புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 I_vote_lcapஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 I_voting_barஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 I_vote_lcapஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 I_voting_barஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 I_vote_lcapஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 I_voting_barஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Tue Aug 10, 2010 1:19 pm

First topic message reminder :

நன்றி:http://mathavaraj.blogspot.com/2010/08/blog-post_08.html
மொத்த தமிழ்ச்சினிமாவையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கி வைக்கும் ஏகபோகமாக தன் நிறுவனம் உருவெடுக்க வேண்டும் என்கிற வெறியும், வேட்கையும் கொண்டவராக கலாநிதி மாறன் சமீப காலங்களில் தனக்கான அரசியல் அதிகாரம் பயன்படுத்தி முன்னுக்கு வந்திருக்கிறார். சினிமா, அதன் கலை அழகு, வடிவம், மொழி எல்லாவற்றையும் சிதைத்து, தன் பண வேட்டைக்கான களமாக அதனை மாற்றிடும் அகோரப்பசியோடு சன்நிறுவனம் இன்று காட்சியளிக்கிறது.
அபூர்வ ராகங்களில் துளிர்த்து, முள்ளும் மலரில் வளர்ந்த ரஜினிகாந்த் என்னும் நடிகர், தான் வந்த பாதையை மறந்து இன்று திசைமாறி எங்கோ போய்விட்டார். தன் ரசிகர்களின் பிரியத்தை, அவர்கள் மீது தான் இதுகாறும் உருவாக்கியிருந்த செல்வாக்கினை காசாக்கிப் பார்க்கும் நோக்கம் தவிர வேறேதும் அவரிடம் இப்போது தென்படவில்லை.
இளையராஜாவுக்கு எதிராக அல்லது மாற்றாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டாலும், தன் திறமையின் மூலம் இசையுலகில் தனக்கென்று அல்லது தனக்குரிய ஒரு இடத்தை அடைந்தவர்தான் ஏ.ஆர்.ரகுமான். நல்ல படங்கள் என்றால், தன் சன்மானத்தை பொருட்படுத்தாமல் இசையமைக்கும் இளையராஜா போன்றோரின் முன்னால், பெரும் நிறுவனங்களின் பேனர்களில் மட்டுமே தன் இசையை வெளிக்காட்டும் ஏ.ஆர்.ரகுமானின் ‘சர்வதேசக் கலைத்தாகம்’ யாருக்கானது எனச் சொல்லத் தேவையில்லை.
இந்த தில்லாலங்கடிகளின் கூட்டுத் தொழிலில் (உழைப்பில் என்று சத்தியமாய்ச் சொல்ல மாட்டேன்), உருவாக்கிய சினிமாவான எந்திரன் குறித்து எகிறி எகிறிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எந்திரன் படத்தின் ஸ்டில்ஸ்களுக்கு முன்னால், இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் அற்பமானதுதான் தினகரன் பத்திரிகைக்கும் சன் டி.வி குழுமத்திற்கும்.
“இந்தியச் சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம் இது” என்கிறார் ரஜினி. சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான்! “டெஃபனிட்டா, கலாநிதி மாறன் இந்தியாவில நம்பர் ஒன் இண்டஸ்டிரியலிஸ்டா வருவார்” என்று அந்த சூப்பர் ஸ்டார் ஜோஸ்யமும் சொல்கிறார். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற கவிதை வரிகளை எழுதிய மகாகவி பாரதியின் கண்கள்கூட அப்படி மின்னியிருக்காது! என்ன ஒரு ஆசை! எப்படி ஒரு கனவு! நோக்கங்களும், லட்சியங்களும் தெளிவாய் இருக்கின்றன. அவர் இப்போது பணம் சம்பாதிக்கும், சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரம், அவ்வளவுதான். வாய்பிளந்து நிற்கும் அவரது ரசிகர்களின் கூட்டம் கைதட்டி ஆரவாரிக்கிறது. அறிவுலகம் தலைகுனிய வேண்டிய இடம் இது.
“இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன்” என்று அதிரடியாய் அறிவிக்கிறார்கள். என்னா தெனாவெட்டு! “சயின்ஸ்னா என்ன? ஃபிக்‌ஷன் என்ன?” என்று யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்கிற தைரியம்தானே இப்படியெல்லாம் பேச வைக்கிறது. “வித்தியாசமான ரஜினியை பார்க்கப் போகிறீர்கள்” என்று நெஞ்சு விம்மிப் போகிறார் ஷங்கர். தமிழ்ச்சினிமா ரசிகர்களை இந்த ‘வித்தியாசம்’ எனும் வார்த்தை சொல்லி எத்தனை காலம், எத்தனை பேர், எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு தடவை ஏமாந்தபோதும், திரும்பவும் ஏமாறத் தயாராய் இருக்கிறார்கள் என்னும் கொழுப்பில்தானே இப்படியெல்லாம் பேச முடிகிறது.
பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என்று கதைக்கிறவர்களுக்கும், வித்தியாசம் என மார்தட்டுபவர்களுக்கும் நடிகர் விவேக் பேசியதைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும். ”ஆமையும் முயலும் கதையினை ஷங்கர் எடுக்க வேண்டும். அதனை ஜெர்மனியில் உள்ள பெரும் மைதானத்தை வாடகை எடுத்தோ அல்லது விலைக்கு வாங்கியோ படம் எடுக்க வேண்டும். மேலே நான்கு ஹெலிகாப்டரில் வைத்து அந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும்” என்று அவர் நகைச்சுவையாக பேசியதில் உண்மைகளும் இருக்கின்றன.
எந்திரன் படப்பிடிப்பின் கடைசி நாளன்று பெரிய கேக் வெட்டி விழா. அதுகுறித்துச் செய்திகள். அப்புறம் அதன் பாடல்கள் வெளியீட்டு விழா. அது குறித்து தொலைக் காட்சியில் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள். அதன் வெளியீடு நடப்பதற்குள், என்ன திகிடுதத்தங்கள் எல்லாம் நடக்க இருக்கிறதோ! அதையெல்லாம் அவரவர் புத்திசாலித்தனத்துக்கேற்ப கலர் கலராய் வாந்தியெடுத்து, பிரமாதப்படுத்துவதற்கு என்று பலரும் இருக்கிறார்கள். சமூகப் பார்வையும், சினிமா குறித்து அக்கறையும் அற்ற இந்த ஜென்மங்களை என்ன செய்வது?
“ஜஸ்ட் 150 கோடி செலவு செய்து..” என்று பெருமிதமாய்ப் பேசுகிறார் ரஜினிகாந்த். நாளைய வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்று அறியாத பெரும் கூட்டம் அதைக்கேட்டு இறுமாந்து போகிறது. இந்த “ஜஸ்ட்டில்” என்னவெல்லாம் இந்த தேசத்தில் செய்ய முடியும் என நினைத்தால் கொதிப்பாய் இருக்கிறது. காசு கொடுத்துப் பார்க்கிற யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாமல், ஒரு படம் எடுத்து, அதற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற இந்த வியாபார உத்திகளின் மீது நமது கோபத்தைக் காட்டாமல், வேடிக்கைப் பார்க்கிற அல்லது ரசிக்கிற மனோபாவமே சமூகக் கேடு. அதைத் தகர்க்கிற மூர்க்கம் பொறுப்புள்ள பிரஜைக்கு வந்தாக வேண்டும்.
எத்தனை எத்தனையோ கனவுகளுடன், சமூக மாற்றம் குறித்த வேட்கையுடன் இங்கு பல இளைஞர்கள் சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தனது பிரம்மாண்ட கால் சுண்டு விரலால் நசுக்கிப் போட்டு விடும் இந்த ‘எந்திரன்’கள். சினிமா மொழி அறிந்த, அதன் நுட்பங்கள் தெரிந்த, நல்ல கதை சொல்லத் தெரிந்த புதிய இயக்குனர்கள் இப்போது முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தனது சூறாவளி வேகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடும் இந்த ‘எந்திரன்’கள். யதார்த்தங்களை விட்டு சினிமாவை வெற்று பிம்பங்கள் நிறைந்ததாக, மாய உலகமாக, கைக்கு எட்டாத பிரதேசமாக தள்ளி நிறுத்தும் காரியமே ‘எந்திரனின்’ வருகையாய் இருக்கப் போகிறது. கதைகளுக்குத்தான் தொழில்நுட்பமே தவிர, தொழில்நுட்பத்திற்கு கதைகள் அல்ல! பணத்தை மட்டுமே முன்னிறுத்தும் எதுவும், சமூகத்திற்கு உருப்படியாய் எதையும் தந்துவிட முடியாது.
சினிமா என்பது இருபதாம் நூற்றாண்டு தந்த அற்புத கலைச்சாதனம். மகத்தான கலைஞர்கள் அதனைக் கையாண்டு சமூகத்தோடு எவ்வளவோ உரையாடல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். காலங்களைத் தாண்டி அவர்கள் தந்த காட்சிகள் இன்றும் உயிர்த்துடிப்போடு வலம் வருகின்றன. அப்படிப்பட்டவர்களை களங்கப்படுத்துவதோடு, சினிமா என்னும் அரிய பொக்கிஷத்தை கபளீகரமாக்க முயற்சிக்கும் ’எந்திரன்’கள் குறித்து எச்சரிக்கை தேவைப்படுகிறது.

”இது மக்களுக்கான சினிமா அல்ல, வியாபாரிகளுக்கான சினிமா!”




உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 4:34 pm

எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 678642 எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 678642 எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 678642




எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Power-Star-Srinivasan
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Tue Aug 10, 2010 5:17 pm

ஷங்கர் இந்த சமுதாயத்துக்கு என்ன சொல்லப்போரானுன்னு, படம் ரிலீஸ் ஆனா தெரிஞ்சிடப்போகுது.. சமீப காலத்து சன் பிக்சர்ஸ் படங்களெல்லாம் மண்ணைகவ்வினதுக்கு காரணம் என்னன்னு பார்த்தோம்னா... படத்துல "சரக்கு" இல்லைங்கிறது போக, முக்கியமா எரிச்சலை ஏற்படுத்திய அளவுக்கதிகமான விளம்பரங்கள்தான்.. சன் குரூப்ல இருக்குற எல்லா
சேனல்லையும் அடுத்தடுத்து ஒளிபரப்பிய ட்ரெயிலர
பார்க்கிறப்போ ஏதோ " டப்பா" படத்தைதான் ஓடவைக்க முயற்சி செய்றாங்கன்னு எல்லோரையுமே நினைக்க வைத்தது. (அதன்படியே ஆனது வேற விஷயம்). அடுத்தடுத்த தோல்விகளால விஜயோட இமேஜ் படு டேமேஜ் ஆகியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. (உம: இன்னைக்கு ஈகரையிலகூட விஜயை போட்டு புரட்டி எடுத்திட்டாங்க ) ஒருவேளை... "பாபா" அளவுக்கு எந்திரன் வெற்றி (?) அடைந்தால் ரஜினியோட கடைசிப்படம் இதுவாகத்தான் இருக்கும். ஏனெனில் ரஜினியும் கிட்டத்தட்ட விஜயோட லெவெலுக்கு(!) வந்திடுவார். படம் வெற்றியடைந்தாலும் இல்லைஎன்றாலும் சன் பிக்சர்ச்க்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஏற்கனவே ஏகப்பட்ட தொகைக்கு விநியோக உரிமை ஆகியிருக்கிறது. நஷ்டம் எல்லாம் தமிழ் சினிமாவிற்கும், ரஜினிக்கும்தான். எந்திரனை தியேட்டரில் ஓட வைப்பதும், தியேட்டருக்கு தியேட்டர் "ஓட" வைப்பதும கலாநிதி மாறன் கையில்தான் இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 10, 2010 5:33 pm

பாடல்களை கேக்கும்போதே தெரிகிறது எந்திரனின் லட்சணம்.அனேகமா இந்த படம் வெளி வந்ததும் ரஜினி நிரந்தரமா இமயமலைக்கு போய்டுவார்.



எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Uஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Dஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Aஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Yஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Aஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Sஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Uஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Dஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Hஎந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 5:35 pm

உதயசுதா wrote:பாடல்களை கேக்கும்போதே தெரிகிறது எந்திரனின் லட்சணம்.அனேகமா இந்த படம் வெளி வந்ததும் ரஜினி நிரந்தரமா இமயமலைக்கு போய்டுவார்.

ஏன் அக்கா ....? ஏன் அக்கா ....? ஏன் அக்கா ....? ஏன் அக்கா ....? எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 440806 எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 440806




எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 5:36 pm

உதயசுதா wrote:பாடல்களை கேக்கும்போதே தெரிகிறது எந்திரனின் லட்சணம்.அனேகமா இந்த படம் வெளி வந்ததும் ரஜினி நிரந்தரமா இமயமலைக்கு போய்டுவார்.

உங்களுக்கு ஏன் ரஜினி மேல இவ்வளவு பொறாமை ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 5:37 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:பாடல்களை கேக்கும்போதே தெரிகிறது எந்திரனின் லட்சணம்.அனேகமா இந்த படம் வெளி வந்ததும் ரஜினி நிரந்தரமா இமயமலைக்கு போய்டுவார்.

உங்களுக்கு ஏன் ரஜினி மேல இவ்வளவு பொறாமை ?

எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 359383 எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 359383 எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 359383




எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Power-Star-Srinivasan
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Tue Aug 10, 2010 5:38 pm

உதயசுதா wrote:பாடல்களை கேக்கும்போதே தெரிகிறது எந்திரனின் லட்சணம்.அனேகமா இந்த படம் வெளி வந்ததும் ரஜினி நிரந்தரமா இமயமலைக்கு போய்டுவார்.

நடந்தாலும் நடக்கலாம்.. ஏன்னா அம்புட்டு "பில்டப்" பண்ணிவச்சிருக்கானுங்க.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Aug 10, 2010 5:40 pm

உதயசுதா wrote:பாடல்களை கேக்கும்போதே தெரிகிறது எந்திரனின் லட்சணம்.அனேகமா இந்த படம் வெளி வந்ததும் ரஜினி நிரந்தரமா இமயமலைக்கு போய்டுவார்.

உங்க கனவு பலிகாது .இந்த படம் இந்திய திரைபட சாதனைகலை முறியடிக்கும்
ராம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 5:43 pm

rarara wrote:
உதயசுதா wrote:பாடல்களை கேக்கும்போதே தெரிகிறது எந்திரனின் லட்சணம்.அனேகமா இந்த படம் வெளி வந்ததும் ரஜினி நிரந்தரமா இமயமலைக்கு போய்டுவார்.

உங்க கனவு பலிகாது .இந்த படம் இந்திய திரைபட சாதனைகலை முறியடிக்கும்
ராம்

எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 359383 எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 359383




எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 2 Power-Star-Srinivasan
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Aug 10, 2010 7:07 pm

உதயசுதா wrote:பாடல்களை கேக்கும்போதே தெரிகிறது எந்திரனின் லட்சணம்.அனேகமா இந்த படம் வெளி வந்ததும் ரஜினி நிரந்தரமா இமயமலைக்கு போய்டுவார்.
அப்ப பாபா கவுன்ட் டவுன் தொடங்கலாம் 1 2 பூர் ....... சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக