ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி

3 posters

Go down

வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Empty வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி

Post by அன்பு தளபதி Thu Aug 12, 2010 9:27 pm

வயதாகிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்கக்கூடாது. வயதான காலத்தில், அதை சந்தோஷமாக வரவேற்றால், வாழ்நாள் முழுக்க அது நீடிக்கும். "ஆண்டவா! வயதாகி விட்டதே, என்னால், அதை செய்ய முடியவில்லையே, இதைச் செய்ய முடியவில்லையே' என்று வேதனையில் உழன்றால், தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடும். உடலில் தளர்ச்சி அதிகரிக்கும். அதனால் பாதிப்புகளும் அதிகமாகும்.


அறிகுறி என்ன?
வயதுக்கேற்ற வேலைகளைதான் செய்ய வேண்டும். அறுபதை எட்டும் போதே, சில வேலைகளை நாம் தவிர்ப்பது நல்லது. எலும்புகள் வலுவிழந்து காணப்படும் நிலையில், தசைகள் சுருங்கிப் போயிருக்கும் நிலையில், பெரிய அளவில் வேலையை செய்ய முடியாது.
மனதை இலகுவாக்கிக் கொண்டு, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மூட்டுகள் வலுவாக இருக்கவும், மன அழுத்தத்தை போக்கவும், தினமும் உடற்பயிற்சி தேவை.


எப்படி இருக்க வேண்டும்?
நொறுக்குத் தீனிப்பக்கமே போகக் கூடாது.
மன அழுத்தம் வர அனுமதிக்கக் கூடாது.
தினமும் உடற்பயிற்சி தேவை.
தோலைப் பாதிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
அதிக ஓய்வு எடுக்க வேண்டும்.
அதிக குடிநீர் குடிக்க வேண்டும்.
உப்பு கொழுப்பு "நோ!'


வயதாகி விட்டால், இரண்டைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒன்று-உப்பு. இன்னொன்று-கொழுப்பு. இவை இரண்டும் உள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். வயதான நிலையில், கொலஸ்ட்ரோல் அதிகமாக உடலில் சேரும் என்பதால், அது சார்ந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கால்சியம் தேவை


வயதான பெண்களுக்கு, அதிலும், மாதவிடாய் நின்று போன நிலையில் உள்ளவர்களுக்கு கால்சியம் சத்து தேவைப்படுகிறது. அதற்கு, டாக்டரை ஆலோசித்து, அவர் சொல்வதற்கேற்ப, கால்சியம் மாத்திரைகள், உணவு வகைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மூட்டுவலி வருவது, முதுகுவலி வருவதெல்லாம் தவிர்க்கலாம். அதுபோல, வயதான பெண்களுக்கு கலோரிச் சத்து தேவை. சராசரியாக ஒருவருக்கு 1,500 கலோரிச் சத்து தேவை. வயதானவர்கள் அதற்கு அதிகமாகவே பெற வேண்டும். ஆண்களை விட, பெண்களுக்கு எலும்புகள் பலவீனம் அடையும் வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு மாதவிடாய் நின்று விட்ட நிலையில், அவர்களுக்கு கால்சியம் சத்து குறைந்து விடும். அப்போது, அவர்களின் எலும்புகளுக்கு வலு தேவைப்படுகிறது. ஆண்களை விட, பெண்களுக்கு எலும்பு பாதிப்பு நான்கு மடங்கு அதிகம். அதனால், விட்டமின் "டி' சத்து, கால்சியம் சாப்பிடுவதுடன், உடற்பயிற்சியும் தேவை.


அல்சீமரா?
மறதி நோய், வயதானவர்களுக்கு கண்டிப்பாக வரும். அதனால், மறதி வந்தாலே, "அடடா, "அல்சீமர்' நோய் வந்து விட்டதே என்று கவலைப்படக் கூடாது. "அல்சீமர்' நோய்க்கு சில அறிகுறிகள் உள்ளன. வயதானாலே, சில சம்பவங்கள் மறந்து போகும், அதை வைத்து தவறான முடிவுக்கு வரக்கூடாது. சமீபத்திய சம்பவங்கள், உறவினர்கள் பெயர்கள் போன்றவற்றை மறந்து விட்டது தொடர்ந்தாலோ, மறதி அதிகமாக இருப்பதாக உணர்ந்தாலோ டாக்டரிடம் காட்ட வேண்டும். "அல்சீமர்' நோயைத் தவிர்க்க, நவீன முறைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை முழுமையாக அமுலானால், பலருக்கு பயனளிக்கும்.


கண் பார்வை மங்குமா? வயதானால், கண்பார்வை மங்கிவிடும் என்று பலரும் நினைப்பது சரியல்ல. சிலருக்கு 90 வயதானாலும் கூட, பார்வை பளீச் என்று இருக்கும். பத்திரிகையை கண்ணாடி போடாமலேயே படிப்பர். மாடிப்படி ஏறும் போது தடுக்குவது, பஸ் நம்பர் தெரியாமல் இருப்பது போன்ற அறிகுறிகளை வைத்து, மங்கலான பார்வையை போக்கிக்கொள்ள டாக்டரிடம் போய், பரிசோதித்துக் கொண்டு, கண்ணாடி அணியலாம்.


கட்ராக்ட் வருமா?
வயதானவர்களில் பலருக்கும் பொதுவாக வரும் பாதிப்பு, "கட்ராக்ட்!' கண்லென்சில் புகை படிமம்தான் இது. இதை சரி செய்ய இப்போது ஏகப்பட்ட நவீன வசதிகள் வந்துவிட்டன. "காட்ராக்ட்' பாதிப்பு கடுமையாக இருந்தால், அறுவை சிகிச்சை உள்ளது. இன்னொரு கண் பாதிப்பு, "க்ளூகோமா!' வயதானவர்களுக்கு சகஜமாக வரும். கண்ணில் திரவ அழுத்தம் அதிகரிப்பதால் வருகிறது. டாக்டரிடம் காட்டி சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பார்வை பறி போக வாய்ப்புண்டு. காது கேட்காது போனால், வயதானால் வரும் ஒரு பிரச்சினை தான் இதுவும். பேசும் போது வார்த்தை தடுமாறும். பாடல் வரிகளை கேட்க முடியாமல் போகும். வாசலில் யாராவது அழைப்பு மணி அடித்தால் கூட, பதில் சொல்ல மாட்டார்கள். சாதாரண காது கேளாத பிரச்சினை என்றால், சில மருந்துகள் சரி செய்துவிடும். சீரியசான பிரச்சினை என்றால் டாக்டரை ஆலோசித்து சரி செய்வதே நல்லது.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Empty Re: வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி

Post by tdrajeswaran Thu Aug 12, 2010 10:31 pm

கட்டுரை என்னை போன்ற வயதான் கட்டைகளுக்கு மிகவும் தேவையான ஒன்று, அற்புதமாக உள்ளது. பெரும்பாலும் உடல் நலனைப் பற்றியே சொல்லப் பட்டு இருக்கிறது. மன உணர்ச்சியை கட்டுப் படுத்துவது பற்றியும், மற்றவர்கள் நம் எண்ணப்படியே நடக்க வேண்டும் என்ற ஆசையை தவிர்க்கிறது பற்றியும் மற்றுமொரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Back to top Go down

வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Empty Re: வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி

Post by T.N.Balasubramanian Fri Aug 13, 2010 5:30 am

அருமையான கட்டுரை. வயதாகி விட்டதே என்ற கவலையே கூடாது. வயதாகி விட்டதால்,நம்மை கலந்தாலோசிப்பார்கள். நாம் பாரபட்சமின்றி அறிவுரை வழங்கவேண்டும், என்ற நினைப்பில் நம்முடை அறிவை விசாலப் படுத்திக் கொள்ளவேண்டும். இணைய தள வசதிகள்,ஊடகங்கள் வசதியை பயன்படுத்தி கொண்டால், என்றும் இன்ப நாளே. வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி 755837

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Empty Re: வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum