ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

+7
அலட்டல் அம்பலத்தார்
jeylakesengg
ராஜா
சரவணன்
கோவை ராம்
பிளேடு பக்கிரி
ரபீக்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Empty 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by ரபீக் Mon Aug 23, 2010 11:38 am

First topic message reminder :

ராணுவத்திடம் பிரபாகரன் சரணடையவில்லை. அவர் தனது படையுடன் இறுதிவரை தீரமாகப் போரிட்டு 'வீரமரணம்' அடைந்தார், என்று கூறியுள்ளார் கேபி எனும் குமரன் பத்மநாதன்.

இறுதிப் போரில் புலிகள் தோற்று, தலைவர் பிரபாகரனும் களத்தில் 'இல்லை' என்றான சூழலில், புலிகள் இயக்கத்தின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர் கேபி. ஆனால் அடுத்த சில தினங்களில் இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். இலங்கை கொண்டு வரப்பட்டு ரகசிய விசாரணை செய்யப்பட்டார். கொஞ்ச காலம் அவரைப் பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது.

ஆனால் அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக தன்னை மாற்றிக் கொண்ட பிறகு, அவரைப் பற்றிய செய்திகளும், அவர் அளிக்கும் பேட்டிகளும் இலங்கை ஊடகங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இப்போது வடக்கு கிழக்கு புணரமைப்பு அமைப்பின் செயலராக உள்ள கேபி, உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் நிதி பெற்று அதனை, வடக்கு கிழக்கு புணரமைப்புக்காக செலவிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு அவர் மிக நீண்ட பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அதில் இந்த வாரம் வெளியாகியுள்ள பகுதியில், பிரபாகரன் எப்படி 'கொல்லப்பட்டார்' என்று மிக விரிவாக விளக்கியுள்ளார்.

அவர் கூறியுள்ளவற்றில் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்...

"பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நான் காப்பாற்ற முயன்றேன். ஆனால் நெடியவனும் காஸ்ட்ரோவும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்பட்டது. அதனை காஸ்ட்ரோ தருவதாகக் கூறினார். ஆனால் கடைசி வரை தரவே இல்லை.

பிரபாகரனைக் காப்பாற்றிய பெயர் எனக்குக் கிடைத்துவிடுமே என்று அவர்களுக்குப் பொறாமை. அதனால்தான் இப்படி ஆனது. இயக்கத்தில் தனிநபர் ஆதிக்கம் மிகுந்ததால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டது.

இறுதிப் போரின் போது கடைசி நிமிடம் வரை நான் சூசையுடன் தொடர்பில் இருந்தேன். அவர்தான் பிரபாகரனும் பொட்டு அம்மானும் தனி குழுவாகச் சென்று ராணுவத்தை ஊடறுத்து வெளியேறிவிட்டதாக கடைசி நிமிடத்தில் தகவல் கொடுத்தார். அதை நம்பித்தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் அறிவித்தேன். ஆனால் மீண்டும் சூசையுடன் தொடர்பு கொண்ட போது, பிரபாகரனின் ஊடறுப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், அவர் மட்டும் திரும்பி வந்துவி்ட்டதாகவும் கூறினார். உடன் சென்ற பொட்டு திரும்பவே இல்லையாம்.

அதன் பிறகு சூசையுடன் எனது தொடர்பு அறுந்துவிட்டது.

அடுத்த நாள் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப் பார்த்தேன். பார்த்ததும் அது பிரபாகரன் உடல்தான் என்று எனக்குத் தெரிந்து விட்டது. தனிமையில் அமர்ந்து ஓவென கதறி அழுதேன்.

ஆனால் நிச்சயமாக என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. அந்த இடத்தில் நான் இல்லை. கடைசி நேரத் தொடர்புகள் அற்றுப் போய்விட்டன. ஆனால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது தலைவர் பிரபாகரனின் உடல்தான்.

அவர் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், பொன்சேகா முன் மண்டியிட்ட நிலையில் அவரை சுட்டுக் கொன்றதாகவும் சிலர் கூறி வருவது அப்பட்டமான பொய். குறிப்பாக தமிழ் தலைவர் ஒருவரே இப்படிக் கூறியிருப்பது துரோகமானது. வேதனை தருகிறது.

ராணுவத்தின் மிக உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் பிரபாகரனின் இறுதி நேர போரைப் பற்றி மிக பெருமையாகக் கூறினார். அந்த அதிகாரி யார் என்பதை நான் சொல்ல மாட்டேன். கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரிந்தவர்தான்.

நந்திக் கடல் பகுதியில் பிரபாகரனும் அவருடன் இருந்தவர்களும் மிக வீரமாகவும் கடுமையாகவும் சண்டையிட்டார்களாம். இதில் இறுதி நேரம் வரை சற்றும் பின்வாங்காமல் பிரபாகரன் சண்டையிட்டே வீர மரணம் அடைந்துள்ளார். இதை ராணுவம் உறுதிப்படுத்தியது.

பிரபாகரனின் குடும்பத்தினர் மொத்தமாக இந்த சண்டையில் இறந்துவிட்டதும் உண்மையே. சாள்ஸ் ஆண்டனி அவர்களைக் காக்க கடைசி வரை முயன்றார்.

பிரபாகரனின் மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரும் போரில் இறந்தனர். துவாரகாவும் புலிகள் இயக்கத்தில் போராளியாகவே இருந்தார். பிரபாகரன் மனைவி மதிவதனி மே 14ம் தேதியே இறந்துவிட்டார்.

பிரபாகரன் தனது மகனையும் மகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார் என்று சிலர் கூறுவதில் உண்மையில்லை. பிரபாகரன் தனது பிள்ளைகள் வெளிநாடு செல்வதை அனுமதிக்கவில்லை. அவரது குடும்பம் முழுவதும் இயக்கத்தில்தான் இருந்தது.

பிரகபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மீது எனக்கு பாசம் அதிகம். அவனது மரணம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. அவனிடம் அடிக்கடி நான் போனில் பேசியிருக்கிறேன். கடைசி நேரத்தில் கேபி மாமாவுடன் நான் போகப் போகிறேன் என்று ஒரு சிறு பையை எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தானாம். அதை நினைக்கும்போது கஷ்டமாக இருந்தது...", என்று அவர் கூறியுள்ளார்.

(பிரபாகரன் மரணம் அறிந்து வைகோ குலுங்கி அழுதார்-கேபி பேட்டியின் தொடர்ச்சி நாளை)

nandri thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by கோவை ராம் Mon Aug 23, 2010 6:18 pm

ஒரு சிரிய சந்தேகம்.ஏன் விடுதலைபுலிகள் விசயத்தில் தமிழக முதல்வரை இழுகிறீர்கள்?முன்னால் இந்திய பிரதமரை கொன்ற குழு தலைவருக்கு என்ன செய்ய முடியும் தமிழக முதல்வரால்.
இந்தியாவில் அவர் ஒரு தேடப்படும் கொலை குற்றவாளி.சட்டத்தின் முன் அனைவரும் சமம்
இதில் என்ன பிழை

போராளி குழுக்களின் முட்டால்தனமான செயலால் பாவம் அப்பாவிகல் பலர் உயிர் இழந்தனர்.இதற்கு போராளி குழுவும் ராஜபக்ஷெவும்தான் காரனம்.
அதை விடுவிட்டு தமிழக முதல்வரையும் ,இந்திய அரசையும் திட்டுவது ஈழ விசயத்தில் இப்பொது பேஷன் ஆகி விட்டது


ராம்



கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by அப்புகுட்டி Mon Aug 23, 2010 6:47 pm

நடந்ததை எண்ணி வருத்தப்படாதீர்கள் நடப்பதைப் பற்றி சிந்திப்போம் செயல் படுவோம் வாழ்க வழமுடன்.

தலைவரைப்பற்றி பேச தகுதி இல்லாதவன் பல மாதிரி சொல்வான் விடுங்க நாளை நமதே நன்றி வணக்கம்.


'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by மஞ்சுபாஷிணி Mon Aug 23, 2010 7:40 pm

சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by antokkuly Mon Aug 23, 2010 8:46 pm

ஈழ தமிழர் விவகாரத்தில் கலைஞரையும்,இந்திய அரசையும் குறைகூறாமல் வேறு யாரை குறை கூறுவது?. பியுஜி தீவு மற்றும் உலகமெங்கும் இந்திய வம்சாவளியினருக்கு பிரச்சனை என்று இந்தியா குரல் கொடுக்கவில்லையா?.ஏன் ஸ்ரீலங்கா,மலேசியா,சிங்கப்பூர்,மேற்கு இந்திய தீவுகளில் தமிழர்க்கு பிரச்னை என்றல் மட்டும் இந்தியா ஏன் குரல் கொடுக்கவில்லை?.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தபட்ட அரசியல்வாதிகள் பலர் இன்னும் வுயிரோடுதான்இந்தியாவில் உள்ளனர் அவர்களை ஏன் ஒன்றும் செய்யவில்லை?.ராஜீவ் காந்தியும் ஒன்றும் புனிதர்இல்லை.லட்சகணக்கான இந்திய (போபால்) மற்றும் ஆயிரக்கணக்கான தமிழ் (ஸ்ரீலங்கா) மக்களின் கொலைக்கு உடந்தையாக இருந்த ஒரு குற்றவாளியே.உலகின் தலை சிறந்த மாவீரன் தலைவன்.அவனே உண்மைதமிழர்களின் ஒரே ஒப்பற்ற தலைவன்.
antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by கோவை ராம் Tue Aug 24, 2010 5:39 pm

எது எப்படியோ தேடப்படும் கொலை குற்றவாளிக்கு இந்திய அரசோ ,தமிழக அரசோ துனை போக முடியாது.

அடிபட்டு சின்னா பின்னமான பிறகுதான் இந்திய அரசும் தமிழக அரசும் கண்னுக்கு தெறிகிரதா.முன்னால் பிரதமரை பின் வாசல் வழியாக வந்து கொல்லும் போது அது தெரியவில்லையா?


இந்திய அரசு ஒரு சில விசயங்கலில் மட்டுமே தலை இட முடியும்.பஞ்ஜாபி பேசுபவர்கள் என்பதற்காக பாகிஷ்தான் கிழக்கு பகுதிகலில் இந்தியா தலை இடுவது இல்லை.

பெங்காளி பேசுபவர்கள் என்பதற்காக பங்கலாதெஷ் பகுதிகலில் இந்தியா தலை இடுவது இல்லை.

இந்து அரசுகள் ஆனாலும் நேபாள அரசியலில் இந்தியா தலை இடுவது இல்லை.

இந்த நாட்டு பிரசினைகலில் எப்படி தூதரை அனுப்புகிறதோ அதெபோல் இலங்கை பிரசினைக்கும் இந்தியா தூதரை அனுப்பும்.அனுப்பியது.இந்தியராய் இருந்தால் இந்திய அரசு முழுமையாய் தலை இடும்.ஆனால் அவர்கள் இலங்கை நாட்டை செர்தவர்கள் இதில் ஒரளவுதான் இந்திய அரசு தலை இட முடியும்.

தலை இட்டால்தான் அவர் தலை எடுக்க ஆள் வருகிரதெ.அதுவும் குன்டு வைத்து

புலி தலைவர் உழைத்தது இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்காக .தமிழ் நட்டுக்காக கிடையாது.தமிழ் நாட்டில் வந்து அவர்கள் செய்தது முன்னால் பிரதமரை கொன்றது,அடிக்கலம் தேடி வந்த பிற தமிழ் அமைப்புகலை சேற்தவர்கலை தமிழக தலை நகரில் ஒட ஒட விரட்டி கொன்றது.இதனால் தமிழன் பெயர் உலகம் முழுவதும் நாறியது.1 லட்சம் அகதிகலுக்கு தமிழகம் 40 வருட்ங்கலாக உனவு இடம் வழங்கி கவனிக்கிறது.இந்திய அரசு 1000 கோடி வழங்கியது,முன்னால் பிரதமர் ராஜீவ் தைரியமாக இலங்கை வான் வெலி
உள் சென்று பசியால் வாடிய தமிழகலுக்கு உணவு பொட்டலங்கல் வழஙியதை மறந்து வீட்டீற்களா?

புலி இயக்கத்தில் இருந்து தினம் தினம் தலைவர்கல் கட்சி தாவுவதுபோல் தாவியது யார் குற்றம்?

2000 வருடத்திற்கு பிறகு உலகமே தீவிரவாததிற்கு முடிவு கட்ட என்னியபோது சமாதான முயற்சியில் இறங்காமல் பிடிவாதமாக மொத்த இயகத்தையும் காவு கொடுத்தது யார் குற்றம்?

புலிகள் ஒன்ரும் நேருக்கு நேர் சன்டை போடவில்லையே?மக்கள் பின் மறைந்திருந்து கொரில்லா போர் முறை தானே? இலங்கை
ஆர்மி காரன் இப்போ அவர்கலால்தான் மக்கலையும் சேர்த்து அழித்தான்.எனவே காரனம் போராலி குழுதான்.

90 கல் வரை இலங்கை போரட்ட்ட குழுக்கள் உண்மையாக போராடியது.எனவேதான் இந்திய அரசும் தமிழக அரசும் அதற்கு உதவியது .பின்பு அவர்கல் தன்னை மட்டுமே நிலை நிருத்திகொள்ள பார்த்தார்கள்.அதன் பலன் தான் இயக்கம் அழிந்தது.பாவம் அப்பாவி மக்களுடன்.

உஙளுக்கு தெரியுமா புலிகலின் ஆரம்பகால மொத்த வளர்சியும் தமிழத்தல்தான் அல்லது இந்தியாவால்தான்.இந்திராவும் எம்.ஜி.ஆரும் உதவாவிட்டால் புலிகல் எப்பொதொ முடிந்து போயிருப்பார்கள்.மிக பெரிய செயல் செய்ய முயலும்போது நண்பன் மிக முக்கியம் .இலங்கை தமிழர்கு இந்தியாவும் ,தமிழகமும் மிக பெரிய முக்கிய நண்பர்கள்.

எப்போது முன்னால் பிரதமர் கொல்லப்பட்டாரோ அப்பொதுதான் நண்பன் முதுகில் குத்தப்பட்டது.

முதுகில் குத்தப்பாடாவிட்டால் இன்னெரம் பங்கலாதெஷ் மாதிரி ஈழம் கிடைத்தாலும் கிடைத்திருக்கும்.எங்கலுக்கும் ஆசைதான் நன்பரே ஈழம் பார்க்க !

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by அலட்டல் அம்பலத்தார் Tue Aug 24, 2010 9:37 pm

antokkuly wrote:ஈழ தமிழர் விவகாரத்தில் கலைஞரையும்,இந்திய அரசையும் குறைகூறாமல் வேறு யாரை குறை கூறுவது?. பியுஜி தீவு மற்றும் உலகமெங்கும் இந்திய வம்சாவளியினருக்கு பிரச்சனை என்று இந்தியா குரல் கொடுக்கவில்லையா?.ஏன் ஸ்ரீலங்கா,மலேசியா,சிங்கப்பூர்,மேற்கு இந்திய தீவுகளில் தமிழர்க்கு பிரச்னை என்றல் மட்டும் இந்தியா ஏன் குரல் கொடுக்கவில்லை?.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தபட்ட அரசியல்வாதிகள் பலர் இன்னும் வுயிரோடுதான்இந்தியாவில் உள்ளனர் அவர்களை ஏன் ஒன்றும் செய்யவில்லை?.ராஜீவ் காந்தியும் ஒன்றும் புனிதர்இல்லை.லட்சகணக்கான இந்திய (போபால்) மற்றும் ஆயிரக்கணக்கான தமிழ் (ஸ்ரீலங்கா) மக்களின் கொலைக்கு உடந்தையாக இருந்த ஒரு குற்றவாளியே.உலகின் தலை சிறந்த மாவீரன் தலைவன்.அவனே உண்மைதமிழர்களின் ஒரே ஒப்பற்ற தலைவன்.

சரிதான் ராசா ..இந்தியன் ஆமி எம் தேசத்துக்கு வந்து வேலிகளை வெட்டி வீடுகள் புகுந்து ப எம் குலப் பெண்களின் கற்புகளை சூறையாடியபோது எம் தலைவன் என்ன சும்மா பார்த்துக் கொண்டிருப்பானா ? இதற்கு காரணம் யார் ?

அது சரி , கட்ட பொம்மன் யார் ? ஆங்கிலேயரை எதிர்த்தவர் தானே ? எதுக்காக எதிர்த்தார் ராசா ? அவரும் இப்ப இருக்கிறவர் மாதிரி சும்மா இருந்திருக்கலாம் தானேடா ? கட்ட பொம்மனுக்கு ஒரு சட்டம் எங்கட தலைவனுக்கு ஒரு சட்டமேடா ராசா ? ஆங்கிலேயரால் தேடப் பட்டு வாத குற்றவாளிதான் இந்த கட்ட பொம்மன் ராசா ? இவர் என்ன செய்தார் ..ஐவரும் போம்ம்பலை பிள்ளை மாதிரி அடங்கி இருந்திருக்கலாம் ..இல்லாவிட்டால் அடிக்கடி ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதி இருக்கலாம் ..அப்படி இருந்தால் தூக்கில் தொங்கி இருப்பாரா ..ரா ராஆ ராசா ....

வீரர்கள் பிறப்பது புதிய சரிதம் எழுதவே ....

இந்தியன் ஆமியின் கொடுமைகளை நேரில் பார்த்தனான் ராசா ...வேலிதாண்டி வந்து எங்கட ஊரை நாசம் பண்ணிட்டு இப்ப கேள்வி கேக்கிறீரோ ?

நானே அவரை போய் வெட்டி இருப்பேன். அதுக்குள்ளே போய்ட்டான் ...உன்னோட சண்டை போட ஏலாது ..வரலாறு தெரியாமல் கதைக்கப் படாது ...

M .G .R சிறந்த தலைவன் ....அதுக்கு பிறகு ஒருத்தனும் இந்தியாவில வரவும் இல்லை வரப் போறதும் இல்லை ..ஹா ஹாஆ

முடிந்தால் விவாதத்துக்கு வாடா ராரா ... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by ராஜா Tue Aug 24, 2010 10:26 pm

rarara wrote:இந்திய அரசு ஒரு சில விசயங்கலில் மட்டுமே தலை இட முடியும்.பஞ்ஜாபி பேசுபவர்கள் என்பதற்காக பாகிஷ்தான் கிழக்கு பகுதிகலில் இந்தியா தலை இடுவது இல்லை.

பெங்காளி பேசுபவர்கள் என்பதற்காக பங்கலாதெஷ் பகுதிகலில் இந்தியா தலை இடுவது இல்லை.

இந்து அரசுகள் ஆனாலும் நேபாள அரசியலில் இந்தியா தலை இடுவது இல்லை.

சபாஷ் சரியான உதாரணம் ,

காஷ்மீர் முதல் அருணாச்சலப்பிரதேசம் வரை உள்ள இந்திய குடிமகன்களுக்கு சீனா சென்று வர விசா தேவையில்லை நீங்கள் அனைவரும் சீன குடிமகன்கள் என்று கடிதம் அனுப்பியதே சீன அரசாங்கம் , அதற்கே நாங்கள் தலையிடவில்லை. இது இலங்கை வேறு நாட்டு பிரச்சினை இதில் எப்படி நாங்கள் தலையிட முடியும், ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by antokkuly Wed Aug 25, 2010 3:21 am

திரு ராம் அவர்களுக்கு இந்திரா காந்தியை கொன்ற சீக்கிய இனத்தவர்தான் இன்று இந்தியாவின் பிரதமர்.ஏன் அதை ஏற்று கொண்டிர்கள்?.என்ன செய்வது ராம் என்பவர் களெல்லாம் சிங்கள கைக்கூலிகளோ?.லெமோரியா என்று ஒரு கண்டம் இருந்தது அது தெரியுமா உங்களுக்கு?.வரலாறு தெரியாமல் தயவுசெய்து விவாதம் வேண்டாமே!!!!.
antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by அலட்டல் அம்பலத்தார் Wed Aug 25, 2010 7:28 am

ராஜா wrote:
rarara wrote:இந்திய அரசு ஒரு சில விசயங்கலில் மட்டுமே தலை இட முடியும்.பஞ்ஜாபி பேசுபவர்கள் என்பதற்காக பாகிஷ்தான் கிழக்கு பகுதிகலில் இந்தியா தலை இடுவது இல்லை.

பெங்காளி பேசுபவர்கள் என்பதற்காக பங்கலாதெஷ் பகுதிகலில் இந்தியா தலை இடுவது இல்லை.

இந்து அரசுகள் ஆனாலும் நேபாள அரசியலில் இந்தியா தலை இடுவது இல்லை.

சபாஷ் சரியான உதாரணம் ,

காஷ்மீர் முதல் அருணாச்சலப்பிரதேசம் வரை உள்ள இந்திய குடிமகன்களுக்கு சீனா சென்று வர விசா தேவையில்லை நீங்கள் அனைவரும் சீன குடிமகன்கள் என்று கடிதம் அனுப்பியதே சீன அரசாங்கம் , அதற்கே நாங்கள் தலையிடவில்லை. இது இலங்கை வேறு நாட்டு பிரச்சினை இதில் எப்படி நாங்கள் தலையிட முடியும், ??

அட ராசாக்கள் ... பிறகு எப்படி இலங்கைக்கு இந்திய ராணுவம் வந்தது ? உந்த ராரா வுக்கு இப்ப பதினஞ்சு வயசு எண்டு நினைக்கிறேன் ..இது நடந்தது 1980 களில் தமிழரின் வரலாற்றை படிக்கவே இந்த ராராவுக்கு வயசு காணாது ...ஹா ஹாஆ ...

சினிமா படங்களில் கதைப்பது போலத்தான் இன்றைய அரசியல் ..எல்லாமே நாடகம் ஹா ஹாஆ

ஈழப் போராளிகள் கட்ட்சி தாவுரான்கள் எண்டு சொல்லுறீயல் ..அப்புறம் எப்பிடி எட்டப்பன் வந்தான் ? எல்லா இடத்திலும் சகயமப்பா ராசா ? ஆனா கட்டுக் கோப்புத்தான் முக்கியம் ...

இந்தியா தலை இட்டுத்தான் எல்லாமே அரங்கேறியது ராசா ..கடைசி சண்டைக்கு வந்த சீக்கியர்கள் இன்னும் இங்கதான் இருக்கிறாங்கள் ..இதுக்கு என்ன சொல்லப் போரை ...ஹா ஹா

உனக்கு உலக அறிவு ரொம்ப முக்கியம் ஹா ஹா ..

கிணத்து தவளை போல இருக்காதே ...

பல லட்சக்கணக்கான அப்பாவி உயிர்களை பலிவாங்கிய இந்தியா நிச்சயம் இதன் வழியை அனுபவிக்கும் ...
தர்மம் தான் வெல்லும் ...நான் வாறன்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by gunashan Wed Aug 25, 2010 7:50 am

என்னா அம்பலம் இப்படிப் போட்டு உடைக்கிறீரு...காலையிலேயே சரக்கு போட்டாச்சா...... சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி - Page 2 Empty Re: 'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum