ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி?

Go down

காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி? Empty காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி?

Post by நவீன் Thu Aug 12, 2010 9:34 am

கோவை,

ஏழை
மாணவ மாணவிகளின் பசியை போக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த
மாநில அரசின் அனுமதிக்காக 4 மாதங்களாக கோவை மாநகராட்சி நிர்வாகம்
காத்திருக்கிறது. சென்னைக்கு அடுத்து பெரிய அளவில் கோவை
மாநகராட்சி வளர்ந்து வருகிறது. தொழில் வளம் காரணமாக தென்மாவட்டங்கள்
மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கோவைக்கு இடம்பெயர்ந்து வருவோர்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை நகரில் உள்ள தனியார்
பள்ளிகளில் சேர வேண்டுமெனில் ஆயிரக்கணக்கில் செலவாகும். இதனால்
தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்த்து படிக்க
வைக்கின்றனர்.÷இந்நிலையில் கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழக
மாணவிகள் மாநகராட்சிப் பள்ளிகள் குறித்து கடந்த ஆண்டு எடுத்த ஆய்வில்
அதிர்ச்சித் தகவல் வெளியானது. கோவை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் அதிக
எண்ணிக்கையிலான குழந்தைகள் உடல் ரீதியாக பலவீனமாக இருப்பதும், அவர்கள்
காலை நேரங்களில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதும் தெரியவந்தது.÷ஏழ்மை
காரணமாகவும், தந்தை, தாய் இருவரும் கூலி வேலைக்குச் சென்றுவிடுவதாலும்
குழந்தைகளுக்கு காலை உணவு கிடைப்பதில்லை என்றும் அந்த ஆய்வில்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வு அறிக்கை மாநகராட்சி நிர்வாகத்திடம்
சமர்ப்பிக்கப்பட்டது. ÷இதைத் தொடர்ந்து 2010-11 ஆம் ஆண்டு
மாநகராட்சி பட்ஜெட்டில் மாநகராட்சி துவக்கப் பள்ளிகளில் படிக்கும்
குழந்தைகள் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்றும், ஜூன்
முதல் இத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இத்
திட்டத்துக்காக ரூ.2 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ÷இத்
திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி மாநில அரசுக்கு, மாநகராட்சி நிர்வாகம்
4 மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியது. ஆனால், மாநில அரசிடம் இருந்து
இதுவரை பதில் வரவில்லை. ஏழை மாணவ, மாணவிகளின் பசியைப் போக்கும் இத்
திட்டத்துக்கு அரசு உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்து
வருகிறது. ÷"மாநகராட்சியில் படிக்கும் மாணவ, மாணவிகள் காலை உணவு
அருந்தாமல் பள்ளிக்கு வருவதால் உடல் சோர்வடைந்து படிப்பில் ஆர்வம்
காட்டுவதில்லை என்றும் காலை வழிபாடு நடைபெறும்போது சில குழந்தைகள் மயங்கி
விழுந்துவிடுகின்றனர் என்றும் அவ்வப்போது புகார்கள் வருகின்றன. இக்
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம்
கடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ÷அவிநாசிலிங்கம்
பல்கலைக்கழக மாணவிகள் செய்திருந்த பரிந்துரையில் மாநகராட்சி பள்ளி
மாணவிகளுக்கு காலை நேரத்தில் கம்பு, கேழ்வரகு கூழ், கொண்டைக் கடலை
உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கலாம் என பரிந்துரை செய்திருந்தனர். அவற்றை
விநியோகம் செய்வது சற்று சிரமம் என்பதால் சத்தான காய்கறிகளுடன் கூடிய
உணவு, இட்லி, உப்புமா போன்ற உணவுகளை தரமான உணவு நிறுவனங்களிடம் ஒப்பந்த
அடிப்படையில் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், இதுவரை அனுமதி வரவில்லை. ஏழை மாணவ, மாணவிகள் கல்வியில் கூடுதல்
கவனம் செலுத்த இத் திட்டம் நிச்சயம் பயன்படும் என்கிறார் மாநகராட்சி
கல்விக் குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம்.÷"மாநகராட்சி துவக்கப்
பள்ளிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 628 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் சத்தான உணவு வழங்கும் வகையில் காலை சிற்றுண்டி
திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏழை மாணவ, மாணவிகளின் பசியை போக்கி கல்விக் கண்ணைத் திறக்கும் இத்
திட்டத்துக்கு அரசு கண்டிப்பாக அனுமதி அளிக்கும். பிற அரசு மற்றும்
மாநகராட்சி பள்ளிகளுக்கு வழிகாட்டும் வகையில் ஏற்கெனவே கோவை
மாநகராட்சியில் பல முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த
வரிசையில் இத் திட்டமும் அமையும்' என்கிறார் கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
» புதுச்சேரயில், கருணாநிதி பெயரிலான காலை சிற்றுண்டி திட்டம் இன்று தொடங்கப்படுகிறது
» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு
» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
» பன்றிக் காய்ச்சல் தடுப்பூசித் திட்டத்துக்கு ரூ. 15 கோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum