ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

4 posters

Go down

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Empty பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by சிவா Tue Oct 14, 2008 11:45 pm

திருமணமாகும் வரை, உடலை "சிக்'கென வைத்துக் கொள்ளும் பெண்கள், திருமணமாகி குழந்தை பிறந்ததும், குடும்பத்திற்கென்றே தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விடுகின்றனர். இதில் தவறில்லை. ஆனால், தங்கள் உடல் நலனிலும் அக்கறை செலுத்தினால், மகிழ்ச்சி நீண்ட நாள் இருக்கும். உடல்நலனை கவனித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?


1. நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள்: நீங்கள் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் 50 சதவீதம், புரோட்டீன் 25 சதவீதம், நல்ல கொழுப்பு 25 சதவீதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். காலம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணப் பழகுங்கள். வேக வைத்த, அதிகம் எண் ணெய் இல்லாத உணவுகளை உண்ணுங்கள்.


2. உங்கள் எலும்புகள் உறுதியாக உள்ளதா என்று பரிசோதியுங்கள்: 30 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகள் வலுவிழக்க, தேயத் தொடங்குகின்றன. எனவே, 30 வயதிற்கு பிறகு அதிக அளவில் கால்சியம் சத்து உள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் முதுகெலும்பு வலுவுள்ளதாக இருக்கும்.


3. வருடந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்: ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, மெனோபாஸ் பிரச்னைகள், புற்றுநோய், கர்ப்பப்பை பரிசோதனை முதலியவற்றை தவறாது பரிசோதனை செய்யுங்கள். மருத்துவர் ஆலோசனைப்படி, சுண்ணாம்புச் சத்து, மாங்கனீசு சத்து என, எந்த சத்து உங்களுக்கு தேவைப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப உட்கொள்ளுங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Empty Re: பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by சிவா Tue Oct 14, 2008 11:46 pm

4. வாத நோய் பற்றி கவனமாக இருங்கள்: "இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறோமே, அதனால் வாத நோய்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்' என்று நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். "ருமடாய்டு ஆர்த்ரிட்டிஸ்' எனப்படும் கீல்வாத நோய், அனைவருக்கும் ஏற்படக் கூடியது. இதில் பல வகைகள் உள்ளன. 30 வயதை கடந்தவராகவோ அல்லது உங்கள் பரம்பரையில் யாருக்காவது இந்த நோய் இருப்பின், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நோய் தாக்கினால், இது தொடர்பான பல்வேறு நோய்களும் தாக்க வாய்ப்புண்டு. யூரிக் ஆசிட் குறைபாடு இருந்தால், மூட்டு இணைப்பு, எலும்புகள் இணையுமிடத்தில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படும். எனவே, உடனே டாக்டரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.


5. நீங்கள் நினைப்பதை உறுதியாக எண்ணுங்கள்: 30 வயதில், அலுவலக வேலை, வீட்டு வேலை என, பல பணிகள் உங்களை தொல்லை படுத்துவதாக எண்ணலாம். இந்த நேரத்தில், எடுத்துக் கொண்ட வேலையோ அல்லது பிரச்னையோ பெரிதாக தெரியும். அதன் விளைவாக, எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம். எனவே, எதுவாக இருந்தாலும் உங்களால் சாதிக்க முடியும் என்று உறுதியாக நம்புங்கள். அப்படி உறுதியோடு இருக்கும் போது, தெளிவுடன், பிரச்னையை தீர்க்கும் வழியை கண்டறியலாம்.


6. உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உடற்பயிற்சி செய்வது மிகுந்த பலன் தரும். உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் புத்துணர்வைத் தரக்கூடியது. உடலிலுள்ள கொழுப்புகளை எரித்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். யோகா செய்வது மனதை ஒருமுகப்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.


7. நீங்கள் உங்களை ஆயத்தப்படுத்துங்கள்: 40 வயதிற்கு பிறகு, "ஹார்மோன்' மாற்றம் ஏற்படும் என்பதால், அதற்கேற்றவாறு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Empty Re: பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by சிவா Tue Oct 14, 2008 11:47 pm

8. கர்ப்பம் தரித்தல் குறித்து கவனமாக இருங்கள்: முதல் குழந்தையோ, இரண்டாவது குழந்தையோ, 35 வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது. அதற்கு பின், குழந்தையை பெற்றுக் கொள்வது ஆபத்தானது. அதிலும், குறிப்பாக பரம்பரையில் யாருக்காவது உயர் ரத்த அழுத்தமோ அல்லது சர்க்கரை வியாதியோ இருப்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கர்ப்பத்தை உறுதி செய்தவுடன் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள், அவர் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் செய்ய வேண்டியவற்றை கூறுவார்.


9. மாதந்தோறும் உங்கள் மார்பகங்களை பரிசோதியுங்கள்: இருபத்தி இரண்டு பெண்களில் ஒருவருக்கு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, மாதம் ஒருமுறை மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. மார்பகம் வீங்குதல், வடிவம் பிறழ்தல், முலைக்காம்பு சிவந்து இருத்தல் போன்றவை ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும். மார்பகத்தை அழுத்தி பார்த்து, கட்டி, வலி, எரிச்சல் ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதியுங்கள். மகப்பேறு மருத்துவரிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது எப்படி என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.


10. காலத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை மாற்றுங்கள்: இந்தியப் பெண்களில், 30 - 40 வயதுக்குட்பட்டோரில் 40 சதவீதம் பேர், அதிக எடை, பருத்த உடல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், பெரும்பாலானவர்கள் நோய் முற்றிய பிறகுதான் மருத்துவரை அணுகுகின்றனர். காரணம், தங்கள் உடல் நிலை மீது பெண்கள் அக்கறை காட்டுவதே கிடையாது. திருமணமான பெண்கள், தங்கள் கணவர் மற்றும் குழந்தைகள் உடல் நலனிலேயே பெரிதும் அக்கறை காட்டுகின்றனர். இதுமட்டுமின்றி, எப்போதும் பரபரப்பாக வேலைகளை செய்து கொண்டே இருக்கும் போது உணவு, தூக்கம் பாதிக்கப்படுகிறது.



இதனால், பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து நிகழ்ச்சிகளையும் சரியாக பட்டியலிடுங்கள். பரபரப்பை தவிருங்கள். உதாரணமாக, "டிவி' பார்ப்பது என்றால் கூட இரவு அதிக நேரம் பார்க்காதீர்கள். ஏனெனில், அது உங்கள் தூக்கத்தையும், அடுத்த நாள் வேலையையும் பாதிக்கும். காலையில் 15 நிமிடம் பிரார்த்தனை, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற் றில் செலவிடுங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Empty Re: பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by சபீர் Thu Jul 29, 2010 10:35 am

அறிந்திக்கவேண்டிய ஒரு கட்டாயப்பதிவாக உள்ளது இப்பதிவு மிக்க நன்றி அண்ணா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Empty Re: பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by kalaimoon70 Thu Jul 29, 2010 10:38 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி தலை . நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Empty Re: பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:14 pm

kalaimoon70 wrote:பயனுள்ள தகவலுக்கு நன்றி தலை . நன்றி

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் 359383 பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் 359383



பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Empty Re: பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum