ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு விபத்து இழப்பீடு மசோதா

Go down

அணு விபத்து இழப்பீடு மசோதா Empty அணு விபத்து இழப்பீடு மசோதா

Post by ரபீக் Fri Aug 20, 2010 1:08 pm

எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பைத் தொடர்ந்து அணு விபத்து இழப்பீடு மசோதாவில் உள்ள அன்ட் என்ற வார்த்தையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இதையடுத்து இன்று இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற குழு தெரிவித்த பரிந்துரைகள் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சரவை, வெள்ளிக்கிழமை காலை கூடி இந்த மசோதாவில் செய்யவேண்டிய திருத்தம் தொடர்பாக விவாதிக்கும் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தேச அணு விபத்து இழப்பீடு சட்டம் தொடர்பான சில அம்சங்கள் மீது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. பாஜக, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

2008ல் நிறைவேறிய இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின்படி இரு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி வர்த்தகம் நடைமுறைக்கு வர இந்த சட்டம் அவசியம். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு நவம்பரில் வரவுள்ளார். அதற்குள்ளாக அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முனைப்பாக உள்ளது.

இந்த மசோதாவுக்கு பாஜகவின் ஆதரவை பெற காங்கிரஸ் ரகசிய உடன்பாடு செய்துகொண்டுள்ளதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சோரபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கிலிருந்து விடுக்க முயற்சிப்பதாகவும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி உள்ளிட்டவை குற்றம்சாட்டியுள்ளன.

இந்த நிலையில் மசோதாவில் உள்ள 'அன்ட்' என்ற வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு நிலவியதால் அதை தற்போது அரசு நீக்கி விட்டது.

இந்த ஒரு வார்த்தையால், அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் உரிய இழப்பீடு தராமல் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பது எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனையாகும். இதையடுத்து இதை சரி செய்ய அரசு ஒத்துக் கொண்டது.

எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்த மசோதாவில் இடம்பெற்றுள்ள 17வது பிரிவுதான். தற்போது அந்த அன்ட் வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் எப்படி அந்த பிரிவு திருத்தப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்கவில்லை. இந்த திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து இன்றே சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது.

'அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு அடி பணியும் இந்தியா':

முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தில் போபால் விஷ வாயு சம்பவத்தில் அமெரிக்கா வின் நிர்ப்பந்தத்திற்கு இந்தியா பணிந்து விட்டதாக இடதுசாரிகளும், பாஜக உறுப்பினர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக அமெரிக்காவின் டெள கெமிக்கல் நிறுவனத்திடமிருந்து ரூ. 1,500 கோடியைப் பெறும் முயற்சியைக் கைவிட இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.

இதற்கு ஆதாரமாக திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும், அமெரிக்க பாதுகாப்புத் துறை இணையமைச்சர் மைக்கேல் ஃபோர்மனும் பரிமாறிக்கொண்ட இ-மெயிலை ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை பிரச்னை எழுப்பினர். சிபிஐ உறுப்பினர் டி.ராஜா பேசுகையில்,

மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கும், அமெரிக்க இணையமைச்சர் மைக்கேல் ஃபோர்மெனுக்கும் இடையிலான இ-மெயில் பரிமாற்றம் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவை தங்கள் நிர்பந்தத்துக்கு பணியுமாறு அமெரிக்க இணையமைச்சர் கூறியுள்ளார். உலக வங்கியில் இந்தியாவுக்கு கடன் கிடைக்கும் விஷயத்தில் நாங்கள் உதவுகிறோம். ஆனால் போபால் விஷவாயு விவகாரத்தில் அமெரிக்காவின் டெள கெமிக்கல் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு பெறும் விஷயம் மேலும் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் இந்தியா- அமெரிக்கா இடையிலான முதலீட்டு உறவுகள் கெடாமல் இருக்கும் என்று அமெரிக்க அமைச்சர் தனது இ-மெயிலில் கூறியுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்கா இந்தியாவை தாங்கள் கூறியபடி நடந்து கொள்ள நிர்பந்தப்படுத்தியுள்ளது தெளிவாகிறது. நமது நாட்டில் எடுக்கப்படும் முடிவுகளில் தலையிட்டு மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. நமது அரசும் அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு பணிகிறது. இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது.

அண்மையில் போபால் விஷவாயு விவகாரம் குறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் , இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு வெளிநாடுகளில் இருந்து எவ்வித நிர்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டார். இது குறித்து மத்திய அரசு முழுமையான விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவின் டெள கெமிக்கல் நிறுவனம் (இந்த நிறுவனம்தான் யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது) ரூ. 1,500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று கடந்த ஜூன் 22-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஎம் தலைவர் சீதாராம் எச்சூரி கூறுகையில்,

இது பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் வந்துள்ள மறைமுக நெருக்குதல். போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது மட்டுமன்றி, அந்த நிறுவனத்தில் உள்ள விஷக்கழிவுகளை அகற்றும் பொறுப்பையும் டெள கெமிக்கல் நிறுவனம்தான் ஏற்க வேண்டும் என்றார்.

எம்பிக்கள் ஊதிய உயர்வுக்கும் ஒப்புதல்:
இந் நிலையில்
எம்பிக்களின் ஊதியத்தை உயர்த்தும் மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இதன்படி எம்.பிக்களின் சம்பளம் ரூ. 16,000ல் இருந்து ரூ. 50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தினசரி படி ரூ. 1,000ல் இருந்து ரூ. 2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum