புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_c10தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_m10தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_c10தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_m10தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_c10 
3 Posts - 8%
heezulia
தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_c10தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_m10தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_c10தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_m10தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_c10தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_m10தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்திலும் 'மாவோயிஸ்ட் கொள்ளியை' வைக்க கம்யூனிஸ்ட் முயற்சி-கருணாநிதி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 31, 2010 2:52 pm

இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ளதைப் போல மாவோயிஸ்ட் நக்சலைட் தாக்குதல் , வன்முறை உள்ளிட்டவற்றை கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்டுகள் முயற்சிப்பதாக முதல்வர் கருணாநிதி கடுமையாக தாக்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "போர்முனைக்கு வாருங்கள்' என்று தி.மு.க.வோ, தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில், அறவழியில் நடத்தி பழக்கப்பட்டவர்கள் நாங்கள்.

1938-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது சென்னை தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளி வாயிலில் அமைதியான முறையில் மறியல் செய்து கைதானர்களே தவிர, முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காக ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

போர்க்கள முத்திரை குத்தும் கம்யூனிஸ்டுகள்:

நமது கம்யூனிஸ்ட்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும், அதற்கு ஒரு போர்க்கள முத்திரையை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள்; பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள்; அதற்கடுத்து மறியல் என்பார்கள்; அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள்.

ஒரு அரசு இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அணிவகுத்து வரும் அவர்களின் படைக்கு முரசு கொட்டி வரவேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இப்படித்தான் கம்யூனிஸ்ட்களுடைய கிளர்ச்சிகள் கோரிக்கை பேரணிகளாக "கோட்டை முற்றுகை' என்ற அளவுக்கு வளர்ந்திருக்கின்றன.

கம்யூனிஸ்டுகள் வைத்த 'கொள்ளி':

அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதல், அராஜகம், உயிர்ப் பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைப் பார்க்கிறோம்.

தமிழகத்திலும் அத்தகைய அராஜகங்களை, வன்முறை சேட்டைகளை, கொலை வெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டு வருகிறார்கள். திமுகவுக்கு ஒரு சிறு களங்கத்தையாவது ஏற்படுத்தினால்தான் அதனை வைத்துக் கொண்டு தேர்தலில் நிற்கவோ அல்லது தங்களது கூட்டணித் தலைவி வெற்றி வாகை சூட முடியும் என்ற எதிர்பார்ப்போடு திட்டங்களை, தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர்.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி திங்கள்கிழமை நடத்த திட்மிட்டிருந்த கோட்டை முற்றுகை போராட்டத்தை அரசு தடுத்தி நிறுத்திவிட்டது என்று கம்யூனிஸ்ட்டுகள் அறிக்கை விட்டுள்ளனர்.

போராட்டம் நடத்துவார்களாம்-நாம் வேடிக்கை பார்க்க வேண்டுமாம்!

அவர்கள் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவார்களாம்; அதனை அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு விருந்து வைத்து மகிழ வேண்டுமாம். 27 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

தொகுப்பூதியத்தில் இருப்பவர்களை, பகுதி நேர ஊழியர்களை நிரந்தரம் செய்ய மேற்கு வங்கம் அல்லது கேரளத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அரசுகள் முன் வந்தது உண்டா? ஆனால், "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்ற கதையாக தமிழகத்தில் மட்டும் பணி நிரந்தரம் செய்யுமாறு முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். காவலர்கள் அதனைத் தடுத்தால், அங்கே ஏற்படுகிற தகராறை பெரிதுபடுத்தி "தமிழக அரசின் உச்சகட்ட அராஜகம்' என்று பேசுவதும், எழுதுவதும் எந்த வகையில் ஜனநாயகம் என்று எனக்குத் தெரியவில்லை.

என்ன தரவில்லை சத்துணவு ஊழியர்களுக்கு?:

ஆனாலும், அவர்களின் கோரிக்கையை ஏற்று சத்துணவு ஊழியர்களுக்கு மூன்று முறை ஊதிய உயர்வு, சிறப்பு காலமுறை ஊதியம், வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, பண்டிகை கால முன் பணம், ஓய்வூதியம், பதவி உயர்வு, பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம், சிறப்பு சேமநல நிதித் திட்டம், குடும்ப நலத் திட்டம், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மகப்பேறு விடுப்பு, கோடை விடுமுறை காலத்தில் ஊதியம், பயணப்படி ஆகிய சலுகைகள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கோட்டை முற்றுகைப் போராட்டம் என்று சொல்வது நியாயம்தானா? சத்துணவு பணியாளர்கள் பிரச்னையில் அந்த அளவுக்கு என்ன நடந்து விட்டது? அதிமுக ஆட்சியைப் போல எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் கொண்டு வரப்பட்டதா? இரவோடு இரவாக அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டது, லட்சக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்பட்டது போன்று ஏதாவது நடந்து விட்டதா? எதற்காக முற்றுகைப் போராட்டம்?

21-11-2009 அன்று எனக்கு பாராட்டு விழா நடத்திய சத்துணவு பணியாளர் சங்கத்தினர் இந்த உண்மையை அறிய மாட்டார்களா? சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டபோது சட்டப் பேரவையில் கம்யூனிஸ்ட்டுகள் பாராட்டி பேசியது அவைக் குறிப்பில் உள்ளது.

உண்மையைச் சொல்லப் போனால், சத்துணவுப் பணியாளர்களுக்கு இந்த அரசின் மீது எந்தக் குறையும் இல்லை. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு சில சங்கத்தினர் மட்டும் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், கோயில்களைப் பார்த்து வரலாம் என்று ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்து விடுகின்றனர்.

பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னையோ, அமைச்சர்களையோ அணுகி சலுகைகளைப் பெறுகிறார்கள். இந்த அரசுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக