புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_c10இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_m10இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_c10 
30 Posts - 79%
heezulia
இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_c10இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_m10இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_c10இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_m10இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_c10இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_m10இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_c10இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_m10இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 4:15 am

சமீபத்தில் ஒருநாள், அலுவலக நண்பன் ஒருவன் என்னிடம் மிக ஆவலுடன் அவன் தொலைபேசியில் இருந்த ஒரு ஆடியோ ஃபைலைக் கேட்கச் சொன்னான். ’இருடா இந்த மெயிலை அனுப்பிட்டு வரேன்’ என்றால் கேட்காமல், இப்போதே கேளுங்கள் என்று அடம். சரியென்று நான், அவன், மற்றும் ஒரு நண்பன், அனைவரும் வட்டங்கட்டி உட்கார்ந்து கேட்டோம். அதன் சுருக்கம் பின்வருமாறு:

குறிப்பு: ஆழமான கோவைத்தமிழ் சற்று சிரமமாகவே இருக்கும். பொறுத்துக்கொள்ளவும்.

ஏர்டெல் கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ்: வணக்கம் ஏர்டெல் அழைத்தமைக்கு நன்றி.

தினேஸ் பாபு: கண்ணு.. வணக்கங் கண்ணு.. நான் தினேஸ் பாபு பேசறங் கண்ணு. நம்ப லைன்லிருந்து அப்பா லைனுக் கூப்ட்டா, எடுக்க மாட்டேங்குதுங் கண்ணு.. கொஞ்சென்னனு பாருங் கண்ணு..

க.கே.எ: உங்க போன்ல இருந்து அப்பா போன் கூப்ட்டா கெடைக்கலிங்ளாங் சார்? (எண்ணை வாங்கிக் கொள்கிறார்).

க.கே.எ: எப்பக் கூப்ட்டீங் சார்?

தி.பா: (பக்கத்திலிருந்தவனைக் கேட்டு..) 12 மணிக்குங் கண்ணு.. அப்பதாங் கண்ணு நம்ப அப்பா ப்ரீயா இருப்பாரு.(பின்னால் சிரிப்புச் சத்தம்).

க.கே.எ: (எண்ணைப் பரிசோதித்து விட்டு) உங்க எண்ல எந்தப் பிரச்சினையும் இல்லைங் சார்.. உங்க சிம்ம வேறொரு போன்ல போட்டு ட்ரை பண்ணிப் பாருங்க..

தி.பா: ஏங்கண்ணு.. சிம் கார்ட்னா.. இந்த அட்டையாட்ட இருக்க்குமுல்ல.. அதானுங் கண்ணு..?

க.கே.எ: ஆமாங் சார். அது தான்.

தி.பா: அதெப்படிங் கண்ணு.. நம்ப சிம்ம வேற போன்ல போட்டா போன்காரவிக சண்டைக்கு வர மாட்டாங்ளா..?

(க.கே.எ, வந்த கோபத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு..)
இல்ல சார்.. நீங்க போட்டுப் பாருங்க.. அப்டியும் வேல செய்யலனா திரும்ப அழைங்க..

தி.பா: கண்ணு.. நம்ப அப்பா செத்தப்பவே போனையும் போட்டுப் பொதச்சுட்டமுங் கண்ணு.. அதுனால எதா பிரச்சினை இருக்குமுங்ளாங் கண்ணு..?

(க.கே.எ ஒன்றும் பேசவில்லை. சில நொடி மௌனத்திற்குப் பின்..)

தி.பா: ஏங்கண்ணு.. நம்ம கூடொப் பேசி இந்தப் பொலப்ப் பாக்றதுக்கு, நீ வேறெதா நல்ல பொலப்ப் பாத்துக்க்லாமுல்ல கண்ணு..

க.கே.எ: (இதற்கு மேலும் அவர் பொறுமையாக..) உங்க எண் பத்தின வேற எதா சந்தேகம் இருந்தா கேளுங்க சார் சொல்றேன்.

தி.பா: வேறொண்ணுமில்ல.. செரி சாப்ட்டியா கண்ணு..?

க.கே.எ: இல்ல சார்.. நீங்க ஏர்டெல் பத்தி கேளுங்க.. பதில் சொல்றேன்.

தி.பா: என்ன கண்ணு நிய்யு..? நம்ம புள்ளையாப் போய்ட்டினு கேட்டா.. செரி உனக்குப் புடிக்க்லினா உட்ரு கண்ணு..

(சிதறும் சிரிப்பொலிகளுக்கு நடுவே, தொலைபேசியில் பதிவு செய்வது நிறுத்தப்படுகிறது).

இதே போல அடுத்த ’ஒலிப்பதி’வில், வேறொரு வாடிக்கையாளர், அவர் கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாததால், வீட்டிலிருந்து பெரியவர்கள் யாரையாவது அழைத்து வரச் சொன்னார்களாம். உங்களால் சற்று வர முடியுமா? என்று கேட்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 4:15 am

இன்னுமொரு பதிவில் ஒரு பெண் க.க.ஏ-விடம், ஹலோ ட்யூன் வைக்க வேண்டும் என்றும், தனக்கு ஜெமினி ஜெமினி பாடல் தான் வேண்டும் என்றும், அதை ஒரு முறை பாடிக் காட்ட முடியுமா என்றும் கேட்கிறார், நம் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மற்றுமொரு மேலான 'வாடிக்கையாளர்'.

சுழற்றியடிக்கும் வாழ்க்கையின் சுமையில், கிடைத்த ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தை கவனிக்கும் கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ்களை எண்ணி, உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. இந்தப் பொன்னான உரைக்குக் காரணகர்த்தாக்கள் மரியாதைக்குப் பேர்போன நம் கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர்கள்.

இவர்கள் படிக்கட்டும். ஊர் சுற்றட்டும். இல்லை.. டோப்பைப் போட்டு நாசமாய்ப் போகட்டும். அதைப் பற்றியெல்லாம் நமக்கென்ன? ஆனால் சக மனிதனின் உணர்வுகளை இப்படி அற்ப சந்தோஷங்களுக்காக, வேண்டுமென்றே குத்திக் கூறு போட்டு, அதில் இன்பம் காணும் குரூரம் எங்கிருந்து வந்தது என்றுதான் புரியவில்லை.

வாடிக்கையாளர் சேவையில் பணிபுரிவோர், மறுமுனை என்ன பேசினாலும், பொறுமையுடன்தான் பதிலளிக்க வேண்டுமாம். இது அவர்களுக்கு ஒரு விதியாம். ’ஏர்டெல் மற்றும் பல தொலைதொடர்பு நிறுவனங்களால் வாடிக்கையாளருடனான எல்லா உரையாடல்களும் பதிவு செய்யப்படுவதால், சேவையாளர் மீறி எதுவும் பேசவும் முடியாது. ஆகவே, வேறு வழியே இல்லாமல் அவர்களின் உணர்வுகளையடக்கிக் கொண்டு பதிலளிக்கிறார்கள்’ என்று வியாக்யானம் வேறு.

அப்படியே எதாவது நடவடிக்கை எடுத்தாலும் அதிகபட்சம் சேவையை நிறுத்துவர். அந்த சிம் கார்டைத் தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்று வாங்குவதற்கு எத்தனை நேரம் ஆகப்போகிறது? அதுதான் முக்குக்கு மூன்று ’ஏஜன்சி’கள் இருக்கின்றனவே செல்தொலை பேசி சேவைகளுக்கு.

சரி சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றால் ஏற்கெனவே இங்கு சட்ட சிக்கல்கள் மிகக்குறைவு(?!). ஏர்டெல் அதன் வியாபாரத்தைப் பார்க்குமா.. இல்லை.. கேவலம் ஒரு க.க.எ-விற்குப் பரிந்து கொண்டு வழக்குத் தொடுக்குமா?

ஆனால் அந்த சேவையாளரைப் பொறுத்தமட்டில், இந்நிகழ்வு அந்த சமயத்தில் ஏற்படுத்தும் கோபத்தோடு நில்லாமல், இப்படி ஒரு பணியில் தான் இருக்க நேர்ந்துவிட்ட இயலாமையை நினைத்து அவர் தனக்குள் புழுங்கும் நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து மன அழுத்தமும், உளைச்சலும் இலவச இணைப்புகள் ஆகலாம்.

இதே ரீதியில் சென்றால் நம் மாணவ மாமணிகள், கஸ்டமர் கேர் பெண்களை சினிமாவுக்கோ இல்லை வேறெதற்கோ அழைத்தாலும் வியப்பதற்கில்லை.

சமீபத்தில் சாரு கூட இதே போன்றதொரு கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கித் தமிழகமெங்கும் புகழீட்டிக் கொண்டிருந்த கெட்ட வார்த்தைப் பாடலொன்று, சென்னையிலிருக்கும் மகளிர் கல்லூரிகள் வரை பிராபல்யம் அடைந்திருந்ததை சுட்டிக் காட்டியிருந்தார்.

சமூகப் பிரச்சினையொன்று வந்தால், அதற்காக சாகும் வரை உண்ணாவிரதமிருக்கக் களமிறங்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் மேற்கூறியவை போன்ற கூத்துகளைப் பார்க்கையில், அடுத்த தெருவிலிருக்கும் ஒருவனின் உணர்வுகளை மதியாத இவர்களா, எங்கோ இருக்கும் கண்காணாத சகோதரர்களின் சாவுக்குக் குமுறுகிறார்கள் என்று நம்மை சந்தேகத்திற்குள்ளாக்குவதும் இவர்களேதான்.

ஆங்காங்கு காணக்கிடைக்கும் ஓரிரு அத்திப்பூ விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இக்கால இளைஞர்கள் விவேகானந்தருக்கெல்லாம் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள் என்ற உண்மையின் கசப்பு, நானும் இளைஞன்தானென்ற போதும் என்னால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகிறது.

மூலம்:http://azhagiyalkadhaigal.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக