புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
62 Posts - 42%
heezulia
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
9 Posts - 6%
prajai
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
3 Posts - 2%
mruthun
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
3 Posts - 2%
Saravananj
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
21 Posts - 5%
prajai
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
7 Posts - 2%
mruthun
டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_m10டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்? நாக்கைக் கேக்கலாமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 2:54 pm


சுவையறி மொட்டுகள்...சுவையானத் தகவல்கள்...

டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Images?q=tbn:ANd9GcT8Te_OruWaB4Kf28SLjtXZ6kJ26Ao7xiRbapqFL9DiAB1PG8Q&t=1&usg=__WotwbdlPBvjykiagq88PKbxT3gU=

இணையத்தில்எதையோ தேட இப்படி ஒரு நாக்கு கிடைத்தது. இதைப் பார்த்தவுடன் சற்று நேரம்என்ன என்று புரியவில்லை. இன்றைய நவ நாகரிக் மக்களின் டேட்டூஸ் மோகம்.எங்கு போய் இருக்கிறது பாருங்கள். இது நாக்கு வரை போய் விட்டது. இப்படிஒரு நாக்கைப் பார்க்க நேர்ந்ததும் நல்லதாகத்தான் போனது. சுவையுணர இறைவன்படைத்த நாக்குக்கும் ஒப்பனை தேவைதான். அந்த ஒப்பனை வாய்மை என்ற அழகானஒப்பனை. அதை விடுத்து இப்படியா??.
யாகாவாராயினும் நாகாக்க”. என்று திருக்குறள் சொல்லும். நம் மனதை, நாம் செய்கின்ற செயல்களை அடக்கி ஆளாது விட்டு நாக்கைக் குறை கூறுவதுஎன்னங்க நியாயம். இந்த நாக்கு எத்தனையோ நல்லதை நமக்குச் செய்கிறது. நாம் அதை முறையாகப்பயன் படுத்தாமல் இருந்து விடுவதுடன், குறை வேறு கூறுகிறோம்.
அழகுணர்ச்சி நிறைந்தது இந்தக் காலம். கமபர்சீதையின் இடையைச் சொல்லும் போது “பொய்யோ எனும் இடையாள்” என்பார். இதையேகண்ணதாசனோ “இல்லை என்று சொல்வதுந்தன் இடையல்லவோ; மின்னல் இடையல்லவோ?”என்று பாடுவார். கொடியிடையாள், துடியிடையாள், மின்னார் மருங்காள், இல்லாதஇடையாள் என்றெல்லாம் வருணிக்கப்படும்பெண்கள் இப்போது இருக்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்றேகூறவேண்டியுள்ளது.ஆண்கள் குண்டாக இருப்பது இல்லையா என்று தாங்கள் வினவுவது லேசாக என் காதுமடலில் குசுகுசுக்கிறது. இருக்கிறார்கள். அவர்கள் இவ்வாறெல்லாம்வருணிக்கப்பட்டவர்கள் இல்லையே.
அழகு என்றால் பெண்மையும் வலிமை என்றால் ஆண்மையும் அன்று முதல்இன்றளவும் நம் மனதில் பதிவான படிமங்களாக இருக்கின்றன. இதைப்பற்றி நாம் சிந்திக்கும்போது குண்டுக்குக் காரணம் நாக்குதான் என்று எல்லோரும் கூறுவார்கள். ருசி ருசியாகச்சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் குண்டாவார்கள் என்ற எண்ணம் நம் மனத்தில் நிலவுகிறது.இல்லைங்க ருசி பார்க்க நாக்கை விடாது இருப்பதே முதன்மையான காரணம்.


நாக்கு நாம் அதிகமாகத் தின்றாலும் குண்டாகமல்தடுக்கும் பணியை வெகு நேர்த்தியாகச் செய்கிறது. ருசியறிந்து உண்ண அதை நாம் அனுமதித்தால்அது நாம் உண்பதை நம் உடலில் உறுப்புகளாருக்கு, யார் யாருக்கு எதுபிடிக்குமோ என்பது மட்டுமன்றி எது தேவையோ, எவ்வளவு தேவையோ அதை பகிர்ந்து கொடுத்து உடலைசீராக வைத்து இருக்கும். நாம் தான் நடுத்தரவயது பெண்கள் பெரும்பாலும் குண்டாக இருப்பதற்கு ஒரு காரணம் நாக்கை மதிக்காமல் இருப்பதே.காலையில் சிற்றுண்டி. எல்லா உணவும் இருந்தும் உண்ண போதிய நேரம் இருக்காது. ஆகவே அது இவர்களுக்கு மொபைல் உண்டி. இவர்கள் காலையில்அலுவலகத்திற்கு ஓடும் அவசரத்தில், ஒரு கையில் சாப்பாட்டுத்தட்டு, ஒரு கையில் பூட்டு சாவி என்று ஓடிக்கொண்டேசாப்பிடுவார்கள். மதிய உணவு ருசியறிந்து சாப்பிட நேரம் இருந்தாலும் உணவு இருக்காது.ஏனெனில் சிறு டப்பாக்குள் அடைபட்டிருக்கும் கட்டுச்சோறு. இதுவும் ஓடுகின்ற அவ்சரத்தில்கையில் கிடைத்ததை எடுத்துப் போட்டு அடைத்துச்சென்றதாக இருக்கும் ஆறி அவலாய்ப் போன சிற்றுண்டியே. .இரவு நன்றாகச்சாப்பிடுவார்கள். ஆனால் அப்போதும் நாவுக்குக் கொடுத்து உண்ணும் அளவுக்குப் பொறுமை இருப்பதுஇல்லை. நாள் முழுவதும் உழைத்த அலுப்பு ஏதோ கொட்டி வயிற்று டப்பாவை அடைத்து விட்டு, உறங்கலாம் என்று தோன்றி விடுகிறது. அத்துடன்உண்டவுடன் அயர்ந்த உறக்கம். இவற்றால் குண்டுச் சமுதாயத்தைத் தவிர்க்க இயலாது போய்விட்டதுஎன்பதே உண்மை.


இப்போது தொடங்கிய விஷயத்திற்கு வருவொம். பூவுக்குள் மட்டும் தான் மொட்டுஉள்ளது என்பதில்லை. நம் நாவுக்குள்ளும் மொட்டுக்கள் உள்ளன. நாக்கில்9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளில் நிறைந்துள்ள சத்துக்களைச் சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. மூளையின் உதவியுடன் நாக்கு செய்யும் சம தர்மம் இது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. அனைத்து உறுப்புகளும் பலமாக இருப்பதுடன்பகிர்ந்த உணவு நம் உடல் பருமனை சீராக வைத்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து உமிழ் நீருடன் கலந்து நிதானமாகச் சாப்பிடும் போது மட்டும் தான் நடைபெறும்.


டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Tongue%20taste%20buds

அறிவியல் பாடத்தில் நாம் பார்த்திருப்போம். நாக்கின் படம்போட்டு, அதில் பல பகுதிகளைக் கோடிட்டுக்காட்டி இந்த இடத்தில் இனிப்பு, இங்கே கசப்பு, இங்கே காரம்.. என்று குறிப்பிட்டிருப்பார்கள்.அடிநாக்கில் கசப்பு உணர்வு இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், அப்படி நாக்கில் சுவைகளுக்கானநாக்கியல் வரைபடம் (மேப்) எதுவும் இல்லை என்று சார்லஸ் ஸூக்கர் (1996 CharlesZuker, Professor of Biology. University of California) என்பவர் கண்டுபிடித்தார். நாக்கில் எல்லாஇடத்திலும் எல்லா சுவைகளையும் அறியமுடியும்; இனிப்பு. புளிப்பு, கசப்புக் கென்று தனித்தனி இடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்தார்.நம் நாக்கின் மேல்பரப்பு சுற சுறப்பாக இருக்கிறதல்லவா, அவையாவும் மொட்டு வடிவ மேடுகள். அல்லது மேட்டு வடிவ மொட்டுகள். அவற்றை சுவை அரும்புகள்அல்லது சுவை மொட்டுகள் என்பர்.




டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Aடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Aடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Tடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Hடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Iடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Rடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Aடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 2:58 pm

ஒவ்வொரு சுவை மொட்டிலும் நூற்றுக்கணக்கான செல்கள் உள்ளன. அச்செல்கள் மூலம் நாம் சுமார் 25 வகைசுவைகளை அறிகிறோம். (அறுசுவைகள்என்பது சரியில்லை. அவை இருபத்தைந்துக்கும்மேல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்). நாம்அடிப்படை வண்ணங்கள் ஏழு.அதிலிருந்து பல வண்ணங்கள் உருவாவது போல அடிப்படை சுவைகள் ஆறுஎன்று கொண்டுஅதிலிருந்து சிறிது சிறிது வேறுபட்ட புது சுவைகள் பல எனக்கொள்ளலாம்..ஏனெனில் ஒரு சுவையில் எந்த பண்டமும் நாம் இக்காலத்தில்பார்ப்பது இல்லை. ஒரே ஐஸ் கீரீம் நூற்றுக்கணக்கான சுவைகளில் (Flavour) இருக்கிறதே..

ஒவ்வொரு சுவைக்கும் தனியாகச் சுவையறி செல்கள் உண்டு என்பதும் தவறான கருத்து. அதாவது ஒரு செல்ஒரு சுவையை மட்டும் அறியும். அதன் வேலை உணவில்உள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து தகவலைமூளைக்கு அனுப்புவது. ஒரு மொட்டுஒரு சுவைக்கு என்பதும். குறிப்பிட்ட நாக்குப் பகுதிஒரு சுவையை மட்டும் அறியும் என்பதும் தவறான கருத்து. நாக்கில் எல்லா பகுதியிலும் உள்ள எல்லா மொட்டுகளிலும் எல்லா வகை சுவைகளையும் அறிவதற்கான செல்கள் உள்ளன.

சுவை உணரும் செல்களின் மேற்புறத்தில் உள்ள சவ்வில்சுவையை அறிவதற்கான புரதங்கள் நிறைய உள்ளன. பாயாசத்தில் முந்திரிப்பருப்பு மிதப்பது போல (கொஞ்சம் அதிகமாகவே) சுவை அறியும் புரதங்கள் செல்லின் வெளிச்சவ்வில் மிதந்தபடியுள்ளன.இப் புரதங்களின் முப்பரிமான வடிவம் ஒரு கிண்ணம் போன்றது. ஒரு சுவைக்கு ஒரு கிண்ணம் என்று25 சுவைகளுக்கும் தனித்தனி கிண்ணங்கள் உள்ளன. தேனை நக்கும்போது குறிப்பிட்ட கிண்ணத்தின் பள்ளத்தில் சுவைக்குக் காரணமான மூலக்கூறு வந்து உட்காரும். அப்போது உடலும் உயிரும் பொருந்திக் கொள்வது போல இவை இரண்டும் பொருத்தமாக ஒட்டிக் கொள்கின்றன. இதனால் இந்தக் கிண்ணங்களை "ஏற்பி" என்கிறார்கள். அறிஞர்ஸூக்கர், நாக்கிலுள்ளசுவை ஏற்பிகளை எல்லாம் பிரித்து ஆராய்ந்து பார்த்தபோது மனிதருக்கு 25வகைக்கும் மேற்பட்ட ஏற்பிகள் இருப்பதை அவர் அறிந்தார்.அதனடிப்படையில்நம்மால் அத்தனைவகை சுவைகளையும் அறிய முடியும் என்று அவர்குறிப்பிடுகிறார்.

பாகற்காயைச் சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப் படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவலை இந்த மூளை அனுப்பி விடுகிறது. கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல் ஆகியவைகளாகும். இந்த உறுப்புகள் பஞ்ச காலத்தில் ஹெலிகாப்டரில்இருந்து வீசப்படும் உணவுப் பொட்டலங்களை வாங்க தயாராகக் காத்திருப்பவர்களைப் போல இந்த தகவல் வந்ததும் உணவுச்சத்தை ஏற்க இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. நாக்கு மென்று சுவைத்து சாப்பிட்டு அனுப்பிய பாகற்காயின் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.

இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் - உவர்ப்பு சுவை சிறுநீரகம், சிறுநீர்ப்பைக்கும் - புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும் - கார சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன்படுகிறது. மேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்ற உறுப்புக்கள் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
.
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான் இருக்கின்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில் லேசான இனிப்பு சுவை தெரியும். பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறது. சில உணவு பொருட்களில் சில சுவை அதிகமாக இருக்கும்.

இவ்வாறு நாம் உண்ணும் பல சுவைகளும் நாம் உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் உணரப்பட்டு மூளைக்குத் தகவல் அனுப்பப்பட்டு அந்தச் சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டு அவைகள் அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின் உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை. இதனால் நாக்கால் சுவைகளைத் தெளிவாகப் பிரித்து மூளைக்குத் தகவல் தெரிவிக்க முடிவதில்லை. இவ்வாறுமுன்னறிவிப்பு ஏதுமின்றி அனுப்பப்படும் உணவுச்சத்தை சுய மரியாதை மன்னார்சாமிகளான உறுப்புகள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆம்...சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. கிட்னியில் ஓரளவே இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும். அது என்ன கொண்டதைக் கொள்ளும் கொள்ளிடமாஎன்ன? அளவைத் தாண்டும் போது கிட்னியும் போடா சரிதான் என்று தொடர்ந்து நிராகரிக்க ஆரம்பித்து விடுகின்றது. இதன் விளைவு தான் உடல் பெறுத்துப் போவது. மேலும் உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றது. அதிகமாக சாப்பிடும் அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றது. பல நோய்கள் உருவாகின்றது.

மற்றுமொரு சுவையான போனஸ் தகவலுடன் இக்கட்டுரையின்முடிவுக்குப் போகலாம்சுவை ஏற்பி ஒவ்வொன்றின்கிண்ணப்பகுதியிலும் இரண்டு அறைகள் உள்ளன. ஒரு அறைசுவைக்குக் காரணமான சக்கரை, உப்பு, அமிலம்,கசப்பு, துவர்ப்புச் சுவைகளின் மூலக்கூறுகள் அமர்வதற்காகவும் அதன் அருகே உள்ள இன்னொரு சிறிய அறைசுவையில்லாத ஆயினும் சுவை உணர்வை பலமாகத் தூண்டிவிடும் இன்னொரு பொருளுக்காகவும் இருப்பதைக் கண்டுபிடித்தார். அஜினோமோட்டோ என்ற உப்புதன்னளவில் சுவையற்றதாக இருந்தாலும்மாமிச உணவில் கலந்ததும் மாமிசத்தின் சுவை பன்மடங்கு கூடுவதன் இரகசியம் இதுதான என்று கண்டறிந்தார் ஸூக்கர். ஒருசுவையும் இல்லாத அஜின மோட்டோவின் சுவையை மாமிசத்தின் சுவையுடன் சேர்த்து சுவையாக்கும் சூட்சமத்தை இந்த இன்னொரு அறைதான் செய்கிறது. கண்டிப்பாக அஜினமோட்டோ செய்வது இல்லை.

இந்த அத்தனை பயன்களையும் நாம் நாக்கை நன்கு மதித்துஒழுகினால் மட்டுமே பெறமுடியும். எனவே அதிகமாகக் கூடச் சாப்பிடுங்கள். ஆனால் ரசித்து ருசித்துச் சாப்பிடுங்கள். பாவம் உங்களுக்காகவே ருசிக்கக் காத்திருக்கும் நாக்கை மதியுங்கள்.சுய மரியாதைச் உடல் சிங்கங்களான உறுப்புகளுக்கு அவைகள் விரும்பும் சத்தைக் கேட்டுக்கேட்டுக் கொடுங்கள். உங்களை நீங்களேவிரும்பும் அழகான, அளவான பருமனுடன் மிளிருங்கள்.....




டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Aடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Aடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Tடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Hடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Iடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Rடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Aடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 16, 2010 3:03 pm

இவ்வளவு விஷயம் இருக்கா இனி நாக்கை கட்டுபடுத்தபோவதில்லை (சாப்பாடு விசயத்தில் மட்டும் இல்லையென்றால் பல் போய்விடும் )மிக்க நன்றி புதிய விஷயம் நல்ல விஷயம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 4:14 pm

maniajith007 wrote:இவ்வளவு விஷயம் இருக்கா இனி நாக்கை கட்டுபடுத்தபோவதில்லை (சாப்பாடு விசயத்தில் மட்டும் இல்லையென்றால் பல் போய்விடும் )மிக்க நன்றி புதிய விஷயம் நல்ல விஷயம்

ஜமாய்ங்க......குண்ண்ண்ண்ண்டாயிடுவீங்க... நன்றி அஜித் டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? 154550



டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Aடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Aடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Tடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Hடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Iடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Rடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Aடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 4:53 pm

ஆஹா பானு படிக்கும்போதே எப்ப பானு வீட்டுக்கு போவேன். பிசிபேளாபாத் சாப்பிடுவேன்னு நாக்கு கேக்க ஆரம்பிச்சிருச்சுப்பா...

நிறைய விஷயங்கள் அறிய முடிகிறது பானு....

அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 18, 2010 8:56 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா ஆதிரா.. படிக்கும்போதே எப்ப ஆதிரா.. வீட்டுக்கு போவேன். பிசிபேளாபாத் சாப்பிடுவேன்னு நாக்கு கேக்க ஆரம்பிச்சிருச்சுப்பா...

நிறைய விஷயங்கள் அறிய முடிகிறது ஆதிரா.....

அன்பு நன்றிகள்பா...

தின்னிப் பண்டாரம்... மஞ்சு உங்களை இல்லை.. பிசிபேளா பாத் கேக்கிற நாக்க.. நன்றி ம்ஞ்சு.. பெரிய கட்டுரையைப் படித்தமைக்கு.. டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? 678642 டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? 154550



டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Aடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Aடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Tடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Hடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Iடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Rடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Aடேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Empty
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Mon Oct 18, 2010 9:01 pm

ஆதிரா அம்மா அருமை .
பயனுள்ள சேதி



புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 18, 2010 9:17 pm

இதுநாள்வரை எப்படியோ எதையாவது சாப்பிட்டால் சரி என்று கிடைக்கும் உணவை அவசரமாக உள்ளே தள்ளிக் கொண்டிருந்தேன்! ஆனால் அது எவ்வளவு தவறு என்பது உங்களின் இக் கட்டுரையைப் படித்த பிறகுதான் தெரிந்தது. நடிகர் சிவகுமார், ஒரு தோசையை அரை மணி நேரம் வரை மிகப் பொறுமையாக அமர்ந்து சப்பிடுவார் எனக் கேள்விப்பட்டுள்ளேன்! அதன் ரகசியம் இப்பொழுதுதான் தெரிந்தது!

அனைவரும் படித்துப் பயன்பெறக் கூடிய அருமையான கட்டுரையை தந்ததற்கு நன்றி அக்கா!



டேட்டூஸ் சுவை எப்படி இருக்கும்?  நாக்கைக் கேக்கலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 18, 2010 10:18 pm

சிவா wrote:இதுநாள்வரை எப்படியோ எதையாவது சாப்பிட்டால் சரி என்று கிடைக்கும் உணவை அவசரமாக உள்ளே தள்ளிக் கொண்டிருந்தேன்! ஆனால் அது எவ்வளவு தவறு என்பது உங்களின் இக் கட்டுரையைப் படித்த பிறகுதான் தெரிந்தது. நடிகர் சிவகுமார், ஒரு தோசையை அரை மணி நேரம் வரை மிகப் பொறுமையாக அமர்ந்து சப்பிடுவார் எனக் கேள்விப்பட்டுள்ளேன்! அதன் ரகசியம் இப்பொழுதுதான் தெரிந்தது!

அனைவரும் படித்துப் பயன்பெறக் கூடிய அருமையான கட்டுரையை தந்ததற்கு நன்றி அக்கா!

ஐ லவ் யூ பாடகன் அன்பு மலர் நன்றி அன்பு மலர்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 11:23 am

அருமை ஆதிரா அக்கா ..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக