ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம்

2 posters

Go down

நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Empty நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம்

Post by ரபீக் Tue Aug 10, 2010 11:50 am

உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட கண் பார்வையற்றோரை உடனே விடுதலை செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு சி மற்றும் டி பிரிவுகளில் பார்வையற்றவர்களுக்கு, அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்; பார்வைற்றோருக்கு நிரந்தரக் குடியிருப்பு வீடுகள் வழங்கிட வேண்டும்; தமிழக அரசால் வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ.400 என்பதை, ரூ.1,000 ஆக உயர்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, சுயதொழில் செய்யும் பார்வையற்றோர் சங்கத்தினர், கடந்த 5ம் தேதி முதல் சேப்பாக்கத்தில் உண்ணாநிலை அறப்போரை தொடங்கினர்.

ஒருநாள் மட்டுமே போராட்டம் நடத்திட அவர்களுக்கு அனுமதி வழங்கிய காவல்துறையினர் அன்று மாலையில், அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றனர். ஆனால், பார்வையற்றோர்கள், தங்கள் உண்ணாநிலை அறப்போரைக் கைவிட மறுத்து, ஆயிரம் விளக்கில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் உண்ணாநிலை அறப்போரைத் தொடர்ந்தனர்.

இரவு 11 மணிக்கு அங்கே வந்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்வதாக அறிவித்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றி உள்ளனர். புழல் சிறையில் அவர்களை அடைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, நள்ளிரவில், சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக எல்லோரையும் நடுரோட்டில் இறக்கி விட்டு, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட வேண்டும் என்று மிரட்டி அனுப்பியுள்ளனர்.

இந்தத் தகவலை அறிந்த நான், தென்சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் வேளச்சேரி மணிமாறன் அவர்களை அங்கு அனுப்பி வைத்தேன். உண்ணாநிலை மேற்கொண்டு இருந்த தோழர்களுடன் தொலைபேசியில் பேசினேன். அவர்களை, அவர்களது சங்க அலுவலகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தோம்.

நேற்று (8ம் தேதி) காலை அவர்கள் முதல்வரின் இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்தை நோக்கிச் செல்ல முனைந்தனர். அங்கே அவர்களைக் கைது செய்து, கோபாலபுரம், பிருந்தா ஆரம்பப்பள்ளியில் வைத்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், அவர்களை எங்கோ கொண்டு சென்றுள்ளனர்.

கண் பார்வையற்றோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதுடன், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும்; அரசு அலுவலகங்களில் உதவியாளர், வரவேற்பாளர், தொலைபேசி இயக்குபவர், தகவல் பரிமாறுபவர், பை கட்டுபவர், பிட்டர், நாற்காலி பின்னுபவர், லிப்ட் ஆபரேட்டர்கள் போன்ற பணி வாய்ப்புகளைப் பார்வை அற்றோருக்கு வழங்க வேண்டும் என்றும் மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

எதிர்பார்க்கும் வகையில் அதிமுக கூட்டணி அமையும்:

இந் நிலையில் குன்னூரில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ, தமிழக அரசு சார்பில் கொங்கு சீமையான கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. அதில் தமிழ் அறிஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை. கருணாநிதி குடும்பத்தினர்தான் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் கேரள அரசு இழுத்தடிக்கிறது. இந்த வழக்கில் தமிழகம் சார்பில் வாதாடிய வக்கீல் 33 முறை வாய்தா வாங்கியுள்ளார். இது கேரள அரசுக்கு துணை போவது போல் உள்ளது.

தமிழகத்தில் சரியான முறையில் ஆட்சி நடைபெறவில்லை. தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அதிமுக கூட்டணி அமையும். எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.

நன்றி :தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Empty Re: நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம்

Post by நவீன் Tue Aug 10, 2010 11:51 am

நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் 502589 நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் 502589 நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் 502589 நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடுரோட்டில் தூங்கி, சுட்டெரிக்கும் வெயிலிலும் போராடும் வைகோ!
» கை விடப்பட்ட கப்பல்.
» மெக்சிகோவில் பாலத்தில் தொங்க விடப்பட்ட தலையில்லா உடல்கள்
» வானத்தில் பறக்க விடப்பட்ட சிறுமி - மிகவும் வேடிக்கையான வீடியோ
» தனித்து விடப்பட்ட நிலையில் நேற்று செருப்பு கண்டுபிடிப்பு -ப்ரியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum