ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
heezulia
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
mohamed nizamudeen
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
VENKUSADAS
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
heezulia
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
mohamed nizamudeen
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
VENKUSADAS
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணையின் வடிவம் அன்னை திரேசா

5 posters

Go down

 கருணையின் வடிவம் அன்னை திரேசா Empty கருணையின் வடிவம் அன்னை திரேசா

Post by அப்புகுட்டி Fri Aug 27, 2010 7:04 am

 கருணையின் வடிவம் அன்னை திரேசா _Mother_Terasa
தொண்டின் இலக்கணமாகத் திகழ்ந்தவர் அன்னை திரேசா ஆவார். இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து எல்லோரும் போற்றத்தக்க மனிதராக உயர்ந்திருப்பவர் அவர். அன்னையின் அன்பு கர‌த்தைப் பார்த்ததுமே பலர் அவரின் சீடராக மாறி அன்னையின் வழியில் சென்றுள்ளனர்.

1910ஆம் ஆண்டில் பிறந்த அன்னைக்கு பெற்றோர் இட்ட பெயர் அக்னஸ் கொயின் ஷா பெஜாக்கியூ என்பதாகும். சிறு வயது தொட்டே உலக மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்னை வளர்ந்தார். இறையுணர்வு மிக்கவ ராகவும் விளங்கினார்.

இந்திய மிஷனகள் கல்கத்தாவில் செய்யும் பணியை தெரிந்து கொண்ட சிறுமியான அக்னஸிற்கு தானும் அது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. லொரேட்டா கன்னிகா மடத்தை பற்றிய விபரங்களும் அவரது ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியது. லொரேட்டா கன்னிகா மட உறுப்பினரானதன் பின் ஆன்மீகத் துறையில் கல்வி கற்க அயர்லாந்து சென்றார். கல்கத்தாவில் புனித மரியன்னை உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக 1929ஆம் ஆண்டு அவர் பணியைத் துவங்கினார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அக்னஸ் கன்னிகா பெண்களுக்கான கட்டுப்பாடுகளை ஏற்று தமது வாழ்நாள் முழுவதும் இயேசு பெருமானுக்கு அர்ப்பணிக்கும் ஞானஸ்தானத்தினால் தெரேசாவாக ஏற்றம் பெற்றார்.

1948ஆம் ஆண்டு பாட்னாவில் வைத்தியத்தாதிப் பயிற்சியினை பெற்றுக் கொண்டார்.

1949ஆம் ஆண்டு மோதிஜில் என்ற சேரிப்பகுதியில் உங்களுக்கு தொண்டு செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன்.உதவி செய்ய என்னை அழைப்பீர்களா? என்று கேட்டுக் கொண்டே சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய ஆரம்பிக்கின்றார்.

1950ஆம் ஆண்டு அன்னை திரேசாவின் தலைமையில் மிஷனரிஸ் ஒப் சரிட்டி இல்லம் (Missionaries of Cherity) உருவாக்கப்பட்டது. அன்னை தூய்மையான பணிக்கு எடுத்துக்காட்டாக நீல நிறக் கரை போட்டவெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்து கொள்ளலானார். அன்னையிடம் முதன் முதலாக தீட்சை பெற்ற சுபாஷினிக்கு தனது இயற்பெயரான அக்னஸ் என்பதையே சூட்டி மகிழ்ந்தார்.

கல்கத்தா நடை பாதைகளில் அநாதைகளாக உலாவிடும் மனிதர்களை கண்டு இரக்கம் கொண்ட அன்னை அதற்காக தனியிடம் அமைக்க வேண்டி நகராட்சியிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிய வருகின்றது. தொழு நோயாளர்களை அரவ ணைத்து அன்னை ஆற்றிய தொண்டு அன்னையை தெய்வத்துக்கு சமனாக உயர்த்திக் காட்டியது என்பது பலரின் கருத்தாக உள்ளது. பங்களாதேஷ் போல் அகதிகளாக வந்து குவிந்த மக்களுக்கு அன்னை ஆற்றிய பணிகளுக்காக உலக மெங்கும் பாராட்டுகள் குவிந்தன. பத்திரிகையாளர் குஷ்வந்த்சிங் அன்னையை பற்றி குறிப்பிடுகையில் “ஏழை நோயாளர்களுக்கு வெறும் உபதேசம் சொல்பவரல்லர் அவர்.
இணைந்து அவர்களுடன் தமது வாழ்நாட்களை அவர்களுக்காக செலவிடுபவர். தமக்கென்று எதுவும் சேர்த்து வைக்காமல் எளிய வாழ்க்கை நடத்துபவர்'' என்று நிதர்சன நிலையை வெளிப்படுத்துகின்றார். செம்பூரான் தனது கட்டுரை ஒன்றில் அன்னையின் பணிகள் குறித்து சிறப்பாக விளக்குகின்றார்.

1984இல் அன்னை இலங்கைக்கு வந்தபோது அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

1962ஆம் ஆண்டு அன்னையின் சேவையை பாராட்டி இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து 1979இல் அமைதிக்கான நோபல் பரிசும் 1980இல் இந்தியாவின் அதியுயர் விருதான பாரதரத்னா விருதும் 1983இல் பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து அன்னையின் திறமைக்கு கௌரவ விருதும் கிடைத்தன. 1997இல் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் அன்னைக்கு அமெரிக்காவின் கௌரவ பிரஜாவுமையை வழங்கினார்.

1983ஆம் ஆண்டு அன்னையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதய நோய் கண்டு பேஸ் மேக்கரும் பொருத்தப்பட்டது. அன்று தனது உடல் நிலை குறித்து கவலைப்படாத அன்னை அறப்பணிகள் தொடர வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

1994இல் அவர் தமது பொறுப்புக்களை மற்றவரிடம் ஒப்படைக்க விரும்பினார். ஆனால் 126 நாடுகளின் 4400 கன்னிகா பெண்களும் சகோதரர்களும் கொண்ட குழு அன்னையையே ஸுப்பீரியர் ஜெனரல்' பதவியை தொடருமாறு கேட்டுக் கொண்ட னர்.

இளவரசி டயானாவின் மரணச் செய்தி கேட்டு அன்னை மனம் நொந்தார். இளவரசியின் மரணக்கிரியைகளில் கலந்து கொள்ளவிருந்த சமயம் நோய்வாய்ப்பட்டு 1997 புரட்டாதி 05ஆம் திகதி கல்கத்தாவில் உயிர் நீத்தார்.

அன்னையின் மறைவின் பின்னர் சேவை நிலையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரி நிர்மலா அன்னையைப் பற்றி கூறுகையில், நான் அன்னை தெரேசா அல்ல. சகோதரி நிர்மலா. என்னை தயவு செய்து அன்னை என்று அழைக்காதீர்கள். அன்னை திரேசாவின் இடத்தை என்னால் நிரப்ப முடியுமா? என்று எனக்கு பயமாக உள்ளது. இதற்காக கடவுளை பிரார்த்தித்துக் கொள்கின்றேன் என்று கூறினார்.
அத்தோடு ““அன்னைதான் என்றைக்கும் அன்னை நாங்கள் அவன் குழந்தைகள்' என்றார்.

அன்னையின் புனிதப் பணிகள் அவர் ஸ்தாபித்த கிளைகளின் ஊடாக உலகம் முழுவதும் இடம்பெற்று வருகின்றன.

நோயாளர்களுக்கான சிகிச்சை, குழந்தைகளுக்கான கல்வி போதனை உள்ளிட்ட பல் வேறு பணிகளை இந்நிலையங்கள் ஆற்றி வருகின்றன.

கருணையின் வடிவமாகவும் மனிதருள் தெய்வமாகவும் திகழ்ந்த அன்னை திரேசா ஆற்றிய பணிகள் அளப்பயன என்பதோடு அன்னையின் தேகம் அழிந்தாலும் உலக மக்கள் உள்ளங்களில் அவர் என்றும் நிலைத்து வாழ்வார் என்பதே உண்மை.


 கருணையின் வடிவம் அன்னை திரேசா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 கருணையின் வடிவம் அன்னை திரேசா Empty Re: கருணையின் வடிவம் அன்னை திரேசா

Post by ப்ரியா Fri Aug 27, 2010 7:24 am

அன்னை அன்பே உருவானவர் ....

பகிர்வுக்கு நன்றி குட்டி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

 கருணையின் வடிவம் அன்னை திரேசா Empty Re: கருணையின் வடிவம் அன்னை திரேசா

Post by பிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 12:10 pm

கருணையின் வடிவத்தை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



 கருணையின் வடிவம் அன்னை திரேசா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 கருணையின் வடிவம் அன்னை திரேசா Empty Re: கருணையின் வடிவம் அன்னை திரேசா

Post by gunashan Sat Aug 28, 2010 12:15 pm

மாதர் திரேசா இஸ் கிரேட்...அப்பு....உப்புக்குட்டி...... நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 கருணையின் வடிவம் அன்னை திரேசா Empty Re: கருணையின் வடிவம் அன்னை திரேசா

Post by மு.வித்யாசன் Sat Aug 28, 2010 12:18 pm

நல்ல கட்டுரை இது . வருடங்களுடன் அவரது வாழ்கையை விளக்கி எங்களுக்கு தந்தமைக்கு நன்றி . படித்து பயன் அடைந்தோம் .


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 கருணையின் வடிவம் அன்னை திரேசா Empty Re: கருணையின் வடிவம் அன்னை திரேசா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum