புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
63 Posts - 57%
heezulia
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
58 Posts - 56%
heezulia
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_m10மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Thu Aug 26, 2010 11:35 pm

பத்மனாபன் எனனுடன் கல்லூரியில் படித்தவன். நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த அவன் வேறு ஜாதிப் பெண்ணை விரும்பி கல்யாணம் பண்ணிக் கொண்டதால், வீட்டின் உறவு முறிந்து போய் விட்டது. அவனும் அதைப் பற்றி கவலைப்படாமல் தன் மனைவியின் உதவியுடன் அவர்களின் குடும்ப தொழிலான துணிக்கடை வைத்தான்.

அவன் நேரமோ அல்லது அவன் மனைவியின் ராசியோ தெரியவில்லை, கடை மிகுந்த நஷ்டத்தில் நடக்கவே கடையை மூடிவிட்டான்.

பின்பு மாமனாரிடம் பணம் பெற்றும் கடன்கள் வாங்கியும் மளிகை கடை ஒன்று திறந்தான். ஆனால் அதுவும் சுகப்படாமல் போகவே கடையை மூடிவிட்டு, மாத சம்பளத்தில் ஒரு பெரிய துணிக்கடையில் வேலை செய்து வந்தான்.

தற்செயலாக ஒருநாள் என்னை சந்தித்த அவன் தன் குறைகளை எல்லாம் சொல்லி தீர்த்தான்.

"ராஜி, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் என்ன செய்தால் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும்?" என்றான்.

"இது போன்ற சூழ்நிலைகள் எல்லாருக்கும் வருவதுதான். இதை எதிர்கொண்டு வெற்றி பெறத்தான் நாம் இங்கு வந்து இருக்கிறோம். உதவி வேண்டுமானால் நல்ல ஞானம் கொண்டவரை அணுகி வழி கேட்கலாம்" என்றேன்.

"அப்படி யாரும் எனக்கு தெரியாதே! நான் என்ன செய்வது?" என்றான்.

"என்னுடைய குருவான "சின்ன யோகீஸ்வரர்" மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்பு நடத்துகிறார். இதில் நமக்கு உபயோகமான, வாழ்வில் முன்னேறக் கூடிய வழிகளை சொல்லி தருகிறார். முக்கியமாக நாம் கேட்காமலே நம்முடைய பிரச்சனைக்கு வழிகிடைக்கும். உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உனக்கு வழி பிறக்கும், வருகிறாயா?" என்று கேட்டேன்.

"முதல் ஞாயிற்றுக்கிழமையா? இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன, நான் லீவு போட்டு விட்டு வருகிறேன். எப்போது, எங்கு வரவேண்டும்?"

"ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்கு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிடு. நான் வந்து உன்னை அழைத்து போகிறேன்" என்று சொல்லிவிட்டு பிரிந்தேன்.

அதேப்போல ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அவனை தாம்பரம் இரயில் நிலையத்தில் சந்தித்தேன். அங்கிருந்து பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி இருக்கும் இடம் சென்றோம். அங்கே ஏற்கனவே சுமார் 15 பேர்கள் வந்து கூடியிருந்தார்கள். பத்மநாபனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.

பிறகு எல்லாரும் சென்று உள்ளே இருந்த ஒரு பெரிய ஹாலில் விரித்து இருந்த இருக்கைகளின் மீது அமர்ந்தோம். ஹால் முழுவதும் ஊதுபத்திகளின் இனிய வாசம் பரவியிருந்தது.

சரியாக 9 மணிக்கு குருவானவர் வந்து அவருடைய துண்டின் மீது அமர்ந்தார். ஏற்கனவே அறிமுகமானவர்களை குசலம் விசாரித்தார். அவருக்கு நான் பத்மநாபனை அறிமுகப்படுத்தினேன்.

பத்மநாபன் கைகளை குவித்து வணங்கினான். அவன் ஏதும் பேசவில்லை. குருவும் ஏதும் சொல்லவில்லை.

குருவானவர் சற்று நேரம் அமைதியாக எல்லார் முகத்தையும் ஒருமுறை தீர்க்கமாக பார்த்தார். கண்களை மூடிக் கொண்டார். பேச ஆரம்பித்தார்.

"இன்று எல்லாருக்கும் வாழ்வில் பலவிதமான கஷ்டங்கள், துன்பங்கள் வருகின்றன. அதை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது தெரியாமல் பலர் விழிக்கிறார்கள். முதலில் பிரச்சனையை தீர்க்க வேண்டுமானால், அது நமக்கு ஏன் வருகிறது என்று யோசனைப் பண்ண வேண்டும். காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடப்பது இல்லை.

நம் வாழ்வில் நடைபெறும் எல்லா செயல்களும் முதலில் நமது மனதில் ஒத்திகைப் பார்த்துவிட்டு பிறகுதான் உலகமேடையில் அரங்கேறுகிறது.

எப்படி ஒரு அசுத்தமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சினால் அது கெட்டு போகிறதோ அது போல கசடுகள் நிறைந்த நம் மனதில் எதை திட்டமிட்டாலும்
அது குறைபாடுகளுடன் தான் செயல் படும்.

எனவே நம்முடைய முதல் வேலை நம்முடைய மனதை கழுவி சுத்தம் பண்ணுவதுதான். அது எப்படி ?

ஒரு காட்டில் போய் ஒரு நந்தவனம் வைக்க விரும்பினால், என்ன
செய்கிறோம் ?

முதலில் அங்கே இருக்கும்முட்செடிகள், புதர்கள், பயனில்லா மரங்கள் ஆகிய
வேண்டாதவைகளை வெட்டி அப்புறப்படுத்துகிறோம்அல்லவா ? அதேப்போல் நம் மனதில் என்ன என்ன இருக்கின்றன என்பதை ஆராய வேண்டும்.

அங்கே நிறைய கோபம் இருக்கும். ஆத்திரம், வெறுப்பு இருக்கும். நம்மை
ஏமாற்றிய அண்ணன், தம்பிகள்,நம்மை பாரபட்சமாக நடத்திய பெற்றோர்கள்,
உறவினர்கள்,கூட வேலை செய்பவர்கள், நம் முதுகில் குத்திய நண்பர்கள் என பலபேர் மீது நமக்கு மிகுந்த வெறுப்பு இருக்கும். அவர்களில்
எவரேனும் ஒருவரை பார்த்ததும் நமக்கு உடம்பே பற்றி எரிவது போல
இருக்கும். மனம் புழுங்கும். ஆத்திரத்தில் துடிக்கும். அவர்களை பழிவாங்க பலவிதமான யோசனைகள் தோன்றும்.

இப்படிப்பட்ட மாறுபாடான எண்ணங்களுடன் நமது மனம் உழலும் போது, நல்ல
எண்ணங்கள், யோசனைகள்எப்படி நம் மனதில் எழக்கூடும் ? நாம் திட்டமிடும்
செயல்கள் எப்படி வெற்றியடையும் ? வாழ்க்கை எப்படிசிறக்கும் ?

என்ன செய்வது என்று கேட்பீர்கள்.

வேண்டியது எல்லாம் முயற்சியும் வைராக்கியமும் தான். நம் மனதை
முழுவதுமாக அடைத்துக் கொண்டுஇருக்கும் இத்தகைய "நெகடிவ்"
உணர்ச்சிகளை முதலில் அடையாளம் காண வேண்டும். ஒவ்வொன்றும் ஓர்
எண்ண குவியலாக நம் மனதில் புதர்களை போல, முட்செடிகளை போல குவிந்து கிடக்கின்றன. அவைகளைஎல்லாம் நீக்கி விட்டு அந்த இடத்தில் அன்பு, கருணை, தயாளம், மன்னிப்பு போன்ற "பாஸிடிவ்" உணர்வு
குவியல்களை பதிப்பிக்க வேண்டும்.

உதாரணம் சொல்லட்டுமா ?

ஒரு நண்பர் உங்களிடம் பெரிய அளவு பணத்தை கடன் வாங்கினார் என்று
வைத்துக் கொள்வோம். சிலகாலம் கழித்து, அவர் திருப்பி தருவதாக சொன்ன
காலம் முடிந்தபின், உங்களுக்கு ஒரு தேவை ஏற்படுகிறது. அப்போது போய்
அவரை கேட்டால், அவர் ஏதோ சாக்கு போக்கு சொல்லி உங்களை ஏமாற்றி
வருகிறார்என்றும் வைத்துக் கொள்வோம்.

உங்கள் மனம் என்ன பாடுபடும். அவர் மீது உங்களுக்கு எவ்வளவு வெறுப்பு, கோபம் ஏற்படும். இந்தகோபமும், வெறுப்பும் பன்மடங்காக பெருகி, மனதை முழுவதுமாக வியாபித்துக் கொண்டு, மற்றகோபதாபங்களோடு சேர்ந்து உங்களின் எல்லா
காரியங்களையும் ஒரு விதஎரிச்சலோடு, பதற்றத்தோடு செய்யவைக்கும்.

நாம் என்ன செய்ய வேண்டும் ?

அமைதியாக உட்காருங்கள். உங்கள் நண்பரை நினைவு கூறுங்கள். அவர்
ஆபத்தில் உங்களிடம் பணம் கேட்டபோது நீங்கள் அன்போடு பணம் கொடுத்ததை நினைத்துப் பாருங்கள். நீங்கள் திருப்பி பணம் கேட்ட போதுகொடுக்க முடியாமல் போனதற்கு ஏதேனும் காரணம் இருக்க கூடுமா என்பதையும் யோசியுங்கள்.

உங்கள் நண்பர் நல்லவர். சந்தர்ப்ப சூழ்நிலையால் பணத்தை கொடுக்கவில்லை.
ஆனாலும் திருப்பிகொடுப்பார் என்று நம்புங்கள். அவர் மீது நீங்கள் எவ்வளவு அன்பு கொண்டிருந்தீர்கள் என்பதை நினைத்துஅவரை மன்னியுங்கள். அவர் நிலைமைமுன்னேறி அவரே பணத்தை கொண்டு வந்து தருவார் என்று நம்புங்கள்.

அவரை மனமாற மன்னித்து விடுங்கள். அதையே நினைத்துக் கொண்டு
இப்போதைய வாழ்க்கையை ஏன்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் மனதில் உங்கள் நண்பர் ஒரு கள்ளிச் செடியாக இருப்பது போல
தோன்றினால், அதை பிடுங்கிபோடுங்கள். அவர் மீது கொண்ட பழைய அன்போடு அங்கே ஒரு மல்லிகை செடியை நடுவதாக பாவனைபண்ணுங்கள். உங்கள் மனதில் உங்கள் நண்பர் மல்லிகை செடியாக இருப்பதாக நினைத்து நாள்தோறும்அன்பெனும் நீரை ஊற்றுங்கள்.

இப்படியே உங்கள் மனதில் உள்ள வேண்டாத மனிதர்களின் நினைவுகளை,
அதாவது முட்புதர்களாக இருக்கும் "நெகடிவ்" எண்ணங்களை எடுத்து விட்டு
விதம் விதமான மலர் செடிகளை, (ஏமாற்றிய) நண்பர் என்னும்மல்லிகை செடி, (துரோகம் பண்ண) பார்ட்னர் என்கிற பவழ மல்லி மரம், (கொடுமைக்காரி) மாமியார் என்கிற சம்பங்கி கொடி என்று பலவிதமான மலர்
செடிகளை நட்டு, தினமும் உட்கார்ந்து அன்பெனும் நீரூற்றிவாருங்கள்.

உங்கள் மனத்தோட்டம் வளர, வளர, உங்கள் வாழ்வில் வசந்தம் வீசுவதை நீங்களே பார்ப்பீர்கள்.

எல்லார் வாழ்வும் வளம் பெற என் வாழ்த்துக்கள்" குரு வகுப்பை முடித்து
கண்ணைத் திறந்தார்.

நானும் பத்மநாபனும் விடைப் பெற்று வெளியே வந்தோம்.

"அவருடைய பேச்சு உனக்கு உதவியாக இருந்ததா ?" என்று கேட்டேன்.

"மிகவும் அற்புதமாக இருந்தது. சரியான நேரத்தில் கிடைத்த அறிவுரை. இதை நான் என் வாழ்க்கையில்செயல்படுத்த போகிறேன். உனக்கு மிகுந்த நன்றி" என்று கூறி விடைப் பெற்றான்.

இது நடந்து சுமார் 3 வருடங்கள் கழித்து ஒரு நாள் கார் ஒன்று என் வீட்டு வாசலில் வந்து நின்றது.அதிலிருந்து பதமநாபன், அவன் மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் நிறைய பைகளுடன் இறங்கி உள்ளேவந்தனர்.

மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்த பத்மநாபனுக்கும் இப்போது எதிரில்
பார்க்கும் பத்மநாபனுக்கும்எவ்வளவு வித்தியாசம். ஒரு பெரிய மனிதனின்
கம்பீரமும், வசதியான தோற்றமும், முகத்தில் ஒருசந்தோழக் களையும்
ஆளையே மாற்றி காண்பித்தது.

"வாங்க, வாங்க" என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். எல்லாரும்
ஹாலில் உட்கார்ந்து காபிசாப்பிட், நானும் பத்மநாபனும் என் அறைக்கு
சென்றோம்.

பத்மநாபன் என் கைகளை பிடித்துக் கொண்டான். " உன் குருவின் அறிவுரையால் என் வாழ்க்கையே மாறிவிட்டது. அன்று அவர் சொன்னது போலவே, ஒவ்வொருவராக, என் தந்தை, என் அண்ணன், என் அண்ணி என்று
அனைவரையும் நினைத்து, அவர்களை மனதார மன்னித்து, அவர்கள் மீது எனக்கு இருந்த வெறுப்புக்களை களைந்தேன். அவர்களை அன்போடு பார்க்க பழகி கொண்டேன்.

உன் குரு சொன்னது போலவே என் மனதில் மலர் செடிகளை, அன்பால் வளரும் பூச்செடிகளை வளர்த்தேன்.

ஒரு வருடம் கழித்து என் தந்தை என்னை அழைத்து அவருடைய பெரிய
துணிக்கடையை என்னிட்ம்ஒப்படைத்தார். என் அண்ணனுக்கு மூளையில்
ஏற்பட்ட ஒரு கோளாறால் அவருடைய கையின் இயக்கம் குறைப் பட்டு போக,
அவருக்கு பதிலாக கடையை என்னை பார்த்துக் கொள்ள சொன்னார்.

போன வருடம் என் மனைவி பெயரில் தனியாக ஒரு கடையும் ஆரம்பித்துள்ளேன். இரண்டு கடைகளும்லாபகரமாக நடந்துக்கொண்டு இருக்கின்றன."

என் கையை ப்டித்துக் கொண்டிருந்த அவன் சட்டென்று சட்டைப் பையிலிருந்து
ஒரு தங்க மோதிரத்தைஎடுத்து என் விரலில் அணிவித்தான். "இதை என்
நினைவாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அன்போடு சொன்னான்.

"நாளை முதல்ஞாயிற்று கிழமை அல்லவா ? நீயும் என்னுடன் வந்தால்
குருவிற்கு நன்றி சொல்லிவிட்டுஆசீர்வாதம் பெற விரும்புகிறேன்." என்றான்.

"அப்படியானால் இன்று எல்லாரும் இங்கேயே தங்குங்கள்" என்று கூறி அவனை ஹாலுக்கு அழைத்துவந்தேன்.

மனோசக்தி - மே 2010


tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Thu Aug 26, 2010 11:41 pm


இந்த கட்டுரையை கொண்ட இதழ் வெளிவந்த இரண்டு நாட்கள் கழித்து பெங்களூர் அருகே இருக்கும் ஓசூர் என்ற இடத்தில் இருந்து ஒரு இளைஞர் போன் செய்தார். "சார், நான் நன்றாக படித்து இருக்கிறேன், கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன், ஆனாலும் என் டீம் லீடர் எப்போதும் என்னை கடிந்துக் கொண்டும், குறை கண்டு பிடித்துக் கொண்டும் இருக்கிறார். இதனால் அவர் மீது எனக்கு மிகுந்த கோபமும் ஆத்திரமும் - எப்போதும் இதே நினைவுதான். இதனால் வேலையில் குறை வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. நீங்கள் எழுதியிருக்கும் இந்த பயிற்ச்சியினை செய்தால் பலன் இருக்குமா?" என்று கேட்டார்.

"ஆம். நிச்சயம் இருக்கும். நாங்கள் செய்து பலன் அடைந்திருக்கிறோம்." என்று நான் சொல்லி விபரமாக மறுபடியும் விளக்கினேன்.

சுமார் பத்து நாட்களுக்கு முன்பு அதே இளைஞர் போன் செய்தார். "மிக்க நன்றி சார், இப்போது நிலைமை மிகவும் நல்லப்படியாக முன்னேறி இருக்கிறது. இப்போது என் மனம் அமைதியாக இருக்கிறது. டீம் லீடர் மிகவும் மாறி விட்டார்." என்றார். "தொடர்ந்து செய்து வாருங்கள்." என்று வாழ்த்தினேன்.

நான் முதலில் நான் இந்த கட்டுரையை "பொது கட்டுரையில்" பதிவு செய்யலாம் என்று நினைத்தேன். ஆயினும் ஒரு சிறிய தயக்கம். அன்பு செந்தில் தம்பி எங்கே " எச்சூஸ்மி பிரதர் இது வெறும் கப்சா தான் " என்று சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தினால்தான் கதை பகுதியில் பதிவு செய்துள்ளேன். நீங்கள் இதை கதையாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது கருத்துள்ள கட்டுரையாகவும் எடுத்துக் கொள்ளலாம். நன்றி, வணக்கம்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 27, 2010 11:12 pm

திரு ராஜேஸ்வரன் அவர்களுக்கு,
உங்களுடைய இந்த பதிவு / மீனா அவர்களுக்கு எழுதிய பதிவைப் பார்த்தேன். நல்லதோர் பதிவுகள்.
"மனத்தோட்டத்தில்-------------" பதிவை படித்து கருத்தை கூறவில்லை என்று மனத்தாங்கல் இருப்பது தெரிந்தது.
எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு. சிறிது யோசித்து பாருங்கள். நீங்கள் பதிவிட்ட சமயம், ஈகரை வலையை யாரும் பார்க்காத சமயமாக இருக்கலாம். பிறகு, அடுத்துஅடுத்து பற்பல தலைப்புகளில், பலர் விஷயதானம் செய்யும் போது, முதலில் வந்த தலைப்புக்கள் மறைய கூடிய சாத்ய கூறுகள் அதிகம் உண்டு அல்லவா? இது எந்தன் கருத்து. எந்தன் கருத்து சரி எனப் படுகிறதா? உங்களால் முடிந்த ,நற்பதிவுகள் என நினைப்பதை தொடர்ந்து பதியுங்கள்.
உங்கள் மனத்தோட்டம் பதிவு, நல்லதொரு கருத்தை கூறுகிறது.ரசித்தேன். நன்றி. அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்.


tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Sat Aug 28, 2010 4:20 am

அன்புடையீர்,

தங்களின் ப்திவுக்கும் பாராட்டுக்கும் முதலில் நன்றி.

தாங்கள் சொன்ன கருத்து மிகவும் சரியாக எனக்கு தோன்றுகிறது. ஆயினும் ..................

தங்களுக்கு மீண்டும் நன்றி, வணக்கம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 28, 2010 11:39 am

T.N.Balasubramanian wrote:திரு ராஜேஸ்வரன் அவர்களுக்கு,
சிறிது யோசித்து பாருங்கள். நீங்கள் பதிவிட்ட சமயம், ஈகரை வலையை யாரும் பார்க்காத சமயமாக இருக்கலாம். பிறகு, அடுத்துஅடுத்து பற்பல தலைப்புகளில், பலர் விஷயதானம் செய்யும் போது, முதலில் வந்த தலைப்புக்கள் மறைய கூடிய சாத்ய கூறுகள் அதிகம் உண்டு அல்லவா? இது எந்தன் கருத்து. எந்தன் கருத்து சரி எனப் படுகிறதா? உங்களால் முடிந்த ,நற்பதிவுகள் என நினைப்பதை தொடர்ந்து பதியுங்கள்.உங்கள் மனத்தோட்டம் பதிவு, நல்லதொரு கருத்தை கூறுகிறது.ரசித்தேன். நன்றி. அன்பு மலர் அன்பு மலர்
ரமணீயன்.
சரியாக சொல்லியுள்ளீர்கள் ஐயா , நம்முடைய பதிவுகளை படிப்பவர்கள் அனைவரும் பின்னூட்டம் இடுவார்கள் என்று நினைக்க முடியாது ஐயா , முன்பொரு சமயம் நண்பர் எட்வின் அவர்கள் , என்னுடைய பதிவுகளுக்கு யாருமே பின்னூட்டம் இடவில்லை , பின்னூட்டம் இடும் அளவுக்கு என் பதிவுகள் தரமானவையாக இல்லையோ என்று வருத்தபட்டார்.
அதற்கு நான் சொன்னேன் , உங்கள் பதிவுகளுக்கு பின்னோட்டம் எத்தனை வந்துள்ளது என்று பார்க்காதீர்கள் ஆசிரியரே , எத்தன பேர் அந்த பதிவை படித்துள்ளனர் என்று பாருங்கள் , பதிவுகளை படித்தவர்களுக்கு பின்னோட்டம் இடுவதற்கு நேரமின்மையோ அல்லது வேறு காரணங்களோ இருக்கலாம் என்று சொன்னேன் , அதையே தான் இங்கும் சொல்கிறேன் , ராஜேஸ்வரன் ஐயாவின்
"மனத்தோட்டம்" பதிவு 95 மேற்பட்டோரால் படிக்கபட்டுள்ளது. மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். 678642 மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். 154550

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 28, 2010 11:48 am

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:திரு ராஜேஸ்வரன் அவர்களுக்கு,
சிறிது யோசித்து பாருங்கள். நீங்கள் பதிவிட்ட சமயம், ஈகரை வலையை யாரும் பார்க்காத சமயமாக இருக்கலாம். பிறகு, அடுத்துஅடுத்து பற்பல தலைப்புகளில், பலர் விஷயதானம் செய்யும் போது, முதலில் வந்த தலைப்புக்கள் மறைய கூடிய சாத்ய கூறுகள் அதிகம் உண்டு அல்லவா? இது எந்தன் கருத்து. எந்தன் கருத்து சரி எனப் படுகிறதா? உங்களால் முடிந்த ,நற்பதிவுகள் என நினைப்பதை தொடர்ந்து பதியுங்கள்.உங்கள் மனத்தோட்டம் பதிவு, நல்லதொரு கருத்தை கூறுகிறது.ரசித்தேன். நன்றி. அன்பு மலர் அன்பு மலர்
ரமணீயன்.
சரியாக சொல்லியுள்ளீர்கள் ஐயா , நம்முடைய பதிவுகளை படிப்பவர்கள் அனைவரும் பின்னூட்டம் இடுவார்கள் என்று நினைக்க முடியாது ஐயா , முன்பொரு சமயம் நண்பர் எட்வின் அவர்கள் , என்னுடைய பதிவுகளுக்கு யாருமே பின்னூட்டம் இடவில்லை , பின்னூட்டம் இடும் அளவுக்கு என் பதிவுகள் தரமானவையாக இல்லையோ என்று வருத்தபட்டார்.
அதற்கு நான் சொன்னேன் , உங்கள் பதிவுகளுக்கு பின்னோட்டம் எத்தனை வந்துள்ளது என்று பார்க்காதீர்கள் ஆசிரியரே , எத்தன பேர் அந்த பதிவை படித்துள்ளனர் என்று பாருங்கள் , பதிவுகளை படித்தவர்களுக்கு பின்னோட்டம் இடுவதற்கு நேரமின்மையோ அல்லது வேறு காரணங்களோ இருக்கலாம் என்று சொன்னேன் , அதையே தான் இங்கும் சொல்கிறேன் , ராஜேஸ்வரன் ஐயாவின்
"மனத்தோட்டம்" பதிவு 95 மேற்பட்டோரால் படிக்கபட்டுள்ளது. மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். 678642 மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். 154550
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். 359383 மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். 359383 மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். 359383 மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 11:58 am

அருமையான பதிவு... மனதில் உள்ள கோப உணர்வுகளை நீக்கினாலே போதும்.... வெற்றி அடையலாம்.... நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி




மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். Power-Star-Srinivasan
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Sat Aug 28, 2010 12:27 pm

திரு பாலசுப்ரமணியன், திரு ராஜா, திரு சபீர் மற்றும் பக்கிரி அனைவருக்கும் மன்மார்ந்த நன்றி.

திரு பாலா மற்றும் திரு ராஜா விளக்கத்தை படித்த பிறகு மனம் நிம்மதியாக் இருக்கிறது.

மீண்டும் நன்றி, வணக்கம்.

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 12:33 pm

பிளேடு பக்கிரி wrote:அருமையான பதிவு... மனதில் உள்ள கோப உணர்வுகளை நீக்கினாலே போதும்.... வெற்றி அடையலாம்.... நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



அன்புடன்
மீனா
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Aug 28, 2010 1:02 pm

அருமையான ஆழமான உண்மை இது ....
நாங்கள் எங்கள் வாழ்க்கையில் இதே நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தோம் ..
எந்த ஒரு உறவும் இல்லாமல், நண்பர்களும் இல்லாமல் வெறும் பத்தாயிரம் ரூபாயை வைத்து எங்கள் மணவாழ்க்கை தொடங்கினோம் ....
ஒரு காலகட்டத்தில் நாளை என்ன செய்வது என்ற நிலையில் இருந்த எங்களை கடவுள் ஒரு நபர் மூலம் வேலை என்ற உதவியை செய்து இன்று நங்கள் இருவரும் போதுமான அளவு வசதியுடனும், தேவையுடனும் வாழ்ந்து வருகிறோம் ....
இன்றும் எங்கள் சொந்தங்கள் உதவி இல்லாமலே எங்கள் உழைப்பிலே தான் வாழ்ந்து வருகிறோம் ஐயா ...
இதை படித்தவுடன் எங்கள் கடந்த கால நினைவு என் மனக்கண் முன் வந்தது ...
மிக்க நன்றி ஐயா ....
கண்டிப்பாக நீங்கள் சென்னையில் இருந்தால் உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும் ... நன்றி நன்றி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக