ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம்

2 posters

Go down

புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Empty புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம்

Post by நவீன் Wed Aug 11, 2010 10:32 am


புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் 10pdycm



ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் நிறைவு
விழாவில் பேசுகிறார் புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம். உடன் (இடமிருந்து)
வஉசி-யின்


ஈரோடு, மக்களிடம் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்று புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் கூறினார்.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகத்
திருவிழாவின் நிறைவு நாள் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. சக்தி
மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி தலைமை வகித்தார்.
இயக்குநர் சாந்தி துரைசாமி முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவைத்
தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் வரவேற்றார். வ.உ.சிதம்பரனாரின்
மகன் வ.உ.சி.வாலேஸ்வரன், பேத்தி மரகத மீனாட்சிராஜா, தென்னிந்திய புத்தகப்
பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கருத்துரையாற்றினார். இதில்,
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம்
பேசியது: ஈரோடு பெரியார் தோன்றிய மண். பகுத்தறிவு இயக்கம்
ஆரம்பித்த பூமி. மக்கள் சுயமரியாதை இழந்த நேரத்தில், அவர்களின்
உணர்வுகளைத் தட்டியெழுப்பி, சுயமரியாதைக்கு வித்திட்டது ஈரோடுதான்.
அதனால்தான் இங்கு நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு மக்கள் மிகப்பெரிய
ஆதரவை அளித்துள்ளனர். பல ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றாலும்,
இந்த அளவிற்கு வெற்றிகரமாக நடைபெற பலதரப்பினரின் ஊக்குவிப்புதான் காரணம்.
இவ்விழாவில் தியாகத்தின் உருவமான வஉசி-யின் குடும்பத்தார்
வந்திருக்கிறார்கள். சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதுபோல் புத்தகத்
திருவிழாவின் நிறைவு விழா கொண்டாடப்படுவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
இரு தினங்களுக்கு முன் வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளையரை
வெளியேற்ற பல்லாயிரக்கணக்கானோர் சிறை சென்றார்கள். இச்சமயத்தில் அறியாமையை
வெளியேற்றும் புத்தகங்களுக்குத் திருவிழா நடத்தப்பட்டுள்ளது மிகவும்
பாராட்டுக்குரியது. ஒரு புத்தகத்தை எழுதவும், அதை வெளியிடவும்,
மக்களிடம் கொண்டு சேர்க்கவும் எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் மிகுந்த
சிரமப்படுகிறார்கள். அப்புத்தகங்களுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவுதான்
அவர்களை மீண்டும் புத்தகம் வெளியிட ஊக்குவிக்கும். எனவே மக்கள் அதிக
புத்தகங்களைப் படித்து அவர்களுக்கு ஆதரவளிப்பதுடன், தங்களது
சிந்தனைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஈரோடு, நாமக்கல்
பகுதிகளில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. லட்சக்கணக்கான
மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். இதுபோல் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் கல்வி மேம்பட வேண்டும்.
புதுவையில்தான் பாரதமாதா சிலை உருவாக்கப்பட்டது. பல சுதந்திரப் போராட்டத்
தியாகிகள் அங்கிருந்தவாறே நாட்டின் சுதந்திரத்திற்குப் போராடியுள்ளனர்.
எனவே வஉசி-யின் குடும்பத்தார் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளின்
வாரிசுகளை புதுவைக்கும் அழைத்துச் சென்று கெüரவிக்க விரும்புகிறோம்
என்றார் வைத்திலிங்கம். மக்கள் சிந்தனைப் பேரவைச் செயலர் க.நா.பாலன் நன்றி கூறினார். புத்தகத் திருவிழாவில் அரங்குகள் அமைத்த புத்தக நிறுவனத்தார் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Empty Re: புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம்

Post by ரபீக் Wed Aug 11, 2010 10:34 am

பலவற்றையும் படித்தால்தான் பண்டிதன் ஆகமுடியும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum