Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பருவமானவர்கள்
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
பருவமானவர்கள்
First topic message reminder :
----------------------------------------------------------------------
பருவமானவர்கள்
மூலம்: பெக்கி மோகன் Ph.D
தமிழில்: க. நடனசபாபதி
தேசிய கலை இலக்கியப் பேரவை
--------------------------------------------------------------------------
பருவமானவர்கள்: (ADOLESCENCE)
பருவமானவர்கள் பற்றிய புத்தகம் ஒன்று இரண்டாம் தசாப்த வயதை எட்டிய பிள்ளைகளுக்குத் தேவை தானா?
பருவமானவர்கள் பற்றிய அந்நிய தேசத்து புத்தகமொன்றை மேலெழுந்த வாரியாக வாசிக்கின்ற இரண்டாம் தசாப்த வயதை நோக்கி நடைபோடும் பிள்ளைகள் சுவாரசியமானதுதான் என்று கூறுவர். ஆனால் இவை எமக்குப் பழக்கப்படாதவை. இதைப்பற்றி நாம் ஏன் இங்கு கவலைப்பட வேண்டும்?
டில்லியில் வாழும் பெண்ணொருத்தி இதனை இப்படிக் கூறினாள். இரண்டாம் தசாப்த வயதை நோக்கி நடைபோடும் பிறநாட்டவருக்கு இவையெல்லாம் பிரச்சினைகளாக இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் தாம் விரும்பியபடி எதனையும் செய்யலாம். ஆனால் எங்களைப் பொறுத்தமட்டில் எங்கள் பெற்றோர் எம்மை எதனையும் செய்ய விடுவதில்லை. இது எங்கள் பிரச்சினை. பருவமான இலங்கையர்கள் தாங்கள் அடைந்து வரும் மாற்றங்களைப் பற்றிய சாதாரணமாக தகவல்களைக் கூட அறியாது பருவமாற்றம் பற்றி கற்பனா உலகில் உலாவருகின்றனர். இந்தக் கற்பனைகள் எல்லாம் இரண்டாம் தசாத்த வயதை நோக்கி நடைபோடுவோரை நம்பிக்கை இழந்த நிலைக்கும் அழகீனமான நிலைக்கும் கவலை தோய்ந்த நிலைக்கும் இட்டுச் செல்கிறது. பிற நாடுகளில் வாழும் பருவமானவர்களின் கற்பனைகளோ பெரிதும் மாறுபட்டவை.
பருவமானவர்கள் என்றால் என்ன?
சிறுபிள்ளைப் பிராயத்திலிருந்து பிள்ளையைப் பெற்றுத்தரக்கூடிய நிலையை வாழ்க்கையில் அடையும் பருவமாகும்.
இதன் படி பெருமளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் ரீதியானதும் உளரீதியானதுமான மாற்றங்கள் எம்மை புதிய உறவுகளை ஏற்று பொறுப்புடையோராக ஆக்குகிறது.
இப்புத்தகம் எப்படி உதவ எண்ணியுள்ளது?
முதலாவதாக, பருவமாகின்ற போது உடல் தோற்ற ரீதியான மாற்றங்களைப் பற்றிய சாதாரண தகவல்களை தருகின்றோம். இதன் காரணமாக பாதுகாப்பு இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோமோ என்ற அச்சம் அகலுகிறது. எம்மைப் போலவே அநேகர் உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இரண்டாவதாக, உளரீதியான மாற்றத்தால் உலக வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது. அனுபவம் நல்லதோர் ஆசிரியன். ஏற்படும் தோல்விகள் பயனுள்ள பாடங்களைத் தருகின்றன. சில சம்பவங்கள் உங்களுக்கு கவலையைத் தரும். இப்புத்தகம் உங்களுக்கு நண்பனாகச் செயல்பட்டு உங்களை வழிநடத்திச் செல்லும்.
----------------------------------------------------------------------
பருவமானவர்கள்
மூலம்: பெக்கி மோகன் Ph.D
தமிழில்: க. நடனசபாபதி
தேசிய கலை இலக்கியப் பேரவை
--------------------------------------------------------------------------
பருவமானவர்கள்: (ADOLESCENCE)
பருவமானவர்கள் பற்றிய புத்தகம் ஒன்று இரண்டாம் தசாப்த வயதை எட்டிய பிள்ளைகளுக்குத் தேவை தானா?
பருவமானவர்கள் பற்றிய அந்நிய தேசத்து புத்தகமொன்றை மேலெழுந்த வாரியாக வாசிக்கின்ற இரண்டாம் தசாப்த வயதை நோக்கி நடைபோடும் பிள்ளைகள் சுவாரசியமானதுதான் என்று கூறுவர். ஆனால் இவை எமக்குப் பழக்கப்படாதவை. இதைப்பற்றி நாம் ஏன் இங்கு கவலைப்பட வேண்டும்?
டில்லியில் வாழும் பெண்ணொருத்தி இதனை இப்படிக் கூறினாள். இரண்டாம் தசாப்த வயதை நோக்கி நடைபோடும் பிறநாட்டவருக்கு இவையெல்லாம் பிரச்சினைகளாக இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் தாம் விரும்பியபடி எதனையும் செய்யலாம். ஆனால் எங்களைப் பொறுத்தமட்டில் எங்கள் பெற்றோர் எம்மை எதனையும் செய்ய விடுவதில்லை. இது எங்கள் பிரச்சினை. பருவமான இலங்கையர்கள் தாங்கள் அடைந்து வரும் மாற்றங்களைப் பற்றிய சாதாரணமாக தகவல்களைக் கூட அறியாது பருவமாற்றம் பற்றி கற்பனா உலகில் உலாவருகின்றனர். இந்தக் கற்பனைகள் எல்லாம் இரண்டாம் தசாத்த வயதை நோக்கி நடைபோடுவோரை நம்பிக்கை இழந்த நிலைக்கும் அழகீனமான நிலைக்கும் கவலை தோய்ந்த நிலைக்கும் இட்டுச் செல்கிறது. பிற நாடுகளில் வாழும் பருவமானவர்களின் கற்பனைகளோ பெரிதும் மாறுபட்டவை.
பருவமானவர்கள் என்றால் என்ன?
சிறுபிள்ளைப் பிராயத்திலிருந்து பிள்ளையைப் பெற்றுத்தரக்கூடிய நிலையை வாழ்க்கையில் அடையும் பருவமாகும்.
இதன் படி பெருமளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் ரீதியானதும் உளரீதியானதுமான மாற்றங்கள் எம்மை புதிய உறவுகளை ஏற்று பொறுப்புடையோராக ஆக்குகிறது.
இப்புத்தகம் எப்படி உதவ எண்ணியுள்ளது?
முதலாவதாக, பருவமாகின்ற போது உடல் தோற்ற ரீதியான மாற்றங்களைப் பற்றிய சாதாரண தகவல்களை தருகின்றோம். இதன் காரணமாக பாதுகாப்பு இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோமோ என்ற அச்சம் அகலுகிறது. எம்மைப் போலவே அநேகர் உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இரண்டாவதாக, உளரீதியான மாற்றத்தால் உலக வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது. அனுபவம் நல்லதோர் ஆசிரியன். ஏற்படும் தோல்விகள் பயனுள்ள பாடங்களைத் தருகின்றன. சில சம்பவங்கள் உங்களுக்கு கவலையைத் தரும். இப்புத்தகம் உங்களுக்கு நண்பனாகச் செயல்பட்டு உங்களை வழிநடத்திச் செல்லும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பருவமானவர்கள்
சுயமாய் விந்து வெளியேற்றுதல் (MASTURBATION)
சுயமாய் விந்து வெளியேற்றல் என்றால் என்ன?
தமது பிறப்புறுப்பைத் தாமே தூண்டி உணர்ச்சியின் உச்சக் கட்டத்தை அடைந்து பாலியல் பதட்டத்தை தணிக்கின்றனர். அநேக பையன்கள் ஓரளவுக்குச் சுயமாகவே விந்து வெளியேற்றம் செய்கின்றனர். பெண்களும் கூடத் தம் பிறப்புறுப்போடு இப்படித்தான் செய்கின்றனர்.
பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்றால் என்ன?
பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்பது ஆணுக்கு விந்து வெளியே பாயும் கட்டம். இன்பத்தை அடைந்துவிடத் துடிக்கும் நிலை. தவறுதலாக விந்தை வெளியேற்றி விட்டால் அடைய வேண்டிய பாலியல் நிலைகளை அடைய இயலாது போய்விடுவர். ஆகவே விந்து வெளியேற்றம் என்பது பாலியல் உறவின் உச்சக்கட்டம் அடைந்த நிலை ஆகாது.
இது போலவே பெண்களின் பாலியல் உறவின் உச்சக் கட்டம் என்பது யோனித் துவாரத்தசைகள் சுருக்கம் அடைந்து சுழற்சியுற்று இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. பெண்களுக்கு யோனியின் உட்புறத்தில் உணர்ச்சித் தூண்டல்கள் இருப்பதில்லை. யோனித் துவார வாயிலுள்ள சவ்வுதான் உணர்வின் உச்சக் கட்டத்தை அடைகிறது. (இதுவே ஆணின் பாலியல் புற உறுப்புப் போல உள்ளது. ஆனால் மிகவும் சிறியது)
ஆகவே சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்ல
சாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை.
இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலியல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விரக்தியை வெளிப்படுத்தும் ஓர் அம்சமே. இது பாலியல் பிரச்சினை என்று கொள்ள இயலாது. விருப்பம் இல்லாத ஆசிரியர் ஒருவரோடு பழகுகின்ற நிலையே. விரைவில் பிள்ளைகள் சுயமாக விந்தை வெளியேற்றுவது நல்லதோர் உணர்வைத் தருகிறது என்றும் சலிப்பு ஏற்படுவதை நீக்கும் நிவாரணி ஒன்று என்றும் கருதுகிறார்கள். பலமாதங்களுக்கு இதனைத் தொடராதே இருப்பர்.
ஏன் பெற்றோர் சுயமாக விந்தை வெளியேற்றுவதைத் தவறு என்கிறார்கள்?
பிள்ளை ஓமோன்களால் வழி நடத்திச் செல்லும் போது பெற்றோர்களால் தம்பிள்ளைகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை. பிள்ளைகளில் பெரியமாற்றம் ஏற்படுகிறது. பிள்ளை மாற்றம் காரணமாக பருவமாகின்றபோது பாலியல் உந்தல்களுக்கு ஆட்பட்டு விடக்கூடாதே என்று நினைத்து பெற்றோர்கள் பிள்ளைகளை அடக்கி ஆள முயலுகிறார்கள். எல்லாப் பெற்றோர்களுக்குமே இப்படிப்பட்ட போக்கு இருப்பதில்லை. பிள்ளைகளின் விந்து வெளியேற்றும் போக்கு பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை.
மற்றது பெற்றோரின் பாலியல் வேட்கை தணிந்து வரும்பொழுது பிள்ளைகள் பருவமாகியவர்கள் விந்து வெளியேற்ற ஆரம்பிக்கின்றார்கள். பருவம் ஆனவர்களுக்கு பாலியல் தாகம் தம்மைப் போலக் குறைவாக இல்லையே என்று பெற்றோர் நினைக்கிறார்கள்.
வருத்தமான சம்பவம் அல்லது விஷயம் என்னவென்றால், பாலியல் உந்தல்கள் வெட்கப்படத்தக்கவை என்றும் தூய்மையற்ற செயல் என்றும் கருத்து புகுத்தப்பட்டுள்ளதால் பருவம் ஆனவர்களின் பாலியல் செயல்பாடு கட்டுப்படுத்தப்படுகிறது.
சுயமாக விந்தை வெளியேற்றுவது பையன்களை பலமற்றவர்களாக்கிவிடும் என்று கூறுகிறார்களே!
விந்தை வெளியேற்றுவது பையன்களைப் பலமற்றவர்கள் ஆக்கிவிடாது. ஆனால் விந்து வெளியேறிய பின் களைப்பு தோன்றுகிறது. எந்த உடற்பயிற்சிக்குப் பிறகும் இது தானே நடப்பது. களைப்புத்தன்மை தற்காலிகமானதே. சுயமாய் விந்து வெளியேற்றுவதனால் வளர்ச்சி குன்றிவிடாது. ஆணுறுப்பு சிறுத்துவிடாது. சுயமாக விந்து வெளியேற்றுவது பாலியல் உந்தலின் ஒரு அம்சமே. இதனை ஏற்படுத்துவது அன்ட்றோஜன் என்னும் ஓமோனின் செயல்பாடே. இதுவே வளர்ச்சிக்கும் பாலியல் வேட்கைக்கும் காரணமாகும்.
பாலியல் உறவுக்குப் பிறகு மனிதர் சிறிது நேரம் உறங்க விரும்புகிறார்கள். அதுபோலவே சுயமாக விந்தை வெளியேற்றியபின் படுத்துறங்க விரும்புகிறார்கள். பெண்களும் பாலுறவுக்குப் பின் படுத்திருந்தால் யோனிக்குள் புகுந்த விந்து வெளியில் சிந்திப் போகாது. அவர்களுக்கும் பாலுறவுக்குப் பிறகு சற்று களைப்புத் தோன்றும். இத்தகைய களைப்புத் தன்மைதான் கருப்பம் தரிக்க உதவி புரிகிறது.
விந்து வெளியேறியதும் ஓய்வு கொண்டால் தான் மறுபடியும் ஆண் உறுப்பு புடைத்தெழும் என்பதில்லை. அடுத்த புடைத்தெழும் நிகழ்வு சில நிமிட நேரங்களுக்குள் அல்லது சில மணி நேரங்களுக்குள் ஏற்பட்டு விடும். இது பாலுணர்வு அற்ற நிலைக்குக் கொண்டு சென்று விடும் என்பதும் இல்லை. முழுநாளும் எந்திரங்களைப்போல இதைத்தான் செய்துகொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு வேறு பல வேலைகளும் உண்டு.
அநேக விளையாட்டு வீரர்கள் பெரிய விளையாட்டுப் போட்டிக்குமுன் பாலியல் உறவில் ஈடுபடக் கூடாது என்று நினைப்பதேன்?
அவர்கள் பாலியல் உறவுகொள்வதையோ சுயமாகவோ விந்து வெளியேறுவதையோ விரும்புவதில்லை. இதனால் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நன்மை இருக்கிறது. பாலியல் உறவில் ஈடுபடவில்லையே என்ற ஆத்திரத்தில் ஆவேசமாக விளையாட இடமுண்டு. இன்பம் துய்த்த சந்தோசத்தோடு விளையாடச் சென்றால் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.
சுய வெளியேற்றத்தின் பயனால் விந்தின் தொகை குறைந்துவிடுமா?
ஒன்றன் பின் ஒன்றாகப் பலமுறை வெளியேறினால் தொகை குறையக் கூடும். சில தினங்களுக்கு தடிப்பாக இருக்கும். வெளியேற்றப்படாதிருந்தால் இது எல்லா வெளியேற்றங்களுக்கும் பொருந்தும். சுயமாக வெளியேற்றும் போது நீங்கள் விந்துவின் தன்மையை அறிந்து கொள்ள இயலும். அதேவேளை பாலியல் உறவு கொள்ளும் போது வெளியேறுவது கண்ணுக்குப் புலப்படாது. நீங்கள் சுயமாக விந்தை வெளியேற்றுவதில்லை. ஏனெனில் விந்தை மீதப்படுத்தவிரும்புகிறீர்கள். விந்தை ஆண்தன்மையே அற்ற கணவன்மார்களின் மனைவியருக்கு செயற்கை சினைப்படுத்தல் செய்ய தானம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் சுயமாக விந்தை வெளியேற்றுகிறீர்கள் அவ்விதம் செய்ய விரும்புவதால் கவலைப்பட வேண்டாம். சில மணி நேரங்களில் சகஜமான தொகையை மீண்டும் பெற்றுவிடுவீர்கள். உங்கள் விந்து எண்ணிக்கைக்கு ஏற்ப சுயமாக விந்தை வெளியேற்றுவதால் பாலியலில் ஈடுபடத் தகுதியற்றவர்கள் ஆகிவிடமாட்டீர்கள். குழந்தைகளை உருவாக்கும் ஆசையும் முயற்சியும் அற்றுப் போகாது.
ஒன்றை மற்றதாக்குவது என்றால் என்ன?
பாலியல் உறவுமூலமோ அல்லது சுயவெளியேற்றுதல் முறைமூலமோ விந்தை வெளிவர விடாது பாலியல் உறவைத் திசை திருப்பும் நோக்கில் விளையாட்டிலோ சங்கீதத்திலோ இலக்கிய முயற்சியிலோ திசை திருப்பி விடலாகும். விரக்தி முயற்சிக்கு உத்வேகம் ஊட்டுகிறது.
திசை திருப்பிவிடுவது பாலியல் உறவாலோ சுயமாகவோ விந்து வெளியேற்றுவதைத் தவறான செயல் என்ற கருத்தினைக் கொண்டதாலோ அல்ல. திசை திருப்பி விடுவது இரண்டாம் வகைச் செயலாகவே கருதுகிறார்கள்.
இது பிரம்மச்சரியத்தைப் போன்ற செயல்தானா?
அப்படி ஒன்றும் இல்லை. ஆரம்ப கட்டங்களில் பிரம்மச்சரிய பயிற்சி பெறும் இளம் வயதினர் விரக்தி நிலை அடைவர்.
பிரம்மசாரியாவது பற்றிய இந்து சமயக் கொள்கை என்னவென்றால் இதில் ஈடுபடுவோர் பாலியல் உணர்வுகளை ஒதுக்கிவிட வேண்டும் என்பதாகும். சிற்றின்பம் மிருகங்களுக்கே உரியது. இதை விட உயர்வான பேரின்பம் பிரமச்சரியத்தால் கிடைக்கின்றது எனப்படும்.
ஒரு துளி விந்து நூறு துளி இரத்தத்திற்குச் சமம் என்கின்ற கருத்து உணர்த்துவது என்ன?
இதுவும் ஒரு மூடநம்பிக்கைதான். முன்னொரு காலத்தில் பூமி தட்டையானது என்று ஒரு கருத்து நிலவியது. புதிய தகவல்களின் அடிப்படையில் இக்கருத்துகள் தவறானது என்று அறிந்து கொண்டனர்.
உண்மையில் உங்கள் உடல் விந்தைத் தயாரித்தபடி இருக்கும். நீங்கள் சுயமாகவோ பாலியல் உறவு மூலமாகவோ விந்தை வெளியேற்றாவிட்டால் தேக்கம் ஏற்பட்டு தொகை பெருகி இரவில் கனவில் பாலியல் சிந்தனை ஓங்கி படுக்கையை ஈரமாக்குகின்றனர். இதனை ஈரமாக்கிய கனவு என்பர். இத்தகைய வீணடிப்புக்களைப்பற்றி இயற்கை பதட்டப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் புடைத்nழுந்து விந்து வெளியாகும் போது நூற்றுக்கணக்கான மில்லியன் விந்துக்கள் வெளியாகின்றன. இவற்றில் ஒன்றோ இரண்டோ மட்டுமே தேவைப்படுகிறது. அநேக சந்தர்ப்பங்களில் ஒன்றுமே பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் குழந்தை ஒன்றுக்கு உரியவராக விரும்பவில்லை.
சுய விந்து வெளியேற்றுவது நிரந்தரப் பழக்கமாகப் போய்விடும் என்கிறார்களே?
உண்மையில் நடப்பது இதுதான். சுய விந்து வெளியேற்றம் சதா காலமும் செய்துவந்து ஓமோனின் செயல்பாடு ஓய்ந்து விட பல நாட்களுக்கோ வாரங்களுக்கோ சுய விந்து வெளியேற்றம் நிறுத்தப்படுகிறது. ஓமோன் செயல்பாடு நிலையாக இருப்பின் சுய விந்து வெளியேற்றம் தொடர்ந்தபடி இருக்கும்.
இதனைப் பழக்கமான செயல் என்று கொள்ள முடியாது. மனவுறுதி அற்றவர் என்று கூறவும் முடியாது. பாலியல் உந்தல்கள் குறைவாகவுள்ளவர்குறைவாகவே சுயமாக விந்து வெளியேற்றத்தில் ஈடுபடுவார்கள். கூடுதலான அளவு பாலியல் உந்தல்கள் உடையோர் அதிகமாக சுயவிந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே விதமானதே.
ஒரு பருவமானவர் சுயமாக விந்து வெளியேற்றுவதற்கு எப்பொழுதும் வெறுப்புற்று இருப்பதற்குக் காரணம் தீர்க்க முடியாத மன உளைச்சலே. இப்படிப்பட்ட நிலையில் ஆலோசகர் ஒருவரை அணுகி உதவி பெறுவது நல்லது.
சுயமாக விந்து வெளியேற்றுவது பருக்கள் தோன்றவும் பார்வை குன்றவும் காரணமாகுமா?
பருவமாகின்ற போது பொதுவாக பிள்ளைகளுக்கு பருக்கள் தோன்றுவதும், கண்பார்வை பாதிக்கப்படுவதும் சாதாரண சம்பவங்களே. பருவமானவர்கள் சுயமாக விந்து வெளியேற்றத் தொடங்குகிறார்கள்.
இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே வேளையில் நடக்கின்றதால் சுயமாக விந்து வெளியேற்றுவதுதான் மற்ற இரண்டுக்கும் காரணமென்று கொள்ள முடியாது. அல்லது பார்வைக் குறைபாடுதான் பருக்கள் தோன்றக் காரணம் என்று கொள்ள முடியாது. இவை மூன்றும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது காரணம் ஆகாதல்லவா?
சுயமாக விந்தை வெளிப்படுத்தினால் சித்தசுவாதீனம் ஏற்படும் என்று கூறக் காரணம் என்ன?
சித்த சுவாதீனம் உற்றவர்கள் புத்தி பேதலித்து இருக்கும் போது மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்ற சிந்தனை இன்றி வெளிப்படையாவே சுயமாக விந்தை வெளியேற்றுகிறார்கள். இச்செயலுக்கு அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தியே காரணம்.
இத்தகைய சித்த சுவாதீனம் பாரம்பரியமானதே. உங்களிடம் பரம்பரை அலகு இல்லாவிட்டால் இது ஏற்படும். பரம்பரை அலகு இருப்பின் இந்நிலை ஏற்படாது. சுயமாக விந்தை வெளியேற்றுவதால் இத்தகைய கோளாறுகள் ஏற்படாது. ஆனால் இவை அனைத்தும் பருவம் ஆன பிறகே ஏற்படுகிறது.
சுயவிந்து வெளியேற்றம் இடைவிடாது செய்து வருவதற்கு குழம்பிய மனநிலையே காரணமாகிறது. வேறு காரணங்களாகவும் இருக்கக் கூடும். நன்கு பயிற்றப்பட்ட மனநோய் வைத்தியரை அணுகி இத்தகையோர் ஆலோசனை பெறுவது நல்லது. மனவேதனைக்குரிய காரணத்தை அறிந்து கொண்டால் அதனை நிவர்த்தி செய்து கொள்ள இயலும். இதனை அறிந்து நிவர்த்தி செய்த பிறகு அடிக்கடி சுயமாக விந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் அவசியம் ஏற்படாது.
சுயமாக விந்து வெளியேற்றிவருபவர் வெறொரு பெண்ணோடு பாலுறவு கொள்வது கடினமானதா?
இல்லை. உங்கள் உடலைப் பற்றி நன்கு அறிந்த பிறகு வேறொருவரோடு பாலுறவு கொள்வது சுலபமாகிவிடும்.
சுயமாய் விந்து வெளியேற்றல் என்றால் என்ன?
தமது பிறப்புறுப்பைத் தாமே தூண்டி உணர்ச்சியின் உச்சக் கட்டத்தை அடைந்து பாலியல் பதட்டத்தை தணிக்கின்றனர். அநேக பையன்கள் ஓரளவுக்குச் சுயமாகவே விந்து வெளியேற்றம் செய்கின்றனர். பெண்களும் கூடத் தம் பிறப்புறுப்போடு இப்படித்தான் செய்கின்றனர்.
பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்றால் என்ன?
பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்பது ஆணுக்கு விந்து வெளியே பாயும் கட்டம். இன்பத்தை அடைந்துவிடத் துடிக்கும் நிலை. தவறுதலாக விந்தை வெளியேற்றி விட்டால் அடைய வேண்டிய பாலியல் நிலைகளை அடைய இயலாது போய்விடுவர். ஆகவே விந்து வெளியேற்றம் என்பது பாலியல் உறவின் உச்சக்கட்டம் அடைந்த நிலை ஆகாது.
இது போலவே பெண்களின் பாலியல் உறவின் உச்சக் கட்டம் என்பது யோனித் துவாரத்தசைகள் சுருக்கம் அடைந்து சுழற்சியுற்று இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. பெண்களுக்கு யோனியின் உட்புறத்தில் உணர்ச்சித் தூண்டல்கள் இருப்பதில்லை. யோனித் துவார வாயிலுள்ள சவ்வுதான் உணர்வின் உச்சக் கட்டத்தை அடைகிறது. (இதுவே ஆணின் பாலியல் புற உறுப்புப் போல உள்ளது. ஆனால் மிகவும் சிறியது)
ஆகவே சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்ல
சாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை.
இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலியல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விரக்தியை வெளிப்படுத்தும் ஓர் அம்சமே. இது பாலியல் பிரச்சினை என்று கொள்ள இயலாது. விருப்பம் இல்லாத ஆசிரியர் ஒருவரோடு பழகுகின்ற நிலையே. விரைவில் பிள்ளைகள் சுயமாக விந்தை வெளியேற்றுவது நல்லதோர் உணர்வைத் தருகிறது என்றும் சலிப்பு ஏற்படுவதை நீக்கும் நிவாரணி ஒன்று என்றும் கருதுகிறார்கள். பலமாதங்களுக்கு இதனைத் தொடராதே இருப்பர்.
ஏன் பெற்றோர் சுயமாக விந்தை வெளியேற்றுவதைத் தவறு என்கிறார்கள்?
பிள்ளை ஓமோன்களால் வழி நடத்திச் செல்லும் போது பெற்றோர்களால் தம்பிள்ளைகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை. பிள்ளைகளில் பெரியமாற்றம் ஏற்படுகிறது. பிள்ளை மாற்றம் காரணமாக பருவமாகின்றபோது பாலியல் உந்தல்களுக்கு ஆட்பட்டு விடக்கூடாதே என்று நினைத்து பெற்றோர்கள் பிள்ளைகளை அடக்கி ஆள முயலுகிறார்கள். எல்லாப் பெற்றோர்களுக்குமே இப்படிப்பட்ட போக்கு இருப்பதில்லை. பிள்ளைகளின் விந்து வெளியேற்றும் போக்கு பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை.
மற்றது பெற்றோரின் பாலியல் வேட்கை தணிந்து வரும்பொழுது பிள்ளைகள் பருவமாகியவர்கள் விந்து வெளியேற்ற ஆரம்பிக்கின்றார்கள். பருவம் ஆனவர்களுக்கு பாலியல் தாகம் தம்மைப் போலக் குறைவாக இல்லையே என்று பெற்றோர் நினைக்கிறார்கள்.
வருத்தமான சம்பவம் அல்லது விஷயம் என்னவென்றால், பாலியல் உந்தல்கள் வெட்கப்படத்தக்கவை என்றும் தூய்மையற்ற செயல் என்றும் கருத்து புகுத்தப்பட்டுள்ளதால் பருவம் ஆனவர்களின் பாலியல் செயல்பாடு கட்டுப்படுத்தப்படுகிறது.
சுயமாக விந்தை வெளியேற்றுவது பையன்களை பலமற்றவர்களாக்கிவிடும் என்று கூறுகிறார்களே!
விந்தை வெளியேற்றுவது பையன்களைப் பலமற்றவர்கள் ஆக்கிவிடாது. ஆனால் விந்து வெளியேறிய பின் களைப்பு தோன்றுகிறது. எந்த உடற்பயிற்சிக்குப் பிறகும் இது தானே நடப்பது. களைப்புத்தன்மை தற்காலிகமானதே. சுயமாய் விந்து வெளியேற்றுவதனால் வளர்ச்சி குன்றிவிடாது. ஆணுறுப்பு சிறுத்துவிடாது. சுயமாக விந்து வெளியேற்றுவது பாலியல் உந்தலின் ஒரு அம்சமே. இதனை ஏற்படுத்துவது அன்ட்றோஜன் என்னும் ஓமோனின் செயல்பாடே. இதுவே வளர்ச்சிக்கும் பாலியல் வேட்கைக்கும் காரணமாகும்.
பாலியல் உறவுக்குப் பிறகு மனிதர் சிறிது நேரம் உறங்க விரும்புகிறார்கள். அதுபோலவே சுயமாக விந்தை வெளியேற்றியபின் படுத்துறங்க விரும்புகிறார்கள். பெண்களும் பாலுறவுக்குப் பின் படுத்திருந்தால் யோனிக்குள் புகுந்த விந்து வெளியில் சிந்திப் போகாது. அவர்களுக்கும் பாலுறவுக்குப் பிறகு சற்று களைப்புத் தோன்றும். இத்தகைய களைப்புத் தன்மைதான் கருப்பம் தரிக்க உதவி புரிகிறது.
விந்து வெளியேறியதும் ஓய்வு கொண்டால் தான் மறுபடியும் ஆண் உறுப்பு புடைத்தெழும் என்பதில்லை. அடுத்த புடைத்தெழும் நிகழ்வு சில நிமிட நேரங்களுக்குள் அல்லது சில மணி நேரங்களுக்குள் ஏற்பட்டு விடும். இது பாலுணர்வு அற்ற நிலைக்குக் கொண்டு சென்று விடும் என்பதும் இல்லை. முழுநாளும் எந்திரங்களைப்போல இதைத்தான் செய்துகொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு வேறு பல வேலைகளும் உண்டு.
அநேக விளையாட்டு வீரர்கள் பெரிய விளையாட்டுப் போட்டிக்குமுன் பாலியல் உறவில் ஈடுபடக் கூடாது என்று நினைப்பதேன்?
அவர்கள் பாலியல் உறவுகொள்வதையோ சுயமாகவோ விந்து வெளியேறுவதையோ விரும்புவதில்லை. இதனால் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நன்மை இருக்கிறது. பாலியல் உறவில் ஈடுபடவில்லையே என்ற ஆத்திரத்தில் ஆவேசமாக விளையாட இடமுண்டு. இன்பம் துய்த்த சந்தோசத்தோடு விளையாடச் சென்றால் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.
சுய வெளியேற்றத்தின் பயனால் விந்தின் தொகை குறைந்துவிடுமா?
ஒன்றன் பின் ஒன்றாகப் பலமுறை வெளியேறினால் தொகை குறையக் கூடும். சில தினங்களுக்கு தடிப்பாக இருக்கும். வெளியேற்றப்படாதிருந்தால் இது எல்லா வெளியேற்றங்களுக்கும் பொருந்தும். சுயமாக வெளியேற்றும் போது நீங்கள் விந்துவின் தன்மையை அறிந்து கொள்ள இயலும். அதேவேளை பாலியல் உறவு கொள்ளும் போது வெளியேறுவது கண்ணுக்குப் புலப்படாது. நீங்கள் சுயமாக விந்தை வெளியேற்றுவதில்லை. ஏனெனில் விந்தை மீதப்படுத்தவிரும்புகிறீர்கள். விந்தை ஆண்தன்மையே அற்ற கணவன்மார்களின் மனைவியருக்கு செயற்கை சினைப்படுத்தல் செய்ய தானம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் சுயமாக விந்தை வெளியேற்றுகிறீர்கள் அவ்விதம் செய்ய விரும்புவதால் கவலைப்பட வேண்டாம். சில மணி நேரங்களில் சகஜமான தொகையை மீண்டும் பெற்றுவிடுவீர்கள். உங்கள் விந்து எண்ணிக்கைக்கு ஏற்ப சுயமாக விந்தை வெளியேற்றுவதால் பாலியலில் ஈடுபடத் தகுதியற்றவர்கள் ஆகிவிடமாட்டீர்கள். குழந்தைகளை உருவாக்கும் ஆசையும் முயற்சியும் அற்றுப் போகாது.
ஒன்றை மற்றதாக்குவது என்றால் என்ன?
பாலியல் உறவுமூலமோ அல்லது சுயவெளியேற்றுதல் முறைமூலமோ விந்தை வெளிவர விடாது பாலியல் உறவைத் திசை திருப்பும் நோக்கில் விளையாட்டிலோ சங்கீதத்திலோ இலக்கிய முயற்சியிலோ திசை திருப்பி விடலாகும். விரக்தி முயற்சிக்கு உத்வேகம் ஊட்டுகிறது.
திசை திருப்பிவிடுவது பாலியல் உறவாலோ சுயமாகவோ விந்து வெளியேற்றுவதைத் தவறான செயல் என்ற கருத்தினைக் கொண்டதாலோ அல்ல. திசை திருப்பி விடுவது இரண்டாம் வகைச் செயலாகவே கருதுகிறார்கள்.
இது பிரம்மச்சரியத்தைப் போன்ற செயல்தானா?
அப்படி ஒன்றும் இல்லை. ஆரம்ப கட்டங்களில் பிரம்மச்சரிய பயிற்சி பெறும் இளம் வயதினர் விரக்தி நிலை அடைவர்.
பிரம்மசாரியாவது பற்றிய இந்து சமயக் கொள்கை என்னவென்றால் இதில் ஈடுபடுவோர் பாலியல் உணர்வுகளை ஒதுக்கிவிட வேண்டும் என்பதாகும். சிற்றின்பம் மிருகங்களுக்கே உரியது. இதை விட உயர்வான பேரின்பம் பிரமச்சரியத்தால் கிடைக்கின்றது எனப்படும்.
ஒரு துளி விந்து நூறு துளி இரத்தத்திற்குச் சமம் என்கின்ற கருத்து உணர்த்துவது என்ன?
இதுவும் ஒரு மூடநம்பிக்கைதான். முன்னொரு காலத்தில் பூமி தட்டையானது என்று ஒரு கருத்து நிலவியது. புதிய தகவல்களின் அடிப்படையில் இக்கருத்துகள் தவறானது என்று அறிந்து கொண்டனர்.
உண்மையில் உங்கள் உடல் விந்தைத் தயாரித்தபடி இருக்கும். நீங்கள் சுயமாகவோ பாலியல் உறவு மூலமாகவோ விந்தை வெளியேற்றாவிட்டால் தேக்கம் ஏற்பட்டு தொகை பெருகி இரவில் கனவில் பாலியல் சிந்தனை ஓங்கி படுக்கையை ஈரமாக்குகின்றனர். இதனை ஈரமாக்கிய கனவு என்பர். இத்தகைய வீணடிப்புக்களைப்பற்றி இயற்கை பதட்டப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் புடைத்nழுந்து விந்து வெளியாகும் போது நூற்றுக்கணக்கான மில்லியன் விந்துக்கள் வெளியாகின்றன. இவற்றில் ஒன்றோ இரண்டோ மட்டுமே தேவைப்படுகிறது. அநேக சந்தர்ப்பங்களில் ஒன்றுமே பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் குழந்தை ஒன்றுக்கு உரியவராக விரும்பவில்லை.
சுய விந்து வெளியேற்றுவது நிரந்தரப் பழக்கமாகப் போய்விடும் என்கிறார்களே?
உண்மையில் நடப்பது இதுதான். சுய விந்து வெளியேற்றம் சதா காலமும் செய்துவந்து ஓமோனின் செயல்பாடு ஓய்ந்து விட பல நாட்களுக்கோ வாரங்களுக்கோ சுய விந்து வெளியேற்றம் நிறுத்தப்படுகிறது. ஓமோன் செயல்பாடு நிலையாக இருப்பின் சுய விந்து வெளியேற்றம் தொடர்ந்தபடி இருக்கும்.
இதனைப் பழக்கமான செயல் என்று கொள்ள முடியாது. மனவுறுதி அற்றவர் என்று கூறவும் முடியாது. பாலியல் உந்தல்கள் குறைவாகவுள்ளவர்குறைவாகவே சுயமாக விந்து வெளியேற்றத்தில் ஈடுபடுவார்கள். கூடுதலான அளவு பாலியல் உந்தல்கள் உடையோர் அதிகமாக சுயவிந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே விதமானதே.
ஒரு பருவமானவர் சுயமாக விந்து வெளியேற்றுவதற்கு எப்பொழுதும் வெறுப்புற்று இருப்பதற்குக் காரணம் தீர்க்க முடியாத மன உளைச்சலே. இப்படிப்பட்ட நிலையில் ஆலோசகர் ஒருவரை அணுகி உதவி பெறுவது நல்லது.
சுயமாக விந்து வெளியேற்றுவது பருக்கள் தோன்றவும் பார்வை குன்றவும் காரணமாகுமா?
பருவமாகின்ற போது பொதுவாக பிள்ளைகளுக்கு பருக்கள் தோன்றுவதும், கண்பார்வை பாதிக்கப்படுவதும் சாதாரண சம்பவங்களே. பருவமானவர்கள் சுயமாக விந்து வெளியேற்றத் தொடங்குகிறார்கள்.
இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே வேளையில் நடக்கின்றதால் சுயமாக விந்து வெளியேற்றுவதுதான் மற்ற இரண்டுக்கும் காரணமென்று கொள்ள முடியாது. அல்லது பார்வைக் குறைபாடுதான் பருக்கள் தோன்றக் காரணம் என்று கொள்ள முடியாது. இவை மூன்றும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது காரணம் ஆகாதல்லவா?
சுயமாக விந்தை வெளிப்படுத்தினால் சித்தசுவாதீனம் ஏற்படும் என்று கூறக் காரணம் என்ன?
சித்த சுவாதீனம் உற்றவர்கள் புத்தி பேதலித்து இருக்கும் போது மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்ற சிந்தனை இன்றி வெளிப்படையாவே சுயமாக விந்தை வெளியேற்றுகிறார்கள். இச்செயலுக்கு அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தியே காரணம்.
இத்தகைய சித்த சுவாதீனம் பாரம்பரியமானதே. உங்களிடம் பரம்பரை அலகு இல்லாவிட்டால் இது ஏற்படும். பரம்பரை அலகு இருப்பின் இந்நிலை ஏற்படாது. சுயமாக விந்தை வெளியேற்றுவதால் இத்தகைய கோளாறுகள் ஏற்படாது. ஆனால் இவை அனைத்தும் பருவம் ஆன பிறகே ஏற்படுகிறது.
சுயவிந்து வெளியேற்றம் இடைவிடாது செய்து வருவதற்கு குழம்பிய மனநிலையே காரணமாகிறது. வேறு காரணங்களாகவும் இருக்கக் கூடும். நன்கு பயிற்றப்பட்ட மனநோய் வைத்தியரை அணுகி இத்தகையோர் ஆலோசனை பெறுவது நல்லது. மனவேதனைக்குரிய காரணத்தை அறிந்து கொண்டால் அதனை நிவர்த்தி செய்து கொள்ள இயலும். இதனை அறிந்து நிவர்த்தி செய்த பிறகு அடிக்கடி சுயமாக விந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் அவசியம் ஏற்படாது.
சுயமாக விந்து வெளியேற்றிவருபவர் வெறொரு பெண்ணோடு பாலுறவு கொள்வது கடினமானதா?
இல்லை. உங்கள் உடலைப் பற்றி நன்கு அறிந்த பிறகு வேறொருவரோடு பாலுறவு கொள்வது சுலபமாகிவிடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பருவமானவர்கள்
காதல் வயப்படுதல் (FALLING IN LOVE)
பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்?
கவனம் ஈர்க்கப்படுவது அல்லது கவரப்படுவதுதான் முதலில் நடைபெறுவதாகும். இது பெண் முதல் மாதவிடாய் காண்பதற்கு முன்பும் பையன் ஈரக்கனவு ஏற்படுவதற்கு முன்பும் இடம்பெறும்.
இக்கவர்ச்சி ஒரு பட்சமானது. ஒருவர் கவர்ச்சி ஏற்பட்டு அதிக நேரம் அதேநினைவிலேயே ஊறியிருப்பார். இதனைத் தமக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள். அவர்கள் முன்பு வெட்கப்பட்டோ அல்லது வாய்மூடி மௌனிகளாகவோ இருப்பார்கள்.
இந்தக் கவர்ச்சி முறையை ஈர்க்கப்படுதல் என்றும் கூறுவர். ஆனால் ஈர்க்கப்படுவது என்பது அவ்வளவு கடுமையாகக் கொள்ளாத நிலையே. ஆனால் கவரப்படுவது என்பது ஏதோ விதமான சிநேகபூர்வமான நிகழ்ச்சியாகும்.
இந்தியாவில் எதிர்ப்பாலினருடன் நெருங்கிப் பழக வாய்ப்பில்லாது இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பஸ்களில் அன்றாடம் பயணம் செய்பவர்களில் ஒருத்தியை தன்னுடையவள் என்று கருதிக்கொள்வார்கள். தான் நினைத்து இருப்பதைச் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் தெரிவிக்கவும் முயலுவதில்லை. ஆனால் வேறோர் ஆடவன் அவளுடன் உரையாடிக் கொண்டு இருப்பதைக் கண்டால் ஆவேசம் கொள்வான். சில வேளைகளில் அவளுக்கு வெகுமதி கொடுக்க முன்வருவான். அவளுக்கு ஏன் தனக்கு அது கொடுக்கப்பட்டதென்றே தெரியாது.
ஒருதலைக்காதல் ஏற்படுவது மாற்றுப் பாலினரோடுதானா?
அப்படித்தான் இருக்க வேண்டுமென்று இல்லை. இது பருவமானவர்களுக்கு ஏற்படுகிறது. முதலில் ஒரே பாலினரிடம் தோன்றுகிறது. இந்த உணர்வு தன்னினச் சேர்க்கையில் முடிந்து விடும் என்று நினைக்க வேண்டுமென்பதில்லை.
நீர் தன்னினச் சேர்க்கையாளனாக மாறினால் என்னவாகும்?
இயற்கையாக ஏற்படுவதையே செய்கிறீர்கள். ஒரே இனத்தவரிடமே விருப்பு ஏற்படுகிறது. காதலும் பிறக்கிறது.
ஓரினச் சேர்க்கை ஒரு நோயல்ல. இது ஒரு மாற்று வழியே.
நீங்கள் செய்யக்கூடிய தவறான செயல் மாற்றினச் சேர்க்கையே. மாற்று இனத்தவர் ஒருவரைத் தேடி நிச்சயித்துத் திருமணம் செய்வது அல்லது பிடித்துக் கவர்ந்து இழுப்பதுமேயாகும்.
இதில் வருத்தத்திற்குரிய விஷயம் யாதெனில் இப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பங்குதாரரில் ஒருவர் தன்னினச் சேர்க்கையாளாராயின் ஒத்துப்போவதில்லை. தமது பங்குதாரரை கவர்ச்சியற்றவர் என்று ஒதுக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. ஆடவ நண்பன் தன்னினச் சேர்க்கையாளனாயின் பெண்ணைப் பொறுத்த மட்டில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும். இத்தகைய ஆடவன் அவளை இழந்து விடுவது பற்றியும் கவலைப்படமாட்டார். சமூகத்தைப் பொறுத்தமட்டில் பாதுகாப்புடன் வாழ்ந்த போதிலும் குடும்ப அமைதி சீர்குலைந்துதானே இருக்கும்.
இக்காலங்களில், ஓரினச் சேர்க்கையாளனாக இருப்பது சங்கடமான போதிலும் அவ்வளவு பிரச்சினையாயிருக்காது. எப்ப்பொழுதுமே வழமையான பாதையிலிருந்து விலகி வாழ்வது சங்கடமான செயல்தான். உங்கள் பெற்றோர் உங்கள் ஊடாகப் பேரக் குழந்தைகள் இல்லையென்ற நிலையைச் சமாளிப்பது சிரமமானதே. நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டுவது இதுதான். அன்புதான் மனநிலை அல்ல. வேறு விதமாகக் கூறுவதாயின் இது வெறும் உறவே.
காதலிப்பது என்பதும் ஒருவரை ஒருவர் காதலிப்பது என்பதும் ஒன்றல்ல. இதுவெல்லாம் ஒரு கனவே. வாழ்வை ஓர் இன்பப் பூங்காவெனக் கருதுவது ஆகும்.
காதலிப்பது தவறானது என்றா கருதுகிறீர்கள். உலகில் பாடப்படும் பிரபலமான பாடல்கள் எல்லாமே காதல் பாடல்களே.
பிரெஞ்சு முத்தம் என்றால் என்ன?
தனது நாக்கை மற்றவரின் நாக்கோடு படரவிடுவது. தனது நாக்கை மற்றவரின் வாய்க்குள் நாக்கின் மீது படரவிட்டுக் குடாய்வது. இதனை ஆழ்ந்த முத்தம் என்றும் அழைப்பர். இதனை பிறெஞ்சு முத்தம் என்பர். இது பிறெஞ்சு மக்களுக்கு உரியதோ என்றதனால் அல்ல. ஆங்கில எழுத்தாளர்கள் பாலியல் உணர்வைத் தூண்டும் காரியங்களை எல்லாம் பிறெஞ்சு என்றுதான் குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஆண்களின் கருத்தடை உறையை “பிறெஞ்சுத் தோல்’’ (குசநnஉh டநவாநச) என்பார்கள்.
சாதாரணமுத்தம் என்றால் சிலவேளைகளில் வெறுப்பைத் தரும். சிலரை முத்தம் செய்ய நாம் விரும்புவதில்லை. ஏனெனில் அவர்களின் வாய் அசுத்தமாய் இருப்பதனால்.
பிறெஞ்சு முத்தத்தால் AIDS நோய் பரவும் என்பதற்கு ஆதாரமே இல்லை. ஆனால் செங்கமாரி (Hepatitus ‘B’) பரவும்.
செல்லம் பொழிவது என்றால் என்ன?
செல்லம் பொழிவது என்பது பாலியல் நடவடிக்கையின் ஓர் அங்கமே. முத்தம் இடுவதைக் காட்டிலும் ஒரு படி உயர்ந்தது. ஆனால் பாலியல் தொடர்பைக் காட்டிலும் ஒரு படி குறைந்தது.
பாலியல் உணர்வைத் தூண்டும் பிரதேசங்களில் தட்டிக்கொடுப்பதை செல்லம் பொழிவது என்பார்கள். பெண்களுக்கான இத்தகைய பிரதேசங்கள் மார்பகங்கள், முலைக்காம்பு, யோனிப் பகுதி. ஆண்களுக்கோ ஆண் உறுப்புப் பகுதி ஆகும். சிலருக்கு நெஞ்சகத்துக் காம்புப் பகுதியும் ஆகும். தடவுவதோடு நில்லாது அப்பகுதியைத் துருவி ஆராயவும் செய்வர். இதனால் மற்றவருடைய பாலியல் உணர்வைத் தட்டி எழுப்புவர்.
பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்?
கவனம் ஈர்க்கப்படுவது அல்லது கவரப்படுவதுதான் முதலில் நடைபெறுவதாகும். இது பெண் முதல் மாதவிடாய் காண்பதற்கு முன்பும் பையன் ஈரக்கனவு ஏற்படுவதற்கு முன்பும் இடம்பெறும்.
இக்கவர்ச்சி ஒரு பட்சமானது. ஒருவர் கவர்ச்சி ஏற்பட்டு அதிக நேரம் அதேநினைவிலேயே ஊறியிருப்பார். இதனைத் தமக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள். அவர்கள் முன்பு வெட்கப்பட்டோ அல்லது வாய்மூடி மௌனிகளாகவோ இருப்பார்கள்.
இந்தக் கவர்ச்சி முறையை ஈர்க்கப்படுதல் என்றும் கூறுவர். ஆனால் ஈர்க்கப்படுவது என்பது அவ்வளவு கடுமையாகக் கொள்ளாத நிலையே. ஆனால் கவரப்படுவது என்பது ஏதோ விதமான சிநேகபூர்வமான நிகழ்ச்சியாகும்.
இந்தியாவில் எதிர்ப்பாலினருடன் நெருங்கிப் பழக வாய்ப்பில்லாது இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பஸ்களில் அன்றாடம் பயணம் செய்பவர்களில் ஒருத்தியை தன்னுடையவள் என்று கருதிக்கொள்வார்கள். தான் நினைத்து இருப்பதைச் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் தெரிவிக்கவும் முயலுவதில்லை. ஆனால் வேறோர் ஆடவன் அவளுடன் உரையாடிக் கொண்டு இருப்பதைக் கண்டால் ஆவேசம் கொள்வான். சில வேளைகளில் அவளுக்கு வெகுமதி கொடுக்க முன்வருவான். அவளுக்கு ஏன் தனக்கு அது கொடுக்கப்பட்டதென்றே தெரியாது.
ஒருதலைக்காதல் ஏற்படுவது மாற்றுப் பாலினரோடுதானா?
அப்படித்தான் இருக்க வேண்டுமென்று இல்லை. இது பருவமானவர்களுக்கு ஏற்படுகிறது. முதலில் ஒரே பாலினரிடம் தோன்றுகிறது. இந்த உணர்வு தன்னினச் சேர்க்கையில் முடிந்து விடும் என்று நினைக்க வேண்டுமென்பதில்லை.
நீர் தன்னினச் சேர்க்கையாளனாக மாறினால் என்னவாகும்?
இயற்கையாக ஏற்படுவதையே செய்கிறீர்கள். ஒரே இனத்தவரிடமே விருப்பு ஏற்படுகிறது. காதலும் பிறக்கிறது.
ஓரினச் சேர்க்கை ஒரு நோயல்ல. இது ஒரு மாற்று வழியே.
நீங்கள் செய்யக்கூடிய தவறான செயல் மாற்றினச் சேர்க்கையே. மாற்று இனத்தவர் ஒருவரைத் தேடி நிச்சயித்துத் திருமணம் செய்வது அல்லது பிடித்துக் கவர்ந்து இழுப்பதுமேயாகும்.
இதில் வருத்தத்திற்குரிய விஷயம் யாதெனில் இப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பங்குதாரரில் ஒருவர் தன்னினச் சேர்க்கையாளாராயின் ஒத்துப்போவதில்லை. தமது பங்குதாரரை கவர்ச்சியற்றவர் என்று ஒதுக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. ஆடவ நண்பன் தன்னினச் சேர்க்கையாளனாயின் பெண்ணைப் பொறுத்த மட்டில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும். இத்தகைய ஆடவன் அவளை இழந்து விடுவது பற்றியும் கவலைப்படமாட்டார். சமூகத்தைப் பொறுத்தமட்டில் பாதுகாப்புடன் வாழ்ந்த போதிலும் குடும்ப அமைதி சீர்குலைந்துதானே இருக்கும்.
இக்காலங்களில், ஓரினச் சேர்க்கையாளனாக இருப்பது சங்கடமான போதிலும் அவ்வளவு பிரச்சினையாயிருக்காது. எப்ப்பொழுதுமே வழமையான பாதையிலிருந்து விலகி வாழ்வது சங்கடமான செயல்தான். உங்கள் பெற்றோர் உங்கள் ஊடாகப் பேரக் குழந்தைகள் இல்லையென்ற நிலையைச் சமாளிப்பது சிரமமானதே. நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டுவது இதுதான். அன்புதான் மனநிலை அல்ல. வேறு விதமாகக் கூறுவதாயின் இது வெறும் உறவே.
காதலிப்பது என்பதும் ஒருவரை ஒருவர் காதலிப்பது என்பதும் ஒன்றல்ல. இதுவெல்லாம் ஒரு கனவே. வாழ்வை ஓர் இன்பப் பூங்காவெனக் கருதுவது ஆகும்.
காதலிப்பது தவறானது என்றா கருதுகிறீர்கள். உலகில் பாடப்படும் பிரபலமான பாடல்கள் எல்லாமே காதல் பாடல்களே.
பிரெஞ்சு முத்தம் என்றால் என்ன?
தனது நாக்கை மற்றவரின் நாக்கோடு படரவிடுவது. தனது நாக்கை மற்றவரின் வாய்க்குள் நாக்கின் மீது படரவிட்டுக் குடாய்வது. இதனை ஆழ்ந்த முத்தம் என்றும் அழைப்பர். இதனை பிறெஞ்சு முத்தம் என்பர். இது பிறெஞ்சு மக்களுக்கு உரியதோ என்றதனால் அல்ல. ஆங்கில எழுத்தாளர்கள் பாலியல் உணர்வைத் தூண்டும் காரியங்களை எல்லாம் பிறெஞ்சு என்றுதான் குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஆண்களின் கருத்தடை உறையை “பிறெஞ்சுத் தோல்’’ (குசநnஉh டநவாநச) என்பார்கள்.
சாதாரணமுத்தம் என்றால் சிலவேளைகளில் வெறுப்பைத் தரும். சிலரை முத்தம் செய்ய நாம் விரும்புவதில்லை. ஏனெனில் அவர்களின் வாய் அசுத்தமாய் இருப்பதனால்.
பிறெஞ்சு முத்தத்தால் AIDS நோய் பரவும் என்பதற்கு ஆதாரமே இல்லை. ஆனால் செங்கமாரி (Hepatitus ‘B’) பரவும்.
செல்லம் பொழிவது என்றால் என்ன?
செல்லம் பொழிவது என்பது பாலியல் நடவடிக்கையின் ஓர் அங்கமே. முத்தம் இடுவதைக் காட்டிலும் ஒரு படி உயர்ந்தது. ஆனால் பாலியல் தொடர்பைக் காட்டிலும் ஒரு படி குறைந்தது.
பாலியல் உணர்வைத் தூண்டும் பிரதேசங்களில் தட்டிக்கொடுப்பதை செல்லம் பொழிவது என்பார்கள். பெண்களுக்கான இத்தகைய பிரதேசங்கள் மார்பகங்கள், முலைக்காம்பு, யோனிப் பகுதி. ஆண்களுக்கோ ஆண் உறுப்புப் பகுதி ஆகும். சிலருக்கு நெஞ்சகத்துக் காம்புப் பகுதியும் ஆகும். தடவுவதோடு நில்லாது அப்பகுதியைத் துருவி ஆராயவும் செய்வர். இதனால் மற்றவருடைய பாலியல் உணர்வைத் தட்டி எழுப்புவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பருவமானவர்கள்
பாலியல் (SEX)
பாலியல் உறவு என்றால் என்ன?
பாலியல் உறவு என்றால் ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வது. எப்படியெனில் ஆணின் பாலியல் உறுப்பை பெண்ணின் யோனிக்குள் புகுத்துவது.
உன்னத நிலை என்ன வென்றால் இருபாலாரும் பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது. ஆண் உறுப்பு புடைத்தெழவும் பெண்ணின் யோனிப் பகுதி ஈரமாயிருக்கவும் ஆன நிலை. பெண்ணின் யோனிப் பகுதி ஈரமாயிருப்பதற்குக் காரணம், பல்வேறு பகுதிகளிலிருந்து சுரக்கும் ஈரப் பதார்த்தங்களே. யோனிப்பாகம் ஈரமாயிருந்தால் ஆணின் பாலியல் உறுப்பு எளிதாக உட்புகும்.
ஆணின் பாலியல் உறுப்பு பெண்ணின் யோனிக்குள் புகுந்தவுடன் விந்து வெளிப்பட்டுவிடாது. பலமுறை ஆண் பாலியல் உறுப்பை யோனிக்குள் அசைய விடும் போது யோனித்துவாரத்தின் பக்கத் தசைகளோடு ஆண் பாலியல் உறுப்பு உராயப்படும் போது பாலியல் உணர்ச்சி தூண்டப்பட்டு விடுகிறது. வெளிவரத் துடிக்கும் விந்து எப்படியும் வந்தே தீரும். எக்காரணம் கொண்டும் திருப்பிச் சென்றுவிடாது. விந்து வெளிவரத் தயார் நிலையிலேயே உள்ளது. ஆணின் பால் உறுப்பு சுருக்கம் அடைந்து விந்தை வெளியே தள்ளுகிறது.
ஆண் உறுப்பின் யோனித் துவார உராய்வுகள் பெண்ணின் யோனியையும் யோனிவாயிலில் இருக்கும் உணர்ச்சி உறுப்பையும் தட்டி எழுப்புகிறது. உணர்ச்சியை எழுப்பும் நிகழ்வு ஆணுக்கும் பெண்ணிற்கும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை.
ஆணின் பாலியல் உறவின் எழுச்சியின்போது விந்து சிந்திச் சிதறி வெளியேறுகிறது. பெண்ணிற்கு ஏற்படும் பாலியல் எழுச்சி அல்லது உந்தல் சுருதி முறையில் யோனித் தசைகளில் சுருக்கம் ஏற்படச் செய்கிறது. இது யோனிக்கருகிலுள்ள இரத்தக் குழாய்களில் நெருடலை ஏற்படுத்துகின்றன. இவை அனைத்தும் பாலியல் உறவின் போதும் ஏற்படுகிறது. இருபாலாரின் பாலியல் உணர்வின் உச்சக்கட்டத்தை அடைய உடல் எங்குமுள்ள தசைகளின் சுருக்கம் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவாக தசைகள் ஓய்வடைகின்றன. ஆகவே இன்ப உணர்வுகள் யோனிப் பிரதேசத்தோடு மட்டுப்படாமல் அதற்கு அப்பாலும் வியாபிக்கிறது.
பாலியல் உறவு கர்ப்பம் தரிப்பதில் முடிவுறும். ஆணின் அல்லது பெண்ணின் மலட்டுத் தன்மை காரணமாகவோ அல்லது நம்பக் கூடிய கருத்தடை உபகரணத்தைப் பயன்படுத்துவதாலோ தவிர்க்கப்படுகிறது.
முதன் முறையாக பாலியல் உறவு கொள்ளும் போதே இது சாத்தியமாகிறது. இரு பங்காளரில் ஒருவருக்கு எய்ட்ஸ் (AIDS) இருக்குமாயின் பாலியல் உறவின் போது மற்றவருக்கு எயிட்ஸ் (AIDS) வியாதியை உண்டு பண்ணும். HIVS பரிசோதனை கூட இரண்டு கிழமைகளுக்கு முன்பிருந்த நிலையைத்தான் காட்டும். இருவருக்கும் ஆன தகுந்த பாதுகாப்பு கருத்தடை உறைகளைப் பயன்படுத்துவதே.
பாலியல் உறவுக்கு முன் செய்யும் நடவடிக்கை என்றால் என்ன?
யோனிக்குள் ஆணின் பாலியல் உறுப்பைப் புகுத்துமுன் இரு பங்காளிகளின் உணர்வுகளும் சரியாகத் தட்டி எழுப்பப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஆணுறுப்பை யோனிக்குள் நுழைக்குமுன் முன்நடவடிக்கையாக உணர்ச்சி தட்டி எழுப்பப்பட வேண்டும். பெண்களுக்கு முன்னரேயே ஆண்களுக்கு பாலியல் உணர்வு உச்சக் கட்டத்தை அடைந்து விடும். இந்த நிலை இரு பங்காளிகளும் இளைஞராக இருக்கும்போது ஏற்படுகிறது. பாலியல் உறவுக்கு முன் செய்யும் முன் நடவடிக்கை இதற்கு ஈடுசெய்கிறது. நன்மையும் புரிகிறது.
சமய தாபனங்கள் காட்டும் வழி என்ன?
பெண் முதுகுப் புறம் கீழே இருக்க உடலை நீட்டிய நிலையில் படுத்திருக்க அவள் மீது குப்புறப்படுத்து பாலியல் உறவில் ஈடுபடுவது சாதாரணமான பழைமையான உறவு முறை. இதற்கு இப்பெயரை வழங்கியவர்கள் பசுபிக் தீவினர். இத்தகைய முறைதான் இன்பத்தை அள்ளித் தரும் முறையென நம்பினார்கள். வெள்ளையரின் சமய தாபனங்கள் குந்தி இருந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து பாலியல் உறவில் ஈடுபடும் முறையை எடுத்துக்காட்டினர். வேறு விதமாகக் கூறுவதாயின் எந்த முறையிலாவது ஈடுபட்டு இன்பத்தின் உச்ச நிலையை அடைந்தால் போதும்.
பாலியல் உறவு கொள்வது முறையான வழியில் என்றீர்கள். பாலியல் உறவுக்கு வேறெதும் முறை இருக்கிறதா?
மற்ற முறைகளில் ஒன்று வாய்வழி அடுத்தது குதம் வழி.
வாய்வழிப் பாலியல் உறவு என்றால் என்ன?
வாய்வழியான உறவு என்றால் உங்கள் வாயை பங்காளியின் பாலியல் புற உறுப்பின் மீது பயன்படுத்தி பாலியல் உணர்வின் உச்சக் கட்டத்தை அடைய வைத்துவிடுவது. பெண்ணொருத்திக்காயின் பெண் குறியை நாக்காலும், உதடுகளாலும் தடவித் தூண்டிவிடுவது. ஆணுக்காயின் ஆண்குறியை எடுத்து வாய்க்குள் வைத்து விடுவது. இறுதியில் புடைத்தெழும். இறுதியில் விந்து வெளிவரும். தடுக்க வேண்டாம்!
வாய்வழியாக நடத்தப்படும் பாலுறவால் கர்ப்பம் தரிக்காது. விழுங்கிய விந்து கருப்பையை அடையாமல் வயிற்றுக்குள் நேரே சென்றுவிடும். ஆனால், விந்து வாய்க்குள் புகுந்தாலும் AIDS பரவும். உங்கள் பங்காளியைப் பற்றித் தெளிவாகத் தெரியாமல் இருந்தால் கருத்தடை உறைகளைப் பயன்படுத்த வேண்டும். இதோடு பாலியல் ரீதியில் பரவும் நோய்கள் தொற்றக்கூடும்.
குதம் வழியான பாலியல் உறவு என்றால் என்ன?
குதம் என்றால் மலவாசல் என்றும் அழைக்கலாம். குதம் வழியான பாலியல் உறவு என்பது ஆண்குறியைக் குதத்திற்குள் புகுத்தி விடுவது ஆகும். குதம் வழியிலுள்ள இறுக்கான அமைப்பு ஆணின் பாலியல் புறவுறுப்புக்கு மேலதிக தூண்டுதல் வழங்குகிறது. பெண்களைப் பொறுத்தவரை பெரும் வேதனையும் வலியும் தருகிறது. குதத்தைச் சுற்றியுள்ள தசைகளை ஓய்வில் வைத்திருக்கும் உத்தியை அறிந்திருந்தால் மட்டுமே இந்த வேதனையிலிருந்து ஓரளவு விடுதலை பெறலாம். பெண் இந்த முறையால் இன்பம் அடைவதில்லை.
அநேக ஆண்களும் பெண்களும் குதம் வழியான பாலியல் உறவினை வாழ்நாள் முழுவதும் பெறாமலேயே இருக்கின்றனர்.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் இரு ஆண்களாயின் குதம் வழியாக ஆண்குறி நுழையும் போது இருவருக்கும் இன்ப உணர்வு ஏற்படுகிறது. புறஸ்றோற் சுரப்பியின் இன்பம் வாங்கிகளின் மீது ஆண்குறி உராயும் போது இன்பம் சுரக்கின்றது. (புறஸ்றோற் சுரப்பி தான் விந்தை திரவம் கலந்ததாகத் தருகிறது)
குதவழி பாலியல் உறவாலும் கருத்தரிப்பு நடைபெறாது. ஆனால் AIDS பரவும் அபாயம் பெரிதும் உண்டு. குதப்பாதை மிகவும் இறுக்கமாக இருப்பதனால் அதிக அளவு உராய்வும் அதன் பயனாகச் சிறுகாயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக விந்து மற்றவரின் குருதி ஓட்டத்துடன் கலந்து விட இடமுண்டு. மற்றவரிடம் AIDS வியாதிக்கான HIV இல்லை என்று உறுதியாகத் தெரியாவிட்டால் குதவழி பாலியல் உறவுக்கென அமைந்த கருத்தடை உறையையோ அல்லது சாதாரண கருத்தடை உறைதான் இருப்பின் அதில் இரண்டு உறைகளையோ அணிந்து கொண்டு பாலியல் உறவில் ஈடுபட வேண்டும்.
பாலியல் உறவு என்றால் என்ன?
பாலியல் உறவு என்றால் ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வது. எப்படியெனில் ஆணின் பாலியல் உறுப்பை பெண்ணின் யோனிக்குள் புகுத்துவது.
உன்னத நிலை என்ன வென்றால் இருபாலாரும் பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது. ஆண் உறுப்பு புடைத்தெழவும் பெண்ணின் யோனிப் பகுதி ஈரமாயிருக்கவும் ஆன நிலை. பெண்ணின் யோனிப் பகுதி ஈரமாயிருப்பதற்குக் காரணம், பல்வேறு பகுதிகளிலிருந்து சுரக்கும் ஈரப் பதார்த்தங்களே. யோனிப்பாகம் ஈரமாயிருந்தால் ஆணின் பாலியல் உறுப்பு எளிதாக உட்புகும்.
ஆணின் பாலியல் உறுப்பு பெண்ணின் யோனிக்குள் புகுந்தவுடன் விந்து வெளிப்பட்டுவிடாது. பலமுறை ஆண் பாலியல் உறுப்பை யோனிக்குள் அசைய விடும் போது யோனித்துவாரத்தின் பக்கத் தசைகளோடு ஆண் பாலியல் உறுப்பு உராயப்படும் போது பாலியல் உணர்ச்சி தூண்டப்பட்டு விடுகிறது. வெளிவரத் துடிக்கும் விந்து எப்படியும் வந்தே தீரும். எக்காரணம் கொண்டும் திருப்பிச் சென்றுவிடாது. விந்து வெளிவரத் தயார் நிலையிலேயே உள்ளது. ஆணின் பால் உறுப்பு சுருக்கம் அடைந்து விந்தை வெளியே தள்ளுகிறது.
ஆண் உறுப்பின் யோனித் துவார உராய்வுகள் பெண்ணின் யோனியையும் யோனிவாயிலில் இருக்கும் உணர்ச்சி உறுப்பையும் தட்டி எழுப்புகிறது. உணர்ச்சியை எழுப்பும் நிகழ்வு ஆணுக்கும் பெண்ணிற்கும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை.
ஆணின் பாலியல் உறவின் எழுச்சியின்போது விந்து சிந்திச் சிதறி வெளியேறுகிறது. பெண்ணிற்கு ஏற்படும் பாலியல் எழுச்சி அல்லது உந்தல் சுருதி முறையில் யோனித் தசைகளில் சுருக்கம் ஏற்படச் செய்கிறது. இது யோனிக்கருகிலுள்ள இரத்தக் குழாய்களில் நெருடலை ஏற்படுத்துகின்றன. இவை அனைத்தும் பாலியல் உறவின் போதும் ஏற்படுகிறது. இருபாலாரின் பாலியல் உணர்வின் உச்சக்கட்டத்தை அடைய உடல் எங்குமுள்ள தசைகளின் சுருக்கம் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவாக தசைகள் ஓய்வடைகின்றன. ஆகவே இன்ப உணர்வுகள் யோனிப் பிரதேசத்தோடு மட்டுப்படாமல் அதற்கு அப்பாலும் வியாபிக்கிறது.
பாலியல் உறவு கர்ப்பம் தரிப்பதில் முடிவுறும். ஆணின் அல்லது பெண்ணின் மலட்டுத் தன்மை காரணமாகவோ அல்லது நம்பக் கூடிய கருத்தடை உபகரணத்தைப் பயன்படுத்துவதாலோ தவிர்க்கப்படுகிறது.
முதன் முறையாக பாலியல் உறவு கொள்ளும் போதே இது சாத்தியமாகிறது. இரு பங்காளரில் ஒருவருக்கு எய்ட்ஸ் (AIDS) இருக்குமாயின் பாலியல் உறவின் போது மற்றவருக்கு எயிட்ஸ் (AIDS) வியாதியை உண்டு பண்ணும். HIVS பரிசோதனை கூட இரண்டு கிழமைகளுக்கு முன்பிருந்த நிலையைத்தான் காட்டும். இருவருக்கும் ஆன தகுந்த பாதுகாப்பு கருத்தடை உறைகளைப் பயன்படுத்துவதே.
பாலியல் உறவுக்கு முன் செய்யும் நடவடிக்கை என்றால் என்ன?
யோனிக்குள் ஆணின் பாலியல் உறுப்பைப் புகுத்துமுன் இரு பங்காளிகளின் உணர்வுகளும் சரியாகத் தட்டி எழுப்பப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஆணுறுப்பை யோனிக்குள் நுழைக்குமுன் முன்நடவடிக்கையாக உணர்ச்சி தட்டி எழுப்பப்பட வேண்டும். பெண்களுக்கு முன்னரேயே ஆண்களுக்கு பாலியல் உணர்வு உச்சக் கட்டத்தை அடைந்து விடும். இந்த நிலை இரு பங்காளிகளும் இளைஞராக இருக்கும்போது ஏற்படுகிறது. பாலியல் உறவுக்கு முன் செய்யும் முன் நடவடிக்கை இதற்கு ஈடுசெய்கிறது. நன்மையும் புரிகிறது.
சமய தாபனங்கள் காட்டும் வழி என்ன?
பெண் முதுகுப் புறம் கீழே இருக்க உடலை நீட்டிய நிலையில் படுத்திருக்க அவள் மீது குப்புறப்படுத்து பாலியல் உறவில் ஈடுபடுவது சாதாரணமான பழைமையான உறவு முறை. இதற்கு இப்பெயரை வழங்கியவர்கள் பசுபிக் தீவினர். இத்தகைய முறைதான் இன்பத்தை அள்ளித் தரும் முறையென நம்பினார்கள். வெள்ளையரின் சமய தாபனங்கள் குந்தி இருந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து பாலியல் உறவில் ஈடுபடும் முறையை எடுத்துக்காட்டினர். வேறு விதமாகக் கூறுவதாயின் எந்த முறையிலாவது ஈடுபட்டு இன்பத்தின் உச்ச நிலையை அடைந்தால் போதும்.
பாலியல் உறவு கொள்வது முறையான வழியில் என்றீர்கள். பாலியல் உறவுக்கு வேறெதும் முறை இருக்கிறதா?
மற்ற முறைகளில் ஒன்று வாய்வழி அடுத்தது குதம் வழி.
வாய்வழிப் பாலியல் உறவு என்றால் என்ன?
வாய்வழியான உறவு என்றால் உங்கள் வாயை பங்காளியின் பாலியல் புற உறுப்பின் மீது பயன்படுத்தி பாலியல் உணர்வின் உச்சக் கட்டத்தை அடைய வைத்துவிடுவது. பெண்ணொருத்திக்காயின் பெண் குறியை நாக்காலும், உதடுகளாலும் தடவித் தூண்டிவிடுவது. ஆணுக்காயின் ஆண்குறியை எடுத்து வாய்க்குள் வைத்து விடுவது. இறுதியில் புடைத்தெழும். இறுதியில் விந்து வெளிவரும். தடுக்க வேண்டாம்!
வாய்வழியாக நடத்தப்படும் பாலுறவால் கர்ப்பம் தரிக்காது. விழுங்கிய விந்து கருப்பையை அடையாமல் வயிற்றுக்குள் நேரே சென்றுவிடும். ஆனால், விந்து வாய்க்குள் புகுந்தாலும் AIDS பரவும். உங்கள் பங்காளியைப் பற்றித் தெளிவாகத் தெரியாமல் இருந்தால் கருத்தடை உறைகளைப் பயன்படுத்த வேண்டும். இதோடு பாலியல் ரீதியில் பரவும் நோய்கள் தொற்றக்கூடும்.
குதம் வழியான பாலியல் உறவு என்றால் என்ன?
குதம் என்றால் மலவாசல் என்றும் அழைக்கலாம். குதம் வழியான பாலியல் உறவு என்பது ஆண்குறியைக் குதத்திற்குள் புகுத்தி விடுவது ஆகும். குதம் வழியிலுள்ள இறுக்கான அமைப்பு ஆணின் பாலியல் புறவுறுப்புக்கு மேலதிக தூண்டுதல் வழங்குகிறது. பெண்களைப் பொறுத்தவரை பெரும் வேதனையும் வலியும் தருகிறது. குதத்தைச் சுற்றியுள்ள தசைகளை ஓய்வில் வைத்திருக்கும் உத்தியை அறிந்திருந்தால் மட்டுமே இந்த வேதனையிலிருந்து ஓரளவு விடுதலை பெறலாம். பெண் இந்த முறையால் இன்பம் அடைவதில்லை.
அநேக ஆண்களும் பெண்களும் குதம் வழியான பாலியல் உறவினை வாழ்நாள் முழுவதும் பெறாமலேயே இருக்கின்றனர்.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் இரு ஆண்களாயின் குதம் வழியாக ஆண்குறி நுழையும் போது இருவருக்கும் இன்ப உணர்வு ஏற்படுகிறது. புறஸ்றோற் சுரப்பியின் இன்பம் வாங்கிகளின் மீது ஆண்குறி உராயும் போது இன்பம் சுரக்கின்றது. (புறஸ்றோற் சுரப்பி தான் விந்தை திரவம் கலந்ததாகத் தருகிறது)
குதவழி பாலியல் உறவாலும் கருத்தரிப்பு நடைபெறாது. ஆனால் AIDS பரவும் அபாயம் பெரிதும் உண்டு. குதப்பாதை மிகவும் இறுக்கமாக இருப்பதனால் அதிக அளவு உராய்வும் அதன் பயனாகச் சிறுகாயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக விந்து மற்றவரின் குருதி ஓட்டத்துடன் கலந்து விட இடமுண்டு. மற்றவரிடம் AIDS வியாதிக்கான HIV இல்லை என்று உறுதியாகத் தெரியாவிட்டால் குதவழி பாலியல் உறவுக்கென அமைந்த கருத்தடை உறையையோ அல்லது சாதாரண கருத்தடை உறைதான் இருப்பின் அதில் இரண்டு உறைகளையோ அணிந்து கொண்டு பாலியல் உறவில் ஈடுபட வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பருவமானவர்கள்
பாலியலால் பரவும் நோய்கள் (SEXUALLY TRANSMITTED DISEASES)
AIDS என்றால் என்ன?
AIDS என்பது Acquired Immune Deficiency Syndrome அதாவது தேடிக் கொண்ட நோய் எதிர்ப்புக் குறைபாட்டு நோய்த் தொகுதி சுருக்கமாக (தே.நோ.கு.தொ) எனலாம். தே.நோ.கு.தொ HIV என்கின்ற வைரசால் ஏற்படுகிறது. HIV என்பது Human Immuno deficiency Virus. அதாவது மானிட இன நோய் எதிர்ப்புக் குறைப்பாட்டு வைரஸ் ஆகும். சுருக்கமாகக் குறிப்பிட்டால் மா.நோ.வை. எனலாம். எல்லோரும் அறிந்தது HIV என்பதே. HIV வைரஸ் என்பது நோய் எதிர்ப்பு ஏற்பாட்டுக் கலங்களோடு போரிட்டு வென்று விடுகிறது. ஒருமுறை இந்த வைரஸ் எமது நோய் எதிர்ப்புக் கலங்களை வென்று உடலுக்குள் புகுந்துவிட்டால் AIDS வியாதி உடலில் விருத்தியடைய 8 முதல் 10 வருடங்கள் வரை எடுக்கும். HIV இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்காவிட்டால் இருப்பதே தெரியாது. மற்றவர்களுக்கும் அப்படியே. 8-10 வருடங்களில் இந்த வைரஸ் பரவும்.
உங்கள் நோய் எதிர்ப்பு ஏற்பாட்டை HIV வெற்றி கொண்டுவிடுமாயின் சாதாரணமாக உங்களைப் பீடிக்காமல் தடுக்கும் ஏற்பாடு தகர்க்கப்பட்டுவிடும். அதன் பின் மரணம் சம்பவிக்கும்.
AIDS ஆபத்தானது. மரணத்தில் தான் முடியும். இதுநாள்வரை இந்நோயைக் குணப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை.
HIV எப்படி வருகிறது?
HIV பீடிக்கப்பட்டவரிடமிருந்து பீடிக்கப்படாதவருக்கு உடல் திரவங்கள் ஊடாக அதாவது குறிப்பாக பாதகத்துக்குள்ளான குருதி அல்லது பாதகத்துக்குள்ளான விந்து வழியாகப் பரவுகிறது.
குருதி பாதிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு பரவுவது இரு முறைகளில் ஆகும். ஒன்று குருதி வழங்குவதன் மூலமும் அல்லது பிணியாளருக்கு மருந்து செலுத்திய ஊசியைக் கொண்டு மற்றுமொரு பாதிக்கப்படாதவருக்குச் மருந்து செலுத்தும் போதும் ஆகும்.
குருதி வழங்கும் போது வழங்குபவரின் குருதியில் HIV இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும். மருந்து செலுத்தும் போது ஏற்றும் குழாயில் புதியதோர் ஊசி உங்கள் முன்பாகப் புகுத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெறொரு விதமாகவும் குருதி மூலம் HIV பரவுகிறது. வெளிப்புறக் காயங்களின் மூலம் பாதிக்கப்பட்டவரின் குருதி பாதிக்கப்படாதவருக்கும் பரவும்.
பாலியல் உறவு மூலம் பாதிக்கப்பட்டவரின் விந்து பாதிக்கப்படாதவருக்கு பரவும்.
இதுதான் HIV பரவும் இருவழி. வைரஸ் உடையத்தக்கது. உடலுக்கு வெளியே இந்த வைரசு நீண்ட நேரம் உயிர்வாழாது. அதனால் கழிவிடங்கள், கட்டியணைத்தல், முத்தமிடல், கைகளைத் தழுவுதல் மூலம் நோயால் பீடிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு நோய் பரவாது. நீச்சல் குளங்களில் நுளம்பு கடிப்பதாலும் பரவிவிடாது.
உடல் திரவங்கள் என்றால் என்ன?
உடல் திரவங்கள் என்று குறிப்பிடப்படுபவை குருதி, விந்து, யோனிக்கசிவுகள், எச்சில் ஆகும்.
அப்படியென்றால் குருதி, விந்து ஆகிய இரண்டு மட்டும் ஏன் குறிப்பிடப்படுகின்றன?
இரத்த வழங்கலின் போது, பயன்படுத்தப்பட்ட மருந்து செலுத்தும் ஊசிகளால் தோலுக்கூடாக HIV குருதியினூடாக மற்றவரின் உடலினுள் புகுகிறது. இது உடலின் மேற்பகுதியில் தங்கி இருப்பதில்லை. பாலியல் உறவின் போது உறுப்பு உள்நுழைவு காரணமாக சிறு சிறு காயங்கள் ஏற்படுவதனால் HIV உள்ள விந்து தோல் ஊடாக உடல் எங்கும் பரவுகிறது.
பிறெஞ்சு முத்தத்தாலும் HIV புகுவதற்கு ஓரளவு இடமுண்டு. பாதிக்கப்படாதவரின் வாயில் இருக்கும் காயங்களில் பாதிக்கப்பட்டவரின் எச்சில் ஊடாக HIV பரவக்கூடும். ஆனால் ஆச்சரியம் என்வென்றால் HIV மக்கள் நினைப்பது போல மற்றவருக்குப் பரவிவிடாது. காயங்கள் எதனையும் சந்திக்காது வயிற்றை அடையும் எச்சில் வயிற்றிலுள்ள பலமான அமிலங்களால் சமிபாடு அடைந்து விடுகிறது.
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கும் HIV தொற்றுவதில்லை. ஏனெனில் அவர்களின் பாலுறவின் போது பாலியல் உறுப்புகள் உள்நுழைவதில்லை. அதனால் HIV உட்புக வாய்ப்பில்லை. அதேவேளையில் யோனியிலோ, குதத்திலோ, ஆண்குறியிலோ எவ்வித வெட்டோ காயமோ இல்லாவிடினும் HIV நுழைந்து பரவுவது சற்று கடினமாக இருக்கும். இந்த வைரசு பிளவுபடக்கூடியது. ஆதலால், தோல் உட்புகாது விடின் இறந்துவிடும். பாலியல் உறவு கொள்ளும் போது சின்னஞ்சிறிய வெட்டோ காயமோ ஏற்பட்டு இருக்கின்றதோ என்பது தெரியாதிருக்கும். ஆகவே ஓரளவு கவனமாய் இருப்பது நல்லது .
AIDS என்பது ஓரினச் சேர்க்கை நோய் எனப்படுவது ஏன்?
இத்தகைய கருத்து வெளிவந்ததற்குக் காரணம் ஆரம்பத்தில் AIDS நோயாளராக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களே. அவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாலல்ல. பாலியல் உறவு கொண்டதாலேயே. பாலியல் உறவால் ஒருவரிடமிருந்து பலருக்குப் பரவக்கூடும். இதன் விளைவாக ஆண்கள் கூடுதலான கவனத்துடன் நடக்கத் தொடங்கி ஆண் கருத்தடை உறைகளைப் பயன்படுத்துவதோடு HIV பற்றிய அறிவையும் மற்றவர்களுக்குப் புகட்ட ஆரம்பித்து விட்டனர்.
AIDS என்பது வேறொருவரின் பிரச்சினைதான் என்று நினைப்பது முட்டாள்தனம். தற்காலத்தில் பெருமளவில் AIDS நோயால் பீடிக்கப்படுபவர்கள் ஆண் பெண் பாலியல் உறவினாலேயே ஆகும். குறிப்பாக பலருடன் பாலியல் உறவு கொள்ளும் போது ஏதோ ஒருவர் HIV உடையவராயின் இந்நோய் பரவும். அடுத்தபடியாக AIDS நோயாளருக்குப் பயன்படுத்திய மருந்து செலுத்தும் ஊசியையே நோயால் பீடிக்கப்படாதவருக்கும் உபயோகிப்பதால் ஏற்படும்.
கருத்தடை உறை (Condom) என்றால் என்ன?
(கருத்தடை உறை பாலியல் உறவு கொள்ளும் போது ஆணின் பாலியல் உறுப்பு மீது அணியும் றப்பர் உறை)
உறைகளில் உள்ள இடைவெளியில் வெளிப்படும் மேலதிக விந்து தேங்கி விடுவதால் நோயற்றவரின் பாலியல் உறுப்பிலுள்ள காயங்களில் பட்டு உடலில் பரவுவது தவிர்க்கப்படுகிறது. உடல் திரவங்களாலான குருதி ஊடாகப் பரவும் வாய்ப்பை இழக்கிறது.
கருத்தடை உறை கருத்தரிப்பதையும் தடுக்கிறது. இதனால் ஆணின் விந்து பெண்ணின் முட்டையைச் சந்தித்து உறவு கொள்ளும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது.
கருத்தடை உறைகள் ஒருமுறைதான் பயன்படுத்தப்படுகிறது. பாலியல் உறவுக்குப் பின் சேர்ந்த விந்துக்களுடன் வீசி எறியப்படுகிறது.
தற்காலத்தில் பெண்கள் அணியக்கூடிய கருத்தடையும் வெளிவந்துவிட்டது. யோனித்துவாரத்தின் மிக அடிப்பகுதியில் வளையம் ஒன்றால் முனை பிடிக்கப்படுகிறது. பூப்பு என்புக்கு முன் தொடங்கி கருப்பைக் கழுத்துப் பகுதி வரை செல்கிறது. இதன் நோக்கம் ஆணின் கருத்தடை உறையை மட்டும் நம்பியிராமல் பெண் தனது சொந்தப் பாதுகாப்பு நிமித்தம் பயன்படுத்துவது. ஆண் கருத்தடை உறையைப் பயன்படுத்த விரும்பாவிட்டாலும் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
பாலியல் உறவினால் HIV பரவுவதைத் தடுக்கவுள்ள ஒரே வழி கருத்தடை உறையைப் பயன்படுத்துவது.
பாலியல் உறவு மூலம் பரவி குணப்படுத்த முடியாத நோய் வேறெதும் உள்ளதா?
ஆம். ஹேப்ஸ். இந்நோயினால் மரணம் சம்பவிக்காது. வாழ்நாள் முழுவதும் உடனிருந்து அவ்வப்போது வேதனைதந்து கொண்டிருக்கும்.
AIDS என்றால் என்ன?
AIDS என்பது Acquired Immune Deficiency Syndrome அதாவது தேடிக் கொண்ட நோய் எதிர்ப்புக் குறைபாட்டு நோய்த் தொகுதி சுருக்கமாக (தே.நோ.கு.தொ) எனலாம். தே.நோ.கு.தொ HIV என்கின்ற வைரசால் ஏற்படுகிறது. HIV என்பது Human Immuno deficiency Virus. அதாவது மானிட இன நோய் எதிர்ப்புக் குறைப்பாட்டு வைரஸ் ஆகும். சுருக்கமாகக் குறிப்பிட்டால் மா.நோ.வை. எனலாம். எல்லோரும் அறிந்தது HIV என்பதே. HIV வைரஸ் என்பது நோய் எதிர்ப்பு ஏற்பாட்டுக் கலங்களோடு போரிட்டு வென்று விடுகிறது. ஒருமுறை இந்த வைரஸ் எமது நோய் எதிர்ப்புக் கலங்களை வென்று உடலுக்குள் புகுந்துவிட்டால் AIDS வியாதி உடலில் விருத்தியடைய 8 முதல் 10 வருடங்கள் வரை எடுக்கும். HIV இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்காவிட்டால் இருப்பதே தெரியாது. மற்றவர்களுக்கும் அப்படியே. 8-10 வருடங்களில் இந்த வைரஸ் பரவும்.
உங்கள் நோய் எதிர்ப்பு ஏற்பாட்டை HIV வெற்றி கொண்டுவிடுமாயின் சாதாரணமாக உங்களைப் பீடிக்காமல் தடுக்கும் ஏற்பாடு தகர்க்கப்பட்டுவிடும். அதன் பின் மரணம் சம்பவிக்கும்.
AIDS ஆபத்தானது. மரணத்தில் தான் முடியும். இதுநாள்வரை இந்நோயைக் குணப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை.
HIV எப்படி வருகிறது?
HIV பீடிக்கப்பட்டவரிடமிருந்து பீடிக்கப்படாதவருக்கு உடல் திரவங்கள் ஊடாக அதாவது குறிப்பாக பாதகத்துக்குள்ளான குருதி அல்லது பாதகத்துக்குள்ளான விந்து வழியாகப் பரவுகிறது.
குருதி பாதிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு பரவுவது இரு முறைகளில் ஆகும். ஒன்று குருதி வழங்குவதன் மூலமும் அல்லது பிணியாளருக்கு மருந்து செலுத்திய ஊசியைக் கொண்டு மற்றுமொரு பாதிக்கப்படாதவருக்குச் மருந்து செலுத்தும் போதும் ஆகும்.
குருதி வழங்கும் போது வழங்குபவரின் குருதியில் HIV இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும். மருந்து செலுத்தும் போது ஏற்றும் குழாயில் புதியதோர் ஊசி உங்கள் முன்பாகப் புகுத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெறொரு விதமாகவும் குருதி மூலம் HIV பரவுகிறது. வெளிப்புறக் காயங்களின் மூலம் பாதிக்கப்பட்டவரின் குருதி பாதிக்கப்படாதவருக்கும் பரவும்.
பாலியல் உறவு மூலம் பாதிக்கப்பட்டவரின் விந்து பாதிக்கப்படாதவருக்கு பரவும்.
இதுதான் HIV பரவும் இருவழி. வைரஸ் உடையத்தக்கது. உடலுக்கு வெளியே இந்த வைரசு நீண்ட நேரம் உயிர்வாழாது. அதனால் கழிவிடங்கள், கட்டியணைத்தல், முத்தமிடல், கைகளைத் தழுவுதல் மூலம் நோயால் பீடிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு நோய் பரவாது. நீச்சல் குளங்களில் நுளம்பு கடிப்பதாலும் பரவிவிடாது.
உடல் திரவங்கள் என்றால் என்ன?
உடல் திரவங்கள் என்று குறிப்பிடப்படுபவை குருதி, விந்து, யோனிக்கசிவுகள், எச்சில் ஆகும்.
அப்படியென்றால் குருதி, விந்து ஆகிய இரண்டு மட்டும் ஏன் குறிப்பிடப்படுகின்றன?
இரத்த வழங்கலின் போது, பயன்படுத்தப்பட்ட மருந்து செலுத்தும் ஊசிகளால் தோலுக்கூடாக HIV குருதியினூடாக மற்றவரின் உடலினுள் புகுகிறது. இது உடலின் மேற்பகுதியில் தங்கி இருப்பதில்லை. பாலியல் உறவின் போது உறுப்பு உள்நுழைவு காரணமாக சிறு சிறு காயங்கள் ஏற்படுவதனால் HIV உள்ள விந்து தோல் ஊடாக உடல் எங்கும் பரவுகிறது.
பிறெஞ்சு முத்தத்தாலும் HIV புகுவதற்கு ஓரளவு இடமுண்டு. பாதிக்கப்படாதவரின் வாயில் இருக்கும் காயங்களில் பாதிக்கப்பட்டவரின் எச்சில் ஊடாக HIV பரவக்கூடும். ஆனால் ஆச்சரியம் என்வென்றால் HIV மக்கள் நினைப்பது போல மற்றவருக்குப் பரவிவிடாது. காயங்கள் எதனையும் சந்திக்காது வயிற்றை அடையும் எச்சில் வயிற்றிலுள்ள பலமான அமிலங்களால் சமிபாடு அடைந்து விடுகிறது.
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கும் HIV தொற்றுவதில்லை. ஏனெனில் அவர்களின் பாலுறவின் போது பாலியல் உறுப்புகள் உள்நுழைவதில்லை. அதனால் HIV உட்புக வாய்ப்பில்லை. அதேவேளையில் யோனியிலோ, குதத்திலோ, ஆண்குறியிலோ எவ்வித வெட்டோ காயமோ இல்லாவிடினும் HIV நுழைந்து பரவுவது சற்று கடினமாக இருக்கும். இந்த வைரசு பிளவுபடக்கூடியது. ஆதலால், தோல் உட்புகாது விடின் இறந்துவிடும். பாலியல் உறவு கொள்ளும் போது சின்னஞ்சிறிய வெட்டோ காயமோ ஏற்பட்டு இருக்கின்றதோ என்பது தெரியாதிருக்கும். ஆகவே ஓரளவு கவனமாய் இருப்பது நல்லது .
AIDS என்பது ஓரினச் சேர்க்கை நோய் எனப்படுவது ஏன்?
இத்தகைய கருத்து வெளிவந்ததற்குக் காரணம் ஆரம்பத்தில் AIDS நோயாளராக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களே. அவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாலல்ல. பாலியல் உறவு கொண்டதாலேயே. பாலியல் உறவால் ஒருவரிடமிருந்து பலருக்குப் பரவக்கூடும். இதன் விளைவாக ஆண்கள் கூடுதலான கவனத்துடன் நடக்கத் தொடங்கி ஆண் கருத்தடை உறைகளைப் பயன்படுத்துவதோடு HIV பற்றிய அறிவையும் மற்றவர்களுக்குப் புகட்ட ஆரம்பித்து விட்டனர்.
AIDS என்பது வேறொருவரின் பிரச்சினைதான் என்று நினைப்பது முட்டாள்தனம். தற்காலத்தில் பெருமளவில் AIDS நோயால் பீடிக்கப்படுபவர்கள் ஆண் பெண் பாலியல் உறவினாலேயே ஆகும். குறிப்பாக பலருடன் பாலியல் உறவு கொள்ளும் போது ஏதோ ஒருவர் HIV உடையவராயின் இந்நோய் பரவும். அடுத்தபடியாக AIDS நோயாளருக்குப் பயன்படுத்திய மருந்து செலுத்தும் ஊசியையே நோயால் பீடிக்கப்படாதவருக்கும் உபயோகிப்பதால் ஏற்படும்.
கருத்தடை உறை (Condom) என்றால் என்ன?
(கருத்தடை உறை பாலியல் உறவு கொள்ளும் போது ஆணின் பாலியல் உறுப்பு மீது அணியும் றப்பர் உறை)
உறைகளில் உள்ள இடைவெளியில் வெளிப்படும் மேலதிக விந்து தேங்கி விடுவதால் நோயற்றவரின் பாலியல் உறுப்பிலுள்ள காயங்களில் பட்டு உடலில் பரவுவது தவிர்க்கப்படுகிறது. உடல் திரவங்களாலான குருதி ஊடாகப் பரவும் வாய்ப்பை இழக்கிறது.
கருத்தடை உறை கருத்தரிப்பதையும் தடுக்கிறது. இதனால் ஆணின் விந்து பெண்ணின் முட்டையைச் சந்தித்து உறவு கொள்ளும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது.
கருத்தடை உறைகள் ஒருமுறைதான் பயன்படுத்தப்படுகிறது. பாலியல் உறவுக்குப் பின் சேர்ந்த விந்துக்களுடன் வீசி எறியப்படுகிறது.
தற்காலத்தில் பெண்கள் அணியக்கூடிய கருத்தடையும் வெளிவந்துவிட்டது. யோனித்துவாரத்தின் மிக அடிப்பகுதியில் வளையம் ஒன்றால் முனை பிடிக்கப்படுகிறது. பூப்பு என்புக்கு முன் தொடங்கி கருப்பைக் கழுத்துப் பகுதி வரை செல்கிறது. இதன் நோக்கம் ஆணின் கருத்தடை உறையை மட்டும் நம்பியிராமல் பெண் தனது சொந்தப் பாதுகாப்பு நிமித்தம் பயன்படுத்துவது. ஆண் கருத்தடை உறையைப் பயன்படுத்த விரும்பாவிட்டாலும் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
பாலியல் உறவினால் HIV பரவுவதைத் தடுக்கவுள்ள ஒரே வழி கருத்தடை உறையைப் பயன்படுத்துவது.
பாலியல் உறவு மூலம் பரவி குணப்படுத்த முடியாத நோய் வேறெதும் உள்ளதா?
ஆம். ஹேப்ஸ். இந்நோயினால் மரணம் சம்பவிக்காது. வாழ்நாள் முழுவதும் உடனிருந்து அவ்வப்போது வேதனைதந்து கொண்டிருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பருவமானவர்கள்
ஹேப்ஸ் (Herpes) என்றால் என்ன?
ஹேப்ஸ் ஒரு வைரஸ். இது உடலிற்குள் இருக்கும். அடிக்கடி வாயிலும் பாலியல் உறவு கொள்ளும் பகுதியிலும் குதத்திலும் தொப்புளங்களாகவும் புண்களாகவும் தலை காட்டும். எப்பொழுதும் ஒரே இடத்தில் தான் இந்தத் தொப்புளங்களும் புண்களும் காணப்படும். இவை கடும் வேதனை தருவன. ஏனெனில் உணர்வு நரம்புகளில் வீக்கம் தோன்றும். உளைச்சல் படும் போது ஹேப்ஸ் புண்கள் தோன்றுகின்றன.
நோவைத் தணிக்கக்கூடிய சில கழிம்புகள் உள்ளன. ஆனால் அவற்றால் முற்றாகக் குணப்படுத்த முடியாது. நோயையும் ஒழித்துவிட முடியாது. எந்த நேரத்திலும் மீண்டும் வரும்.
இதனை தவிர்த்துக் கொள்ளவுள்ள ஒரே வழி ஹேப்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவரோடு எவ்வித பாலுறவும் வைக்காமல் இருப்பதே. ஹேப்ஸ் புண்கள் ஆறும் வரையாவது தவிர்ப்பது நல்லது.
எது சாதாரணமான பாலியல் உறவால் பரவும் நோய்?
சிஸ்ரிரிஸ் (Cystitis)
சிஸ்ரிரிஸ் என்பது சிறுநீரைச் சேகரித்து வைக்கும் மென் சவ்வினாலான பையில் ஏற்படும் வீக்கம் ஆகும். பெரும்பாலும் இது பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனை தேனிலவு நோய்த் தொகுதி என்றும் அழைப்பர். ஏனெனில் பெண்கள் முதன் முறையாகப் பாலுறவு கொள்ளும் போதுதான் ஏற்படுகிறது. பாலியல் உறவால் பரவும் நோய்களில் மிகவும் குறைந்த வீரியமுடையது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் பெண்கள் ஓரளவு பயந்து விடுவார்கள்.
சிஸ்ரிரிஸ் ஆண்களோடு பாலுறவு கொள்வதால் மட்டும் பரவுவதில்லை. கருத்தடை உறை அணிந்து பாலுறவு கொண்டாலும் கூட ஏற்படுகிறது. உண்மையில் நடப்பது இதுதான். பெண்ணின் வெளிப்புற பிறப்புறுப்பிலிருக்கும் பக்ரீறியா பாலியல் உறவின்போது ஆண்குறியின் அசைவுகளினால் சிறுநீர் சேகரிக்கப்படும் பையை அடைகிறது.
இந்நோயின் அறிகுறி பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இது வயிற்றில் அதிக நோவைத் தருகிறது. நோயை உணரும் நரம்புகள் பெண்ணின் பிறப்புறுப்புக் கருகில் இருப்பதனால் பாலியல் உறவின் போது ஏற்படும் உராய்வை ஒத்து இருக்கிறது. ஓரிரு நாட்களுக்குப் பிறகு சிறுநீரில் குருதியின் அடையாளம் தென்படுகிறது.
பெண்ணிற்கு சிஸ்ரிரிஸ் அடிக்கடி ஏற்பட்டால் ஆணின் சிறுநீரில் பக்ரீறியா உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். அவன் மீண்டும் நோய் பரவ வழி வகுப்பான். வேறொரு ஆலோசனை என்னவென்றால் பாலியல் உறவுமுடிந்தவுடன் சிறுநீர் கழியுங்கள். அல்லது சிறுநீரின் அமிலத்தன்மை அதிகரிக்கும் விதத்தில் பழச் சாற்றைப் பருகுங்கள்.
பாலியல் உறவால் பரவக்கூடியதும் குணப்படுத்தக்கூடியதுமான பயங்கரமான நோய் எது?
ரிறைகோமோனியாசிஸ், கண்டியாசிஸ், கிளாமீடியா, கொன்ஹோறியா, சிபிலிஸ் ஆகியவை இப்பட்டியலில் அடங்கும்.
இவை நுண்ணுயிர்க் கொல்லிகளால் குணமாக்கலாம். சில மாத்திரைகளை யோனி முகிழிற்குள் புகுத்திவைப்பதால் சுகப்படுத்தலாம். இந்நோயின் புதிய தோற்றங்கள் நடைமுறையிலுள்ள நுண்ணுயிர்க் கொல்லிக்குக் கட்டுப்படாது. மேலும் வீரியம் கூடிய நுண்ணுயிர்க் கொல்லியே தேவைப்படுகிறது.
ரிறைகோ மோனியாசிஸ் (Trichomoniasis) என்றால் என்ன?
யோனி முகிழிலிருந்து துர்நாற்றம் வீசும் மஞ்சள் கலந்த வெண்ணிற கழிவுப் பொருள் கசிவடைகிறது. ஆணின் ஆண்குறி வீங்கி இருக்கும். அல்லது பெண்ணின் யோனிப் பகுதியில் சொறிவும் வீக்கமும் காணப்படும்.
கண்டிடியாசிஸ் (Candidiasis) என்றால் என்ன?
இந்நோயின் அறிகுறி யோனி முகிழிலிருந்து தடிப்பான வெள்ளை நிறக் கழிவு கசிகிறது. யோனிப் பிரதேசத்தில் சொறியும் உணர்ச்சி தோன்றுகிறது. இது பொதுவாகக் காணப்படும் நோய். இதனை சாதாரணமாகக் குணப்படுத்தலாம். பெண்ணிற்கு மட்டும் ஏற்பட்டாலும் கூட ஆண் பெண் இருவரையும் வைத்திய சிகிச்சைக்குட்படுத்தல் வேண்டும்.
கிளமீடியா (Chlamydia) நோய் இருக்கிறது என்று எப்படி அறியலாம்?
இந்நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத போதிலும் ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்ச்சி தென்படும்.
பெண்களைப் பொறுத்தவரை இந்நோயால் பெரிய ஆபத்து யாதெனில் இடுப்பு வீக்கநோய் ஏற்பட சூலகங்களிலிருந்து கருப்பைக்கு கரு முட்டைகளை எடுத்துவரும் குழாய்கள் அடைபடுகிறது. இதனால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. அதோடு கருப்பைக்கு வெளியே கருவுண்டாகிறது. கருவில் வளரும் குழந்தை கருப்பைக்கு சூலகங்களிலிருந்து வரும் முட்டை எடுத்துவரும் குழாயில் (குயடடழியைn வரடிநள) நாட்டப்பட்டு வளர்கிறது. அதாவது கருப்பையிலிருந்து வெகுதூரத்தில் வளருகிறது. இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அவசரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்படல் வேண்டும். இல்லையேல் குழாய்க்குள் குழந்தை வளர்ந்து வந்தால் குழாய் வெடித்துப் போக ஏதுவாகும்.
கிளமீடியா இருப்பதாகச் சந்தேகம் எழுந்தால் பாலியல் உறவு கொண்ட ஆண் - பெண் உடன் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டும்.
கொன்ஹொறியா (Gonhorrea) நோயின் அறிகுறிகள் என்ன?
இதுவும் கிளாமீடியா போன்றதே. கிளாமீடியாவால் வரும் ஆபத்துக்களே இந்நோயினாலும் ஏற்படுகிறது. ஆனால் இதனால் தொண்டை வலியும் வயிற்றோட்டமும் ஏற்படுகிறது.
இதனாலும் இடுப்பென்புப் பகுதியில் வீக்கநோய் ஏற்படுகிறது. ஆண்களுக்கு புறஸ்ரேட் சுரப்பியில் நோய் தொற்றிப் பரவுகிறது. இருவருக்கும் மூட்டுகள், தோல், குருதியோட்டம் ஆகியவற்றில் பரவுகிறது.
சிபிலிஸ் (Syphilis) நோயின் அறிகுறிகள் என்ன?
இது இருப்பதன் அறிகுறி ஆண்குறியின் மீது நோவற்ற வடு காணப்படும். இது போலவே பெண்ணின் யோனி முகிழ்வாயிலும் அல்லது குதவாசலிலும் காணப்படும்.
இந்த நிலையில் நோயைக் குணப்படுத்தாவிட்டால் தோலில் கொப்பிளங்கள் தோன்றும், அதோடு நோயாளர் பார்வை இழப்பார். இந்த நிலைக்குப் பிறகும் நோயைக் குணப்படுத்த முயலாவிட்டால் இதயமும் மூளையும் பாதிப்புக்குள்ளாகும். இதன் விளைவாக மரணமும் சம்பவிக்கும்.
சிபிலிஸால் பீடிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறக்கின்ற குழந்தையும் கூட சிபிலிஸ் உடன் தான் பிறக்கும். பார்வை குன்றியும், சித்தம் பேதலித்தும், உடல் ஊனமுற்றும் இருக்கும்.
சிபிலிஸ் நோய்க்கு இலக்கானால் பாலியல் உறவுகொண்ட இருவரையும் பரிசோதனைக்குட்படுத்தி வைத்திய சிகிச்சை செய்தல் வேண்டும்.
பாலியல் உறவால் ஏற்பட்ட குணப்படுத்த முடியாத வேறேதும் நோய் இருக்கிறதா?
ஆம். செங்கமாரி - மங்கமாரி (Hepatitis B) இதற்கான தடுப்பூசி இருக்கிறது தான். இந்நோய் ஓய்வாய் இருப்பதாலும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதாலும் சாதாரண செங்கமாரி நோயைப் போலவே குணப்படுத்தலாம். ஆனால் இந்நோய் உங்களைப் பலவீனமாக்கி, ஈரலையும் சிதைவுக்குள்ளாக்கி விடும்.
செங்கமாரி மங்கமாரி (Hepatitis B) என்னால் என்ன?
இந்நோயின் அறிகுறிகள் இருமல், தொண்டைப்புண், மூட்டு வலி என்பனவாகும். அதோடு செங்கமாரி அறிகுறிகளான கடும் அலுப்பும் உணவில் விருப்பு இன்மையும் ஆகும். காமாலை நோயின் அறிகுறிகளான தோலின் நிறம் மஞ்சள் ஆவதும் கண்கள் வெளிறி இருப்பதும் சிறுநீர் கடும் கபில நிறமாயும், மலம் வெண்களிமண் உருவிலும் தோன்றும்.
செங்கமாரி - மங்கமாரி நோய் HIV போல மாசுபட்ட குருதியாலும் மாசுபடர்ந்த மருந்து செலுத்தும் ஊசியாலும் பரவக்கூடியது. HIV யை விட தொற்றில் பரவுவதில் தீவிரமானது.
ஹேப்ஸ் ஒரு வைரஸ். இது உடலிற்குள் இருக்கும். அடிக்கடி வாயிலும் பாலியல் உறவு கொள்ளும் பகுதியிலும் குதத்திலும் தொப்புளங்களாகவும் புண்களாகவும் தலை காட்டும். எப்பொழுதும் ஒரே இடத்தில் தான் இந்தத் தொப்புளங்களும் புண்களும் காணப்படும். இவை கடும் வேதனை தருவன. ஏனெனில் உணர்வு நரம்புகளில் வீக்கம் தோன்றும். உளைச்சல் படும் போது ஹேப்ஸ் புண்கள் தோன்றுகின்றன.
நோவைத் தணிக்கக்கூடிய சில கழிம்புகள் உள்ளன. ஆனால் அவற்றால் முற்றாகக் குணப்படுத்த முடியாது. நோயையும் ஒழித்துவிட முடியாது. எந்த நேரத்திலும் மீண்டும் வரும்.
இதனை தவிர்த்துக் கொள்ளவுள்ள ஒரே வழி ஹேப்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவரோடு எவ்வித பாலுறவும் வைக்காமல் இருப்பதே. ஹேப்ஸ் புண்கள் ஆறும் வரையாவது தவிர்ப்பது நல்லது.
எது சாதாரணமான பாலியல் உறவால் பரவும் நோய்?
சிஸ்ரிரிஸ் (Cystitis)
சிஸ்ரிரிஸ் என்பது சிறுநீரைச் சேகரித்து வைக்கும் மென் சவ்வினாலான பையில் ஏற்படும் வீக்கம் ஆகும். பெரும்பாலும் இது பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனை தேனிலவு நோய்த் தொகுதி என்றும் அழைப்பர். ஏனெனில் பெண்கள் முதன் முறையாகப் பாலுறவு கொள்ளும் போதுதான் ஏற்படுகிறது. பாலியல் உறவால் பரவும் நோய்களில் மிகவும் குறைந்த வீரியமுடையது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் பெண்கள் ஓரளவு பயந்து விடுவார்கள்.
சிஸ்ரிரிஸ் ஆண்களோடு பாலுறவு கொள்வதால் மட்டும் பரவுவதில்லை. கருத்தடை உறை அணிந்து பாலுறவு கொண்டாலும் கூட ஏற்படுகிறது. உண்மையில் நடப்பது இதுதான். பெண்ணின் வெளிப்புற பிறப்புறுப்பிலிருக்கும் பக்ரீறியா பாலியல் உறவின்போது ஆண்குறியின் அசைவுகளினால் சிறுநீர் சேகரிக்கப்படும் பையை அடைகிறது.
இந்நோயின் அறிகுறி பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இது வயிற்றில் அதிக நோவைத் தருகிறது. நோயை உணரும் நரம்புகள் பெண்ணின் பிறப்புறுப்புக் கருகில் இருப்பதனால் பாலியல் உறவின் போது ஏற்படும் உராய்வை ஒத்து இருக்கிறது. ஓரிரு நாட்களுக்குப் பிறகு சிறுநீரில் குருதியின் அடையாளம் தென்படுகிறது.
பெண்ணிற்கு சிஸ்ரிரிஸ் அடிக்கடி ஏற்பட்டால் ஆணின் சிறுநீரில் பக்ரீறியா உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். அவன் மீண்டும் நோய் பரவ வழி வகுப்பான். வேறொரு ஆலோசனை என்னவென்றால் பாலியல் உறவுமுடிந்தவுடன் சிறுநீர் கழியுங்கள். அல்லது சிறுநீரின் அமிலத்தன்மை அதிகரிக்கும் விதத்தில் பழச் சாற்றைப் பருகுங்கள்.
பாலியல் உறவால் பரவக்கூடியதும் குணப்படுத்தக்கூடியதுமான பயங்கரமான நோய் எது?
ரிறைகோமோனியாசிஸ், கண்டியாசிஸ், கிளாமீடியா, கொன்ஹோறியா, சிபிலிஸ் ஆகியவை இப்பட்டியலில் அடங்கும்.
இவை நுண்ணுயிர்க் கொல்லிகளால் குணமாக்கலாம். சில மாத்திரைகளை யோனி முகிழிற்குள் புகுத்திவைப்பதால் சுகப்படுத்தலாம். இந்நோயின் புதிய தோற்றங்கள் நடைமுறையிலுள்ள நுண்ணுயிர்க் கொல்லிக்குக் கட்டுப்படாது. மேலும் வீரியம் கூடிய நுண்ணுயிர்க் கொல்லியே தேவைப்படுகிறது.
ரிறைகோ மோனியாசிஸ் (Trichomoniasis) என்றால் என்ன?
யோனி முகிழிலிருந்து துர்நாற்றம் வீசும் மஞ்சள் கலந்த வெண்ணிற கழிவுப் பொருள் கசிவடைகிறது. ஆணின் ஆண்குறி வீங்கி இருக்கும். அல்லது பெண்ணின் யோனிப் பகுதியில் சொறிவும் வீக்கமும் காணப்படும்.
கண்டிடியாசிஸ் (Candidiasis) என்றால் என்ன?
இந்நோயின் அறிகுறி யோனி முகிழிலிருந்து தடிப்பான வெள்ளை நிறக் கழிவு கசிகிறது. யோனிப் பிரதேசத்தில் சொறியும் உணர்ச்சி தோன்றுகிறது. இது பொதுவாகக் காணப்படும் நோய். இதனை சாதாரணமாகக் குணப்படுத்தலாம். பெண்ணிற்கு மட்டும் ஏற்பட்டாலும் கூட ஆண் பெண் இருவரையும் வைத்திய சிகிச்சைக்குட்படுத்தல் வேண்டும்.
கிளமீடியா (Chlamydia) நோய் இருக்கிறது என்று எப்படி அறியலாம்?
இந்நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத போதிலும் ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்ச்சி தென்படும்.
பெண்களைப் பொறுத்தவரை இந்நோயால் பெரிய ஆபத்து யாதெனில் இடுப்பு வீக்கநோய் ஏற்பட சூலகங்களிலிருந்து கருப்பைக்கு கரு முட்டைகளை எடுத்துவரும் குழாய்கள் அடைபடுகிறது. இதனால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. அதோடு கருப்பைக்கு வெளியே கருவுண்டாகிறது. கருவில் வளரும் குழந்தை கருப்பைக்கு சூலகங்களிலிருந்து வரும் முட்டை எடுத்துவரும் குழாயில் (குயடடழியைn வரடிநள) நாட்டப்பட்டு வளர்கிறது. அதாவது கருப்பையிலிருந்து வெகுதூரத்தில் வளருகிறது. இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அவசரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்படல் வேண்டும். இல்லையேல் குழாய்க்குள் குழந்தை வளர்ந்து வந்தால் குழாய் வெடித்துப் போக ஏதுவாகும்.
கிளமீடியா இருப்பதாகச் சந்தேகம் எழுந்தால் பாலியல் உறவு கொண்ட ஆண் - பெண் உடன் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டும்.
கொன்ஹொறியா (Gonhorrea) நோயின் அறிகுறிகள் என்ன?
இதுவும் கிளாமீடியா போன்றதே. கிளாமீடியாவால் வரும் ஆபத்துக்களே இந்நோயினாலும் ஏற்படுகிறது. ஆனால் இதனால் தொண்டை வலியும் வயிற்றோட்டமும் ஏற்படுகிறது.
இதனாலும் இடுப்பென்புப் பகுதியில் வீக்கநோய் ஏற்படுகிறது. ஆண்களுக்கு புறஸ்ரேட் சுரப்பியில் நோய் தொற்றிப் பரவுகிறது. இருவருக்கும் மூட்டுகள், தோல், குருதியோட்டம் ஆகியவற்றில் பரவுகிறது.
சிபிலிஸ் (Syphilis) நோயின் அறிகுறிகள் என்ன?
இது இருப்பதன் அறிகுறி ஆண்குறியின் மீது நோவற்ற வடு காணப்படும். இது போலவே பெண்ணின் யோனி முகிழ்வாயிலும் அல்லது குதவாசலிலும் காணப்படும்.
இந்த நிலையில் நோயைக் குணப்படுத்தாவிட்டால் தோலில் கொப்பிளங்கள் தோன்றும், அதோடு நோயாளர் பார்வை இழப்பார். இந்த நிலைக்குப் பிறகும் நோயைக் குணப்படுத்த முயலாவிட்டால் இதயமும் மூளையும் பாதிப்புக்குள்ளாகும். இதன் விளைவாக மரணமும் சம்பவிக்கும்.
சிபிலிஸால் பீடிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறக்கின்ற குழந்தையும் கூட சிபிலிஸ் உடன் தான் பிறக்கும். பார்வை குன்றியும், சித்தம் பேதலித்தும், உடல் ஊனமுற்றும் இருக்கும்.
சிபிலிஸ் நோய்க்கு இலக்கானால் பாலியல் உறவுகொண்ட இருவரையும் பரிசோதனைக்குட்படுத்தி வைத்திய சிகிச்சை செய்தல் வேண்டும்.
பாலியல் உறவால் ஏற்பட்ட குணப்படுத்த முடியாத வேறேதும் நோய் இருக்கிறதா?
ஆம். செங்கமாரி - மங்கமாரி (Hepatitis B) இதற்கான தடுப்பூசி இருக்கிறது தான். இந்நோய் ஓய்வாய் இருப்பதாலும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதாலும் சாதாரண செங்கமாரி நோயைப் போலவே குணப்படுத்தலாம். ஆனால் இந்நோய் உங்களைப் பலவீனமாக்கி, ஈரலையும் சிதைவுக்குள்ளாக்கி விடும்.
செங்கமாரி மங்கமாரி (Hepatitis B) என்னால் என்ன?
இந்நோயின் அறிகுறிகள் இருமல், தொண்டைப்புண், மூட்டு வலி என்பனவாகும். அதோடு செங்கமாரி அறிகுறிகளான கடும் அலுப்பும் உணவில் விருப்பு இன்மையும் ஆகும். காமாலை நோயின் அறிகுறிகளான தோலின் நிறம் மஞ்சள் ஆவதும் கண்கள் வெளிறி இருப்பதும் சிறுநீர் கடும் கபில நிறமாயும், மலம் வெண்களிமண் உருவிலும் தோன்றும்.
செங்கமாரி - மங்கமாரி நோய் HIV போல மாசுபட்ட குருதியாலும் மாசுபடர்ந்த மருந்து செலுத்தும் ஊசியாலும் பரவக்கூடியது. HIV யை விட தொற்றில் பரவுவதில் தீவிரமானது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பருவமானவர்கள்
ஏமாற்றங்கள் (DISAPPOINTMENTS)
முதல் தடவை பாலியல் உறவு புத்தகங்களில் கூறியுள்ளது போல ஆச்சரியமான விஷயந்தானா?
வழமையாக இல்லை. ஆபாசமான புத்தகங்களும் சஞ்சிகைகளும் பாலியல் உறவுபற்றிப் பல பல விஷயங்களை முதன் முறையாக ஈடுபடுபவரை பாலியல் உறவில் எதிர்பார்க்க வைக்கின்றன. இவையெல்லாம் பெரிதும் மிகைப்படுத்தியே தருகின்றன. இப்படி மிகைப்படுத்தித் தராவிட்டால் நாம் அவற்றை வாங்கிப் படிக்க மாட்டோம் அல்லவா? பெண் முதன் முறையாக பாலியல் உறவு கொள்ளும்போது உணர்ச்சியின் உச்சத்தை அடையாத நிலையிலும் விந்து வெளிவந்து விட்ட நிலையிலும் காதல் கதை எழுதப்பட்டிருந்தால் என்ன கருதியிருப்பீர்கள்? ஆனால் இதுதான் வழமையான நிலைமை. இதுதான் உண்மையும் கூட.
இந்தப் புத்தகங்களும் சஞ்சிகைகளும் திட்டமிட்டவொரு பாலியல் உச்சநிலையையே எடுத்துரைக்கின்றன. நடைமுறையில் அவற்றில் காட்டிய நிலையை அடையாவிட்டால் எமக்கு தளர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்படுகின்றது. அநேக பெண்களும் ஆண்களும் கூறுவது இதுதான். உண்மையில் முதன் முதலில் பாலியல் உறவு கொள்ளும் போது அடைந்த இன்பத்தைக் காட்டிலும் அதற்கு முன்பு மனதில் ஏற்பட்ட இன்பம் மிகவும் கூடுதலானது என்பதேயாகும்.
அநேக பெண்களுக்கு முதலில் ஈடுபடும் பாலியல் உறவு சற்று வேதனை தருவதாகவே இருக்கும். முதன் முதலாக ஆண் உறுப்பு யோனித்துவாரத்தில் ஊடுருவுகையில் ஹைமன் என்னும் மென்சவ்வு தெறித்துவிடுவதால் மட்டுமன்றி ஏற்படும் அச்சமும் காரணமாகிறது. யோனித்தசைகள் இறுக்கம் அடைகின்றன. கைவிரல் கூட உட்புக முடியாத அளவு இறுக்கம் அடைந்துவிடுகின்றன. இதனால் பாலியல் உறiவு பெண்களுக்கு நோவைத் தருகின்றது. ஆண்குறியை யோனிக்குள் செலுத்துவதும் சிரமமாகிறது.
முதன் முறைதான் இந்தச் சங்கடம் தோன்றுகிறது. அடுத்து அடுத்து ஈடுபடுகையில் அற்றுப் போகிறது. புத்தகங்களிலும் சஞ்சிகைகளிலும் குறிப்பிடப்பட்ட அதியுயர் பாலியல் உறவு இன்பம் என்பது வெறும் கற்பனையேதான்.
எல்லாப் பெண்களுக்கும் பாலியல் உறவுக்கான உச்ச இன்பக் கட்டம் ஏற்படுகிறதா?
இல்லை.
முதல் தடவை பாலியல் உறவு புத்தகங்களில் கூறியுள்ளது போல ஆச்சரியமான விஷயந்தானா?
வழமையாக இல்லை. ஆபாசமான புத்தகங்களும் சஞ்சிகைகளும் பாலியல் உறவுபற்றிப் பல பல விஷயங்களை முதன் முறையாக ஈடுபடுபவரை பாலியல் உறவில் எதிர்பார்க்க வைக்கின்றன. இவையெல்லாம் பெரிதும் மிகைப்படுத்தியே தருகின்றன. இப்படி மிகைப்படுத்தித் தராவிட்டால் நாம் அவற்றை வாங்கிப் படிக்க மாட்டோம் அல்லவா? பெண் முதன் முறையாக பாலியல் உறவு கொள்ளும்போது உணர்ச்சியின் உச்சத்தை அடையாத நிலையிலும் விந்து வெளிவந்து விட்ட நிலையிலும் காதல் கதை எழுதப்பட்டிருந்தால் என்ன கருதியிருப்பீர்கள்? ஆனால் இதுதான் வழமையான நிலைமை. இதுதான் உண்மையும் கூட.
இந்தப் புத்தகங்களும் சஞ்சிகைகளும் திட்டமிட்டவொரு பாலியல் உச்சநிலையையே எடுத்துரைக்கின்றன. நடைமுறையில் அவற்றில் காட்டிய நிலையை அடையாவிட்டால் எமக்கு தளர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்படுகின்றது. அநேக பெண்களும் ஆண்களும் கூறுவது இதுதான். உண்மையில் முதன் முதலில் பாலியல் உறவு கொள்ளும் போது அடைந்த இன்பத்தைக் காட்டிலும் அதற்கு முன்பு மனதில் ஏற்பட்ட இன்பம் மிகவும் கூடுதலானது என்பதேயாகும்.
அநேக பெண்களுக்கு முதலில் ஈடுபடும் பாலியல் உறவு சற்று வேதனை தருவதாகவே இருக்கும். முதன் முதலாக ஆண் உறுப்பு யோனித்துவாரத்தில் ஊடுருவுகையில் ஹைமன் என்னும் மென்சவ்வு தெறித்துவிடுவதால் மட்டுமன்றி ஏற்படும் அச்சமும் காரணமாகிறது. யோனித்தசைகள் இறுக்கம் அடைகின்றன. கைவிரல் கூட உட்புக முடியாத அளவு இறுக்கம் அடைந்துவிடுகின்றன. இதனால் பாலியல் உறiவு பெண்களுக்கு நோவைத் தருகின்றது. ஆண்குறியை யோனிக்குள் செலுத்துவதும் சிரமமாகிறது.
முதன் முறைதான் இந்தச் சங்கடம் தோன்றுகிறது. அடுத்து அடுத்து ஈடுபடுகையில் அற்றுப் போகிறது. புத்தகங்களிலும் சஞ்சிகைகளிலும் குறிப்பிடப்பட்ட அதியுயர் பாலியல் உறவு இன்பம் என்பது வெறும் கற்பனையேதான்.
எல்லாப் பெண்களுக்கும் பாலியல் உறவுக்கான உச்ச இன்பக் கட்டம் ஏற்படுகிறதா?
இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பருவமானவர்கள்
வன்கலவியும் பாலியல் துஷ்பிரயோகமும் (RAPE AND SEXUAL ABUSE)
நீங்கள் ஒரு பெண்ணாயிருந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?
முதலில் மனதில் படிய வைத்துக் கொள்ளுங்கள். தவறு உங்களுடையது அல்லவென்று. ஏனெனில் மிக விரைவில் இச்சம்பவத்தோடு சமரசத்திற்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபடப்போபவரைக் கண்டு புன்னகை புரிவதோ, உரையாடுவதோ தவறில்லை. இன்னமும் கூட இது பெண்ணின் குற்றமேயல்ல.
இந்நிகழ்ச்சி தொடர்பாக வழக்கொன்று பதிய விரும்பினால் பொலிஸ் நிலையத்திற்கு சில நண்பர்களுடனோ, அல்லது பெண்களின் கூட்டத்தோடோ அல்லது பெற்றோருடனோ அல்லது உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது முற்றாக உங்கள் நிலையை விளங்கியவராகவோ இருப்பார்கள் என்று நீங்கள் கருதினால் அவர்களுடனே செல்லுங்கள். உங்கள் குழுவில் ஒரு ஆண்மகனாவது இருத்தல் வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் மட்டும் சென்று வழக்குப் பதிய விரும்பினால் பொலிசார் சிலவேளைகளில் உதாசீனம் செய்து விடலாம். ஆனால் ஆண்மகன் யாராவது இருந்தால் நிலைமையே வேறுதான்.
பாலியல் வல்லுறவை நிரூபிப்பதற்கு காலம் தாழ்த்தாமல் முறைப்பாடு செய்தல் வேண்டும். 24 மணிநேரத்திற்குள் அல்லது 48 மணி நேரத்திற்கு மேல் செல்லக் கூடாது. பயன்படுத்தப்பட்ட ஆடையைத் தோய்க்கவோ மாற்றவோ கூடாது. கவலையான விஷயம் என்னவென்றால் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவரின் பாலியல் திரவத்தோடு உள்ள தொடர்பை பேணிவைத்து வெளிப்படுத்தக் கூடியதாய் இருக்க வேண்டும் என்பதாகும்.
பாலியல் வல்லுறவுக்கான சட்ட வரைவு இதுதான். ஆணின் ஆண்குறி பெண்ணின் யோனிக்குள் புகுத்தப்பட்டு விந்து வெளிவந்திருக்க வேண்டும். யோனியில் விந்துத்திரவம் இல்லாவிட்டால் சட்டப்படி பாலியல் வல்லுறவு நடைபெற்றது என்று ஏற்றுக்கொள்ள இயலாது. ஆனாலும் கூட தாக்கியதாக, பலாத்காரம் செய்ததாக பெண்மைக்குப் பாதிப்பு விளைவித்ததாக முறைப்பாடு செய்யலாம். இந்த முதன் முறைப்பாட்டு அறிக்கைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர் வைத்திய சாலைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்படுவார். முதன் முறைப்பாட்டு அறிக்கையின் பிரதி ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
போலிசுக்குச் சென்று முறைப்பாடு செய்யத்தான் வேண்டுமா?
இல்லை. பாதிப்பை விளைவித்தவரை நன்கு தெரியுமாயின் அதோடு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாரின் ஒத்தாசை இருக்குமாயின் விஷயத்திற்கு முடிவு கண்டுவிடலாம்.
சில பெண்கள் முறைப்பாடு செய்தாக வேண்டும் என்று கருதுவது பயன் எதனையும் தாம் பெறலாம் என்பதற்காகவல்ல. இப்படிப்பட்ட நிலைமை வேறெந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக. அநேக பாதிப்பிற்குள்ளானவர்கள் மனம் தளர்ந்து போய் உடனடியாகத் தமது வீட்டைச் சென்றடையவே விரும்புகிறார்கள். நடந்தவற்றை எல்லாம் முற்றாக மறந்துவிட்டு இப்படிப்பட்ட சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்று கருதுகிறார்கள்.
பாலியல் வன்கலவி செய்வோரிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
எந்தச் சந்தர்ப்பத்திலும் பகல் வேளையிலும் தனித்துச் செல்லாதீர்கள். வேறு யாராவது வீதியிலோ, பூங்காவிலோ இருந்தால் பாலியல் வல்லுறவு புரியவுள்ளோர் உங்களை அணுக அஞ்சுவார்கள்.
தனிவழியில் செல்ல நேர்ந்தால் பயந்தது போலவோ மனம் தளர்ந்து இருப்பதாகவோ காட்டிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் இத்தகையோர் அவர்களின் கவர்ச்சிக்குள்ளாகுகின்றனர்.
அச்சமூட்டக் கூடியவருடன் தனிமையில் இருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அநேகமான வல்லுறவுகள் வீட்டிலேயே இடம்பெறுகின்றன. பாதகம் செய்வோரில் பெரும்பாலானோர் முதிய உறவினரோ குடும்ப நண்பரோ தான். உங்கள் பெற்றோருக்கு நன்கு அறிமுகமான ஒருவரால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது என்று தெரிவித்தால் நம்ப மறுப்பார்கள். உங்கள் மீது பழியைச் சுமத்துவார்கள்.
முதலில் பாதகம் செய்ய வருவோரைத் தாக்க முயலாதீர்கள். அவர்களை வன்முறைக்குத் தூண்டியவர் ஆவீர்கள். நீங்கள் வெறும் வல்லுறவுகுள்ளாக்கப் படுவதோடு மட்டும் ஆளாகாமல் தாக்கப்பட்டோ சில வேளைகளில் கொல்லப்பட்டோ விடுவீர்கள். இவற்றைக் கூடியவரை தவிர்க்க முயல வேண்டும்.
பெண்கள் மீதான வேறேதும் பாலியல் வன்முறைகள் உண்டா?
சந்தர்ப்பக் கற்பழிப்பு
சந்தர்ப்பக் கற்பழிப்பு எனின் ஒரு பெண் இன்னொருவனோடு மனம் ஒப்பி வெளியே செல்ல ஏற்பாடு செய்கிறாள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் அவளுடன் பாலுறவு கொள்ள விரும்புகிறான். ஆனால் அவளுக்கோ அந்த விரும்பமேயில்லை. அவன் வற்புறுத்துகிறான். தான் ஒரு ஆண் மகன் என்று காட்டிக் கொள்ள விரும்புகின்றான். அவனோடு வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பாத காரணத்தால் மௌனமாக இருக்கின்றாள். அவளுடைய மறுப்பையும் கூட சம்மதத்தின் அறிகுறியாகக் கருதி பாலியல் உறவில் பலாத்காரமாக ஈடுபடுகிறான். இத்தகைய பாலியல் உறவை சந்தர்ப்பக் கற்பழிப்பு என்பர்.
திருமணக் கற்பழிப்பு (தாம்பத்தியக் கற்பழிப்பு)
மனைவி விரும்பாத போது கணவன் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்துவது. திருமணம் செய்துகொண்டபடியால் கணவன் தான் விரும்பும் போதெல்லாம் பாலியல் உறவுக்கு மனைவி இணங்க வேண்டுமென்று கருதுகிறான். இலங்கைச் சட்டம் இத்தகையதை ஒரு குற்றமாகக் கருதுவதில்லை. திருமணமான கணவர் மனைவி சம்பந்தப்பட்ட உரிமைகள் பற்றி பலவாகப் பேசப்பட்ட போதிலும் கணவனின் தொல்லைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஓடித்தப்பிய பெண்ணை நீதிமன்ற உதவியுடன் மீட்கவும் தொடர்ந்து அவளுடன் பாலுறவு கொள்ளவும் இயலும்.
பையன்கள் எப்படி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள்.
பலாத்காரமாக குதம் வழியாகப் பாலுறவு கொள்வது என்பது முன்பு எப்போதும் இத்தகைய உறவு கொள்ளாத பையனுக்கு மரண வேதனையைக் குதத்தில் ஏற்படுத்தும். குதவாயிலை மூடிக்காக்கும் வளையத் தசைகள் விரிந்து கொடுக்காதபடியால் கிழிந்துவிட ஏதுவாகும். அதனால் குருதிக் கசிவு ஏற்படுகிறது.
பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன?
பாலியல் உறவு அல்லது கற்பழிப்பு அல்லது வன்கலவி என்பதைத் தவிர மற்றவையெல்லாம் பாலியல் ரீதியான பலாத்காரங்கள் என்பதால் பாலியல் துஷ்பிரயோகங்கள் எனப்படும். இந்த நடவடிக்கைக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
பெண்களாலும் கூட பாலியல் துஷ்பிரயோகம் செய்ய இயலுமா? அல்லது கற்பழிப்புப் போல ஆண்களுக்கே மட்டும் உரியது தானா?
பெண்களும் கூட பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடலாம். தம்மைக் காட்டிலும் பலம்குறைந்த பெண்களிடமும் பையன்களிடமும் நடந்துகொள்வர். அலுவலகத்தில், வீதியில், வீட்டில் தமது அதிகாரத்தை இதற்குப் பயன்படுத்துவர்.
பெண்கள் எப்படி பையன்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.
பாலியல் உறவு உட்பட அனைத்து முறைகளையும் பயன்படுத்துவர். பையன் சம்மதிக்காவிட்டாலும் சம்மதிக்க வைப்பர். அநேக பையன்கள் கூறக் கேட்டிருக்கிறோம். தாங்கள் தங்களுடைய பாலியல் உறவின் முதல் அனுபவத்தைப் பெற்றது தம்மைவிட வயதில் கூடுதலாய் உள்ள பெண்களிடமிருந்தே. பையன் விரும்பாவிட்டால் அவனுடைய மனதில் குழப்பம் ஏற்படும். ஏனெனில் அவன் பெண்களைப் போலக் குற்றவாளியாகக் கருதப்பட மாட்டான். அத்தோடு தான் எதனையும் பறிகொடுக்கவில்லை என்று கருதுகிறான்.
அதேவேளை சிறுவன் பாலியல் உறவுக்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்டான். அவமானத்திற்குட்படுத்தப்பட்டதாகவும் கருதுகிறான். இதனை அநேகமான பையன்கள் வேறுவிதமாகவும் அர்த்தம் கொள்ள முற்படுகிறார்கள். தாங்கள் பெண்களைக் கவரக்கூடிய ஆணழகர் என்று கருதுகிறார்கள். இப்பையன்களை பயன்படுத்தியவர்கள் நினைப்பது இதுதான். தாங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கு எவ்வித கோபமும் காட்டவில்லை. அதனால் அச்சிறுவர்கள் தம் முழுவிருப்பத்தோடு தான் ஈடுபட முன்வந்தார்கள் என்பதாகும்.
சிலர் மானசீகமாக வயது மூத்த பெண்களோடு பாலியல் உறவில் மீண்டும் மீண்டும் ஈடுபட எத்தனிக்கிறார்கள். அவமானப்பட்டதாகக் கருதாமல் விருப்பத்துடனேயே ஈடுபட முற்படுகின்றனர்.
வெறும் மிரட்டலும் கூட பாலியல் துஷ்பிரயோகமென்று கருதப்படுமா?
ஆம். இதற்குப் பிரதான உதாரணம் பாலியல் உறுப்புகளைப் பலரறியக் காட்டுவது அம்பலப்படுத்துவது என்று சுருக்கமாகக் கூறலாம்.
அம்பலப்படுத்துபவர் பாலியல் உறுப்பை சந்தேகம் கொள்ளாத அன்னியர் முன்னிலையில் காட்டுவதால் பாலியல் இன்பம் பெறுகிறார். அவர் பெறுகின்ற பரிசு பார்த்தோருக்கு அதிர்ச்சி ஊட்டுவதே. பூங்காவிலோ வேறு பொது இடத்திலோ பல ஆண்களின் இயல்பு பெண்ணொருத்தி இருந்தால் அவள் முன்பு பகிரங்கமாக சிறுநீர் கழிப்பது. அம்பலப்படுத்துவோர் இதனை விட வெளிப்படையாகவே பலவற்றையும் செய்வார்கள். எம்மை நோக்கி வரும் போது பாலியல் உறுப்பைப் பகிரங்கமாக காட்டிக் கொண்டே வருவார்கள்.
பொதுவாக அம்பலப்படுத்துவோர் பாலியல் வல்லுறவில் ஈடுபட மாட்டார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளை உதாசீனம் செய்தோமாயின் தாம் காட்டிய வேடிக்கை விலை போகவில்லை என்று ஏமாந்து போவர். அவர்கள் புண்படுத்துபவர்களே தவிர ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் அல்லர்.
வேறு விதமான பாலியல் துஷ்பிரயோகமும் உள்ளதா?
ஆம். அநேகமான பெண்கள் பஸ்களில் பிரயாணம் செய்வதை வெறுக்கிறார்கள். ஏனெனில் சில ஆண்கள் பெண்களின் மார்பகங்களையும் புட்டங்களையும் தடவி விளையாடுவதோடு தமது ஆண் குறிகளை அவற்றின் மீது உராய்கிறார்கள். அதோடு பெண்களைப் பழிப்பதோடு பொதுவிடங்களில் அவர்கள் பெண்களைக் கட்டித் தழுவ முயலுகிறார்கள். இச்செயல்களின் நோக்கம் பெண்கள் விரும்பாதபோது அவர்களிடம் நெருங்கி இன்பம் அடைய விரும்புவதேயாகும்.
இத்தகையவற்றை இல்லாது செய்ய வேண்டுமாயின் பெண்களும் ஆண்களும் ஒன்றாகப் பழகும் நிலையும் சமத்துவமும் சமூகத்தில் நிலவி, பெண்கள் உரையாடுவதற்கும் இயலாதவர்கள் என்ற நிலை மாறவேண்டும். இரு பாலாருக்கும் உள்ள இடைவெளி குறுக வேண்டும். அல்லது குறைய வேண்டும். இந்த நிலை வரும் வரை பெண்கள் பலம் பொருந்தியவர்களாகவும் உரிமையோடு பொதுவிடங்களில் நடமாடுவதாகவும் இருந்து கொள்ள வேண்டும். பெண்களை மதித்து நடக்கத் தெரியாத ஆண்களைத் திருப்திப்படுத்த முயலுவதில் பயன் ஒன்றும் இல்லை.
உங்களிடம் ஆதரவானவர்கள் சூழ்ந்து இருக்கும் போது உரத்த குரலில் நடந்தவற்றை எடுத்துக் கூறுங்கள். பெண்கள் அமைதியாகவும் வெட்கப்பட்டும் இருந்தால் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்ந்தும் இருந்து கொண்டேயிருக்கும்.
நீங்கள் ஒரு பெண்ணாயிருந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?
முதலில் மனதில் படிய வைத்துக் கொள்ளுங்கள். தவறு உங்களுடையது அல்லவென்று. ஏனெனில் மிக விரைவில் இச்சம்பவத்தோடு சமரசத்திற்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபடப்போபவரைக் கண்டு புன்னகை புரிவதோ, உரையாடுவதோ தவறில்லை. இன்னமும் கூட இது பெண்ணின் குற்றமேயல்ல.
இந்நிகழ்ச்சி தொடர்பாக வழக்கொன்று பதிய விரும்பினால் பொலிஸ் நிலையத்திற்கு சில நண்பர்களுடனோ, அல்லது பெண்களின் கூட்டத்தோடோ அல்லது பெற்றோருடனோ அல்லது உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது முற்றாக உங்கள் நிலையை விளங்கியவராகவோ இருப்பார்கள் என்று நீங்கள் கருதினால் அவர்களுடனே செல்லுங்கள். உங்கள் குழுவில் ஒரு ஆண்மகனாவது இருத்தல் வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் மட்டும் சென்று வழக்குப் பதிய விரும்பினால் பொலிசார் சிலவேளைகளில் உதாசீனம் செய்து விடலாம். ஆனால் ஆண்மகன் யாராவது இருந்தால் நிலைமையே வேறுதான்.
பாலியல் வல்லுறவை நிரூபிப்பதற்கு காலம் தாழ்த்தாமல் முறைப்பாடு செய்தல் வேண்டும். 24 மணிநேரத்திற்குள் அல்லது 48 மணி நேரத்திற்கு மேல் செல்லக் கூடாது. பயன்படுத்தப்பட்ட ஆடையைத் தோய்க்கவோ மாற்றவோ கூடாது. கவலையான விஷயம் என்னவென்றால் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவரின் பாலியல் திரவத்தோடு உள்ள தொடர்பை பேணிவைத்து வெளிப்படுத்தக் கூடியதாய் இருக்க வேண்டும் என்பதாகும்.
பாலியல் வல்லுறவுக்கான சட்ட வரைவு இதுதான். ஆணின் ஆண்குறி பெண்ணின் யோனிக்குள் புகுத்தப்பட்டு விந்து வெளிவந்திருக்க வேண்டும். யோனியில் விந்துத்திரவம் இல்லாவிட்டால் சட்டப்படி பாலியல் வல்லுறவு நடைபெற்றது என்று ஏற்றுக்கொள்ள இயலாது. ஆனாலும் கூட தாக்கியதாக, பலாத்காரம் செய்ததாக பெண்மைக்குப் பாதிப்பு விளைவித்ததாக முறைப்பாடு செய்யலாம். இந்த முதன் முறைப்பாட்டு அறிக்கைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர் வைத்திய சாலைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்படுவார். முதன் முறைப்பாட்டு அறிக்கையின் பிரதி ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
போலிசுக்குச் சென்று முறைப்பாடு செய்யத்தான் வேண்டுமா?
இல்லை. பாதிப்பை விளைவித்தவரை நன்கு தெரியுமாயின் அதோடு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாரின் ஒத்தாசை இருக்குமாயின் விஷயத்திற்கு முடிவு கண்டுவிடலாம்.
சில பெண்கள் முறைப்பாடு செய்தாக வேண்டும் என்று கருதுவது பயன் எதனையும் தாம் பெறலாம் என்பதற்காகவல்ல. இப்படிப்பட்ட நிலைமை வேறெந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக. அநேக பாதிப்பிற்குள்ளானவர்கள் மனம் தளர்ந்து போய் உடனடியாகத் தமது வீட்டைச் சென்றடையவே விரும்புகிறார்கள். நடந்தவற்றை எல்லாம் முற்றாக மறந்துவிட்டு இப்படிப்பட்ட சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்று கருதுகிறார்கள்.
பாலியல் வன்கலவி செய்வோரிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
எந்தச் சந்தர்ப்பத்திலும் பகல் வேளையிலும் தனித்துச் செல்லாதீர்கள். வேறு யாராவது வீதியிலோ, பூங்காவிலோ இருந்தால் பாலியல் வல்லுறவு புரியவுள்ளோர் உங்களை அணுக அஞ்சுவார்கள்.
தனிவழியில் செல்ல நேர்ந்தால் பயந்தது போலவோ மனம் தளர்ந்து இருப்பதாகவோ காட்டிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் இத்தகையோர் அவர்களின் கவர்ச்சிக்குள்ளாகுகின்றனர்.
அச்சமூட்டக் கூடியவருடன் தனிமையில் இருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அநேகமான வல்லுறவுகள் வீட்டிலேயே இடம்பெறுகின்றன. பாதகம் செய்வோரில் பெரும்பாலானோர் முதிய உறவினரோ குடும்ப நண்பரோ தான். உங்கள் பெற்றோருக்கு நன்கு அறிமுகமான ஒருவரால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது என்று தெரிவித்தால் நம்ப மறுப்பார்கள். உங்கள் மீது பழியைச் சுமத்துவார்கள்.
முதலில் பாதகம் செய்ய வருவோரைத் தாக்க முயலாதீர்கள். அவர்களை வன்முறைக்குத் தூண்டியவர் ஆவீர்கள். நீங்கள் வெறும் வல்லுறவுகுள்ளாக்கப் படுவதோடு மட்டும் ஆளாகாமல் தாக்கப்பட்டோ சில வேளைகளில் கொல்லப்பட்டோ விடுவீர்கள். இவற்றைக் கூடியவரை தவிர்க்க முயல வேண்டும்.
பெண்கள் மீதான வேறேதும் பாலியல் வன்முறைகள் உண்டா?
சந்தர்ப்பக் கற்பழிப்பு
சந்தர்ப்பக் கற்பழிப்பு எனின் ஒரு பெண் இன்னொருவனோடு மனம் ஒப்பி வெளியே செல்ல ஏற்பாடு செய்கிறாள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் அவளுடன் பாலுறவு கொள்ள விரும்புகிறான். ஆனால் அவளுக்கோ அந்த விரும்பமேயில்லை. அவன் வற்புறுத்துகிறான். தான் ஒரு ஆண் மகன் என்று காட்டிக் கொள்ள விரும்புகின்றான். அவனோடு வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பாத காரணத்தால் மௌனமாக இருக்கின்றாள். அவளுடைய மறுப்பையும் கூட சம்மதத்தின் அறிகுறியாகக் கருதி பாலியல் உறவில் பலாத்காரமாக ஈடுபடுகிறான். இத்தகைய பாலியல் உறவை சந்தர்ப்பக் கற்பழிப்பு என்பர்.
திருமணக் கற்பழிப்பு (தாம்பத்தியக் கற்பழிப்பு)
மனைவி விரும்பாத போது கணவன் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்துவது. திருமணம் செய்துகொண்டபடியால் கணவன் தான் விரும்பும் போதெல்லாம் பாலியல் உறவுக்கு மனைவி இணங்க வேண்டுமென்று கருதுகிறான். இலங்கைச் சட்டம் இத்தகையதை ஒரு குற்றமாகக் கருதுவதில்லை. திருமணமான கணவர் மனைவி சம்பந்தப்பட்ட உரிமைகள் பற்றி பலவாகப் பேசப்பட்ட போதிலும் கணவனின் தொல்லைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஓடித்தப்பிய பெண்ணை நீதிமன்ற உதவியுடன் மீட்கவும் தொடர்ந்து அவளுடன் பாலுறவு கொள்ளவும் இயலும்.
பையன்கள் எப்படி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள்.
பலாத்காரமாக குதம் வழியாகப் பாலுறவு கொள்வது என்பது முன்பு எப்போதும் இத்தகைய உறவு கொள்ளாத பையனுக்கு மரண வேதனையைக் குதத்தில் ஏற்படுத்தும். குதவாயிலை மூடிக்காக்கும் வளையத் தசைகள் விரிந்து கொடுக்காதபடியால் கிழிந்துவிட ஏதுவாகும். அதனால் குருதிக் கசிவு ஏற்படுகிறது.
பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன?
பாலியல் உறவு அல்லது கற்பழிப்பு அல்லது வன்கலவி என்பதைத் தவிர மற்றவையெல்லாம் பாலியல் ரீதியான பலாத்காரங்கள் என்பதால் பாலியல் துஷ்பிரயோகங்கள் எனப்படும். இந்த நடவடிக்கைக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
பெண்களாலும் கூட பாலியல் துஷ்பிரயோகம் செய்ய இயலுமா? அல்லது கற்பழிப்புப் போல ஆண்களுக்கே மட்டும் உரியது தானா?
பெண்களும் கூட பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடலாம். தம்மைக் காட்டிலும் பலம்குறைந்த பெண்களிடமும் பையன்களிடமும் நடந்துகொள்வர். அலுவலகத்தில், வீதியில், வீட்டில் தமது அதிகாரத்தை இதற்குப் பயன்படுத்துவர்.
பெண்கள் எப்படி பையன்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.
பாலியல் உறவு உட்பட அனைத்து முறைகளையும் பயன்படுத்துவர். பையன் சம்மதிக்காவிட்டாலும் சம்மதிக்க வைப்பர். அநேக பையன்கள் கூறக் கேட்டிருக்கிறோம். தாங்கள் தங்களுடைய பாலியல் உறவின் முதல் அனுபவத்தைப் பெற்றது தம்மைவிட வயதில் கூடுதலாய் உள்ள பெண்களிடமிருந்தே. பையன் விரும்பாவிட்டால் அவனுடைய மனதில் குழப்பம் ஏற்படும். ஏனெனில் அவன் பெண்களைப் போலக் குற்றவாளியாகக் கருதப்பட மாட்டான். அத்தோடு தான் எதனையும் பறிகொடுக்கவில்லை என்று கருதுகிறான்.
அதேவேளை சிறுவன் பாலியல் உறவுக்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்டான். அவமானத்திற்குட்படுத்தப்பட்டதாகவும் கருதுகிறான். இதனை அநேகமான பையன்கள் வேறுவிதமாகவும் அர்த்தம் கொள்ள முற்படுகிறார்கள். தாங்கள் பெண்களைக் கவரக்கூடிய ஆணழகர் என்று கருதுகிறார்கள். இப்பையன்களை பயன்படுத்தியவர்கள் நினைப்பது இதுதான். தாங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கு எவ்வித கோபமும் காட்டவில்லை. அதனால் அச்சிறுவர்கள் தம் முழுவிருப்பத்தோடு தான் ஈடுபட முன்வந்தார்கள் என்பதாகும்.
சிலர் மானசீகமாக வயது மூத்த பெண்களோடு பாலியல் உறவில் மீண்டும் மீண்டும் ஈடுபட எத்தனிக்கிறார்கள். அவமானப்பட்டதாகக் கருதாமல் விருப்பத்துடனேயே ஈடுபட முற்படுகின்றனர்.
வெறும் மிரட்டலும் கூட பாலியல் துஷ்பிரயோகமென்று கருதப்படுமா?
ஆம். இதற்குப் பிரதான உதாரணம் பாலியல் உறுப்புகளைப் பலரறியக் காட்டுவது அம்பலப்படுத்துவது என்று சுருக்கமாகக் கூறலாம்.
அம்பலப்படுத்துபவர் பாலியல் உறுப்பை சந்தேகம் கொள்ளாத அன்னியர் முன்னிலையில் காட்டுவதால் பாலியல் இன்பம் பெறுகிறார். அவர் பெறுகின்ற பரிசு பார்த்தோருக்கு அதிர்ச்சி ஊட்டுவதே. பூங்காவிலோ வேறு பொது இடத்திலோ பல ஆண்களின் இயல்பு பெண்ணொருத்தி இருந்தால் அவள் முன்பு பகிரங்கமாக சிறுநீர் கழிப்பது. அம்பலப்படுத்துவோர் இதனை விட வெளிப்படையாகவே பலவற்றையும் செய்வார்கள். எம்மை நோக்கி வரும் போது பாலியல் உறுப்பைப் பகிரங்கமாக காட்டிக் கொண்டே வருவார்கள்.
பொதுவாக அம்பலப்படுத்துவோர் பாலியல் வல்லுறவில் ஈடுபட மாட்டார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளை உதாசீனம் செய்தோமாயின் தாம் காட்டிய வேடிக்கை விலை போகவில்லை என்று ஏமாந்து போவர். அவர்கள் புண்படுத்துபவர்களே தவிர ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் அல்லர்.
வேறு விதமான பாலியல் துஷ்பிரயோகமும் உள்ளதா?
ஆம். அநேகமான பெண்கள் பஸ்களில் பிரயாணம் செய்வதை வெறுக்கிறார்கள். ஏனெனில் சில ஆண்கள் பெண்களின் மார்பகங்களையும் புட்டங்களையும் தடவி விளையாடுவதோடு தமது ஆண் குறிகளை அவற்றின் மீது உராய்கிறார்கள். அதோடு பெண்களைப் பழிப்பதோடு பொதுவிடங்களில் அவர்கள் பெண்களைக் கட்டித் தழுவ முயலுகிறார்கள். இச்செயல்களின் நோக்கம் பெண்கள் விரும்பாதபோது அவர்களிடம் நெருங்கி இன்பம் அடைய விரும்புவதேயாகும்.
இத்தகையவற்றை இல்லாது செய்ய வேண்டுமாயின் பெண்களும் ஆண்களும் ஒன்றாகப் பழகும் நிலையும் சமத்துவமும் சமூகத்தில் நிலவி, பெண்கள் உரையாடுவதற்கும் இயலாதவர்கள் என்ற நிலை மாறவேண்டும். இரு பாலாருக்கும் உள்ள இடைவெளி குறுக வேண்டும். அல்லது குறைய வேண்டும். இந்த நிலை வரும் வரை பெண்கள் பலம் பொருந்தியவர்களாகவும் உரிமையோடு பொதுவிடங்களில் நடமாடுவதாகவும் இருந்து கொள்ள வேண்டும். பெண்களை மதித்து நடக்கத் தெரியாத ஆண்களைத் திருப்திப்படுத்த முயலுவதில் பயன் ஒன்றும் இல்லை.
உங்களிடம் ஆதரவானவர்கள் சூழ்ந்து இருக்கும் போது உரத்த குரலில் நடந்தவற்றை எடுத்துக் கூறுங்கள். பெண்கள் அமைதியாகவும் வெட்கப்பட்டும் இருந்தால் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்ந்தும் இருந்து கொண்டேயிருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பருவமானவர்கள்
கருத்தடை முறைகள் (CONTRACEPTIVES)
கருத்தரிக்காமல் இருக்கச் செய்ய வேண்டுவது என்ன?
பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பது மட்டுந்தானா? கருத்தடை உபகரணங்களைப் பயன்படுத்தலாமே!
பாலியல் உறவு முதன்முறைதான் என்பதற்காக அதிர்ஷ்டவசமாக ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்று மனப்பால் குடிக்காமல் இருங்கள். காதலனோ காதலியோ இருப்பின் சிலவேளைகளில் பாலியல் உறவு கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். ஆகவே பாதுகாப்பு நிமித்தம் கருத்தடைச் சாதனம் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். பாலியல் உறவு கொள்ளத் தயாராகத்தான் இருக்கின்றீர்கள் என்று நினைக்கத் தேவையில்லை.
ஆண்டு தோறும் ஐந்திற்கு நான்கு பெண்கள் கருத்தடைச் சாதனமின்றி பாலியல் உறவுகொள்வதால் கருத்தரித்து விடுகிறார்கள்.
எது பாதுகாப்பான கருத்தடைச் சாதனம்?
ஆண் கருத்தடை உறை
ஆண் கருத்தடை உறை என்பது ஆண்குறியை இறுக்கமாகப் பற்றி மூடிக் கொள்ளும் இரப்பராலான உறை. பாலியல் உறவு கொள்ளுமுன் இதனை ஆண்குறியின் மீது போர்த்திக் கொள்ளவேண்டும். பாலியல் உறவுக்கு முன் என்று கூறுவது உறுப்பு புடைத்து நிற்குமுன். புடைத்தெழும் போது உறுப்பின் மீது போடுவது சிரமம்.
வேறெந்த கருத்தடை சாதனமும் HIV யிலிருந்து உங்களைப் பாதுகாக்காது. கருத்தடை உறை விந்துகளையும் HIV யையும் பெண் யோனிக்குள் புகவிடாது. யோனிக்குள் புகாதபடியால் உடல் திரவங்கள் ஆணோடு கலப்பதும் தவிர்க்கப்படுகிறது. ஆணுறையில் தடவப்பட்ட உராய்வு நீக்கி விந்துகளையும், HIV யையும் கொன்றுவிடும். ஆணுறையை மேற்பகுதியிலிருந்து அகற்றிவிட வேண்டும்.
ஆணுறையால் பக்க விளைவுகள் எதுவுமில்லை.
ஆணுறையை எந்த மருந்து விற்பனை நிலையத்திலும் வைத்தியரின் சான்று இன்றியே விலைக்குப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆணுறை தான் ஆண்கள் பயன்படுத்தக்கூடிய ஒரே கருத்தடைச் சாதனம். பெற்றோலிய உபபொருளான வாசிலினை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் வாசிலின் ஆணுறை செய்யப்பட்ட றப்பர் பொருளைக் கரைக்கக்கூடியது. ஆண்குறியை வெளியே எடுக்கும் போது ஆணுறையும் உடன் வெளிவர வேண்டும். இல்லாது போனால் ஆணுறை உள்ளேயே நின்றுவிடும்.
மற்றைய கருத்தடை சாதனங்கள் HIV க்குத் தடை ஏற்படுத்தாதா?
இல்லை.
இவற்றைப் பயன்படுத்தத் தகுந்த இருவரும் HIV அற்றவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டவர்களும் முறையான தம்பதிகளுமே ஆவர்.
HIV பரிசோதனைகூட இரண்டு வாரங்களுக்கு முன் உங்கள் உடலில் இந்த வைரஸ் இருந்ததா என்பதை எடுத்துக்காட்டும்.
இருவரில் ஒருவருக்குக் கூட HIV அற்றவர் என்று குறிப்பிடுவது அந்தத் தம்பதியர் இருவரும் தம்மட்டிலே பாலியல் உறவு வைத்துக் கொண்டு இருப்பவர்கள். உங்கள் இருவருக்கும் அப்பால் வேறொருவருடன் உறவு கொள்ளும் போது ஆணுறைகளைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.
முறையான பாலுறவு கொள்ளாமலே கருப்பம் தரிக்க முடியுமா?
ஆம். ஆனால் இது அசாதாரணமானதே.
இது எப்படி ஏற்படுகிறது என்றால் இருவரும் சல்லாபித்துக் கொண்டிருக்கையில் ஆண் தனது ஆண்குறியை பெண்ணினது பிறப்புறுப்பின் மீது உராய்வான். ஆனால் உட்புகுத்தாதிருப்பான். உறுப்பு புடைத்து விந்து வெளிப்படும் போது நீந்திக் கொண்டு அவளுடைய சூலகத்து முட்டையை நோக்கி கருப்பையை அடையும். அவை மூன்று தினங்கள் வரை யோனிப்பகுதியில் உயிர் வாழும். அதுபோலவே AIDS நோய் தரும் HIV வைரசும், பாலியல் உறவைத் தவிர்க்கும் நோக்கத்தோடு இருந்த போதிலும் ஆணுறை அணிந்து கொள்ள வேண்டும்.
ஆணின் உறுப்பு புடைத்தெழாவிட்டாலும் கூட விந்தில் ஆண் அணுக்கள் காணப்படும். ஆணுறுப்பு புடைத்தெழும் போது வெளிப்படும். இதோடு சேர்ந்து HIV யும் பரவும் அபாயம் உண்டு.
திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவு தடை செய்யப்பட்ட கர்பிணிகள் கன்னிப் பெண்களாகக் காணப்படுவதாக வைத்தியர்கள் அறிவிக்கிறார்கள். இப்பெண்கள் பாலியல் உறவு கொள்ளாதவர்களே. அதோடு யோனி முகிழ் அருகிலுள்ள மென்சவ்வு (ர்லஅயn) எவ்வித பாதிப்புக்குள்ளும் ஆகாத நிலையில் காணப்படுகிறது.
கருத்தடையை ஏற்படுத்த ஓமோன்களைப் Hormones பயன்படுத்தலாமா?
ஆம். இருவித ஓமோன் கருத்தடைச் சாதனங்களுண்டு. ஒன்று மாத்திரை வடிவிலும் மற்றது ஊசி மருந்து வடிவிலும் இருக்கும். ஆனால் ஓமோன் பாவனையின் போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். புற்றுநோய், குருதி உறைதல் கோளாறுகள், உயர்குருதி அமுக்கம், ஈரல் கோளாறுகள், மைகிறெயின் தலைவலி ஆகியவை இருக்கும் போது மாத்திரையை உபயோகித்தால் பிரச்சினை பெரிதுபடும். அதோடு வலிப்பு ஏற்படுகையில் வைத்திய சிகிச்சையை மேற்கொள்ளும் போது மாத்திரை பேராபத்தை ஏற்படுத்தும். புகை ஊதினால் பெரிய சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
மாத்திரை எப்படி வேலை செய்கிறது?
மாதவிடாய் வந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு நாளுக்கு ஒரு மாத்திரை வீதம் 23 நாட்களுக்குத் தொடர்ந்து பாவிக்கப்படுகிறது. பிறகு 5 நாட்களுக்கு மாத்திரை ஒன்றையும் பயன்படுத்தாமல் இருந்து மாதவிடாயைச் சந்திக்கிறோம்.
மாத்திரை பயன்படுத்தும் போது முட்டை உற்பத்தி ஆவதில்லை. அதனால் விந்து முட்டையுடன் கருக்கட்டுவதில்லை. இதிலுள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் சில சமயங்களில் மாத்திரையை உட்கொள்ள மறந்துவிட்டால் கருத்தரிப்பதிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படும் நிலையை அடைவதில்லை. அதனால் மாதவிடாய் வருவதற்கு முன் மனத்தளர்ச்சி ஏற்படுகிறது. உங்களுடைய நிறையும் சுமார் 5 கிலோகிராம் அதிகரிக்கிறது. மார்பகப் புற்றுநோயும் நாளங்களில் குருதி உறைவும் ஏற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்நிலை நீண்ட நாட்களுக்கு மாத்திரையைப் பயன்படுத்துவதாலும் சிகறட் புகைப்பதாலும் வரக்கூடும்.
ஊசிமூலம் செலுத்தப்படும் கருத்தடை மருந்து என்பதென்ன?
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊசி மூலம் இந்தக் கருத்தடை மருந்து செலுத்தப்படுகிறது.
இந்த முறையிலுள்ள தீங்கு என்னவென்றால் இதனால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்ட போதிலும் உங்களுக்கு மனமாற்றம் ஏற்பட்ட போதிலும் இம்மூன்று மாதகாலங்களுக்கு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ள இயலாது.
இந்தக் கருத்தடை முறையை அரசாங்கம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இதனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டென்று அநேகர் கருதுகிறார்கள்.
நீங்கள் மறந்துவிட முடியாத வேறேதும் கருத்தடை சாதனம் உண்டா?
ஆம். வளையம். யோனித் துவாரத்திற்குள் பொருத்தப்படும் வளையம் ஐருனு (ஐவெசய ருவநசiநெ னுநஎiஉந) இது கருப்பைக்குள்ளேயே இருக்கும். வைத்தியரின் உதவியுடனேயே இது உட்செலுத்தப்பட வேண்டும். ஒரு மெல்லிய நூலிழை வெளிப்புறமாகத் தொங்குகிறது. நீங்கள் விரும்பாதபோது இந்தச் சாதனத்தை இந்த நூல் இழையை இழுப்பதன் மூலம் அப்புறப்படுத்தலாம்.
முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்ட வளையம் அப்பிறிகொட் விதைகள். இவற்றை ஒட்டகத்தின் கருப்பைக்குள் வைப்பதனால் அவை கருத்தரிப்பது தடுக்கப்படுகிறதாம். இதைச் செய்வது ஏனெனில் கருத்தரித்திருந்தால் ஒட்டகங்களால் சுமையைத் தூக்க இயலாது. பாலைவனங்களில் அவற்றைப் பயன்படுத்த இயலாது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் வளையங்கள் அனைத்தும் செப்பு சேர்க்கப்பட்டவை. செப்பு வு வளையங்கள் ஆங்கில எழுத்து வு வடிவத்தில் இருக்கும். இது கருக்கட்டிய முட்டையை கருப்பையில் இடம்பெறவிடாது. கருக்கட்டி சிசு இருந்த போதிலும் மாதவிடாய் ஏற்படும்.
இதனைப் பற்றி பெண்கள் கூறும் குறைபாடு என்னவெனில் மாதவிடாயின் போது அதிக நோவினைத் தருகிறது.
இதிலுள்ள நன்மை யாதெனில் இது தொடர்ந்து உள்ளே இருக்கையில் கருத்தரிக்க 80% வாய்ப்பு இல்லை. இதனால் பூரண பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதபோதிலும் மாத்திரையால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு இடமில்லை. கருத்தடை உறையை விரும்பாதவர்கள் வளையங்களைப் பயன்படுத்தலாம்.
வேறேதும் கைப்பற்றி விடாத கருத்தடைச் சாதனம் உண்டா?
ஆம். கருப்பையின் கழுத்துப் புறத்தை மூடிவிடும் இறப்பர் அல்லது பிளாஸ்ரிகால் ஆன மென்சவ்வு உறை.
கருத்தரிக்காமல் இருக்கச் செய்ய வேண்டுவது என்ன?
பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பது மட்டுந்தானா? கருத்தடை உபகரணங்களைப் பயன்படுத்தலாமே!
பாலியல் உறவு முதன்முறைதான் என்பதற்காக அதிர்ஷ்டவசமாக ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்று மனப்பால் குடிக்காமல் இருங்கள். காதலனோ காதலியோ இருப்பின் சிலவேளைகளில் பாலியல் உறவு கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். ஆகவே பாதுகாப்பு நிமித்தம் கருத்தடைச் சாதனம் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். பாலியல் உறவு கொள்ளத் தயாராகத்தான் இருக்கின்றீர்கள் என்று நினைக்கத் தேவையில்லை.
ஆண்டு தோறும் ஐந்திற்கு நான்கு பெண்கள் கருத்தடைச் சாதனமின்றி பாலியல் உறவுகொள்வதால் கருத்தரித்து விடுகிறார்கள்.
எது பாதுகாப்பான கருத்தடைச் சாதனம்?
ஆண் கருத்தடை உறை
ஆண் கருத்தடை உறை என்பது ஆண்குறியை இறுக்கமாகப் பற்றி மூடிக் கொள்ளும் இரப்பராலான உறை. பாலியல் உறவு கொள்ளுமுன் இதனை ஆண்குறியின் மீது போர்த்திக் கொள்ளவேண்டும். பாலியல் உறவுக்கு முன் என்று கூறுவது உறுப்பு புடைத்து நிற்குமுன். புடைத்தெழும் போது உறுப்பின் மீது போடுவது சிரமம்.
வேறெந்த கருத்தடை சாதனமும் HIV யிலிருந்து உங்களைப் பாதுகாக்காது. கருத்தடை உறை விந்துகளையும் HIV யையும் பெண் யோனிக்குள் புகவிடாது. யோனிக்குள் புகாதபடியால் உடல் திரவங்கள் ஆணோடு கலப்பதும் தவிர்க்கப்படுகிறது. ஆணுறையில் தடவப்பட்ட உராய்வு நீக்கி விந்துகளையும், HIV யையும் கொன்றுவிடும். ஆணுறையை மேற்பகுதியிலிருந்து அகற்றிவிட வேண்டும்.
ஆணுறையால் பக்க விளைவுகள் எதுவுமில்லை.
ஆணுறையை எந்த மருந்து விற்பனை நிலையத்திலும் வைத்தியரின் சான்று இன்றியே விலைக்குப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆணுறை தான் ஆண்கள் பயன்படுத்தக்கூடிய ஒரே கருத்தடைச் சாதனம். பெற்றோலிய உபபொருளான வாசிலினை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் வாசிலின் ஆணுறை செய்யப்பட்ட றப்பர் பொருளைக் கரைக்கக்கூடியது. ஆண்குறியை வெளியே எடுக்கும் போது ஆணுறையும் உடன் வெளிவர வேண்டும். இல்லாது போனால் ஆணுறை உள்ளேயே நின்றுவிடும்.
மற்றைய கருத்தடை சாதனங்கள் HIV க்குத் தடை ஏற்படுத்தாதா?
இல்லை.
இவற்றைப் பயன்படுத்தத் தகுந்த இருவரும் HIV அற்றவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டவர்களும் முறையான தம்பதிகளுமே ஆவர்.
HIV பரிசோதனைகூட இரண்டு வாரங்களுக்கு முன் உங்கள் உடலில் இந்த வைரஸ் இருந்ததா என்பதை எடுத்துக்காட்டும்.
இருவரில் ஒருவருக்குக் கூட HIV அற்றவர் என்று குறிப்பிடுவது அந்தத் தம்பதியர் இருவரும் தம்மட்டிலே பாலியல் உறவு வைத்துக் கொண்டு இருப்பவர்கள். உங்கள் இருவருக்கும் அப்பால் வேறொருவருடன் உறவு கொள்ளும் போது ஆணுறைகளைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.
முறையான பாலுறவு கொள்ளாமலே கருப்பம் தரிக்க முடியுமா?
ஆம். ஆனால் இது அசாதாரணமானதே.
இது எப்படி ஏற்படுகிறது என்றால் இருவரும் சல்லாபித்துக் கொண்டிருக்கையில் ஆண் தனது ஆண்குறியை பெண்ணினது பிறப்புறுப்பின் மீது உராய்வான். ஆனால் உட்புகுத்தாதிருப்பான். உறுப்பு புடைத்து விந்து வெளிப்படும் போது நீந்திக் கொண்டு அவளுடைய சூலகத்து முட்டையை நோக்கி கருப்பையை அடையும். அவை மூன்று தினங்கள் வரை யோனிப்பகுதியில் உயிர் வாழும். அதுபோலவே AIDS நோய் தரும் HIV வைரசும், பாலியல் உறவைத் தவிர்க்கும் நோக்கத்தோடு இருந்த போதிலும் ஆணுறை அணிந்து கொள்ள வேண்டும்.
ஆணின் உறுப்பு புடைத்தெழாவிட்டாலும் கூட விந்தில் ஆண் அணுக்கள் காணப்படும். ஆணுறுப்பு புடைத்தெழும் போது வெளிப்படும். இதோடு சேர்ந்து HIV யும் பரவும் அபாயம் உண்டு.
திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவு தடை செய்யப்பட்ட கர்பிணிகள் கன்னிப் பெண்களாகக் காணப்படுவதாக வைத்தியர்கள் அறிவிக்கிறார்கள். இப்பெண்கள் பாலியல் உறவு கொள்ளாதவர்களே. அதோடு யோனி முகிழ் அருகிலுள்ள மென்சவ்வு (ர்லஅயn) எவ்வித பாதிப்புக்குள்ளும் ஆகாத நிலையில் காணப்படுகிறது.
கருத்தடையை ஏற்படுத்த ஓமோன்களைப் Hormones பயன்படுத்தலாமா?
ஆம். இருவித ஓமோன் கருத்தடைச் சாதனங்களுண்டு. ஒன்று மாத்திரை வடிவிலும் மற்றது ஊசி மருந்து வடிவிலும் இருக்கும். ஆனால் ஓமோன் பாவனையின் போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். புற்றுநோய், குருதி உறைதல் கோளாறுகள், உயர்குருதி அமுக்கம், ஈரல் கோளாறுகள், மைகிறெயின் தலைவலி ஆகியவை இருக்கும் போது மாத்திரையை உபயோகித்தால் பிரச்சினை பெரிதுபடும். அதோடு வலிப்பு ஏற்படுகையில் வைத்திய சிகிச்சையை மேற்கொள்ளும் போது மாத்திரை பேராபத்தை ஏற்படுத்தும். புகை ஊதினால் பெரிய சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
மாத்திரை எப்படி வேலை செய்கிறது?
மாதவிடாய் வந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு நாளுக்கு ஒரு மாத்திரை வீதம் 23 நாட்களுக்குத் தொடர்ந்து பாவிக்கப்படுகிறது. பிறகு 5 நாட்களுக்கு மாத்திரை ஒன்றையும் பயன்படுத்தாமல் இருந்து மாதவிடாயைச் சந்திக்கிறோம்.
மாத்திரை பயன்படுத்தும் போது முட்டை உற்பத்தி ஆவதில்லை. அதனால் விந்து முட்டையுடன் கருக்கட்டுவதில்லை. இதிலுள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் சில சமயங்களில் மாத்திரையை உட்கொள்ள மறந்துவிட்டால் கருத்தரிப்பதிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படும் நிலையை அடைவதில்லை. அதனால் மாதவிடாய் வருவதற்கு முன் மனத்தளர்ச்சி ஏற்படுகிறது. உங்களுடைய நிறையும் சுமார் 5 கிலோகிராம் அதிகரிக்கிறது. மார்பகப் புற்றுநோயும் நாளங்களில் குருதி உறைவும் ஏற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்நிலை நீண்ட நாட்களுக்கு மாத்திரையைப் பயன்படுத்துவதாலும் சிகறட் புகைப்பதாலும் வரக்கூடும்.
ஊசிமூலம் செலுத்தப்படும் கருத்தடை மருந்து என்பதென்ன?
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊசி மூலம் இந்தக் கருத்தடை மருந்து செலுத்தப்படுகிறது.
இந்த முறையிலுள்ள தீங்கு என்னவென்றால் இதனால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்ட போதிலும் உங்களுக்கு மனமாற்றம் ஏற்பட்ட போதிலும் இம்மூன்று மாதகாலங்களுக்கு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ள இயலாது.
இந்தக் கருத்தடை முறையை அரசாங்கம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இதனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டென்று அநேகர் கருதுகிறார்கள்.
நீங்கள் மறந்துவிட முடியாத வேறேதும் கருத்தடை சாதனம் உண்டா?
ஆம். வளையம். யோனித் துவாரத்திற்குள் பொருத்தப்படும் வளையம் ஐருனு (ஐவெசய ருவநசiநெ னுநஎiஉந) இது கருப்பைக்குள்ளேயே இருக்கும். வைத்தியரின் உதவியுடனேயே இது உட்செலுத்தப்பட வேண்டும். ஒரு மெல்லிய நூலிழை வெளிப்புறமாகத் தொங்குகிறது. நீங்கள் விரும்பாதபோது இந்தச் சாதனத்தை இந்த நூல் இழையை இழுப்பதன் மூலம் அப்புறப்படுத்தலாம்.
முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்ட வளையம் அப்பிறிகொட் விதைகள். இவற்றை ஒட்டகத்தின் கருப்பைக்குள் வைப்பதனால் அவை கருத்தரிப்பது தடுக்கப்படுகிறதாம். இதைச் செய்வது ஏனெனில் கருத்தரித்திருந்தால் ஒட்டகங்களால் சுமையைத் தூக்க இயலாது. பாலைவனங்களில் அவற்றைப் பயன்படுத்த இயலாது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் வளையங்கள் அனைத்தும் செப்பு சேர்க்கப்பட்டவை. செப்பு வு வளையங்கள் ஆங்கில எழுத்து வு வடிவத்தில் இருக்கும். இது கருக்கட்டிய முட்டையை கருப்பையில் இடம்பெறவிடாது. கருக்கட்டி சிசு இருந்த போதிலும் மாதவிடாய் ஏற்படும்.
இதனைப் பற்றி பெண்கள் கூறும் குறைபாடு என்னவெனில் மாதவிடாயின் போது அதிக நோவினைத் தருகிறது.
இதிலுள்ள நன்மை யாதெனில் இது தொடர்ந்து உள்ளே இருக்கையில் கருத்தரிக்க 80% வாய்ப்பு இல்லை. இதனால் பூரண பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதபோதிலும் மாத்திரையால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு இடமில்லை. கருத்தடை உறையை விரும்பாதவர்கள் வளையங்களைப் பயன்படுத்தலாம்.
வேறேதும் கைப்பற்றி விடாத கருத்தடைச் சாதனம் உண்டா?
ஆம். கருப்பையின் கழுத்துப் புறத்தை மூடிவிடும் இறப்பர் அல்லது பிளாஸ்ரிகால் ஆன மென்சவ்வு உறை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பருவமானவர்கள்
மென்சவ்வு உறை (Diaphragm) என்பது என்ன?
மென்சவ்வு உறை வட்டவடிவ வில்லை முடி இறப்பரால் ஆன மென்சவ்வு உறை. ஆகையால் அது ஆங்கில எழுத்து ‘O’ வடிவத்தில் அமைந்திருக்கும். இதனைப் பயன்படுத்துவோர் தாமாகவே யோனித்துவாரத்திற்குள் வைத்து வட்டவடிவ வில்பகுதியை யோனி வாயிலில் நங்கூரமிட வேண்டும். பூப்பு என்புக்குச் சற்று மேலாகவும் கருப்பையின் நுழைவாயிலான கழுத்துப் பகுதியிலிருந்து எட்டவும் அமையும் வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். மென்சவ்வு முழுவதின் மீதும் விந்து கொல்லி ஜெல்லியைப் பூசிவிட வேண்டும். ஏனெனில் கருப்பைக்குப் போகும் பாதையை தடைசெய்வது போதாது. விந்தின் ஆண் அணுக்கள் மூன்று நாட்கள் வரை உயிரோடு இருக்கும். சில இடைவெளிகள் ஊடாக உள்ளே புகுந்துவிடுவது சாத்தியமாகும். விந்து கொல்லியைத் தடவியிருந்தால் ஆபத்து ஒன்றுமின்றி எட்டுமணி நேரங்களுக்குப் பிறகு மென்சவ்வை எடுத்துவிடலாம்.
எல்லாப் பெண்களுக்கும் யோனி வௌ;வேறு அளவினதாக இருப்பதனால் பொருத்தமான அளவுடைய மென்சவ்வை வைத்தியர் ஒருவரின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுத்துக்கொள்வதும் அவருடைய ஆலோசனைபெற்று பொருத்திக் கொள்வதும் உசிதமானது. அவர் தகுந்த பிரயோக முறைகளையும் வழங்குவார். மருந்துச்சாலையில் தகுந்த அளவினதை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று சுமார் ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
உளவியல் ரீதியில் பாலியல் உறவுக்கு இத்தகைய மென்சவ்வு பயன்படுத்துவது குறையை விளைவிக்குமோ என்று நினைக்கத் தூண்டும். இத்தகைய சிந்தனையே இன்றிச் சில பெண்கள் இதனை ஒவ்வொரு இரவும் பூண்டு கொள்வார்கள். பாலியல் உறவுக்குச் சற்று முன்புதான் தேவை என்றே கருதுவதில்லை.
இதனால் பக்கவிளைவுகள் ஒன்றுமேயில்லை. ஏனென்றால் எவ்விதமான மருந்தையோ அல்லது இரசாயனப் பொருளையோ உட்கொள்வதில்லை. விந்துகொல்லிகளைப் பயன்படுத்தினால் கருப்பம் தரிக்காது என்று முழுமையாக நம்பலாம்.
கருப்பப்பைக் கழுத்து உறை (Cervical Cap) என்றால் என்ன?
கருப்பப்பைக் கழுத்து உறை என்பது மிகவும் சாதுவானதும் பாதுகாப்பானதுமான கருத்தடைச் சாதனமாகும். இது மிகவும் மலிவானதுமாகும். இதனால் இதனை யாரும் உற்பத்தி செய்வதில்லை. இதனைத் தயாரித்து விற்பதனால் அதிக லாபமும் கிட்டாது. ஒரு மூடி பலவாண்டுகளுக்கு மட்டுமல்ல. ஆயுள் காலம் முழுவதற்கும் நின்று நிலைக்கக் கூடியது. ஆணுறையை இதோடு ஒப்பிடும் போது ஆணுறையோ ஒவ்வொரு முறை பாலுறவு கொள்ளும் போதும் மாற்ற வேண்டும். ஆனால் இது அப்படியல்லவே.
கருப்பை கழுத்துறை கழுத்து வாயிலை சரியாக மூடியிருப்பதனால் கருப்பைக்குள் விந்தை உட்புக விடாது. இது சரியாகவே வாயிலை மூடிவிடுவதனால் மூடிமீது விந்து கொல்லியைப் பூசவேண்டிய அவசியம் இல்லை. அநேக பெண்கள் இதனை அந்த இடத்திலேயே பலநாட்களுக்கும் இருக்க விட்டு விடுவார்கள்.
மென்சவ்வினைக் காட்டிலும் இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இடத்தை விட்டு அகலாதிருக்க அடிக்கடி நகர்த்தியபடி இருக்க வேண்டியிராது.
கருப்பைக் கழுத்தை இறுகப் பிடித்தபடியே இருக்கும். இதனால் ஆண்களுக்கு எவ்வித தொல்லையும் ஏற்படாது. வளைய மென்சவ்வின் ஓரங்களில் படும்போது ஆண் குறியின் முனை காயப்பட இடம் உண்டு. ஏனெனில் உலோக வில்லின் மீது இறப்பர் பூசப்பட்ட பொருளே மென்சவ்வு. கருப்பைக்கழுத்து மூடியால் இப்படியான பிரச்சினை ஒன்றுமே ஏற்படாது.
இவை மட்டுந்தானா கருத்தடைச் சாதனங்கள்?
இல்லை. இன்னமும் அநேகம் உள்ளன. சுலபமாகக் காரியம் ஆற்றக் கூடியவற்றை மட்டுமே பயன்படுத்துவோம்.
இவை அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு மக்கள் எதனைப் பயன்படுத்தினார்கள்?
குடும்பத்தைக் கட:டுப்படுத்த அநேக முறைகளை மக்கள் அந்நாளில் கையாண்டார்கள். அவை எல்லாம் பூரணவெற்றியளிப்பவை அல்ல. முழுச் சமூகத்தையும் நோக்கினால் திட்டமிடப்படாமல் ஏற்பட்ட மக்கட் பேறுகள் மிகக் குறைவே.
சில ஆதிக்குடிகள் தற்காலிக மலட்டுத் தன்மை ஏற்படுத்தக்கூடிய மூலிகைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். அந்த மூலிகைகளைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமான காரியம். இதனால் நீண்ட காலப் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதோ தெரியாது. அநேகமாகப் பலரும் கையாண்ட முறைகள் சுருதிமுறையும் உச்சக்கட்டம் அடைந்ததும் அகற்றிவிடுவதும் ஆகும்.
சுருதி முறை (Rhythm method) என்பதென்ன?
ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாய் நின்று முதல் பத்து நாட்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகும். அப்பொழுதுதான் கருமுட்டை வெளிவருகிறது. அப்பொழுதுதான் கருக்கட்டுகிறது. முட்டை வெளிப்படும் காலம் சுமார் பத்து நாட்களுக்கு நீடிக்கும்.
பெண்ணிற்குக் கருமுட்டைகள் உருவாகும் போது உடல் வெப்பநிலை சாதாரண நிலையிலிருந்து ஓரிரு பாகை கூடுதலாக இருக்கும். யோனியில் ஏற்படும் திரவக் கசிவுகள் சாதாரணமாய் வழுக்கிப் போவதைக் காட்டிலும் தடித்துக் காணப்படும். ஒரு துளியை எடுத்து பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து அமுக்கினால் நாலைந்து அங்குலம் நீளும்.
சாதாரணமாகத் தம்பதிகள் செய்வது இதுதான். இப்படி முட்டை உற்பத்தி ஆகும் நாட்களைக் கண்டறிந்து அந்த நாட்களில் பாலுறவைத் தவிர்த்துக்கொள்வர்.
பெண்கள் கைகொள்ளும் விரத நாட்களும் இதோடு தொடர்புடையதே. விரத நாட்களில் பாலியல் உறவு கொள்வதில்லை.
விந்து வெளிவருமுன் ஆண்குறியை எடுத்து விடுவது என்றால் என்ன?
இது என்னவென்றால் ஆண்குறி புடைத்து விந்து வெளிவர இருக்கும் தருணத்தில் ஆண்குறியை பெண்ணின் யோனியிலிருந்து எடுத்து விடுவதாகும். புடைத்து விந்து முறையாக வெளிவருமுன்பே பல ஆண் அணுக்களைக் கொண்ட விந்துத்துளியொன்று யோனிக்குள் புகுந்துவிடக்கூடும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் குடும்பங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது இம்முறை முற்றுமுழுதாகத் தோல்வியானது என்று கூற முடியாது. சில பெண்கள் கருத்தரித்தபோதிலும் மக்கள் தொகை பாரிய பெருக்கம் ஏற்படவிலலை என்பதைக் காணலாம்.
கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல் கருத்தரித்துவிட்டால் அதன் பிறகு செய்யக் கூடியது என்ன?
ஆம். இதனால் பிறக்கின்ற பெண் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும். அந்த மருந்திற்குப் பெயர் “மாத்திரைப் பின் விடிவு” - “Morning after pills”
மாத்திரைக்குப் பின் விடிவு கருமுட்டை கருக்கட்டிய போதிலும் மாத விடாய் வெளிப்படுத்தக்கூடிய மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஓமோனைக் கொண்டது. இதனால் கருப்பம் தரித்துவிட்டோம் என்று அஞ்சத் தேவையில்லை. ஆனால் இதன் பிறகு பலமாதங்களுக்கு மாதவிடாயில் அநேக குழப்பங்கள் ஏற்படும். மாதவிடாய் ஒழுங்கு இடைவெளியில் வர நீண்ட நாட்கள் எடுக்கும். அதோடு அதன் பிறகு பிறக்கின்ற பெண் குழந்தைக்கு கருப்பப் பைப் பற்றுநோய் வரக்கூடும். பெரியதொரு விலையை அல்லவோ கொடுக்க வேண்டியுள்ளது.
‘மாத்திரைக்குப் பின் விடிவு’ வேறொரு பிச்சினைக்கும் வழிவகுக்கிறது. சிறிய அளவு ஓமோனைப் பயன்படுத்துவதால் கருப்பம் தரிப்பது தடுக்கப்படுவதில்லை. ஆனால் குழந்தையைச் சீர்குலைக்கும்.
நீங்கள் கருப்பம் தரித்தால்?
இரு வழிகள் உண்டு. ஒன்று குழந்தையைப் பெற்றெடுப்பது. மற்றது கருப்பத்தைச் சிதைப்பது. கருப்பச் சிதைவு என்பது குழந்தை வளருவதற்கு முன்பே கருப்பத்தைச் சிதைத்துவிடுவது. இரண்டு வித முடிவுகளுமே உளாPதியான வேதனையையே தருகிறது. கருப்பைச் சிதைவு அல்லது பிள்ளையைப் பெற்றெடுப்பது.
கர்ப்பச் சிதைவு செய்ய விரும்பினால்......
கருத்தரித்து மூன்று மாத காலத்திற்குள் கருச்சிதைவு செய்வது சுலபம். இதற்கென பயன்படுத்தும் முறையை ‘விரிவாக்கலும் தூய்மை செய்தலும்’ என அழைப்பர். இதை ஆங்கிலத்திலும் னுடையவழைn யனெ ஊரசநவவயபந - னுரூஊ என்பர். கருப்பையின் கழுத்துப் பாகத்தை அகலமாக்கி உள்ளே உள்ளவற்றைச் சுரண்டி எடுப்பது. இப்படிச் சுரண்டும் போது கருப்பை வரிகள், கரு, தொப்புள் கொடி அனைத்துமே அப்புறப்படுத்தப்படுகின்றன. தொப்புள்க்கொடி மூலம் தான் ஊட்டச்சத்து தாயிடமிருந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு செல்கிறது.
வேறொரு முறையும் உண்டு. இது துன்பமோ வலியோ குறைவாயுள்ள முறையாகும். கருச்சிதைவு உள்ளவற்றை உறிஞ்சி எடுப்பதன் மூலம் செய்யப்படுகிறது. இதனால் கருவில் உருவான சிசுவோடு தொப்புள் கொடி, கருப்பை வரி ஆகியவை உறிஞ்சி அகற்றப்படும். இம்முறையினால் மாதவிடாயையும் ஒரே தரத்தில் அகற்றிவிடுகிறது.
நாட்களைக் கடத்தினால் கருச்சிதைவு செய்துகொள்ள முடியாது. உங்களுக்குத் தேவையானது உவர்நீர்த் தூண்டுதலே. உவர்நீர் கருப்பையில் செயற்கையாகப் பிரசவவேதனையை உண்டுபண்ணிவிடும். குழந்தை பிறந்துவிடும் ஆனால் இறந்தே பிறக்கும். கருப்பைக்கு வெளியே உயிர் வாழாது.
கருச்சிதைவு செய்ய இருப்பின் தாயின், தந்தையின் குருதி வகையைத் தெரிந்திருத்தல் வேண்டும். பெண்ணின் குருதி வகை சுர் மறையாகவும் ஆணின் குருதி சுர் நேராகவும் இருப்பின் கருச்சிதைவு செய்த பிறகு பெண்ணின் உடலில் ஆணின் சுர் நேருக்கு எதிரான புறபொருள் எதிரி உருவாகிறது. ஆகவே இதன் பிறகு பிறக்கும் குழந்தைக்கு தந்தையாரின் சுர் நேர் பெறும். அக்குழந்தைக்கு சுர் நோய் ஏற்படும். இது சாதாரணமாக உயிருக்கே ஆபத்தானது. சுர் மறை குருதித் தொகுதியைக் கொண்ட தாய்மாருக்கு ஏற்படும் பெரும் பிரச்சினை. ஏனெனில் அநேகரிடம் இருப்பது சுர் நேர்குருதித் தொகுதி. சுர் நோயைத் தருகின்ற புறபொருள் எதிரியைக் கட்டுப்படுத்துவது றோகம் (சுர்ழுபுயுஆ) என்னும் ஊசி மருந்தைச் செலுத்துவதால் ஆகும். இதனை கருச்சிதைவு ஏற்பட்டவுடன் செலுத்த வேண்டும். புறபொருள் எதிரி எதுவும் உருவாவதற்கு முன்பாகவும் வைத்திய சாலையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாகவும் இந்த ஊசி மருந்தைச் செலுத்தியிருக்க வேண்டும்.
கருச்சிதைவுக்குப் பிறகு ஓரிருநாட்களில் நடைபெறும். ஆனால் இது அநேக நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். இந்தக் குருதி வெளியேற்றம் கருப்பையிலிருந்து யோனி வழியாக நடைபெறும்.
‘மாத்திரைக்குப் பின் விடிவு’க்குப் (Morning after pills) பதிலாக வேறுவிதமாக கருச்சிதைவு ஏற்படுத்தலாமா?
ஆம். ஆரம்பக்கட்டத்திலேயே அதாவது கணக்குப்படி அடுத்த மாத மாதவிடாய் வருமுன் செய்தல் முறையாகும். முன்கூட்டியே காலிசெய்து கொள்ளும் கருச்சிதைவு முறையாகும். கர்ப்பிணி ஆகியுள்ளோம் என்று அறிந்து கொள்வதற்கு முன்பேயே அல்லது கருவில் சிசு உருவாவதற்கு முன்பேயே செய்து கொள்ளும் கருச்சிதைவு முறையாகும். சிசு கருப்பைக்குள் அதன் வரிகளில் நாட்டப்பட்டு விடுமுன்னே நடைபெறுகிறது.
‘மாத்திரைக்குப் பின் விடிவு’ முறையைக் காட்டிலும் பாதுகாப்பும் பயனும் உள்ள முறை உறிஞ்சி எடுக்கும் முறை. மாத்திரைக்குப்பின் விடிவு முறையைக் கையாளுவதால் மாதவிடாயில் நீண்ட கால உழைச்சல் ஏற்படுவதோடு காலப் போக்கில் பிறக்கப்போகும் பெண்குழந்தைக்கு ஏற்படப் போகும் பாதிப்பும் இராது. கருத்தரித்து விட்டோம் என்று உறுதியாகத் தெரிந்த நிலையைக் காட்டிலும் இது தரும் உளாPதியான பாதிப்பு மிகவும் குறைவு. உங்களுக்கு சுர் மறை இனக் குருதியாய் இருந்தால் வைத்தியசாலையை விட்டு வெளியேறுமுன் சுர்ழுபுயுஆ மருந்து ஊசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும். இது வருங்காலத்தில் பிறக்கப்போகும் உங்கள் பிள்ளைகளுக்கும் சுர் வியாதியிலிருந்து பாதுகாக்கும்.
முன்கூட்டியே காலி செய்யும் கருச்சிதைவு முறை இன்னமும் பல படிகள் முன்னேற வேண்டும். ஆற்றிய பாலுறவை மீண்டும் அடைவது சிரமம். பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணொருத்திக்கு காலி செய்யும் முறையைச் செய்யும் படி ஆலோசனை கூறலாம்.
குழந்தையொன்று வேண்டும் என்று கருதினால்...
குழந்தை அதிஷ்டசாலிதான். இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் வெறும் பருவமானவர்கள் மட்டுமாயிருந்து கொண்டு ஓர் ஆணை மணப்பதோ அல்லது குடும்பம் நடத்துவதோ இயலாத காரியம். திருமணக் கட்டளைச் சட்டத்தின்படி பெண் 14 வயதையும் ஆண் 16 வயதையும் அடைந்திருந்தால் தான் திருமணம் செய்து கொள்ளலாம். அதோடு தந்தையாகப் போபவன் அந்தப் பொறுப்பை ஏற்க விரும்புவதில்லை. வெறுமனே பொழுதைப் போக்கித் தப்பித்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். திருமணம் செய்து கொண்டு விட்டாலோ பாடசாலை உயர்கல்வி கற்பதெல்லாம் மாற்றம் அடைந்துவிடும். பொறுப்புகள் நிரம்பிய திருமணம் செய்தவராகிவிடுகிறீர்கள். இருந்த போதிலும் சந்தோஷம் அடைந்து வாழ்வீர்கள்.
உங்கள் பெற்றோர் பாதுகாப்பும் உதவியும் தந்து கொண்டு இருப்பவர்களாயின் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தையொன்றைப் பெற்றெடுக்கலாம். ஆனாலும் நீங்கள் எடுத்துள்ள முடிவு ஒரு பயங்கரமானது என்று நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆகாத தாயாக இருப்பதனால் நீங்களும் உங்கள் குழந்தையும் சமூகத்தில் வித்தியாசமாக நடத்தப்படப் போகிறீர்கள்.
இலங்கை இதற்கெல்லாம் அனுசரணையான நாடல்ல என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நிலைகளைச் சந்திக்க மனவுறுதி வேண்டும். நன்றாக ஆழமாகச் சிந்தியுங்கள்.
வெறோரு வழியும் உண்டு. குழந்தை ஒன்றைத் தத்து எடுத்துக் கொள்வது. குழந்தை பெற்றெடுக்க முடியாத பல பெற்றோர் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். வாழ்க்கை வழமைபோலத் தொடர்ந்து நடக்கும். பெற்றெடுத்த குழந்தையை தத்தெடுப்போருக்குக் கொடுக்கும் போது குழந்தையைக் காலப்போக்கில் வெறுக்கத் தலைப்படுவர். ஏனெனில் திருமணம் ஆகுமுன் பிறந்த குழந்தைக்கு சமூகம் மதிப்பு அளிப்பதில்லை.
மென்சவ்வு உறை வட்டவடிவ வில்லை முடி இறப்பரால் ஆன மென்சவ்வு உறை. ஆகையால் அது ஆங்கில எழுத்து ‘O’ வடிவத்தில் அமைந்திருக்கும். இதனைப் பயன்படுத்துவோர் தாமாகவே யோனித்துவாரத்திற்குள் வைத்து வட்டவடிவ வில்பகுதியை யோனி வாயிலில் நங்கூரமிட வேண்டும். பூப்பு என்புக்குச் சற்று மேலாகவும் கருப்பையின் நுழைவாயிலான கழுத்துப் பகுதியிலிருந்து எட்டவும் அமையும் வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். மென்சவ்வு முழுவதின் மீதும் விந்து கொல்லி ஜெல்லியைப் பூசிவிட வேண்டும். ஏனெனில் கருப்பைக்குப் போகும் பாதையை தடைசெய்வது போதாது. விந்தின் ஆண் அணுக்கள் மூன்று நாட்கள் வரை உயிரோடு இருக்கும். சில இடைவெளிகள் ஊடாக உள்ளே புகுந்துவிடுவது சாத்தியமாகும். விந்து கொல்லியைத் தடவியிருந்தால் ஆபத்து ஒன்றுமின்றி எட்டுமணி நேரங்களுக்குப் பிறகு மென்சவ்வை எடுத்துவிடலாம்.
எல்லாப் பெண்களுக்கும் யோனி வௌ;வேறு அளவினதாக இருப்பதனால் பொருத்தமான அளவுடைய மென்சவ்வை வைத்தியர் ஒருவரின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுத்துக்கொள்வதும் அவருடைய ஆலோசனைபெற்று பொருத்திக் கொள்வதும் உசிதமானது. அவர் தகுந்த பிரயோக முறைகளையும் வழங்குவார். மருந்துச்சாலையில் தகுந்த அளவினதை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று சுமார் ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
உளவியல் ரீதியில் பாலியல் உறவுக்கு இத்தகைய மென்சவ்வு பயன்படுத்துவது குறையை விளைவிக்குமோ என்று நினைக்கத் தூண்டும். இத்தகைய சிந்தனையே இன்றிச் சில பெண்கள் இதனை ஒவ்வொரு இரவும் பூண்டு கொள்வார்கள். பாலியல் உறவுக்குச் சற்று முன்புதான் தேவை என்றே கருதுவதில்லை.
இதனால் பக்கவிளைவுகள் ஒன்றுமேயில்லை. ஏனென்றால் எவ்விதமான மருந்தையோ அல்லது இரசாயனப் பொருளையோ உட்கொள்வதில்லை. விந்துகொல்லிகளைப் பயன்படுத்தினால் கருப்பம் தரிக்காது என்று முழுமையாக நம்பலாம்.
கருப்பப்பைக் கழுத்து உறை (Cervical Cap) என்றால் என்ன?
கருப்பப்பைக் கழுத்து உறை என்பது மிகவும் சாதுவானதும் பாதுகாப்பானதுமான கருத்தடைச் சாதனமாகும். இது மிகவும் மலிவானதுமாகும். இதனால் இதனை யாரும் உற்பத்தி செய்வதில்லை. இதனைத் தயாரித்து விற்பதனால் அதிக லாபமும் கிட்டாது. ஒரு மூடி பலவாண்டுகளுக்கு மட்டுமல்ல. ஆயுள் காலம் முழுவதற்கும் நின்று நிலைக்கக் கூடியது. ஆணுறையை இதோடு ஒப்பிடும் போது ஆணுறையோ ஒவ்வொரு முறை பாலுறவு கொள்ளும் போதும் மாற்ற வேண்டும். ஆனால் இது அப்படியல்லவே.
கருப்பை கழுத்துறை கழுத்து வாயிலை சரியாக மூடியிருப்பதனால் கருப்பைக்குள் விந்தை உட்புக விடாது. இது சரியாகவே வாயிலை மூடிவிடுவதனால் மூடிமீது விந்து கொல்லியைப் பூசவேண்டிய அவசியம் இல்லை. அநேக பெண்கள் இதனை அந்த இடத்திலேயே பலநாட்களுக்கும் இருக்க விட்டு விடுவார்கள்.
மென்சவ்வினைக் காட்டிலும் இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இடத்தை விட்டு அகலாதிருக்க அடிக்கடி நகர்த்தியபடி இருக்க வேண்டியிராது.
கருப்பைக் கழுத்தை இறுகப் பிடித்தபடியே இருக்கும். இதனால் ஆண்களுக்கு எவ்வித தொல்லையும் ஏற்படாது. வளைய மென்சவ்வின் ஓரங்களில் படும்போது ஆண் குறியின் முனை காயப்பட இடம் உண்டு. ஏனெனில் உலோக வில்லின் மீது இறப்பர் பூசப்பட்ட பொருளே மென்சவ்வு. கருப்பைக்கழுத்து மூடியால் இப்படியான பிரச்சினை ஒன்றுமே ஏற்படாது.
இவை மட்டுந்தானா கருத்தடைச் சாதனங்கள்?
இல்லை. இன்னமும் அநேகம் உள்ளன. சுலபமாகக் காரியம் ஆற்றக் கூடியவற்றை மட்டுமே பயன்படுத்துவோம்.
இவை அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு மக்கள் எதனைப் பயன்படுத்தினார்கள்?
குடும்பத்தைக் கட:டுப்படுத்த அநேக முறைகளை மக்கள் அந்நாளில் கையாண்டார்கள். அவை எல்லாம் பூரணவெற்றியளிப்பவை அல்ல. முழுச் சமூகத்தையும் நோக்கினால் திட்டமிடப்படாமல் ஏற்பட்ட மக்கட் பேறுகள் மிகக் குறைவே.
சில ஆதிக்குடிகள் தற்காலிக மலட்டுத் தன்மை ஏற்படுத்தக்கூடிய மூலிகைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். அந்த மூலிகைகளைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமான காரியம். இதனால் நீண்ட காலப் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதோ தெரியாது. அநேகமாகப் பலரும் கையாண்ட முறைகள் சுருதிமுறையும் உச்சக்கட்டம் அடைந்ததும் அகற்றிவிடுவதும் ஆகும்.
சுருதி முறை (Rhythm method) என்பதென்ன?
ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாய் நின்று முதல் பத்து நாட்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகும். அப்பொழுதுதான் கருமுட்டை வெளிவருகிறது. அப்பொழுதுதான் கருக்கட்டுகிறது. முட்டை வெளிப்படும் காலம் சுமார் பத்து நாட்களுக்கு நீடிக்கும்.
பெண்ணிற்குக் கருமுட்டைகள் உருவாகும் போது உடல் வெப்பநிலை சாதாரண நிலையிலிருந்து ஓரிரு பாகை கூடுதலாக இருக்கும். யோனியில் ஏற்படும் திரவக் கசிவுகள் சாதாரணமாய் வழுக்கிப் போவதைக் காட்டிலும் தடித்துக் காணப்படும். ஒரு துளியை எடுத்து பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து அமுக்கினால் நாலைந்து அங்குலம் நீளும்.
சாதாரணமாகத் தம்பதிகள் செய்வது இதுதான். இப்படி முட்டை உற்பத்தி ஆகும் நாட்களைக் கண்டறிந்து அந்த நாட்களில் பாலுறவைத் தவிர்த்துக்கொள்வர்.
பெண்கள் கைகொள்ளும் விரத நாட்களும் இதோடு தொடர்புடையதே. விரத நாட்களில் பாலியல் உறவு கொள்வதில்லை.
விந்து வெளிவருமுன் ஆண்குறியை எடுத்து விடுவது என்றால் என்ன?
இது என்னவென்றால் ஆண்குறி புடைத்து விந்து வெளிவர இருக்கும் தருணத்தில் ஆண்குறியை பெண்ணின் யோனியிலிருந்து எடுத்து விடுவதாகும். புடைத்து விந்து முறையாக வெளிவருமுன்பே பல ஆண் அணுக்களைக் கொண்ட விந்துத்துளியொன்று யோனிக்குள் புகுந்துவிடக்கூடும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் குடும்பங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது இம்முறை முற்றுமுழுதாகத் தோல்வியானது என்று கூற முடியாது. சில பெண்கள் கருத்தரித்தபோதிலும் மக்கள் தொகை பாரிய பெருக்கம் ஏற்படவிலலை என்பதைக் காணலாம்.
கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல் கருத்தரித்துவிட்டால் அதன் பிறகு செய்யக் கூடியது என்ன?
ஆம். இதனால் பிறக்கின்ற பெண் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும். அந்த மருந்திற்குப் பெயர் “மாத்திரைப் பின் விடிவு” - “Morning after pills”
மாத்திரைக்குப் பின் விடிவு கருமுட்டை கருக்கட்டிய போதிலும் மாத விடாய் வெளிப்படுத்தக்கூடிய மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஓமோனைக் கொண்டது. இதனால் கருப்பம் தரித்துவிட்டோம் என்று அஞ்சத் தேவையில்லை. ஆனால் இதன் பிறகு பலமாதங்களுக்கு மாதவிடாயில் அநேக குழப்பங்கள் ஏற்படும். மாதவிடாய் ஒழுங்கு இடைவெளியில் வர நீண்ட நாட்கள் எடுக்கும். அதோடு அதன் பிறகு பிறக்கின்ற பெண் குழந்தைக்கு கருப்பப் பைப் பற்றுநோய் வரக்கூடும். பெரியதொரு விலையை அல்லவோ கொடுக்க வேண்டியுள்ளது.
‘மாத்திரைக்குப் பின் விடிவு’ வேறொரு பிச்சினைக்கும் வழிவகுக்கிறது. சிறிய அளவு ஓமோனைப் பயன்படுத்துவதால் கருப்பம் தரிப்பது தடுக்கப்படுவதில்லை. ஆனால் குழந்தையைச் சீர்குலைக்கும்.
நீங்கள் கருப்பம் தரித்தால்?
இரு வழிகள் உண்டு. ஒன்று குழந்தையைப் பெற்றெடுப்பது. மற்றது கருப்பத்தைச் சிதைப்பது. கருப்பச் சிதைவு என்பது குழந்தை வளருவதற்கு முன்பே கருப்பத்தைச் சிதைத்துவிடுவது. இரண்டு வித முடிவுகளுமே உளாPதியான வேதனையையே தருகிறது. கருப்பைச் சிதைவு அல்லது பிள்ளையைப் பெற்றெடுப்பது.
கர்ப்பச் சிதைவு செய்ய விரும்பினால்......
கருத்தரித்து மூன்று மாத காலத்திற்குள் கருச்சிதைவு செய்வது சுலபம். இதற்கென பயன்படுத்தும் முறையை ‘விரிவாக்கலும் தூய்மை செய்தலும்’ என அழைப்பர். இதை ஆங்கிலத்திலும் னுடையவழைn யனெ ஊரசநவவயபந - னுரூஊ என்பர். கருப்பையின் கழுத்துப் பாகத்தை அகலமாக்கி உள்ளே உள்ளவற்றைச் சுரண்டி எடுப்பது. இப்படிச் சுரண்டும் போது கருப்பை வரிகள், கரு, தொப்புள் கொடி அனைத்துமே அப்புறப்படுத்தப்படுகின்றன. தொப்புள்க்கொடி மூலம் தான் ஊட்டச்சத்து தாயிடமிருந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு செல்கிறது.
வேறொரு முறையும் உண்டு. இது துன்பமோ வலியோ குறைவாயுள்ள முறையாகும். கருச்சிதைவு உள்ளவற்றை உறிஞ்சி எடுப்பதன் மூலம் செய்யப்படுகிறது. இதனால் கருவில் உருவான சிசுவோடு தொப்புள் கொடி, கருப்பை வரி ஆகியவை உறிஞ்சி அகற்றப்படும். இம்முறையினால் மாதவிடாயையும் ஒரே தரத்தில் அகற்றிவிடுகிறது.
நாட்களைக் கடத்தினால் கருச்சிதைவு செய்துகொள்ள முடியாது. உங்களுக்குத் தேவையானது உவர்நீர்த் தூண்டுதலே. உவர்நீர் கருப்பையில் செயற்கையாகப் பிரசவவேதனையை உண்டுபண்ணிவிடும். குழந்தை பிறந்துவிடும் ஆனால் இறந்தே பிறக்கும். கருப்பைக்கு வெளியே உயிர் வாழாது.
கருச்சிதைவு செய்ய இருப்பின் தாயின், தந்தையின் குருதி வகையைத் தெரிந்திருத்தல் வேண்டும். பெண்ணின் குருதி வகை சுர் மறையாகவும் ஆணின் குருதி சுர் நேராகவும் இருப்பின் கருச்சிதைவு செய்த பிறகு பெண்ணின் உடலில் ஆணின் சுர் நேருக்கு எதிரான புறபொருள் எதிரி உருவாகிறது. ஆகவே இதன் பிறகு பிறக்கும் குழந்தைக்கு தந்தையாரின் சுர் நேர் பெறும். அக்குழந்தைக்கு சுர் நோய் ஏற்படும். இது சாதாரணமாக உயிருக்கே ஆபத்தானது. சுர் மறை குருதித் தொகுதியைக் கொண்ட தாய்மாருக்கு ஏற்படும் பெரும் பிரச்சினை. ஏனெனில் அநேகரிடம் இருப்பது சுர் நேர்குருதித் தொகுதி. சுர் நோயைத் தருகின்ற புறபொருள் எதிரியைக் கட்டுப்படுத்துவது றோகம் (சுர்ழுபுயுஆ) என்னும் ஊசி மருந்தைச் செலுத்துவதால் ஆகும். இதனை கருச்சிதைவு ஏற்பட்டவுடன் செலுத்த வேண்டும். புறபொருள் எதிரி எதுவும் உருவாவதற்கு முன்பாகவும் வைத்திய சாலையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாகவும் இந்த ஊசி மருந்தைச் செலுத்தியிருக்க வேண்டும்.
கருச்சிதைவுக்குப் பிறகு ஓரிருநாட்களில் நடைபெறும். ஆனால் இது அநேக நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். இந்தக் குருதி வெளியேற்றம் கருப்பையிலிருந்து யோனி வழியாக நடைபெறும்.
‘மாத்திரைக்குப் பின் விடிவு’க்குப் (Morning after pills) பதிலாக வேறுவிதமாக கருச்சிதைவு ஏற்படுத்தலாமா?
ஆம். ஆரம்பக்கட்டத்திலேயே அதாவது கணக்குப்படி அடுத்த மாத மாதவிடாய் வருமுன் செய்தல் முறையாகும். முன்கூட்டியே காலிசெய்து கொள்ளும் கருச்சிதைவு முறையாகும். கர்ப்பிணி ஆகியுள்ளோம் என்று அறிந்து கொள்வதற்கு முன்பேயே அல்லது கருவில் சிசு உருவாவதற்கு முன்பேயே செய்து கொள்ளும் கருச்சிதைவு முறையாகும். சிசு கருப்பைக்குள் அதன் வரிகளில் நாட்டப்பட்டு விடுமுன்னே நடைபெறுகிறது.
‘மாத்திரைக்குப் பின் விடிவு’ முறையைக் காட்டிலும் பாதுகாப்பும் பயனும் உள்ள முறை உறிஞ்சி எடுக்கும் முறை. மாத்திரைக்குப்பின் விடிவு முறையைக் கையாளுவதால் மாதவிடாயில் நீண்ட கால உழைச்சல் ஏற்படுவதோடு காலப் போக்கில் பிறக்கப்போகும் பெண்குழந்தைக்கு ஏற்படப் போகும் பாதிப்பும் இராது. கருத்தரித்து விட்டோம் என்று உறுதியாகத் தெரிந்த நிலையைக் காட்டிலும் இது தரும் உளாPதியான பாதிப்பு மிகவும் குறைவு. உங்களுக்கு சுர் மறை இனக் குருதியாய் இருந்தால் வைத்தியசாலையை விட்டு வெளியேறுமுன் சுர்ழுபுயுஆ மருந்து ஊசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும். இது வருங்காலத்தில் பிறக்கப்போகும் உங்கள் பிள்ளைகளுக்கும் சுர் வியாதியிலிருந்து பாதுகாக்கும்.
முன்கூட்டியே காலி செய்யும் கருச்சிதைவு முறை இன்னமும் பல படிகள் முன்னேற வேண்டும். ஆற்றிய பாலுறவை மீண்டும் அடைவது சிரமம். பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணொருத்திக்கு காலி செய்யும் முறையைச் செய்யும் படி ஆலோசனை கூறலாம்.
குழந்தையொன்று வேண்டும் என்று கருதினால்...
குழந்தை அதிஷ்டசாலிதான். இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் வெறும் பருவமானவர்கள் மட்டுமாயிருந்து கொண்டு ஓர் ஆணை மணப்பதோ அல்லது குடும்பம் நடத்துவதோ இயலாத காரியம். திருமணக் கட்டளைச் சட்டத்தின்படி பெண் 14 வயதையும் ஆண் 16 வயதையும் அடைந்திருந்தால் தான் திருமணம் செய்து கொள்ளலாம். அதோடு தந்தையாகப் போபவன் அந்தப் பொறுப்பை ஏற்க விரும்புவதில்லை. வெறுமனே பொழுதைப் போக்கித் தப்பித்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். திருமணம் செய்து கொண்டு விட்டாலோ பாடசாலை உயர்கல்வி கற்பதெல்லாம் மாற்றம் அடைந்துவிடும். பொறுப்புகள் நிரம்பிய திருமணம் செய்தவராகிவிடுகிறீர்கள். இருந்த போதிலும் சந்தோஷம் அடைந்து வாழ்வீர்கள்.
உங்கள் பெற்றோர் பாதுகாப்பும் உதவியும் தந்து கொண்டு இருப்பவர்களாயின் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தையொன்றைப் பெற்றெடுக்கலாம். ஆனாலும் நீங்கள் எடுத்துள்ள முடிவு ஒரு பயங்கரமானது என்று நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆகாத தாயாக இருப்பதனால் நீங்களும் உங்கள் குழந்தையும் சமூகத்தில் வித்தியாசமாக நடத்தப்படப் போகிறீர்கள்.
இலங்கை இதற்கெல்லாம் அனுசரணையான நாடல்ல என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நிலைகளைச் சந்திக்க மனவுறுதி வேண்டும். நன்றாக ஆழமாகச் சிந்தியுங்கள்.
வெறோரு வழியும் உண்டு. குழந்தை ஒன்றைத் தத்து எடுத்துக் கொள்வது. குழந்தை பெற்றெடுக்க முடியாத பல பெற்றோர் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். வாழ்க்கை வழமைபோலத் தொடர்ந்து நடக்கும். பெற்றெடுத்த குழந்தையை தத்தெடுப்போருக்குக் கொடுக்கும் போது குழந்தையைக் காலப்போக்கில் வெறுக்கத் தலைப்படுவர். ஏனெனில் திருமணம் ஆகுமுன் பிறந்த குழந்தைக்கு சமூகம் மதிப்பு அளிப்பதில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பருவமானவர்கள்
அபாயங்களும் முரண்களும் (RISK AND CONFLICT)
பெற்றோரிடமிருந்து விடுதலை
அதிர்ச்சி ஊட்டக் கூடிய விதத்தில் பெற்றோருக்கு முதன் முறையாக முதுமையின் அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன. இந்த வயதில் தான் பெற்றோர் இருவரிடையே பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. சிலவேளைகளில் தாம் பிரிந்து வாழ்ந்தால் என்ன என்று நினைக்கவும் தலைப்படுகின்றனர். மேலும் இது அவர்களுக்கு நெருக்கடி நிரம்பிய காலம். பிள்ளைகளின் உதவியை நாடும் நிலைக்கு உந்தப்படுகின்றனர். பிள்ளைகளோ பிரிந்து தனியாக விரும்புகின்றார்கள். இதனால் பெற்றோர் பிள்ளைகளின் சுதந்திரப் போக்கிற்கு எதிராகச் செயல்படுகின்றனர். பிள்ளைகளின் மீதுள்ள அவர்கள் உரிமை வேட்கை உச்சத்தை அடைகிறது.
பருவமானவர்கள் தமது உரிமைக் கோரிக்கைகள் வரம்பை மீறிவிட்டனவென்று அறிவதெப்படி?
ஒருவழி இருக்கிறது. உங்கள் கோரிக்கைகள் நியாயமற்றவை என்று கருதினால் சற்று பொறுத்துச் சிந்தித்துப் பெற்றோரின் இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி அணுகிச் செயல்படுவீர்களென ஆராயுங்கள். நீங்கள் பெற்றோரின் ஸ்தானத்திலிருந்து பார்க்கும் போது ஒன்றும் இதற்குச் செய்து கொள்ள இயலாது என்று கருதுவீர்களாயின் நீங்கள் கோரியது அதிகப்படியானது என்ற முடிவுக்கு எளிதில் வரலாம். ஆகவே எழுந்துள்ள பிரச்சினைகளுக்குக் காரணமானவர் பெற்றோர் அல்லர் நீங்கள் தான்.
எமது பாட்டனார் காலத்திலோ அல்லது எமது கிராம மக்களிடையேயோ இத்தகைய பிரச்சினை இருக்கவில்லை ஏன்?
இரண்டு காரணங்கள்.
முதலாவதாக இத்தகைய முரண்பாடுகள் வெளிவர பெற்றோருடன் ஒளிவு மறைவின்றி விஷயங்களை அணுக வேண்டும். முன்னாளில் கிராம மக்களின் அதிகாரப் பிரயோகம் எல்லாவித எழுச்சியையும் அடக்கிக் கட்டுப்படுத்தக் கூடியது. இதனால் பருவமானவரின் புரட்சிகள் அனைத்துமே நசுக்கப்பட்டு விடும்.
எமது பாட்டனார் காலத்திலோ, கிராம மக்களிடையேயோ மக்கள் சிறுவயதிலேயே திருமணமாகி விடுகிறார்கள். வீட்டை விட்டு வெளியேறியோ வெளியேறாமலோ குடும்பத்தவரை பார்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர் விரக்தியடையும் நிலயை எய்துவதில்லை. பாலியல் உறவு கொள்வதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். குடும்ப உறவையே தொடர்ந்தும் பேணி வருகின்றார்கள். வயது வந்தோர் நிலைக்குத் தயார் செய்து கொள்வதில்லை. ஆனால் வயது வந்தோர் சுமக்க வேண்டிய பொறுப்புக்களை சுமக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
பருவமானோர் மனோநிலை மாற்றம் காண்பது என்பது இது தானா?
பருவமானவர்கள் தற்போதெல்லாம் மனோநிலை மாற்றத்திற்குள் ளாகிறார்களே என்று கூறக் கேட்கிறோம். இதனால் முன்பெல்லாம் நல்ல தகுந்த காரணங்களுக்காக கோபமோ, கவலையோ, மகிழ்ச்சியோ அடைந்தார்கள்.
உணர்ச்சிகள் திடீரெனவோ, ஆகாயத்திலிருந்து பிறப்பதில்லை. நடந்தேறிய சில சம்பவங்களே உணர்ச்சி மேலிடத் தூண்டுகிறது. மனம் புண்படும் வகையில் சிலர் சிலவற்றைக் கூறிவிடுவதாலோ முகக்கண்ணாடியில் உங்களையே நீங்கள் பார்க்கும் போது தோன்றுவது உங்களுக்கு பிடிக்காததாக இருக்கும் போதோ ஏற்படுகிறது. அல்லது நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் மன ஏக்கத்தைப் பெருக்குவதும் உலகமும் வாழ்க்கையும் வெறுமையானவையே என்கின்ற எண்ணத்தைத் தருவதாயும் இருப்பதாய் இருந்தால் மன உழைச்சல் ஏற்படுகிறது. எல்லாமே நடந்து முடிந்த சம்பவங்களாக இருக்க வேண்டுவதில்லை. மனதில் தோன்றுபவையும் கூட.
சிலசமயம் ஏற்படும் உணர்ச்சிகள் பெற்றோரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் ஒதுங்கிய, தனிமையிலிருந்து சிந்திக்க விரும்பும் நிலையிலும் பிறக்கின்றன.
ஓமோன்கள் என்றால் என்ன? பெண்களுக்குத் தான் மனோநிலைமை கூடுதலாகக் காணப்படுவதாகக் கூறுகிறார்களே ஏன்?
அநேகமான பெண்களுக்கு அப்படியில்லை. பெண்களுக்கு ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது என்று கூறுவது கடினம். பெண்கள் எப்படி நடக்க வேண்டுமென்று பெரியோர்கள் விரும்புகிறார்களோ அதற்கிணங்க நடக்க முயலும் வகையில் அழவேண்டும் என்று கூறப்பட்டால் கூடுதலாக அழுவார்கள். ஆண்களோ அழ மாட்டார்கள் தானே? அதனால் கோபப்படுபவார்கள் அல்லது ஆவேசம் அடைவார்கள்.
பெண்கள் மாதவிடாய்க்கு முன்பு மனத் தளர்ச்சி அடைகிறார்கள். ஆதலால் விரைவாக இதனை எப்படிக் கையாளுவதென்று அறிதல் வேண்டும். அல்லது இதில் எவ்வித கவனமும் செலுத்தாமல் இருப்பது. சாதாரணமாக மனத் தளர்ச்சியடைவோர் மாதவிடாய் வருமுன் மனத் தளர்ச்சியடைவோரே.
இந்தத் தலைமுறை ஏன் வித்தியாசமானது?
மிகப் பெரிய அம்சம் பாடசாலை. பாடசாலை என்றால் பெற்றோரிடமிருந்து சில மணி நேரங்கள் வாரத்திற்கு சுமார் ஆறு நாட்களுக்குப் பிரிந்து வாழுதல். இந்த நேரங்களிலும் நாட்களிலும் வகுப்புத் தோழர்களுடன் சமவயதினருடன் செலவிடுகிறோம்.
பெற்றோரைப் பொறுத்தவரை அவர்களிடமிருந்து கற்பதைக் காட்டிலும், உங்கள் சமவயதினருடன் நெருங்கிப் பழகி அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதையே பருவமானோர் விரும்புகின்றனர். இதுவே பெற்றோரைப் பொறுத்தவரை தீய அம்சமாகும். இந்தப் பார்வையே பருவமானவரிடம் கூடுதலாக வலுப்பெறுகிறது. அதேசமயம் பெற்றோரிடமிருந்தும் அகன்று போகின்றனர்.
இதிலுள்ள நல்ல அம்சம் சமூகத்தில் பெரிய மாற்றமும், புதிய கருத்துக்கள் மலர வாய்ப்பும் ஏற்படுகின்றது. காலா காலமாக செய்து வந்தவற்றை எல்லாம் கைவிட்டு புதிய முறைகள் தலைகாட்டுகின்றன. முரண்பாடுகள் எல்லாம் இந்த மாற்றங்களைப் புகுத்துவதற்காகவே. சமூகம் தானாகவே நிலையை மாற்றிக் கொள்ளாது.
பாடசாலை போவோருக்கு புதிய கருத்துக்களைத் தருவதெது?
பெருமளவில் தொடர்பு சாதனங்கள், தொலைக்காட்சி, வானொலி, படங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரபல புத்தகங்கள், தொடர்பு சாதனங்கள் எல்லா வயதினரையும் அடையக் கூடியது. பெற்றோராலோ இது இயலாது. நல்லதோர் ஆசிரியரால் ஒரு பாடசாலையில் தான் செல்வாக்கைப் பயன்படுத்த இயலும்.
பாடசாலை செல்லும் பருவமானவர்களை தொடர்பு சாதனங்கள் தம் வயப்படுத்துவது போல மற்றவர்களால் முடியாது. இந்தப் பிராயத்தில் தான் ஒருவர் தன்னைத் தானே பார்த்து ஆராய்வதும் நீண்ட நேரம் தம் வயதுக்காரருடன் செலவிடுவதும் ஆக பருவமானவர்கள் இருக்கின்றனர். பருவமானவர்கள் தொடர்பு சாதனங்களாhல் பெரிதும் கவரப்படுகின்றார்கள். அதில் காட்டப்படும் இலட்சியவான்களாக தம்மை மாற்றிக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
பருவமானவர்கள் தொடர்பு சாதனங்களுக்குக் கட்டுப்பட்டு விடுவது தவறா?
ஆம் என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம்.
அநேக நவநாகரிகக் கலாசாரம், சங்கீதம், நடனம், நவநாகரிக ஆடை அணிகள் ஆகியன நல்ல அம்சங்களே.
தீயவை என்று கொள்ளக் கூடியவையை பார்த்துப் பின்பற்ற முடியாத நிலையிலுள்ளோர் இந்த நிலையில் தம்மை நன்கு பார்த்துத் தாமும் அந்த இலட்சியப் படைப்புகளைப் போல மாற எத்தனிக்கின்றனர். அதெல்லாம் நடைமுறைச் சாத்தியமானவையல்ல. காட்சிப்பொருளாக அமைந்தவை, சிறந்த விளையாட்டு வீரர், வர்த்தகத்துறையில் உன்னத நிலையை அடைந்தவர்கள் போன்றோரே அந்த இலட்சியப் படைப்புகள் ஆகும். அப்படியானோரின் நிலையை அடைய முடியாது போனால் மனத் தளர்ச்சியடைந்து விடுவார்கள்.
இப்படிப்பட்ட மனோநிலை மாற்றங்கள் திடீர் என்று ஏன் ஏற்படுகின்றன? பருவ மாற்றத்தை ஏற்படுத்தும் ஓமோன்களின் செயற்பாடு தானா?
பருவமானதால் சுய சிந்தனை அடைந்தவராகி எதனையும் முழுமையாக ஆராயத் தலைப்படுவர். எல்லா விஷயங்களிலும் தீவிர தாக்கம் அடைவர். கூடிய கவனம் செலுத்தாதவற்றிலும் கூடியகவனம் செலுத்தி குற்றம் காணத் தலைப்படுவர். தவறு என்று கருதினால் சினம் கொள்வர் அல்லது விசனம் கொள்வர். நல்லதொரு காரியம் நிறைவேறி விட்டால் மகிழ்ச்சி கொள்வர். இது பருவமானரின் நிலைமை.
இதோடு புதிய உறவினரும் அதிகரிப்பர். ஒரே வயதினரின் உறவும் பெருகும். இவை பெரும்பாலும் அநேக தோல்விகளைச் சந்தித்த நிலையை உருவாக்கும். சம வயதுள்ளவர்களுடன் சேர்ந்து குழுக்களாகி ஒருவரை ஒருவர் அழுத்தத்தைப் பிரயோகித்து விஷயங்களை ஏற்க நிர்பந்திப்பர். பெருந்தொகையினர் தாங்கள் செய்தவற்றைச் செய்ய பருவமான சிலரை நிர்ப்பந்திப்பர். இதனால் சச்சரவுகளும் முரண்பாடுகளும் தோன்றும். ஆனால் பருவமானவர் தமது பெற்றோரின் உதவியை நாட விரும்புவதில்லை. ஆனால் முன்பெல்லாம் பெற்றோரின் உதவியையும் ஆலோசனையையும் நாடினர். இதனால் தனிமையாகவே அநேக உணர்ச்சியை எழுப்பும் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது.
பருவமானவர்கள் மட்டுமல்ல வயது வந்தவர்களிடம் கூட மனோ நிலை மாற்றம் காணப்படுகிறது. வயது வந்தோர் இத்தகைய பிரச்சினைகளைச் சந்தித்து பழக்கப்பட்டவர்களாதலால் இவற்றைச் சுலபமாகக் கையாளக் கூடிய நிலையில் உள்ளனர். எல்லா வயது வந்தவர்களும் இத்தகைய பக்குவ நிலையை அடைந்தவர்கள் போலவே நடந்து கொள்கின்றனர்.
அழுத்தம் அதிகரிக்கும் போது பருவமானவர்களும் வயதுவந்தவர்களும் தற்கொலை புரிந்து கொள்ளத் தூண்டப்படுவதேன்?
உண்மை தான். சிறுபிள்ளைகள் இப்படி நடந்து கொள்வது அபூர்வமானது.
பருவமானவர்கள் மீது உலகம் பெரிய சுமையைப் போட்டு விடுகிறது. முன்பு போல இவற்றிற்குத் தீர்வுகாண பெற்றோரின் உதவியை நாடுவதில்லை. பாடசாலையில் தரப்படும் வீட்டு வேலையோ, பாPட்சையோ அல்லது மெலிவதோ தகுதியாவதோ சமூகப் பிரச்சினையோ அனைத்துமே தங்களால் தீர்க்க வேண்டியவையே என்று கருதுகிறார்கள்.
அநேக பருவமானவர்கள் பாPட்சையில் சித்தியடையாவிட்டால் தமது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிக்கொள்கிறார்கள். தோல்வியென்ற எண்ணம் அவர்களைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. சதாகாலமும் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பொல்லாத உலகம் முடிந்த அளவு சிறப்பாகச் செய்தால் போதும் என்று பருவமானவரைக் கூறி உற்சாகப்படுத்துவதைவிடுத்து வழமைக்கு மாறாக மிகவும் சிறப்பாகவும் உயர் நிலை அடைய வேண்டும் என்று வருத்துவதால் இந்நிலை பருவமானவர் மனதில் உருவாகிறது. தாமாக உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலுக்கும் செயலுருவுக்கும் எதிரானவையாகவே உள்ளது. உணர்ச்சிமயமான சமூகத்திலுள்ள பிள்ளைகளுக்கு எதிரான போராகும்.
தற்கொலை முயற்சி என்பது இறந்து போவதல்ல. உதவி வேண்டுமென்பதற்கான நடவடிக்கையேயாகும். சரியான படி நடத்தப்படவில்லை என்பதை அறிவிக்கும் எதிர்ப்பின் அடையாளமே. அதிக எதிர்பார்ப்பும் இல்லை.
நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென விரும்பியுள்ளீர்களாயின் உங்களுக்கு ஆறுதல் கூறக் கூடியவர்களுடன் கலந்து உரையாடுங்கள். மாமனோ மாமியோ ஆசிரியரோ நண்பரோ உங்கள் பிரச்சினையையும் நிலைமையையும் நன்கு அறிந்தவரால்தான் சுலபமாகத் தீர்க்க இயலும்.
யாராவது ஆணோ பெண்ணோ தற்கொலை புரிய இருப்பதாகக் கூறினால் தீவிரமாக அணுகுங்கள். உதவி பெற நாட்டம் கொண்டே பருவமானோர் இப்படி அறிவிக்கின்றனர். சில நேரங்களில் தற்கொலை புரிய முயலுவர். அவனோ அவளோ கூறுவதை அவதானியுங்கள். அவர்களோடு பேசுங்கள். அவர்கள் உங்களோடு பேசும் போது பேச்சைத் திசை திருப்ப முயலாதீர்கள். இப்படிச் செய்வதால் தற்கொலை செய்யவிருப்பவரில் மனமாற்றம் ஏற்பட்டு விடாது. இது சலிப்பை உண்டாக்கும் அல்லது மனத் தளர்வைத் தான்; அதிகரிக்கும். இது பற்றி ஆலோசனை வழங்குவோருடன் உரையாடலாம். உங்கள் பாசத்தின் ஒரு பகுதியை விழுங்கி விட்டு தற்கொலை செய்வதிலிருந்து காக்கிறது.
புலிமியா, அனோறெக்ஸியா, உடற்கட்டமைத்தல் (Bulimia, Anorexia, and Body building)
காட்சிப் பொருள்களைப் போல் தோற்றமளிக்க விரும்புவது தவறா?
முதலாவதாக இந் நாட்களில் காட்சிப் பொருள்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ள விரும்புவோர் உயரமானவர்களாகவும் இயற்கைக்குப் புறம்பாக நீண்டிருக்கும் கைகால்களை கொண்டவர்களாகவும் இருக்க விரும்புகின்றனர். அதனால் அவர்களை 90மூ வீதமான சமூகத்தவரிடமிருந்து பிளக்கிறது. இந்தக் காரணங்களுக்காக இவர்கள் காட்சிக்கு வைக்கப்படும் பொருள்களாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். எல்லோரையும் போலவே இருக்கின்றவர்களை காட்சிக்கு வைக்கப்படும் பொருள்களாக ஏன் தெரிவு செய்ய வேண்டும்? இவளைப் போல விளங்க ஏன் விளம்பரப்படுத்தப்பட்ட பொருள்களை வாங்கி உபயோகிக்க வேண்டும்? இதனால் அவள் வித்தியாசமான தோற்றம் உள்ளவளாக இருக்க வேண்டும்.
இரண்டவதாக, காட்சிக்குத் தம்மைக் காட்ட விரும்புவோர் மெல்லியவராகவே உள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. சமூகத்திலள்ள 90% மேலானவர்களை விட மெல்லியவர்களாகவே காட்சி தரும் பெண்கள்/ஆண்கள் இருக்கின்றனர். சிலர் வலுக்குறைந்தவர்களாகவும் பட்டினி பல நாட்களாக இருந்ததாகவும் சொல்லக் கூடிய விதத்தில் மெலிந்து காணப்படுகின்றார்கள். உண்மையிலேயே இப்படிப்பட்ட நிலைக்குக் காட்சிப் பொருள்களாக காட்டப்பட்டோர் வைக்கப்படுகின்றனர்.
ஆரோக்கியமானவர் இப்படி மெல்லியவராக இருக்க முடியாது. உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் செய்து கொண்டாலும் இப்படித் தோற்றமளிக்க முடியாது. உங்கள் உடல் தனது நிறைகுறைந்து போவதற்கு எதிர்ப்பு நல்கும். பட்டினியே கிடந்து வந்தாலும் நிறைகுறைந்து போக விடாது. உங்கள் அநுசேதனம் (Metabolism) குறைந்து போகவே குறைந்தளவு எரிபொருளே தகனத்திற்குத் தேவைப்படும். இதனால் வெகு விரைவில் களைப்புத் தோன்றும். உடலின் நோக்கம் நீண்ட காலத்திற்கு வாழ்வதே.
இளைஞர்கள் அளவுக்கதிகமாக மெலிந்தால் உடல் தனது இயற்கையான பாதுகாப்புகளை இழந்து பட்டினி பசி ஆகியவற்றிற்கு எதிராகச் செயற்படும் திறனை இழந்து விடுகிறது. இதற்குக் காரணமான நோய் புலிமியா நோவோசா, அதைவிடப் பயங்கரமான அநோறெக்சியா நோவோசா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
புலிமியா நேவோசா (Bulimia nervosa) என்றால் என்ன?
புலிமியா நோவோசா என்பது இளைஞர்கள் உண்பதன் மூலம் தனது நிறையைக் குறைத்து உண்ட மேலதிக உணவை வெளியே கொப்பளித்துத் தள்ளிவிடுவதாகும். புலிமிய நோயாளர் தம்மை மெலியச் செய்ய எத்தனிக்கின்றனர். தாம் பெரிதும் கொழுத்து இருப்பதாகவும் அதனால் பார்ப்பதற்கு அலங்கோலமாக இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர்
.
புலிமிய நோயாளருக்கு அதீத பசியிருப்பதனால் நிறைய உண்ண விரும்புகிறார்கள். நியை உண்டு விட்டு பெருமளவு உணவைக் கொப்பளித்துத் தள்ளிவிட முயலுகிறார்கள். இதனைச் செய்வதனால் குற்றவுணர்வு ஏற்படவே ஒரு நாளோ அல்லது அதற்குக் கூடுதலான நாட்களோ எதனையும் உண்ணாமல் இருந்து கூடுதலாக உட்கொண்டதற்கு ஈடு செய்கின்றனர்.
இந்தக் குறைபாடை புலிமியா நேவோசா தருகிறது. இது உளஞ்சார்ந்த குறைபாடே அல்லாமல் வயிற்றோடு சம்பந்தப்பட்டதல்ல. உளாPதியான குறைபாடுடையோர் அல்லாதோரால் அல்லாமல் வேறொருவரால் புலிமியப் பிணியாளர் போல வெளியே எடுத்துக் கொப்பளித்து விட இயலாது. தங்களுடைய அநுசேதனம் கீழ்முகமாகப் பெயர்கிறது என்பதை அறிய மாட்டார்கள். இவர்களுக்குக் களைப்பும் தோன்றுவதில்லை. இது சாதாரணமான நிலைப்பாடல்ல.
கவலைக்கிடமான சம்பவம் என்னவென்றால் புலிமியா தமது கூடுதலாக இருந்த நிறையைக் குறைக்கத் தலைப்படுவதைப் பெருமையுடன் கூறுவது தான் முதல் நிகழ்வாகவுள்ளது. இது புலிமியா நோய் நன்மை பயப்பதாகக் கருதவைக்கிறது. தொடர்பு சாதனங்கள் மட்டுமல்ல, எமது அநேக நண்பர்கள், உறவினர்கள், தாய்மார்கள் மெல்லியவர்களாக வேண்டும் என்றே கூறி வருகின்றனர். சுய அழிவுப் போக்குகள் தான் புலிமியாக் குறைபாடுகளுக்குக் காரணம் என்று திட்டமாகக் கூறமுடியாது. நன்கு தெரிந்தவர்களால் தான் ஏற்படுகிறது என்று தெரிகிறது அல்லவா? நாம் பித்துப் பிடித்த காலத்தில் வாழ்கிறோம்.
புலிமியாப் பிணியாளர்களில் 90% தினர் பெண்களாவர். சம்மதத்தை பெறத் தம்மைத் தாமே வருத்திக் கொள்வது பெண்களின் இயல்பாகும். ஆண்களும் கூட இப்பாதையைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
கட்டாய உடற்பயிற்சி கூட புலிமியா போன்றதொன்று தானா?
ஆம். சிலவேளைகளில் இதனை புலிமியா உடற்பயிற்சி என்றும் அழைப்பார்கள். உணவை அளவுகடந்து உண்டு விட்டு அனைத்தும் சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக நிரம்பிய அளவில் உடற்பயிற்சி செய்வார்கள். இதற்கும் சாதாரணமான உடற்பயிற்சிக்கும் உள்ள வித்தியாசம் குற்ற உணர்வு காரணமாக மேலதிகமான உடற்பயிற்சியிலீடுபடுவது. வேண்டாத மேலதிக உணவை இல்லாது செய்வது. இதனை வேறு விதமாகக் கூறுவதாயின் மேலதிக உணவைச் சமிபாடடையச் செய்வது.
பெற்றோரிடமிருந்து விடுதலை
அதிர்ச்சி ஊட்டக் கூடிய விதத்தில் பெற்றோருக்கு முதன் முறையாக முதுமையின் அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன. இந்த வயதில் தான் பெற்றோர் இருவரிடையே பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. சிலவேளைகளில் தாம் பிரிந்து வாழ்ந்தால் என்ன என்று நினைக்கவும் தலைப்படுகின்றனர். மேலும் இது அவர்களுக்கு நெருக்கடி நிரம்பிய காலம். பிள்ளைகளின் உதவியை நாடும் நிலைக்கு உந்தப்படுகின்றனர். பிள்ளைகளோ பிரிந்து தனியாக விரும்புகின்றார்கள். இதனால் பெற்றோர் பிள்ளைகளின் சுதந்திரப் போக்கிற்கு எதிராகச் செயல்படுகின்றனர். பிள்ளைகளின் மீதுள்ள அவர்கள் உரிமை வேட்கை உச்சத்தை அடைகிறது.
பருவமானவர்கள் தமது உரிமைக் கோரிக்கைகள் வரம்பை மீறிவிட்டனவென்று அறிவதெப்படி?
ஒருவழி இருக்கிறது. உங்கள் கோரிக்கைகள் நியாயமற்றவை என்று கருதினால் சற்று பொறுத்துச் சிந்தித்துப் பெற்றோரின் இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி அணுகிச் செயல்படுவீர்களென ஆராயுங்கள். நீங்கள் பெற்றோரின் ஸ்தானத்திலிருந்து பார்க்கும் போது ஒன்றும் இதற்குச் செய்து கொள்ள இயலாது என்று கருதுவீர்களாயின் நீங்கள் கோரியது அதிகப்படியானது என்ற முடிவுக்கு எளிதில் வரலாம். ஆகவே எழுந்துள்ள பிரச்சினைகளுக்குக் காரணமானவர் பெற்றோர் அல்லர் நீங்கள் தான்.
எமது பாட்டனார் காலத்திலோ அல்லது எமது கிராம மக்களிடையேயோ இத்தகைய பிரச்சினை இருக்கவில்லை ஏன்?
இரண்டு காரணங்கள்.
முதலாவதாக இத்தகைய முரண்பாடுகள் வெளிவர பெற்றோருடன் ஒளிவு மறைவின்றி விஷயங்களை அணுக வேண்டும். முன்னாளில் கிராம மக்களின் அதிகாரப் பிரயோகம் எல்லாவித எழுச்சியையும் அடக்கிக் கட்டுப்படுத்தக் கூடியது. இதனால் பருவமானவரின் புரட்சிகள் அனைத்துமே நசுக்கப்பட்டு விடும்.
எமது பாட்டனார் காலத்திலோ, கிராம மக்களிடையேயோ மக்கள் சிறுவயதிலேயே திருமணமாகி விடுகிறார்கள். வீட்டை விட்டு வெளியேறியோ வெளியேறாமலோ குடும்பத்தவரை பார்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர் விரக்தியடையும் நிலயை எய்துவதில்லை. பாலியல் உறவு கொள்வதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். குடும்ப உறவையே தொடர்ந்தும் பேணி வருகின்றார்கள். வயது வந்தோர் நிலைக்குத் தயார் செய்து கொள்வதில்லை. ஆனால் வயது வந்தோர் சுமக்க வேண்டிய பொறுப்புக்களை சுமக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
பருவமானோர் மனோநிலை மாற்றம் காண்பது என்பது இது தானா?
பருவமானவர்கள் தற்போதெல்லாம் மனோநிலை மாற்றத்திற்குள் ளாகிறார்களே என்று கூறக் கேட்கிறோம். இதனால் முன்பெல்லாம் நல்ல தகுந்த காரணங்களுக்காக கோபமோ, கவலையோ, மகிழ்ச்சியோ அடைந்தார்கள்.
உணர்ச்சிகள் திடீரெனவோ, ஆகாயத்திலிருந்து பிறப்பதில்லை. நடந்தேறிய சில சம்பவங்களே உணர்ச்சி மேலிடத் தூண்டுகிறது. மனம் புண்படும் வகையில் சிலர் சிலவற்றைக் கூறிவிடுவதாலோ முகக்கண்ணாடியில் உங்களையே நீங்கள் பார்க்கும் போது தோன்றுவது உங்களுக்கு பிடிக்காததாக இருக்கும் போதோ ஏற்படுகிறது. அல்லது நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் மன ஏக்கத்தைப் பெருக்குவதும் உலகமும் வாழ்க்கையும் வெறுமையானவையே என்கின்ற எண்ணத்தைத் தருவதாயும் இருப்பதாய் இருந்தால் மன உழைச்சல் ஏற்படுகிறது. எல்லாமே நடந்து முடிந்த சம்பவங்களாக இருக்க வேண்டுவதில்லை. மனதில் தோன்றுபவையும் கூட.
சிலசமயம் ஏற்படும் உணர்ச்சிகள் பெற்றோரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் ஒதுங்கிய, தனிமையிலிருந்து சிந்திக்க விரும்பும் நிலையிலும் பிறக்கின்றன.
ஓமோன்கள் என்றால் என்ன? பெண்களுக்குத் தான் மனோநிலைமை கூடுதலாகக் காணப்படுவதாகக் கூறுகிறார்களே ஏன்?
அநேகமான பெண்களுக்கு அப்படியில்லை. பெண்களுக்கு ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது என்று கூறுவது கடினம். பெண்கள் எப்படி நடக்க வேண்டுமென்று பெரியோர்கள் விரும்புகிறார்களோ அதற்கிணங்க நடக்க முயலும் வகையில் அழவேண்டும் என்று கூறப்பட்டால் கூடுதலாக அழுவார்கள். ஆண்களோ அழ மாட்டார்கள் தானே? அதனால் கோபப்படுபவார்கள் அல்லது ஆவேசம் அடைவார்கள்.
பெண்கள் மாதவிடாய்க்கு முன்பு மனத் தளர்ச்சி அடைகிறார்கள். ஆதலால் விரைவாக இதனை எப்படிக் கையாளுவதென்று அறிதல் வேண்டும். அல்லது இதில் எவ்வித கவனமும் செலுத்தாமல் இருப்பது. சாதாரணமாக மனத் தளர்ச்சியடைவோர் மாதவிடாய் வருமுன் மனத் தளர்ச்சியடைவோரே.
இந்தத் தலைமுறை ஏன் வித்தியாசமானது?
மிகப் பெரிய அம்சம் பாடசாலை. பாடசாலை என்றால் பெற்றோரிடமிருந்து சில மணி நேரங்கள் வாரத்திற்கு சுமார் ஆறு நாட்களுக்குப் பிரிந்து வாழுதல். இந்த நேரங்களிலும் நாட்களிலும் வகுப்புத் தோழர்களுடன் சமவயதினருடன் செலவிடுகிறோம்.
பெற்றோரைப் பொறுத்தவரை அவர்களிடமிருந்து கற்பதைக் காட்டிலும், உங்கள் சமவயதினருடன் நெருங்கிப் பழகி அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதையே பருவமானோர் விரும்புகின்றனர். இதுவே பெற்றோரைப் பொறுத்தவரை தீய அம்சமாகும். இந்தப் பார்வையே பருவமானவரிடம் கூடுதலாக வலுப்பெறுகிறது. அதேசமயம் பெற்றோரிடமிருந்தும் அகன்று போகின்றனர்.
இதிலுள்ள நல்ல அம்சம் சமூகத்தில் பெரிய மாற்றமும், புதிய கருத்துக்கள் மலர வாய்ப்பும் ஏற்படுகின்றது. காலா காலமாக செய்து வந்தவற்றை எல்லாம் கைவிட்டு புதிய முறைகள் தலைகாட்டுகின்றன. முரண்பாடுகள் எல்லாம் இந்த மாற்றங்களைப் புகுத்துவதற்காகவே. சமூகம் தானாகவே நிலையை மாற்றிக் கொள்ளாது.
பாடசாலை போவோருக்கு புதிய கருத்துக்களைத் தருவதெது?
பெருமளவில் தொடர்பு சாதனங்கள், தொலைக்காட்சி, வானொலி, படங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரபல புத்தகங்கள், தொடர்பு சாதனங்கள் எல்லா வயதினரையும் அடையக் கூடியது. பெற்றோராலோ இது இயலாது. நல்லதோர் ஆசிரியரால் ஒரு பாடசாலையில் தான் செல்வாக்கைப் பயன்படுத்த இயலும்.
பாடசாலை செல்லும் பருவமானவர்களை தொடர்பு சாதனங்கள் தம் வயப்படுத்துவது போல மற்றவர்களால் முடியாது. இந்தப் பிராயத்தில் தான் ஒருவர் தன்னைத் தானே பார்த்து ஆராய்வதும் நீண்ட நேரம் தம் வயதுக்காரருடன் செலவிடுவதும் ஆக பருவமானவர்கள் இருக்கின்றனர். பருவமானவர்கள் தொடர்பு சாதனங்களாhல் பெரிதும் கவரப்படுகின்றார்கள். அதில் காட்டப்படும் இலட்சியவான்களாக தம்மை மாற்றிக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
பருவமானவர்கள் தொடர்பு சாதனங்களுக்குக் கட்டுப்பட்டு விடுவது தவறா?
ஆம் என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம்.
அநேக நவநாகரிகக் கலாசாரம், சங்கீதம், நடனம், நவநாகரிக ஆடை அணிகள் ஆகியன நல்ல அம்சங்களே.
தீயவை என்று கொள்ளக் கூடியவையை பார்த்துப் பின்பற்ற முடியாத நிலையிலுள்ளோர் இந்த நிலையில் தம்மை நன்கு பார்த்துத் தாமும் அந்த இலட்சியப் படைப்புகளைப் போல மாற எத்தனிக்கின்றனர். அதெல்லாம் நடைமுறைச் சாத்தியமானவையல்ல. காட்சிப்பொருளாக அமைந்தவை, சிறந்த விளையாட்டு வீரர், வர்த்தகத்துறையில் உன்னத நிலையை அடைந்தவர்கள் போன்றோரே அந்த இலட்சியப் படைப்புகள் ஆகும். அப்படியானோரின் நிலையை அடைய முடியாது போனால் மனத் தளர்ச்சியடைந்து விடுவார்கள்.
இப்படிப்பட்ட மனோநிலை மாற்றங்கள் திடீர் என்று ஏன் ஏற்படுகின்றன? பருவ மாற்றத்தை ஏற்படுத்தும் ஓமோன்களின் செயற்பாடு தானா?
பருவமானதால் சுய சிந்தனை அடைந்தவராகி எதனையும் முழுமையாக ஆராயத் தலைப்படுவர். எல்லா விஷயங்களிலும் தீவிர தாக்கம் அடைவர். கூடிய கவனம் செலுத்தாதவற்றிலும் கூடியகவனம் செலுத்தி குற்றம் காணத் தலைப்படுவர். தவறு என்று கருதினால் சினம் கொள்வர் அல்லது விசனம் கொள்வர். நல்லதொரு காரியம் நிறைவேறி விட்டால் மகிழ்ச்சி கொள்வர். இது பருவமானரின் நிலைமை.
இதோடு புதிய உறவினரும் அதிகரிப்பர். ஒரே வயதினரின் உறவும் பெருகும். இவை பெரும்பாலும் அநேக தோல்விகளைச் சந்தித்த நிலையை உருவாக்கும். சம வயதுள்ளவர்களுடன் சேர்ந்து குழுக்களாகி ஒருவரை ஒருவர் அழுத்தத்தைப் பிரயோகித்து விஷயங்களை ஏற்க நிர்பந்திப்பர். பெருந்தொகையினர் தாங்கள் செய்தவற்றைச் செய்ய பருவமான சிலரை நிர்ப்பந்திப்பர். இதனால் சச்சரவுகளும் முரண்பாடுகளும் தோன்றும். ஆனால் பருவமானவர் தமது பெற்றோரின் உதவியை நாட விரும்புவதில்லை. ஆனால் முன்பெல்லாம் பெற்றோரின் உதவியையும் ஆலோசனையையும் நாடினர். இதனால் தனிமையாகவே அநேக உணர்ச்சியை எழுப்பும் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது.
பருவமானவர்கள் மட்டுமல்ல வயது வந்தவர்களிடம் கூட மனோ நிலை மாற்றம் காணப்படுகிறது. வயது வந்தோர் இத்தகைய பிரச்சினைகளைச் சந்தித்து பழக்கப்பட்டவர்களாதலால் இவற்றைச் சுலபமாகக் கையாளக் கூடிய நிலையில் உள்ளனர். எல்லா வயது வந்தவர்களும் இத்தகைய பக்குவ நிலையை அடைந்தவர்கள் போலவே நடந்து கொள்கின்றனர்.
அழுத்தம் அதிகரிக்கும் போது பருவமானவர்களும் வயதுவந்தவர்களும் தற்கொலை புரிந்து கொள்ளத் தூண்டப்படுவதேன்?
உண்மை தான். சிறுபிள்ளைகள் இப்படி நடந்து கொள்வது அபூர்வமானது.
பருவமானவர்கள் மீது உலகம் பெரிய சுமையைப் போட்டு விடுகிறது. முன்பு போல இவற்றிற்குத் தீர்வுகாண பெற்றோரின் உதவியை நாடுவதில்லை. பாடசாலையில் தரப்படும் வீட்டு வேலையோ, பாPட்சையோ அல்லது மெலிவதோ தகுதியாவதோ சமூகப் பிரச்சினையோ அனைத்துமே தங்களால் தீர்க்க வேண்டியவையே என்று கருதுகிறார்கள்.
அநேக பருவமானவர்கள் பாPட்சையில் சித்தியடையாவிட்டால் தமது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிக்கொள்கிறார்கள். தோல்வியென்ற எண்ணம் அவர்களைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. சதாகாலமும் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பொல்லாத உலகம் முடிந்த அளவு சிறப்பாகச் செய்தால் போதும் என்று பருவமானவரைக் கூறி உற்சாகப்படுத்துவதைவிடுத்து வழமைக்கு மாறாக மிகவும் சிறப்பாகவும் உயர் நிலை அடைய வேண்டும் என்று வருத்துவதால் இந்நிலை பருவமானவர் மனதில் உருவாகிறது. தாமாக உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலுக்கும் செயலுருவுக்கும் எதிரானவையாகவே உள்ளது. உணர்ச்சிமயமான சமூகத்திலுள்ள பிள்ளைகளுக்கு எதிரான போராகும்.
தற்கொலை முயற்சி என்பது இறந்து போவதல்ல. உதவி வேண்டுமென்பதற்கான நடவடிக்கையேயாகும். சரியான படி நடத்தப்படவில்லை என்பதை அறிவிக்கும் எதிர்ப்பின் அடையாளமே. அதிக எதிர்பார்ப்பும் இல்லை.
நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென விரும்பியுள்ளீர்களாயின் உங்களுக்கு ஆறுதல் கூறக் கூடியவர்களுடன் கலந்து உரையாடுங்கள். மாமனோ மாமியோ ஆசிரியரோ நண்பரோ உங்கள் பிரச்சினையையும் நிலைமையையும் நன்கு அறிந்தவரால்தான் சுலபமாகத் தீர்க்க இயலும்.
யாராவது ஆணோ பெண்ணோ தற்கொலை புரிய இருப்பதாகக் கூறினால் தீவிரமாக அணுகுங்கள். உதவி பெற நாட்டம் கொண்டே பருவமானோர் இப்படி அறிவிக்கின்றனர். சில நேரங்களில் தற்கொலை புரிய முயலுவர். அவனோ அவளோ கூறுவதை அவதானியுங்கள். அவர்களோடு பேசுங்கள். அவர்கள் உங்களோடு பேசும் போது பேச்சைத் திசை திருப்ப முயலாதீர்கள். இப்படிச் செய்வதால் தற்கொலை செய்யவிருப்பவரில் மனமாற்றம் ஏற்பட்டு விடாது. இது சலிப்பை உண்டாக்கும் அல்லது மனத் தளர்வைத் தான்; அதிகரிக்கும். இது பற்றி ஆலோசனை வழங்குவோருடன் உரையாடலாம். உங்கள் பாசத்தின் ஒரு பகுதியை விழுங்கி விட்டு தற்கொலை செய்வதிலிருந்து காக்கிறது.
புலிமியா, அனோறெக்ஸியா, உடற்கட்டமைத்தல் (Bulimia, Anorexia, and Body building)
காட்சிப் பொருள்களைப் போல் தோற்றமளிக்க விரும்புவது தவறா?
முதலாவதாக இந் நாட்களில் காட்சிப் பொருள்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ள விரும்புவோர் உயரமானவர்களாகவும் இயற்கைக்குப் புறம்பாக நீண்டிருக்கும் கைகால்களை கொண்டவர்களாகவும் இருக்க விரும்புகின்றனர். அதனால் அவர்களை 90மூ வீதமான சமூகத்தவரிடமிருந்து பிளக்கிறது. இந்தக் காரணங்களுக்காக இவர்கள் காட்சிக்கு வைக்கப்படும் பொருள்களாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். எல்லோரையும் போலவே இருக்கின்றவர்களை காட்சிக்கு வைக்கப்படும் பொருள்களாக ஏன் தெரிவு செய்ய வேண்டும்? இவளைப் போல விளங்க ஏன் விளம்பரப்படுத்தப்பட்ட பொருள்களை வாங்கி உபயோகிக்க வேண்டும்? இதனால் அவள் வித்தியாசமான தோற்றம் உள்ளவளாக இருக்க வேண்டும்.
இரண்டவதாக, காட்சிக்குத் தம்மைக் காட்ட விரும்புவோர் மெல்லியவராகவே உள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. சமூகத்திலள்ள 90% மேலானவர்களை விட மெல்லியவர்களாகவே காட்சி தரும் பெண்கள்/ஆண்கள் இருக்கின்றனர். சிலர் வலுக்குறைந்தவர்களாகவும் பட்டினி பல நாட்களாக இருந்ததாகவும் சொல்லக் கூடிய விதத்தில் மெலிந்து காணப்படுகின்றார்கள். உண்மையிலேயே இப்படிப்பட்ட நிலைக்குக் காட்சிப் பொருள்களாக காட்டப்பட்டோர் வைக்கப்படுகின்றனர்.
ஆரோக்கியமானவர் இப்படி மெல்லியவராக இருக்க முடியாது. உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் செய்து கொண்டாலும் இப்படித் தோற்றமளிக்க முடியாது. உங்கள் உடல் தனது நிறைகுறைந்து போவதற்கு எதிர்ப்பு நல்கும். பட்டினியே கிடந்து வந்தாலும் நிறைகுறைந்து போக விடாது. உங்கள் அநுசேதனம் (Metabolism) குறைந்து போகவே குறைந்தளவு எரிபொருளே தகனத்திற்குத் தேவைப்படும். இதனால் வெகு விரைவில் களைப்புத் தோன்றும். உடலின் நோக்கம் நீண்ட காலத்திற்கு வாழ்வதே.
இளைஞர்கள் அளவுக்கதிகமாக மெலிந்தால் உடல் தனது இயற்கையான பாதுகாப்புகளை இழந்து பட்டினி பசி ஆகியவற்றிற்கு எதிராகச் செயற்படும் திறனை இழந்து விடுகிறது. இதற்குக் காரணமான நோய் புலிமியா நோவோசா, அதைவிடப் பயங்கரமான அநோறெக்சியா நோவோசா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
புலிமியா நேவோசா (Bulimia nervosa) என்றால் என்ன?
புலிமியா நோவோசா என்பது இளைஞர்கள் உண்பதன் மூலம் தனது நிறையைக் குறைத்து உண்ட மேலதிக உணவை வெளியே கொப்பளித்துத் தள்ளிவிடுவதாகும். புலிமிய நோயாளர் தம்மை மெலியச் செய்ய எத்தனிக்கின்றனர். தாம் பெரிதும் கொழுத்து இருப்பதாகவும் அதனால் பார்ப்பதற்கு அலங்கோலமாக இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர்
.
புலிமிய நோயாளருக்கு அதீத பசியிருப்பதனால் நிறைய உண்ண விரும்புகிறார்கள். நியை உண்டு விட்டு பெருமளவு உணவைக் கொப்பளித்துத் தள்ளிவிட முயலுகிறார்கள். இதனைச் செய்வதனால் குற்றவுணர்வு ஏற்படவே ஒரு நாளோ அல்லது அதற்குக் கூடுதலான நாட்களோ எதனையும் உண்ணாமல் இருந்து கூடுதலாக உட்கொண்டதற்கு ஈடு செய்கின்றனர்.
இந்தக் குறைபாடை புலிமியா நேவோசா தருகிறது. இது உளஞ்சார்ந்த குறைபாடே அல்லாமல் வயிற்றோடு சம்பந்தப்பட்டதல்ல. உளாPதியான குறைபாடுடையோர் அல்லாதோரால் அல்லாமல் வேறொருவரால் புலிமியப் பிணியாளர் போல வெளியே எடுத்துக் கொப்பளித்து விட இயலாது. தங்களுடைய அநுசேதனம் கீழ்முகமாகப் பெயர்கிறது என்பதை அறிய மாட்டார்கள். இவர்களுக்குக் களைப்பும் தோன்றுவதில்லை. இது சாதாரணமான நிலைப்பாடல்ல.
கவலைக்கிடமான சம்பவம் என்னவென்றால் புலிமியா தமது கூடுதலாக இருந்த நிறையைக் குறைக்கத் தலைப்படுவதைப் பெருமையுடன் கூறுவது தான் முதல் நிகழ்வாகவுள்ளது. இது புலிமியா நோய் நன்மை பயப்பதாகக் கருதவைக்கிறது. தொடர்பு சாதனங்கள் மட்டுமல்ல, எமது அநேக நண்பர்கள், உறவினர்கள், தாய்மார்கள் மெல்லியவர்களாக வேண்டும் என்றே கூறி வருகின்றனர். சுய அழிவுப் போக்குகள் தான் புலிமியாக் குறைபாடுகளுக்குக் காரணம் என்று திட்டமாகக் கூறமுடியாது. நன்கு தெரிந்தவர்களால் தான் ஏற்படுகிறது என்று தெரிகிறது அல்லவா? நாம் பித்துப் பிடித்த காலத்தில் வாழ்கிறோம்.
புலிமியாப் பிணியாளர்களில் 90% தினர் பெண்களாவர். சம்மதத்தை பெறத் தம்மைத் தாமே வருத்திக் கொள்வது பெண்களின் இயல்பாகும். ஆண்களும் கூட இப்பாதையைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
கட்டாய உடற்பயிற்சி கூட புலிமியா போன்றதொன்று தானா?
ஆம். சிலவேளைகளில் இதனை புலிமியா உடற்பயிற்சி என்றும் அழைப்பார்கள். உணவை அளவுகடந்து உண்டு விட்டு அனைத்தும் சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக நிரம்பிய அளவில் உடற்பயிற்சி செய்வார்கள். இதற்கும் சாதாரணமான உடற்பயிற்சிக்கும் உள்ள வித்தியாசம் குற்ற உணர்வு காரணமாக மேலதிகமான உடற்பயிற்சியிலீடுபடுவது. வேண்டாத மேலதிக உணவை இல்லாது செய்வது. இதனை வேறு விதமாகக் கூறுவதாயின் மேலதிக உணவைச் சமிபாடடையச் செய்வது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|