புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
61 Posts - 43%
heezulia
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
6 Posts - 4%
prajai
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
21 Posts - 5%
prajai
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 9:19 pm

மகிஷாசுரனின் அராஜகம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கியது. எல்லாவற்றினுள்ளும் நிறைந்த சக்தி ஒன்றாகத் திரண்டது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவருக்குள் பொலிந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் பின்னிப் பிணைந்தது. சட்டென்று பிரபஞ்சத்தையே மறைத்து நிற்கும் பேரொளி உதயமாயிற்று. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. அரக்கர்கள் அதிர்ந்தனர். தேவர்கள் சந்தோஷத்துடன் ‘துர்க்கா... துர்க்கா...’ என்று தலைமீது கரம் கூப்பித் தொழுதனர்.

‘து’ எனும் எழுத்திலுள்ள ‘த்,’ சத்ரு நாசத்தையும், ‘உ,’ கர்மவினை அழிவையும், ‘ர்,’ நோயை விரட்டுவதையும், ‘க,’ பாவங்கள் பொசுங்குவதையும், ‘ஆ’ பயத்தை வெற்றிகொள்வதையும் குறிக்கின்றன. மகிஷனை அறைந்து தனது சூலத்தை பாய்ச்சி, தலையை வெட்டி அதன்மீதேறி நின்றாள் தேவி. அவளே மகிஷாசுரமர்த்தினியாகி பார் முழுதும் தன் அருளை பரப்பினாள். பிரபஞ்ச சக்தியான துர்க்கையின் அம்சமாக அவளிலிருந்தே பல்வேறு சக்திகள் வெளிப்பட்டு பல்வேறு துர்க்கை ரூபங்களாயின. ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு மந்திரம், உப தேவதைகள், வாகனம், தனித்த உருவம் ஆகியவற்றுடன் திகழ்ந்தன. அவர்களில் காலராத்ரி துர்க்கை என்பவள் தனித்துவம் மிக்கவளாக பொலிந்தாள். அவளையே அழகுத் தமிழில் கருக்கினில் அமர்ந்தாள் என்று அழைத்தனர்.

கருக்கினில் என்றால் கிராமிய வழக்கு மொழியில் கருக்கல் வேளை என்பது பொருள். அதாவது இருள் சூழ்ந்திருக்கும் நேரம் என்பதாகும். ஆகமங்கள் இவளை இருட்டில் வழிபாட்டிற்குரியவளாக சொல்கின்றன. மாலையும் இருளும் சந்திக்கும் நேரத்தையும் கருக்கல் என்று சொல்லலாம். முற்காலத்தில் இரவு பூஜைகள் இங்கு சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. மரங்களில் தெய்வங்கள் உறைவதாக வேத நூல்கள் உரைக்கின்றன. உதாரணமாக வாழைத்தண்டின் உட்புற மத்திய பாகத்தில் காளி உறைவதாகவும், அவளே ‘கதலீ கர்ப்ப மத்யஸ்தா காளி’ என்றும் சொல்வார்கள். வாழைத் தோப்பு காளியின் ஆட்சிக்குட்பட்டது. வேம்பில் அம்மன் குடி கொண்டிருப்பதை நம் அன்றாட வழிபாடுகளில் உணர்கிறோம். அதேபோல பனை மரத்திலுள்ள கருக்குகளில் தன் கூர்மையான சக்தியோடு இவள் உறைவதால் கருக்கினில் அமர்ந்தாள் என்று அழைத்தனர். பனை மரக்காட்டில் நிலைகொண்டவள் என இவளை சில நூல்கள் குறிப்பிட்டுப் பேசுகின்றன. அதற்கு ஆதாரமாக இந்த கருக்கினில் அமர்ந்தாள் ஆலயத்தைச் சுற்றி நிறைய பனை மரங்கள் இருந்ததாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.

காண்பதற்கு அபூர்வமானவளும், அருள் செய்வதில் இணையில்லாதவளுமான கருக்கினில் அமர்ந்தாள் கோயிலுக்குள் செல்வோமா?

கோயில் வளாகத்திலேயே மேற்கில் வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ‘‘கருக்கமர்ந்த பட்டாரியார் கோயில்’’ என்று காஞ்சி கல்வெட்டுக்கள் இக்கோயில் பற்றி பேசுகின்றன. கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம் ஆகியவை பாங்குற அமைந்துள்ளன. கோயிலுக்கு வெளியே, வாயிலருகில், கருவறைக்கு நேராக பத்மாசனத்தில் புத்தர் தியானத்தில் ஆழ்ந்துள்ள சிலை வடிவங்களும், கத்தி, கேடயத்துடன் வீரன் சிற்பமும், நாகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலின் இருபுறமும் சுதையில் செய்யப்பட்ட துவாரபாலகர் நின்றிருக்கின்றனர். பக்கத்திலேயே நவகிரக சந்நதி அமைந்துள்ளது. கோயிலின் அர்த்த மண்டபம் நீள் சதுர வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கருவறை யில் ஐந்தடி உயர முடைய துர்க்கையின் சிற்பத்தைப் பார்க்க உடல் சிலிர்க்கிறது.

தேவி மகாத்மியம், காலராத்ரி துர்க்கை எனும் கருக்கினில் அமர்ந்தாளை அழகாக வர்ணிக்கிறது. இருளைப்போல கருத்த மேனியை உடையவளாக பயங்கர ரூபத்தோடு விளங்குகிறாள். போர்க்களத்தின் மையத்தில் நெடிய உருவத்தோடு பலத்த காற்றினில் அலைந்தபடி இருக்கும் ஈட்டிகளைப் போன்ற கேசங்கள் இவளுக்கு. கழுத்தில் மின்னலைப் போன்று ஒளிவீசும் மாலை. கண்கள் நெருப்புப் பந்துகள் போல சுழன்று கொண்டிருக்கின்றன. மூச்சு விடும்போது அக்னி ஜ்வாலை தெறிக்கிறது. துஷ்டர்களுக்கும் பகைவர்களுக்கும் பயத்தை உண்டாக்குகிறாள். அதேசமயம், பக்தர்களுக்கு அபய ஹஸ்தம் காட்டி இன்னருள் புரிகிறாள். இந்த வர்ணனைக்குட்பட்ட அதே உருவத்தை இங்கு மூல தேவியாக வடித்திருக்கிறார்கள். எண்கரத்தவளான இவளுக்கு மெல்லிய தேகம்தான்; ஆனால் உறுதியோடிருக்கிறாள். கண்களில் கோபம் தெரிந்தாலும், அதன் மையத்தே கருணை ஊற்றும் கொப்பளிக்கிறது. காலடியில் வீழ்ந்திருக்கும் மகிஷாசுரன் மீது அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆலயத்தின் தொன்மையும் காலராத்ரி தேவியின் சாந்நித்தியமும் மனதை நிறைக்கின்றன.

துர்க்கையின் அம்சங்களில் சற்று உக்கிரமான தேவி இவள். அனுக்கிரகம் செய்வதில் தாயுள்ளம் படைத்தவளும் இவள்தான். காலம் கடந்த சக்தியான கருக்கினில் அமர்ந்தாளை காலம் தாழ்த்தாது வணங்கினால், அன்னையின் அருட்சக்தி, நம் உடலிலும் வாழ்விலும் மென்மையாக ஊடுருவுவதை சுகமாக உணர முடிகிறது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் வீதி வழியாக வள்ளல் பச்சையம்மன் சாலை, மேட்டுத்தெரு பஸ் நிறுத்தம் அருகே இக்கோயில் உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக