ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீயில் கருகி தந்தை, மகள் பலி: பின்னணியில்; அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் புதிய தகவல்கள்

Go down

தீயில் கருகி தந்தை, மகள் பலி: பின்னணியில்; அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் புதிய தகவல்கள் Empty தீயில் கருகி தந்தை, மகள் பலி: பின்னணியில்; அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் புதிய தகவல்கள்

Post by நவீன் Sat Aug 21, 2010 8:24 am

கோவை நகரில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையும், மகளும் தீயில்
கருகி பலியானது குறித்து மாநகர போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புக்கான காரணத்தை தடய
அறிவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கோவை நகரிலுள்ள
ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், திருவள்ளுவர் நகரிலுள்ள வாடகை வீட்டில்
வசித்து வந்தவர் தாமஸ்(49); இரும்புக்கடை ஊழியர். இவரது மனைவி ஜான்சி,
பள்ளி ஆசிரியை. மகள் அல்போன்சா ரோஸ், தனியார் கல்லூரியில்
பி.எஸ்சி.,(கம்ப்யூட்டர் சயின்ஸ்) இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று
முன்தினம் இரவு, இவர்கள் மூவரும் தரைத்தளத்தில் உள்ள தங்களது வீட்டில்
தூங்கிக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் தாமசும், அவரது மனைவியும், பக்கத்து
அறையில் மகள் அல்போன்சா ரோசும் தூங்கினர். கொசுத்தொல்லை அதிகமிருந்ததால்
அல்போன்சா ரோஸ் படுத்திருந்த அறையில், கொசுவை விரட்டுவதற்கான காயில் "ஆன்'
செய்யப்பட்டு அதனுடன் ஆயில் பாட்டில் இணைக்கப்பட்டிருந்தது. மறுநாள்
அதிகாலை 2 மணியளவில், மகள் அல்போன்சா ரோஸ் தூங்கிய அறையில் தீ விபத்து
ஏற்பட்டு "பெட்' எரிந்தது. மயக்கமடைந்த நிலையிலிருந்த அல்போன்சா ரோஸ்,
தீயில் கருகினார். எனினும், பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த
பெற்றோருக்கு இது தெரியவில்லை. தரைத்தளத்திலுள்ள இவர்களது வீட்டில்
கிளம்பிய நெருப்பு புகை, மேல் தளத்திலுள்ள வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே
புகுந்ததால் அங்கிருந்தவர்கள் அலறி எழுந்து, கீழே ஓடிவந்து கதவை தட்டினர்.
திடுக்கிட்டு எழுந்த தாமஸ், மகளின் அறையில் இருந்து புகை வெளியேறுவதை
கண்டு கதவை திறந்துவிட்டார். பக்கத்து வீட்டார், தாமஸ் மற்றும் அவரது
மனைவியை மீட்டு வெளியே இழுத்துச் சென்றனர். அப்போது, அவர்களது பிடியில்
இருந்து நழுவிய தாமஸ், தீ விபத்திலிருந்து மகளை காப்பாற்ற அறைக்குள்
ஓடினார். ஆனால், அடுத்த நிமிடமே திடீரென மயங்கி நெருப்பில் விழுந்து
படுகாயமடைந்தார். மிகமோசமான ஒருவித நச்சு வாசத்துடன் புகை வெளியேறியதால்
பக்கத்து வீட்டாரால், அவரை மீட்க முடியவில்லை. அதன்பின், நீண்ட
முயற்சிக்கு பின் தாமசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
புகைமூட்டம் குறைந்தபின்தான், அல்போன்சா ரோஸ் படுக்கையில் இருந்தவாறே
தீயில் கருகி பலியாகியிருந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது தந்தை தாமசும்
உயிரிழந்தார். சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்ற சிங்காநல்லூர்
போலீசாரும், தடய அறிவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்து, தீ
விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து
நடந்ததா? தனி அறையில் தங்கியிருந்த அல்போன்சா ரோஸ் தீ வைத்து தற்கொலை
செய்து கொண்டதால் விபத்து நேரிட்டதா? என்பது உட்பட பல்வேறு கோணங்களிலும்
ஆராய்ந்தனர். அல்போன்சா ரோஸ் தற்கொலை செய்து கொண்டிருந்தால் நிச்சயமாக
"கெரசின்' அல்லது வேறு எரிபொருளை பயன்படுத்தியிருக்க வேண்டும்; அதற்கான
பாட்டில் அல்லது பிளாஸ்டிக் கேனின் பாகங்கள் எரிந்த நிலையில் வீட்டறையில்
கிடந்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற தடயங்கள் ஏதும் சம்பவம் நடந்த
அறையில் கிடைக்கவில்லை. மேலும், மின்கசிவு காரணமாக விபத்து
நடந்திருப்பதற்கான அறிகுறியும் இல்லை. அனைத்து இணைப்புகளும் சரியாகவே
இருந்தன. இதனால், என்ன காரணத்தால் தீ விபத்து நேரிட்டது என்பதை கண்டறிய,
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, மாநகர
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயிரிழப்பு நேரிட்ட வீட்டில் தீவிர
ஆய்வு மேற்கொண்டோம். மின்கசிவு, தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் தீ விபத்து
நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென முதற்கட்ட தடய அறிவியல்
ஆய்வில் தெரியவந்துள்ளது. அல்போன்சா ரோஸ் தூங்கிய அறையில், கொசுவை
விரட்டுவதற்கான காயிலுடன் கூடிய ஆயில் பாட்டில் உருமாறிய நிலையில்
சிதைந்து கிடந்தது; அதிலிருந்த திரவமும் வெளியேறிருந்தது. தீ விபத்து
நேரிட்டிருந்தாலும், அல்போன்சா ரோஸ் தீ வைத்து தற்கொலைக்கு
முயன்றிருந்தாலும் உடலில் தீப்பற்றி எரியும் போது நிச்சயம் அலறியபடி
ஓடியிருக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால், பக்கத்து அறையில்
தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் பதறி எழுந்திருப்பர்; ஆனால், அவ்வாறு
நிகழவில்லை. உடலில் தீப்பற்றி எரிந்தும் அல்போன்சா ரோசிடம் இருந்து
எவ்விதமான எதிர்விளைவு கூச்சலும் இல்லை. இதனால், வேறு விதமான யூகத்துக்கு
வரமுடிகிறது. அதாவது, கொசுவை விரட்டும் காயிலுக்கான மின் இணைப்பில் கோளாறு
ஏற்பட்டு பாட்டில் உருகி எரிந்திருக்க வேண்டும். அவ்வாறு எரியும்போது
அதிலிருந்த விஷத்தன்மையுடைய திரவத்திலிருந்து நச்சுவாயு பரவி, அவர்
மயக்கமடைந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்க
வேண்டும். இதற்கான வாய்ப்புகளையும் மறுத்துவிட முடியாது. காரணம், கொசுவை
விரட்டுவதற்கான ஆயில் பாட்டிலுடன் கூடிய காயில், அல்போன்சா ரோசின்
தலைமாட்டில் தான் வைக்கப்பட்டிருந்தது. அவர் படுத்திருந்த "பெட்'டும்
சற்று உயரமானது. இதனால், படுக்கையில் தீப்பற்றி, மயக்கநிலையில் இருந்தவாறே
அவர் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. மேலும், அவரை
காப்பாற்றுவதற்காக அறைக்குள் ஓடிய தாமசும் திடீரென மயங்கி தீயில்
விழுந்திருப்பதால், அந்த அறையில் நச்சுப்புகை பரவி இருந்திருப்பதற்கான
வாய்ப்புகளும் உள்ளன. சம்பவம் குறித்து, தடய அறிவியல் நிபுணர்களின்
உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்; யூகம், சந்தேகங்களுக்கு
விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி சரிந்து பிளஸ்-2 மாணவர் தீயில் கருகி சாவு
» வலங்கைமான் அருகே தீயில் கருகி முதியவர் சாவு
» இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார்
» ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து பயங்கரம் தீயில் கருகி 15 பேர் பலி
» ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum