ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கும் வெட்கமில்லை

+2
இந்திரஜித்தன்
jeylakesengg
6 posters

Go down

யாருக்கும் வெட்கமில்லை  Empty யாருக்கும் வெட்கமில்லை

Post by jeylakesengg Thu Sep 02, 2010 12:01 pm

‘எம்.பி.க்கள் தங்கள் சம்பளத்தைத் தாங்களே இப்படி உயர்த்திக்கொள்வது வெட்கக்கேடான விஷயம். இந்தியாவில் வேறு யாரும் இப்படி தங்கள் சம்பளத்தை தாங்களே உயர்த்திக்கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை!’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் சூடாகச் சொன்ன விஷயம் இது! பிருந்தா காரத்தும் ஒரு எம்.பி.தான். ஆனால் இடதுசாரி எம்.பி.க்கள் இந்த சம்பள உயர்வைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ‘பணவீக்கத்தாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்போது இந்த சம்பள உயர்வு தேவையா?’ என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை சம்பள உயர்வு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.
இடதுசாரிகளைத் தவிர மற்ற எல்லா கட்சியினர் மத்தியிலும் இந்த விஷயத்தில் அநியாய ஒற்றுமை. சொல்லப்போனால், கடந்த பல ஆண்டுகளில் ஆளுங்கட்சிக் கூட்டணியும் எதிர்க்கட்சிக் கூட்டணியும் ஒரே குரலில் பேசியது இப்போதுதான். நாடாளுமன்றத்தில் மட்டுமில்லை... பல மாநில சட்டசபைகளிலும் சம்பள உயர்வு விஷயம் விவாதத்துக்கு வரும்போது எதிர்ப்புத் தெரிவிப்பது இடதுசாரிகள் மட்டும்தான்! மக்கள் பிரச்சனைகள் எதற்கும் ஒரே குரலில் பேசாத ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைவது இந்த ஒரே விஷயத்தில்தான். இதில் ஏதாவது கருத்து வேறுபாடு வந்தால், ‘சம்பளத்தை எவ்வளவு உயர்த்துவது’ என்பதில் மட்டுமாகத்தான் அது இருக்கும்.

இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பலரும் தாங்கள் பெறும் சம்பளத்தை அப்படியே கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி தங்களுக்குத் தரும் சம்பளத்தையே பெற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனாலேயே, ‘தங்களுக்கு நேரடியாக பலன் கிடைக்கவில்லை என்பதால்தான் இவர்கள் சம்பள உயர்வை எதிர்க்கிறார்கள்’ என்ற பழியை இதர ‘பரம ஏழை’ எம்.பி.க்கள் இவர்கள் மீது சுமத்துகிறார்கள்.

ஏற்கனவே அலுவலக அலவன்ஸ், தொகுதி அலவன்ஸ் ஆகியவற்றோடு சேர்த்து 56 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டிருந்த எம்.பி.க்கள் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறப்போகிறார்கள். இதனால் ஓர் ஆண்டுக்கு சுமார் 142 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் அதிகப்படியாக, சம்பளம் என்ற வகையில் இவர்கள் பாக்கெட்டுக்குப் போகப்போகிறது.
அதுமட்டுமில்லை... இந்த சம்பள உயர்வைக் கடைசியாகத் தேர்தல் நடந்த கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அமல்படுத்துவதால், இவர்களுக்கு அரியர்ஸும் கிடைக்கும். அதற்குத் தனியாக 118 கோடி ரூபாய் செலவாகிறது.

நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் தினப்படி என்ற பெயரில் இவர்களுக்கு ஏற்கனவே ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தியது போதாது என சிலர் குரல் கொடுத்து, ‘நாடாளுமன்றம் நடைபெறாத நாட்களுக்கும் வேறு ஏதாவது பெயரில் ஒரு அலவன்ஸ் வழங்கவேண்டும்’ என்று விபரீதக் கோரிக்கை வைத்தார்கள். நல்லவேளையாக, சீனியர் எம்.பி.க்கள் பார்வையில் அது ‘கண்ணியக்குறைவான’ கோரிக்கையாகத் தெரிந்துவிட்டது. அதனால் அது ஏற்கப்படவில்லை.

கடந்த சில நாட்களாக எம்.பி.க்கள் சம்பள விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பி, நாடெங்கிலும் இதுபற்றி கேலியான விவாதங்கள் டீக்கடை பெஞ்சுகளிலும் நடந்தது சிலரையாவது குற்ற உணர்வில் ஆழ்த்தியிருக்க வேண்டும். இது அத்வானி பேச்சில் தெரிந்தது. ‘இப்படி சம்பள உயர்வு விவகாரத்தை வெளிப்படையாக எம்.பி.க்கள் பேச நேர்வது நல்லதில்லை. தனியாக ஒரு கமிட்டி உருவாக்கி, அங்கு இதுபற்றி விவாதிக்க வேண்டும்’ என்று யோசனை சொன்னார். அதாவது, மக்களுக்கு நேரடியாகத் தெரியாத வகையில் ஏதாவது ஒரு அறையில் வைத்து சம்பள விஷயத்தைப் பேசி முடிக்கச் சொல்கிறார் அவர்.

கேபினட் செயலரைவிட ஒரு ரூபாயாவது அதிக சம்பளம் வேண்டும் என்று உரிமையோடு கேட்கிறார்கள் இந்த மக்கள் பிரதிநிதிகள். கேபினட் செயலாளர் என்ற உயர்ந்த அந்தஸ்து பொருந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரிகூட தனது சம்பளத்தை தானே நிர்ணயித்துக்கொள்ளும் அதிகாரம் பெற்றவர் கிடையாது. தவறு செய்தால் அவரை பதவியிலிருந்து தூக்கியெறியும் உரிமை சட்டத்துக்கு உண்டு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஆயுதமாகக் கையில் எடுத்துக்கொள்ளும் சாதாரணக் குடிமகன்கூட அவரைக் கேள்வி கேட்கலாம். பதில் சொல்ல அவர் கடமைப்பட்டவர். அவருக்கென நிர்ணயிக்கப்பட்ட பணிகள் இருக்கின்றன; வேலை நேரம் இருக்கிறது. ஆபீசுக்கு அவர் தினம் வந்தாக வேண்டும். வராவிட்டால் லீவ் லெட்டர் தரவேண்டும்! ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் ரிட்டயராகியே தீரவேண்டும்.
ஆனால் இந்த மக்கள் பிரதிநிதிகளைக் கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது? அப்படி கேட்டுவிட்டுத்தான் யாராவது நிம்மதியாக ஒரு இரவாவது தூங்கிவிட முடியுமா? இவர்கள் ‘மக்கள் பணி’ செய்யும் நேரம் எது? வருஷத்தில் நூறுக்கும் குறைவான நாட்கள்தான் நாடாளுமன்றம் செயல்படுகிறது. அதில் ஒழுங்காக எல்லா நாட்களும் நாடாளுமன்றம் வரும் எம்.பி.க்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வந்தாலும் கேள்வி கேட்பவர்கள் குறைச்சல். மக்கள் பிரச்சனைகளை எழுப்புகிறவர்கள் அதைவிடக் குறைச்சல். ஒரு பத்து எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் போதும்... பெரிய ரகளை நடத்தி ஒருநாள் முழுக்க நாடாளுமன்றம் செயல்படாமல் முடக்கிவிடலாம். அந்தக் காலங்களில் கல்லூரிகளில் நடக்கும் ஸ்டிரைக்குகளைவிட மோசமான அளவுக்கு நாடாளுமன்ற ரகளை தினசரி தலைப்புச் செய்தி ஆகிறது.

எம்.பி. தொகுதி நிதி என வருஷத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கு நலத்திட்டங்களைச் செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அதைக்கூட முழுமையாக செய்து முடித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட சம்பள உயர்வு தேவைதானா என மனசாட்சி உள்ளவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளட்டும்!
மந்திரவாதியின் பெட்டியிலிருந்து பூதத்தை வெளியில் எடுத்துவிட்ட மோசமான காரியத்தை எம்.பி.க்கள் செய்திருக்கிறார்கள். ‘நாங்களும் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை’ என ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ.க்களும் இனி கிளம்புவார்கள். ‘தலைமைச் செயலாளர் சம்பளத்தைவிட ஒரு ரூபாயாவது அதிகம் வேண்டும்’ என உரிமைக்குரல் எழுப்புவார்கள். கூடவே எம்.எல்.சி.க்களும் சில மாநிலங்களில் இருக்கிறார்கள். இப்படி எல்லா மட்டங்களிலும் இது எதிரொலிக்கும். ஏற்கனவே பஞ்சாயத்துத் தலைவர்கள்கூட, ‘நாங்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். எங்களுக்கும் வேண்டும் சம்பள உயர்வு’ என கிளம்பிவிட்டார்கள்.

தேர்தல் மூலம் பதவிகளைப் பிடிப்பவர்களுக்கு தாங்களும் அரசு ஊழியர்கள்தான் என்ற நினைப்பு சம்பள விவகாரத்தைக் கிளப்பும்போது மட்டும் வந்துவிடுகிறது. அரசு ஊழியர்கள் ஊழியம் செய்கிறார்கள்; மக்கள் பிரதிநிதிகள் ‘சேவை’ செய்கிறார்கள்.

போன தலைமுறைக் காலம் வரை, சேவை செய்கிறவர்களுக்கு பொதுப் பணத்திலிருந்து தங்களுக்கு என கொஞ்சம் எடுத்துக்கொள்வதில் கூச்சம் இருந்தது. இப்போது அந்த சமூகக்கூச்சம் சுத்தமாகப் போய்விட்டது


நன்றி தென்னாலி
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

யாருக்கும் வெட்கமில்லை  Empty Re: யாருக்கும் வெட்கமில்லை

Post by இந்திரஜித்தன் Thu Sep 02, 2010 1:59 pm

மானம் கெட்டவர்கள்.
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

யாருக்கும் வெட்கமில்லை  Empty Re: யாருக்கும் வெட்கமில்லை

Post by கார்த்திக் Thu Sep 02, 2010 2:04 pm

நல்ல அரசியல்வாதிகள் என்ன கொடுமை சார் இது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

யாருக்கும் வெட்கமில்லை  Empty Re: யாருக்கும் வெட்கமில்லை

Post by tamilparks Thu Sep 02, 2010 4:19 pm

அவர்களுக்கு என்ன எல்லா வசதியும் இருக்கிறது, நாம் தாம் துன்பங்களை அனுபவிக்கிறோம்...

மக்களுக்கு சேவை செய்ய அனுப்பினால், அவர்களுக்காக பல முடிவுகளை எடுத்துவிட்டு வருகிறார்கள்...

நாட்டையே விலைக்கு வாங்கிவிடுவார்கள் போல இருக்கிறது
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

யாருக்கும் வெட்கமில்லை  Empty Re: யாருக்கும் வெட்கமில்லை

Post by புவனா Thu Sep 02, 2010 4:25 pm

மானம் கெட்டவர்கள். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

யாருக்கும் வெட்கமில்லை  Empty Re: யாருக்கும் வெட்கமில்லை

Post by டயானா Sat Sep 04, 2010 9:25 am

மானம் கெட்டவர்கள். யாருக்கும் வெட்கமில்லை  56667 யாருக்கும் வெட்கமில்லை  56667
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

யாருக்கும் வெட்கமில்லை  Empty Re: யாருக்கும் வெட்கமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum