ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம்

Go down

வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Empty வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம்

Post by சிவா Fri Jul 31, 2009 9:19 pm

மகிஷாசுரனின் அராஜகம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கியது. எல்லாவற்றினுள்ளும் நிறைந்த சக்தி ஒன்றாகத் திரண்டது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவருக்குள் பொலிந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் பின்னிப் பிணைந்தது. சட்டென்று பிரபஞ்சத்தையே மறைத்து நிற்கும் பேரொளி உதயமாயிற்று. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. அரக்கர்கள் அதிர்ந்தனர். தேவர்கள் சந்தோஷத்துடன் ‘துர்க்கா... துர்க்கா...’ என்று தலைமீது கரம் கூப்பித் தொழுதனர்.

‘து’ எனும் எழுத்திலுள்ள ‘த்,’ சத்ரு நாசத்தையும், ‘உ,’ கர்மவினை அழிவையும், ‘ர்,’ நோயை விரட்டுவதையும், ‘க,’ பாவங்கள் பொசுங்குவதையும், ‘ஆ’ பயத்தை வெற்றிகொள்வதையும் குறிக்கின்றன. மகிஷனை அறைந்து தனது சூலத்தை பாய்ச்சி, தலையை வெட்டி அதன்மீதேறி நின்றாள் தேவி. அவளே மகிஷாசுரமர்த்தினியாகி பார் முழுதும் தன் அருளை பரப்பினாள். பிரபஞ்ச சக்தியான துர்க்கையின் அம்சமாக அவளிலிருந்தே பல்வேறு சக்திகள் வெளிப்பட்டு பல்வேறு துர்க்கை ரூபங்களாயின. ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு மந்திரம், உப தேவதைகள், வாகனம், தனித்த உருவம் ஆகியவற்றுடன் திகழ்ந்தன. அவர்களில் காலராத்ரி துர்க்கை என்பவள் தனித்துவம் மிக்கவளாக பொலிந்தாள். அவளையே அழகுத் தமிழில் கருக்கினில் அமர்ந்தாள் என்று அழைத்தனர்.

கருக்கினில் என்றால் கிராமிய வழக்கு மொழியில் கருக்கல் வேளை என்பது பொருள். அதாவது இருள் சூழ்ந்திருக்கும் நேரம் என்பதாகும். ஆகமங்கள் இவளை இருட்டில் வழிபாட்டிற்குரியவளாக சொல்கின்றன. மாலையும் இருளும் சந்திக்கும் நேரத்தையும் கருக்கல் என்று சொல்லலாம். முற்காலத்தில் இரவு பூஜைகள் இங்கு சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. மரங்களில் தெய்வங்கள் உறைவதாக வேத நூல்கள் உரைக்கின்றன. உதாரணமாக வாழைத்தண்டின் உட்புற மத்திய பாகத்தில் காளி உறைவதாகவும், அவளே ‘கதலீ கர்ப்ப மத்யஸ்தா காளி’ என்றும் சொல்வார்கள். வாழைத் தோப்பு காளியின் ஆட்சிக்குட்பட்டது. வேம்பில் அம்மன் குடி கொண்டிருப்பதை நம் அன்றாட வழிபாடுகளில் உணர்கிறோம். அதேபோல பனை மரத்திலுள்ள கருக்குகளில் தன் கூர்மையான சக்தியோடு இவள் உறைவதால் கருக்கினில் அமர்ந்தாள் என்று அழைத்தனர். பனை மரக்காட்டில் நிலைகொண்டவள் என இவளை சில நூல்கள் குறிப்பிட்டுப் பேசுகின்றன. அதற்கு ஆதாரமாக இந்த கருக்கினில் அமர்ந்தாள் ஆலயத்தைச் சுற்றி நிறைய பனை மரங்கள் இருந்ததாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.

காண்பதற்கு அபூர்வமானவளும், அருள் செய்வதில் இணையில்லாதவளுமான கருக்கினில் அமர்ந்தாள் கோயிலுக்குள் செல்வோமா?

கோயில் வளாகத்திலேயே மேற்கில் வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ‘‘கருக்கமர்ந்த பட்டாரியார் கோயில்’’ என்று காஞ்சி கல்வெட்டுக்கள் இக்கோயில் பற்றி பேசுகின்றன. கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம் ஆகியவை பாங்குற அமைந்துள்ளன. கோயிலுக்கு வெளியே, வாயிலருகில், கருவறைக்கு நேராக பத்மாசனத்தில் புத்தர் தியானத்தில் ஆழ்ந்துள்ள சிலை வடிவங்களும், கத்தி, கேடயத்துடன் வீரன் சிற்பமும், நாகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலின் இருபுறமும் சுதையில் செய்யப்பட்ட துவாரபாலகர் நின்றிருக்கின்றனர். பக்கத்திலேயே நவகிரக சந்நதி அமைந்துள்ளது. கோயிலின் அர்த்த மண்டபம் நீள் சதுர வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கருவறை யில் ஐந்தடி உயர முடைய துர்க்கையின் சிற்பத்தைப் பார்க்க உடல் சிலிர்க்கிறது.

தேவி மகாத்மியம், காலராத்ரி துர்க்கை எனும் கருக்கினில் அமர்ந்தாளை அழகாக வர்ணிக்கிறது. இருளைப்போல கருத்த மேனியை உடையவளாக பயங்கர ரூபத்தோடு விளங்குகிறாள். போர்க்களத்தின் மையத்தில் நெடிய உருவத்தோடு பலத்த காற்றினில் அலைந்தபடி இருக்கும் ஈட்டிகளைப் போன்ற கேசங்கள் இவளுக்கு. கழுத்தில் மின்னலைப் போன்று ஒளிவீசும் மாலை. கண்கள் நெருப்புப் பந்துகள் போல சுழன்று கொண்டிருக்கின்றன. மூச்சு விடும்போது அக்னி ஜ்வாலை தெறிக்கிறது. துஷ்டர்களுக்கும் பகைவர்களுக்கும் பயத்தை உண்டாக்குகிறாள். அதேசமயம், பக்தர்களுக்கு அபய ஹஸ்தம் காட்டி இன்னருள் புரிகிறாள். இந்த வர்ணனைக்குட்பட்ட அதே உருவத்தை இங்கு மூல தேவியாக வடித்திருக்கிறார்கள். எண்கரத்தவளான இவளுக்கு மெல்லிய தேகம்தான்; ஆனால் உறுதியோடிருக்கிறாள். கண்களில் கோபம் தெரிந்தாலும், அதன் மையத்தே கருணை ஊற்றும் கொப்பளிக்கிறது. காலடியில் வீழ்ந்திருக்கும் மகிஷாசுரன் மீது அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆலயத்தின் தொன்மையும் காலராத்ரி தேவியின் சாந்நித்தியமும் மனதை நிறைக்கின்றன.

துர்க்கையின் அம்சங்களில் சற்று உக்கிரமான தேவி இவள். அனுக்கிரகம் செய்வதில் தாயுள்ளம் படைத்தவளும் இவள்தான். காலம் கடந்த சக்தியான கருக்கினில் அமர்ந்தாளை காலம் தாழ்த்தாது வணங்கினால், அன்னையின் அருட்சக்தி, நம் உடலிலும் வாழ்விலும் மென்மையாக ஊடுருவுவதை சுகமாக உணர முடிகிறது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் வீதி வழியாக வள்ளல் பச்சையம்மன் சாலை, மேட்டுத்தெரு பஸ் நிறுத்தம் அருகே இக்கோயில் உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum