புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இணையதள அனுபவங்கள் Poll_c10எனது இணையதள அனுபவங்கள் Poll_m10எனது இணையதள அனுபவங்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
எனது இணையதள அனுபவங்கள் Poll_c10எனது இணையதள அனுபவங்கள் Poll_m10எனது இணையதள அனுபவங்கள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
எனது இணையதள அனுபவங்கள் Poll_c10எனது இணையதள அனுபவங்கள் Poll_m10எனது இணையதள அனுபவங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது இணையதள அனுபவங்கள் Poll_c10எனது இணையதள அனுபவங்கள் Poll_m10எனது இணையதள அனுபவங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது இணையதள அனுபவங்கள் Poll_c10எனது இணையதள அனுபவங்கள் Poll_m10எனது இணையதள அனுபவங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
எனது இணையதள அனுபவங்கள் Poll_c10எனது இணையதள அனுபவங்கள் Poll_m10எனது இணையதள அனுபவங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனது இணையதள அனுபவங்கள் Poll_c10எனது இணையதள அனுபவங்கள் Poll_m10எனது இணையதள அனுபவங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எனது இணையதள அனுபவங்கள் Poll_c10எனது இணையதள அனுபவங்கள் Poll_m10எனது இணையதள அனுபவங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எனது இணையதள அனுபவங்கள் Poll_c10எனது இணையதள அனுபவங்கள் Poll_m10எனது இணையதள அனுபவங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது இணையதள அனுபவங்கள் Poll_c10எனது இணையதள அனுபவங்கள் Poll_m10எனது இணையதள அனுபவங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இணையதள அனுபவங்கள்


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Tue Aug 31, 2010 11:24 am

எனது இணையதள அனுபவங்கள் 123



ணையதளம்
என்பது ஒரு மாபெரும் சமுத்திரம் அதில் பிரம்மாண்ட கப்பல்களும் உண்டு.
பாய்மர படகுகளும் உண்டு சின்ன சின்ன கட்டுமரங்களும் உண்டு. அந்த
சமுத்திரத்தில் தனது புதிய பயணத்தை துவங்கியவர் யோகி ஸ்ரீ இராமானந்த குரு

அவரிடம் உங்கள் இணையதள அனுபவம் எப்படி இருக்கிறது ? என்று கேட்டேன். அதற்கு அவர் மாதாந்திர
இதழ்களின் மீது இருந்த பற்றுதலும் நம்பிக்கையும் ஆரம்பத்தில்
இணையதளத்தின் மீது எனக்கு இல்லையென்று சொல்வதே முழு உண்மையாகும். சரி
பக்கத்தில் தானே இந்த நதி ஒடுகிறது இறங்கிதான் பார்க்கலாமே என்ற
ஆர்வத்தில் தான் இணைய தளத்திற்குள் நுழைந்தேன் என்ன ஆச்சரியம் இறங்கிய
பிறகுதான் இந்த நதியின் சுகம் தெரிகிறது ஏராளமான ஆர்வலர்கள் அவர்களின்
வினோதமான மனோபாவங்கள் எல்லாமே இதுவரை நான் கண்டிராத புது அனுபவங்கள் நல்ல
சுகமான அனுபவங்கள் எனலாம்
என்றார் .

அவரின்
படைப்புகளை படித்து இணையதள வாசகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு மட்டும்
விளக்கம் கேட்க முற்பட்டேன். எங்களது உரையாடலை கேள்வி பதில்
வடிவத்திலேயே
கீழே காணலாம்.


விஜயகாந்தும் ஜெயலலிதாவும் இணைந்தால் நன்றாக இருக்குமா?
இந்த
விஷயத்தில் செல்வி. ஜெயலலிதா அவர்களுடைய தனிப்பண்பு மிக முக்கியமானது.
அவர் தன்னைத்தவிர வேறுயாரையுமே உயர்வாக எடுத்துக் கொள்வது இல்லை.
இதுதான்அவரின் பலமும் பலகீனமும். விஜயகாந்த்தை பொறுத்தவரை முழுமையாக
கற்பனையில் இருக்கும் மனிதர் என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் அரசியல்
ரீதியில் இணையும் போது நடைமுறைச் சிக்கல்கள் பல ஏற்படும். இது இருவருக்குமே
தெரியும். ராமதாஸ போல விஜயகாந்த் சரணாகதி தத்துவத்தை கடைபிடிப்பாரா
என்பது சந்தேகமே ஆனால் இவைகள் சின்ன விஷயங்கள் தான். இதை மறந்துவிட்டு
இருவரும் இணைந்தால் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு தவறுதலான ஆட்சி
முறைக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கலாம். திரு. கலைஞர் அவர்கள்
கடைபிடிக்கும் பணம் கொடுத்து ஒட்டு வாங்கும் சித்தாந்தம் நிச்சயம் ஜன
நாயகத்திற்கு பெரிய ஆபத்து ஏற்படுத்தும் இதை தவிர்க்க
தற்காலிகத்திற்காகவாவது இவர்கள் இணையலாம்.



ஐயா
இஸ்லாமிய மார்கத்தில் சாதிகள் இருப்பதாக உங்களுக்கு யார் சொல்லி
தந்தார்கள் இஸ்லாமியர்களிடத்தில் காணப்படும் பிரிவுகள் அனைத்தும் கொள்கை
அடிப்படையிலான கருத்துவேறுபாட்டால் ஏற்பட்ட பிரிவுகளே தவிர இந்துக்களிடம்
காணப்படுவது போன்ற உயர்வு தாழ்வு அடிப்படையிலான சாதிமுறை போன்றதல்ல‌



இந்து
மதத்தில் ஆகட்டும். இஸ்லாத்தில் ஆகட்டும் சொல்லப்படும் ஜாதிப்பிரிவுகள்
தத்துவம் மற்றும் கொள்கையின் அடிப்படையில் தான். அதை நான் மறுக்கவில்லை.
ஆனால் இவைகள் நடைமுறையில் கொள்கையாக மட்டும் தான் பின்பற்றப்படுகிறதா?
என்பதை யோசிக்க வேண்டும். முஸ்லீம்கள் இடத்தில் உள்ள ஜாதிப்பிவுகள்
உயர்வு தாழ்வாக பார்க்க படவில்லையென்றால் ஷியாக்கள் சன்னியையும்,
சன்னிக்கள் ஷியாக்களையும், வெட்டி கொலை செய்வது ஏன்? தத்துவங்களை
கொலைகளின் மூலம் தான் நிலை நிறுத்த முடியுமா? நமது தமிழகத்தில் கூட ஒரு
லப்பை முஸ்லீமுக்கு ராவுத்தரோ, மரைக்காயரோ மனமுவந்து வரன் கொடுப்பார்களா?
ஆகவே ஜாதி என்பதற்கு எத்தனை தத்துவ மூலாம் பூசப்பட்டாலும் அது
ஏற்றத்தாழ்வின் எண்ணத்தில் உதயமானது என்பதை எப்போதுமே மறைக்க முடியாது.



கட்டுரை
மிகமிக நன்றாக உள்ளது தீவிரவாதத்துக்கு சரியான சவுக்கடி எழுத்துபயண்ம்
தொடர வாழ்துக்கள் ஒரு வருத்தம் இயேசுவின் கையில் AK- 47 (புகைப்படம்)
தேவையா? நரேந்திர மோடியும்
பின்லேடனும்
பயங்கரவாத சாத்தான்கள் இயேசுவும் அப்படிபட்டவரா?கிறிஸ்தவர்கள் நடத்தும்
தீவிரவாத செயல்களுக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்(நான் கிறிஸ்தவனல்ல)




நரேந்திர மோடி பின்லேடனுடன் ஒப்பிடும் அளவிற்கு இயேசு நாதர் தரம்
எப்போதுமே தாழ்ந்து போகாது. பணத்தையும் அதிகாரத்தையும் நேசிக்க தெரிந்த
சமூகத்திற்கு
மனிதர்களையும் நேசிக்க கற்று கொடுத்தது இயேசுநாதர் தான் என்பதில்
யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால் பின்லேடன் நரேந்திர மோடி
என்பது தனி மனித பயங்கரவாதமே ஆனால் பல ஜரோப்பிய நாடுகள் உலகின் பல
பகுதியில் நிகழ்த்தி வரும் கருணை போல தோற்ற மளிக்கும் மத பயங்கரவாதம்
தனிமனித முகமற்றது. நிறுவனமயமானது அந்த நிறுவனங்களின் விளம்பர லேபிள்
தான் இயேசுநாதர் அதனால் தான் அவர் கையில் துப்பாக்கி இருக்கும் படத்தை
போட்டேன். அதற்காக ஏசு என்னை மன்னிப்பார்.



Dear Sir,
Try to send P.M,Mantak aluvalaia,P.chidamparam to understand our India agriculture .Otherwise all farmers agreed to give a commission to ruling peoples they will come to right step this way is workable



இந்தகட்டுரை எழுதபடுவதற்கு முன்பே இந்த கருத்துக்களும் வேறு சில
கருத்துக்களும் ஆட்சியாளர்களுக்கு கடிதங்கள் மூலம் தெரிவித்து கொண்டுதான்
இருக்கிறேன். நீங்களும் நானும் நம்புவது போல் அதற்கு எந்த விதமான பயனையும்
இதுவரை காண முடியவில்லை. அதனால் தான் பொது ஜனங்களுக்கு தெரிவிக்க முயற்சித்தேன்.



ஜாதி, மதம் இரண்டும்தானே இன்றைய அரசியல் கட்சிகளின் ஆயுதங்கள்! எப்படிக் கைவிடுவார்கள்!


உண்மைதான்
அவர்கள் கைவிடுவது சற்று கஷ்டம் தான். ஆனால் பொதுமக்கள் ஜாதியின் பெயரில்
வைக்கின்ற அபிமானத்தை படிப்படியாக குறைத்துக் கொண்டால் அவர்களும் திருந்த
வாய்ப்பிருக்கிறதல்லவா? அதனால் நம்மால் முடிந்த சங்கை ஊதி வைப்போம்.
அது பத்து பேர் காதில் விழாதா? அதில் ஒருவனாவது செயல் படுத்தமாட்டானா?
என்ற நம்பிக்கைதான்.



விருப்பப்படி
வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாத கொலை அல்லது தற்கொலை
பலருக்கும் நிகழ்கிறது. சிறுவயதில் நெற்றியில் நாமம் இட்டு அல்லது விபூதி
பூசி பகவான் உன்னை நன்னா வெச்சிருப்பான் என்று ஆசிர்வதிக்கிறார்களே
அங்கேயிருந்தே தொடங்கிவிடுகிறது இந்தக் கொலைவெறியாட்டம். நெற்றியில்
பிறைக்குறி வரைவது, சிலுவை வரைவது போன்றவற்றையும் சொல்லலாம். குழந்தையின்
விருப்பம் அறிந்தா குறிப்பிட்ட கடவுளின் பக்தியடிமையாய் மாற்றுகிறார்கள்?
ஆகப்பெரும்பாலான வீடுகளில் நடக்கிற கட்டாய மதமாற்றம் அலலவா இது?
காதல்,
சொந்த ரசனை போன்ற மென்மையான உணர்வுக்கொலைகளைத்தான் இந்தக் கதை கூறுகிறது
என்றாலும் எனக்கு இந்தப் பெரிய சமூகப் படுகொலை பற்றியு சிந்தனையும்
இக்கதையைப் படித்தபின் ஏற்பட்டது. படைப்பாளி அந்தப் படுகொலை பற்றிய
விசனத்தையும் தன் படைப்பின் இணைத்திருந்தால் இன்னும் நன்றாக
இருந்திருக்கும்.

இது போன்ற கதைகளில் பெண்ணுக்கு நேர்ந்த
கொலைகள் அழுத்தமாக வருவதில்லை. ஆணின் ஏமாற்றங்கள் மட்டுமே பதிவாகின்றன.
இந்தக் கதையில் மனைவிக்குப் பொருத்தமற்றவனாகக் கணவன் அமைவது பற்றிய ஒரு
வரி இருப்பது பாராட்டத்தக்கது.
வாழ்த்துககள்.



பொதுவாக குழந்தைகளுக்கு மத சிந்தனைகளை திணிப்பது தவறு என்று நவீன
சிந்தனைவாதிகள் கருதி வருகிறார்கள். என்னால் அதை ஏற்றுக் கொள்ள இயலாது
நவீன
மனிதனிடம் தவறுகள்
செய்ய கொஞ்சமேனும் பயம் இருப்பதற்கு மூலகாரணமே இளவயதில் பெறுகின்ற
மதபோதனை தான். நாமம் போடுவது சிலுவை போடுவது, பிறைபோடுவது போன்றவைகளையும்
கருத்து திணிப்பு என்று கருதினால் கடவுள் இல்லையென்று கற்பிப்பது கூட
ஒருவித கருத்து திணிப்பு தானே?

அதனால் ஒவ்வொரு குடும்ப பிண்ணனியில் உள்ள மரபுகளை பின்பற்றுவது
தவறல்ல. இதை ஒரு பழமைவாதியின் கருத்து என்று நவீன வாதிகள் சொன்னாலும்
அதைப்பற்றி எனக்கு
அக்கறையில்லை .
மேலும் பெண்மைக்கு இழைக்கபடும் மன நெருக்கடிகளை அதிகமாக குறிப்பிடுவது
இல்லையென்று சொல்லியிருப்பது நியாயம் தான் ஆனால் நான் இந்த கதையில் ஆண்
பெண் என்று தனித்தனியான மன உணர்வுகளாக பார்க்கவில்லை. ஒட்டுமொத்தமாக
மானுடம் என்பதின் அடிப்படையிலேயே காண்கிறேன்.



இப்படி வருத்தப்பட்டுக்கொண்டே நம் வாழ்கை முடிந்துவிடுமா ...கழகங்களிளிடமிருந்து தமிழையும் தமிழ் மக்களையும் மீட்க வழியே இல்லையா... ?



தலைவர்களை போற்றி புகழ்ந்து வாழ்வது என்பது தமிழனுக்கு ஆயிரகணக்கான
வருஷங்களாக இருக்கும் வியாதி. தன்னை மீட்டெடுக்க என்றாவது ஒரு யுக புருஷன்
வருவான் என நம்புவதில் தமிழனுக்கு அலாதியான சுகம் உண்டு. நம்மை
மீட்டெடுப்பது நாம் தான் என்ற ஞானம் என்று தமிழனுக்கு வருகிறதோ அன்றுதான்
கழகங்களின் மாய கவர்ச்சியும் ஒழியும். சினிமாகாரர்களை தலைக்கு மேல் தூக்கி
வைத்து கொண்டாடுவதும் மறையும் தமிழன் எப்படியும் ஞானம் பெறுவதற்கு
நீங்களும் நானும்தான் உழைக்க வேண்டும். அதேநேரம் நாமே ஒரு பெரிய தலைவர்
என்ற மண்டைகிறுக்கு நமக்கு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.



துவாரகையும்
சேதுவும் கடலுக்குள் புதைந்திருக்கும் சாத்தியத்தை வைத்துக் கொண்டு அந்த
நாளில் வான சாஸ்திரத்தில் தேர்ந்து விமானமோட்டினார்கள் என்பதை நம்ப
முடியவில்லை; அப்படி முன்னேற்றத்தின் உச்சியில் இருந்திருந்தால் ஒருவரை
ஒருவர் அழித்துக் கொள்ளும் அறிவின்மையைச் செய்திருப்பார்களா? அவர்களும்
முனிவர்கள் வழி நடந்தவர்கள் தானே?




சேதுவையும் துவாரகையும் உதாரணமாக நான் காட்டியது புராண இதிகாசங்கள்
பொய்யானவைகள் அல்ல. அவற்றிலும் சில உண்மைகள் உண்டு. என்பதை
உணர்த்துவதற்கே ஆகும்.

முன்னேற்றத்தின் உச்சியில் இருந்தால் அழிவு வேலைகளில் மனிதர்கள்
ஈடுபடமாட்டார்கள் என்பது போலியான கற்பனையாகும். ஒன்றுமே இல்லாத போதும்
எல்லாமே கிடைத்துவிட்ட பிறகும் மனித மூளைக்குள் சாத்தான் நுழைந்துவிடும்.
அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கும் வரைதான் நியாய தர்மம்
என்பது நடைமுறை படுத்தபடும்.



உங்களின் கருத்துக்களை திணிக்க வரலாற்றை தவறாக பயன்படுத்தாதீர்கள்
அலெக்ஸான்டர் வந்து சென்றபின்தான் சாணக்கியனும், சந்திரகுப்தனும் மௌரிய பேரரசை உருவாக்கினார்கள்


வரலாற்றிற்கு முற்றிலும் பிழையான கேள்வி இது. அலெக்ஸாண்டர் தூதர் சந்திரகுப்த மௌரியரை
சந்தித்து இருக்கிறான் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் உண்டு, மெகஸ்தனிஸ்
என்ற கிரேக்க பிரதிநிதி அலெக்ஸ்சாண்டரின் அவையில் இருந்தவன் என்பதும்
அவனே
மௌரியர்களின்
அவைக்கு வந்தவன் என்பது உலகறிந்த செய்தி. மேலும் கி.மு 230 முதல் 223
வரையிலான காலத்தில் அலெக்ஸாசாண்டரால் ஏற்பட்ட அந்நிய ஆக்கிரமிப்புகளை
சந்திரகுப்தன் முற்றுலுமாக ஒழித்துக் கட்டினான் என்பதும் வரலாற்று
உண்மையாகும். சந்திரகுப்தனும் அலெக்சாண்டரும் ஒருவருக்குகொருவர் நேருக்கு
நேர் பார்க்க வில்லையே தவிர பரஸ்பரம் அறிந்திருந்தார்கள் என்பதற்கு
ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்த கேள்வியை கேட்டவர் அதையெல்லாம் படித்து
அறிந்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.



உங்கள் கட்டுரைகளில் கலைஞர் கருணாநிதியை பற்றி காரமான விமர்சனங்கள் அதிகமிருக்கிறது. அவரிடம் நல்ல இயல்புகளே இல்லையா?
நல்ல
இயல்புகள் இல்லாமல் ஒரு சாதாரண மனிதன் மேல் நிலைக்கு வந்து விடமுடியாது.
கலைஞரிடம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, துயரங்களை தாங்கும் பண்பு,
முடிவெடுப்பதில் சரியான திறமை, அரசியலில் சாணக்கியதனம், எல்லாமே
இருக்கிறது. இன்றைய சூழலில் உள்ள அரசியல்வாதிகளில் அறிவாளிகள் யார் என்று
கேட்டால் தயக்கமே இல்லாமல் கலைஞர் பெயரை சொல்லலாம். ஆனால் இத்தகைய நல்ல
பண்புகள் அவரது சுயநல எண்ணங்களால் கானாமல் போய்விடுகிறது. அந்த
வருத்தத்தில் தான் காட்டமான விமர்சனங்கள் அவர்மீது வைக்கவேண்டியுள்ளது.



உங்களது இணையதள அனுபவத்தில் கசப்பான அனுபவம் உண்டா?


கசப்பும்
இனிப்பும் கலந்தது தானே வாழ்க்கை வெறும் பாராட்டுக்களே கிடைத்து கொண்டு
இருந்தால் மனிதனுக்கு அகங்காரம் தலைக்கேறிவிடும். எதிர்கருத்தும்
வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் எதிர்கருத்துக்களே பல நேரங்களில் நம்மை
செதுக்கும் உளியாக இருக்கிறது என்று சொல்வேன். அமெக்காவிலிருந்து ஆங்கில
படத்தலைநகரை தனது தளத்தின் ஆரம்ப பெயராக கொண்ட ஒரு நண்பர் அவர் தளத்தை
நான் பார்வையிட்டு சென்ற கருத்தை தவறாக புரிந்து ஏராளமான கமென்டுகளை
போஸ்ட் செய்து இருந்தார். ஒரு வேளை நமது செயல் அவரை காயப்படுத்தி
இருக்குமோ, என்ற எண்ணத்தில் வருத்தம் கூட தெரிவித்தேன். ஆனால் அவர் அந்த
வருத்தத்தை கூட புரிந்து கொள்ளாமல் மீண்டும் கிண்டலடித்து இருந்தார்.
இப்போது மனிதர்களாக பிறந்து இருக்கும் நாம் மீண்டும் மனிதர்களாக பிறப்போம்
என்பது சந்தேகமே மனிதனாக வாழ கிடைத்திருக்கும் இந்த சந்தர்பத்தில்
மற்றவர்களை வீணாக காயப்படுத்தாமல் வாழ்வது சிறந்தது என்று கருதுபவன் நான்.
அதை எல்லாரும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்பது எனது
அபிப்ராயம். ஒரு மனிதனின் கருத்தை ஆதாரத்துடன் மறுத்து விமர்சனம் செய்வது
தான் புத்திசாலிகளின் அழகு. அதை விட்டுவிட்டு தனிப்பட்ட விமர்சனங்களை
ஏலமிடுவது குழந்தைதனமானது. இன்னும் ஏராளமான கருத்துக்களையும்
விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன் எனது பல வேலைகளுக்கிடையுலும் இது
எனக்கு சந்தோஷத்தை தருகிறது



இப்படி நான் வைத்த கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் தெளிவான பதில் சொன்ன யோகி ஸ்ரீராமானந்த குருவிடம் இருந்து தற்காலிகமாக விடைபெற்றேன்.





எனது இணையதள அனுபவங்கள் Ep






R.V.வெங்கட்டரமணன் M.Tech
திருகோவிலூர்
venkatmscec@gmail.com





எனது இணைய தளம் www.ujiladevi.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக