ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!

3 posters

Go down

குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது! Empty குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!

Post by ரபீக் Thu Aug 26, 2010 10:40 am

இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது.
ஆனால் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நம் நாட்டு மக்கள் உலகம் முழுதும் பயணிக்கின்றனர். திரும்பும் போது தங்கள் உடைமைகளுடன், கிருமிகளையும் எடுத்து வந்து விடுகின்றனர்.

குளிர்காய்ச்சல் பரவுதல், அடிக்கடி ஏற்படுகிறது. 1918ல் ஸ்பெயின் நாட்டில் இது முதலில் பரவத் துவங்கியது. மிகவும் அபாயகரமாக உலக அளவில் 50 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டனர். ஐந்து கோடி மக்கள் உயிரிழந்தனர். ஆசியாவில் 1957ல் குளிர் காய்ச்சல் பரவியது. 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஹாங்காங்கில் 1968ல் பரவி, ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.

குளிர் காலத்தில் வரும் இந்த காய்ச்சலால் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இதை விடக் குறைவு தான்; ஆனால், அதை ஒழிக்க அதிக நிதி அளிக்கப்படுகிறது; விளம்பரப்படுத்தப்படுகிறது.
தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பு ஏற்பட்ட ஓரிரு நாளில், இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது.

சோர்வு, காய்ச்சல், தலைவலி, மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவந்து நீர் வடிதல், தசை வலி ஆகியவை இதன் அறிகுறிகள். சாதா சளியை விட, இது மிகவும் கடுமையாக இருக்கும்.

நோய் உள்ளவருக்கு, இருமல், தும்மல் ஏற்பட்டாலோ, எச்சிலைத் துப்பினாலோ, காற்று மூலம் மற்றவர்களுக்கு இந்தத் தொற்று பரவி விடும். ஒவ்வொரு இருமல், தும்மலும், 40 ஆயிரம் நீர்த் துளிகளை வெளியிடுகிறது. ஒரே ஒரு துளி, மூக்கில் நுழைந்தால் போதும், தொற்று ஏற்பட.
சுவர்கள், கதவுகள், பேப்பர், நாணயம் மற்ற பொருட்கள் மீதும் இவை படியலாம்.

நோய் தொற்று உள்ளவர்கள் கை கழுவும் பழக்கம் இன்றி இருந்தால், அதன் மூலமும் தொற்று பரவும். மிக அதிக வெப்பமோ, புறஊதாக் கதிர்களோ செலுத்தினால், 5 முதல் 15 நிமிடங்களில் இந்த கிருமி இறந்து விடும். சளி மூலம் வெளியேறும் இந்த வைரஸ் 48 மணி நேரம் உயிருடன் இருக்கும் திறன் பெற்றது. நெருக்கடியான இடங்களுக்குச் செல்வது, தொற்று உள்ளவர் அருகில் சென்று பழகுதல், காற்றோட்டமின்மை, குறைந்த வெப்பச் சூழலில் இருப்பது ஆகியவை இந்தத் தொற்று பரவக் காரணமாக அமைகின்றன.

குளிர்க்காய்ச்சல் என்பது, மிகவும் மிதமான காய்ச்சல் தான். பொதுவாக தானாகவே சரியாகி விடும்.

மிகவும் சிறு வயது அல்லது மிக முதிய வயது உடையோர், கர்ப்பிணிகள், எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், புகை பிடிப்பவர்கள் ஆகியோருக்கு, இது அபாயகரமான நோயாக மாறி விடுகிறது. நிமோனியா உருவாகி இறக்கும் நிலை ஏற்படுகிறது.

தொற்று பரவும் காலங்களில், அறிகுறிகளை வைத்து நோய் கண்டறியப்படுகிறது. வைரசைக் கண்டுபிடிக்க விரைவுப் பரிசோதனை முறைகள் உள்ளன; இவை, 75 முதல் 90 சதவீதம் வரை துல்லியமாகக் கணிக்கின்றன.

வைரஸ் தொற்று ஏற்படக் காரணமாக உள்ளவை, ரிபோநியூக்ளிக் அமிலம் கொண்ட வைரஸ்கள். இவற்றில் ஏ, பி மற்றும் சி வகை வைரஸ்கள் தான். காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. மனிதனின் நோய் எதிர்ப்புத் திறனை வைத்து, அவற்றுக்கு எச்1என்1, எச்5என்1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸ்கள், பறவைகள், பன்றி போன்ற விலங்கினங்களின் உடலில் வாழ்கின்றன. இந்த வைரஸ்கள் திடீரென தன்மையை மாற்றிக் கொண்டு, சீற்றத்துடன் மனிதனைத் தாக்கத் துவங்கி விடுகின்றன. இது போன்ற புதிய வைரஸ்களை மனிதனால் எதிர்கொள்ள முடிவதில்லை. எனவே, வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடையே இந்த நோய் வேகமாகப் பரவி விடுகிறது.

குளிர்காலத்தில் தான் இது பரவுகிறது. வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும், வெவ்வேறு மாதங்களில் குளிர் நிலவுகிறது. எனவே, ஆண்டுக்கு இரண்டு முறை நோய் பரவுதல் ஏற்படுகிறது. சில இடங்களில் மழைக் காலங்களில் நோய் பரவுகிறது. சூரிய ஒளி குறைவான காலங்கள் இவை. ஒரே இடத்தில், கட்டடங்களில் மக்கள் ஒதுங்குவர். அப்போது தொற்று ஏற்படும். மக்களின் பயணம் தற்போது உலக அளவில் இருப்பதால், நோய் பரவுவது எந்த காலத்திலும் ஏற்படுகிறது.

நோய் பரவுவதை கட்டுப்படுத்த…

* நோய்வாய்ப்பட்டவரை பார்த்த பிறகு, கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* பணத்தைக் கையாண்ட பிறகு, பல முறை கையைக் கழுவ வேண்டும்.
* கதவுத் தாழ்ப்பாள் உட்பட அடிக்கடி நீங்கள் கை வைக்கும் இடங்களை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* வெளியில் செல்லும்போது முகமூடி அணிந்து செல்லவும்.
* தும்மல், இருமல் ஏற்படும்போது, முகத்தை மூடிக் கொள்ளவும்.
* கண்ட இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்க்கவும்.

குளிர்க் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து உண்டு. ஒவ்வொரு ஆண்டும், காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமியை, உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து, மருந்து நிறுவனங்களுக்குச் சொல்கிறது. அந்த நிறுவனங்கள் ஆறு மாதத்திற்குள் நோய் தடுப்பு மருந்தைத் தயாரிக்க வேண்டும். தற்போதைய குளிர் காய்ச்சல் தடுப்பு மருந்து, 75 சதவீத அளவு பாதுகாப்பு தருகிறது. இந்த மருந்து போடப்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும், தீவிரமாக ஏற்படுவதில்லை; அதிக உபாதைகளையும் ஏற்படுத்துவதில்லை.

ஊசி மூலம் செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து, இந்தியாவில் கிடைக்கிறது. சிறு வயதினர், முதியோர், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு இந்த மருந்து போடுவது நல்லது. மற்ற நாடுகளில், மூக்கு வழியாகச் செலுத்தப்படும் வடிவில் இந்த மருந்து கிடைக்கிறது.
உங்களுக்கு குளிர்க் காய்ச்சல் ஏற்பட்டால், வீட்டிலேயே இருங்கள். நன்கு ஓய்வு எடுங்கள். சீக்கிரம் குணமடைவீர்கள்; மற்றவர்களுக்கும் நோய் பரவாது. வலி, காய்ச்சலுக்கு பாரசிட்டமால் மருந்து உட்கொள்ளுங்கள்.

பொதுவாக ஆஸ்பிரின், சாலிசைக்ளிக் அமிலம் நிறைந்த மருந்துகள் உட்கொள்ள வேண்டாம். குளிர்க்காய்ச்சல் இருக்கும்போது, இந்த மருந்துகள் உட்கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம். மருத்துவர்களின் பரிந்துரைப்படியே, “டாமிப்ளூ’ போன்ற மாத்திரைகளைச் சாப்பிடலாம். காய்ச்சலின் தீவிரத்தையும், பாதிப்பு ஏற்படுத்தும் நேரத்தையும் குறைக்கலாம்.

நன்றி விடுப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது! Empty Re: குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!

Post by மீனா Thu Aug 26, 2010 10:48 am

பயனுள்ள தகவல் , பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது! Empty Re: குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!

Post by அருண் Thu Aug 26, 2010 10:52 am

அறிய தகவல் நண்பரே பகிர்தமைக்கு மிக்க நன்றி... மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது! Empty Re: குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum