புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
44 Posts - 58%
heezulia
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
3 Posts - 4%
viyasan
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
236 Posts - 42%
heezulia
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
13 Posts - 2%
prajai
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_m10பாசமிகு அண்ணன் கும்பகர்ணன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமிகு அண்ணன் கும்பகர்ணன்


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Wed Apr 13, 2011 7:07 am


இராமாயணத்தில் கும்பகர்ணன் நிலை மிக தர்மசங்கடமானது. அவனுடைய பாசத்திற்குரிய இரண்டு சகோதரர்களும் எதிரெதிர் அணியில் இருக்கின்றனர். அண்ணன் மீது அவனுக்கிருந்த அன்பை இன்னொரு கட்டுரையில் பார்த்தோம். அவன் தம்பி மேல் வைத்திருந்த பாசமும் சற்றும் குறைந்ததல்ல.

ஒரு வீட்டில் கடைக்குட்டி மீது அனைவருக்கும் பாசம் அதிகம் இருப்பது சகஜம். அதுவும் அந்தத் தம்பி மிக நல்லவனாகவும், குணவானாகவும் இருந்தால் அந்தத் தம்பி மீது இருக்கும் பாசம் மேலும் அதிகப்படும். அதனால் தம்பி மீது கும்பகர்ணனுக்கு அளவு கடந்த பாசம் இருந்ததில் வியப்பில்லை. ஆறு மாதம் உறக்கத்திலும் ஆறு மாதம் விழிப்பிலும் இருக்கும் கும்பகர்ணன் உறங்கப் போகும் போது விபீடணன் இலங்கையில் இருந்தான். ஆனால் கும்பகர்ணன் விழிக்கையிலோ விபீடணன் எதிரணிக்குப் போய் விட்டிருந்தான்.

அவன் மறுபடி விபீடணனைச் சந்தித்தது போர்க்களத்தில் தான். அந்த போர்க்களத்தில் அண்ணனும் தம்பியும் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமானது. அண்ணனைப் பார்த்தவுடன் விபீடணன் விரைந்து வருகிறான். அந்தக் காட்சியைக் கம்பன் நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறான்.

விபீடணன் எதிரணியிலிருந்து தன்னை நோக்கி வருவதைக் கண்ட கும்பகர்ணன் அவன் இராமனை விட்டு இந்த அணிக்குச் சேரவே வருகிறான் என்று தவறாக நினைத்து விடுகிறான். இந்த அணிக்குத் தோல்வி நிச்சயம் என்பதை முன்பே அறிந்தவன் அவன். அதை அவன் இராவணனிடம் சூசகமாகத் தெரிவித்துக் கூட இருந்தான். அதனால், விபீஷணன் இங்கு வந்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்திருந்ததால், அவன் மனம் வருந்தியது.

தன்னை வந்து வணங்கிய தம்பியிடம் கும்பகர்ணன் சொல்கிறான். “ (நம் குடும்பத்தில்) நீ ஒருவனாவது தப்பிப் பிழைத்தாய் என்று நான் எண்ணி மகிழ்ச்சியாய் இருந்தேன். நான் நினைத்தது தவறு என்னும்படி புத்தி கெட்டவர் போல் நீ அங்கிருந்து தனியாகப் பிரிந்து வந்தது ஏன்”. சொல்லும் போது துக்கமிகுதியால் அவன் கண்களில் மழையாக நீர் வடிகிறது.

முந்தி வந்து இறைஞ்சினானை
மோந்து உயிர் மூழ்கப் புல்லி
உய்ந்தனை ஒருவன் போனாய்
என் மனம் உவக்கின்றேன் என்
சிந்தனை முழுதும் சிந்தித்
தெளிவிலார் போல மீள்
வந்தது என் தனியே? என்றான்
மழையின் நீர் வழங்கும் கண்ணான்.

விபீடணன் வந்தது வேறு காரணத்திற்காக. தன் அண்ணன் கும்பகர்ணன் மிக நல்லவன் என்பதால் அவனை தன்னைப் போலவே தர்மம் இருக்கும் இடமாகிய இராமனிடம் வந்து சேரச் சொல்லி விபீடணன் மன்றாடுகிறான். கும்பகர்ணன் அது முடியாது என்று சொல்லி அதற்கான காரணங்களையும் அழகாகச் சொல்கிறான்.

“நீரில் வரைந்த கோலம் போன்ற குறுகிய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி, என்னை இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கி இந்த போர்க்கோலத்தில் அனுப்பி வைத்த நம் அண்ணனுக்காக உயிரைத் தராமல் நான் அந்தப்பக்கம் போக மாட்டேன் எனவே என்னைப் பற்றி கவலைப்படுவதை விட்டு இராமனிடம் போய் சேர்ந்து கொள்” என்கின்றான்.

நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன்;
தார்க்கோல மேனி மைந்த! என துயர் தவிர்த்து ஆயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதினி ஏகி.

மேலும் சொல்கிறான். ”முட்டாள்தனமாக அண்ணன் (இராவணனை இங்கு இறைவன் என்கிறான்) ஒரு தீமையைச் செய்தால், முடிந்தால் அவனை அப்போதே திருத்தப் பார்க்கலாம். அது முடியாமல் போனால் அவனை எதிர்ப்பதில் அர்த்தம் இல்லை. போரில் ஈடுபட்டு அவனுக்கு முன்னால் இறப்பதே அவன் உப்பைத் தின்று வளர்ந்தவனுக்குப் பொருத்தமானது)

கருத்திலா இறைவன் தீமை
கருதினால் அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் அன்றே
திருத்தலாம்; தீராது ஆயின்
பொருத்துறு பொருள் உண்டாமோ!
பொருதொழிற்(கு) உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்(கு) உரியது அம்மா



எதிரில் இருந்த இராமனின் சேனையைப் பார்த்தபடி கும்பகர்ணன் மேலும் சொல்கிறான். “அந்தப்பக்கம் கடவுளான வில்லேந்திய இராமன் நிற்கின்றான். அவன் தம்பி இலக்குவன் நிற்கின்றான். மற்றும் பலரும் நிற்கின்றார்கள். எங்களைக் கொல்லப் போகிற விதியும் அவர்கள் பக்கமே நிற்கின்றது. தோல்வியே எங்கள் பக்கம் நிற்கின்றது”


ஏற்றிய வில்லோன், யார்க்கும்
இறையவன், இராமன் நின்றான்;
மாற்றரும் தம்பி நின்றான்;
மற்றையோர் முற்றும் நின்றார்;
கூற்றமும் நின்றது, எம்மைக்
கொல்லிய விதியும் நின்றது;
தோற்றல் எம்பக்கல் ஐய!
வெவ்வலி தொலைய வந்தாய்

அதைக்கேட்டு மீளாத சோகத்தில் ஆழ்கிறான் விபீடணன். அண்ணன் மேல் உள்ள பாசத்தில் அவன் துக்கப்படுவதைப் பார்த்து கும்பகர்ணன் எல்லா தத்துவங்களையும் அறிந்த விபீடணனைத் தேற்றுகிறான். “நடக்க இருப்பது நடந்தே தீரும். அழியும் காலம் வந்தால் அழிவதும் நிச்சயம். என்ன தான் செய்தாலும் இறப்பது உறுதியே. இதை உன்னை விட அறிந்தவர்கள் யாரிருக்கிறார்கள்? என்னை நினைத்து வருந்தாமல் போ”. கடைசியில் என்றும் உள்ளாய் என்று தம்பியிடம் ‘நாங்கள் இறந்தாலும் நீ இருப்பாய்” என்ற நிம்மதியில் சொல்லும் அழகையும் பாசத்தையும் பாருங்கள்.

ஆகுவது ஆகும் காலத்து
அழிவதும் அழிந்து சிந்திப்
போகுவது; அயலே நின்று
போற்றினும் போதல் திண்ணம்;
சே(கு) அறத் தெளிந்தோர் நின்னில்
யார் உளர்? வருத்தம் செய்யா(து)
ஏகுதி; எம்மை நோக்கி
இரங்கலை; என்றும் உள்ளாய்!

செஞ்சோற்றுக் கடனுக்காக உயிரை விடத் தீர்மானித்த கும்பகர்ணன் அதே போல் விபீடணன் செய்யத் தவறியது தவறு என்பது போல் நினைக்கவில்லை. “தர்மாத்மாவான நீ நாளை உலகத்திற்கு தலைவனாகப் போகிறவன். நீ செய்தது உன்னைப் பொருத்த வரை சரியே. அதே போல் இங்கு நின்று போரிட்டு உயிரை விடுதலே எனக்குப் பெருமை” என்று தம்பியிடம் சொல்கிறான்.

தலைவன் நீ உலகுக்கெல்லாம் உனக்கது தக்கதே; ஆல்
புலைஉறு மரணம் எய்தல் எனக்கிது புகழதே ஆல்.

இனி என்ன சொன்னாலும் அண்ணன் கும்பகர்ணன் மனம் மாறப் போவதில்லை என்பதை உணர்ந்து களத்தில் விபீடணன் கும்பகர்ணனை வணங்கிப் பிரியும் காட்சி கல்லையும் கரைக்கும். கம்பன் சொல்கிறான். “அண்ணனை வணங்கிய விபீடணன் கண்கள், முகம், மனம், பேசும் சக்தி எல்லாம் வாடி உயிரோடு இருக்கையிலேயே சவம் போல் ஆனான். இனி மேலும் பேசிப் பிணங்கி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று உணர்ந்தவனாய் குணங்களால் உயர்ந்தவனான விபீடணன் எழுந்து திரும்பிப் போனான். அப்போது இரு சேனையின் கரங்களும் அந்தக் காட்சியில் மனமுருகி கூப்பின”

வணங்கினான் வணங்கிக் கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை செய்து இன்னும்
பிணங்கினால் ஆவதில்லை பெயர்வது என்று எழுந்து போந்தான்
குணங்களால் உயர்ந்தான் சேனைக் கடலெல்லாம் கரங்கள் கூப்ப.

தொடர்ந்து நடந்த போரில் வீழ்ந்த போதும் இராமனிடத்தில் தம்பிக்காக வேண்டுவது கல்லையும் கரைக்கும். இராமனிடம் சொல்கிறான். “நீதியால் வந்த பெரும் தர்ம நெறி தவிர என் தம்பி எங்கள் அரக்கர் குலத்திற்கான எந்த சிறு நெறியும் அறியாதவன். அவன் எல்லாம் நீயே என்று உன்னிடம் வந்திருக்கிறான். அவனுக்கு உன்னிடம் நான் அடைக்கலம் வேண்டுகிறேன்”

நீதியால் வந்த(து) ஒரு நெடும் தரும நெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா! இன்னம் உனக்(கு) அடைக்கலம் யான் வேண்டினேன்

மேலும் இராமனிடம் மனமுருகக் கும்பகர்ணன் கேட்கிறான். “என் அண்ணன் இராவணன் விபீடணனைத் தம்பி என நினைத்து மன்னிக்க மாட்டான். அந்தப் பெருந்தன்மை அவனுக்கு இல்லை. இவன் அகப்பட்டால் அவன் இவனைக் கண்டிப்பாகக் கொன்று விடுவான். தயவு காட்ட மாட்டான். எனவே உன்னையும், உன் தம்பி இலக்குவனையும், அனுமனையும் என் தம்பி என்றும் பிரியாதவனாய் இருக்கும்படி எனக்கு வரம் கொடு”

தம்பியென நினைந்(து) இரங்கி
தவிரான் அத்தக(வு) இல்லான்;
தம்பி இவன் தனைக் காணின்
கொல்லும்; இறை நல்கானால்;
உம்பியைத் தான் உன்னைத் தான்
அனுமனைத் தான், ஒரு பொழுதும்
எம்பி பிரியான் ஆக
அருளுதி! யான் வேண்டினேன்.

யுத்த காண்டத்தில் இக்காட்சிகள் கம்பன் வர்ணனையால் உயிர் வடிவம் பெற்று நம்மைக் கண்கலங்க வைக்கக் கூடியவை. நன்றாக யோசித்துப் பார்த்தால் கும்பகர்ணன் என்ற அந்த மிக உயர்ந்த மனிதன் இரு வேறு அணிகளில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் ஒரு இணையற்ற சகோதரனாய் வாழ்ந்து மடிந்தான் என்பதே கால காலத்திற்கும் அவன் பெருமையை பறைசாற்றும் என்பதில் சந்தேகம் உண்டோ?

- என்.கணேசன்

[You must be registered and logged in to see this link.]


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 13, 2011 8:22 am

மிகவும் உருக்கமான காட்சி கம்பராமாயணத்தில் இந்த போர்க்களக்காட்சி.. இராமாயணத்தில் கும்ப கர்ணன் பாத்திரமும் மகாபாரதத்தில் கர்ணனின் பாத்திரமும் செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் அருமையான பாத்திரங்கள். தீதென அறிந்தும் சோதரத்திற்காகவும் துயர் தீர்த்து மானம் காத்தோன் நட்புக்காகவ்ம் உயிர்நீத்த செம்மலகள் இவ்விரண்டு பேரும்..

அருமையான கம்பன் திறமை பறைசாற்றும் அருமையான திரி என் கணேசன் அவர்களே...

அடிக்கடி வாருங்கள் ... அமுதம் பருகத்தாருங்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 13, 2011 1:18 pm

பாசமிகு அண்ணன் கும்பகர்ணனைப் பற்றிய அழகான விளக்கங்களுடன் கூடிய கட்டுரை...

நன்றி அண்ணா! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Apr 30, 2011 3:13 pm

மிகவும் அருமை. விளக்கம் அளித்த விதமும் தெளிவாக இருந்தது.
தொடர்ந்து ஈது போன்ற இதிகாச இலக்கியங்களை தாருங்கள்....

நன்றி.



/vidhyasan.blogspot.com [You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 30, 2011 7:22 pm

கும்பகர்ணனைப்பற்றி அறிய தந்தமைக்கு அன்பு நன்றிகள் கணேஷன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 18, 2011 3:06 pm

அருமை...கணேசன் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Nov 18, 2011 3:11 pm

அருமைங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக