Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
+2
ramesh.vait
சிவா
6 posters
Page 1 of 1
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
எழும்பூர் பஸ் நிலையம் போர்க்களமானது
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
பஸ் உடைப்பு; பயணிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம்
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
பஸ் உடைப்பு; பயணிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம்
![கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Ms02](https://2img.net/h/www.dailythanthi.com/images/news/20090731/ms02.jpg)
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பஸ் அடித்து உடைக்கப்பட்டது.
எழும்பூர் பஸ் நிலையம்
சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் `15 பி' (டி.என்.01 என்2922) பஸ் நேற்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் பச்சையப்பா கல்லூரிக்கு செல்வதற்காக சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறினார்கள்.
பயணிகள் கூட்ட நெரிசலுடன் புறப்பட்ட பஸ் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலைய பஸ் நிலையத்திற்குள் நுழைந்தது. அந்த பஸ் நிலையத்தில், பஸ்சுக்கு காத்திருப்பது போல் சுமார் 40, 50 மாணவர்கள் ஏற்கனவே நின்றிருந்தனர். பஸ் நிலையத்தில் பயணிகள் ஏறுவதற்காக டிரைவர் பழனிச்சாமி பஸ்சை நிறுத்தினார்.
மாணவர்கள் மீது தாக்குதல்
அப்போது, திடீரென்று பஸ் நிலையத்தில் நின்றிருந்த மாணவர்கள் கையில் வைத்திருந்த கத்தி, வீச்சரிவாள், உருட்டுக் கட்டை, கிரிக்கெட் ஸ்டம்பு, ஆக்கி மட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பஸ்சுக்குள் புகுந்தனர்.
பஸ்சில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது சரமாரியாக தாக்கினார்கள். குறிப்பாக, கல்லூரி மாணவர்களை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
4, 5 பேர் முன்பக்க வாசல் வழியாகவும், மீதி இருந்தவர்கள் பின்பக்க வாசல் வழியாகவும் ஏறி இந்த தாக்குதலை நடத்தினார்கள். தாக்குதலின்போது பஸ்சை நோக்கி கற்கள், சோடா பாட்டில்களும் வீசப்பட்டன.
பஸ்சின் ஜன்னலோரம் இருந்த மாணவர்களை வெளியே நின்ற எதிர் கோஷ்டியினர் இரும்பு ராடால் குத்தினார்கள். அப்போது பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் சிலரது மீதும் உருட்டுக் கட்டை அடி விழுந்தது.
![கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் First](https://2img.net/h/www.dailythanthi.com/images/news/20090731/First.jpg)
Re: கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
![கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Ms01](https://2img.net/h/www.dailythanthi.com/images/news/20090731/ms01.jpg)
அரிவாள் வெட்டு
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த திடீர் தாக்குதலை பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அலறி அடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து தப்பித்தோம்.. பிழைத்தோம்.. என்று வெளியே ஓடினார்கள். பஸ்சில் இருந்து அவசரமாக கீழே குதித்த சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
தாக்குதலை நடத்திய மாணவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரெயில் நிலைய தண்டவாளம் வழியாக புதுப்பேட்டையை நோக்கி தப்பித்து ஓடிவிட்டனர்.
காயம் அடைந்த பயணிகளும், மாணவர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். செருப்பு, புத்தக பை, நோட்டு, ஆயுதங்கள், சோடாபாட்டில், உடைந்த பஸ் ஜன்னல் கண்ணாடி ஆகியவை ஆங்காங்கே சிதறி கிடந்தது. இதனால் எழும்பூர் ரெயில்நிலைய பஸ் நிலையம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த சம்பவத்தில் பச்சையப்பா கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் சுரேஷ் என்ற மாணவருக்கு காதில் அரிவாள் வெட்டு விழுந்தது. காது அறுந்து தொங்கிய நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட நின்றிருந்த அவரை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
மாணவர்களின் இந்த திடீர் மோதலில் பயணிகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பயணிகள் சாந்த்சிங், பிரகாஷ், செந்தில்குமார், நித்யானந்தம், பிரேம் குமார் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் திருவொற்றிïர் வில்லேஜ் தெருவை சேர்ந்த சுரேஷ், நிஷாந்த், கார்த்திக் (பழைய மாணவர்), தேவராஜ், செல்வா ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
கார்த்திக், தேவராஜ் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மோதல் ஏன்?
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இணை கமிஷனர் ரவிக்குமார், உதவி போலீஸ் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பச்சையப்பன் கல்லூரி மாணவர் சுரேஷிடம் நடந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையில், ``எங்களை தாக்கியது அண்ணாசாலையில் உள்ள ஆண்கள் கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள்தான். ஆனால் ஏன் தாக்கினார்கள் என்பது தெரியவில்லை'' என்று சுரேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்திற்கான காரணம் குறித்தும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைது செய்ய நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் சுமார் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்லூரி மாணவர்களோடு ரவுடிகளும் இணைந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் யார், யார் என்பதை போலீசார் அடையாளம் கண்டு வருகிறார்கள். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் இணை கமிஷனர் ரவிக்குமார் தெரிவித்தார்.
பொதுவாக இதுபோல் நடக்கும் மாணவர்கள் மோதல் சம்பவங்களில் போலீசார் யாரையும் கைது செய்வதில்லை. வழக்குப்பதிவு செய்வதோடு நின்று விடுவார்கள். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்க கூடாது என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ஏற்கனவே 4, 5 ஆண்டுகளில் மாணவர்கள் மோதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். அவர்களை கைது செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைத்து கல்லூரி மாணவர் சங்கங்கள், அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
முன்பு சென்னை சட்டக்கல்லூரி,
இப்பொழுது ,
அடுத்து ,![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இப்பொழுது ,
அடுத்து ,
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
thesa- இளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
Re: கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
ramesh.vait wrote:கொடுமை
மானவர்கள் முட்டிக்கொண்டது போதாதென்று நீங்களும் ஏன்?
paarthaa077- பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
Re: கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
மாணவர் மத்தியில் ஏற்படும் புரிந்துணர் வின்மையும், இளைஞர்கள் என்ற துணிவும் தான் இந்த மோதல் களுக்கி காரனமாகின்ரன,
இதே ஆவேசத்தை வேறு முன்னேற்றப் பாதையில் திருப்பினால் கனவுகானும் இந்தியாவின் கனவு பலிக்கும்
ஈகரை நண்பர்களே இயன்றாவரை உங்களோடு இருக்கும் நண்பர்களின் மீது அக்கறை கொள்ளுங்கள் அவர்கள் இது போன்ர செயற்பாடுகளில் இறங்காமல் பாத்துக்கொள்ளுங்கள். மற்றாவர்க்ளை நோகடிப்பதன் மூலம் நான் இழக்கப் போவது தான் அதிகம் என அறிவுரை கூறுங்கள்
இயன்றாவரை தீய செயல்லளுக்கு உந்து சக்தியாக இருப்பதை தவிர்ப்போம்
இதே ஆவேசத்தை வேறு முன்னேற்றப் பாதையில் திருப்பினால் கனவுகானும் இந்தியாவின் கனவு பலிக்கும்
ஈகரை நண்பர்களே இயன்றாவரை உங்களோடு இருக்கும் நண்பர்களின் மீது அக்கறை கொள்ளுங்கள் அவர்கள் இது போன்ர செயற்பாடுகளில் இறங்காமல் பாத்துக்கொள்ளுங்கள். மற்றாவர்க்ளை நோகடிப்பதன் மூலம் நான் இழக்கப் போவது தான் அதிகம் என அறிவுரை கூறுங்கள்
இயன்றாவரை தீய செயல்லளுக்கு உந்து சக்தியாக இருப்பதை தவிர்ப்போம்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
சமூகம் எந்தளவு கேட்டு கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம்
» சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு :
» தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் மோதல்-7 கிராமங்களில் பதற்றம்
» தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
» மேட்டூரில் கொட்டும் மழையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆயுதங்களுடன் ரவுடிகள் மோதல்
» சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு :
» தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் மோதல்-7 கிராமங்களில் பதற்றம்
» தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
» மேட்டூரில் கொட்டும் மழையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆயுதங்களுடன் ரவுடிகள் மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|