ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன்

Go down

தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Empty தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன்

Post by vishnupuramsaravanan Wed Aug 25, 2010 12:39 pm

இடைவெளிகளில் மிதக்கும்
நாற்காலிகளில்
இருள் வந்து குந்தியிருக்கிறது.

தீபச்செல்வன் [பதுங்கு குழியில் பிறந்த குழந்தை தொகுப்பில்].

முதலில் ஒன்றை சொல்லிவிட விரும்புகிறேன். ஈழப்போராட்டம் குறித்து அடிமுதல் நுனிவரை அறிந்த அறிவுஜீவி அல்ல நான்.தேடிகிடைத்தவற்றை வாசித்து, அரிதாய் கிடைக்கிற ஈழத்து உறவுகளிடம் பேசி அறிந்த வரையில், ஈழப்போரின்போதும் அதன்பின்னான நாட்களிலும் போருக்கு ஆதரவான படைப்பாளர்கள் மீது ஏவப்படும் குரல் குறித்த என் பகிர்வாக இதை எழுத துவங்குகிறேன்.

ஈழம் சார்ந்த தங்களது நிலைப்பாடுகளில் பொதுவாக விடுதலைப்புலி ஆதரவு அல்லது எதிர்ப்பு என்கிற தொனியிலே பேசப்பட்டுவருவது தெரிந்ததே. புலிகளுக்கு ஆதரவாக பேசுவோர் மற்றும் இயங்குவோர் மீது கடந்த ஓராண்டுக்கு முன்வரை அவர்கள் புலிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு பேசுவதாகவும் எழுதுவதாகவும் திரும்பதிரும்ப சொல்லப்பட்டது. அதையே புலியெதிர்ப்பாளர்களை நோக்கி நீங்கள் சிங்களவனிடமிருந்து பணம் பெற்று இந்த புலியெதிர்ப்பு வேலையை செய்கிறீர்களா எனக்கேட்டதும் கோபம் பொத்துக்கொண்டு மக்கள் பற்றியெல்லாம் நாங்கள் பேசுகிறோம் என ஆதாரங்களை காட்டுகின்றனர். ஆம் நண்பர்களே.. இவர்கள் புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதில் ஒருபங்கு கூட அங்கு அல்லுறும் மக்கள் குறித்து கவலை கொண்டு அதை எழுதுவதில்லை.

புலி எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாண்மையோர் தொடக்கத்தில் ஏதேனும் ஆயுத குழுக்களிலோ அல்லது விடுதலை புலிகள் அமைப்பிலோ இருந்தவர்கள்தாம். அவர்கள் இயங்கிய அமைப்பு குலைந்த/குலைக்கப்பட்ட பிறகு , புலிகளோடு முரண்பட்டு வெளியேறியவர்களாக இருப்பதை நாம் காணமுடிகிறது. எனவே ஆயுதப்போராட்டத்தை இவர்கள் ஒருவகையில் ஏற்றுக்கொண்டவர்கள் என்றே நாம் கருதலாம்.

ஆனால் இவர்கள்ஆயுதபோராட்டம் குறித்து இப்போது எழுதுவதும் காந்தியத்தை தூக்கி பிடிப்பதை போன்ற தோற்றத்தை தருவதும் நமக்கு சந்தேகங்களை வரவழைப்பவையே. சரி இவர்களின் பரிணாம வளர்ச்சியா அல்லது வேறெதுவுமா என்பதை காலம் விடுவிக்கும். ஆனால் ஈழப்போராட்டம் குறித்து ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் எழுத்தாளர்களையும் இயக்கத்தினரையும் குறிவைத்து இவர்கள் எழுதுவது குறித்து நாம் கவனத்துடன் பார்க்கவேண்டும். அவர்களின் மனநிலையை சோர்வடையச்செய்து இயங்குவதிலிருந்தும் எழுதுவதிலிருந்து தளர்ந்துபோகச்செய்யும் நோக்கம் முன்னிருத்தப்படுவதன் அடையாளமாய் தனிமனித தாக்குதல் பல விவாதங்களில் புகுத்தினார்கள்.

போர் உச்சமாக நடந்துக்கொண்டிருந்தபோது இவர்களின் பணியும் முடுக்கிவிட்டதை போல திடுமென புலியெதிர்ப்புநிலை புத்தகங்கள் கொண்டு வருவதும், நேர்காணலில் தோன்றுவதும் அருள்வாக்கு சித்தர் போல குறி சொல்வதுமாக நிகழ்ந்து வந்தன. "தமிழக எழுத்தாளர்கள் ஏன் ஈழப்போர் குறித்து அதிகம் பேசவில்லை" என தமிழ்நதி கேட்கையில் பல்முனைகளிலிருந்து குரல்களும் கட்டுரைகளும் வந்தவண்ணமிருந்தன. தமிழ்நதியின் நண்பர்களின் சாதி சான்றிதழ் பரிசோதிக்கப்பட்டு இணயத்தளங்களில் முடிவு அறிவிக்கப்பட்டது. அரசியல் இயக்கங்களாக செயல்பட்டவர்கள் மீதும் அவதூறுகள் பொழிப்பட்டன/பட்டுவருகின்றன.

தற்போது கவிஞர் தீபச்செல்வனின் நேர்காணலை தொடர்ந்து தனது காழ்ப்புணர்வுகளை பதிவு செய்யும் வேலை தொடர்ந்துவிட்டது, ஒருவரே பற்பல அவதாரமெடுக்கும் அற்புதங்கள் நிகழ்வது புதுசெய்தி அல்ல. அவைகளின் நோக்கம் என்ன என்பதே நமக்கு முக்கியமானது. அவர்களின் குரல் இப்பவும் புலி எதிர்ர்பின் தீவிரத்தை போல முகாமிலிருக்கும் மக்களின் அவலத்தையோ, சரணடைந்த 12000 ஆயிரம் பேர்களின் தற்போதைய நிலையையோ தீண்டவில்லை. சேரன் எழுதாதையே இவர் எழுதிவிட்டார் எனகேட்கிறார்கள். சேரனின் புகலிட வாழ்வை கேலிசெய்யும் இவர்கள் தீபச்செல்வன் ஈழத்திலிருந்து எழுதினாலும் அதற்கொருவிதமான கேலியை வைத்திருக்கிறார்கள். எங்கிருந்து எழுதினால் இவர்களின் கருணையை பெறமுடியுமென்று எமக்கு தெரியவில்லை. அவர்களுக்காவது தெரியுமா என்றும் புரியவில்லை.மேலும் லும்பினி தளத்தின் இந்நேர்காணலை ஏன் வெளியிட்டார்கள் என குதிப்பதும் விசித்திரமாக இருக்கிறது. அந்த தளத்தில் மாற்றுகருத்துகள் வெளியிடக்கூடாதென மறைமுகமாக ஆணையிடவிரும்புகிறாரா என்ன?

தீபச்செல்வன் தற்கால படைப்பாளின் முக்கியமான ஒருவர். இன்றும் இலங்கையிலிருந்துக்கொண்டு தனது வாழ்வினை படைப்பாக்கி கொண்டிருப்பவர். அவரின் பட்டைப்புகள் நிகழ்காலத்தை வரலாற்றில் பதிவுசெய்வன. தமிழ்நதியின் சொற்களில் சொவதென்றால்..

""கொடுங்கொலைக் காலமொன்றிற்குச் சாட்சியாயிருக்கும் தீபச்செல்வன் அவற்றை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். பயமும் பதட்டமும் கோபமும் இயலாமையும் எல்லாக் கவிதைகளிலும் பரவிக்கிடக்கின்றன."

முகாம்களின் நிலைகளையும், முகாமிலிருந்து வெளியேற்றுதல் நாடகங்களையும் , இன்றும் புதிதாக மக்கள் கொண்டுவந்து விடப்படுகின்றனர் போன்ற செய்திகளை அவரது படைப்புகள் வழியே வெளிக்கொணர்கிறார். அதுவும் எத்தகைய சூழல் என்பது கவனிப்பது அவசியமானது.அவரே தனது முன்னுரையொன்றில்..

எதைப்பற்றியும் பேசமுடியாத மலச்சூழலில் நான் எழுதிக்கொண்டிருப்பது அம்மாவிலிருந்து நண்பர்கள் வரை தேவையற்றதாக கூறப்படுகிறது."
[பதுங்கு குழியில் பிறந்த குழந்தை " ]

தீபச்செல்வனின் நேர்காணல் பற்றி பேசுகிறேன் என்று அவர் பேசத்தவிர்ப்பதை மீண்டும் மீண்டும் கேட்பதன் நோக்கம் என்னவாக இருக்கமுடியும். இவர்கள் விரும்புகிற அந்த பதில்களிடமிருந்து என்ன கிடைத்துவிடும்? தீபச்செல்வன் வாழ்கின்ற நெருக்கடியான வாழ்வினை இன்னும் சிக்கலாக்கிவிடும் முயற்சியாகக்கூட அது அமையலாம். தொடர்ந்து அவர் ஈடுபட்டு வரும் பணிகளும் முடக்கப்படலாம். அவ்வாறில்லை என யாரேனும் சொல்லமுயன்றால் புலியெதிர்ப்பு நடவடிக்கைகளை கழித்து இவர்களின் செயற்பாடுகளை நாம் கவனித்தாலே நமக்கு விரிவாக விளங்கும்.

துன்புறும் மக்களுக்கான குரல்களை தனது படைப்பின் கருவாக்கும் இம்மாதிரியான படைப்பாளிகளின் படைப்புகள் பயணிக்கும் வெளியை விரிவாக்குவதே நமது சரியான பங்களிப்பாக இருக்கமுடியும்.


விஷ்ணுபுரம் சரவணன்
vishnupuramsaravanan
vishnupuramsaravanan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Empty Re: தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன்

Post by vishnupuramsaravanan Wed Aug 25, 2010 9:51 pm

vishnupuramsaravanan
vishnupuramsaravanan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum