Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய்
+2
சிவா
balagkkl
6 posters
Page 1 of 1
கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய்
சென்னையில் நடந்தது போல மதுரையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
சினிமா காட்சி களையும் மிஞ்சும் வகையில் நெஞ்சை பதை பதைக்க செய்யும் இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னையில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி டிராவல்ஸ் அதிபரும், நகை வியாபாரியுமான சுரேஷ்குமார் என்பவர் கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். 4 துண்டுகளாக்கப்பட்ட அவரது உடல்கள் பல்வேறு இடங்களில் வீசப்பட்டு கிடந்தது. தலை மட்டும் சிக்காமல் இருந்தது. அதுவும் சமீபத்தில் சிக்கியது. கொலையாளியும் கைது செய்யப்பட்டான்.
அந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் அதையும் மிஞ்சும் வகையில் ஒரு பயங்கர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சரகம் பொன் மேனி மீனாட்சி நகர் 1-வது தெருவில் வசித்து வந்தவர் துரைராஜ். இவரது மனைவி பெயர் மேரி (வயது42). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி (24) என்ற மகனும், 2 மகள்களும் உண்டு. மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. இவர்கள் கணவருடன் தனியாக வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் துரைராஜ் இறந்து விட்டார். அதன் பிறகு மேரியும் கிருஷ்ணமூர்த்தியும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். கிருஷ்ணமூர்த்தி கூலி தொழிலுக்கு சென்று வந்தார். இதற்கிடையே மேரிக்கும் எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த பாட்சா (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர் எலக்ட்ரிக்கடை வைத்து உள்ளார். பாட்சா-மேரி இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இந்த தகவல் கிருஷ்ண மூர்த்திக்கு தெரியவந்ததும் மேரியை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதல் மோகம் தாய்பாசத்தை மறைக்க மேரியும், பாட்சாவும் தினமும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். ஒரு நாள் இதை நேரில் பார்த்துவிட்ட கிருஷ்ணமூர்த்தி இருவரையும் கண்டித்துள்ளார். எனவே அவர்கள் 2 பேரும் கிருஷ்ண மூர்த்தியை கொலை செய்ய திட்டமிட்டனர்.
கடந்த 24-ந்தேதி இரவு கிருஷ்ணமூர்த்தி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது மேரியின் கள்ளக்காதலன் பாட்சா அங்கு வந்தார். இதை பார்த்ததும் கிருஷ்ண மூர்த்திக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாட்சாவும், மேரியும் சேர்ந்து உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் கிருஷ்ணமூர்த்தியை வெறித்தனமாக அடித்து கொலை செய்தனர். பின்னர் உடலை என்ன செய்வதென்று விடிய விடிய யோசித்தனர்.
அதன் பிறகு சென்னையில் சுரேஷ்குமார் உடலை தனித்தனியாக வெட்டி உடலை வீசிய சம்பவம் நினைவுக்கு வந்தது. அது போல கிருஷ்ணமூர்த்தியின் தலை, கைகளை தனியாக துண்டித்தனர். அதன் பிறகு 2 கால்களையும் தனியாக வெட்டி எடுத்தனர். பின்னர் உடலை கண்டந்துண்டமாக வெட்டினர். இந்த பாகங்களை பெரிய பிளாஸ்டிக் பையில் பொட்டலமாக கட்டி வீட்டுக்குள் இருந்த பிரிட்ஜ்-ல் வைத்து விட்டனர்.
மறுநாள் 25-ந்தேதி காலை பாட்சாவும், மேரியும் பிரிட்ஜ்-யை திறந்தனர். 10 மாதம் சுமந்து பெற்ற மகன் என்று கூட பாராமல் மகன் உடலை கூறுபோட்ட மேரி மகன் கிருஷ்ணமூர்த்தியின் தலையையும், கைகளையும் எடுத்து கள்ளக்காதலன் பாட்சாவிடம் கொடுத்தாள். அதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி எடுத்து சென்ற பாட்சா எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள கிருதுமால் கால்வாயில் அதை வீசி விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருவரும் இருந்து கொண்டனர்.
அதன் பிறகு பிணத்துடன் இந்த வீட்டில் இருந்தால் நமக்கு சரிபடாது. எனது வீட்டிற்கு கொண்டு செல்கிறேன் என்று பாட்சா கூறினார். மேரியும் அதுதான் சரி என்று தலையை ஆட்ட, பாட்சா ஒரு டிரைசைக்கிளை வாடகைக்கு பிடித்தார்.
பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் உடல்கள் இருந்த பிரிட்ஜ்-யை பழுது பார்க்க கொண்டு செல்வது போல டிரைசைக்கிளில் வைத்து எஸ்.எஸ்.காலனியில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். அங்கு பிரிட்ஜ்-யை திறந்து கிருஷ்ணமூர்த்தியின் 2 கால்களை மட்டும் தனியாக ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அதை மோட்டார் சைக்கிளில் வைத்து பாட்சா கொண்டு சென்றார். மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போவுக்கு பின்புறம் அடர்ந்த முள்புதர்க்குள் வீசிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.
அதன் பிறகு பாட்சா வீடு இருந்த பகுதி முழு வதும் துர்நாற்றம் வீசியது. விஷயம் வெளியே தெரிந்து விடும் என்பதால் துண்டு துண்டாக்கப்பட்ட கிருஷ்ண மூர்த்தி உடலை பிளாஸ்டிக் கவரில் வைத்து கொண்டு சென்று எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள ஒரு செப்டிக் டேங்கில் வீசிவிட்டார்.
பிரிட்ஜ்-க்குள் மீதம் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் உடல்களால் மேலும் துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பாட்சா வீட்டை சோதனையிட்டபோது தான் பிரிட்ஜ்-க் குள் கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்து துண்டு துண்டாக்கப்பட்ட உடல்கள் இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு பாட்சாவிடம் விசாரித்தபோது மேரியும் அவரும் சேர்ந்து கிருஷ்ண மூர்த்தியை கொடூரமாக கொலை செய்து உடல்களை கண்டந்துண்டமாக வெட்டிய கொடூரம் தெரியவந்தது.
இந்த கொடூர கொலையை தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தியின் தாய் மேரி, அவளது கள்ளக்காதலன் பாட்சா ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணமூர்த்தியின் உடல்களை வீசுவதற்கு உடந்தையாக இருந்ததாக பாட்சாவின் நண்பர் ஜோசப் அந்தோணி என்ற ராஜா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
நன்றி:www.newindianews.com
சென்னையில் நடந்தது போல மதுரையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
சினிமா காட்சி களையும் மிஞ்சும் வகையில் நெஞ்சை பதை பதைக்க செய்யும் இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னையில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி டிராவல்ஸ் அதிபரும், நகை வியாபாரியுமான சுரேஷ்குமார் என்பவர் கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். 4 துண்டுகளாக்கப்பட்ட அவரது உடல்கள் பல்வேறு இடங்களில் வீசப்பட்டு கிடந்தது. தலை மட்டும் சிக்காமல் இருந்தது. அதுவும் சமீபத்தில் சிக்கியது. கொலையாளியும் கைது செய்யப்பட்டான்.
அந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் அதையும் மிஞ்சும் வகையில் ஒரு பயங்கர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சரகம் பொன் மேனி மீனாட்சி நகர் 1-வது தெருவில் வசித்து வந்தவர் துரைராஜ். இவரது மனைவி பெயர் மேரி (வயது42). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி (24) என்ற மகனும், 2 மகள்களும் உண்டு. மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. இவர்கள் கணவருடன் தனியாக வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் துரைராஜ் இறந்து விட்டார். அதன் பிறகு மேரியும் கிருஷ்ணமூர்த்தியும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். கிருஷ்ணமூர்த்தி கூலி தொழிலுக்கு சென்று வந்தார். இதற்கிடையே மேரிக்கும் எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த பாட்சா (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர் எலக்ட்ரிக்கடை வைத்து உள்ளார். பாட்சா-மேரி இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இந்த தகவல் கிருஷ்ண மூர்த்திக்கு தெரியவந்ததும் மேரியை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதல் மோகம் தாய்பாசத்தை மறைக்க மேரியும், பாட்சாவும் தினமும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். ஒரு நாள் இதை நேரில் பார்த்துவிட்ட கிருஷ்ணமூர்த்தி இருவரையும் கண்டித்துள்ளார். எனவே அவர்கள் 2 பேரும் கிருஷ்ண மூர்த்தியை கொலை செய்ய திட்டமிட்டனர்.
கடந்த 24-ந்தேதி இரவு கிருஷ்ணமூர்த்தி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது மேரியின் கள்ளக்காதலன் பாட்சா அங்கு வந்தார். இதை பார்த்ததும் கிருஷ்ண மூர்த்திக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாட்சாவும், மேரியும் சேர்ந்து உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் கிருஷ்ணமூர்த்தியை வெறித்தனமாக அடித்து கொலை செய்தனர். பின்னர் உடலை என்ன செய்வதென்று விடிய விடிய யோசித்தனர்.
அதன் பிறகு சென்னையில் சுரேஷ்குமார் உடலை தனித்தனியாக வெட்டி உடலை வீசிய சம்பவம் நினைவுக்கு வந்தது. அது போல கிருஷ்ணமூர்த்தியின் தலை, கைகளை தனியாக துண்டித்தனர். அதன் பிறகு 2 கால்களையும் தனியாக வெட்டி எடுத்தனர். பின்னர் உடலை கண்டந்துண்டமாக வெட்டினர். இந்த பாகங்களை பெரிய பிளாஸ்டிக் பையில் பொட்டலமாக கட்டி வீட்டுக்குள் இருந்த பிரிட்ஜ்-ல் வைத்து விட்டனர்.
மறுநாள் 25-ந்தேதி காலை பாட்சாவும், மேரியும் பிரிட்ஜ்-யை திறந்தனர். 10 மாதம் சுமந்து பெற்ற மகன் என்று கூட பாராமல் மகன் உடலை கூறுபோட்ட மேரி மகன் கிருஷ்ணமூர்த்தியின் தலையையும், கைகளையும் எடுத்து கள்ளக்காதலன் பாட்சாவிடம் கொடுத்தாள். அதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி எடுத்து சென்ற பாட்சா எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள கிருதுமால் கால்வாயில் அதை வீசி விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருவரும் இருந்து கொண்டனர்.
அதன் பிறகு பிணத்துடன் இந்த வீட்டில் இருந்தால் நமக்கு சரிபடாது. எனது வீட்டிற்கு கொண்டு செல்கிறேன் என்று பாட்சா கூறினார். மேரியும் அதுதான் சரி என்று தலையை ஆட்ட, பாட்சா ஒரு டிரைசைக்கிளை வாடகைக்கு பிடித்தார்.
பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் உடல்கள் இருந்த பிரிட்ஜ்-யை பழுது பார்க்க கொண்டு செல்வது போல டிரைசைக்கிளில் வைத்து எஸ்.எஸ்.காலனியில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். அங்கு பிரிட்ஜ்-யை திறந்து கிருஷ்ணமூர்த்தியின் 2 கால்களை மட்டும் தனியாக ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அதை மோட்டார் சைக்கிளில் வைத்து பாட்சா கொண்டு சென்றார். மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போவுக்கு பின்புறம் அடர்ந்த முள்புதர்க்குள் வீசிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.
அதன் பிறகு பாட்சா வீடு இருந்த பகுதி முழு வதும் துர்நாற்றம் வீசியது. விஷயம் வெளியே தெரிந்து விடும் என்பதால் துண்டு துண்டாக்கப்பட்ட கிருஷ்ண மூர்த்தி உடலை பிளாஸ்டிக் கவரில் வைத்து கொண்டு சென்று எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள ஒரு செப்டிக் டேங்கில் வீசிவிட்டார்.
பிரிட்ஜ்-க்குள் மீதம் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் உடல்களால் மேலும் துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பாட்சா வீட்டை சோதனையிட்டபோது தான் பிரிட்ஜ்-க் குள் கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்து துண்டு துண்டாக்கப்பட்ட உடல்கள் இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு பாட்சாவிடம் விசாரித்தபோது மேரியும் அவரும் சேர்ந்து கிருஷ்ண மூர்த்தியை கொடூரமாக கொலை செய்து உடல்களை கண்டந்துண்டமாக வெட்டிய கொடூரம் தெரியவந்தது.
இந்த கொடூர கொலையை தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தியின் தாய் மேரி, அவளது கள்ளக்காதலன் பாட்சா ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணமூர்த்தியின் உடல்களை வீசுவதற்கு உடந்தையாக இருந்ததாக பாட்சாவின் நண்பர் ஜோசப் அந்தோணி என்ற ராஜா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
நன்றி:www.newindianews.com
I LOVE INDIA
balagkkl- பண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009
Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய்
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள், இவளுக்கு அறிவிம் பாசமும் இல்லாது போனது ஏனோ?
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய்
இப்பலாம் வர வர தமிழ்நாட்டுல நடக்குற செய்தி வெளிநாட்டினருக்குத்தான் முன்னாடியே தெரியுது........ பக்கத்து ஊருல இருக்குற எனக்கு தெரிய மாட்டேங்குதே.......... எப்படியோ அனைவருக்கும் தமிழ் மீது பற்று இருந்தாலே போதும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய்
அய்யோ! என்ன கொடுமை, இது போன்ற கொடுமைகள் எங்களின் பகுதியில் நடப்பது மிக மிக அரிது, ஆனால் சிங்களவனின் பகுதியில் இவ்வாறு நடைபெறுகிறது
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய்
[quote="Manik"]இப்பலாம் வர வர தமிழ்நாட்டுல நடக்குற செய்தி வெளிநாட்டினருக்குத்தான் முன்னாடியே தெரியுது........ பக்கத்து ஊருல இருக்குற எனக்கு தெரிய மாட்டேங்குதே.......... எப்படியோ அனைவருக்கும் தமிழ் மீது பற்று இருந்தாலே போதும்[/quote
எப்பவுமே நம்ம பக்கதுலயோ அல்லது நம்மிடமோ நடக்கும் தவறு நமக்கு தெரிவது மிக குறைவே...
எப்பவுமே நம்ம பக்கதுலயோ அல்லது நம்மிடமோ நடக்கும் தவறு நமக்கு தெரிவது மிக குறைவே...
அன்புடன்
உங்கள் சுதாகரன்
sudhakaran- இளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
Similar topics
» துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!
» மனைவியின் உடலை துண்டு, துண்டாக வெட்டி????????????
» நடத்தையில் சந்தேகம்: துண்டு துண்டாக மனைவி வெட்டி படுகொலை
» சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!
» ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!
» மனைவியின் உடலை துண்டு, துண்டாக வெட்டி????????????
» நடத்தையில் சந்தேகம்: துண்டு துண்டாக மனைவி வெட்டி படுகொலை
» சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!
» ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|