ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம்

Go down

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Empty தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம்

Post by நவீன் Thu Aug 12, 2010 10:01 am


தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் 11kanimythe





புது
தில்லி,

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவது
தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை திமுக-அதிமுக இடையே கடும்
வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக உறுப்பினர் கனிமொழியும், அதிமுக உறுப்பினர் மைத்ரேயனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கனிமொழி:
தமிழகத்தில் சுமார் 2.6 லட்சம் மீனவர்கள் உள்ளனர். மீன்பிடிப்பதே
இவர்களின் வாழ்வாதாரத் தொழிலாக உள்ளது. இந்நிலையில் மீனவர்கள் மீது இலங்கை
கடற்படையினர் தாக்குதல் நடத்தி அத்துமீறி நடந்து கொள்கின்றனர். இதனால்
தமிழக மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களது
தொழிலுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
இது வேதனைக்குரிய விஷயம். மீனவர்கள் இதுபோன்று வஞ்சிக்கப்படும்
சூழலை இந்த அவையின் உறுப்பினர்களில் சிலர் புரிந்து கொள்வதில்லை.
மீனவர்கள் விவகாரத்தின் மூலம் அவர்கள் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்
என்றார். கனிமொழி இப்படி பேசும் போது அவையில் அமர்ந்திருந்த அதிமுக உறுப்பினர் மைத்ரேயனை நோக்கியவாறு பேசினார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன்:


அந்த பக்கம் பார்த்து பேசாதீர்கள்; என்னைப் பார்த்து பேசுங்கள் என்று கனிமொழியிடம் கேட்டுக்கொண்டார்.மைத்ரேயன்: மீனவர்கள் விஷயத்தில் இதுவரை என்னைத் தான் கனிமொழி குற்றம்சாட்டி பேசினார்.

கனிமொழி:


நான் அவரை (மைத்ரேயனை) குற்றம்சாட்டிப் பேசவில்லை. மைத்ரேயன்: கனிமொழியின் மறுப்பை ஏற்க முடியாது. அவர் இதுவரை என்னைத் தான் குற்றம்சாட்டி பேசினார்.

கனிமொழி:

மீனவர்கள்
விஷயத்தில் சிலர் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்கள் என்று பொதுவாகத் தான்
பேசினேன். நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை.மாநிலங்களவை துணைத் தலைவர்: சரி, உங்கள் பேச்சைத் தொடருங்கள் என்றார் கனிமொழியிடம்.

மைத்ரேயன்:

கலங்கிய
குட்டையில் மீன்பிடிக்க முயல்வதாக கனிமொழி எங்கள் மீது
குற்றம்சுமத்துகிறார். உண்மையில் அவர்தான் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க
முயல்கிறார்.


கனிமொழி:

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தமிழக
அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதைத் தடுக்குமாறு மத்திய அரசுக்கு
மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதல்வர் கருணாநிதி கடிதம்
எழுதி மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வருகிறார். இலங்கை
மீனவர்கள் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்துவிடும் போது அவர்களை கைது
செய்து முறையாக விசாரணை நடத்தி அவர்களது நாட்டுக்கே திரும்பி அனுப்பி
விடுகிறோம். ஆனால் எதிர்பாராதவிதமாக தங்களது எல்லைக்குள்
வந்துவிடும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு இப்படி நடத்தாதது ஏன்? தமிழக
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவது
ஏன்? இதைத் தடுக்க இந்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று
கேள்விகளை எழுப்பி கனிமொழி தனது பேச்சை முடித்துக்கொண்டார்.


மன்னிப்பு கோரினார்...


மீனவர்
பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை அதிமுக உறுப்பினர்கள் கடும்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே
கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் மாநிலங்களவை நடவடிக்கைகளை சிறிது நேரம்
ஒத்திவைக்க வேண்டியதாயிற்று.÷ஒரு கட்டத்தில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் கே. ரெஹ்மான்கானை நோக்கி ஆத்திரத்துடன் பேசினார் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன். ÷தமிழக
மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து கவன ஈர்ப்பு
தீர்மானம் கொண்டு வந்தார் மைத்ரேயன். இந்த விஷயத்தில் வெளியுறவு அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணாவிடமிருந்து விளக்கம் பெற விரும்புவதாக அவர் கூறினார்.÷இதற்கு திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ÷பிரச்னையை
மட்டும் பேசுங்கள் என்று மைத்ரேயனிடம் கூறினார் மாநிலங்களவை துணைத் தலைவர்
ரெஹ்மான். ஆனால் தான் விளக்கம் மட்டுமே பெற விரும்புவதாக மைத்ரேயன்
குறிப்பிட்டார். இந்நிலையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்
குறுக்கிட்டனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக்
குற்றம் சுமத்துவது போல நேரடியாக பார்த்து பேசினர். இதேபோல மைத்ரேயன்
பேசியபோது, தன்னை பார்த்து பேசும்படி ரெஹ்மான் கான் குறிப்பிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மைத்ரேயன், விதிமுறைகள் அனைத்தும் தனக்கு மட்டுமே
பயன்படுத்துவதாக சத்தமாகக் குறிப்பிட்டார் மைத்ரேயன். அத்துடன் தொடர்ந்து
பேசிக் கொண்டே இருந்தார்.÷மைத்ரேயன் தெரிவித்த இந்த கருத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ரெஹ்மான் கான், அவை நடவடிக்கைகளை 10 நிமிஷம் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.÷இதைத்
தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களுடன் அதிமுக உறுப்பினர்
மைத்ரேயனும் மாநிலங்களவை துணைத் தலைவரின் அறைக்குச் சென்றார். அப்போது
தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை
» தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்
» சிங்கள அடி எப்படி இருக்கும்? : சொல்லிச்சொல்லி கொடூரமாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
» இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum