புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
81 Posts - 61%
heezulia
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_m10நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 28, 2010 12:33 pm

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்!




புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

இந்த உலகில் தோன்றிய, தோன்றவிருக்கிற மனிதர்கள் அனைவரும் மரணத்தை சுவைப்பவர்களே! அந்த மரணத்திற்கு பின் இறைவனின் நீதி விசாரணைக்கு பின் சுவனம் எனும் சுக வாழ்க்கையை அடையவேண்டுமெனில், அதற்கான சேமிப்பு நன்மை மட்டுமே! ஒரு விவசாயி பருவகாலங்களில் தனது நிலத்தில் பயிரிட்டு அதன் மூலம் தானியங்களை சேகரித்து வைத்தால்தான் கோடை காலங்களில் கவலையற்று உண்டு வாழமுடியும். அதுபோல் இறைவன் வழங்கிய ஆயுளைக்கொண்டு இருக்கும் காலத்தில் நன்மைகளை சேகரித்து வைத்தால்தான் மறுமையில் சுவனத்தின் திறவுகோலாக அது அமையும். அதைவிடுத்து மனம் போன போக்கில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் மறுமையில் கைசேதப்படும் நிலைவரும். எனவேதான் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்;
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُواْ الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُواْ يَأْتِ بِكُمُ اللّهُ جَمِيعًا إِنَّ اللّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.[2:148 ]

இந்த வசனத்தில் அல்லாஹ் நன்மையின் பக்கம்நம்மை முந்திக்கொள்ளுமாறு பணிக்கிறான். நண்மையான செயல் என்றால் நாம் நினைப்பது போன்று தொழுகை-நோன்பு-ஹஜ் இதுபோன்றவை மட்டுமல்ல. இதுபோன்ற அமல்களோடு நம் அன்றாட வாழ்வை இறைமறை-இறைத்தூதர்[ஸல்] வழியில் அமைத்துக்கொண்டால் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் நன்மையானதாக மாற்றமுடியும். நாம் பேசும் பேச்சுக்களில் உண்மையை மையப்படுத்தினால் அது நன்மையாக மாறிவிடும். பொய்கள்-புறம்-அவதூறுகள் தவிர்ந்து கொன்டால் அது நமக்கு நன்மையானதாக மாறிவிடும். வீண் தர்க்கங்கள் தவிர்ந்து கொன்டால் அது நமக்கு நன்மையானதாக ஆகிவிடும். இதுபோக நம்முடைய நடை-உடை-உணவு-வியாபாரம்-இல்லறம்-உறவுமுறை பேணல்-போன்றவற்றில் நம்முடைய செயல்கள் குர்ஆண்-ஹதீஸ் வழியில் இருந்தால் அதுவும் நமக்கு நன்மையானதாக மாறிவிடும். மேலும் சின்ன சின்ன செயல்களுக்கும் பெரிய கூலி அல்லாஹ்வால் வழங்கப்படுகிறது.

உதாரணமாக ஸலாம் கூறுவதை எடுத்துக்கொண்டால்,ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் பத்து நண்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் என்றால் இருபது நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என்றால் முப்பது நன்மையையும் கிடைக்கின்றது. இந்த நன்மைகளை பெறுவதற்காக பலமணி நேரம் நாம் செலவளிக்கவேண்டியதில்லை. ஒரு சில நிமிடங்களில் இந்த நன்மை நமக்கு கிடைத்துவிடும். நம்மில் எத்துனை பேர் ஸலாம் சொல்லுவதில் கவனம் செலுத்துகிறோம்..? இதுபோல் போல் நன்மையை அள்ளித்தரும் பல்வேறு சின்ன சின்ன செயல்கள் நம்மால் பாராமுகமாக விடப்பட்டதற்கு காரணம் நன்மையை சேகரிப்பதில் நமக்கு இருக்கும் ஆர்வமின்மைதான்.ஆனால் அருமை சஹாபாக்கள் நன்மையை அடைந்து கொள்ளும் அமல்கள் என்ன என்பதை ஆர்வத்துடன் நபியவர்களிடம் கேட்டதோடு, அதை உடனடியாக அமுல்படுத்திய காட்சியை ஹதீஸ்களில் காணலாம்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நான் (நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்" என்று பதிலளித்தார்கள்.ஆதாரம்;புஹாரி எண் 2784 ]

ஆண்கள் அறப்போரில் பங்கெடுத்து அதன்மூலம் மிகப்பெரிய நன்மையை ஈட்டிக்கொள்கிறார்களே என்று ஆதங்கம் அடைந்த அன்னையவர்கள் பெண்களுக்கும் இந்த நன்மை கிடைக்காதா என்ற ஆர்வத்தில் அதுபற்றி நபியவர்களிடத்தில் கேட்கிறார்கள் எனில், சஹாபாக்களின் நன்மையை தேடும் தாக்கத்தை புரிந்துகொள்ளலாம்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்' என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்" என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும்'. என்று விளக்கம் தந்தார்கள்.ஆதாரம்;புஹாரி எண் 843

இந்த பொன்மொழியில் ஏழை சஹாபாக்கள் வசதி படைத்தவர்கள் தங்களை விட நன்மையில் சில விசயங்களில் முந்துகிரார்களே என்ற ஆதங்கத்தில் நபியவர்களிடம் வந்து நன்மை பெற்றுத்தரும் அமலை பெற்று செல்கிறார்கள் எனில் சஹாபாக்களின் நன்மையை சேகரிக்கும் ஆர்வத்தை புரிந்து கொள்ளலாம்.

அலீ(ரலி) அறிவித்தார்கள்;
(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி(ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா நபி(ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், 'நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்.) அப்போது அவர்கள், 'நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும் போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்' என்று கூறினார்கள்.ஆதாரம் புஹாரி;எண் 5361

இந்த பொன்மொழியில் திரிகை சுற்றி கையெல்லாம் காய்த்துப்போனதால் பணியாள் கேட்ட தனது அருமை மகள் அன்னை பாத்திமா[ரலி] அவர்களுக்கு, பணியாளை தராமல் மறுமையில் பயனை தரும் அமலை சொல்லித்தருகிறார்கள் நபிகளார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! ஆதாரம்;புஹாரி எண் 6405

எனவே நன்மையை அள்ளித்தரும் அமல்களை அறிவோம். அதை செயல்வடிவில் கொண்டுவந்து மறுமைக்கான சேமிப்பாக்குவோம் இன்ஷா அல்லாஹ்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 28, 2010 11:31 pm

எனவே நன்மையை அள்ளித்தரும் அமல்களை அறிவோம். அதை செயல்வடிவில் கொண்டுவந்து மறுமைக்கான சேமிப்பாக்குவோம் இன்ஷா அல்லாஹ். நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 29, 2010 2:15 am

சபீர் wrote:எனவே நன்மையை அள்ளித்தரும் அமல்களை அறிவோம். அதை செயல்வடிவில் கொண்டுவந்து மறுமைக்கான சேமிப்பாக்குவோம் இன்ஷா அல்லாஹ். நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! 359383
ஆமீன் ...........

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக