புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
10 Posts - 56%
heezulia
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
10 Posts - 56%
heezulia
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய இந்தியப் பெண்!


   
   
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 9:49 pm

செல்லமுத்து குப்புசாமி
போரிலும், காதலிலும் வரம்புகள் இல்லை என்பார்கள். கல்யாணத்தில் கூட
அப்படித்தான் போலிருக்கிறது. பல நாத்திகர்கள் ஆத்திகர்கள் ஆவதும்,
ஆத்திகர்கள் நாத்திகர்கள் ஆவதும் அங்கே பரவலாக நடக்கிறது. இந்தக் கூற்றை
பிரத்யேகமாக நிரூபிக்க வேண்டியதில்லை. வாழும் சாட்சிகள் எண்ணற்றவை.
இன்றைய உலகம் – குறிப்பிட்டுச் சொன்னால் இந்தியச் சமூகம் -
முன்னெப்போதும் சந்தித்திராத சமூக மாறுதலை எதிர்கொள்கிறது. அந்த
மாறுதல்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளும் சில நேரங்களில் ஜீரணிக்க முடியாத
ஒன்றாகவே உணரப்படுகிறது. அதே நேரம் மாற்றமில்லாத ஒரே சங்கதியாகிய
‘மாற்றம்’ தவிர்க்க இயலாதது மட்டுமல்லாமல் காலத்தின் கட்டாயமாவும்
உருவெடுத்துள்ளதையும் இந்த உலகம் உணராமல் இல்லை.
பலவீனங்களை சரி செய்வதற்குச் செலவிடும் ஆற்றலில் பாதியை தனது பலத்தைக்
கூட்டுவதற்குச் செலவழித்தால் பல சாதனைகளைப் படைத்து விடலாம், பத்துப்
பேர் முன்னால் பேசுவதற்குக் கூச்சப்படும் ஆட்கள் பலர் இன்றைக்கு
எழுத்தாளர் ஆகியிருப்பதைப் போல.
உனக்கு எதைச் சரியாகச் செய்ய முடியுமோ அதில் வல்லுனர் ஆவதே இதன்
சாராம்சம். ஸ்பெஷலிஸ்ட்டுகள் உருவானதும், உருவாகப் போவதும் இப்படித்தான்.
Division of labour என பொருளாதார மேதை ஆடம் ஸ்மித் குறிப்பிட்டதும்
இதைத்தான்.
ஆர்வம், குறிப்பிட்ட வேலையைச் செய்ய இயலும் திறன், அதை மட்டுமே செய்து
வாழ்க்கையை ஓட்ட முடிகிற சூழல், அங்கீகாரம் என எத்தனையோ காரணிகள் அதைத்
தீர்மானிக்கின்றன. இத்தகையை division of labour சமுதாயத்தில்
மட்டுமல்லாமல் வீடுகளில் நடைமுறைப்படுத்தினார் பண்டை மனிதன்.
வெளியே சென்று வேட்டையாடி உணவு தேடி வரும் கடினமான வேலையை ஆண்
எடுத்துக்கொண்டான். இயற்கை அவனுக்கு அளித்திருந்த வலிமையான உடல் அதை
ஊக்குவித்தது. அவன் வரும் வரைக்கும் குகைக்குள் அமர்ந்து குழந்தைகளையும்,
கரிசனம் வேண்டுவோரையும் கவனிக்கும் பக்குவமான வேலையை பெண்
எடுத்துக்கொண்டாள். அவரவர் வேலையில் அவரவர் சிறந்து விளங்கினர்.
காலங்காலமாக இப்படித்தான் நடந்து வருகிறது. பொருளீட்டும் வேலை ஆணுக்கு,
குடும்பத்தை நிர்வகிக்கும் வேலை பெண்ணுக்கு. ஒருவரை ஒருவர் சார்ந்து,
தத்தமது பலத்திற்கும் பலகீனத்திற்கும் ஏற்ப பரஸ்பரம் அனுசரித்து வாழ்ந்த
இந்த வாழ்வு – சில விதிவிலக்குகளைத் தவிர்த்து - தொய்வில்லாமல் தொடர்ந்து
வந்ததாகவே கருதப்படுகிறது. தவிர ஆண், பெண் மூளையும் அந்த மூளையில்
இருந்து உருவெடுக்கும் சிந்திக்கும் திறனும் கூட இந்தப் பின்னணியிலேயே
அமைந்தது.
பெரும்பாலான நேரங்களில் ஆண் அறிவுப்பூர்வமாகவும், பெண்
உணர்வுப்பூர்வமாகவும் பிரச்சினைகளை அணுகும் தன்மை படைத்தவர்களாக
இருக்கிறார்கள். அவ்வாறே வடிவமைக்கப்பட்டு, பழக்கப்பட்ட அவர்களது புத்தி
வேறு விதமாகச் சிந்திப்பதற்கு பெரும்பாடு படுகிறது.
முற்காலத்தைப் போல வேலைக்குச் சென்று பொருளீட்டுவது உடல் வலிமையை மட்டுமே
சார்ந்ததல்ல என்ற இன்றைய நவீனச் சூழல் இன்றுவரை பேணப்பட்ட பல கற்பிதங்களை
உடைத்துப் போடுகிறது. ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்று சொல்லப்பட்டு ஆண்
மட்டுமே பொருளீட்டியதெல்லாம் கால வாகனத்தின் rear mirror இல் பார்க்க
வேண்டிய சங்கதி போலத் தோன்றுகிறது.
ஆணுக்கு இணையாக ஊதியம் ஈட்டும் திறன் இந்தியப் பெண்களுக்கு
முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு சுதந்திரத்தையும், கூடவே எதற்கும்
அடங்காத திமிர்த்தனத்தையும் ஒரு சேர அளித்துள்ளது. பல காலமாக தம் மீது
சுமத்தப்பட்டிருந்த அடக்குமுறையில் இருந்து விடுபட்டதை அவர்கள் ஒரே
நேரத்தில் கொண்டாடிக் களித்திட விரும்புகின்றனர். ஒரு ஆண் வீட்டை விட்டு
வெளியே வந்து சம்பாதிக்க ஆரம்பித்தால் அவனுக்கு பொறுப்பு வருகிறது, பெண்
சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது அவளுக்கு ஆணவம் வருகிறது என்று என்
எழுத்தாள நண்பர் சொன்னதைக் குறிப்பிட்டால் ‘ஆணாதிக்கவாதி’ என்ற பட்டம்
இலவசமாகக் கிடைக்கும். எனினும் அதில் பொதிந்துள்ள உண்மையை
மறுப்பதற்கில்லை.
இருப்பினும் பெண்களுக்கு பொருளாதார விடுதலையின் வாயிலாகக் கிடைத்துள்ள
சமூக விடுதலையும், அங்கீகாரமும் ஓரளவுக்கு ஆண் சமுதாயத்தினால்
சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகவே வெளிப்படுவதை இன்னொரு பக்கம் ஏற்றுக்
கொண்டாக வேண்டும். சிறு எண்ணிக்கையில் என்றாலும் கூட குறிப்பிட்டுச்
சொல்லும் அளவுக்கு பல குடும்பங்கள் இன்றைக்குப் பல் இளிக்கின்றன.
இந்தத் தலைமுறையில் மண முறிவு என்பதும், மறுமணம் என்பதும் பெருநகரங்களில்
மட்டும் நடப்பதில்லை. ஒரு வகையில் இது வரவேற்கத்தக்க மாற்றம். பெரியார்
பரிந்துரை செய்த மாற்றம். ஆனால் அவ்வாறெல்லாம் நடப்பதற்கான காரணங்களைச்
சரியாகவும், சரிதானா என்றும் ஆராயவும் வேண்டும். ஆணின் தேவைகளாக
பெண்ணும், பெண்ணின் தேவையாக ஆணும் உணர்ந்து வைத்துள்ள விஷயங்கள் மிகவும்
மேலோட்டமானவை. ஆழ்ந்த புரிதல் இல்லாதவை.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 9:49 pm

இன்றைய நவீனப் பெண்ணின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் ராட்சத பலூனைப் போல
விரிந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை ஈடு கட்டுவதற்குப் பல ஆண்கள்
போராடித் தவிர்க்கிறார்கள். தேவைகளும் எதிர்பார்ப்புகளும் தவாறனவை என்று
அதற்குப் பொருளல்ல. இத்தனை தலைமுறைகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்து
அவர்களின் அபிலாஷைகள் ஒரேயடியாக கட்டவிழும் போது ஆண் சமுதாயம் அதை
எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது.
நவீன யுக ஆணிடம் சமுதாயம் ஏராளமாக நிர்ப்பந்திக்கிறது. ”புணர்ச்சியின்
போது உன் ஆண்குறி எவ்வளவு நீளும்?” என்பதை விட, “எவ்வளவு சம்பளம்?” என்ற
கேள்வியே அவனை முகம் சுளிக்க வைக்கிறது. அவனது வெற்றி-தோல்வியை,
வாழ்வதற்கான அறுகதையை இவ்வுலகம் ஒப்பீடுகளின் அடிப்படையில்
தீர்மானிக்கிறது. Benchmark செய்வதற்கு தயாராக ஒரு அமெரிக்க மாப்பிள்ளை.
கல்யாணச் சந்தையில் விலைபோக முடியாத ஆண்களின் பெருமூச்சு பூமிப் பந்தையே
உருட்டிப் போட வல்லது.
பணம் படைத்த ஆணும், எழில் மிகுந்த பெண்ணும் ஒருவரை நோக்கி ஒருவர்
ஈர்க்கப்படுவது இயல்பு. வசதி இல்லாத ஆணாக இருந்தாலும் கூட கண்ணுக்கு
இலட்சணமான துணையே அவனது பிரதான விருப்பம். வருமானமில்லா ஆண் கல்யாணச்
சந்தையில் எவ்வாறு புறக்கணிப்படுகிறானோ அதே போல அவலட்சணமான பெண்ணும்
ஒதுக்கப்படுகிறாள். அவளது ஊதியம் இரண்டாம் பட்சம். வேலைக்குச் செல்லும்
பெண் வேலைக்குச் செல்லும் ஆணையே தேடுகிறாள். வேலைக்குச் செல்லும் ஆணின்
முதல் அளவுகோல் ‘அழகு’. எதிரும் புதிருமாக நீளும் பட்டியலில் இது ஒரு
தொடக்கப் புள்ளி மாத்திரமே. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டியல்
நீளும்.
தேடும் வேட்டையில் முன்வைக்கும் நிபந்தனையும், அளவுகோலும் தளர்ந்து
அநேகக் கல்யாணங்கள் சமரசங்களின் சமாதியில் அக்கினி வளர்த்தே
நடந்தேறுகின்றன. பல நாத்திகர்கள் ஆத்திகர்கள் ஆவதும், ஆத்திகர்கள்
நாத்திகர்கள் ஆவதும் அங்கேதான். வரதட்சணை பெருங்குற்றம் என்று
பள்ளிக்கூடப் பேச்சுப் போட்டியில் பேசிய பெண்கள் 1+1+1 (ஒரு கிலோ நகை,
ஒரு இலட்சம் பணம், ஒரு பத்து இலட்ச கார்) என்று அப்பனுக்கு டாட்டா
காட்டிச் செல்வது அங்கேதான்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 9:49 pm

ஆனால் சமரசங்கள் சாகாவரம் பெற்றவையல்ல. நிபந்தனையற்ற அன்பும்,
எதிர்பார்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்படுவதும் சாஸ்வதம் இல்லை. இவ்வுண்மை
முற்காலத்திலும் உணரப்பட்டது என்றாலும் அப்போது பெரும்பாலும்
சகித்துக்கொண்டார்கள். ஊர் என்ன பேசுமோ என்று அஞ்சினார்கள். இவனை
விட்டுச் சென்றால் கஞ்சிக்கு வழியென்னவென்று யோசித்தார்கள். இன்று
அப்படியல்ல. பெண் சுயமாகச் சம்பாதிக்கிறாள். சொந்தக் காலில் அவளால் நிற்க
முடியும். ஆண் துணையின்றி வாழ முடியும். அல்லது முடியும் என்ற
குறைந்தபட்ச நம்பிக்கையாவது அவளுக்கு உள்ளது. வேண்டினால் வேறு துணையும்
தேடிக் கொள்ளலாம். கடந்த நான்கைந்து ஆண்டுகளில் இந்திய நீதிமன்றங்களில்
விசாரணைக்கு வரும் விவாகரத்து வழக்குகளே இதற்குக் கட்டியம் கூறுகின்றன.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 9:50 pm

பிரச்சினைக்கு ஆணோ, பெண்ணோ காரணமல்ல. பெண் புதிதாகச் சம்பாதிக்க
ஆரம்பித்திருப்பதும் காரணமல்ல. அப்படிப்பட்ட சமூகச் சூழலை உள்வாங்க
முடியாமல் இருபாலரையும் குழப்பி வைத்திருக்கும் நம் பண்பாட்டுப்
பின்னணியும், மரபியல் ரீதியாக வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கும் அவ்விரு
பாலரின் மூளை வடிவமைப்புமே காரணமாகும்.
மேற்குலகம் இந்தப் பிரச்சினையை ஓரிரு தலைமுறைக்கு முன்பே எதிர்கொண்டது.
அதனால் உருவான பக்க விளைவுகளையும் உள்வாங்கிக் கொண்டது. நமக்குக் கொஞ்ச
காலம் பிடிக்கும்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 9:50 pm

தற்போதையை பொருளாதாரச் சுணக்கத்தில் எல்லாத் துறையினருக்குமே பாதிப்பு
என்கிறார்கள். எல்லோருக்குமே வருமானம் குறைகிறதாம். ஜோசியர்களும்,
மனவியல் மருத்துவர்கள் மட்டும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல்
திணறுகிறார்களாம்.
மேரேஜ் கவுன்சிலிங் போர்டுகள் வருங்காலத்தில் நிறைய எழுதப்படும் என்கிறது
பட்சி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக