ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பழமொழிகள் பற்றி அலசுவோம்

+4
balakarthik
நவீன்
Halfmoon
கா.ந.கல்யாணசுந்தரம்
8 posters

Go down

சில பழமொழிகள் பற்றி அலசுவோம் Empty சில பழமொழிகள் பற்றி அலசுவோம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 10, 2010 11:22 am

சில பழமொழிகள் பற்றி அலசுவோம்:



1. எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை.

குதிர் என்பது நெல்லைச் சேமிப்பதற்காகக் களிமண்ணால் செய்த பெரிய கூடு. மரப்பத்தாயம் போன்றது. ஆனால் உருளை வடிவம். அதனுள் ஓர் ஆள் இறங்கி நிற்க இயலும்.

கடன் தந்தவர் வருவதைக் கண்ட ஒருவர், தாம் ஒளிந்திருப்பதைச் சொல்ல வேண்டாம் என்று தம்முடைய குழந்தையிடம் எச்சரித்துவிட்டுக் குதிருக்குள் பதுங்கிக் கொண்டாராம். அந்தப் பிள்ளையோ, வந்தவர் எதுவும் கேட்பதற்கு முன்பே புத்திசாலித்தனமாய் பேசுவதாய் எண்ணி, "எங்கப்பா குதிருக்குள்ளே இல்லே!" என்றதாம். இதைக் கேட்டவுடனே உண்மையைப் புரிந்து கொண்டுவிட்டார் வந்தவர்.

ஒரு விஷயத்தைச் சாமர்த்தியமாக மறைப்பதாய்க் கருதித் தன்னையறியாமலே போட்டு உடைத்துவிடுகிற அப்பாவித்தனத்தைக் குறிக்க இப்பழமொழி உதவுகிறது.

2. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

16, 17ஆம் நூற்றாண்டுகளில் செம்பு, இரும்பு முதலிய உலோகங்களை விலையுயர்ந்த பொன்னாக மாற்றுவதற்கு மேல் நாட்டு அறிவியலாளர் சிலர் முயன்றனர். அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஏல்க்கெமிட்ஸ் (alchemists) என்று பெயர். பாதரசம், பலவகை அமிலங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி ஏராளச் சோதனைகளை மேற்கொண்ட அவர்கள், குறிக்கோளை எட்டவில்லையாயினும், வேதியியல் என்னும் அறிவியல் துறை தோன்றவும், வளரவும் காரணகர்த்தா ஆயினர்.

தமிழகத்திலும் அந்த முயற்சி நடைபெற்றது. அதில் ஈடுபட்டவர்கள் ரசவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். பொன் செய்யும் மருந்தை கண்டுபிடிக்கமுடியும் என அவர்கள் நம்பியது போலவே துறவி தாயுமானவரும் (அவர் ரசவாதியல்ல ஆயினும்) நம்பினார்.

வெந்தழலில் இரதம்வைத்து ஐந்துஉலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்

என்று அவர் பாடியுள்ளார்.

இதன் பொருள் : தழலில் - தீயில். இரதம் வைத்து - இரசம் வைத்து (அதாவது பாதரசம் பயன்படுத்தி). ஐந்து உலோகத்தையும் - ஐம்பொன் எனப்படுகிற செம்பு, இரும்பு, ஈயம், வெள்ளி, (சிறுஅளவில்) தங்கமாகிய ஐந்து உலோகங்களையும். வேதித்து - வேதியியல் முறைப்படிப் பொன்னாக மாற்றி. விற்றுண்ணலாம்- விற்றுச் செல்வம் சேர்க்கலாம்.

சிறிய அளவில் பொன், பெரிய அளவில் மற்ற உலோகங்கள் சேர்த்து எல்லாவற்றையும் தங்கமாக்க எண்ணுவது பேராசை அல்லவா?

ரசவாதிகளை நோக்கி யாரோ ஓர் அறிவாளி கூறிய உபதேசந்தான் இந்தப் பழமொழி.

"பொன் செய்யும் மருந்து தேடிப் படாத பாடுபடுகிறீர்களே! நீங்கள் வெற்றி பெற்றாலும் உங்கள் பேராசை மேன்மேலும் பொன் வேண்டும் என்று தூண்டுமாதலால் மன நிறைவு ஒருக்காலும் ஏற்படாது. போதும் என்ற மனத்தைப் பெறுங்கள். உள்ளதை வைத்துக்கொண்டு திருப்தியாக வாழலாம்" என்ற அவரது புத்திமதி ரசவாதிகளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே எக்காலத்தும் பொருந்துகிற பொன்னுரையாகும்.

சில பழமொழிகள் தவறாக உருமாறிப் பிழைப்பொருள் தருகின்றன. அப்படிப்பட்ட இரண்டைப் பார்ப்போம்.

1. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முயல்பவரே வைத்தியர். அவரை கொலைகாரராகச் சித்திரிக்கிறதே இது! இதன் திருத்தமான வடிவம் எது?

சிலருடைய கருத்து, 'ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்' என்பது. வேரைக் கண்டால் வைத்தியரா?

“ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்பதே சரி.

மூலிகை, மரப்பட்டை, இலை, வேர் முதலியவற்றைச் சித்த மருத்துவர் மருந்தாகப் பயன்படுத்துகிறார். வேரைக் கொன்றவர் என்பது வேரைப் பிடுங்கிப் பயன்படுத்தியவர் என்று பொருள்படும். ஆயிரம் வேரைப் பயன்படுத்தினாலும் அரை வைத்தியர்தான். முழுமையடைவதற்கு மேன்மேலும் புதுப்புது வேர்களைப் பயன்படுத்தவேண்டுமென்று, மருத்துவத்தில் முன்னேற ஊக்குவிக்கிற பழமொழி இது.

வேரைக் கொல்லுதல் என்பது பொருந்துமா என்றால் பொருந்தும். "இளைதாக முள்மரம் கொல்க" என்ற குறளில் 'மரம் கொல்லுதல்' என்ற தொடரைக் காண்கிறோம்.

2. தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்கக் கூடாது.

இதன் சரியான பொருளைக் கண்டறிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் முயன்றிருக்கிறார். ஊருணியொன்றின் கரையில் இருந்த கல்லில், "தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்கக்கூடாது" எனச் செதுக்கியிருந்ததைப் படித்துத் தம் நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பிழைத்தல் என்பதற்குப் பிழை செய்தல், கெடுத்தல் என்பது பழைய பொருள்.தாய்க்குக் கெடுதல் செய்தாலும் தண்ணீரின் தூய்மையைக் கெடுக்கக்கூடாது என்று பழமொழி அறிவுரை கூறுகிறது.

இந்த விவரங்களைத் 'தாயார் கொடுத்த தனம்' என்ற தம் நூலில் கவிஞர் தெரிவித்திருக்கிறார்.

பழமொழியும், சொலவடையும் ஒன்றுதானா? இல்லை என்பார் சிலர். கிண்டல் தொணிக்கும் பழமொழியே சொலவடை என்று கூறுகிற அவர்கள்,

“கழுதை கெட்டால் குட்டிச்சுவர்.“

“துடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம்.”

“அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரம் கருக்கரிவாள்.”

என்று உதாரணங்கள் சொல்வார்கள். ஆனால் இப்படிப்பட்ட பழமொழிகள் மிக மிகக் குறைவு. ஆகையால் அவற்றுக்குத் தனிப்பெயர் தேவையில்லை.

சொலவடை என்பது நெல்லை மாவட்ட வழக்கு, பழமொழி பொதுவழக்கு எனக் கொள்ளலாம்.

மற்ற மொழிகளைவிடத் தமிழில்தான் பெரும்பாலான பழமொழிகள் எதுகை மோனை பெற்றுச் செவிக்கு விருந்தளிக்கின்றன என்பதை எண்ணி நாம் பெருமிதங்கொள்ளலாம்.

(nanri: Nilacharal.com)
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சில பழமொழிகள் பற்றி அலசுவோம் Empty Re: சில பழமொழிகள் பற்றி அலசுவோம்

Post by Halfmoon Tue Aug 10, 2010 11:53 am

சில பழமொழிகள் பற்றி அலசுவோம்:

நல்லா அழுக்கு போற வரைக்கும் "அலசிடீங்க" ரொம்ப நன்றிகன்னா.. ஜாலி ஜாலி
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

சில பழமொழிகள் பற்றி அலசுவோம் Empty Re: சில பழமொழிகள் பற்றி அலசுவோம்

Post by நவீன் Tue Aug 10, 2010 11:57 am

Halfmoon wrote:சில பழமொழிகள் பற்றி அலசுவோம்:

நல்லா அழுக்கு போற வரைக்கும் "அலசிடீங்க" ரொம்ப நன்றிகன்னா.. ஜாலி ஜாலி

சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 359383 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 359383 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 359383 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 359383 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 359383 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 359383 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 359383
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சில பழமொழிகள் பற்றி அலசுவோம் Empty Re: சில பழமொழிகள் பற்றி அலசுவோம்

Post by balakarthik Tue Aug 10, 2010 12:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சில பழமொழிகள் பற்றி அலசுவோம் Empty Re: சில பழமொழிகள் பற்றி அலசுவோம்

Post by சபீர் Tue Aug 10, 2010 12:08 pm

சல பழமொழிகளையும் தந்து அதற்க்கு தகுந்த விளக்கமும் தந்த உங்களுக்கு எனது அன்புப்பாராட்டுக்கள் சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 677196 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 677196 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 677196 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சில பழமொழிகள் பற்றி அலசுவோம் Empty Re: சில பழமொழிகள் பற்றி அலசுவோம்

Post by சரவணன் Tue Aug 10, 2010 12:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சில பழமொழிகள் பற்றி அலசுவோம் Empty Re: சில பழமொழிகள் பற்றி அலசுவோம்

Post by மீனா Tue Aug 10, 2010 12:45 pm

சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 677196 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 677196 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 677196 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 677196 சில பழமொழிகள் பற்றி அலசுவோம் 677196


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

சில பழமொழிகள் பற்றி அலசுவோம் Empty Re: சில பழமொழிகள் பற்றி அலசுவோம்

Post by உமா Tue Aug 10, 2010 1:17 pm

பழ மொழிகளுடன் விளக்கமும் அருமை!
மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சில பழமொழிகள் பற்றி அலசுவோம் Empty Re: சில பழமொழிகள் பற்றி அலசுவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொது அறிவு- அலசுவோம் வாருங்கள்
» ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!
» கட்சித் தலைவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்ன கருத்து - கலைஞரைப் பற்றி - சூப்பர்
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
» பழமொழிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum