ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு

5 posters

Go down

வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Empty வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு

Post by sriramanandaguruji Sun Aug 22, 2010 11:38 am

வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Hanuman-2-wallpaper

யல்நாட்டுக்காரர்
ஒருவர் கேள்வி ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார், பகவான் கிருஷ்ணனை
முழுமுதற் கடவுளாக இந்துக்களாகிய நீங்கள் கருதுவது சரிதான், காரணம். ஸ்ரீ
கிருஷ்ண பரமாத்மாவின் சரித்திரத்தை அங்குலம் அங்குலமாக ஆராய்ச்சி
செய்தாலும் ஒவ்வொரு அங்குலத்திலும் அவரின் பரிபூரணத்துவத்தை எங்களால் அறிய
முடிகிறது, ஆனால். ஆஞ்சநேய ஸ்வாமி என்பவரை ஹிந்துக்கள் வழிபடுவதின்
தாத்பரியத்தை புரிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது என்றும். அதற்கான
காரணத்தைக் கேட்டும் எழுதி இருந்தார், அதற்கு விரிவான விளக்கத்தை அவருக்கு
நான் அனுப்பிவிட்டேன்.


ஆஞ்சநேயரின்பக்தி. தியாகம். தொண்டுள்ளம். வீரியம் இவையெல்லாம் நமக்குத்
தெரியும், அயல்நாட்டுக்காரர்கள் அவரின் உருவத்தை மட்டுமே காண்பதனால்
இத்தகைய கேள்விகள் எழுவது அவர்களுக்கு இயற்கை தான், இந்தக் கேள்வியில்
கருத்துக்கள் பல இருந்தாலும் ஒரு விஷயம் என்னை சுண்டி இழுத்தது,
பரமாத்மாவான மாதவனுக்கும். பரம பக்தனான மாருதிக்கும் என்னென்னை ஒற்றுமைகள்
உள்ளன என்பதை ஆராய்ந்து பார்க்க அடிமனம் தூண்டியது, அந்த ஆராய்ச்சியின்
தேடுதலோ என்னவோ சுவாரஸ்யமான பல தகவல்கள் எனக்குக் கிடைத்தன.


வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு DSC02409
மாருதியும் மாதவனும் தூதுவர்களாக செயல்பட்டு உள்ளனர், இருவரின் தூதுமே
யுத்தத்தில் தான் முடிவடைந்திருக்கிறது, மாருதியின் தூது ராவண வதத்தையும்.
மாதவனின் தூது கௌரவ வதத்தையும் உலகிற்கு கொடுத்தது.

ஹனுமான் சஞ்சீவி பர்வதத்தை தூக்கி வந்து இளைய பெருமாளையும். வானர
சேனையையும் காப்பாற்றினான், இதனால் அவன் சஞ்சீவையா ஆனான், மதுசூதனனோ
கோவர்த்தன கிரியை குடையாய்ப் பிடித்து யது குலத்தையும் ஆநிறைகளையும்
காத்து கோவர்த்தனனான், அஞ்சனையின் மைந்தன் சீதா பிராட்டிக்கும்.
பீமசேனனுக்கும் விஸ்வரூப தரிசனம் கொடுத்து தான் விஸ்வநேசன் (உலகத்தை
விரும்புபவன்) என்பதை பறைசாற்றினான், தேவகி மைந்தன் துரியோதனன் சபையிலும்.
குருஷேத்ர பூமியிலும் விஸ்வரூபம் தரிசனம் கொடுத்து தான் விஸ்வரூபி (உலக
வடிவானவன்) என்பதை ஐயந்திரிபற உலகிற்குக் காட்டினான்.

மேலும் “பாரிஜாத தருமூல வாஸினம்” ஆனவன் மாருதி, அதாவது பவழமல்லி
மரத்தின் வேரில் ஆஞ்சநேயன் வாசம் செய்வதாகவும். “பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்தா ஸனோ
பரி ” கொண்டவன், அதாவது பவழமல்லி மரத்தடியில் சிம்மாசனத்தில் இருப்பவன்
ஸ்ரீ கிருஷ்ணனென்னுறம் பழைய இலக்கியங்கள் கூறுகின்றன.

பரமாத்மாவான கிருஷ்ணனுக்கு வெண்ணையைப் படைக்கிறோம், பராக்ரமசாலியான
ஆஞ்சநேயனுக்கு வெண்ணையை சாற்றுகிறோம், இதேபோன்று இன்னும் எத்தனையோ
ஒற்றுமைகளை கூறிக்கொண்டே செல்லலாம், இந்த ஒற்றுமைகளில் இருந்து எல்லாம்
நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது.

இறைவனுக்குப் பிரியமான நிஷ்காமிய கர்மத்தை செய்து கொண்டு பராபக்தியில்
எவனொருவன் லயித்து விடுகிறானோ அவனுக்கு பகவான் தனது சர்வமங்களத் தன்மையை
அருளிவிடுகிறான், அதாவது பக்குவப்பட்ட பக்தனிடத்தில் பகவத் தன்மை தானாகவே
வந்தமைந்து விடுகிறது, இதனால். பகவானும் பக்தனும் ஒருவராகவே
மாறிவிடுகிறார்கள் என்பதை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

பகவத்தன்மையை முழுமையாகப் பெற்ற பக்தன் தன்னைப் போன்று பக்தர்களுக்கு
மட்டுமல்ல. துன்பச் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் சாதாரணமான மக்களையும்
துயர் துடைத்து தன்னிலைக்கு உயர்த்திவிட தயங்கமாட்டான், அந்த வகையில் ஸ்ரீ
ஆஞ்சநேயர் இன்றும் நாம் கண்ணால் காணுமாறு பல அற்புதமான லீலா வினோதங்களை
புரிந்து வருகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வயதில் இளமையும். உடலில் முதுமையும்.
மனதில் தெளிவுமற்ற ஒருவர் என்னைப் பார்க்க வந்தார், மனத்துணிச்சல்
இல்லாததாலேயே தான் வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவும்.
விமோசனத்தை தேடித் தேடி அலுத்து விட்óடதாகவும். கூறினார், அவர் ஜனன
ஜாதகத்தை நன்றாக அலசி ஆராய்ந்த போதும் அனைத்துக் கிரகங்களுமே வலுவிழந்தும்
அவருக்கு எந்த நிலையிலும் கோள்கள் உதவ முடியாமலும் இருப்பதை உணர்ந்து
கொண்டேன், இறைபலம் ஒன்றுதான் அவரைக் காக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்த
நான் ஸ்ரீ ஆஞ்சநேயரின் மூலமந்திரத்தை அவருக்கு உபதேசித்தேன், பின்பு அவரைப்
பற்றி மறந்து விட்டேன்.

இரண்டு மாதத்திற்கு முன் திடீரென அவர் மீண்டும் என்னைப் பார்க்க
வந்தார், பட்டு வேஷ்டி. அங்க வஸ்திரம் மிக கம்பீரமாக காட்சி அளித்தார்,
நான் அவருக்கு உபதேசித்த ஆஞ்சநேய மூல மந்திரம் அவர் வாழ்வில் பல
திருப்புமுனைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தான் ஏமாந்து போன பல விஷயங்களில்
மோதி வெற்றிபெருமளவிற்கு இம்மூலமந்திரம் அசாத்தியமான பலத்தை தனக்குக்
கொடுத்திருப்பதாகவும். தான் மனைவி. மக்களோடு மிக நல்ல நிலையில் இருப்பதாகக்
கூறி ஆசீர்வாதம் வாங்கிச் சென்றார்.

அப்போது பல விஷயங்களை நான் புரிந்து கொண்டேன், தாந்ரீக சாஸ்திரத்தில்
வசியப்படுத்த முடியாத தேவதை அனுமான் தான் என்றும். காரணம் கிரகங்களின் வழி
அனுக்கிரகம் செய்யாமல் கிரகங்களின் வீச்சை அடக்கி அனுக்கிரகம் செய்ய
வல்லவர் என்று மந்திர சாஸ்திரம் கூறுவதன் உண்மையை கண்ணெதிரேக் கண்டேன்.

ஆஞ்சநேயர் புராணத்தைப் படித்திருப்பவர்களுக்கு அவர் ஜனனமான உடனேயே
சூரியனைப் பிடிக்க பறந்ததையும் அதைத் தடுக்க வந்த ராகுவைத் துரத்தி
அடித்ததையும் நன்றாகத் தெரிந்திருக்கும், ஆஞ்சநேயரின் வீரியத்தின் முன்னால்
ராகுவால் மட்டுமல்ல. மற்ற அசுப கிரகங்களும் தாக்குப் பிடிக்க முடியாமல்
ஓடிவிடுவதை பலருடைய வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக நான் உணர்ந்திருக்கிறேன்,
அதற்கு சாட்சியாக எத்தனையோ நிகழ்வுகளை என்னால் பட்டியல் இட முடியும்.

பாரதப் போரில் அர்ச்சுனனுடைய தேர்க்கொடியில் ஆஞ்சநேயர் இருந்ததாகவும்,
அதனால்தான் மந்திரப் பூர்வமான அஸ்திரங்கள் எதுவும் அர்ச்சுனனை தாக்கவில்லை
என்றும் யுத்த முடிவில் அனுமார் விலகியவுடன் தேர்பொடிப்பொடியாக சிதறி
விட்டதாகவும் இதனாலேயே அர்ச்சுனனுக்கு அனுமானால் காக்கப்பட்டவன் என்ற
பொருளில் அனுமத்வஜன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும். மகாபாரதம் கூறுகிறது.

இதன்மூலம் கிரகங்களின் தீய பலனை மட்டுமல்ல. மந்திரங்களின் தீய
சக்தியைக் கூட ஆஞ்சநேயரால் சம்ஹாரம் செய்துவிட முடியும் என்பது
புரிகிறது எந்தவொரு நல்ல செயலையும் செய்யத் துவக்கும் முன் பிள்ளையாரை
வழிபட்டே செய்கிறோம், செயல் நல்லவிதமாக முடிந்த பின்னர் ஆஞ்சநேயரை
வழிபட்டு நிறைவு செய்கிறோம், இது தொன்றுதொட்டு நடந்து வரும் ஒரு
விஷயமாகும், ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகம் உள்ளதுபோல் ஹேரம்ப விநாயகருக்கு
பஞ்சமுகம் இருப்பதை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள், இதன் தாத்பரியம்
மிகவும் ரகசியமானது, அரிதான சில மந்திர நூல்களில் இந்த ரகசியத்தை நாம்
தெரிந்து கொள்ள முடிகிறது, மூல முதற்பொருளான விநாயகப் பெருமான் தான் ராம
சேவைக்காக அனுமாராக அவதாரம் எடுத்தார் என்ற இந்த ரகசியம் நம்மிற்
பலருக்குத் தெரியாது.

ஆஞ்சநேயரை எப்படி மந்தரங்களால் வசப்படுத்த முடியாதோ அதே போன்று
விநாயகரையும் வசப்படுத்த முடியாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன, ஆனால். குரு
மூலமாக பல மறைமுக மந்திர வித்தைகளை கற்றவர்கள் இதை மறுத்துச்
சொல்கிறார்கள், தேவாங்கு தோலில் மந்திரப் பிரயோகம் செய்து இந்த இரு
தெய்வங்களையுமே கட்டிவிடலாம் எனக் கூறுகிறார்கள், இது அபிசார வழி என்பதனால்
இதில் உண்மையிருக்கும் என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை, எது
எப்படியோ கிரகங்களுக்கும். மந்திரங்களுக்கும் கட்டுப்படாதவர் ஆஞ்சநேயர்
என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.


வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு DSC02541
தீவிரமான வைஷ்ணவ அன்பர்கள் தங்களுக்கு ஏற்படும் கிரக தோஷஙóகளுக்கு
பரிகாரம் செய்து கொள்ள சற்றத் தயங்குகிறார்கள், பரிகார வழிபாடு சைவ
வழிபாடுபோல் இருப்பதாகக் கருதி இந்தத் தயக்கத்தைக் கொள்கிறார்கள்,
உண்மையில் பகவானுக்கோ பரிகாரங்களுக்கோ சைவ. வைணவ பேத மென்பது கிடையாது,
சைவர்களாக இருப்பினும் சரி. வைணவர்களாக இருப்பினும் சரி பரிகார பூஜையில்
ஸ்ரீ ஆஞ்சநேயரை ஆவாகணப்படுத்தி செய்வார்களேயாளால் மிக நல்ல பலனை உடனடியாக
அடைவார்கள் என்பதில் ஐயமில்லை, கிரகப் பிருத்திக்காக எதையுமே செய்ய
வசதியில்லாதவர்கள் என்ன செய்வது என்று விழிக்க வேண்டாம், துளசிதாசர்
இயற்றிய அனுமன் சாலிசாவைபாராயணம் செய்தாலே போதுமானது.

உள்ளத்தூய்மையுடனும். உறுதியான பக்தியுடனும் அனுமன் சாலிசாவை பாராயணம்
செய்து செவ்வாய் தோஷம். புத்ர தோஷம். மாங்கல்ய தோஷம் மேலும் பலவிதமான
தோஷங்களிலிருந்து விடுபட்டு இருப்தை நான் பார்த்திருக்கிறேன், நீங்கள் எதை
வேண்டி அனுமனைப் பிரார்த்தனை செய்கிறீர்களோ அதை அவன் தயங்காமல் தருவான்,
காரணம் தான் பெற்ற இறைத்தன்மையை மற்றவர்களுக்கு வாரி வழங்குவதில்
வள்ளலுக்கும் மேலானவன் அவன்.




எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Empty Re: வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு

Post by Aathira Sun Aug 22, 2010 12:03 pm

ஐயா வணக்கம்,
ஆன்மீகத்தை அறிய ஆவலாய் இருக்கும் என் போன்றோருக்கும் நல்ல பயனுள்ள வகையில் அமைந்துள்ளன தங்களின் எல்லா கட்டுரைகளும்.. ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டு இருக்கிறேன். ஒப்பிட்டு கட்டுரை வரைந்துள்ளமை அற்புதம்.. பொதுவாக பெரியவர்களை முன்னும் சற்று சிறியவர்களைப் பின்னும் வைத்து எழுத வேண்டிய மரபு இருந்தும்
மாருதியும் மாதவனும் என்று தாங்கள் பதிந்துள்ளமை அனுமனின் சிறப்பைச் செவ்வனே எடுத்துக் காட்டுகிறது.


கதைத்தலைவன் இராமனே இல்லாத இராமாயணக் காண்டம் சுந்தர காண்டம்
என்றும் முழுக்க முழுக்க அனுமன் அவன் எண்ணம் செயல் ஆகியவையே இடம்பெறும் காண்டம் சுந்தர காண்டம் என்றும் கூறுவர். இராமாயணத்தில் ஒரு சிறு துணைக் கதாப்பாத்திரத்தில் வந்த அனுமனுக்குக் (ஒரு காண்டம் முழுவதுமே படைக்கக் கூடிய) கிடைத்த சிறப்பைத் தானும் அடைய விரும்பியே அடுத்த அவதாரத்தில் தான் தூதுவனாக வந்தார் திருமால் என்று இலக்கிய சொற்பொழிவாளர்கள் கூறக் கேட்டுள்ளேன். இதனை மெய்ப்பிக்கிறது தங்களின் ஒப்பீடு..மிக்க நன்றி ஐயா.. இன்னும் படிக்கும் ஆர்வத்துடனும் நெஞ்சார்ந்த நன்றியுடனும்.


வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Aவியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Aவியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Tவியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Hவியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Iவியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Rவியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Aவியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Empty Re: வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு

Post by ராஜா Sun Aug 22, 2010 1:44 pm

வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு 678642 மிக்க நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Empty Re: வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு

Post by தமிழ் Sun Aug 22, 2010 2:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Empty Hi

Post by sriramanandaguruji Sun Aug 22, 2010 4:58 pm

தேங்க்ஸ் தமிழ்




எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Empty Re: வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு

Post by பிளேடு பக்கிரி Sun Aug 22, 2010 6:08 pm

நன்றி நன்றி நன்றி



வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Empty Re: வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு

Post by sriramanandaguruji Sun Aug 22, 2010 6:40 pm

உங்கள் கருத்துக்கு நன்றி




எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு Empty Re: வியாபாரம் செழிக்க ஆஞ்சநேயர் வழிபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum