.க.ஸ்டாலினும், அன்பிலின் மகன் பொய்யாமொழியும் நண்பர்களாக இரண்டாம் தலைமுறையில் தொடர்ந்து- இப்போது ஸ்டாலினின் மகன் உதயநிதியும், பொய்யாமொழியின் மகன் மகேந்திரனும் நண்பர்களாகித் தொடருகிறது நட்பு. அந்த நட்பின் அடையாளச் சின்னம், அன்பிலின் சிலையைத் திறக்கத்தான் திருச்சி வருகிறேன்; அங்கே திருச்சி தீரர்களுடன் நீயும் இருப்பாய் என்ற நம்பிக்கையுடன்!

ஆம்; என்னையும் உன்னையும் சிலை வடிவில் நின்று சிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார்- எத்தனையோ கோபதாபங்கள்- எம்மிடையே ஊடல்கள்- உறவுகள்! எதையும் உரிமையுடன்- உணர்வு கலந்த உண்மை நட்புடன்- கணமும் பிரியாமல் கண்ணின் கருவிழி போல என்னையும்- என் நட்பையும்- எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன் இன்றில்லையெனினும் இதோ- தம்பி நேருவின் தளராத உழைப்பின் சின்னமாக தடந்தோள் உயர்த்தி நிற்கும்- அந்தத் தங்கத் திருமகனின் பெயரை நெஞ்சில் தாங்கி- அன்று திருச்சியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார் அண்ணா; "அன்பில் அழைக்கிறார்'' என்று! இதோ நானும் அழைக்கின்றேன்! வா! உடன்பிறப்பே! அந்தத் திருநகர் திருச்சியில் சந்திப்போம்!

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி

nandri thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'அன்பில் தர்மலிங்கம்'-பழைய நினைவுகளில் மூழ்கிய முதல்வர்  Empty Re: 'அன்பில் தர்மலிங்கம்'-பழைய நினைவுகளில் மூழ்கிய முதல்வர்

Post by கார்த்திக் Tue Sep 07, 2010 12:36 pm

நன்றி அன்பு மலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

'அன்பில் தர்மலிங்கம்'-பழைய நினைவுகளில் மூழ்கிய முதல்வர்  Empty Re: 'அன்பில் தர்மலிங்கம்'-பழைய நினைவுகளில் மூழ்கிய முதல்வர்

Post by V.Annasamy Tue Sep 07, 2010 12:38 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

'அன்பில் தர்மலிங்கம்'-பழைய நினைவுகளில் மூழ்கிய முதல்வர்  Empty Re: 'அன்பில் தர்மலிங்கம்'-பழைய நினைவுகளில் மூழ்கிய முதல்வர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum